என் மலர்
ஆந்திர பிரதேசம்
- உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் போராடி வருகின்றன.
- அங்கு மக்கள் தொகை இல்லை. ஏ.ஐ. மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் அவற்றை இயக்க (செயல்படுத்த) மக்கள் இல்லை.
ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசும்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் போராடி வருகின்றன. அங்கு மக்கள் தொகை இல்லை. ஏ.ஐ. மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் அவற்றை இயக்க (செயல்படுத்த) மக்கள் இல்லை.
ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அவர்களுடைய பொருளாதாரத்திற்கு வயது முதிர்ந்த குடிமக்கள் மிகப்பெரிய சவலாக மாறிவருகின்றனர். எனினும், இந்த விவசயத்தில் இந்தியா இன்னும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படாத நாடாக இருக்கிறது.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சமீப காலமாக மக்களை தொகை குறைந்து வருவதால், ஆந்திர பிரதேச மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
- பஸ் ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடா நோக்கி சென்று கொண்டிருந்தது.
- காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் எலூருவில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் கூறுகையில்,
சோடிமல்லா பாலம் அருகே அதிவேகமாக வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த பஸ் ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேரின் உடல்கள் எலூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்று கூறினர்.
- புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது.
- உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் 12 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆற்றின் மறுகரையில் இருந்து புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மீட்புக் குழுவினர் 10 பேரை காப்பாற்றினர். 2 பேர் காணாமல் போயினர்.
தேடுதலுக்கு பிறகு ஆற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
- கிருஷ்ண முரளி போலீசாருடன் வர மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வேனில் ஏற்றினர்.
திருப்பதி:
தெலுங்கு திரையுலக நடிகர் பூசாணி கிருஷ்ண முரளி. 150-க்கும் மேற்பட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ண முரளி கடந்த ஜெகன்மோகன் ஆட்சியின் போது சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி, மகன் நாராலோகேஷ் மற்றும் பவன் கல்யாண் குறித்து அவதூறாக பேசினார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் செய்தனர்.
திருப்பதி, சித்தூர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு கிருஷ்ண முரளி மீதான பழைய வழக்குகள் சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டன.
சி.ஐ.டி போலீசார் கிருஷ்ண முரளியை தேடி வந்தனர். அவர் ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள ராய் சோட்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் பேரில் ராய்சோட்டி சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது கிருஷ்ண முரளி போலீசாருடன் வர மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வேனில் ஏற்றி அன்னமைய்யா மாவட்டம், ஒபுலவாரி பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இன்று காலை ராஜம்பேட்டை கோர்ட்டில் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆந்திர மாநில சட்டமன்றத்தில் பவன் கல்யாண் கட்சி 2-வது பெரிய கட்சியாக திகழ்கிறது.
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகிறது.
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி என்றால் கூச்சல் குழப்பம் என்றுதான் அர்த்தம். கூச்சல், குழப்பத்தை அவர்கள் ஏற்படுத்தவில்லை என்றால், அவர்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என அழைக்கப்படமாட்டார்கள்.
சட்டமன்றத்தில் ஜனசேனா கட்சியை 2-வது பெரிய கட்சியாகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை 3-வது கட்சியாகவும் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதுதான் அவர்களுக்கு பிரச்சனை.
அவர்கள் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 2019-ம் ஆண்டு ஆட்சி அமைத்திருந்ததால், அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று அர்த்தம் அல்ல.
பெற்ற வாக்குகள் அடிப்படையில் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் கோரிக்கை வைக்கிறார்கள். அப்படி கோரிக்கை வைப்பதாக இருந்தால், அவர்கள் ஜெர்மனிக்கு செல்ல வேண்டும். ஜெர்மனி ஜனநாயகம் வாக்கு சதவீதத்தின் அடிப்படையிலானது. கோரிக்கை வைக்கும் அவர்கள் ஜெர்மனிக்கு செல்ல வேண்டும். நமது நாட்டில் அவ்வாறு அனுமதிக்க முடியாது.
இந்தியாவில் வக்பு வாரியம் இருந்தால், சனாதன தர்மம் பாதுகாப்பு போர்டு ஏன் இருக்கக் கூடாது?
இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழில் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார்.
- அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக சமீபத்தில் இந்தியாவில் ஆட்கள் சேர்ப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது.
