என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று செட்டிநாடு ஸ்டைலில் சூப்பரான இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இறால் - அரை கிலோ
    பாஸ்மதி அரிசி - அரை கிலோ
    எண்ணெய் - தேவையான அளவு
    நெய் - ஒரு ஸ்பூன்
    வெங்காயம் - 3
    தக்காளி - 4
    பச்சை மிளகாய் - 4
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை பழம் - ஒன்று
    கொத்தமல்லி தழை - கால்கட்டு
    புதினா - ஒரு கொத்து
    பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று

    செய்முறை

    இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேக வைத்து அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிரம்பு, ஏலம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் வைக்க வேண்டும். பிறகு கொத்துமல்லி புதினா, தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேக விட வேண்டும். தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேக விடவும்.

    இப்போது வேக வைத்த அரிசியை கொட்டி தம்மில் விடவேண்டும். தம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விடவேண்டும்.

    சிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்பு கலர் பொடியை கரைத்து மேலே தூவி, அதன் மேல் நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் 10 நிமிடம் விட வேண்டும்.

    இப்போது சூப்பரான செட்டிநாடு இறால் பிரியாணி ரெடி.

    மட்டன் சுக்காவைப் போன்றே ருசியாக இருப்பது தான் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட். இதனை பேச்சுலர்கள் விடுமுறை நாட்களில் முயற்சிக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லி - சிறிதளவு
    பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

    அரைப்பதற்கு...

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
    வர மிளகாய் - 5
    மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1 பெரிய துண்டு
    பூண்டு - 6 பெரிய பற்கள்

    செய்முறை:

    மட்டனை நீரில் நன்கு கழுவிக் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அரைத்த மசாலாவை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, மிக்ஸியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, மசாலா அனைத்து தண்ணீரில் கலந்தவுடன் அதனையும் மட்டனுடன் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

    ஊறிய சிக்கனை குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

    மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் மட்டனை சேர்த்து 10 நிமிடம் நன்கு பிரட்டவும்.

    பிறகு அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி.

    இதையும் படிக்கலாம்...கேரட் பச்சை பட்டாணி சாலட்
    பாஸ்தாவை வைத்து பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்தா - அரை கப்
    கடலை மாவு - கால் கப்
    அரிசி மாவு - கால் கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 1
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    பெருஞ்சீரகம் தூள் - மரை டீஸ்பூன்
    தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்தாவில் சிறிது உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைத்து குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும்.

    குளிர்ந்த நீரில் போட்ட பாஸ்தாவை தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பெருஞ்சீரகம் தூள், தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து ( வடை மாவு பதத்தில்) கொள்ளவும்.

    உப்பு சரிபார்த்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ்  பாஸ்தா  வடை ரெடி.

    அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையான முறையில் செய்யக்கூடிய இனிப்பு தான் ‘ரசமலாய் பார்'. அதன் செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
    தேவையான பொருட்கள்:

    வெள்ளை சாக்லெட் - 250 கிராம்
    பால் - 1 தேக்கரண்டி
    குங்குமப்பூ - 1 கிராம்
    ஏலக்காய் - 1
    ரசமலாய் எசன்ஸ் - 1 தேக்கரண்டி
    பாதாம், பிஸ்தா (பொடித்தது) - சிறிதளவு

    செய்முறை:

    சிறிய பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் குங்குமப்பூ மற்றும் இடித்த ஏலக்காய் கலந்து ஊற வைக்கவும்.

    அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அதற்குள் வெள்ளை சாக்லெட்டைக் கொட்டி மிதமான தீயில் உருக்கவும். பின்பு அதில் குங்குமப்பூ ஊறவைத்தப்  பாலை சிறிது சிறிதாக ஊற்றி அடிப்பிடிக்காதவாறு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து இந்தக் கலவையில் ரசமலாய் எசன்ஸ் ஊற்றி, நன்றாகக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, பொடித்து வைத்த பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து மிதமான தீயில் அதன் நிறம் மாறாத வண்ணம் வறுக்கவும். இதை வெள்ளை சாக்லெட் கலவையில் சேர்த்துக் கிளறவும்.

    பின்பு படத்தில் காட்டியவாறு விருப்பமான சாக்லெட் அச்சில், இந்த சாக்லெட் கலவையை ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 2 மணி நேரம் குளிர வைத்து எடுக்கவும். இப்பொழுது ருசியான ‘ரசமலாய் பார்' தயார்.

    இதையும் படிக்கலாம்...சத்தான சம்பா கோதுமை கஞ்சி
    பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    கேரட் - 1
    வெங்காயம் - 1
    முட்டை - 3
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் துருகிய உருளைக்கிழங்கு, கேரட்டை போட்டு வதக்கவும்.

    உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் உப்பு, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற விடவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கலவையை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் ரெடி.

    கடையில் விற்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியமானதாக இருக்காது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.
    எண்ணெய் - 150 கிராம்.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை முதலில் நன்றாக கழுவி எடுத்து அதனை சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பு மற்றும் மிளகாயைத் தூளை சேர்த்து கலக்கி வைக்கவும்.

