என் மலர்
பொது மருத்துவம்
- நுரையீரலுக்கு மட்டும் வெளிப்புற சூழலுக்கு நேரடி தொடர்பு உள்ளது.
- இருமல் மருந்துகளை பொறுத்தமட்டில் பல்வேறு வகைகள் உள்ளன.
மத்திய பிரதேசத்தில் 'கோல்ட்ரிப்' எனும் இருமல் மருந்து குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெரும் பேசு பொருளாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலும், இதே இருமல் மருந்து குடித்ததால் 6 வயது சிறுவன் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
மத்தியபிரதேச அரசு இந்த மருந்தை பயன்படுத்த அம்மாநில மக்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசும் அறிவுறுத்தி உள்ளது.
கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகள் மட்டுமின்றி எந்த வயதினரும் பயன்படுத்த வேண்டாம் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். இருமல் மருந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதா? இருமல் மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? வேண்டாமா? இருமல் மருந்தால் மட்டுமே இருமலை குணப்படுத்த முடியுமா? என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் எஸ்.தங்கவேலு கூறியதாவது:-
'இருமல்' நமது உண்மையான நண்பன் என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். முதலில் இருமல் நல்லதா? கெட்டதா? என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதயம், மூளை, கல்லீரல் போன்ற உடலின் முக்கிய உறுப்புகளுக்கும், வெளிப்புற சூழலுக்கும் எந்தவித நேரடி தொடர்பும் கிடையாது.
நுரையீரலுக்கு மட்டும் வெளிப்புற சூழலுக்கு நேரடி தொடர்பு உள்ளது. அதாவது, நாம் சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்கு செல்கிறது. அவ்வாறு நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மெல்லிய தூசு போன்ற ஏதேனும் ஒரு பொருள் நுரையீரலில் படியும்போது இருமல் உருவாகிறது. பெரும்பாலானோருக்கு ஏற்படும் இருமலுக்கு இதுதான் முக்கிய காரணம்.
நுரையீரலில் ஒட்டிய அந்த பொருளை வெளியேற்றும்படி, நமக்கு ஒரு அனிச்சை செயல் மூலம் அறிவுறுத்துவதுதான் இருமல். இதன்படி பார்த்தால் இருமல் வருவது நல்லதே.
பொதுவாகவே, இதுபோன்ற இருமல் 2 வாரங்களுக்கு இருக்கும். அதன்பின்பு தானாகவே சரியாகி விடும். அதற்கு மேல் நீடித்தால் அதற்கான பிற காரணங்களை கண்டறிந்து உரிய மருத்துவம் பெற வேண்டும். இருமலை பொறுத்தமட்டில் அது ஒரு உயிருக்கு ஆபத்தான பிரச்சினை கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
'குழந்தைகளுக்கு இருமல் மருந்து வேண்டாம்' என்பது எனது திடமான கருத்து. வெளிநாடுகளில் 10 வயது வரை குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப்படுவது இல்லை. குறைந்தபட்சம் 6 வயது வரையிலாவது இருமல் மருந்தை பரிந்துரைக்காமல் இருப்பது நல்லது.
'குழந்தைகளுக்கு, இருமல் உடனடியாக சரியாகி விட வேண்டும்' என்ற பெற்றோரின் மனநிலையை கருத்தில் கொண்டு தான் பெரும்பாலான டாக்டர்கள் இருமல் மருந்தை பரிந்துரைக்கின்றனர்.
இருமல் மருந்துகளை பொறுத்தமட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. இந்த இருமல் மருந்துகள் பல்வேறு வேதிப்பொருட்களின் கலவையாகவே உள்ளன. பொதுவாக மருந்தை பயன்படுத்துவோருக்கு முக்கியமான ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.
ஒருமுறை பயன்படுத்திய மருந்தை, ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து பயன்படுத்துவது என்பது கூடவே கூடாது. சிரப் போன்ற மருந்துகளை பொறுத்தமட்டில் ஒருமுறை அவற்றை திறந்து பயன்படுத்திய பின்பு அப்படியே வைத்து விட்டால் அதன் தன்மை மாற தொடங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
எனவே, ஒருமுறை பயன்படுத்திய மருந்தை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமல்லாமல் டாக்டர்கள் அறிவுறுத்திய அளவை தவிர கூடுதல் அளவில் தாங்களாகவே மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
சரி... இருமலுக்கு மருந்தே எடுத்துக்கொள்ளாமல் தானாகவே சரியாகி விடுமா? என்று கேட்டால், ஆம்... கண்டிப்பாக இரு வாரங்களுக்கும் சரியாகி விடும் என்பதுதான் எனது பதில். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவை.
