என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mouth Cancer"

    • புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும்.
    • தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது.

    வாய் வழி புற்றுநோயானது தொண்டைக்குள் உள்ளே இருக்கும் செல் அணுக்களில் காணப்படும் வீரியமிக்க நோய் தொற்று அல்லது புற்றுநோய் செல்கள் காரணமாக ஏற்படும் நோயாகும். இவை சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் இருப்பின் உயிர்க்கு ஆபத்தானதாகும்.


    வாய் வழிபுற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் முதிர்ந்த நிலையில் குறிப்பாக நோய் பரவும் நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இவை சாதாரண தொண்டை அலர்ஜி அல்லது வாய் புண்கள் போல இருப்பது ஆகும்.

    வாய் புற்றுநோய் இந்திய அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நோயை எளிதில் கண்டறிந்து தடுக்க முடியும் என்றாலும், பெரும்பாலும் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது. இதன் விளைவாக இறப்பு அதிகரிக்கிறது. உதடுகள், நாக்கு, அன்னம், வாயின் தளம், ஈறுகளை இந்நோய் பாதிக்கிறது.

    ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் தோராயமாக 17 சதவீதம், பெண்களில் 10.5 சதவீதம் பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் ஆண்டுதோறும் சுமார் 46 ஆயிரம் பேர் வாய் புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


    இந்நோய் ஏற்பட புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும். ஏறத்தாழ 47.9 சதவீதம் ஆண்கள், 20.3 சதவீதம் பெண்கள் பல்வேறு வடிவங்களில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

    வயது வந்தவர்களில் 24.3 சதவீத ஆண்கள் மற்றும் 2.9 சதவீத பெண்கள் புகைக்கிறார்கள் என கூறப்படுகிறது. 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையே புகையிலை பயன்பாடு 6.9 முதல் 22.5 சதவீதம் வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    வறுமை, பசி, இயலாமை மற்றும் மனச்சோர்வு போன்றவைக்காக, 10 வயது வரை உள்ள சிறுவர்கள் கூட புகையிலை, பீடி, சிகரெட் பழக்கத்துக்கு மாறி வருவதாகவும் உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.


    அறிகுறிகள்:

    * வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற தொற்றுகள் 3 வாரங்களுக்கு மேல் தொண்டையில் இருப்பது.

    * தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது.

    * வாய், தொண்டையில் புணள் 3-ல் இருந்து 4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து ஆறாமல் இருப்பது.

    * தொண்டை குழு அல்லது வாயினுள் கட்டி அல்லது அசாதாரண கட்டி போன்ற அமைப்பு காணப்படுவது.

    * காரணம் இன்றி பற்கள் வலுவிழந்து விழுவது.

    * தொடர் தொண்டை வலியினால் உணவை விழுங்குவதில் பிரச்சனை.

    * பேசுவதில் சிரமம்.

    * உதடு, தொண்டை, நாக்கு காது, கழுத்து பகுதியில் வலி இருப்பின் அதனை கவனிக்காமல் இருக்க கூடாது. அதற்கான காரணங்களை உடனடியாக அறிந்து ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவசியம்.

    • நாக்கு புற்றுநோய் வாய் முழுவதும் பரவக்கூடும்.
    • வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள்.

    நாக்கு புற்றுநோய் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாவால் ஏற்படுகிறது. ஸ்குவாமஸ் செல்கள் என்பது தோல் மற்றும் நாக்கின் மேற்பரப்பில் இருக்கும் மெல்லிய, தட்டையான செல்கள் ஆகும்.

    புற்றுநோய் உடலின் எந்த பகுதியிலும் தோன்றலாம். அதன் சில அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தோன்றினாலும், அவை பெரும்பாலும் சாதாரணமானவை என்று புறக்கணிக்கப்படுகின்றன. எனவே, அதன் அறிகுறிகள் இறுதிக் கட்டத்தை அடையும் வரை தோன்றாமல் போகலாம். குறிப்பாக நாக்கு புற்றுநோய் வாய் முழுவதும் பரவக்கூடும்.

    நாக்கில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படலாம். இந்த புற்றுநோய் நாக்கில் தொடங்கலாம் அல்லது தொண்டையில் தோன்றி பின்னர் வளரலாம். எனவே, அவை இரண்டையும் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.


    நாக்கு புற்றுநோயின் அறிகுறிகள்:

    இந்த வகை புற்றுநோய் வாய் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இதை எளிதாக கண்டறியலாம். ஏனெனில், அதன் அறிகுறிகள் நாக்கில் எளிதில் தெரியும்.

    அது ஓரோபார்னீஜியல் நாக்கு புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. அதன் அறிகுறிகள் சிறிது தாமதத்துடன் தோன்றும். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே இது நிணநீர் முனைகளுக்கு பரவியுள்ளது. இது நாக்கின் பின்புறத்தில் காணப்பட்டால், முதலில் அதை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.


    அறிகுறிகள்:

    * வாய் அல்லது நாக்கில் சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள்

    * தொடர்ந்து தொண்டை வலி

    * தொண்டையில் சிக்கிக்கொள்வது போன்ற உணர்வு.

    * தொனியில் மாற்றம்

    * தாடையில் வீக்கம்

    * வாய் அல்லது நாக்கில் உணர்வின்மை


    காரணங்கள்:

    நாக்கில் உள்ள ஆரோக்கியமான திசுக்களின் டி.என்.ஏ. மாறத் தொடங்கும் போது புற்றுநோய் தொடங்குகிறது. திசுக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் திசுக்களின் டி.என்.ஏ.வில் உள்ளன.

    ஆனால் இதில் உள்ள மாற்றம் என்னவென்றால், திசுக்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இயற்கையான செயல்முறைகள் மூலம் அவை இறக்கும் நேரம் வந்தாலும் அவை இறக்காது.

    கூடுதல் திசுக்கள் வளர்ந்து கட்டிகளை உருவாவதற்கு காரணமாகிறது. இந்த நிலையில், திசுக்கள் உடைந்து மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். சில நேரங்களில் புற்றுநோய் HPV வைரசாலும் ஏற்படலாம்.

    புகையிலை பயன்பாடு மிகவும் ஆபத்தானது. நீங்கள் எந்த வடிவத்தில் புகையிலையைப் பயன்படுத்தினாலும் உங்களுக்கு வாய்வழி புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.


    மது அருந்துவதும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    HPV வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது வாய்வழி புற்றுநோயை ஏற்படுத்தும்.

    சிகிச்சை முறைகள்:

    மருத்துவர் நாக்கின் நிலையை பரிசோதித்து அதற்கு சிகிச்சை அளிப்பார். கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் சில நேரங்களில் நாக்கு அறுவை சிகிச்சை கூட தேவைப்படுகிறது. அது தொண்டை வரை பரவினால், நிணநீர் முடிச்சு அறுவை சிகிச்சை அவசியம்.

    ×