என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    இட்லி, தோசை, நாண், சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1/2 கிலோ
    சின்ன வெங்காயம் - 150 கிராம்
    இஞ்சி - சிறிதளவு
    பூண்டு - 10
    முந்திரி - 10
    மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
    மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    மிளகு  -  அரை ஸ்பூன்
    சீரக - அரை ஸ்பூன்
    சோம்பு - கால் ஸ்பூன்
    கசகசா - கால் ஸ்பூன்
    பட்டை, கிராம்பு - சிறிதளவு
    ஏலக்காய் - 2
    ஜாதிக்காய் - 1
    புதினா, மல்லி - சிறிதளவு
    நெய் - 4 ஸ்பூன்
    எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன்
    சோயா சாஸ் - ஸ்பூன்
    தயிர் - 1 ஸ்பூன்
    பால் - 2 ஸ்பூன்

    செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி

    செய்முறை

    இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்திரி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், புதினா மல்லித்தழையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு, அதில் இஞ்சி, பூண்டு விழுது, முந்திரி, மிளகு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தயிர், நெய், எலுமிச்சை சாறு, சோயா சாஸ், தேவையான அளவு உப்பு, அரைத்த மசாலாவை போட்டு நன்கு பிசைந்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் மசாலா கலவையை போட்டு, மிதமான தீயில் கிளறவும்.

    தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்.

    தண்ணீர் சுண்டி சிக்கன் வெந்ததும் இறக்கவும்.

    சூப்பரான செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாசிப்பருப்பு, ஜவ்வரிசியில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1
    பாசிப்பருப்பு - கால் கப்
    ஜவ்வரிசி -1 டேபிள்ஸ்பூன்
    துருவிய வெல்லம் - அரை கப்
    தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
    முந்திரி பருப்பு - 6
    காய்ச்சிய பால் - 1 டம்ளர்
    நெய் - சிறிதளவு

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம்

    செய்முறை:

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.

    அதுபோல் ஜவ்வரிசி, பாசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

    வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

    கடாயில் வெல்லக்கரைசலை ஊற்றி அதனுடன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து வந்ததும் ஜவ்வரிசி சேர்க்கவும்.

    ஜவ்வரிசி வெந்ததும் பாலை ஊற்றி லேசாக கொதிக்க தொடங்கியதும் இறக்கவும்.

    நெய்யில் தேங்காய் துருவல், முந்திரி பருப்பை வறுத்து பாயசத்தில் கலந்து பரிமாறலாம்.

    சூப்பரான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு வித்தியாசமான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் பிரெட் வைத்து காரப்பணியாரம் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம், கேரட் - தலா 2,
    பிரெட் துண்டுகள் - 6,
    இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டீஸ்பூன்,
    தயிர் - ஒரு கப்,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    பிரெட் காரப்பணியாரம்

    செய்முறை:


    வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டைத் துருவிக்கொள்ளவும்.

    பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பொடித்த பிரெட்டுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்த்து கலக்கவும்.

    அடுத்து அதில் துருவிய கேரட், வெங்காயத்தை சேர்த்து, கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

    பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான பிரெட் காரப்பணியாரம் ரெடி.

    தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்து தொட்டு சாப்பிடலாம்.

    சாஸ், சட்னி போன்றவையும் நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சீஸ், இட்லி பொடி சேர்த்து சூப்பரான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசைமாவு - 1 கிண்ணம்,
    துருவிய சீஸ் - 1 கிண்ணம்
    கொத்தமல்லி  - சிறிதளவு
    இட்லி மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

    சீஸ் பொடி தோசை

    செய்முறை:

    சூடான தோசைக் கல்லில், ஒரு கரண்டி தோசை மாவை மெல்லிய வட்டமாக பரப்பி மேலே கால் கிண்ணம் துருவிய சீஸ் பரப்பவும்.

    ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்ச் சுற்றிலும் விடவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர், கொத்தமல்லி, ஒரு தேக்கரண்டி இட்லி மிளகாய் பொடியை மேலே தூவவும்.

    ஒரு மூடி போட்டு சீஸ் உருகும் வரை மூடி வைக்கவும், பின், தோசையை மடித்து பரிமாறவும்.