இன்னும் சொல்லப்போனால் இருமல் இருக்கும்போது வெதுவெதுப்பான தண்ணீரை அருந்துவது, தேனில் எலுமிச்சை கலந்த நீரை எடுத்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் குறுகிய காலத்துக்குள் இருமலை சரி செய்து விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுநீரக கற்கள் அனைத்தும் ஒரே படிகங்களால் ஆனவை அல்ல.
- சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு ஆக்சலேட்டுகள் காரணமாக அமைந்திருக்கின்றன.
தக்காளி அதிகம் சாப்பிட்டாலோ, சமையலில் அதிகம் சேர்த்தாலோ சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்பது கட்டுக்கதையே. ஏனெனில் உலகளவில் பொதுவாக உண்ணப்படும் காய்கறிகளுள் ஒன்றாக தக்காளி விளங்குகிறது. அதனை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படியானால் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் படிவதை தடுப்படி எப்படி?
உடலில் நீரிழப்பு ஏற்படுவதே சிறுநீரக கற்கள் படிவதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது. அலுவலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்தாலும் சரி, கடுமையான உடல் உழைப்பு கொண்ட வேலையில் ஈடுபட்டாலும் சரி தினமும் குறைந்தது 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ புரதம் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.
உணவு வழக்கத்தை மாற்றுவதன் மூலம் சிறுநீரக கற்களை தடுக்க முடியுமா?
சிறுநீரக கற்கள் அனைத்தும் ஒரே படிகங்களால் ஆனவை அல்ல. கால்சியம் ஆக்சலேட் உள்பட பிற ஆக்சலேட் படிகங்கள், யூரிக் அமிலம், ஸ்ட்ரூவைட் கற்கள், சிஸ்டன் கற்கள் போன்றவற்றின் காரணமாகவும் சிறுநீரக கற்கள் உருவாகலாம். இருப்பினும் ஆக்சலேட் படிகங்கள் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகுவது அதிகமாக இருக்கிறது. தக்காளியில் ஆக்சலேட் இருப்பதால் அதனை சிறுநீரக கற்களுடன் முடிச்சு போட்டுவிட்டனர்.
இந்த கட்டுக்கதை எப்படி தோன்றியது?
தக்காளியில் ஆக்சலேட்டுகள் உள்ளன. பொதுவாக சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு ஆக்சலேட்டுகள் காரணமாக அமைந்திருக்கின்றன. தக்காளியில் அவை இருப்பதால் இந்த கட்டுக்கதை தோன்றிவிட்டது. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், 100 கிராம் தக்காளியில் சுமார் 5 மில்லி கிராம் அளவுக்கே ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை சிறுநீரக கற்களை ஏற்படுத்த போதுமானதல்ல.
சில அசைவ உணவுகள் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்ற கருத்து உண்மையா?
இதுவும் தவறான கருத்து. உடலில் அதிகப்படியாக யூரிக் அமிலம் சேர்வது காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். மீன் மற்றும் விலங்கு இறைச்சியிலுள்ள புரதங்கள் உள்ளிட்ட பியூரின் நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும். எனினும் இந்த விஷயத்தில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்காது. மருத்துவர்களின் ஆலோசனையும், மருந்துமே கைகொடுக்கும்.
எதனால் ஏற்படுகிறது?
அடிப்படை உடல்நலப்பிரச்சனை, சில நொதிகளின் குறைபாடு அல்லது வளர்சிதை மாற்றப்பிரச்சனைகள் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகக்கூடும். குறிப்பாக சிறுநீரகங்கள் உடலில் இருந்து கால்சியம் ஆக்சலேட் படிகங்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதை நிறுத்தும்போது ஆக்சலோசிஸ் என்னும் பாதிப்பு உருவாகும். இது அரிய வகை வளர்சிதை மாற்றக்கோளாறு ஆகும். இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை நிறுத்தி ஆக்சலேட் படிகங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துவிடும்.
- இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்பதால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது.
உலக அளவில் புற்றுநோய் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திராட்சை விதையை மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கின்றன.
திராட்சை விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அதிக அளவில் ஆக்சிஜனேற்ற பண்புகள் காணப்படுவதால், அவை உடலில் ஏற்படும் அழுத்தத்தை எதிர்த்து போராடி வீக்கத்தைக் குறைக்கின்றன.
உடலின் செல்களை பாதுகாக்கும் சில கூறுகள் திராட்சை விதையில் இருப்பதால், இது இதயம் மற்றும் மூளை பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
திராட்சை விதைகள் காயங்களை ஆற்றும் கொலாஜன்கள் என்ற வலைப்பின்னல் உடலில் உருவாக உதவுகிறது. இதன் மூலம் உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும் மற்றும் தோலின் அழகு அதிகரிக்கும். சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்பதால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது.
