என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை.
    • உணவுகளின் மூலமே நோய் எதிர்ப்பு காரணிகளை உடலில் உருவாக்கலாம்.

    உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை. நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மூலமே நோய் எதிர்ப்பு காரணிகளை உடலில் உருவாக்கலாம்.

    இயற்கையில் விளைந்த பழங்களிலும், காய்கறிகளிலும், மூலிகைகளிலும் கொட்டிகிடக்கிறது ஊட்டசத்துக்கள். உடலில் தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முதலிடம் வகிப்பது வைட்டமின் சி, அடுத்தது வைட்டமின் ஏ மற்றும் பி.


    வைட்டமின் சி பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, குடைமிளகாய், போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. புற்று நோயை கூட கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. திசுக்களின் வளர்ச்சிக்கும், உயிரணுக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

    வைட்டமி சி

    வைட்டமின் சி அடங்கிய எலுமிச்சை பழச்சாறு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது. அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியுறும்.

    மேலும் நன்மை செய்யும் பாக்டீரிக்கள் வாழ்வதற்கு வெப்பமான சூழ்நிலையை பராமரிக்க எலுமிச்சைபழச்சாறு உதவுகிறது. சாலட், அசைவ உணவுகள் போன்றவற்றில் எலுமிச்சை பழச்சாறு கலந்து எடுத்துக்கொள்ளலாம்.


    கொய்யாப்பழம், சுலபமாக எல்லோராலூம் வாங்கக்கூடிய பழம். ஆனால் அளப்பறிய வைட்டமின்களை தன்னகத்தே கொண்டது. வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், போன்ற ஊட்டச்சத்துக்களை நிறைந்துள்ளது.

    எலும்புகள் வளர்ச்சிக்கும், உடலுக்கு உறுதியையும் தருகிறது. பொட்டாசியம் சத்து கொய்யப்பழத்தில் அதிகம் உள்ளது. கொய்யாப்பழத்திலிருக்கும் மெக்னீஷியம் பிற உணவுகளிலிருந்து சத்துக்களை உறிஞ்சு எடுத்து உடலுக்கு அளிக்கிறது.

    இதன் காரணமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள முழு ஊட்டச்சத்தும் உடலுக்கு சென்றடைகிறது. நோய் காரணிகளை எதிர்த்து போராடுவதோடு, நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

    வைட்டமின் ஏ

    வைட்டமின் ஏ அகத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை, முருங்கைகீரை, கேரட், சக்கரை வள்ளி கிழங்கு, முட்டை, பப்பாளி பழம், மாம்பழம், பசலைக்கீரை, ஆட்டிறைச்சி, கோழி, மாட்டிறைச்சி இவற்றின் ஈரல், வெண்ணெய், நெய் ஆகிவற்றில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


    வைட்டமின் பி

    வைட்டமின் பி- நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உயிரி ரசாயன விளைவுகளுக்கு உதவுகிறது. பாதாம், புரோக்கோலி, பால், முட்டை, சிறு தானியங்கள், கீரை வகைகளில் அதிகம் காணப்படுகிறது.

    ஒமேகா 3

    ஓமேகா 3 பாலி அன்ச்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் இதயத்தின் வளர்ச்சிதை மாற்றம், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற திறனை மேம்படுத்துகிறது. சால்மன் மீன், ஆளிவிதை, அவகேடோ, வால்நட், முட்டை, ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. பூசணி விதைகளில் ஆளிவிதைகளுக்கு அடுத்தபடியாக ஓமேகா 3 உள்ளது. இதனையும் சாலட் போன்ற உணவுகளோடு சேர்த்து எடுத்து கொள்ளலாம்.


    தயிர்

    தயிரிலுள்ள நல்ல பாக்டிரியாக்கள் (புரோபயாடிக்) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலுக்கு நல்ல சக்தியையும் அளிக்கிறது. தயிராக இல்லாமல் மோராக தினமும் எடுத்துக்கொள்ளலாம். உடல்எடையை குறைப்பதிலும், உடலை குளிர்ச்சியாக வைப்பதிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் மிக முக்கிய இடம் வகிக்கிறது மோர்.

    மக்னீஷயம், சிறுநீரகச் செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியமானது. நட்ஸ், கீரைகள், கோதுமை, விதைகள் இவற்றில் காணப்படுகிறது. துத்தநாகம்-பீன்ஸ், தேங்காய், கடலை பருப்பு, சிப்பி வகை மீன்கள், பருப்புக்கள், எள், தயிர், பால்பொருட்கள் இவற்றில் காணப்படுகிறது.

    புராக்கோலியில் மினரல்ஸ், வைட்டமின் சி, ஏ அடங்கியுள்ளது. இதனை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மஞ்சள், இஞ்சி, சோம்பு, மிளகு இவை போன்ற மூலிகைகள் பல்வேறுவகையான நோய்களை அண்டவிடாமல் ஆரம்பத்திலே அழிக்கிறது.

    பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ,சி,பி1,பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாய் உள்ளது கராட்டினாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளது. இந்த சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.



    வைட்டமின் ஈ அடங்கிய பாதாம் அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியது. இரும்பு சத்து, கால்சியம், நார்ச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. புரதமும், நார் சத்துக்களும் நிறைந்த பருப்புக்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

    துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, சுண்டல் வகைகள், தானியங்கள் இவற்றில் எதேனும் ஒன்றை தினமும் எடுத்து கொள்ளலாம். நாளொன்றிற்கு முப்பது கிராம் வரை பருப்புகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

    தண்ணீர், காலையில் வெறும் வயிற்றில் காபி, தேநீர் குடிப்பதை தவிர்த்து, தண்ணீரை குடிக்க வேண்டும். ரத்த ஓட்டம் சீராகி, நச்சுக்கள் அகற்றபட்டு, உடல் ஆரோக்கியம் பெறும். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதில் இயற்கை உணவுகள், இயற்கையில் விளைந்த பழங்கள், காய்கறிகள் இவற்றிற்கே முதலிடம்.

    இயற்கை உணவுகளினால் உடலுக்கு முழுமையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே ரெடிமேட் உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

    உணவுகள் மட்டுமே ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்துவிடாது. போதுமான அளவு உடற்பயிற்சியும் அவசியம். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது.

    உணவு இடைவெளியே இல்லாமல் சாப்பிட்டு கொண்டே இருக்கக்கூடாது. உணவு நன்றாக செரிமானம் அடைந்த பிறகே, செரிமானம் அடைவதற்கு இடைவெளி தந்து, அடுத்தவேளை உணவை உண்ண வேண்டும். இவ்வாறு பழக்கமாக்கிக் கொண்டால், உடலுக்கு வேறெந்த மருந்தும் தேவையே இல்லை. 

    • வஜ்ரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள்.
    • பிரண்டையில் ஏராளமான சத்துகள் காணப்படுகின்றன.

    பிரண்டை எனும் தாவரம், வேலி ஓரங்களில் படர்ந்து வளரும் ஒரு கொடி வகையாகும். இது, தண்ணீர் இன்றி வெப்பத்தை தாங்கி வளரும். மழைக்காலங்களில் துளிர் விட ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் பிரண்டையை பறித்து உணவாக உண்பது வழக்கம்.

    பழங்காலத்தில் இருந்து பிரண்டை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனித எலும்பு மண்டலத்தை இரும்பு போல் வலுவாக வைக்கும் திறன் பிரண்டைக்கு உண்டு. இதனால் இதை வஜ்ரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள்.


    பிரண்டையில் ஏராளமான சத்துகள் காணப்படுகின்றன. குறிப்பாக, வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்துகள், பிளவனாய்டு, டேனின், கரோட்டீன் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.

    எல்லாவற்றுக்கும் மேலாக எலும்பு தொடர்பான பாதிப்புகளை சரிசெய்வதில் பிரண்டைக்கு இணை எதுவும் இல்லை என்கிறார்கள் இயற்கை மருத்துவ நிபுணர்கள்.

    எலும்பு முறிவு, எலும்பு மூட்டு நகர்வு, எலும்பு தேய்மானம், எலும்பு புரை ஆகியவற்றை சரிசெய்யவும் எலும்புகளை வலிமையாக்கவும் பிரண்டையை மருந்தாக பயன்படுத்தலாம், என்கிறார்கள்.

    இதே போல, வயிற்றில் பாக்டீரியா மற்றும் பிற கிருமித் தொற்றுகளின் பாதிப்பினால் ஏற்படும் குடல் புண், வாய்ப்புண், அமிலத்தன்மை குடலில் அதிகரிப்பதால் ஏற்படும் குடல் பாதிப்புகள் ஆகியவற்றையும் குணப்படுத்தும் தன்மை பிரண்டைக்கு உண்டு. தற்போது இந்த பிரண்டை அனைத்து இடங்களிலும் செழிப்பாக வளர்ந்து கிடக்கிறது.

    பிரண்டையின் மருத்துவ பயன்கள்:

    பிரண்டை எலும்பு வளர்ச்சி, பசியின்மை, சுளுக்கு, செரிமானம், வயிறு உப்பிசம், முதுகு வலி, கழுத்து வலி, வாந்தி, பேதி, வாய்ப்புண், வயிற்றுப்புண், உடல் பருமன், பசியின்மை, மலச்சிக்கல், போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது.

    துவையல் செய்து சாப்பிடுவதால், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வாயுப் பிடிப்பு, தீராத வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக செயல்படுகிறது.


    மேலும் உடல் சுறுசுறுப்பை அதிகரித்து ஞாபக சக்தியை பெருகச் செய்கிறது. மற்றும் மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு அதிக சக்தி தருகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துகிறது.