அதில் வணிக செயல்பாட்டு ஆய்வாளர், வாடிக்கையாளர் சேவை பிரிவு உள்ளிட்ட 13 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரி இருக்கிறது.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழில் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்த போதிலும் எலான் மஸ்க் இந்தியாவில் தனது நிறுவன கார் தொழிற்சாலையை கொண்டு வருவதற்காக மிகவும் ஆர்வமாக உள்ளார்.
இந்த கார் தொழிற்சாலை மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் டெஸ்லா கார் தொழிற்சாலையை எப்படியும் தனது மாநிலத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் சத்தம் இல்லாமல் காய் நகர்த்தி வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவர் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ஆந்திரா மந்திரி நாரா லோகேஷ் அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது அவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வைபவ் தனஜோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஆந்திராவில் கார் தொழிற்சாலை அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் ஆந்திரா அரசு செய்து தரும் என கூறியதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.
இதையடுத்து ஆந்திர அரசு மீண்டும் டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மின்சார வாகன உற்பத்தியை தொடங்கும் வகையில் டெஸ்லா நிறுவனத்தை ஈர்க்க பல்வேறு சலுகைகள் மற்றும் நில வசதி கொடுக்க அம்மாநில பொருளாதார மேம்பாட்டு வாரியம் முன்வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் மின்சார வாகனங்கள் விற்பனை 60 சதவீதம் நடந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தென் மாநிலமான ஆந்திராவில் கார் தொழிற்சாலையை தொடங்குவதற்கான முயற்சியை சந்திரபாபு நாயுடு செய்து வருகிறார்.
முதலில் கார் இறக்குமதியை அதிகரித்து படிப்படியாக கார் உற்பத்தி தொழிலை விரிவுபடுத்தவும் டெஸ்லா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- கணக்கெடுப்பில் அந்த கிராமத்தில் ஏராளமான இரட்டையர்கள் இருப்பது தெரியவந்தது.
- இரட்டைக் குழந்தைகள் அதிக அளவில் உள்ளதால் தொட்டி குண்டா கிராமம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ரங்கம்பேட்டை அருகே தொட்டி குண்டா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1995-ம் ஆண்டு முதல் இரட்டை குழந்தைகள் பிறந்து வருகின்றன.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் சீனிவாஸ் என்பவர் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினார்.
கணக்கெடுப்பில் அந்த கிராமத்தில் ஏராளமான இரட்டையர்கள் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் கணக்கெடுப்பு நடத்திய ஆசிரியரின் மனைவிக்கும் இரட்டைக் குழந்தை பிறந்தது.
தற்போது ரங்கம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தொட்டி குண்டாவை சேர்ந்த 60 இரட்டை குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இரட்டைக் குழந்தைகள் அதிக அளவில் உள்ளதால் தொட்டி குண்டா கிராமம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மாநிலம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.
- உய்யூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.
- ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திரா மாநில அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் டாக்டர்கள் சரிவர வேலைக்கு வராததால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.
இந்த நிலையில் கிருஷ்ணா மாவட்டம், உய்யூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.
புகாரில் மாவட்டத்தில் உள்ள டாக்டர்கள் கடந்த ஒரு ஆண்டாக எந்தவித அனுமதியோ விடுப்போ எடுக்காமல் வேலைக்கு வராமல் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இது குறித்து ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 55 அரசு டாக்டர்களை பணி நீக்கம் செய்தனர்.
- வாலிபருக்கு திடீரென இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
- வாலிபர் 5 வயது குழந்தையாக இருந்தபோது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த 26 வயது வாலிபர். இவருக்கு திடீரென இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.
அவரை மாதப்பூரில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது நுரையீரல் பகுதியில் கட்டி போன்று அமைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் அதனை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அப்போது வாலிபரின் நுரையீரலில் சிக்கியிருந்தது பேனா மூடி என்பது தெரிய வந்தது. இதனை அகற்றிய டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வாலிபரின் குடும்பத்தினரிடம் கேட்டனர். அப்போது வாலிபர் 5 வயது குழந்தையாக இருந்தபோது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டார்.
எந்த பாதிப்பும் இல்லாததால் நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை என தெரிவித்தனர். 21 ஆண்டுகளாக நுரையீரலில் பேனா மூடியுடன் வாழ்ந்த வாலிபர் தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
- புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூருவை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் உரிமம் பெற்றது.
இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994ம் ஆண்டு கண்டறிந்தது.
