என் மலர்
நீங்கள் தேடியது "Benefits of Cumin Water"
- சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துகிறது.
- தைராய்டு ஆரோக்கியத்தையும், மனநிலையையும் மேம்படுத்தும்.
உடல் எடையை குறைப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை பேணும் விஷயத்திலும் காலை வேளையில் பின்பற்றும் உணவுப்பழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும், சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தவும் அவை காரணமாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் காலையில் பருகும் பானமும் முக்கியமானது. சீரக தண்ணீர், தனியா எனப்படும் கொத்தமல்லி தண்ணீர் இதில் எதை பருகுவது சிறந்தது என்று பார்ப்போம்.
சீரக நீரின் நன்மைகள்
ஒரு லிட்டர் சீரக தண்ணீரில் 7 கலோரிகளே உள்ளன. அதனால் கலோரி உட்கொள்ளலை குறைக்க சிறந்த வழிமுறையை நாடுபவர்களுக்கு ஏற்ற பானமாக விளங்குகிறது. உடல் எடையை நிர்வகிப்பதற்கும் வழிவகை செய்கிறது.
செரிமான நொதிகளை தூண்டி செரிமானம் எளிதாக நடைபெறவும், மலச்சிக்கலை போக்கவும் துணைபுரிகிறது. சீரகத்தில் உள்ளடங்கி இருக்கும் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் வயிறு வீக்கத்தை குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
மேலும் சீரகத்தில் இருக்கும் பயோபிளவனாய்டுகள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கவும், கொழுப்பை திறம்பட எரிக்கவும், உடல் ஆற்றலை ஊக்கப்படுத்தவும் உதவுகின்றன.
சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துகிறது. சர்க்கரை அதிகரிப்பதை தடுத்து நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் செய்யும். கணைய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
எது சிறந்தது?
சீரக தண்ணீர், தனியா தண்ணீர் இதில் எதை தேர்வு செய்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. ஏனெனில் இரண்டுமே உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. அதிக கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் விரும்புபவர்கள் சீரக தண்ணீர் பருகலாம். திரவ மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்களுக்கு தனியா தண்ணீர் பொருத்தமானது.
தயாரிப்பது எப்படி?
சீரக நீர் தயாரிக்க ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அதனை வடிகட்டி பருகிவிடலாம்.
தனியா தண்ணீர் தயாரிப்புக்கு ஒரு டேபிள்ஸ்பூன் தனியாவை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் அதனை வடிகட்டி குடிக்கவும்.
தனியா நீரின் நன்மைகள்
தனியா நீரில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்றவை நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிடம் இருந்தும் பாதுகாக்கின்றன.
நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டுவதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை ஒழுங்குபடுத்துகின்றன.
பெண்களை பொறுத்தவரை மாதவிடாய் பிரச்சினைகளை சுமூகமாக எதிர்கொள்ள உதவிடும். தைராய்டு ஆரோக்கியத்தையும், மனநிலையையும் மேம்படுத்தும்.
தனியாவில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் நச்சுகளை வெளியேற்றும். சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தும்.
தனியா நீர் சிறுநீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குவதை கட்டுப்படுத்தும். வயிறு வீக்கத்தையும் குறைக்கும். ரத்த ஓட்டத்தையும், சரும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவிடும்.
- சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
- குறிப்பாக அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும்.
தினமும் காலையில் எழுந்ததும் சிறிது சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை பருகும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. அது சருமம், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். குறிப்பாக அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும். மேலும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையும்.
ஒரு டீஸ்பூன் சீரகத்தில் 7 கலோரிகளே உள்ளன. இது மற்ற பானங்களுடன் ஒப்பிடும்போது குறைவானதுதான். சீரக தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால் செரிமான தொந்தரவு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதிலும் சீரகத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை எரித்து உடல் பருமன் பிரச்சினையை போக்கும் தன்மையையும், புற்றுநோயை தடுக்கும் பண்புகளையும் கொண்டது. மேலும் சீரக தண்ணீர் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தக்கூடியது. அதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதையும் தடுக்கும்.
கர்ப்பிணி பெண்களும் டாக்டரிடம் ஆலோசனை பெற்று சீரக நீர் பருகலாம். அது கர்ப்ப காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவி புரியும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை தூண்டும். அதிக பால் சுரப்புக்கும் வழிவகுக்கும்.
உடல் நலனுக்கு இரும்புச்சத்து மிக அவசியமானது. அதன் குறைபாட்டை போக்க தொடர்ந்து சீரக தண்ணீர் பருகி வருவது நன்மை பயக்கும். மாதவிடாய் காலத்தில் சீரக தண்ணீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்கவும் சீரக தண்ணீர் துணைபுரியும். உடல்நலக் குறைவின்போது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். சிறுநீரக நோயாளிகளும் சீரக தண்ணீர் பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் அதனை பருகும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க போராடும். சளியை குணப்படுத்தவும் சீரக தண்ணீர் உதவும்.
சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக கட்டுப்படுத்த உதவும். உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் செய்யும். பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். அதனால் கல்லீரலுக்கு நன்மை சேர்க்கும்.
சரும பளபளப்புக்கும் சீரக தண்ணீர் வித்திடும். சீரகத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீசு போன்றவை உள்ளன. அவை சருமத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியவை.
சீரக தண்ணீருடன் மஞ்சள் கலந்து முகத்தை கழுவி வரலாம். அது முகத்துக்கு பொலிவு சேர்க்கும். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. சீரக தண்ணீரை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் முன்கூட்டியே முதுமை எட்டிப்பார்ப்பதையும் தவிர்க்கலாம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முடியை வலுவாக்கும். முடி உதிர்தலையும் தடுக்கும்.