திராட்சை விதையில் இருந்து பெறப்படும் சாறு மூளை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான காலத்தில் ஏற்படும் மூளை நரம்பு சிதைவு மற்றும் நினைவுத்திறன் இழப்பை கட்டுப்படுத்த திராட்சை விதையை மென்று உண்பது பலன் தரும் என்று கூறப்படுகிறது.
மனித உடல் எப்போதும் உடலில் நுழையும் நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடி உடலைப் பாதுகாக்கும் நுட்பமான வேலையை தொடர்ந்து செய்கிறது. திராட்சை விதை சாறு உடலில் நுழையும் பல்வேறு பாக்டீரியாக்கள், பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்றும், தொடர்ந்து திராட்சை விதைகளை உணவாக உட்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விதையில்லாத பழங்களை விட விதையுள்ள பழங்கள் அரிய பல ஆற்றல் கூறுகளை கொண்டவை என்பதற்கு திராட்சை விதை ஒரு உதாரணம்.
- தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம்.
- உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும்.
நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து தாகத்தோடு சிலர் எழுவதுண்டு. நாவறட்சியை போக்குவதற்கு தண்ணீர் அருந்தவும் செய்வார்கள். அப்படி நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா? என்ற கேள்விக்கு நல்லதல்ல என்பதே மருத்துவ நிபுணர்களின் பதிலாக இருக்கிறது.
அப்படி தாகமாக எழுந்தால் உடல் நீரிழப்புக்கு ஆளாகி இருப்பதாக அர்த்தம். தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம். ஆனால் அதிகம் பருகக்கூடாது. அது தூக்கத்தை சீர்குலைத்துவிடும். மீண்டும் சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேரிடும். ஆழ்ந்த தூக்கத்தையும், நோய் எதிர்ப்பு அமைப்பையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும்.
அதேவேளையில் உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும். இந்த செயல்முறைகளுக்கு தண்ணீர் மிக முக்கியமானது. அதனால் தூங்க செல்வதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகலாம். நள்ளிரவில் அடிக்கடி தாகம் எடுப்பதை தவிர்க்க பகலில் உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைப்பது அவசியம்.
- வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை மிக சிறந்த நிவாரணம் தரும்.
- சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் குணமாகும். சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை மிக சிறந்த நிவாரணம் தரும்.
செவ்வாழையில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
சிவப்பு வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. இவை உடலின் வழக்கமான கழிவு வெளியேற்றும் வேலைக்கு அவசியம். பொட்டாசியம் சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் கால்சியம் தக்க வைத்து உதவுகிறது.
பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சிவப்பு வாழைப்பழம் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை ஆதரிக்க பல ஆய்வுகள் சாதகமாக முடிவுகள் தெரிவிக்கின்றது. வாழைப்பழங்களில் பி வைட்டமின்கள் மற்றும் புரோமைன் என்சைம் ஆகியவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. செவ்வாழை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு எரிச்சலும் குறைகிறது.
- இதய அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் ஒரு மருத்துவ செயல்முறையாகும்.
- உடலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்புகள் இருக்கிறதா என கண்டறியப்படுகிறது.
ஆஞ்சியோ சிகிச்சை என்பது குறுகலான அல்லது தடுக்கப்பட்ட ரத்த நாளங்களை பலூன் போன்ற கருவிகள் மூலம் விரிவுபடுத்தி, திறந்த இதய அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் ஒரு மருத்துவ செயல்முறையாகும்.
இது இதய நோய்களால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அவசர நிலைகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சையாகவும் செய்யப்படுகிறது. ஆஞ்சியோகிராம் என்ற எக்ஸ்ரே பரிசோதனை மூலம் ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளைக் கண்டறிந்து, பின்னர் ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆஞ்சியோகிராம்: முதலில், உடலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்புகள் இருக்கிறதா என கண்டறியப்படுகிறது. இதற்காக, ஒரு சிறப்பு நிறமியை ரத்த நாளங்களில் செலுத்தி, எக்ஸ்ரே மூலம் படமெடுக்கப்படும்.
ஆஞ்சியோபிளாஸ்டி : ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்டால், அந்த குறுகலான அல்லது தடுக்கப்பட்ட பகுதிக்கு ஒரு சிறிய குழாயை செலுத்துவார்கள்.
