search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidney stones"

    • சர்க்கரை நோய் அல்லாத வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கலாம்.
    • 50 சதவிகிதம் பேருக்கு இரவில் சிறுநீர் மிகைக் கழித்தல் பிரச்சினை உள்ளது.

    இரவில் பல முறை சிறுநீர் கழிப்பதற்கு சர்க்கரை நோய் அல்லாத வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கலாம். 70 வயதுக்கு மேற்பட்டவர்களில், 50 சதவிகிதம் பேர், இரவில் சிறுநீர் மிகைக் கழித்தல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    பொதுவாக மாலை அல்லது இரவு நேரங்களில், அதிக திரவ உணவுகள், காபி, மது ஆகியவற்றை உட்கொண்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். மேலும், வயதானவர்களுக்கு இரவில் ஆன்ட்டி டையூரிட்டிக் ஹார்மோன் வெளியீடு குறைவதால் சிறுநீர் அதிகம் கழிக்க நேரிடலாம்.

     இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சர்க்கரை நோய் அல்லாத காரணங்களில், கீழ்கண்டவை முக்கியமானவையாக கருதப்படுகிறது.

    1) புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் (புரோஸ்டேட்ஹைபர்பிலேசியா),

    2) வயது முதிர்வின் காரணமாக சிறுநீர்ப்பையின் திறன் குறைதல்,

    3) நீர்பை அழற்சி, கற்கள் அல்லது தொற்று,

    4) சிறுநீர் பாதையில் தொற்று அல்லது கற்கள்,

    5 மன அழுத்தம் அல்லது மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ் போன்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,

    6) இதய செயலிழப்பு,

    7) கல்லீரல் செயலிழப்பு.

    நீங்கள் ரத்த கொதிப்பிற்கு காலை மற்றும் இரவில் மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் அதன் பக்க விளைவாக கூட சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடலாம். ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தப்படும் டையூரிட்டிக்ஸ் (தையாசைடு), கால்சியம் சானல் பிளாக்கர்ஸ் (அம்லோடிப்பின்), அஞ்ஜியோடென்சின் கன்வர்டிங் என்சைம் இன்ஹிப்ட்டாஸ் (எனலாப்பிரில்) ஆகிய மருந்துகளின் பக்கவிளைவுகளால் கூட சிறுநீர் அடிக்கடி கழிக்கக் கூடும்.

    இதற்கு தீர்வாக தூங்குவதற்கு நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு முன்னர், திரவ உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள். மருந்துகளின் பக்க விளைவுகளால் இது ஏற்படுவதாக இருப்பின், மருத்துவரை அணுகி ரத்தக்கொதிப்பு மாத்திரைகளில் மாற்றம் செய்யலாம். மேலும், மருத்துவரிடம் கலந்தாலோசித்து அல்ட்ரா சவுண்ட் மற்றும் யூரின் கல்ச்சர் போன்ற பரிசோதனைகளை செய்து, உரிய காரணங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு தகுந்த மருத்துவம் செய்து கொள்ளலாம்.

    • சிறுநீரக பிரச்சினை ஒரு சைலன்ட் கில்லர் என்று கூறுவதுண்டு.
    • தண்ணீர் குறைவாக அருந்துபவர்களுக்கு சிறுநீரகக்கல் வர வாய்ப்பு அதிகம்.

    அறிகுறிகள்

    சிறுநீரகங்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை தெரிந்துகொள்வதற்கு முன்பாக சிறுநீரகம் என்னென்ன வேலைகள் செய்கிறது என்று தெரிந்துகொள்வது அவசியம். கழிவுகளை வெளியேற்றுவது, ரத்த அழுத்தத்தை சீராக பரமாரிப்பது, ரத்தத்தை சுத்தம் செய்வது, ரத்தத செல்கள் உற்பத்தி, எழும்புகளின் நலனை பேணுதல் போன்ற மிக முக்கியமான பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன.

    பொதுவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், சரியான அளவு சிறுநீரை வெளியேற்றாத பட்சத்தில் சிறுநீர் அவர்கள் உடலிலேயே தங்கிவிடகூடும் அதனால் கால் வீக்கம், முக வீக்கம், மூச்சு வாங்குதல், கழிவுகள் உடலில் இருந்து வெளியேறாமல் தங்கிவிடுவதால், வாந்தி அல்லது வாந்தி வருவதை போன்ற ஒரு மனநிலை, பசி ஏற்படாமல் இருப்பது, ரத்த செல் உற்பத்தியில் சிறுநீரகம் ஈடுபடுவதால் சிறுநீரகம் பாதி்க்கப்படும் பட்சத்தில் ரத்ததில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்தசோகை ஏற்படுவது, எழும்புகள் பாதிக்கப்பட்டு வழுவிழந்து போவது, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாமல் போவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

    சிறுநீரக பிரச்சினை ஒரு சைலன்ட் கில்லர் என்று கூறுவதுண்டு, ஆகவே இதுபோன்ற அறிகுறிகள் சிறுநீரகம் அதிக அளவு பாதிப்பிற்கு உள்ளான பிறகே வெளிப்படும். அதனால் வாழ்வியல் நோய்களான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் இவர்கள் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகிறது.

    சிறுநீரகத்தில் எதனால் கட்டி அல்லது கல் ஏற்படுகிறது? அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    சிறுநீரகத்தில் கட்டி ஏற்படுவதும், கல் ஏற்படுவதும் வெவ்வேறு பிரச்சனைகள். சிறுநீரக கட்டி என்பதை ஆங்கிலத்தில் சிஸ்ட் என்போம். இந்த சிறுநீரக கட்டிகளை ஸ்கேன் செய்து பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இவை பொதுவாக நீர்கட்டிகளாக இருக்கும்பட்சத்தில் இவற்றால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    ஆனால் சிலருக்கு குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு கேன்சர் கட்டி வருவதற்கு வாய்ப்புள்ளது. அவை கேன்சர் கட்டி என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு அந்த கட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றி தேவையான மேற்சிகிச்சை வழங்கப்படும்.

    சிறுநீரக கல் என்பது முற்றிலும் வேறு பிரச்சினை. பெரும்பாலும் சிறுநீரக கல் ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரில் உள்ள உப்புச் சத்தான கால்சியம், பாஸ்பரஸ், ஆக்சலேட் போன்றவற்றின் அளவு அதிகரிக்கும் போது கல் உருவாகும். இயல்பிலேயே சிறுநீரில் இந்த உப்புச் சத்துக்களின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கோ அல்லது தண்ணீர் குறைவாக அருந்துபவர்களுக்கோ சிறுநீரக கல் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

    சிறுநீரக கல் உள்ள அனைவருக்கும் கல் நீக்க அறுவை சிகிச்சை தேவைபடுவதில்லை. கல்லின் அளவு, கல் எங்கே உள்ளது என்பதை பொருத்தே அறுவை சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது. 2-ல் இருந்து 5 மில்லி மீட்டருக்கு குறைவான கற்களால் பாதிப்பு இல்லை அவை தானாக சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். சிலவற்றை மருந்து மாத்திரைகள் மூலம் கறைய வைத்து வெளியேற்றிவிட முடியும். இதுவே 1 செ.மீ அதிகம் உள்ள கல் மருந்து மாத்திரையினால் கரையவோ வெளியேறவோ உள்ள சாத்தியகூறுகள் மிகவும் குறைவு. இவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் தான் அகற்ற முடியும்.

    இவ்வகை கற்கள் அதன் பெரிய அளவால் சிறுநீரக பாதையே அடைத்துக்கொண்டு சிறுநீர் வெளியேறுவதை தடுக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது அவற்றை கால தாமதம் செய்யாமல் உடனடியாக அகற்றுவது மிக முக்கியம். அதனால் சிறுநீரக கல்லின் அளவை பொறுத்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று அவற்றை அகற்றுவது முக்கியம்.

    சிறுநீரக பாதிப்பு இப்போதெல்லாம் யாருக்கு அதிகமாக வருகிறது?

    உலக அளவில் சிறுநீரக பிரச்சினை அல்லது சிறுநீரகம் செயலிழப்பதற்காகன முக்கியமான இரண்டு காரணங்கள் வாழ்வியல் நோய்களான நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே போல சிறுநீரக கற்கள், மரபணு சார்ந்த காரணங்கள், சில மருந்து மாத்திரைகள் உட்கொள்வது போன்றவை சிறுநீரக கோளாறை உண்டாக்கும் மற்ற காரணங்கள் என்று சொன்னாலும் இவற்றால் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    மது அருந்துவது, புகைப் பிடிப்பது எந்த அளவுக்கு சிறுநீரகத்தை பாதிக்கும்?

