என் மலர்
பொது மருத்துவம்
- மன ஆரோக்கியத்திற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
- மன அழுத்தத்தை தூண்டக்கூடிய உணவுகளை தவிர்க்கவும்.
நமது உடல் நலனில் உணவு எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவு நமது மன ஆரோக்கியத்திற்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் மீது உணவின் மீதான தாக்கத்தை புரிந்து கொள்வது அவசியம்.
மன அழுத்தத்தை தூண்டக்கூடிய உணவுகளை தவிர்க்கவும், அதே நேரத்தில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பெர்ரி பழங்கள், நட்ஸ் வகைகள், விதைகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
சரிவிகித உணவு, உணர்வு சீரமைப்பை ஆதரிக்கக் கூடிய குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் நமது ஒட்டுமொத்த மன ஆரோக்கியம் இந்த காலகட்டத்தின் முக்கியமான தேவையாக அமைகிறது. ஆகவே, மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு சில உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெர்ரி பழங்கள்:
பெர்ரி பழங்களில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் அவை செல் சேதத்தை தவிர்த்து மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

முந்திரி:
முந்திரிப் பருப்பில் 14-20 சதவீதம் வரையிலான பரிந்துரைக்கப்பட்ட ஜிங்க் அளவு உள்ளது. இது பதட்டத்தை குறைப்பதற்கு பயனுள்ளதாக அமைகிறது.

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்:
சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் முட்டைகளில் காணப்படும் மெக்னீசியம் மனநல மேம்பாட்டுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

முட்டை:
முட்டைகளில் நிறைந்து இருக்கக்கூடிய டிரிப்டோபேன், செரட்டோனின் உற்பத்தியை தூண்டுகிறது. இது நமது மனநிலையை மேம்படுத்துவதற்கு உதவும் ஒரு ஹார்மோன் ஆகும்.

அவகேடோ:
அவகேடோ என்று சொல்லப்படும் வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை குறைப்பதற்கும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.

பச்சை இலை காய்கறிகள்:
பச்சை இலை காய்கறிகளில் நிறைந்து காணப்படும் ஃபோலேட் சத்து நியூரோ டிரான்ஸ்மிட்டர் உற்பத்திக்கு ஆதரவு தருவதன் மூலமாக பதற்றம் மற்றும் கவலை உணர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சால்மன்:
சால்மன் மற்றும் மத்தி மீன்களில் வைட்டமின் டி சத்து அதிக அளவில் உள்ளது. இது பதட்டம் போன்ற மனநிலை சம்பந்தப்பட்ட கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு உதவுகிறது.

பால் சார்ந்த பொருட்கள்:
டிரிப்டோபேன், மெலடோனின் மற்றும் பி வைட்டமின்கள் உள்பட பால் சார்ந்த பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்தை வரவழைக்கிறது.
- மீன் சாப்பிட்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்.
- எந்த வகை மீன்கள் என்று பார்க்கலாம்.
சில மீன்களை சாப்பிட்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம். அது எந்த வகை மீன்கள் என்று பார்க்கலாம்.

சூரை மீன்
சூரை மீன் அல்லது டூனா மீனில் உள்ள அதிக அளவு ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் இதய தமனிகளுக்கு சேரக்கூடிய ஒமேகா - 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் எல்டிஎல் கொழுப்பின் அளவை குறைக்க உதவும்.

டிரவுட் மீன்
டிரவுட் மீன் ஒமேகா - 3களின் வளமான மூலமாகும். இது நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது.

ஹெர்ரிங் மீன்
ஹெர்ரிங் மீன் இரண்டு வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் EPA மற்றும் DHA ஆகியவற்றை வழங்குகிறது. இது வீக்கத்தை குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

கானாங்கெளுத்தி மீன்
கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா - 3 அமிலம் நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

மத்தி மீன்
மத்தி மீன்கள் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். மேலும் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது.