பலூன் விரிவடைதல்: அந்த குழாயின் முனையில் உள்ள பலூனை விரிவுபடுத்துவதன் மூலம், குறுகிய ரத்த நாளத்தை அகலப்படுத்தி, ரத்த ஓட்டம் சீராக பாய வழிவகை செய்யப்படுகிறது.
ஸ்டென்ட் பொருத்துதல்: சில சமயங்களில், மீண்டும் ரத்த நாளம் சுருங்குவதைத் தடுக்க, ஒரு சிறிய வலை போன்ற குழாய் (ஸ்டென்ட்) அந்த இடத்தில் பொருத்தப்படலாம். மாரடைப்பு மற்றும் மார்பு வலி போன்ற இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, இதயத்திற்கு ரத்தத்தை வழங்கும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க அவசர மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முறையாகப் பயன்படுகிறது.
- நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது.
- குறட்டை விடுபவர்களுக்கு இரவில் ஆக்சிஜன் சப்ளை குறைவாக இருக்கும்.
குறட்டை இதயக்கோளாறின் அறிகுறியா? என்ற கேள்விக்கு மருத்துவர் தரும் விளக்கம் வருமாறு:-
இந்தியாவில் மட்டும் 5 கோடி பேருக்கு மேல் குறட்டை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூங்கும் போது மூச்சு தடைபடுதலை ஸ்லீப் ஆப்னியா என்றும் கூறுகிறார்கள். இந்த வார்த்தை இப்போது பரவலாக உச்சரிக்கப்படுகிறது.
நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டால் திசுக்கள் அதிர்வுறும். அப்போது குறட்டை ஏற்படுகிறது. தூங்கும்போது நாக்கு, தொண்டை பகுதிகளில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன. அந்த நேரத்தில் காற்று செல்லும்போது சுவாசப்பாதை சுருங்கியிருப்பதால் திசுக்கள் அதிர்வுறுகின்றன. மேலும் மல்லாந்து படுக்கும் போது நாக்கு சிறிது உள்வாங்கி தொண்டைக்குள் இறங்கி விடும். இதனாலும் சுவாசப்பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை ஏற்படுகிறது. குறட்டை என்பது அரைகுறையான தூக்கம் ஆகும்.
குறட்டை விடுபவர்களுக்கு இரவில் ஆக்சிஜன் சப்ளை குறைவாக இருக்கும். சிலர் இரவில் குறட்டைவிட்டபடி தூங்குவார்கள், அவர்களுக்கு அரை நிமிடம் மூச்சே நின்று விடும். பின்னர் அரக்கபரக்க எழுந்து உட்காருவார்கள். ஒரு நாளைக்கு மனிதனுக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியம். அதிலும் 4 மணி நேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும். ஆனால் நமக்கே தெரியாமல் ஒவ்வொரு மணி நேரமும் தூக்கத்தை கெடுக்க கூடியது இந்த குறட்டை.
இரவில் தூக்கம் கெட்டுப்போனால் காலையில் எழுந்ததும் கடுமையாக தலை வலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும் போது இதயத்துடிப்பில் பிரச்சினை ஏற்படும். தூக்கம் சரியாக இல்லை என்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோர்த்துக் கொள்ளும்.
குறட்டை வந்தால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.
மூளை பாதிப்பு ஏற்பட்டால் பக்கவாதம் வரும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் 2 முழங்கால்களிலும் பலமான வலி ஏற்படும். திருமணம் ஆன பின்னர் குழந்தை பிறக்க கூட தாமதம் ஆகும். குறட்டை விடுவதை சரி செய்ய வழி உண்டு. மேலும் வரும் குறட்டையால் வேறு எதாவது பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதா? என்பதை கண்டுபிடிக்கவும் வசதிகள் உள்ளன. மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சினை, தொண்டை பிரச்சினைகள், தைராய்டு, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற பிரச்சினைகளால் குறட்டை வருகிறது என்று தெரிந்தால் அதற்கு சிகிச்சை பெறலாம். அதுபோன்ற பிரச்சினை இல்லாமல் குறட்டை வருகிறது என்றால் ஸ்லீப் ஸ்டடி என்றவொரு சிகிச்சை மேற்கொண்டு பார்க்க வேண்டும். ஸ்லீப் ஸ்டடி சிகிச்சை அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இருக்கும்.
அந்த சிகிச்சைக்கு வருபவர்கள் இரவு 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும். அங்கு குறட்டை வருபவரின் இதயம், மூளை என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒயர்கள் பொருத்தி அதனை மருத்துவ எந்திரத்துடன் இணைப்போம். பின்னர் அவருக்கு தூக்கம் வந்ததும் தூங்கி விடலாம். அவருக்கு துணையாக உறவினர் ஒருவர் கூட இருக்கலாம். அடுத்த அறையில் இருந்து டெக்னீசியன் நோயாளியை கண்காணித்தபடி இருப்பார். அவர் தூங்கி எழுந்ததும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை எந்திரத்தில் பதிவான பதிவு விவரங்கள் கிடைக்கும்.
