என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
    • பெண்கள் பெரும் மனச்சோர்வை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    "DEPRESSION" நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அது உணர்வு, சிந்தனை மற்றும் செயலை பாதிக்கின்றது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் மற்றும் வீட்டில் அல்லது வேலையில் சரியாகச் செயல்படுவதற்கான திறனை உங்களில் இருந்து தடுக்கும்.

    முதல்படி

    அதிலும் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் எல்லாம் இதில் பாதிக்கப்படுகின்றார்கள். இது ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. பெண்கள் வாழ்நாளில் பெரும் மனச்சோர்வை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு பொதுவான மனநல கோளாறு. இந்த மனநல கோளாறு தற்கொலைக்கு வழிவகுக்கும். இது பொதுவாக உங்களின் வேலை, தூக்கம், படிப்பு மற்றும் சாப்பிடும் திறனில் தலையிடுகிறது. இந்த அறிகுறிகள் குறைந்தது 2 வாரங்களுக்கு நீடிக்கும்.

    இரண்டாம் படி

    இது டிஸ்டிமியா என்றும் அழைக்கப்படுகிறது. அறிகுறிகள் கடுமையானவை அல்ல மற்றும் நீண்ட காலம் நீடிக்கும், இது பொதுவாக குறைந்தது 2 ஆண்டுகள் நீடிக்கும்.

     அறிகுறிகள்

    உதவியற்றதாக உணர்தல்

    ஆர்வமின்மை

    அதிக தூக்கமின்மை

    எரிச்சல்

    எடை மாற்றங்கள்

    ஆற்றல் இழப்பு

    பொறுப்பற்ற செயல்கள்

    தலைவலி, முதுகுவலி, வயிற்று வலி

    சுய வெறுப்பு

    அமைதியின்மை

    குறைவான சிந்தனை

    அதிகம் பேசுதல்

    ஆளுமை மாற்றங்கள்

    நினைவக சிரமங்கள்

    உடல் வலி

    சோர்வு

    பசியிழப்பு

    உடலுறவில் ஆர்வம் இழப்பு

    இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டும் தான். ஆனால் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கு என்று செல்லகூடாது. எப்போது செல்ல வேண்டும் என்று முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

    மனஅழுத்தம் அதிகரித்து உங்களுக்கு தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாலே உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். வைத்தியசாலை செல்வதற்கு மனம் இல்லை என்றால், உங்களுக்கு நம்பிக்கையானவரிடம் பேசவும். இவ்வாறு செய்தாலும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது மாரடைப்பு மட்டுமே.
    • முதுகுத் தண்டுக்கு பாதிப்பு ஏற்படாமல் மொபைல் பயன்படுத்துவது எப்படி?

    1990-களில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது மாரடைப்பு மட்டுமே. ஆனால்ல இந்த காலகட்டத்தில் இதயநோய்க்கு ஈடாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகம் வாட்டி வதைப்பது கழுத்து வலி மற்றும் முதுகு தண்டு வலி தான் என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு சீரியசான பிரச்சினையையாக உருவெடுத்திருக்கும் இந்த பிரச்சினைகளை சரி செய்ய முடியுமா?. ஆம் சரி செய்ய முடியும் என்று கூறுகிறார், முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விக்னேஷ் புஷ்பராஜ்....அவர் கூறியதாவது:-

    இளைஞர்களிடம் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்தே அவர்களின் கழுத்து வலியும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது என்றே கூற வேண்டும். முதலில் மொபைல் போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். அதாவது மொபைல் பயன்பாடு பற்றி அல்ல, கழுத்துக்கும், முதுகுத் தண்டுக்கும் பாதிப்பு ஏற்படாமல் மொபைல் போனை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

    பொதுவாக மொபைல் போனை பேசுவதற்காக பயன்படுத்துவதை விட வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களை பார்கவும், கேம் விளையாடவுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைக்கு யாரும் மொபைல் போனை முகத்துக்கு நேராக வைத்து நிமிர்ந்து பார்ப்பது இல்லை. கைக்கு நேருக்கு நேர் வைத்து பார்க்கல, நாம தான் போன தேடி போய் பார்க்கிறோம்.

     குனிந்து கொண்டே மொபைல் பார்த்தால் கழுத்தில் இவ்வளவு பாரம் கூடுமா?

    மொபைல் போனை நிமிர்ந்த நிலையில் நேராக வைத்து பார்க்கும் போது, கழுத்தின் மேல் உள்ள தலையின் எடை வெறும் 5 கிலோ தான். ஆதே மொபைல் போனை நாம் 10 டிகிரி குனிந்து பார்க்கும்போது, நம் கழுத்தின் மீது 18 கிலோ வரை எடை கூடி பாரத்தை மேலும் அதிகரிக்கும். அதே 25 டிகிரி வரை குனிந்து பார்க்கும் போது 18 கிலோ முதல் 28 கிலோ வரை கழுத்தின் மீது எடை கூடும் என்பது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபனமான ஒன்று.