    வாயு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அச்சூழலில் பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியைத் தூண்டி, அஜீரணக் கோளாறைப் போக்குகிறது.

    மேலும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் கொழுப்பைக் கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக செயல்பட வைக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற இடுப்பு வலி, முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் பிரண்டை துவையல் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் தரும்.

    எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையின் இளந்தண்டை அரைத்து பற்றுப் போட்டால் எலும்பு முறிவு, அடிப்பட்ட வீக்கம், வலி நிவாரணம் கிடைக்கும். பிரண்டையை பறித்து காயவைத்து அம்மியில் வைத்து அரைத்து, தூள் செய்து நீர்விட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள பகுதியில் தினமும் பூசி வர, எலும்பு முறிவு சரியாகி எலும்புகள் கூடி வலுப்பெறும்.

    பிரண்டையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அந்த சாற்றை ஒரு தேக்கரண்டியுடன், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து தினமும் காலை வேளையில் ஏழு நாட்கள் சாப்பிட்டு வர பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிரச்சனை சரியாகி ஒழுங்காக மாதவிடாய் ஏற்படக்கூடும்.


    பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள, பூச்சிகள் அழியும். . பசியைத் உண்டு பண்ணும். வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் நீங்குவதற்கு மருந்தாக சிறந்து விளங்குகிறது. பிரண்டை, சுளுக்கிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

    பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, மோரில் சிறிது உப்புத்தூள் சேர்த்து ஊறவைத்து, காயவைத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை, நாக்கில் சுவையின்மை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

    பிரண்டைத் துவையல் வயிற்றுப்புண், வாய்ப்புண், ஊளைச்சதை இவற்றைத் குணமாக்குகிறது. பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கும். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருப்பு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதன் மூலம் நச்சு ரசாயனங்கள் உணவில் சேரும்.
    • நச்சு ரசாயனங்கள் உணவில் கலந்து உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும்.

    ஆன்லைன் மூலமாக எல்லாவிதமான பொருட்களையும் வாங்கும் நிலைமை தற்போது காணப்படுகிறது. வீடுகளில் சமையல் செய்வதற்கு பதிலாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.

    உணவுகள் கருப்பு பிளாஸ்டிக் பாக்ஸ்கள் மற்றும் டப்பாக்களில் வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. இதை சேமித்து மீண்டும் பயன்படுத்துவது பலருக்கு வசதியாகவும் இருக்கிறது.


    கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் (உணவு தட்டுகள், கரண்டிகள், கொள்கலன்கள்) அன்றாட பயன்பாட்டில் இருக்கிறது. கருப்பு பிளாஸ்டிக் பெரும்பாலும் பழைய எலக்ட்ரானிக்ஸ் உள்பட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

    சமீபத்திய ஆய்வில் கருப்பு பிளாஸ்டிக் பொருட்களில் 85 சதவீதத்தில் நச்சு தீப்பிழம்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இது புற்றுநோய் அபாயங்களுடன் தொடர்புடையது. கருப்பு பிளாஸ்டிக்கில் உணவை சூடாக்குவது அல்லது கருப்பு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் நச்சு ரசாயனங்கள் உணவில் சேரும். இதனால் கருப்பு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    இது குறித்து புற்றுநோய் டாக்டர்கள், நிபுணர்கள் கூறியதாவது:-


    கருப்பு பிளாஸ்டிக் பாத்திரங்கள், பொருட்களில் புற்றுநோய் அபாயங்களுடன் தொடர்புடைய நச்சு தீப்பிழம்புகள் இருக்கின்றன. இந்த ரசாயனங்கள் உணவில் கலந்து காலப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    டெகாபிடி மற்றும் இதேபோன்ற கலவைகள் ஹார்மோன்களில் தலையிடலாம். கருப்பு பிளாஸ்டிக்கில் பெரும்பாலும் பிஸ்பெனால் ஏ(பிபிஏ) மற்றும் பித்தலேட்டுகள் போன்ற பொருட்கள் உள்ளன. அவை இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் இனப்பெருக்க பிரச்சினைகளுடன் தொடர்புடையவை.

    கருப்பு பிளாஸ்டிக்கில் இருந்து மைக்ரோ பிளாஸ்டிக்கள், தேநீர் பைகள், பாட்டில் தண்ணீர் போன்ற அன்றாடப் பொருட்களின் மூலம் அடிக்கடி உட்கொள்வதால், உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கிறது.


    கருப்பு பிளாஸ்டிக்கை புற்றுநோயுடன் நேரடியாக இணைக்கும் உறுதியான சான்றுகள் இல்லை என்றாலும் அதன் ரசாயன கலவை எச்சரிக்கையாக இருக்க போதுமான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.