இரவில் தூங்கும் போது ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு குறைய வேண்டும். பகலில் ரத்த அழுத்தம் 200 இருந்தால் இரவில் 160-க்கு வரவேண்டும். அதனால் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்துள்ளதா? எவ்வளவு நேரம் மூச்சை நிறுத்துகிறீர்கள்? உங்களுக்கு தெரியாமலேயே குறட்டை எப்படி மூச்சை நிறுத்தி உங்கள் தூக்கத்தை கெடுக்கிறது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவரும். அந்த விவரங்களை கொண்டு எதனால் குறட்டை வருகிறது, மாரடைப்பு வருமா? என்பதை கண்டுபிடித்து விடலாம். அதன் மூலம் மேல் சிகிச்சை பெறலாம்.
குறட்டை நீங்க நோயாளிகளுக்கு முகக்கவசம் போன்ற சீ பேப் எந்திரம் (மூச்சு அழுத்தம் கொடுக்கும் கருவி) ஒன்று பொருத்தப்பட்டு ஆக்சிஜன் செலுத்தப்படும். பம்ப் மூலம் காற்று சீராக சென்று கொண்டு இருக்கும். இதனால் சுவாசிக்கும் காற்று தடைபடாது. இந்த சிகிச்சை மூலம் 3 மாதத்தில் குறட்டை நீங்கும். எனவே தினமும் குறட்டை விடுவது, குறட்டை சத்தத்தில் மாறுபாடு இருப்பது தெரிந்தால் நுரையீரல் சிகிச்சை சிறப்பு டாக்டரை அணுகுவது நல்லது. ஒழுங்கற்ற சுவாசத்துடன் குறட்டை விடுவது இதயநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
- இதயம் நான்கு அறைகளைக் கொண்டுள்ளது.
- இதயத்தின் அறைகளில் உள்ள ரத்தத்தை தமனிகள் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செலுத்துகிறது.
மனித உடலின் முக்கிய உறுப்பு இதயம். அந்த இதயமானது உடலின் ரத்த ஓட்ட அமைப்புக்கு ஆதாரமான, தசைத்திறன் கொண்ட ஒரு உறுப்பு ஆகும். இதன் முக்கிய வேலை, தமனிகள் மற்றும் நரம்புகள் வழியாக உடலின் அனைத்து செல்களுக்கும் திசுக்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்வதாகும்.
இதயம் நான்கு அறைகளைக் கொண்டுள்ளது. இதயத்தின் முக்கிய பணி, ரத்தத்தை சுற்றியுள்ள திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் செலுத்துவதும், அதிலிருந்து ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு, கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதுமாகும்.
இதயத்தின் முக்கிய பணிகள்:
ரத்தத்தை பம்ப் செய்தல்: இதயம் சுருங்கி விரிவடைந்து, இதயத்தின் அறைகளில் உள்ள ரத்தத்தை தமனிகள் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செலுத்துகிறது.
ரத்த ஓட்டத்தை உறுதி செய்தல்: இதயத்தில் உள்ள நான்கு அறைகள், மற்றும் வால்வுகள் சரியான நேரத்தில் திறந்து மூடப்படுவதன் மூலம் ரத்தமானது ஒரே திசையில் பாய்வதை உறுதி செய்கின்றன.
ஊட்டச்சத்துக்கள் வழங்குதல்: இதயத்தின் மூலம் ரத்தமானது உடல் முழுவதும் ஆக்சிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டு சென்று, செல்களுக்கு கிடைக்க உதவுகிறது.
கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல்: உடலால் உருவாகும் கழிவுப் பொருட்களை திசுக்களில் இருந்து சேகரித்து, அவற்றை வெளியேற்ற உதவுவதற்கும் ரத்த ஓட்டம் உதவுகிறது.
இதயத்தின் துடிப்பு: இதயத்தில் உள்ள சிறப்பு இதயத்தசை செல்கள், ஒன்று சேர்ந்து, இதயத்துடிப்புக்கான சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இதயமும், ரத்த நாளங்களும் இணைந்து இருதய அமைப்பு என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை உடலின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமானவை.
- அதிகமான உடல் எடை காரணமாக இதயம் பாதிக்கப்படாமல் இருக்க உணவு மீதான அக்கறை அவசியம்.
- இதயத்தின் செயல்திறனை சீராக்கி, அதில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
உலக இதய தினத்தை நாம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந்தேதி கொண்டாடுகிறோம்.
இதயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும், அதன் செயலிழப்பு மரணத்திற்கு வழிவகுக்கும், எனவே அனைவரும் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இதயநோய் வராமலும், வந்து சிகிச்சை பெறுபவர்களும் இதய நலனை பாதுகாக்க சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வது நல்லது. அதன்மூலம் வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அந்த வகையில்,
• சீரான உடல் எடை பராமரிப்பு
• முறையான உணவுப் பழக்கம்
• அன்றாட உடற்பயிற்சிகள்
• மதுப்பழக்கம் தவிர்த்தல்
• புகைப் பழக்கம் தவிர்த்தல்
• மன அழுத்தமில்லா வாழ்க்கை
ஆகியவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
இன்றைய சூழலில் அவரவர் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க முடியாமல் போகும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஒரு காரணமாக அமைகிறது. உடலின் சீரான எடையை பராமரிப்பதற்கு தினசரி உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கம் ஆகியவை அவசியம்.
மருத்துவ ரீதியாக உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு ஹார்மோன்கள் காரணமாக உள்ளன. அவற்றுக்கெல்லாம் முறையான மருத்துவ சிகிச்சைகள் செய்துகொண்டால் உடல் எடையை தவிர்க்க முடியும். ஒருவருடைய உயரத்திற்கேற்ப இருக்க வேண்டிய உடல் எடையைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தால், உடல் எடை அதிகம் என்றும், 20 சதவீதம் அதிகமாக இருந்தால் உடற்பருமன் என்றும் குறிப்பிடப்படுகிறது.
அதிகமான உடல் எடை காரணமாக இதயம் பாதிக்கப்படாமல் இருக்க உணவு மீதான அக்கறை அவசியம். அதிகக் கலோரி நிறைந்த உணவு, அதிக உப்பு, சர்க்கரை முதலியன இதய இரத்த நாள நோய்களைத் தூண்டக் கூடியவை. அவ்வகையில், இறைச்சி, வெண்ணெய், பாலாடை, தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய், வனஸ்பதி போன்ற தாவர எண்ணெய் வகைகளில் கொலஸ்ட்ரால் மிகுந்துள்ளது. அது, ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
அதிகமாக இனிப்பு சாப்பிடுவது இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து தடித்து விட வழிவகுக்கிறது. அதே போல, அதிக உப்பு சேர்த்துக் கொள்வதும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படச் செய்கிறது. அதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் உருவாகின்றன. அன்றாடம் மனித உடலுக்கு 5 கிராம் உப்பே போதுமானது. ஆனால், நம் நாட்டில் ஒவ்வொருவரும் தினமும் 12 முதல் 15 கிராம் அளவு வரை உப்பை உணவு மூலம் பெறுகின்றனர்.
பாஸ்ட் புட் கலாச்சாரமும் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த உணவு வகைகளில் அதிகப்படியான கொழுப்பும், உப்பும் இருப்பதால் தான் உடலுக்கு தேவையான கலோரி மிக அதிகமாக கிடைத்து இதய நோய்களை உருவாக்குகிறது. மேலும் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் பாஸ்ட் புட் வகைகளில் நார்ச்சத்து பெரிதாக இருப்பதில்லை. அதுவும் ஜீரண கோளாறுகளை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும்.
வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை உட்கொள்வது ரத்தத்தில் கொலஸ்ட்ரால், கொழுப்பு அளவு அதிகரிக்காமலும், இரத்தம் உறைந்து விடாமலும் பாதுகாக்கிறது. எனவே, தினமும் அவற்றை உணவில் காய்கறிகளோடு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் இதய சம்பந்தமான பாதிப்புகளை தடுக்கும் திறன் பெற்றவை என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், அவை இதயத்தின் இயக்கத்துக்கு நன்மை ஏற்படுத்துவது உண்மை.
இதயத்தின் செயல்திறனை சீராக்கி, அதில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும், வாரத்தில் 5 நாட்கள் என ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் ஏரோபிக் வகை பயிற்சிகளான நடத்தல், ஓடுதல், படியேறுதல் உள்ளிட்ட இதர உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். அதன் மூலம், உடலில் உள்ள நல்ல கொழுப்பான எச்.டி.எல் அளவை இரண்டு மாதங்களுக்குள் 5 சதவீதம் வரை உயர்த்த முடியும் என மருத்துவ தெரிவித்துள்ளார்கள்.