    இப்படி பல மணி நேரம் குனிந்து கொண்டு மொபைல் போன் பார்ப்பதனால், கழுத்து பகுதியில் உள்ள தசைகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். நாளடைவில் அந்த அழுத்தத்தால் கழுத்துப் பகுதியில் தசை தேய்மானம் ஏற்படும். பின் அதுவே எலும்புத் தேய்மானமாக மாறி வலி அதிகரிக்கும்.

    தசை தேய்மானம் எலும்புத் தேய்மானமாக மாறிய பிறகு மெல்லமெல்ல நரம்பை பாதிக்கும். அதன் விளைவு கை, கால் நரம்புகளை பாதித்து நடப்பது, எழுதுவது கடினமாகி, ஒரு கட்டத்தில் சிறுநீர் கழிப்பது கூட சிரமமாகும் அளவுக்கு பிரச்சினைகள் ஏற்படும்.

    வாழ்க்கை முறையில் சின்னதொரு மாற்றம் செய்தால் இந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் எளிதாக தவிர்க்க முடியும். அனைத்திற்கும் தீர்வாய் நாம் செய்ய வேண்டிய ஒரு சிறிய விஷயம் மொபைல் போனை நிமிர்ந்து முகத்துக்கு நேர்வைத்து பார்ப்பது தான்.

    இது ஒரு சின்ன மாற்றம் இத நாம பண்ணிட்டோம் அப்படின்னு வச்சிட்டோம்னா, ஒரு முதுகெலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் பார்த்து அவங்க உங்க கழுத்து எலும்பு தேஞ்சுடுச்சு நரம்பு தேஞ்சுருச்சு நரம்பு நசுங்கிடுச்சு அப்படின்னு சொல்றதையும் பிற்காலத்தில் உங்களுக்கு ஒரு சர்ஜரி நடக்க இருக்கிறதையும் தவிர்க்க முடியும்.

    • பஞ்சபூதங்களும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாகும்.
    • நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன.

    ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா இவை மூன்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. உலகில் பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகள் இருந்தாலும் இவை மூன்றும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கொள்கைகள், நோய் அறியும் விதம், சிகிச்சை நுட்பங்கள் உள்ளன.

    குறிப்பாக நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன. அவற்றின் பாரம்பரிய தன்மைக்கேற்ப வெவ்வேறு அணுகுமுறையை கொண்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்வதும் அவசியமானது. ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

     சித்தா:

    தோற்றம்: பண்டைய தமிழகத்தில் வேரூன்றிய மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தை உருவாக்கிய பெருமை சித்தர்களுக்கு உண்டு.

    அடிப்படை: பித்தம், கபம், வாதம் ஆகிய மூன்றுடன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாகும்.

    சிகிச்சை முறை: தாதுக்கள், தாவரங்கள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் எண்ணற்ற பொருட்களும் சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகின்றன. தியானம், யோகா மற்றும் உணவுப் பழக்கம் போன்றவற்றையும் முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

    நோய் கண்டறிதல்: மருத்துவ பரிசோதனை, சிறுநீர் மற்றும் நாடித் துடிப்பு போன்றவைகளுடன் பித்தம், கபம், வாதம் போன்றவற்றின் சமநிலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

     ஆயுர்வேதம்:

    தோற்றம்: இந்திய துணை கண்டத்தின் பழமையான மருத்துவ முறையாக விளங்குகிறது. ஆயுர் என்பது நீண்ட வாழ்வையும், வேதம் என்பது நூலையும் குறிப்பிடுகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் மாற்று மருத்துவ முறைகளுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகளில் செல்வாக்கு பெற்ற மருத்துவ முறையாக திகழ்கிறது.

    அடிப்படை: சாத்வீக, ராட்சத, தமச ஆகிய முக்குணங்களுக்கு இணையாக ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் கூறப்படுகின்றன. இவை சம நிலையில் இருப்பது ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

    சிகிச்சை முறை: மூலிகைகள், உணவு பரிந்துரைகள், வாழ்க்கைமுறை, யோகா மற்றும் தியானம் ஆகியவை பொதுவான ஆயுர்வேத சிகிச்சைகளாக விளங்குகின்றன.

    நோய் கண்டறிதல்: பித்தம், வாதம், கபம் ஆகியவற்றின் சமநிலையை மதிப்பிடுவதோடு கூடுதலாக நாக்கு, நாடித் துடிப்பு, சிறுநீர் மற்றும் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன அமைப்பை பரிசோதிப்பதும் அடங்கும்.

     யுனானி:

    தோற்றம்: யுனானி மருத்துவம் பழங்கால கிரேக்கத்தில் உருவானது. பின்னர் பாரசீகம் மற்றும் அரேபியாவை சேர்ந்த மருத்துவர்களால் செம்மையாக்கப்பட்டு, முழுமையாக்கப்பட்டது.

    அடிப்படை: ரத்தம், கபம், மஞ்சள் பித்தம் மற்றும் கருப்பு பித்தம் ஆகிய நான்கும் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதற்கு சமநிலையில் இருக்க வேண்டும் என்பது யுனானி மருத்துவத்தின் அடிப்படை தத்துவமாக விளங்குகிறது.