    புகைப் பிடிக்கும் பழக்கம் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்க கூடியது. அதனால் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் புகை பிடிப்பதை நிறுத்துவது மிக அவசியம். மது அருந்துவது சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்காது என்றாலும் கூட மறைமுகமாக மது அருந்துவது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி சிறுநீரகத்தை பாதிக்கவோ, சிறுநீரக கல் ஏற்படவோ வாய்ப்பு உள்ளது.

    தினமும் மது அருந்துபவர்களை விட, வாரம் அல்லது மாதம் ஒரு முறை மது அருந்துபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு குறைவாக இருக்குமா?

    புகைப் பிடிப்பது அதிகமாக நுரையீரலை பாதித்தாலும் கூட அதற்கு அடுத்தபடியாக நேரடியாக பாதிப்பது சிறுநீரகத்தை என்றபடியால், சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் முற்றிலுமாக புகைப் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவது சாலச்சிறந்தது. மது அருந்துவதும் பல நோய்களுக்கு அடிப்படை காரணிதான் அதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும் சோசியல் டிரிங்கிங் அதாவது மாதம் ஒரு முறை மது அருந்துவது போன்றவை உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாது.

    அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அல்லது சிறுநீர் குறைவாக வருவது எதனால்?

    அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும்? அடிக்கடி சிறுநீர் கழிப்பது வயதான ஆண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினை. ஆண்களுக்கு Prostate gland என்ற ஒரு சுரப்பி சிறுநீரக குழாயின் பாதையில் இருக்கும். இவை, ஆண்கள் வயதாகும் போது வீக்கமடையவோ பெரிதாகவோ வாய்ப்பு உள்ளது. அவ்வாறாகும் போது அது சிறுநீரக பாதையை அழுத்தி சிறுநீர் அடிக்கடி போக காரணமாக அமையும்.

    அதே போல சிறுநீரக குழாய் தொற்று ஏற்படுபவர்களுக்கும் அடிக்கடி சிறுநீர் வருவது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். அதனால் யாருக்கு இந்த அறிகுறிகள் உள்ளது, அவர்கள் ஆணா பெண்ணா, எந்த வயதை சார்ந்தவர்கள் போன்ற மற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பிரச்சனையை அணுகி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இதுவே போதுமான அளவு தண்ணீர் அருந்தினாலும் குறைவாக சிறுநீர் கழிக்கிறார்கள் என்றால் அது கவனிக்கப்பட வேண்டியது.

    அவ்வாறான பிரச்சினை உள்ளவர்களுக்கு உடலில் தண்ணீர் அதிகம் சேர்வதால் கை, கால் வீக்கம் அல்லது முகத்தில் வீக்கம் மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவை தீவிர சிறுநீரக பிரச்சினையின் வெளிப்பாடாக இருக்கலாம்.

    ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் எப்படி குடிக்க வேண்டும்?

    தண்ணீர் தேவை என்பது நம் உடல் உழைப்புக்கு ஏற்ப உடலின் சமநிலை மாறுபடும் போது நம் உடலே தாக உணர்வை தூண்டி நீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும். உடலில் இருந்து வியர்வையாக வெளியேறும் போது தாகம் ஏற்படும் அப்போது அதற்கு ஏற்றவாறு நீர் அருந்துவது இயல்பு. பொதுவாக சொல்வதானால் இரண்டில் இருந்து மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தலாம்.

    ஆனால் அதிக தண்ணீர் அருந்துவது சிறுநீரகத்திற்கு நல்லது என்று எட்டு அல்லது பத்து லிட்டர் தண்ணீர் அருந்துவது தவறு, அதுவே வேறு சில பிரச்சினைகளை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது. குறிப்பாக சோடியத்தின் அளவு மிகவும் குறைந்து போக வாய்ப்புள்ளது. அதே போல சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி அவர்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்வது முக்கியம். சிலருக்கு குறைவான அளவு தண்ணீர் தேவைப்படும் அதற்கு ஏற்றவாறு மருத்துவர் அறிவுறுத்துவார்.

    கேன் வாட்டர் குடிக்கலாமா?

    ஒரு குறிப்பிட்ட தண்ணீர் சிறுநீரகத்திற்கு நல்லது அல்லது கெட்டது என்று நிரூபிக்கபடவில்லை. தண்ணீரை சுடவைத்து குடித்தாலே போதுமானது, அல்லது கேன் வாட்டர் குடிப்பதில் எந்த தப்பும் கிடையாது. அவை சுத்தமாக தயாரிக்கபட்டதா என்பதை மட்டும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதால் சிறுநீரக பாதிப்பு வரும் என்கிறார்களே உண்மையா?