ஒவ்வொரு முறையும் உடல் எடையில் 2.5 கிலோ குறையும்போது நல்ல கொலஸ்டிராலின் அளவு உயர்கிறது. நல்ல கொலஸ்ட்ரால் உள்ள உணவை உட்கொள்வதும் மேற்கூறிய அளவு உடல் எடை குறைவதற்கு உதவும். அத்துடன், புகைப்பிடிப்பதை தவிர்ப்பதன் மூமாகவும், நல்ல கொலஸ்ட்ரால் அளவை கூட்ட முடியும். ஏனென்றால், புகைக்கும் போது உடலில் சேரும் ரசாயனம் நல்ல கொழுப்பின் அளவை குறைக்கிறது. புகைப்பழக்கத்தை தவிர்ப்பதாலும் எச்.டி.எல் அளவு சுமார் 10 சதவீதம் அதிகமாகும்.
- சில உணவுகளான சர்க்கரை, கார்போஹைட்ரேட், உப்பு அல்லது காரமான மசாலாப் பொருட்கள் கூட இதயத் துடிப்பை அதிகரிக்கலாம்.
- இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக இருப்பது ஒரு அடிப்படை மருத்துவ பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
மன அழுத்தம், பதட்டம், கவலை, காபின், உடற்பயிற்சி, அதிகப்படியான வெப்பம், தைராய்டு சுரப்புக் கோளாறுகள், சில மருந்துகள் மற்றும் உணவுகள் போன்றவை இதயம் வேகமாகத் துடிப்பதற்கான பொதுவான காரணங்களாகும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த இதயத் துடிப்பு பாதிப்பில்லாதது. இருப்பினும், இதயத் துடிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்தால் அல்லது மார்பு வலி, மயக்கம் போன்ற பிற அறிகுறிகளுடன் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம். மன அழுத்தம், பயம் அல்லது மன உளைச்சல் ஏற்படும் போது உடலில் அட்ரினலின் என்னும் ஹார்மோன் வெளியிடப்பட்டு இதயத் துடிப்பை அதிகரிக்கும்.
காபின், நிகோடின் மற்றும் ஆல்கஹால் போன்ற பொருட்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கலாம். சில உணவுகளான சர்க்கரை, கார்போஹைட்ரேட், உப்பு அல்லது காரமான மசாலாப் பொருட்கள் கூட இதயத் துடிப்பை அதிகரிக்கலாம்.
உடற்பயிற்சி, அதிக வெப்பநிலை அல்லது ஈரப்பதம் ஆகியவை உடலின் இதயத் துடிப்பை அதிகரிக்க வழிவகுக்கும், ஏனெனில் உடல் குளிர்ச்சியடையவும், தசை செல்களுக்கு அதிக ஆக்சிஜனை வழங்கவும் இந்த மாற்றம் ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்பட்டால் (ஹைப்பர் தைராய்டிசம்), இதயம் வேகமாகத் துடிக்கும்.
ஒழுங்கற்ற இதயத் துடிப்பு: இது இதயத்தின் தாளத்தில் ஏற்படும் ஒரு நிலை, இதில் இதயம் சீரற்ற அல்லது எதிர்பாராத விதமாக வேகமாகத் துடிக்கலாம்.
இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்போது மார்பு வலி, தலைச்சுற்றல், மயக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக இருப்பது ஒரு அடிப்படை மருத்துவ பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
- எலிகளில் இருந்து இந்த வகை புழு தொற்றுகள், நேரடியாக மனிதர்களுக்கு பரவுவது இல்லை.
- சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
வீடுகளில் பொதுவாக கொசுத் தொல்லையும், எலித் தொல்லையும் இருக்கும். கொசுவால் மலேரியா காய்ச்சல் வரும். டெங்கு காய்ச்சல் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
இப்போது எலியால் கல்லீரல் காலியாகிவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. வீடுகளில் காணப்படும் கருப்பு எலிகளில் 4-ல் ஒரு எலிக்கு சி.ஹெப்பாடிகா என்ற புழு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு விலங்கு மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 55 எலிகளை பிடித்து ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அதில் 38 சதவீத எலிகளில் இந்த தொற்று இருக்கிறது. அதாவது 10 எலிகளில் 4 எலிகள் இந்த பாராசைட்டை சுமக்கின்றன.
சென்னையில் உள்ள மக்கள் தொகை பெருக்கமும், மக்களோடு வாழும் இந்த எலிகளின் வாசமும் மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும்கூட மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
எலிகளில் இருந்து இந்த வகை புழு தொற்றுகள், நேரடியாக மனிதர்களுக்கு பரவுவது இல்லை. இந்த புழுவின் முட்டைகள் எலியின் கல்லீரலில் உருவாகிறது. ஆனால் அதன் மலத்தின் வழியே வெளியேறாது.