    சிகிச்சை முறை: மூலிகைகள், தாதுக்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆகியவை யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்களில் அடங்கும். உணவுப்பழக்கத்தையும், வாழ்க்கைமுறையையும் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

    நோய் கண்டறிதல்: யுனானி மருத்துவத்தில் நாடித்துடிப்பு, சிறுநீர், மலம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் நோயின் தாக்கம் மதிப்பிடப்படுகிறது.

    • இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும்.
    • பகல் பொழுதுதான் கிரீன் டீ பருகுவதற்கு சிறந்தது.

    இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சில உணவு வகைகளை தவிர்ப்பது குடல் ஆரோக்கியத்திற்கும், தூக்கத்திற்கும் நன்மை பயக்கும். அத்தகைய உணவுகள் குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்கள் குறித்தும் பார்ப்போம்.

    1. தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அதிக அமிலத்தன்மை இருப்பதால் அதனை இரவில் தவிர்க்க வேண்டும்.

    2. இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகரிக்கச் செய்யலாம். அதனால் ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும்.

    3. கிரீன் டீயில் காபின் உள்ளடங்கி இருப்பதால் அதனை இரவு நேரத்தில் பருகுவதை தவிர்க்க வேண்டும். அதனை இரவில் உட்கொள்ளும் போது இதயத்துடிப்பு அதிகரிப்பு, பதற்றம் மற்றும் கவலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பகல் பொழுதுதான் கிரீன் டீ பருகுவதற்கு சிறந்தது.

    4. இரவு தூங்குவதற்கு முன்பு பாலாடைக்கட்டி உட்கொள்வது தூக்கத்திற்கு தடையாக அமையும். அதிக நேரம் விழிப்பு நிலையில் இருக்க வைத்துவிடும்.

    5. துரித உணவுகளுடன் உட்கொள்ள வழங்கப்படும் கெட்ச்சப்பை இரவில் தவிர்க்க வேண்டும். அதில் இருக்கும் அமிலம் குடல் ஆரோக்கியத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.

    6. இரவில் மது அருந்துவது தூக்க சுழற்சிக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். நிம்மதியாக தூங்கி எழ முடியாது.

    7. ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் பிரச்சினையை ஏற்படுத்தும்.

    8. இரவில் வெங்காய சாலட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றில் அழுத்தத்தையும், வாயு தொந்தரவையும் உருவாக்கலாம். தொண்டைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    9. காபியில் இருக்கும் காபினின் வீரியம் எட்டு முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம். எனவே இரவில் காபியை தவிர்ப்பதன் மூலம் காலையில் தூங்கி எழுவது வரை காபினின் ஆற்றல்மிக்க செயல்திறனை கட்டுப்படுத்திவிடலாம்.

    10. இனிப்பு அதிகம் கலந்து தயாரிக்கப்படும் தானிய வகை உணவுகளை இரவில் உட்கொள்வது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யலாம். அல்லது சர்க்கரையின் அளவை வீழ்ச்சியடைய வைக்கலாம். அதன் தாக்கம் தூக்கத்திலும் எதிரொலிக்கும். தூக்கமின்மையால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

    11. இரவில் பீர் அருந்துவதும் தூக்கத்தை பாதிக்கும். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேரிடும்.

    12. இரவில் மிளகாய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும் காரமான உணவுகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். தூக்கத்தை குறைக்கும்.

    13. இரவு உணவிற்கு பிறகு இனிப்புகளை சாப்பிட விரும்பினால் டார்க் சாக்லேட்டை அறவே தவிர்க்க வேண்டும். இதில் காபின் இருப்பது தூக்கத்தை தடுக்கும்.

    14. புரதம் அதிகம் உள்ள உணவுகளில் டிரிப்டோபான் குறைவாக இருக்கும். அதன் காரணமாக செரோடோனின் அளவும் குறையும். இரவில் அத்தகைய உணவுகளை சாப்பிடுவதால் தூக்கம் தடைபடும்.

    15. இரவில் உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் வயிற்றுவலி மற்றும் தசைப் பிடிப்புகள் ஏற்படலாம்.

    16. பீட்சாவில் சேர்க்கப்படும் பாலாடைக்கட்டியில் உள்ள கொழுப்பு மற்றும் தக்காளி சாஸில் கலந்திருக்கும் அமிலங்கள் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இரவில் அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    17. பகலில் நிறைய தண்ணீர் பருகலாம். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தண்ணீர் பருகும் அளவை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவில் அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

    18. புதினா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் இரவில் புதினா வகை உணவுகள், புதினா மிட்டாய் சாப்பிடுவது தூக்கத்திற்கு நல்லதல்ல.

    19. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு அதிகமாக உணவு உட்கொள்வதும் தவறானது. அது ஜீரணமாவதற்கு இரவு முழுவதும் உடல் போராட வேண்டி இருக்கும். அதன் காரணமாக தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். காலையில் சோர்வாகவும், மோசமான மனநிலையிலும் எழுந்திருப்பீர்கள்.

    20. வெறும் வயிற்றிலோ அல்லது தூங்குவதற்கு முன்போ தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தயிர், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தி தூக்கத்தை சீர்குலைத்துவிடும்.