    சிறுநீரகம் சீராக வேலை செய்யும் ஒவ்வொரு குளிர்பானங்கள் அருந்துவதால் சிறுநீரக பிரச்சினை வரும் என்று நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் இல்லை, ஆனால் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் குளிர் பானம் அருந்துவதால் சில பிரச்சினைகள் வரலாம்.

    குறிப்பாக சில குளிர்பானங்களில் பாஸ்பரசின் அளவு அதிகமாக உள்ளதால், அதனால் அவர்களின் உடலில் பாஸ்பரசின் அளவு அதிகமாக வாய்ப்புள்ளது. தேநீர் போன்ற பானங்களில் ஆக்சலேட் என்ற வேதிப்பொருளின் அளவு அதிகமாக இருக்கும் இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படலாம். குறிப்பாக ஸ்டார் ஃபுரூட்டில் மிக அதிகபடியான ஆக்சலேட் அளவு இருக்கிறது.

    இந்த பழத்தை அதிகம் உட்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். மற்றபடி பொதுவாக குளிர்பானங்கள் அருந்துவதே சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற தட்டையான வாதம் சரியானதல்ல.

    பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம்?

    சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் குறிப்பிட்ட பழம் அல்லது உணவு என்று பொதுவாக இல்லை. உணவில் உப்பின் அளவை குறைவாக எடுத்துக்கொள்வது, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது போன்றவை நல்லது.

    • ரணகள்ளி ஓர் செடி வகையை சார்ந்த தாவரம்.
    • இலைகளின் விளிம்புகள் வளைவுகளாக காணப்படும்.

    ரணகள்ளி ஓர் செடி வகையை சார்ந்த தாவரம், இலைகள் நீள் வட்ட வடிவில் நீர் பற்று அதிகமாக காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவுகளாக காணப்படும். இது ஓர்விதையற்ற தாவரம், இதன் இலைகளின் விளிம்புகளில் இருந்து புதிய கன்றுகள் வளர்வதை காணலாம்.

    ரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் இரணகள்ளி மூலிகைக்கு உள்ளது.

    காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட, காது வலி உடனே குணமாகும். ரணகள்ளி மூலிகை இலைகளை நன்றாக மைய அரைத்து வெற்றிலையோடு சேர்த்து, புண்கள் காயங்கள் கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட, வலி உடனடியாக குறைந்து, காயம் விரைவில் குணமடையும்.

    சிறுநீரக கற்களை கரைக்க இந்த மூலிகை செடியின் இலை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரகத்தில் உருவகும் எவ்வளவு பெரிய கற்களையும் மிக எளிதில் கரைத்து துகள்கலாக சிறுநீர் கழிக்கும் போது எவ்வித வலியும்மின்றி வெளியேற்றுகிறது.

    ரணகள்ளி இலைகளை 7 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வர நோய் பூரண குணம் அடையும். முதல் நாள் மிகச்சிறிய இலையில் இருந்து தான் சாபிட ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் சற்று பெரிய இலை, அதற்க்கு அடுத்த நாள் அதைவிட சற்று பெரியது இப்படி படி படியாகதான் சாப்பிட வேண்டும்.

    குறிப்பாக பாலும் பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி, மீன், முட்டையையும் இந்த இலைகளை உட்கொள்ளும் போது கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும்.

    இளம்பெண்களுக்குப் பித்தப்பையில் கற்கள் உண்டாவதன் காரணமே பட்டினி ஃபேஷன்தான். இதற்கான தீர்வு என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய தலைமுறையில் குறிப்பாக பெண்கள் பலர், பித்தப் பையிலே கல் இருக்கு, டாக்டர் ஆபரேஷன் பண்ணணும்னு சொல்றாரு என்று என்னவோ சர்வ சாதாரணமாக சொல்ல கேட்டிருப்போம். என்னவோ வயிற்றுக்குள் 'வைர கல்' வைத்துள்ளதை போல் அசால்ட்டாக சொல்லுவார்கள். இந்த பித்தகற்கள் யாருக்கெல்லாம் ஏற்படுகிறது? எதனால் ஏற்படுகிறது என்பதனை பார்ப்போம்...   