    சூப்பரான சீஸ் பொடி தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குடைமிளகாய், பன்னீர் சேர்த்து தோசை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 2 கப்
    மஞ்சள் குடைமிளகாய் - 2
    பச்சை குடைமிளகாய் - 2
    சிவப்பு குடைமிளகாய் - 2
    பச்சைப் பட்டாணி - 1 கப்
    துருவிய பன்னீர் - கால் கப்
    பெ.வெங்காயம் - 4
    கொத்தமல்லி - சிறிதளவு தழை
    எண்ணெய் - தேவையான அளவு

    குடைமிளகாய் பன்னீர் தோசை

    செய்முறை:

    குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, வேக வைத்த பட்டாணி சேர்த்து கலந்து வைக்கவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை மாவை சற்று கனமாக ஊற்றவும்.

    அதன் மீது குடைமிளகாய் வகைகள், வெங்காயம், கொத்தமல்லி தழை, பன்னீர் துருவர் ஆகியவற்றை பரவலாக தூவவும். தோசையை சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு பக்கம் நன்றாக வெந்தாலே போதுமானது. அதை அப்படியே எடுத்து பரிமாறலாம்.

    சூப்பரான குடைமிளகாய் பன்னீர் தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாதாம் பருப்பு பர்ஃபிடியை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் பருப்பு - 200 கிராம்
    சர்க்கரை - 200 கிராம்
    நெய் - 400 கிராம்

    பாதாம் பர்ஃபி

    செய்முறை:


    பாதாம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர், தோலை நீக்கிவிட்டு நைசாக அரைக்கவும்.

    பிறகு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கம்பிப் பாகு வந்தவுடன் அரைத்த பாதாமை சேர்த்து நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

    நன்றாக இறுகியதும் நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி துண்டுகள் போட வேண்டும்.

    சூப்பரான பாதாம் பருப்பு பர்ஃபி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவரும் காலையில் செய்யக்கூடிய வகையிலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும், ஒரு ஆரோக்கியமான முறையில் பரோட்டா செய்ய வேண்டுமெனில், அதற்கு காளான் சீஸ் பரோட்டா சரியாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    காளான் - 6
    வெங்காயம் - 1
    சீஸ் - 10 கிராம்
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
    மைதா மாவு - 2 கப்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    காளான் சீஸ் பரோட்டா

    செய்முறை:


    வெங்காயம், காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் உப்பு போட்டு, நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து, ஈரமான துணியால் சுற்றி தனியாக சிறிது நேரம் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின் காளான் மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

    இறுதியில் மிளகு தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி இறக்கிய பின்னர் துருவிய சீஸ் சேர்த்து கலந்து குளிர வைக்க வேண்டும்.

    பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு உருண்டையை எடுத்து, அதன் நடுவே பெருவிரலை வைத்து ஓட்டை போட்டு, செய்து வைத்துள்ள காளான் கலவையை சிறிது வைத்து, மீண்டும் உருண்டையாக்கி, பின் சப்பாத்தி போல் தேய்த்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தேய்த்து வைத்து பரோட்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான காளான் சீஸ் பரோட்டா ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஃபிரைடு சீஸ் கியூப்ஸ் மிக சுவையான ஸ்நாக்ஸ் மட்டுமல்ல, ரொம்ப சுலபமாக சமைக்கவும் முடியும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பெரிய சீஸ் கியூப்ஸ் - 6
    முட்டை - 2
    மைதா மாவு - கையளவு
    புதினா -  1/2 தேக்கரண்டி
    உப்பு -  தேவையான அளவு
    மிளகு - 1/2 தேக்கரண்டி
    பிரட் தூள்கள் - 1/2 கப்

    ஃபிரைடு சீஸ் கியூப்ஸ்

    செய்முறை


    புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    மைதா மாவோடு உப்பு, புதினா, பொடித்த மிளகு எல்லாம் சேர்த்து உங்கள் கைகளால் நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.

    மற்றொரு கிண்ணத்தில் பிரெட் தூளை வைத்து கொள்ளவும்.

    பெரிய சீஸ் கியூப்பை மாவில் போட்டு பிரட்டி அடுத்து முட்டையில் பிரட்டிய பின்னர் பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.

    இவ்வாறு மீதமிருக்கும் சீஸ் கியூப்ஸையும் இவ்வாறே கலக்குங்கள்.

    ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீஸ் பந்துகளை போட்டு பொரியுங்கள். தங்க பழுப்பு நிறம் வரும் வரை, மிதமான சூட்டில் பொரிக்கவும்.