வாள்மீன்
வாள்மீனில் காணப்படும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதகிறது.
- உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது.
- நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்தை பாதிக்கும்.
நம்முடைய உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது. பிறந்த குழந்தைகள் ஒரு நாளில் 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்குவார்கள். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த இரவுத் தூக்கம் அவசியமானது.
தினசரி சீராக தூங்குவதன் மூலம் உடலையும், மனதையும் புத்துணர்வாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். அதே சமயம். ஒரு நாளில் 8 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் தூங்கினால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இரவு நேரத்தில் சீரான தூக்கம் கொள்ளாமல் பகல்பொழுதில் தூங்குவதும். நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்தை பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நீண்டநேரம் தூங்கும்போது தொடர்ச்சியாக உடல் அசைவின்றி இருக்கும். இதன் காரணமாக தசைகளின் இயக்கம் குறைந்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டில் இடையூறு ஏற்படும்.
இதன்மூலம் சோம்பல் உணர்வு அதிகரிக்கும். எந்த வேலையும் செய்ய முடியாமல் அலுப்பு உண்டாகும். நீண்ட நேரம் ஒரே மாதிரியான அமைப்பில் படுத்திருக்கும் போது முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

அதிக நேரம் தூங்கும்போது மூளையில் உள்ள நரம்புக் கடத்திகளின் செயல்பாடு குறைந்து நாளடைவில் நினைவாற்றல் இழப்பு ஏற்படக்கூடும். நீண்ட நேரம் தூங்கினால் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரோடோனின் அளவு குறையும்.
இதன் காரணமாக தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதுமட்டுமல்லாமல், சிந்திக்கும் திறன், தீர்வுகாணும் திறன் குறைந்து எதிர்மறையான மனநிலை மாற்றத்துக்கும் வழிவகுக்கும்.
அதிகப்படியான தூக்கம் ஹார்மோன் சுரப்பில் இடையூறை ஏற்படுத்துவதோடு, சீரற்ற நேரத்தில் தூங்கும் பழக்கத்தை உண்டாக்கும். இதன் மூலம் மனஅழுத்தம், மனச்சோர்வு, மறதி போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
சீரற்ற தூக்கத்தால் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதோடு உடல் இயக்கத்தின் அளவும் குறையும். இதனால், உடலில் தேவை யற்ற கொழுப்பு அதிகரிக்கும். இது உடல் பருமன் நோய்க்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
- ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும்.
- வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும்.
காலையில் வயிறு காலியாக இருக்கும்போது உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் துரிதமாக உறிஞ்சப்பட்டுவிடும். குறிப்பாக பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும். உடலின் அனைத்து உள் உறுப்புகளுக்கும் சத்துகளை கடத்தி உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவிடும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் குறித்து பார்ப்போம்.

1. வாழைப்பழம்:
வாழைப்பழம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. மேலும் இதிலிருக்கும் இயற்கையான சர்க்கரை, உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும். அது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

2. தர்பூசணி:
தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டது. கலோரிகளும் குறைவாகவே இருக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் வித்திடும்.

3. பப்பாளி:
பப்பாளியில் பப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். அத்துடன் வைட்டமின்கள் ஏ, சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளும் பப்பாளியில் உள்ளன. அவை ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் வலு சேர்க்கக்கூடியவை.

4. ஆரஞ்சு:
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் மிகுந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவிடும். வளர்சிதை மாற்ற செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும்.

5. ஆப்பிள்:
ஆப்பிளில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்யும். செரிமானம் சீராக நடைபெறவும் துணை புரியும். மேலும் ஆப்பிளில் இருக்கும் இயற்கை சர்க்கரை, உடலுக்கு தேவையான ஆற்றலை வெளியிடவும் உதவிடும்.

6. அன்னாசி:
அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். வீக்கத்தையும் குறைக்கும்.

7. மாம்பழம்:
வைட்டமின்கள், நார்ச்சத்துகள் மாம்பழத்தில் மிகுந்திருக்கும். அவை அன்றைய நாளை உற்சாகத்துடன் தொடங்குவதற்கு உதவி செய்யும்.

8. பெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கின்றன. வைட்டமின்களும், நார்ச்சத்துகளும் அதிகம் நிரம்பியுள்ளன. அறிவாற்றல் திறனுக்கும், இதய நலனுக்கும் வலு சேர்க்கும்.

9. கிவி:
கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை செரிமானத்திற்கும் நலம் பயக்கும்.