இறந்து போன எலிகளை சாப்பிடும் பூனைகள், நாய்கள் அல்லது பாம்புகள் வழியாக அந்த முட்டை மண்ணில் கலக்கிறது. பிறகு மண்ணில் இருந்து மனிதர்களுக்கு தொற்றுகிறது. அவ்வாறு மனித உடலில் தொற்றிக் கொள்ளும் இந்த புழுவின் முட்டைகள் மனிதர்களின் கல்லீரலில் சென்று குடியேறி விடுகிறது. இதனால் கல்லீரல் அழற்சி, கல்லீரல் பெரிதாகுவது, காய்ச்சல், சோர்வு வரை ஏற்படும். சிலருக்கு கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்த மாதிரி தொற்று உலக அளவில் 175 பேருக்கு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அதில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர்.
இந்த நோயை கண்டறிவதும் சவாலானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள. ஏனெனில் கல்லீரலில் இருந்து 'பயாப்சி' எடுத்துதான் இதை உறுதிப்படுத்த முடியும். மற்ற எலிகள் மூலம் பரவும் வேறு தொற்றுக்களோடும் இந்த தொற்றை குழப்ப வாய்ப்பு இருப்பதால் கண்டுபிடிப்பதிலும், உறுதிப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் தேவை என்கிறார்கள்.
ஆரம்ப நிலைகளில் எந்தவிதமான அறிகுறிகளும் தெரியாமல் இருக்கலாம். தொற்று ஏற்பட்ட சில வாரங்களுக்கு பிறகோ, சில மாதங்களுக்கு பிறகோ கூட அறிகுறிகள் தோன்றலாம். அது உடலில் இருக்கும் முட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்தது.
பொதுவான அறிகுறியாக காய்ச்சல், வயிற்று வலி, கல்லீரல் பருமன் போன்றவை ஏற்படலாம். கண்டுபிடிக்காமல் விட்டால் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு மரணத்துக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
- சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது.
- வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும்.
அனைத்து பருவகாலங்களிலும் ருசிக்கப்படும் பழங்களில் ஒன்றாக விளங்கும் கொய்யா, 100-க்கும் மேற்பட்ட ரகங்களை கொண்டது. ஆனாலும் வெள்ளை நிறம், சிவப்பு நிறம் மட்டுமே பலருக்கும் பரீட்சயமானவை. பரவலாக கிடைக்கக்கூடியவை, விரும்பி சாப்பிடக்கூடியவை. இவை இரண்டும் சத்தானவை என்றாலும், சுவை, ஊட்டச்சத்து மதிப்பு, ஆரோக்கிய நன்மைகளில் வேறுபடுகின்றன.
வெள்ளை கொய்யா
சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது. அதிக சர்க்கரை, ஸ்டார்ச், வைட்டமின் சி நிறைந்திருக்கும். சிவப்பு கொய்யாவை விட விதைகளும் அதிகமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த தேர்வாக வெள்ளை கொய்யா குறிப்பிடப்படுகிறது.
நன்மைகள்:
* ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* செரிமானத்தை துரிதப்படுத்தும்.
* உடல் எடை இழப்பை ஊக்குவிக்கும்.
* சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
* ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும்.
* மாதவிடாய் வலியை கட்டுப்படுத்தும்.
* புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.
சிவப்பு கொய்யா
வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும். ஆனால் சர்க்கரை, ஸ்டார்ச் மற்றும் வைட்டமின் சி குறைவாக இருக்கும். கரோட்டினாய்டுகள், குறிப்பாக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டான லைகோபீன் போன்றவை சிவப்பு நிறத்துக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
நன்மைகள்:
* இதில் இருக்கும் அதிக லைகோபீன் இதயத்தைப் பாதுகாக்க உதவிடும்.
* சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* வைட்டமின் ஏ, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
* நார்ச்சத்தும் நிறைந்தது. செரிமானம் மற்றும் உடல் எடையை நிர்வகிக்க துணைபுரியும்.
* இதில் சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
எது சிறந்தது?
இரண்டு கொய்யா ரகங்களும் ஆரோக்கியமானவை என்றாலும் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஏ, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காரணமாக சிவப்பு கொய்யா முதலிடத்தை பெறுகிறது. குறிப்பாக இதய ஆரோக்கியம் காக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
அதேவேளையில் வெள்ளை கொய்யா ஊட்டச்சத்து மதிப்பில் குறைந்ததில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கும் சிறந்த தேர்வாக அமையும். அவரவர் உடல் நலனுக்கு எது ஏற்புடையது என்பதை முடிவு செய்து, ருசிக்கலாம்.