    பித்தக் கற்கள் யாருக்கு, ஏன் ஏற்படுகின்றன?

    * உடல் பருமன் உள்ளவர்களுக்கு
    * கருத்தடை மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிடும் பெண்களுக்கு
    * செக்ஸ் ஹார்மோன் மாற்றங்களால்
    * இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு
    * பரம்பரை காரணமாக
    * சிறுகுடல் பாதையில் ஏற்படும் வியாதிகள் காரணமாக
    * விரதம் இருப்பதால்

    வேளாவேளைக்குப் போதுமான உணவு கிடைக்காத போது, பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரந்து கற்களாக உறைந்துவிடும் அபாயமிருக்கிறது. தீவிர டயட் செய்யும் இளம்பெண்களுக்குப் பித்தப்பையில் கற்கள் உண்டாவதன் காரணமே பட்டினி ஃபேஷன்தான்!

    பித்தக் கற்களின் அறிகுறி என்ன?

    விதவிதமான வலிகள் ஏற்படும். மாரடைப்பு வலியோ என்று கூட பயம் ஏற்படும். மார்பு எலும்புக்கும் தொப்புளுக்கும் இடையே வலிக்கும் முதுகிலும் தோள் பட்டையிலும் கடுப்பெடுக்கும் வாந்தியும் குமட்டலும் அவஸ்தை தரும். ஒரு சிலருக்கு சிறிது கூட வலி இருக்காது. ஆனால் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

    தீர்வு தான் என்ன?

    பித்தப்பை கற்களைக் கரைப்பதற்கென்றே மருந்துகள் உள்ளன. இவை, பித்தநீர் பைக்குள் அதிர்வலைகளைப் பாய்ச்சி, கற்களைப் பொடியாக்கி, மலத்துடன் வெளியேற்றி விடும். இம்முறை கணையத்தில் வீக்கம், பித்தப்பையில் அழற்சி உள்ளவர்களுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் ஏற்றதல்ல!
    லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையில் பித்தக் கற்களை, வலியின்றி மிகச் சுலபமாக நீக்கிவிடலாம். சில சமயம், குடல் ஒட்டுதல், அதிகம் இருந்தாலோ, பொது பித்த நாளத்தில் கட்டிகள் இருந்தாலோ, ஓப்பன் சர்ஜரி தேவைப்படலாம். பித்தப் பையைக் கற்களுடன் நீக்காவிட்டால், மஞ்சள்காமாலை நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    பித்தக் கற்கள் வராமலிருக்க என்ன செய்யணும்?

    ரொம்ப ஸிம்பிள்! கொழுப்புக் கூடுதலாக உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். பட்டினி, விரதம் என வயிற்றைக் காயப் போடாமல், வேளா வேளைக்கு மிதமான நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, மிதமான உடற்பயிற்சி செய்து வந்தாலே கற்களுக்கு கல்தா கொடுக்கலாம்!
    சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு என்பதே ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர், தேவையற்ற நச்சுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான தாது உப்புக்களை வடிகட்டி சுத்தம் செய்வதுதான்.
    சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு என்பதே ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர், தேவையற்ற நச்சுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான தாது உப்புக்களை வடிகட்டி சுத்தம் செய்வதுதான். இந்த செயல்பாட்டின் போது சிறுநீரகத்தில் சில காரணங்களால் இந்த தாது உப்புக்கள் தங்கி படிமங்களாக மாறி விடும்போது ஏற்படுவதுதான் சிறுநீரகக்கற்கள், என்று கூறும் டாக்டர் கார்த்திக் குணசேகரன் சிறுநீரகக்கற்கள் சிறுநீரகத்தின் உள்ளயோ, சிறுநீரகக்குழாயிலோ (யுரீட்டர்) சிறுநீர்ப்பையிலோ (ப்ளாடர்) அல்லது சிறுநீர்க் குழாயிலோ (யுரீத்ரா) ஏற்படலாம்.

    இக்கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள் சில வகை உணவு வகைகள், போதுமான தண்ணீர் அருந்தாமல் இருப்பது, நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள் இருப்பது, நீடித்த தொற்று இருப்பது போன்றவைகள் ஆகும். தண்ணீர் அதிகம் குடிக்காதபோது சிறுநீரின் நீர்ப்புத்தன்மை குறைந்து அதில் உள்ள உப்புகள் கெட்டிப்பட்டு சிறுநீர் பாதைகளில் தங்கிவிடலாம்.