    • சமையலில் மிகச்சிறந்த பங்கை வகிக்கிறது அத்திப்பழம்.
    • சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்திய சமையலில் மிகச்சிறந்த பங்கை வகிக்கிறது அத்திப்பழம். உலர்ந்த அத்திப்பழத்தை பயன்படுத்தி இந்த குளிர்காலத்தில் பல சுவையான பதார்த்தங்களை செய்யலாம். மேலும் இந்த அத்திப்பழம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்து குறித்தும் ஏன் இதை குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டும் என்பதனையும் பார்ப்போம்.

     அத்திப்பழம் சேர்த்த நட்ஸ் சட்னி:

    உலர்ந்த அல்லது பிரெஷான அத்திப்பழத்தை துண்டு துண்டாக நறுக்கி, அதோடு கொஞ்சம் பாதாம் அல்லது வால்நட் சேர்த்து, கடைசியாக கொஞ்சம் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் சீரக தூள் சேர்க்கவும். இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சட்னி பதத்திற்கு அரைத்து எடுங்கள். இந்த சட்னியை தோசை, இட்லி தொட்டு சாப்பிடலாம்.

     அத்திப்பழம் மற்றும் பனீர் டிக்கா:

    யோகர்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், வத்தல் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்த கலவையில் அத்திப்பழ துண்டுகள் மற்றும் பன்னீரை மேரினேட் செய்யுங்கள். பின்னர் அதை க்ரில் அடுப்பில் வைத்து லேசாக கருகும் வரை சமைத்து எடுங்கள். இந்த அத்திப்பழ பன்னீர் டிக்கா குளிர்காலத்திற்கு ஏற்ற சிறந்த ஸ்னாக்ஸாக இருக்கும்.

     காரமான அத்திப்பழ அரிசி சாதம்:

    அத்திப்பழ துண்டுகள், வெங்காயம், முந்திரி ஆகியவற்றை நெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின்னர் இதில் பாஸ்மதி அரிசியை சேர்த்து சில நிமிடங்களுக்கு கிளறுங்கள். அரிசியோடு இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை அல்லது சிக்கன் ப்ராத் சேர்த்து சமைக்கவும். அவ்வளவு தான் அத்திப்பழ சாதம் தயார்.

     அத்திப்பழ பாதாம் அல்வா:

    உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பாதாமை பொடி போல் அரைத்துக் கொள்ளவும். நறுமணம் வரும் வரை இந்த பொடியை நெய்யில் சமைக்கவும். பின்னர் இதோடு பால், சர்க்கரை, ஏலக்காய் தூள் கலந்து அல்வா பதம் வரும் வரை கிண்டுங்கள். கடைசியான சூடான அல்வா மேல் சில நட்ஸ்களை தூவி சாப்பிடுங்கள்.

     அத்திப்பழ சிக்கன் குழம்பு:

    நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சியை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பின்னர் இதோடு சீரகம், மல்லி, மஞ்சள், வத்தல் தூள் சேர்க்கவும். அடுத்து இந்த கலவையில் நறுக்கிய தக்காளி, சிக்கன், அத்திப்பழம் சேர்த்து சமைக்கவும். இந்த அத்திப்பழ சிக்கன் குழம்பு தனித்துவமான சுவையை கொடுக்கும்

    • உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
    • நாள்பட்ட நோய் தாக்கும் ஆபத்தைக் குறைக்கிறது.

    அத்திப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளது. இந்த பழம் இயற்கையாகவே இனிப்பாக இருப்பதோடு நமது செரிமான செயல்பாடு ஆரோக்கியமாக இருப்பதற்கும் உடல் எடையை பராமரிக்க உதவக்கூடிய நார்ச்சத்தையும் கொண்டுள்ளது. நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வைட்டமின் ஏ, ரத்தம் உறைவதற்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவும் வைட்டமின் கே மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின் பி6 போன்றவை அத்திப்பழத்தில் அதிகமாக உள்ளது.

    இதுதவிர நமது இதய ஆரோக்கியம், தசை செயல்பாடு, எலும்பு அடர்த்தி அகியவற்றுக்கு உதவும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவையும் அத்திப்பழத்தில் உள்ளது. இதில் உள்ள பாலிபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி நாள்பட்ட நோய் தாக்கும் ஆபத்தைக் குறைக்கிறது.

    குளிர்காலத்தில் ஏன் அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும்?

    அத்திப்பழத்தை அப்படியே பிரெஷாகவும் சாப்பிடலாம் அல்லது உலர வைத்தும் சாப்பிடலாம். இதிலிருக்கும் இனிப்புச் சுவையை ரசித்து உண்ணும் போது நமக்கு எந்த குற்றவுணர்ச்சியும் ஏற்படுவதில்லை. மேலும் அத்திப்பழத்தில் உடலை சூடுபடுத்தும் தன்மை உள்ளது.