    உணவு சேமிப்பு மற்றும் தயாரிப்புக்காக கருப்பு பிளாஸ்டிக்கை தவிர்ப்பதோடு கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத எக்கு போன்ற பாதுகாப்பான, பாதிப்பை ஏற்படுத்தாத ரசாயன பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    மைக்ரோவேவ் அல்லது வேறு வகையில் கருப்பு பிளாஸ்டிக்கில் உணவை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும். சூடுபடுத்துவதால் நச்சு ரசாயனங்கள் உணவில் கலந்து உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


    பி.பி.ஏ. மற்றும் பித்தலேட்டுகள் போன்ற கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இனப்பெருக்க சுகாதார பிரச்சனைகள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

    கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள சில சேர்க்கைகளால் வளர்ச்சி மற்றும் நரம்பியல் விளைவு ஏற்படுவதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

    கருப்பு பிளாஸ்டிக்கில் இருந்து வரும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உணவு, நீர் மற்றும் காற்றில் ஊடுருவி வீக்கம், ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் செல்கள் சேதத்தை மனித உடலில் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கருப்பு பிளாஸ்டிக்குகளுக்கும், புற்றுநோய்க்கும் இடையே உள்ள நேரடி தொடர்பு இன்னும் ஆராய்ச்சியில் இருந்தாலும், அவற்றின் வேதியியல் கலவை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்துடன் தொடர்புடைய அபாயங்கள் அதிகமானவை.

    கருப்பு பிளாஸ்டிக்கில் உணவை சூடாக்குவதை தவிர்ப்பது ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான விவேகமான முடிவாகும்.

    • நாக்கு புற்றுநோய் வாய் முழுவதும் பரவக்கூடும்.
    • வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள்.

    நாக்கு புற்றுநோய் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாவால் ஏற்படுகிறது. ஸ்குவாமஸ் செல்கள் என்பது தோல் மற்றும் நாக்கின் மேற்பரப்பில் இருக்கும் மெல்லிய, தட்டையான செல்கள் ஆகும்.

    புற்றுநோய் உடலின் எந்த பகுதியிலும் தோன்றலாம். அதன் சில அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தோன்றினாலும், அவை பெரும்பாலும் சாதாரணமானவை என்று புறக்கணிக்கப்படுகின்றன. எனவே, அதன் அறிகுறிகள் இறுதிக் கட்டத்தை அடையும் வரை தோன்றாமல் போகலாம். குறிப்பாக நாக்கு புற்றுநோய் வாய் முழுவதும் பரவக்கூடும்.

    நாக்கில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படலாம். இந்த புற்றுநோய் நாக்கில் தொடங்கலாம் அல்லது தொண்டையில் தோன்றி பின்னர் வளரலாம். எனவே, அவை இரண்டையும் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.


    நாக்கு புற்றுநோயின் அறிகுறிகள்:

    இந்த வகை புற்றுநோய் வாய் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இதை எளிதாக கண்டறியலாம். ஏனெனில், அதன் அறிகுறிகள் நாக்கில் எளிதில் தெரியும்.

    அது ஓரோபார்னீஜியல் நாக்கு புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. அதன் அறிகுறிகள் சிறிது தாமதத்துடன் தோன்றும். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே இது நிணநீர் முனைகளுக்கு பரவியுள்ளது. இது நாக்கின் பின்புறத்தில் காணப்பட்டால், முதலில் அதை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.


    அறிகுறிகள்:

    * வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள்

    * தொடர்ந்து தொண்டை வலி

    * தொண்டையில் சிக்கிக்கொள்வது போன்ற உணர்வு.

    * தொனியில் மாற்றம்

    * தாடையில் வீக்கம்

    * வாய் அல்லது நாக்கில் உணர்வின்மை


    காரணங்கள்:

    நாக்கில் உள்ள ஆரோக்கியமான திசுக்களின் டி.என்.ஏ. மாறத் தொடங்கும் போது புற்றுநோய் தொடங்குகிறது. திசுக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் திசுக்களின் டி.என்.ஏ.வில் உள்ளன.

    ஆனால் இதில் உள்ள மாற்றம் என்னவென்றால், திசுக்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இயற்கையான செயல்முறைகள் மூலம் அவை இறக்கும் நேரம் வந்தாலும் அவை இறக்காது.

    கூடுதல் திசுக்கள் வளர்ந்து கட்டிகளை உருவாவதற்கு காரணமாகிறது. இந்த நிலையில், திசுக்கள் உடைந்து மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். சில நேரங்களில் புற்றுநோய் HPV வைரசாலும் ஏற்படலாம்.

    புகையிலை பயன்பாடு மிகவும் ஆபத்தானது. நீங்கள் எந்த வடிவத்தில் புகையிலையைப் பயன்படுத்தினாலும் உங்களுக்கு வாய்வழி புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.


