என் மலர்
நீங்கள் தேடியது "posani krishna murali"
- தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் போசானி கிருஷ்ணா முரளி.
- இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் போசானி கிருஷ்ணா முரளி தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ஆந்திர மாநில திரைப்பட மேம்பாட்டு கழக தலைவராக அரசு இவரை நியமித்தது.

போசானி கிருஷ்ணா முரளி
இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து புனேயில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு ஹைதராபாத் திரும்பினார். அப்போது போசானி கிருஷ்ணா முரளிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதன் பின்னர், குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். போசானி கிருஷ்ணா முரளி ஏற்கனவே இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். தற்போது மூன்றாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கிருஷ்ண முரளி போலீசாருடன் வர மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வேனில் ஏற்றினர்.
திருப்பதி:
தெலுங்கு திரையுலக நடிகர் பூசாணி கிருஷ்ண முரளி. 150-க்கும் மேற்பட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ண முரளி கடந்த ஜெகன்மோகன் ஆட்சியின் போது சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி, மகன் நாராலோகேஷ் மற்றும் பவன் கல்யாண் குறித்து அவதூறாக பேசினார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் செய்தனர்.
திருப்பதி, சித்தூர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு கிருஷ்ண முரளி மீதான பழைய வழக்குகள் சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டன.
சி.ஐ.டி போலீசார் கிருஷ்ண முரளியை தேடி வந்தனர். அவர் ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள ராய் சோட்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் பேரில் ராய்சோட்டி சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது கிருஷ்ண முரளி போலீசாருடன் வர மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வேனில் ஏற்றி அன்னமைய்யா மாவட்டம், ஒபுலவாரி பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இன்று காலை ராஜம்பேட்டை கோர்ட்டில் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.