பின்னர், தனியார் நிறுவனங்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டன. இருப்பினும், முதற்கட்ட ஆய்வை முடிக்க கூட பெரிய முதலீடு தேவைப்பட்டதால் எந்த நிறுவனமும் முன்வரவில்லை. 2005 ஆம் ஆண்டில், அரசாங்கம் மீண்டும் திறந்த உரிமக் கொள்கை மூலம் தனியார் நிறுவனங்களைத் தேடியது.
அப்போது புவியியலாளர் டாக்டர் மாதிரி ஹனுமா பிரசாத் தலைமையிலான பெங்களூருவை சேர்ந்த ஜியோ மைசூர் சர்வீசஸ் லிமிடெட் ஜொன்னகிரி மண்டலத்தில் ஆய்வு செய்ய 2013 ஆம் ஆண்டில் முதற்கட்ட உரிமத்தைப் பெற்றது. ஆனால் இந்த ஆய்வை தொடங்க அனைத்து அனுமதிகளையும் பெற நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் வரை ஆனது.
இதற்கிடையில், டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (டிஜிஎம்எல்) ஜியோமைசூரில் 40% பங்குகளை வாங்கியது. மேலும் சுமார் 1,500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, துக்காலி மற்றும் மடிகேரா வயல்களில் இருந்து சுமார் 750 ஏக்கர் நிலத்தை வாங்கி 2021 இல் சோதனைகளைத் தொடங்கியது. மேலும் ஒரு சிறிய செயலாக்க யுனிட்டை நிறுவி ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது.

இதுகுறித்து பேசிய ஜியோ மைசூரின் நிர்வாக இயக்குனர் பிரசாத், இப்போது இங்கு சுமார் 30 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் மூலம் சோதனை நடத்தி வருகிறோம். 2 ஆண்டு ஆய்வில் இங்கு வர்த்தக ரீதியாக தங்கத்தை வெட்டி எடுப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதமே பணிகளை தொடங்க முயன்றோம். ஆனால், சில ஆய்வு முடிவுகள் வர தாமதமானது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஆந்திர பிரதேச அரசு சுற்றுசூழல் அனுமதியை விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்று மாதங்களுக்குள் தங்க உற்பத்தி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் இப்போது ஜொன்னகிரியில்தான் அமைகிறது. இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
- மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது.
- தெலுங்கானா காங்கிரஸ் அரசு உத்தரவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.
ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்களுக்குப் பணி நேரத்தைக் குறைத்து ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது.
எனவே மார்ச் 2 முதல் மார்ச் 31 வரை புனித ரம்ஜான் மாதத்தில் தேவையான பிரார்த்தனைகளைச் செய்ய, மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த, அவுட்-சோர்சிங், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் 1 மணி நேரம் முன்னதாக மாலை 4.00 மணிக்கு தங்கள் அலுவலகங்கள், பள்ளிகளை விட்டு வெளியேறி வீடு திரும்பலாம் என்று ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு இதே உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் தற்போது அதைப் பின்பற்றி ஆந்திரப் பிரதேச அரசும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் அரசு உத்தரவுக்கு அம்மாநில பாஜக கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- சந்திரபாபு நாயுடு தனது டிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறினார்.
- இந்த சம்பவத்தால் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று கோவில் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமாக மாநாடு ஒன்று நடந்தது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 3 மாநில முதல்- மந்திரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் சந்திரபாபு நாயுடு காரில் புறப்பட்டு சென்றார். மங்கலம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சேஷாசல நகரை சேர்ந்த அஜீஷ் பாஷா என்ற தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் நரைத்த தலைமுடியுடன் நின்று கொண்டிருந்தார்.
அவரை கண்டதும் சந்திரபாபு நாயுடு தனது டிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறினார்.
கார் நின்றதும் கண்ணாடியை இறக்கிவிட்டு சாலையோரம் நின்றிருந்த அஜீஷ் பாஷை பெயரை கூறி அருகே வருமாறு அழைத்தார். அதனை கேட்டதும் உணர்ச்சி வசப்பட்ட தொண்டர் அவர் அருகில் சென்றதும் நலம் விசாரித்துவிட்டு சந்திரபாபு நாயுடு புறப்பட்டு சென்றார். இதனால் சாலையோரம் நின்ற தொண்டர் உணர்ச்சிவசப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு என்னை 40 வருடங்களாக அறிவார். நான் அவரைப் பார்க்க வந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சாலையின் ஓரத்தில் நின்றேன்.
ஆனாலும் அவர் என்னை நினைவில் வைத்து நலம் விசாரித்தார். இந்த வாழ்க்கைக்கு இது போதும் என்றார்.
இந்த சம்பவத்தால் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.