10. திராட்சை:
திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கக்கூடியது.
- நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது.
- பியூரிபையர் தேவை இல்லை வாழைப்பழத்தோல் இருந்தால் போதும்.
இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத்தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!
ஆச்சரியமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. அந்த குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...
''சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாத அளவிற்கு மாசடைந்து காணப்படுகிறது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதற்கு பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன.
வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.
ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத்தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவீதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.
நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஏழை நாடுகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்" என்று முடிகிறது ஆய்வறிக்கை.
- காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமானதாக போற்றப்படுகிறது.
- சில உணவுகள் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமான உணவாகப் போற்றப்படுகிறது. இது உங்கள் ஆற்றல் நிலைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான வலிமையான பாதையை அமைக்கிறது. இருப்பினும், எல்லா உணவுகளும் காலை உணவுக்கு ஏற்றதாக இல்லை. குறிப்பாக வெறும் வயிற்றில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் காலை நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழங்கள் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிரம்பி இருந்தாலும், அவற்றின் அதிக அமிலத்தன்மை வெறும் வயிற்றில் அசவுகரியத்தை ஏற்படுத்தும். சிட்ரஸ் பழங்கள் சில நபர்களுக்கு அமில ரிஃப்ளக்ஸ் அல்லது அஜீரணத்திற்கு வழிவகுக்கும். திடமான காலை உணவுக்குப் பிறகு அவற்றை உட்கொள்வது நல்லது.

காபி
வயிற்றில் அமில உற்பத்தியைத் தூண்டுகிறது, இது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான அசவுகரியத்திற்கு வழிவகுக்கும். ஒரு கப் காபிக்கு முன் ஒரு சிறிய சிற்றுண்டி சாப்பிடுவது நல்லது.

காரமான உணவுகள்
மிளகுத்தூள் அல்லது அதிக மசாலா கலந்த உணவுகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது பல அசவுகரியங்களை ஏற்படுத்தும். காரமான உணவுகள் ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் எரிச்சலைத் தூண்டி, வயிற்றை சீர்குலைக்க வழிவகுக்கும். காலையில் லேசான உணவுகளை சாப்பிட்ட பின், அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடலாம்.
சோடா மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் கார்பனேற்றப்பட்ட பானங்கள் செரிமான அமைப்பில் வாயுவை அறிமுகப்படுத்துகின்றன, இது வீக்கம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். கூடுதலாக, சோடாக்களில் உள்ள அதிக சர்க்கரை உள்ளடக்கம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம், அதைத் தொடர்ந்து ஆற்றல் இழந்து நீங்கள் மந்தமாக உணர்வீர்கள்.

வேகவைக்காத காய்கறிகள்
காய்கறிகள் ஆரோக்கியமானவை என்றாலும், பச்சை காய்கறிகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது செரிமானத்திற்கு சவால்களை ஏற்படுத்தலாம். வேகவைக்காத காய்கறிகளில் கடினமான நார்ச்சத்து உள்ளது, அவை உடைக்க கடினமாக இருக்கும், இது வீக்கத்தை ஏற்படுத்தும். காலை உணவில் வேகவைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்வதே நல்லது.

கேக் வகைகள்
சர்க்கரை பேஸ்ட்ரிகள், டோனட்ஸ் மற்றும் காலை உணவு பொருட்கள் விரைவான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கலாம், ஆனால் அவை பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளால் நிரப்பப்படுகின்றன. இந்த சர்க்கரை உணவுகள் ரத்த சர்க்கரை அளவுகளில் விரைவான உயர்வை ஏற்படுத்தும், இது அடுத்தடுத்த செயலிழப்பு மற்றும் சோர்வு உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்?
நீரேற்றம் மற்றும் செரிமானத்திற்கு உதவ ஒரு கிளாஸ் தண்ணீருடன் உங்கள் நாளைத் தொடங்குவது முக்கியம். அடுத்து, நீடித்த ஆற்றலுக்காக நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள். முட்டை, தயிர் அல்லது மெலிந்த இறைச்சிகள் அதிக சர்க்கரை இல்லாமல் புரதத்தை அதிகரிக்கும். ஓட்ஸ் அல்லது முழு தானிய ரொட்டி போன்ற காலை உணவுகள் நீடித்த ஆற்றல் வெளியீட்டை வழங்குகின்றன.
- கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- மலச்சிக்கல், செரிமான பிரச்சினையை சரிசெய்கிறது.
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் ஆரோக்கிய சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்..!
பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், கால் சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்கிறது.
பலா, குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்குவதுடன், எலும்பு தேய்மானம், மூட்டு வலி பிரச்சினை களையும் குணப்படுத்த உதவுகிறது.