    சிறுநீர் பாதைகளில் அடிக்கடி தொற்று ஏற்படும்போதும் சிறுநீர் போக்கு தடைபட்டு அதனால் கற்கள் ஏற்படலாம். உணவு வகைகளில் அதிக கால்சியம் உள்ள காய்கறி மற்றும் பழவகைகள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், சாக்லேட், கோலா போன்ற காஃபைன் நிறைந்த பானங்கள், அதிக டீ போன்றவைகளும் கற்கள் தோன்ற காரணங்களாகும்.

    சிறுநீரகக்கற்கள் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைப்பொருத்து அதன் அறிகுறிகள் இருக்கும். சிறுநீரகத்தின் உள்ளேயே இருக்கும்போது முதுகின் நடுப்பகுதியில் வலியும், அந்த வலி அடி வயிறு மற்றும் தொடை இடுக்கு வரையில் பரவுவதாக இருக்கும். இந்த வலி பொருத்துக் கொள்ளும் அளவில் தொடர்ந்து நீடித்து இருக்கும். இக்கற்கள் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகக்குழாயில் இறங்கத் தொடங்கினாலும், அடைத்துக் கொண்டாலோ அதே வலி, வாந்தி, அதிக வியர்வை, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவை ஏற்படும்.



    கற்கள் அடைத்துக் கொண்டு சிறுநீர் கீழே இறங்காமல் சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சிறுநீர் தாரையில் தொற்று ஏற்படலாம். கற்கள் சிறுநீர் குழாயின் சுவரில் உராய்வதால் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிறுநீரில் ரத்தம் வரலாம். தொற்று ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, அடிவயிற்றில் வலி, குளிர் மற்றும் ஜுரமும் ஏற்படலாம். சிறுநீரின் நிறம் வெண்மையாகவும், கலங்கலாகவும், அடர் மஞ்சள் நிறமாகவும், சிவப்பு நிறமாகவும் இருக்கலாம். சிறுநீரில் தொற்று இருந்தால் துர்நாற்றம் ஏற்படலாம். கற்கள் முழுவதுமாய் அடைத்திருந்தால் சிறுநீரே வராமலும் இருக்கலாம்.

    சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகள் எனப்பார்க்கையில் பலமுறைகள் இருக்கிறது. உள்நுழையாத சிகிச்சை முறையான இஎஸ்டபிள்யூ என்பது சவுண்ட் வேவ் மூலமாக சிறுநீரகத்திலிருந்து கீழே இறங்க முடியாத பெரிய அளவில் உள்ள கற்களை உடைக்கும் முறையாகும். குழாயில் அடைத்திருக்கும் கற்களையும் கூட இம்முறையில் சிறு துகள்களாக உடைத்து சிறுநீரில் வெளியேறிவிட உதவலாம். அடுத்தது ஃப்லெக்சிபிள் யூரிட்ரோஸ்கோப் என்ற மடங்கக்கூடிய டெலஸ்கோப் கருவியை சிறுநீர் பாதை மூலமாக உட்செலுத்தி சிறுநீர் குழாய், சிறுநீர்பை, சிறுநீரகக்குழாய் மற்றும் சிறுநீரகத்தின் எந்தப் பகுதியில் கல் இருந்தாலும் அதை நீக்க முடியும்.

    அடுத்ததாக பிசிஎன் என்பது மிகப்பெரிய அளவுள்ள கற்கள், மிகப் பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு, முள்ளு முள்ளான பெரிய கற்கள் இருக்கும்போதும், மற்ற முறைகள் பயனளிக்காத போதும் செய்யக்கூடிய முறையாகும். இதில் நேரடியாக கற்கள் உள்ள பகுதிக்கு நேராக ஒரு துவாரம் இட்டு அதன் மூலம் கருவியை உட்செலுத்தி நேரடியாக கற்களை அகற்றுவது. இதை கைதேர்ந்த அனுபவமுள்ள மருத்துவர்கள் மட்டுமே செய்ய முடியும். இந்த எல்லா முறைகளிலுமே லேசர் பீமைக்கொண்டு கற்களை துல்லியமாக கண்டறிந்து உடைக்க முடிகிறது. இதில் ரத்தப்போக்கு இருக்காது. குணமாகும் காலமும் குறைவாக இருக்கும் என்று கூறி முடித்தார்

    டாக்டர் கார்த்திக் குணசேகர்.
    ×