    இதன் காரணமாக குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான வெதுவெதுப்பை கொடுத்து தேவையற்ற உடல்நலக் கோளாறுகளில் இருந்து நம்மை காக்கிறது. நமது தினசரி டயட்டில் அத்திப்பழத்தை பயன்படுத்தி வரலாம்.

    • ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது.
    • பச்சை முட்டையில் புரோட்டின் அதிகம் இருக்கிறது.

    முட்டையில் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் தினமும் முட்டையை சாப்பிடுகிறோம். அதே முட்டையை அவித்து சாப்பிடுவார்கள், பொறித்து சாப்பிடுவார்கள், வறுத்து சாப்பிடுவார்கள் இன்னும் சில நபர்கள் பச்சையாக குடிப்பார்கள். அதிலும் பூப்படைந்த பெண்கள் பச்சையாக முட்டை குடித்தால் நல்லது என்று நம் முன்னோர்கள் 16 நாட்கள் குடிக்கச் சொல்வார்கள், உடற்பயிற்சி செய்பவர்களும் பச்சை முட்டையை குடிப்பார்கள். இப்படி பச்சை முட்டை குடிப்பது நல்லதா..! கெட்டதா..! என்று தெரிந்து கொள்வோம் வாங்க...

    முட்டையில் உள்ள சத்துக்கள்:

    ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன. மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி12, ஏ, இ, கே, பி6 போன்ற சத்துகள் இருக்கிறது.

    நம் முன்னோர்கள் முட்டையை வேக வைக்காமல் பச்சையாக குடிப்பது நல்லது என்று இன்று வரையும் நம்பப்படுகிறது. இதனால் தான் பூப்படைந்த பெண்கள், இளம்பெண்கள், தடகள வீரர்கள், உடலுக்கு வலு தரும் உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் போன்றவர்கள் காலையில் தினமும் பச்சை முட்டையை குடித்து வந்தார்கள்.

    சமைத்த முட்டையை விட பச்சை முட்டையில் புரோட்டின் அதிகம் இருக்கிறது,. ஆனால் சமைத்த முட்டையை உட்கொள்ளும் போது புரோட்டீன் 90 சதவீதம் உடலுக்கு சேரும். அதுவே பச்சை முட்டையை உட்கொள்ளும் போது 50% மட்டும் தான் உடலுக்கு சேரும் என்று ஆய்வின் முடிவில் கூறியுள்ளார்கள்.

    குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றோர் பச்சை முட்டையை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    முட்டையை 74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைத்து சாப்பிடும் போழுது சால்மோனெல்லா பாக்ட்ரியா அழிந்து விடும். சமைத்த முட்டையை சாப்பிட்டாலும், பச்சை முட்டையை குடித்தாலும் சத்துக்கள் ஒன்று தான். ஆனால் பச்சை முட்டையை குடிக்கும் பொழுது மேல் கூறப்பட்டுள்ள உடல் பிரச்சினைகள் ஏற்படும்.

    • அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு ஏற்படும்.
    • செல்கள் கிளர்வூட்டப்பட்டு தோல் கருமை ஏற்படுகிறது.

    உங்கள் உடம்பு கருத்து போவதற்கு காரணம் அகாந்தோசிஸ் நைக்ரிகன்ஸ்' எனப்படும் நோயாகும். இந்நோயில், ஒரு சில நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக முகம், நெற்றி, கழுத்து, முழங்கை, இடுப்பு, அக்குள், உடல் மடிப்புகள், முட்டி போன்ற இடங்களில் கருமையான தடிமனான தன்மையுடையதாக தோல் மாறும். இது பெரும்பாலும் 40 வயதை கடந்த டைப் 2 நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    இது ஏற்படக் காரணம் ஒரு சில நீரிழிவு நோயாளிகளிடம் காணப்படும் இன்சுலின் எதிர்மறை நிலையால், இன்சுலின் அளவு மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகள் அதிகரிப்பதால், கெரட்டினோசைட் மற்றும் பைபிரோபிலாஸ்ட் போன்ற செல்கள் கிளர்வூட்டப்பட்டு இது போன்ற தோல் கருமை ஏற்படுகிறது.

     சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் கருமையாவதற்கு மற்றொரு காரணம் 'டயாபட்டிக் டெர்மோபதி ஆகும். இது பெரும்பாலும் கால்கள் மற்றும் பாதங்களில் குறைந்த குருதியோட்டத்தால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக தோல் நோய் மருத்துவரை கலந்தாலோசித்து தோலில் கருமை நிறம் ஆவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று கண்டறியப்பட வேண்டும்.

    ஏனெனில் ஹைப்போதைராய்டிசம், அக்ரோமெகாலி, குஷ்ஷிங் சிண்ட்ரோம் போன்ற நோய்களாலும் தோலில் கருமை நிறம் ஏற்படலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல் மற்றும் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகள்' மற்றும் மேல் பூச்சு களிம்பு மூலமாக இந்தக் கருமை நிறத்தை நாம் சரி செய்யலாம்.

    • 'அன்கிலோசிங் ஸ்பான்டிலைடிஸ்’ என்பது வாத நோய்களில் ஒன்று.
    • முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு இடையே மூட்டுகளில் வீக்கம்.