பலாப்பழம், ரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதில் இருக்கும் கரோட்டினாய்டு சத்து, டைப்- 2 நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
இதில் உள்ள கார்போஹைட்ரேட், உடலில் ஆற்றலை அதிகரிக்கும். பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது. மேலும், உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.
பலாப்பழத்தில் காப்பர் சத்து நிறைந்துள்ளதால் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து, தைராய்டு ஹார்மோன் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின் பி-6, ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டின் அளவைக் குறைத்து, இதய பிரச்சினைகளை குணப்படுத்தும். இதில் உள்ள இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி சத்துகள், புது ரத்தத்தை உருவாக்குவதோடு, ரத்தசோகை பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.
- சைனஸ் என்பது மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும்.
- அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
சைனஸ் என்பது நம் மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். இதில் அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக சைனஸ் இருக்கிறது. இது பெரும்பாலும் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் ஒன்றாகும்.

மேலும் அதிகப்படியான குளிர்பானங்கள், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகிறது. முகத்தில் வலி, அதிகப்படியான சளி, சுவாசப் பிரச்சினை போன்றவை சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள்.
நீங்களும் சைனஸ் பிரச்சினையால் அவதிப்படும் நபராக இருந்தால், எளிதான வீட்டு வைத்திய முறையிலேயே அதை சரி செய்ய முடியும். அதற்கு உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி. இந்த மூன்றையும் பயன்படுத்தி கசாயம் செய்து சாப்பிட்டால் விரைவில் சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
செய்முறை:
முதலில் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து, நன்கு காய வைத்து, பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.
பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு வேறு ஒரு கிளாசில் வடிகட்டினால், சைனஸ் பாதிப்பை குணமாக்கும் அற்புத பானம் தயார்.

இந்த கசாயத்தை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடிக்க வேண்டும். நிச்சயமாக சைனஸ் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.
அதேநேரம் மூலிகைப் பொடியை அதிகமாக கலந்து கஷாயம் தயாரிக்க வேண்டாம். ஒரு ஸ்பூன் மூலிகைப் பொடி பயன்படுத்துவது நல்லது. அதிகமாகக் குடித்தால் வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவதற்கு முன் தகுந்த மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
- சர்க்கரை நோய் அல்லாத வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கலாம்.
- 50 சதவிகிதம் பேருக்கு இரவில் சிறுநீர் மிகைக் கழித்தல் பிரச்சினை உள்ளது.
இரவில் பல முறை சிறுநீர் கழிப்பதற்கு சர்க்கரை நோய் அல்லாத வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கலாம். 70 வயதுக்கு மேற்பட்டவர்களில், 50 சதவிகிதம் பேர், இரவில் சிறுநீர் மிகைக் கழித்தல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மாலை அல்லது இரவு நேரங்களில், அதிக திரவ உணவுகள், காபி, மது ஆகியவற்றை உட்கொண்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். மேலும், வயதானவர்களுக்கு இரவில் ஆன்ட்டி டையூரிட்டிக் ஹார்மோன் வெளியீடு குறைவதால் சிறுநீர் அதிகம் கழிக்க நேரிடலாம்.