    மது அருந்துவதும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    HPV வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது வாய்வழி புற்றுநோயை ஏற்படுத்தும்.

    சிகிச்சை முறைகள்:

    மருத்துவர் நாக்கின் நிலையை பரிசோதித்து அதற்கு சிகிச்சை அளிப்பார். கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் சில நேரங்களில் நாக்கு அறுவை சிகிச்சை கூட தேவைப்படுகிறது. அது தொண்டை வரை பரவினால், நிணநீர் முடிச்சு அறுவை சிகிச்சை அவசியம்.

    • வாசனை திரவியத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.
    • பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன.

    தற்போதைய இளம் தலைமுறையின் இடையே வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. மேலும் குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.

    வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசனை திரவியத்தை தினமும் பயன்படுத்து வருகிறார்கள். வெளிநாட்டு வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதை பெருமையாக கருதுகின்றனர்.

    உடலில் உள்ள வாசனை ஈர்ப்பை அதிகரிப்பது போல, வாசனை திரவியத்தில் ஒரு பயங்கரமான ஆபத்து மறைந்திருக்கிறது.


    ஆய்வாளர்களின் கருத்துபடி வாசனை திரவியங்களில் பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனம் நெயில் பாலிஷ் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பேக்கேஜிங் தயாரிப்பிலும் கூட பயன்படுத்தப்படுகிறது.

    இந்த வேதிப்பொருள் இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை கூட பாதிக்கிறது. உடலில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வாசனை திரவியங்களில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளின் மூளையையும் பாதிக்கின்றன.


    வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது மனநிலையை மேம்படுத்தும் அதே வேளையில், அது ஆபத்தையும் உருவாக்கும்.

    கூடுதலாக, உடலின் நாளமில்லா சுரப்பி அமைப்பிலும் பிரச்சனைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இனப்பெருக்கத்தை பாதிக்கிறது. ஹார்மோன், பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் மனநிலை ஊசலாட்டங்களும் ஏற்படலாம்.


    நம்முடை சிறிய மாற்றங்கள் மூலம் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். ரசாயனங்கள் இல்லாத பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது. இந்த மாற்றம் ஒரே நாளில் சாத்தியமில்லை. பழகுவதற்கு நீண்டகாலம் ஆகும். அதேபோல் துணிகளை துவைக்கும் போது வாசனை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவம் எடுப்பது சிறந்தது.
    • வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியம்.

    தாம்பத்தியத்தின் போது விரைவில் விந்து வெளியேறுதல் என்பது பரவலாக ஆண்களுக்கு காணப்படும் பிரச்சனையாகும். தாம்பத்தியத்தில் 1 முதல் 3 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறுவதை விரைவில் விந்து வெளியேறுதல் எனப்படுகிறது.

    சராசரியாக ஒரு நாளின் முதல் தாம்பத்தியத்தின் போது 5 முதல் 7 நிமிட நேரம் என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 நிமிடத்திற்கு மேல் நீடித்தவை, 'மிக நீளமான நேரம்' என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    மேலும் இதில் ஒவ்வொரு நபரும் வெவ்வேறு நேரத்தில் உச்சத்தை அடைவதால் இந்த கால அளவு நபருக்கு நபர் வேறுபடுகிறது. மேற்குறிப்பிட்ட நேரம் தாம்பத்தியத்தின் முன் உள்ள, பேச்சு கொஞ்சுதல், முத்தம், இவைகளை தவிர்த்தது ஆகும்.


    காரணங்கள்:

    முன்கூட்டியே விந்து வெளியேறுவதற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஒரு காலத்தில் இது உளவியல் ரீதியானது என்று மட்டுமே கருதப்பட்டது. ஆனால் இது உளவியல் மற்றும் உடலியல் காரணிகளின் சிக்கலான தொடர்புகளை உள்ளடக்கியது என்று சுகாதார வல்லுநர்கள் இப்போது கூறுகிறார்கள்.

    உளவியல் காரணங்கள்:

    மனச்சோர்வு, பயம், பதற்றம், குற்ற உணர்வுகள், முன்கூட்டியே விந்து வெளியேறி விடுமோ என்று கவலைப்படுதல்.

    உடல் ரீதியான காரணம்:

    ஒழுங்கற்ற ஹார்மோன் அளவுகள், குறிப்பாக குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு, டோபமைன், செரட்டோனின் போன்ற மூளை ரசாயனங்களின் குறைந்த அளவுகள், புரோஸ்டேட் அல்லது சிறுநீர்க்குழாய் வீக்கம் மற்றும் தொற்றுகள், நீரிழிவு, ரத்த அழுத்த நோய்கள், மற்றும் உடல் பருமன்.