    'அன்கிலோசிங் ஸ்பான்டிலைடிஸ்' என்பது வாத நோய்களில் ஒன்றாகும். சித்தமருத்துவத்தில் 85 வகை வாத நோய்களை சித்தர்கள் கூறியுள்ளனர். இந்நோயில் முதுகில் உள்ள முதுகெலும்புகள் இடைவெளியின்றி ஒன்றாக இணைகின்றன. இதனால் முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. சிலநேரங்களில் விலா எலும்புகளும் பாதிக்கப்படலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். பெண்களைவிட ஆண்களை அதிகமாக பாதிக்கும்.

     அறிகுறிகள்:

    நோயின் முக்கிய அறிகுறி முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு (சாக்ரோலியாக் மூட்டுகள்) இடையே உள்ள மூட்டுகளில் வீக்கம் காணப்படும். இந்த வீக்கம் முதுகெலும்பின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம். இதனால் முதுகு அல்லது பிட்டத்தில் கடுமையான வலி காணப்படும். காலை நேரங்களில் வலி அதிகமாவது அல்லது வலியினால் இரவில் தூக்கம் வராமல் வேதனைப்படுவது போன்ற சிரமங்களை சந்திக்க நேரிடும்

    குதிகாலின் பின்புறம் தசைநார்கள் இணைக்கும் இடங்களில் வலி, நடப்தில் சிரமம் போன்ற பாதிப்புகளும் இருக்கலாம். இந்தநோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் HLA-B27 மரபணு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த மரபணு இல்லாதவர்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.

    சித்த மருத்துவம்:

    இந்த நோய்க்கு சிறந்த சித்த மருந்துகள் உள்னை. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது அவசியம்.

    1. சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கிட குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவைகளுடன் அமுக்கரா' சூரணம் 1 கிராம் சேர்த்து காலை இரவு இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    2 கந்தி மெழுகு 500 மி.கி.கலை. இரவு இருவேளை சாப்பிட வேண்டும். வலியுள்ள இடங்களில் விடமுட்டி தைவம் உளுந்து தைலம், கற்பூராதி தைலம் சிவப்பு குங்கிலியத் தைலம் இவைகளில் ஒன்றை தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    3. உட்கார்ந்து வேலை செய்பவர்கள், சில மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடந்து விட்டு மீண்டும் உட்கார வேண்டும். முதுகெலும்பு வளையாமல் நேர்பட உட்காருவது நல்லது.

    • சேற்றில் நடப்பதால் மட்டுமே வரும் என்று நினைக்க வேண்டாம்.
    • பூஞ்சைக் காளான் நுண் கிருமிகளால் உண்டாகிறது.

    சேத்துப்புண் என்று பலராலும் சொல்லப்படும் சேற்றுப்புண் சேற்றில் நடப்பதால் மட்டுமே வரும் என்று நினைக்க வேண்டாம். உடலில் எப்பொழுதும் ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் எல்லாம் இந்த நோய் ஏற்படும். அத்லெட்ஸ் ஃபுட்" என்று மருத்துவ மொழியில் கூறப்படும் இந்நோய் ஒரு குறிப்பிட்ட வகை பூஞ்சைக் காளான் நுண் கிருமிகளால் உண்டாகிறது.

    இந்நோய், உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் கால்களில் தான் அதிகமாக வர வாய்ப்புண்டு. அதிலும் குறிப்பாக கால் விரல் இடுக்குகளில் தான் அதிகமாக வரக்கூடும். நாம் வெறுங்காலுடன் தரையில் நடக்கும்போது, இந்த நுண் கிருமிகள் கால்களின் விரல் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உடலுக்குள் நுழைந்துவிடும். ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் தான், இந்த நுண்கிருமி அதிகமாக வாழும். அதிக நேரம் கால்கள் ஈரமாக இருந்தால், செருப்பு ஈரமாக இருந்தால் இந்த பூஞ்சைக் கிருமி தாக்கும் வாய்ப்பு அதிகம்.

    நான் மண்ணில் நடக்கவே இல்லையே! எனக்கு எப்படி சேத்துப் புண் வந்தது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். வெளியிலிருந்து எந்த வழியில் வேண்டுமானாலும், யாராவது ஒருவருடைய கால்கள் செருப்பு, ஷூ சாக்ஸ் மூலமாகவும் இந்தக்கிருமி ஒட்டிக்கொண்டு உங்கள் வீட்டிற்குள் நுழைந்துவிடும்.

    முதலில் கால் விரல் இடுக்குகளில் அரிப்பு எரிச்சலை ஏற்படுத்தும், பின் அந்த இடம் சிவந்து போகும். அப்புறம் சின்னச்சின்ன கொப்புளங்கள் வந்து பின் உடைந்து புண்ணாகவே ஆகிவிடும்.

    மழைக்காலங்களில் தண்ணீரில் அதிக நேரம் நிற்பவர்கள், விவசாய வேலை செய்யவர்கள், எப்பொழுதும் தண்ணீரிலேயேநின்று கொண்டு வேலை பார்ப்பவர்கள், அசுத்தமான தண்ணீரில் அதிக நேரம் நிற்பவர்கள் இவர்களுக்கெல்லாம் இந்த நோய் வர வாய்ப்புண்டு.