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சர்க்கரை நோய் அல்லாத காரணங்களில், கீழ்கண்டவை முக்கியமானவையாக கருதப்படுகிறது.
1) புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் (புரோஸ்டேட்ஹைபர்பிலேசியா),
2) வயது முதிர்வின் காரணமாக சிறுநீர்ப்பையின் திறன் குறைதல்,
3) நீர்பை அழற்சி, கற்கள் அல்லது தொற்று,
4) சிறுநீர் பாதையில் தொற்று அல்லது கற்கள்,
5 மன அழுத்தம் அல்லது மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ் போன்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,
6) இதய செயலிழப்பு,
7) கல்லீரல் செயலிழப்பு.
நீங்கள் ரத்த கொதிப்பிற்கு காலை மற்றும் இரவில் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் அதன் பக்க விளைவாக கூட சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடலாம். ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தப்படும் டையூரிட்டிக்ஸ் (தையாசைடு), கால்சியம் சானல் பிளாக்கர்ஸ் (அம்லோடிப்பின்), அஞ்ஜியோடென்சின் கன்வர்டிங் என்சைம் இன்ஹிப்ட்டாஸ் (எனலாப்பிரில்) ஆகிய மருந்துகளின் பக்கவிளைவுகளால் கூட சிறுநீர் அடிக்கடி கழிக்கக் கூடும்.
இதற்கு தீர்வாக தூங்குவதற்கு நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு முன்னர், திரவ உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள். மருந்துகளின் பக்க விளைவுகளால் இது ஏற்படுவதாக இருப்பின், மருத்துவரை அணுகி ரத்தக்கொதிப்பு மாத்திரைகளில் மாற்றம் செய்யலாம். மேலும், மருத்துவரிடம் கலந்தாலோசித்து அல்ட்ரா சவுண்ட் மற்றும் யூரின் கல்ச்சர் போன்ற பரிசோதனைகளை செய்து, உரிய காரணங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு தகுந்த மருத்துவம் செய்து கொள்ளலாம்.
- சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
- குறிப்பாக அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும்.
தினமும் காலையில் எழுந்ததும் சிறிது சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை பருகும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. அது சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். குறிப்பாக அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும். மேலும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையும்.
ஒரு டீஸ்பூன் சீரகத்தில் 7 கலோரிகளே உள்ளன. இது மற்ற பானங்களுடன் ஒப்பிடும்போது குறைவானதுதான். சீரக தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால் செரிமான தொந்தரவு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதிலும் சீரகத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை எரித்து உடல் பருமன் பிரச்சினையை போக்கும் தன்மையையும், புற்றுநோயை தடுக்கும் பண்புகளையும் கொண்டது. மேலும் சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தக்கூடியது. அதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதையும் தடுக்கும்.
கர்ப்பிணி பெண்களும் டாக்டரிடம் ஆலோசனை பெற்று சீரக நீர் பருகலாம். அது கர்ப்ப காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவி புரியும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை தூண்டும். அதிக பால் சுரப்புக்கும் வழிவகுக்கும்.
உடல் நலனுக்கு இரும்புச்சத்து மிக அவசியமானது. அதன் குறைபாட்டை போக்க தொடர்ந்து சீரக தண்ணீர் பருகி வருவது நன்மை பயக்கும். மாதவிடாய் காலத்தில் சீரக தண்ணீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்கவும் சீரக தண்ணீர் துணைபுரியும். உடல்நலக் குறைவின்போது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். சிறுநீரக நோயாளிகளும் சீரக தண்ணீர் பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் அதனை பருகும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க போராடும். சளியை குணப்படுத்தவும் சீரக தண்ணீர் உதவும்.
சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக கட்டுப்படுத்த உதவும். உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் செய்யும். பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். அதனால் கல்லீரலுக்கு நன்மை சேர்க்கும்.
சரும பளபளப்புக்கும் சீரக தண்ணீர் வித்திடும். சீரகத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீசு போன்றவை உள்ளன. அவை சருமத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியவை.
சீரக தண்ணீருடன் மஞ்சள் கலந்து முகத்தை கழுவி வரலாம். அது முகத்துக்கு பொலிவு சேர்க்கும். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. சீரக தண்ணீரை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் முன்கூட்டியே முதுமை எட்டிப்பார்ப்பதையும் தவிர்க்கலாம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முடியை வலுவாக்கும். முடி உதிர்தலையும் தடுக்கும்.
- உடலில் வைட்டமின் டி குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறையும்.
- அதிக அளவில் வைட்டமின் டி நிறைந்த ஒரே உணவு காளான்தான்.
எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், நம் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சவும் வைட்டமின் டி அவசியமாகிறது. எலும்புகளின் ஆரோக்கியம், தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு நமக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது.
சூரிய ஒளி இல்லாத காரணத்தாலோ அல்லது தவறான உணவு முறையாலோ கூட உடலுக்குத் தேவையான வைட்டமின்கள்கிடைக்காமல் போனாலும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படலாம். குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும். இந்த சமயங்களில் வைட்டமின் டியை எப்படி, எதன் மூலம் பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சருமத்தின் மீது சூரிய ஒளி படும்போது அதில் இருக்கும் புற ஊதாக்கதிர்களை கொண்டு வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது.
உடலில் வைட்டமின் டி குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உண்டு. வைட்டமின் டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் பெரிதும் பாதிக்கப்படும். எலும்பின் அடர்த்தி குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்பட வழி வகுக்கும்.

