என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • புதை படிவங்கள் உள்ள இடத்தை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • நெருப்புக்கோழி முட்டைகள் இருந்த அடையாளங்களும் அப்படியே உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் புதை படிவங்கள் உள்ள இடத்தை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆவின் போது 41 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெருப்புக்கோழி கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த கூட்டில் 9 முதல் 11 நெருப்புக்கோழி முட்டைகள் இருந்த அடையாளங்களும் அப்படியே உள்ளன.

    இதன் மூலம் தென் இந்தியாவில் நெருப்புக்கோழிகள் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. தொடர்ந்து தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகத்தை இடிக்க மீண்டும் நோட்டீஸ்
    • மாநிலத்தில் சட்டமும் நீதியும் மறைந்துவிட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், தாடேபள்ளியில் அரசு அனுமதி யின்றி கட்டப்பட்டு வருவதாக கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நேற்று அதிகாலை அதிகாரிகள் இடித்து தரை மட்டமாக்கினர்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட சிறிது நேரத்தில் விசாகப்பட்டினம் அடுத்த பெண்டாடா பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதாக ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கு விசாகப்பட்டினம் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    நோட்டீசில் விசாகப்பட்டினம் மாநகராட்சி பெருநகர குழும ஆணையத்தின் அனுமதியின்றி கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி அலுவலகம் இடிக்கப்படும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், `புதியதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சிறிது நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.

    மாநிலத்தில் சட்டமும் நீதியும் மறைந்து விட்டது. இதற்காக உயர் சார் காங்கிரஸ் கட்சி தலை வணங்காது. எதிர்த்து போராடும் இந்த மிரட்டல் வன்முறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இந்த தவறான செயல்களை கண்டிக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த வாரம் மீண்டும் ஊருக்கு வந்த ஜெகதீஷ் மனைவியை விஜயநகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பங்காரம்மா பேட்டையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது30). ராணுவ வீரர். இவரது மனைவி அனுஷா (30). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    ஜெகதீசுக்கு விருப்பம் இல்லாமல் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் முடிந்தவுடன் ஜெகதீஷ் ராணுவத்தில் வேலைக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஊருக்கு வந்த ஜெகதீஷ் மனைவியை விஜயநகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு விஜயவாடாவுக்கு சென்றார். தனக்கு பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.

    கொலை செய்யும்போது எந்த தடையும் போலீசிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி என யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்டார்.

    அன்று இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் மனைவியை வீட்டிலிருந்து வெளியே அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றார். மனைவியிடம் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி தகராறு செய்தார்.

    பின்னர் தான் தயாராக வைத்திருந்த நைலான் கயிற்றை எடுத்து அனுஷாவை கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    பின்னர் மனைவியின் செல்போனில் இருந்து தனக்கும், அவரது பெற்றோர் மற்றும் சகோதரருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் அதே ஊரை சேர்ந்த பிரசாத் என்பவர் தன்னை துன்புறுத்துவதாகவும் அதனால் தற்கொலை செய்வதாக கூறப்பட்டு இருந்தது.

    இதனைக் கண்ட அனுஷாவின் பெற்றோர், உறவினர்கள் பிரசாத்தின் வீட்டை தாக்க வந்தனர். இதுகுறித்து பிரசாத் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுஷாவின் உறவினர்களை சமாதானப்படுத்தினர்.

    பிரசாத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுஷாவுக்கும், பிரசாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிந்தது.

    ஜெகதீஷ் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அனுஷாவை தனக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மனைவியை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்ததாகவும், கொலை செய்யும்போது தடயம் இல்லாமல் தப்பிப்பது எப்படி என யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
    • மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலும் மறைந்துவிட்டன.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி ஏற்றார்.

    இந்த நிலையில் குண்டூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என கட்சி அலுவலக இடிப்பு குறித்து ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அடக்குமுறையை கையில் எடுத்துள்ளார். கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்தை சர்வாதிகாரி போல் புல்டோஸர் மூலம் இடித்துள்ளார். சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டன. மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலும் மறைந்துவிட்டன.

    சந்திரபாபு நாயுடுவின் ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற செய்தியை இந்த சம்பவத்தின் மூலம் தந்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள், வன்முறைகளுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அடிபணியாது. பின்வாங்கவும் செய்யாது. மக்களுக்காக கடுமையாக போராடுவோம்.

    இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மகத்தான வெற்றியை பெற்றது.
    • ஆந்திர சட்டசபைக்குள் நுழைந்தால் இனி முதல்வராக தான் நுழைவேன் என்று சந்திரபாபு நாயுடு சபதம்.

    ஆந்திரா சட்டசபையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அன்று, அப்போது ஆளும் யுவஜன ஸ்ரமிகா ரைத்து காங்கிரஸ் (YSRCP) உறுப்பினர்கள் தெலுங்கு தேச கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவியைப் பற்றி கூறியதாகக் கூறப்படும் தவறான கருத்துக்களுக்காக அவர் சட்டசபையை விட்டு வெளியேறினார்.

    பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்த விவாதத்தின் போது சந்திரபாபு நாயுடு பெரும் கண்ணீர் போராட்டத்திற்கு பிறகு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

    அப்போது, "இனிமேல் நான் இந்த சட்டசபையில் கலந்து கொள்ள மாட்டேன். நான் முதலமைச்சரான பிறகுதான் சபைக்குத் திரும்புவேன்" என்று கூறினார்.

    சட்டமன்ற கூட்டத்தில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் சட்டசபையை அவமதித்ததாக கூறி தெலுங்கு தேச கட்சி தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடு சட்டசபையைவிட்டு வெளியேறினார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மகத்தான வெற்றியை பெற்றது.

    175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களையும், அவர்களின் கூட்டணிக் கட்சிகளான ஜன சேனா மற்றும் பாஜக முறையே 21 மற்றும் 8 இடங்களையும் வென்றன.

    இதைதொடர்ந்து, சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவி ஏற்றார். ஆந்திர முதலமைச்சராக அவர் நான்காவது முறையாக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தனது சபதத்தை நிறைவேற்றும் வகையில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இன்று சட்டசபையில் நுழைந்தபோது சட்டசபை முழுவதும் எழுந்து நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த காட்சிகளில் காணமுடிந்தது. 

    • ஆந்திர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.
    • பஸ் நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமாரி. கர்ப்பிணியான இவர் கரீம் நகர் பஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் குமாரிக்கு பிரசவ வலி அதிகரித்தது.

    இதனை தொடர்ந்து ஆந்திர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.

    இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

    பஸ் நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாஸ் வழங்கப்படும் என தெலுங்கானா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    • சந்திரபாபு நாயுடு அமராவதி சென்று பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தலைநகர் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இன்று முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அமராவதி சென்று பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அமராவதி சுற்றுசாலைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கட்டப்படும் வீட்டு வளாகங்கள் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை பார்வையிட்டார்.

    ஏற்கனவே அமராவதியில் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அந்த பணிகளையும் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பதவியேற்றதும் போல வரம் திட்டம் நடைபெறும் இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களை மீண்டும் கொண்டு வந்து செயல்படுத்தவும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • தினமும் வழங்கப்படும் உணவு, மோர், டீ, காபி, பால் ஆகியவற்றின் தரம் மற்றும் ருசியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து செல்கின்றனர்.

    மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன.

    கடந்த சில மாதங்களாக நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்வது நிறுத்தப்பட்டன.

    இதனால் சில பக்தர்கள் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு நடந்து செல்லாமல் முறைகேடாக வாகனங்களில் சென்று தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் செய்தனர். திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலராக புதியதாக பதவி ஏற்ற சியாமளா ராவ் நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் வசதியை மீண்டும் நடைமுறை படுத்த உத்தரவிட்டார்.

    நேற்று முதல் நடைபாதையில் வரும் பக்தர்களின் தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்ததால் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    தினமும் வழங்கப்படும் உணவு, மோர், டீ, காபி, பால் ஆகியவற்றின் தரம் மற்றும் ருசியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உணவின் தரம், ருசி அதிகரிக்க உணவு ஆலோசனை நிபுணர் ஒருவரை பணியமர்த்த முடிவு செய்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து தற்போது வழங்கப்படும் உணவை விட ருசியான உணவு பக்தர்களுக்கு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • எப்போதும் கிலோ கணக்கில் வாங்கும் பொதுமக்கள் தற்போது அரை கிலோ வரை மட்டுமே தக்காளி வாங்கி செல்கின்றனர்.
    • ஓட்டல்களில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுள்ளது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு தக்காளி விலை ரூ.200 வரை உயர்ந்தது. இதனால் தக்காளி வியாபாரிகள், விவசாயிகள் பலர் கோடீஸ்வரர்களாக மாறினார்கள்.