    இந்த நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வெகு சீக்கிரம் வந்துவிடும் வந்த சேற்றுப்புண் ஆறுவதற்கும் நீண்டநாட்கள் ஆகிவிடும்.

    1. ஈரமான காலுறைகளை அணியக்கூடாது.

    2. எப்பொழுதும் கால்களை சுத்தமாக கழுவி துடைத்து ஈரமில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.

    3. செருப்பு இல்லாமல் வெளியே காலை வைக்காதீர்கள்

    4.ஆபீசில் வேலை பார்ப்பவர்கள் சாக்சை சுமார் 7 மணி நேரத்திற்குமேல் அணியக்கூடாது, தினமும் சாக்சை துவைத்து அணிய வேண்டும். இல்லாவிட்டால் நாற்ற மடிக்கும். கிருமி சேர வாய்ப்பு அதிகம்,

    5.படுக்கப் போகும் முன் தேங்காய் எண்ணெய்யை பாதங்கள், விரல் இடுக்குகளில் தேய்த்துக் கொள்ளவும், தினமும் 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பைப் போட்டு கால்களை மூழ்க வையுங்கள். அதற்குப் பிறகு கால்களை நன்றாகத் துடைத்து காய வையுங்கள். அதன்பின் மஞ்சளோடு சேர்த்து வேப்பிலையும் அரைத்து அத்துடன் தேங்காய் எண்ணெய்யையும் நன்றாக பூசிவிடவும்

    • உடலும், மனமும் தரும் தொந்தரவுகள் எல்லாமே நோய்தான்.
    • மனதில் ஏற்படும் பாதிப்பும் தன் விளைவுகளை உருவாக்கும்.

    நம்முடைய வழக்கமான வேலைகளைச் செய்யவிடாமல் உடலும் மனமும் தரும் தொந்தரவுகள் எல்லாமே நமக்கு நோய்தான். எல்லோருக்குமே தங்களுடைய அன்றாட வழக்கங்கள் பாதிக்கப்படும்போது டென்ஷன் வந்துவிடுகிறது.

    உடனே மருத்துவரைப் பார்த்து மருந்துகளைச் சாப்பிட்டு, ஊசிகளைப் போட்டு உடனே உடல் குணமாகி, உடனே நம்முடைய வழக்கமான வேலைகளுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோருடைய விருப்பமாக இருக்கிறது.

    நோய் என்றால் நம்முடைய மன, உடல் இயக்கத்தில் ஏற்படுகிற மாறுதல். உதாரணத்துக்குப் புகை, தூசு, மாசு மிகுந்த இடங்களில் நாம் இருக்க நேரிடும்போது, நம்முடைய உடலுக்கு ஒவ்வாத மேற்கண்ட விஷயங்களால் சுவாச பாதையில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகிறது.

    நுரையீரலில் இவை சேர்ந்துவிடாமல் இருக்க, நுரையீரல் ஒரு கணம் தன் முழு சக்தியையும் திரட்டி தும்மலாக வெளியேற்றுகிறது. அதையும் மீறிச் சுவாசப் பாதையில் நுழையும் ஒவ்வாத அந்நியப் பொருட்களை வெளியேற்ற சளிச் சவ்வுகளைத் தூண்டிவிட்டு அதிகமான சளிநீரைச் சுரக்கச் செய்து மூக்கின் வழியாக வெளியேற்றுகிறது

    இதன்மூலம் உடலுக்குள் அந்நிய விஷப்பொருள் நுழைவதைத் தடுக்க தானாகவே உடல் முயற்சிக்கிறது. அநேகமாக ஜலதோஷம் பிடித்த எல்லோருக்கும், இந்த உணர்வு வரும். இது ஆரம்பக்கட்டம். சுவாச உறுப்புகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு அந்நியப் பொருள் உள்ளே நுழைந்துவிட்டால், அதை அந்தந்த இடத்திலேயே சளிநீரானது சிறைப்படுத்துகிறது. பின்பு இருமலை உண்டு பண்ணுகிறது. இருமலுடன் சளி வெளியேறுகிறது. கூடவே சிறைபட்ட அந்த பொருளும். அதாவது அந்த தூசு, மாசு, எல்லாமும் வெளியேறுகின்றன.

    அதேபோல மனதில் ஏற்படும் பாதிப்பும் தன் விளைவுகளை உருவாக்கும். உதாரணத்துக்கு அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் நியாயமில்லாத காரணத்துக்காக, ஒருவர் வாங்கும் ஏச்சு மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனாலும் நலம் பாதித்து உடல் நடுக்கத்தையும் நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். மனரீதியான பாதிப்பால் வரும் நோய்களுக்கு இதுபோல் பல உதாரணங்களை கூறமுடியும்.

    ஆக நோய் என்பது ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படைவது ஆகும். மொத்தத்தில் நோய் என்பது ஒருவரது இயல்பான சுபாவத்தில் ஏற்படுகிற மாற்றங்களின் தொகுப்பு என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

    • தைராய்டு அதிகம் பெண்களிடையே நிலவுகிறது.
    • மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி போன்றது.

    தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது.

     தைராய்டு என்றால் என்ன?

    தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.

    ஒரு வகையில் மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி போன்றது. ஒருவேளை இந்த சுரப்பி ஹார்மோன்களை குறைவாகவோ கூடுதலாகவோ சுரந்தால் தைராய்டு நோய்க்கான பிரச்னை உண்டாகிறது.

    மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படாவிட்டால் இது ஹைப்போ-தைராய்டிசம் எனப்படுகிறது. சொல்லப்போனால் பொம்மையில் பேட்டரி தீர்ந்து போனது போலத்தான். ஹைபோ-தைராய்டிசம் வந்தால் மனித உடலில் எந்த அளவு ஆற்றலுடன் இயங்க முடியுமா அதை விடக் குறைவாகவே இயங்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அயர்ச்சி அடைந்துவிடுவார்கள்.

    ஒருவேளை தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் அது ஹைப்பர்-தைராய்டிசம் எனப்படுகிறது. இவர்கள் அதிகளவில் 'காஃபைன் ' எடுத்துக் கொண்டவர்களைப் போன்றவர்கள். அதாவது அதிக பசி, அதிக வியர்வை போன்றவை உண்டாகும்.

    மூன்றாவது பாதிப்பு தைராய்டு சுரப்பி வீக்கமடைவது. 'கழுத்துக் கழலை' எனும் இந்த குறைபாடு 'Goiter' என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. மருந்துகளால் தீர்க்க முடியாவிட்டால் இதற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை தேவை.

    ஹைப்போ-தைராய்டிசம் அறிகுறிகள்:

    உடல் பருமன் அடைவது, முகம், கால்கள் ஆகியவை வீக்கமடைவது, சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் உணர்வது, பசி இல்லாமல் போவது, அதீத தூக்க உணர்வு, அதிகமாகக் குளிர்வது போன்ற உணர்வு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல் பிரச்னை போன்றவை ஹைப்போ-தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகள்.

     ஹைப்பர்-தைராய்டிசம் அறிகுறிகள்:

    போதுமான அளவு பசியிருந்தும் நல்ல உணவுகளை உட்கொண்டாலும் உடல் எடை குறைதல், கை - கால் நடுக்கம், திடீர் திடீரென மனநிலை மாறுவது, கொஞ்சம் வெயில் அடித்தாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது, உறக்கத்தின்போது மூச்சு சீரற்று இருப்பது, இதயத்துடிப்பு சீரற்று இருப்பது, கண் பார்வை மங்குவது, மூளை மூட்டம் உள்ளிட்டவை ஹைப்பர்-தைராய்டிசம் குறைபாட்டின்

    அறிகுறிகள். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் போனால் அதைக் கண்டுபிடிக்க, அதற்கென குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் தனியாக இல்லை.

    தைராய்டு குறைபாடு உள்ளவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருக்கும். ஆனால் அவர்களில் பாதி பேருக்குத்தான் அப்படியொரு குறைபாடு இருப்பதே தெரியவருகிறது. ஆண்கள், பெண்கள் ஆகிய இருவருக்குமே இதற்கான அறிகுறிகள் ஒன்றாக இருந்தாலும் பெண்களுக்கே விரைவில் இந்த நோய் கண்டறியப்படுகிறது.

    வழக்கமாக 80 முதல் 90 சதவீதம் தைராய்டு நோயாளிகள் சிகிச்சைக்குப் பின்பு குணமடைகிறார்கள். ஆனால், சிலருக்கு இது முற்றிலும் குணமாவதில்லை. தைராய்டு பிரச்னை ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் உண்டாகிறது.

     T3, T4, TSH ஹார்மோன்கள் - தைராய்டு நோயுடன் என்ன தொடர்பு?

    ஹைபோ தைராய்டிசம் என்றால் T3 (ட்ரை-அயோடோதைரோனைன்), T4 (தைராக்சின்) ஆகிய ஹார்மோன்கள் குறையும் என்று பொருள். அதே சமயத்தில் TSH (தைரோட்ரோபின்) ஏனும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பிற ஹார்மோன்கள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதை இந்த ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது என்பதால் இது தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

    குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு குறைபாடு இருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதைத் தடுப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லை. பிரச்னை உண்டான பின்னரே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.

    ஹைப்போ-தைராடிசம் உண்டானால் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் அதிகம் சுரக்கப்படும் என்பதால் இதயத்துடிப்பு விகிதத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். இதன் காரணமாக பல பிரச்னைகள் உண்டாகும்.

    இதேபோல ஹைப்போ-தைராய்டிசம் சரியான நேரத்தில் கண்டறியப்படவில்லை என்றால் சில நேரங்களில் மூளையில்கூட பிரச்னை உண்டாகும். அது மட்டுமல்லாமல் உடலில் சோடியம் அளவு குறைந்து பாதிக்கப்பட்ட நபர் கோமா செல்வதற்கும் கூட வாய்ப்புண்டு.

    ×