சூரிய ஒளியைத் தவிர வைட்டமின் டி நிறைந்த உணவுகள்:
1. காளான் (மஷ்ரூம்கள்): சைவ உணவுகளில் அதிக அளவில் வைட்டமின் டி நிறைந்த ஒரே உணவு காளான்தான்.
2. கடல் உணவுகள்: கடல் உணவுகளில் ஒமேகா 3 அதிக அளவில் இருப்பது போல் வைட்டமின் டியும் நிறைந்துள்ளது. குறிப்பாக சால்மன் மற்றும் மத்தி மீன் வகைகள்.
3. முட்டை: முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
4. ஆரஞ்சு ஜூஸ்: மேற்கத்திய நாடுகளில் வைட்டமின் டிக்கு ஆரஞ்சு ஜூசை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸில் கிட்டத்தட்ட நூறு யூனிட் அளவுகள் வைட்டமின் டியை பெற முடியும்.
5. பசும்பால், பாதாம் பால், சோயா பால்: பாதாம் பால், சோயா பால் மற்றும் பசும் பாலில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களுடன் வைட்டமின் டியையும் ஓரளவு பெற முடியும்.
6. ஓட்ஸ் மற்றும் செரல் வகைகள்: ஓட்ஸ் மற்றும் செரல் வகைகளில் நார்ச்சத்துக்களுடன் வைட்டமின் டியும் நிறைந்துள்ளது. ஓட்மீலில் கிட்டத்தட்ட நூறு யூனிட் அளவு வைட்டமின் டி கிடைக்கும்.
7. காட் லீவர் ஆயில்: சைவ உணவு சாப்பிடுபவர்கள் மீன் சாப்பிட முடியாது. இவர்கள் காட் லீவர் ஆயில் எடுத்துக் கொள்ளலாம். இவை மாத்திரைகளாகவும் கிடைக்கின்றது.
இவை தவிர, செறிவூட்டப்பட்ட தானியங்கள், பாதாம் போன்ற பருப்பு வகைகள், சீஸ் வகைகளிலும் வைட்டமின் டி உள்ளது. மேலும், கீரைகள், வெண்டைக்காய், கேரட், புரோக்கோலி, தயிர் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
- சித்த மருந்துகளை பயன்படுத்தி வந்தால் உங்கள் பிரச்சினை தீரும்.
- விந்தணுக்களின் எண்ணிக்கையையும், இயக்கத்தையும் அதிகப்படுத்த உதவும்.
விந்தணுக்களின் எண்ணிக்கையையும், இயக்கத்தையும் அதிகப்படுத்த உதவும் உணவு வகைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சித்த மருந்துகளை பயன்படுத்தி வந்தால் உங்கள் பிரச்சினை தீரும்.

உணவுகள்:
நாட்டுக்கோழி முட்டை,இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்தி, சாளை மீன்கள், பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், செவ்வாழை, நேந்திரம், பேரீச்சை, திராட்சை பழம், பொரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளைப்பழம், சின்ன வெங்காயம், பூண்டு, கீரைகளில் பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, காய்கறிகளில் தக்காளி, புடலங்காய், அவரைப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, முருங்கைக் காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கிழங்குகளில், கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு, இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். இது உடல் சூட்டை தணிக்கும். கோடை காலத்தில் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அதை சிறிதளவு சாப்பிட்டு வர உடல் வெப்பம் குறையும்.
இளநீர், மோர், முலாம் பழம், கிர்ணிப்பழம் இவைகளை எடுத்து வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். இந்த பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.

கீழ்க்கண்ட மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.
1) அமுக்கரா சூரணம் ஒரு கிராம், பூனைக்காலி விதை சூரணம் ஒரு கிராம் வீதம் மூன்று வேளை பாலில் கலந்து குடிக்கலாம்.
2) சாலாமிசிறி லேகியம் 5 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
3) பூரண சந்திரோதயச் செந்தூரம் 100 மி.கி. நாகப்பற்பம் 100 மி.கி. வெள்ளி பற்பம் 100 மி.கி. இவைகளை ஒரு கிராம் அமுக்கரா சூரணத்தில் கலந்து இருவேளை சாப்பிட வேண்டும்.