    அடுப்பினில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீவிய உருளைக் கிழங்கைப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக் கிழங்கு சிப்ஸை பாத்திரத்தில் போட்டு அதன் மீது மிளகாய் மற்றும் உப்பு தூள் கலந்த கலவையை தூவி எல்லா சிப்ஸ்களிலும் படும்படி கலக்கி கொள்ளவும்.

    சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயார்.

    காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாரம்வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு: உருளைக் கிழங்கை சீவி துணியின் மேல் பரப்பிவிடவும். அதிக நேரம் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் உருளைக்கிழங்கு கருத்து விடும். இதனால் ஈரம் உறிஞ்சப்பட்டு மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் கிடைக்கும். மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் பயன்படுத்தலாம்..

    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 4
    கொத்தமல்லி - 1/2 கப்
    உருளைக் கிழங்கு - 250 கிராம்
    சீஸ் - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    மாவு பிசைய :


    மைதா - 2 கப்
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    உருளைக் கிழங்கை குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    உருளைக் கிழங்கு வெந்ததும், தோலை உரித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளுங்கள். பின் அதில் ப.மிளகாய், சீஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    மாவு பிசைய அகலமாக பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையுங்கள். பிசைந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசையுங்கள்.

    அடுத்ததாக உங்களுக்கு எந்த அளவிற்கு சமோசா வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து வையுங்கள். இப்படி எல்லா மாவையும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போல் திரட்டுங்கள்.

    திரட்டிய மாவை கையில் எடுத்து சமோசாவிற்கு முக்கோண வடிவில் பிடிப்பதுபோல் கையில் சுருடிக் கொள்ளுங்கள்.

    அதில் தற்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் உருளைக் கிழங்கு பூரணத்தை தேவையான அளவு வைத்து மேற்புறத்தை மூடுங்கள். மாவை வாய் திறக்காதவாறு நன்கு அழுத்தி மூடுங்கள்.

    இப்படி அனைத்தையும் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் பொரிப்பதற்கு தோவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சமோசாவை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சீஸ் சமோசா தயார்.

    இதையும் படிக்கலாம்...சத்துக்கள் நிறைந்த சோள தோசை
    பாஸ்தாவில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வேக வைத்த பாஸ்தா - 1 கப்
    நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட் - தலா கால் கப்
    கடலை மாவு - கால் கப்
    அரிசி மாவு - கால் கப்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பாஸ்தாவை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், கொத்தமல்லி, கடலை மாவு, அரிசி மாவு, சீரகத்தூள், தனியா தூள், மிளகாய் தூள், சிவப்பு மிளகாய் சாஸ், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக எடுத்து பக்கோடா போல் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாஸ்தா பக்கோடா ரெடி.

    காரம் அதிகம் விரும்புபவர்களுக்கு இந்த மிளகாய் சப்ஜி பிடிக்கும். மேலும் சப்பாத்தி, நாண், தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
    தேவையான பொருட்கள்

    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - 10
    புளி - நெல்லிக்காய் அளவு

    வறுத்து அரைக்க

    வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
    எள்ளு - ஒரு தேக்கரண்டி
    கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 5

    செய்முறை

    வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும்.

    வெங்காயம், மிளகாயை (விதையை நீக்கிவிட்டு) பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

    மிளகாய் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..

    கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

    சுவையான மிளகாய் சப்ஜி தயார்.

    இதையும் படிக்கலாம்...பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட்
    திருக்கார்த்திகை தீபமான இன்று மாலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது தேங்காய் பால் அரிசி பாயாசத்தை நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    தேங்காய் - ஒன்று (பெரியது)
    பச்சரிசி - அரை ஆழாக்கு
    ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
    வெல்லம் - கால் கிலோ
    காய்ந்த திராட்சை - 10 கிராம்
    முந்திரி - 10 கிராம்

    செய்முறை:
     
    சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.

    தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும்.

    மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.

    நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும்.

    கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றி முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி போட்டு 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    கடைசியாக முதல் பாலை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும்.

    சுவையான தேங்காய் பால் அரிசி பாயாசம் தயார்.

    இந்த மழை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய போண்டா. இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே ஆகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 1 கப்
    பெரிய வெங்காயம் - 2
    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
    சீரகம்  - 1 ஸ்பூன்
    மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
    கோதுமை மாவு - 4 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் சீரகம், மிளகாய்த்தூள், கோதுமை மாவு, உப்பு, வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

    மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பில் தீயை குறைவாக வைத்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான வெங்காய போண்டா தயார்.

    பாசிப்பருப்பு, கோதுமை மாவு சேர்த்து செய்யும் இந்த பரோட்டா மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை

    பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    கோதுமை மாவை உப்பு மற்றும் மிளகாய் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    இதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பை கலந்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

    பிறகு பிசைந்த மாவை பரோட்டாவாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மூங்தால் பரோட்டா தயார்.

    ×