    உணவுகள், உடற்பயிற்சிகள்:

    இந்த பிரச்சினை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மனச் சோர்வை ஏற்படுத்துகிறது. ஆகவே இதற்கான உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவம் எடுப்பது சிறந்தது. இடுப்பு தசைகளை பலப்படுத்த 'கெகல்' பயிற்சிகளை செய்யலாம். உடல் வெப்பத்தை தணிப்பதற்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியம்.

    தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். மாதுளம் பழம், வாழைப்பழம், தர்பூசணி பழம், திராட்சைப் பழம் இவைகளில் ஒன்றை தினசரி சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் இருந்தால் நிலவாகைச் சூரணம் 1 கிராம் வீதம் இரவு தூங்குவதற்கு முன்பு வெந்நீரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பயம், பதற்றம், கவலை, மனச்சோர்வு நீக்குவதற்கு தியானம், பிரார்த்தனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் உளவியல் ஆலோசனைகள் பெற வேண்டும். இரவு குறைந்தது ஆறு மணி நேரம் தூங்க வேண்டும். தினசரி நடைப்பயிற்சி, சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.


    உணவில் முருங்கைப்பூ, முருங்கைக்கீரை, முருங்கைக்காய், பசலைக்கீரை, அரைக்கீரை, தூதுவளை, பாதாம், பிஸ்தா, வால்நட், பூசணி விதை, முருங்கை விதை, அத்திப்பழம், பேரீட்சை பழம், சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், முட்டை, பால், தயிர், மோர், நெய் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    • வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை.
    • சுகாதார முறைகளை பின்பற்றினால் போதும்.

    ஹியூமன் மெட்டா நியூமோ (HMPV) வைரஸ் புதியது அல்ல. இது முதன்முதலில் 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் கண்டறியப்பட்டது. இது சுவாச அமைப்பை முதன்மையாக பாதிக்கும் நியூமோவிரிடே குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும்.

    காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு, இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தொண்டை வலி போன்றவை இந்நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.


    இது பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உண்மை தான்.

    மேலும் இது சர்க்கரை நோயாளிகள், புற்று நோய் பாதிப்புள்ளவர்கள், எச்.ஐ.வி. நோயாளிகள், நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்து உட்கொள்ளும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கைக்குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் ஆகியோருக்கு நிமோனியா, மூச்சுக்குழலழற்சி, சுவாச செயலிழப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

    இந்நோய் இருமல் அல்லது தும்மலில் வெளிப்படும் வைரஸ் கலந்த சுவாச துளிகள் மூலமாகவும், தொடுவது அல்லது கைகுலுக்குவது போன்ற நெருங்கிய தொடர்புகளாலும், வைரஸ் படிந்த மேற்பரப்புகளை தொட்டு விட்டு, பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதாலும் பரவுகிறது.


    இத்தொற்று 1 அல்லது 2 வாரங்களில் தானாகவே சரியாக கூடிய ஒரு தன்னியக்க நோயாகும். இது குளிர் காலங்களில் மட்டுமே காணப்படுகிறது. HMPV வைரஸ் நோய் தொற்றுக்கு குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. இந்நோய் தொற்று வராமல் தடுக்க வழக்கமான சுகாதார முறைகளை பின்பற்றினால் போதும்.

    HMPV வைரஸ் தொற்றுக்கும், கோவிட் நோய்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்நோயின் இறப்பு விகிதமும் கோவிட் நோயுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவு. ஆகையால் எச்.எம்.பி வைரஸ் தொற்று குறித்து நீங்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம்.

    • பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
    • கொழுப்பின் அளவையும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

    பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்கு. கற்பகத்தரு என்று அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தருகிறது. அதில் பனங்கிழங்கும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பனை உணவாக திகழ்கிறது.

    உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் பனங்கிழங்கு, கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனைமரத்தில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. இது மருத்துவ குணமும் கொண்டது. இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் ரத்த சோகையை போக்கும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


    இதில் பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது சரியான செரிமானத்தை உறுதி செய்கிறது.

    நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகை பிரச்சினையை குறைக்கிறது.

    பனங்கிழங்கில் கால்சியம் அதிகம் இருப்பதால் மூட்டு வலி மற்றும் முழங்கால் வலியைக் குறைக்க உதவுகிறது. எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

    மெக்னீசியம் நிறைந்திருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதயம் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது. அத்துடன் நரம்பு பலவீனம், நரம்புகளில் உள்ள அடைப்புகளையும் நீக்குகிறது. நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளை குறைக்கிறது.

    இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள பாதுகாப்பான வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. எனவே, பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    பெருங்குடலில் அசுத்தங்கள் சேராமல் தடுக்கிறது. நச்சுக்களை நீக்குகிறது. பனங்கிழங்கில், கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்..

    மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருப்பதால், அதிகமாக சாப்பிடுவது குறையும்.


    தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனங்களுடன் பனங்கிழங்கும் கண்டிப்பாக வழங்கப்படும். இதற்காக பெரும்பாலானோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பனை மரத்தில் இருந்து விழும் பனம்பழத்தை தனித்தனியாக பிய்த்து எடுத்து மண்ணில் புதைத்து வைப்பார்கள். ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பனங்கிழங்கை தோண்டி எடுத்து தங்களது பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள். இடவசதி இல்லாதவர்கள் மார்க்கெட்டுகளுக்கு சென்று பனங்கிழங்குகளை வாங்குவார்கள்.

    நெல்லை, தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் பனங்கிழங்கு சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பணகுடி, திசையன்விளை, ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, கடையநல்லூர், சேர்ந்தமரம், சுரண்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, எட்டையபுரம் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படும் பனங்கிழங்குகள் பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.

    தற்போது நெல்லை டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை சமாதானபுரம் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பனங்கிழங்கு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. 20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.120-க்கும், 25 கிழங்குகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.150-க்கும் விற்கப்படுகிறது.

    பனங்கிழங்கு விளைச்சல் அடைந்த பிறகு அதோடு இணைந்த விதையை உடைத்தால் அதற்குள் கெட்டியான கேக் போன்ற உணவுப் பொருள் இருக்கும். அது தவுன் என்று அழைக்கப்படுகிறது. இதையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சுவைத்து மகிழ்கின்றனர்.

    • பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.
    • பாதிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

    உலகளவில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று சிறுநீர்ப்பை புற்றுநோய். இது ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 4-வது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இது பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

    பல சந்தர்ப்பங்களில், சிகிச்சை அளிக்க அதிக செலவு ஆகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டியிருக்கும். சில சந்தர்ப்பங்களில், நோய் கடுமையானதாகி மரணம் ஏற்படுகிறது.


    அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் இந்தப் பிரச்சனை எழுகிறது. எனவே, பாதிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

    டோனி ஹண்டர் தலைமையிலான அமெரிக்காவின் சால்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இதில் தீவிர கவனம் செலுத்தினர். இது குறித்து புதிய ஆராய்ச்சி செய்தனர்.

    இதில் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய அணுகுமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நோய் தாக்குதலுக்கான சில இலக்குகள் அடையாளம் காணப்பட்டன.


    கொழுப்பை குறைக்க தற்போது பயன்படுத்தப்படும் ஸ்டேடின் வகை மருந்துகளில் ஒரு பரிசோதனை மருந்தை சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட கலவையால் இந்த வகை புற்றுநோயைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் தெரிய வந்தது. இந்த புதிய சிகிச்சை முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகின்றன.
    • கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும்.

    கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஸ்பூனை பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது. பிடிக்கிறதோ, இல்லையோ ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது. அதிலிருந்து மாறுபட்டு, கையால் சாப்பிடுவதால் சில நன்மைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது, 'நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்'.

    உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா?, குளிர்ச்சியாக இருக்கிறதா?, திட நிலையில் இருக்கிறதா?, திரவ நிலையில் இருக்கிறதா..? என்று எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அந்தத் தகவல் உடனடியாக மூளைக்குப் போகிறது.



    நாம் சாப்பிடப் போகிறோம் என்பதை மூளை உணர்ந்துகொண்டு வயிற்றுக்கு தகவல் அனுப்புகிறது. வயிறு, செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்கும் நிகழ்வை (உணவு வாய்க்கு வந்ததும்) தொடங்கிவிடுகிறது. மேலும், நமது கையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன.

    வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகின்றன. ஆனால் கையைக் கழுவிவிட்டு சாப்பிடும்போதுதான் இந்த பலன் கிடைக்கும். கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும்.

    • அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன.
    • ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    பொதுவாக வாழைப்பழம் என்றாலே மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். அதைதான் பெரும்பாலானோர் சாப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக இருக்கிறது. தினசரி செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதில் சிலவற்றை பார்க்கலாம்.

    * உடல் எடையை குறைக்கும்

    மற்ற பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் குறைவான கலோரிகளே உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பிவிடுகிறது.

    * சிறுநீரக செயல்பாட்டிற்கு நல்லது

    செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. அடிக்கடி செவ்வாழை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் வரும் ஆபத்தை தவிர்க்கலாம். இதிலுள்ள கால்சியம், எலும்பை வலுப்படுத்துகிறது.



    * சருமத்தை பாதுகாக்கிறது

    அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன. மேலும் இந்தப் பழத்தில் 75 சதவீதம் நீர் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளதால் நமது சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது.

    * ரத்தத்தை சுத்திகரிக்கிறது

    செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் பி-6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    * தலைமுடிக்கு நல்லது

    செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் தலைமுடியில் உள்ள பொடுகு குறைகிறது. குளிர்காலத்தில் தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யோடு கலந்து செவ்வாழைப் பழத்தை தலையில் தேய்த்தால் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.

    • ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றமும் தூக்கத்திற்கு தடையாக மாறும்.
    • தூக்கத்தின்போது திடீரென இரவில் கண் விழித்து எழுந்தால் மணி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

    இரவில் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தங்கு தடையின்றி தொடர்ச்சியாக தூங்கும் வழக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு நேரம் தூங்க முடியாமலும், திடீரென இரவில் கண் விழித்தும் பலர் அவதிப்படுகிறார்கள். அதிலும் அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் எழுந்துவிட்டு பின்பு தூங்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகிறார்கள். அப்படி இரவில் திடீரென கண் விழிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    ஏதேனும் ஒரு விஷயத்தை நினைத்து கவலை அடைவது, அது பற்றிய சிந்தனையிலேயே தூங்க செல்வது, தேவையற்ற எண்ணங்கள் மனதை ஆக்கிரமிப்பது போன்றவை தூக்கத்தை பாதிப்புக்குள்ளாக்கும். அத்தனை எண்ண ஓட்டங்கள் மனதுக்கு ஓய்வு கொடுக்காமல் அதனை இயக்க நிலையிலேயே வைத்திருக்கும். அதனால் தூக்கம் தடைபடும். உடலும், உள்ளமும் போதிய ஓய்வு எடுப்பதற்கு முடியாமல் போய்விடும். அதனால் இரவில் திடீரென கண்விழித்ததும் அதுபற்றிய எண்ணங்களே ஆக்கிரமித்து தூக்கத்தில் இருந்து விடுபட செய்துவிடும். அதிலும் அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் தூக்கத்தில் இருந்து எழ வைத்து மீண்டும் தூங்கவிடாமல் தடுத்துவிடும்.

    தூக்க சுழற்சி

    இரவு தூக்கம் இரண்டு சுழற்சி நிலைகளை கொண்டது. முதல் சுழற்சி ஆழ்ந்த தூக்க நிலையை கொண்டிருக்கும். இரண்டாவது சுழற்சியில் தூக்கத்தின் வீரியம் குறைவாக இருக்கும். அதனால் இரவில் திடீரென 3 மணி முதல் 4 மணிக்குள் கண் விழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

    ஹார்மோன்கள்

    ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றமும் தூக்கத்திற்கு தடையாக மாறும். மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் இயல்பாகவே அதிகாலையில் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கும். அப்படி இருக்கையில் மன அழுத்தத்திலோ, தேவையற்ற சிந்தனையிலோ தூங்க சென்றிருந்தால் இரவில் திடீரென கண் விழித்ததும் அந்த எண்ணங்கள் மனதை ஆட்கொண்டு தூக்கத்தை பாழ்படுத்திவிடும். குறிப்பாக அந்த சமயத்தில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு அதிகமாகி தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க செய்துவிடும்.

    சர்க்கரை அளவு

    அதிகாலை 3 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இயல்பாகவே உடலில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அதன் காரணமாக விழிப்பு நிலைக்கு உடல் தூண்டப்படும். பசி, தாகம், அசவுகரியத்தின் வெளிப்பாடாக இந்த விழிப்பு நிலை ஏற்படலாம்.

    3 மணிக்கு எழுவதை தடுக்கும் வழிமுறைகள்

    * அதிகாலையில் திடீரென 3 மணி முதல் 4 மணிக்குள் எழுவதை தடுப்பதற்கு சீரான தூக்க சுழற்சி முறையை பின்பற்றுவது முக்கியமானது. தினமும் இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் தூங்கும் வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இரவு 9 முதல் 10 மணிக்குள் தூங்குவது முக்கியமானது. அதற்கு முன்பு உடலை தளர்வடைய செய்யும் எளிமையான பயிற்சிகளை செய்து வரலாம். தியானம் அல்லது ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியிடும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அவை மன அழுத்தத்தை குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். இரவு தடையின்றி தூங்குவதற்கு வழிவகை செய்யும்.

    * தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு உணவு உண்ண வேண்டும். காபின் கலந்த காபி, மது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.

    * தூங்கும் அறை வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்தும், காற்றோட்டம் கொண்டதாகவும், மெத்தைகள், தலையணை தூங்குவதற்கு சவுகரியமானதாகவும் இருக்க வேண்டும். அது அமைதியான தூக்கத்திற்கு வித்திடும்.

    * தூக்கத்தின்போது திடீரென இரவில் கண் விழித்து எழுந்தால் மணி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி மணி பார்ப்பது தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்திவிடும். மீண்டும் தூங்குவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். அதற்குள் தேவையற்ற சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டால் ஒட்டுமொத்த தூக்கமும் பாதிப்படைந்துவிடும்.

    * இரவில் தூங்க செல்லும்போது செல்போன், லேப்டாப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளி மூளையின் செயல்பாடுகளை சிதைத்து தூக்கத்தை கெடுத்துவிடும்.

    ×