    தக்காளிக்காக கொலை, கொள்ளையும் நடந்தன. இந்த நிலையில் தற்போது தக்காளி மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டன. தற்போது கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் சித்தூர் நெல்லூர் மற்றும் மகாராஷ்டிரா மாநில பகுதிகளில் இருந்து இந்த 2 மாநிலங்களிலும் தக்காளி வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது மழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக தற்காளி வரத்து குறைந்துள்ளது.

    இதனால் தக்காளி விலை உயர்வு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டை போல தக்காளி விலை உயரும். லட்சாதிபதி கோடீஸ்வரர்களாக மாறலாம் என்று கனவில் விவசாயிகள், வியாபாரிகள் தக்காளி உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

    விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் தக்காளி பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர். எப்போதும் கிலோ கணக்கில் வாங்கும் பொதுமக்கள் தற்போது அரை கிலோ வரை மட்டுமே தக்காளி வாங்கி செல்கின்றனர்.

    ஓட்டல்களில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுள்ளது.

    • தேர்லுக்கு பின் கிரகப்பிரவேசம் நடத்தலாம் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
    • புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். தெலுங்கு தேச கட்சி பெரும்பான்மையான வெற்றி பெற்று 4-வது முறையாக ஆந்திராவின் முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரச்சனைகளும் வரிசை கட்டி இருக்கிறது.

    கடந்த 15-ந்தேதி, தெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டில் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டோசர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனை போன்ற பங்களாவை ஜெகன்மோகன் கட்டி உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ரிஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது.


    இந்த பங்களா தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தள பக்கத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பகிர்ந்து, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    கண்ணாடிகள், கிரானைட்கள் என மிக பிரம்மாண்டாக கட்டப்பட்டுள்ள பங்களாவில் பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் ரூ.25 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பங்களாவை அரசின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஜெகன்மோகன் ரெட்டி மறுபடியும் ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையில் தான் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளதாகவும் தேர்லுக்கு பின் கிரகப்பிரவேசம் நடத்தலாம் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
    • ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது.

    உலகப் பணக்காரர் எலான் மஸ்க் EVM வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளம்பியுள்ளது.

    குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமயத்தில் EVM மீதான நம்பகத்தன்மையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்த நிலையில் தேர்தலுக்குப் பின் சற்று தனித்திருந்த இந்த விவாதத்தை எலான் மஸ்க்கின் தற்போதைய கருத்து மீண்டும் கிளறிவிட்டுள்ளது.

    மஸ்க்கின் பதிவை மேற்கோள்காட்டி இந்தியாவில் EVM கள் முறைகேடு செய்வதற்கான கருப்பு பேட்டி மாதிரி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் EVM முறைக்கு எதிராக எலான் மஸ்க்கின் கருத்தைப் பகிர்ந்தனர்.

    இந்நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவரும் முன்னால் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி EVM விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் அது நிறவேற்றப்படுவதுடன் மட்டுமிடின்றி அந்த தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே ஜனநாய நாடு என்று கூறுவதை விட அங்கு ஜனநாயக முறைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது. நாமும் ஜனநாயகத்தைக் காப்பற்ற அந்த திசையை நோக்கியே பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவஸ்தானம் இன்று காலை 10 மணி முதல் 20-ந் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது.
    • ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் தங்கும் அறைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள், சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.

    வரும் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள தேவஸ்தானம் இன்று காலை 10 மணி முதல் 20-ந் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது.

    அதன்படி முன்பதிவு செய்து கொண்டவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடு க்கப்பட்டு அவர்களது செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வைக்கப்படும்.

    அதன் பின்னர் சம்பந்தப்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலமாக அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை தேவஸ்தானத்திற்கு செலுத்தினால் போதும். பின்னர் இதற்கான டிக்கெட் பக்தர்களின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    வருகிற 21-ந் தேதி காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவைகளான ஆர்ஜித பிரமோற்சவம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்கர தீப அலங்கார சேவை போன்றவற்றில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

    செப்டம்பர் மாதம் இலவசமாக அங்கப் பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் வரும் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே நாளில் காலை 11 மணிக்கு ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் தங்கும் அறைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மதியம் 3 மணிக்கு ஆன்லைன் மூலம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதே நாளில் மதியம் 3 மணிக்கு பக்தர்கள் தங்குவதற்கான அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். http://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பக்தர்கள் அனைத்து சேவைகளையும் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

    ×