    சூடான ஃபிரைடு சீஸ் கியூப்ஸ் பரிமாற தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டை கொண்டு விதவிதமான பலகாரங்கள் செய்யலாம். இன்று சாக்லேட் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - அரை கப்
    சாக்லேட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
    முந்திரி பருப்பு - 10 (சிறிதாக நறுக்கவும்)
    நெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - சிறிதளவு
    தண்ணீர் - 1 கப்

    சாக்லேட் இடியாப்பம்

    செய்முறை:

    அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதிக்க தொடங்கியதும் நெய், உப்பு சேர்க்கவும்.

    பின்னர் பச்சரிசி மாவை கொட்டி லேசாக கிளறி இறக்கவும்.

    பின்னர் கட்டி பிடிக்காமல் கிளறி இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து இடியாப்பத்தை உதிர்த்துக்கொள்ளவும்.

    அதனுடன் சாக்லேட் சாஸ், முந்திரி பருப்பு தூவி கிளறி சுவைக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மீன் புட்டு எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மீன் - அரைகிலோ
    இஞ்சி - 1 துண்டு
    பெ.வெங்காயம் - அரைகிலோ
    பச்சை மிளகாய் - 5
    பூண்டு - 5 பல்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கடுகு, உளுந்தம்பருப்பு - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு


    செய்முறை:

    மீனை நன்றாக சுத்தம் செய்து இட்லி தட்டில் வேகவைத்து முள்ளை எடுத்து விட்டு உதிர்த்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டுவை கொட்டி வதக்கவும்.

    அதைத்தொடர்ந்து வெங்காயம், மிளகாயை சேர்த்து வதக்கவும். ஓரளவு வதங்கியதும் உதிர்த்த மீன் கலவை, உப்பு சேர்த்து சிறுதீயில் வேகவைத்து இறக்கி பரிமாறலாம்.

    சுவையான மீன் புட்டு தயார்.

    பாதாம் பருப்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று பாதாம் பருப்பில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் பருப்பு - 100 கிராம்
    பால் - 3 கப்
    சர்க்கரை - 1 கப்
    ஏலக்காய் - 7
    முந்திரி பருப்பு - 6
    பிஸ்தா பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    குங்குமப்பூ அல்லது கேசரிப் பவுடர்- சிறிதளவு
    நெய் - 3 டீஸ்பூன்

    பாதாம் பருப்பு பாயாசம்

    செய்முறை :

    முதலில் முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக உடைத்து கொள்ளவும்.

    பின்னர் அதை பிஸ்தா பருப்புடன் சேர்த்து நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்.

    இதையடுத்து பாதாம் பருப்பைக் கொஞ்சம் சூடான வெந்நீரில் போட்டு, ஒரு மணி நேரம் கழித்துத் தோலை எடுத்து விட்டு, அம்மியில் அல்லது மிக்சியில் நைசாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதை 3 கப்பு தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடிக்கடி கிளறிவிடவும். பச்சை வாசனை இல்லாமல் நன்றாக கொதிக்கவிட்டு, சர்க்கரையைப் போடவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்தபின் பாலை ஊற்றி மற்ற பொருட்களையும் போட்டு கொதித்தவுடன் இறக்கிவிடவும்.

    அடுத்து நெய், குங்குமப்பூ சேர்த்தால் சுவையான பாதாம் பருப்பு பாயாசம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் மட்டன் எலும்பு சால்னா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் எலும்பு - 1 கப்
    துவரம் பருப்பு - 1/2 கப்
    கடலைபருப்பு - 1/2 கப்
    நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
    தக்காளி - 1/2 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
    பிரிஞ்சி இலை - 1
    பட்டை - 1
    கிராம்பு - 1 - 2
    வெங்காயம் - 1/2 கப்
    தக்காளி - 1/4 கப்
    கத்தரிக்காய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மிளகாய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
    மல்லி பொடி - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    மட்டன் எலும்பு சால்னா

    செய்முறை :

    மட்டன் எலும்பை நன்றாக கழுவிக்கொள்ளவும்.

    கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலை பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி அதனுடன், மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலை சேர்த்து குக்கரில் (4 விசில்) விட்டு வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும்  தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய்தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் போகும் வரை வதக்கவும்,

    பின் கத்தரிக்காயை சேர்த்து வேகவைக்கவும்.

    பின்னர் வேகவைத்த பருப்பு கலவை, உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மட்டன்  எலும்பு சால்னா ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×