என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை சொல்லக் கேட்டு தெரிந்து கொள்வதை விட, பெற்றோரையும் மற்றோரையும் பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என்பது புலப்படுகிறது.
    ஆம்பூரில் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் சிறுமி ஹனீபாஜாரா போலீஸ் நிலையத்தில் தன் தந்தை மீதே ஒரு விசித்திர புகார் கொடுத்தார். அதில், தன் வீட்டில் கழிவறை கட்டக்கோரி தந்தையிடம் கேட்டதாகவும் அதற்கு படிப்பில் முதலிடம் எடுத்தால் கழிவறை கட்டி தருவதாக அவர் உறுதி அளித்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக படிப்பில் முதலிடம் பெற்ற பின்னரும் கழிவறை கட்டித்தராமல் ஏமாற்றி வருவதாகவும் கூறி இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் தூய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் அந்த சிறுமி வீட்டில் தனி நபர் கழிப்பறை கட்டிக்கொடுக்க உத்தரவிட்டார்.ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் அச்சிறுமியை தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக நியமித்து உத்தரவிட்டார்.

    சமூக வலைதளங்களில் வைரலான ஒரு செய்தி என் மனதை வருடியது. பயணம் செய்யும் தாயும், அவருடைய ஆறு வயது குழந்தையும் புத்தகம் படித்துக்கொண்டிருந்தனர். உடன் பயணிப்பவர்களுக்கு ஆச்சரியம். ‘என் குழந்தை எத்தனை அறிவுறுத்தினாலும் கேட்பதில்லை. கைபேசியில் விளையாடத்தான் விரும்புகிறது.

    உங்கள் குழந்தை எப்படி அமைதியாக படிக்கிறது? நீங்கள் என்ன சொல்லி குழந்தைக்கு புரிய வைத்தீர்கள்?’ என்று ஒருவர் அந்ததாயிடம் கேட்டார். அதற்கு அந்த தாய் ‘குழந்தைகள் நாம் சொன்னால் கேட்பதில்லை. அவை நம்மைப் பார்த்துதான் கற்றுக்கொள்கின்றன’ என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துதான் நிறைய கற்றுக்கொள்கின்றன என்பது தான் உண்மை. கடந்த வருடம் தொலைக் காட்சிப்பெட்டியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். மகனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறார் தந்தை. ஆனால் மகன் அவருடன் செல்ல மறுத்து அழுகிறான்.

    என்னவென்று கேட்டபோது ‘நீ ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுகிறாய். அதனால் உன்னுடன் வர மாட்டேன்’ என்கிறான் மகன். தந்தை தன் தவறை உணர்ந்து ஹெல்மெட் அணிந்து அவனை அழைத்துக் செல்கிறார். ஒரு குழந்தை காயம் பட்ட சமயத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அழுதால் ஏதோ ஒரு காரணத்துக்காக அது போராடுகிறது என்று பொருள். இந்தக் குழந்தை போராடி தன் தந்தை செய்கின்ற தவறை எடுத்துச் சொல்லி அவரை திருத்துகிறதா?

    “பாடியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாகனம் ஓட்டும் பெற்றோர் ஒரு மாதத்தில் எத்தனை முறை சாலை விதிகளை மீறியிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து ஒவ்வொரு மாணவரும் மாதாந்திர அறிக்கை தரவேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அப்பெற்றோருக்கு தம் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்போகிறது” என்று என் நண்பர் ஒரு செய்தியை என்னிடம் சொன்னார். பிள்ளைகள் பெற்றோரைத் திருத்தப்போகிறார்களா?

    பள்ளி மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்குச் செல்வது, சாதிச் சண்டைகளில் ஈடுபடுவது, பெண் குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் கற்பழிப்பு போன்ற கொடிய பாலியல் தொல்லைகள் கொடுப்பது, பள்ளிக்கு விடுமுறை வேண்டி சக மாணவனைக் கொலை செய்வது, குண்டு வைத்துள்ளதாக பள்ளி நிர்வாகத்தை மிரட்டி விடுமுறை விடச் செய்வது, ஆசிரியர்களை மிரட்டுவது, அடிப்பது, தற்கொலை மிரட்டல் விடுவது மற்றும் தேர்வு எழுதுவதில் தில்லு முல்லுகள் செய்வது போன்ற நிகழ்வுகள் இந்நாட்களில் கூடிக்கொண்டே இருக்கின்றன.



    பற்றாக்குறைக்கு தொலைக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும் குடும்பத்தின் சிந்தனையை சீக்கு பிடிக்க வைக்கின்றன. குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை சொல்லக் கேட்டு தெரிந்து கொள்வதை விட, பெற்றோரையும் மற்றோரையும் பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என்பது புலப்படுகிறது. எனவே யார் இப்போது திருந்த வேண்டும். குழந்தைகளா? பெற்றோரா? யார் யாரைத் திருத்துவது?

    இந்த செய்திகள் எனக்கு பெரிய ஆறுதலையும் நிம்மதியையும் கொடுத்தது. இன்றைய தலைமுறையை திருத்த வேண்டுமானால் முதலில் நேற்றைய தலைமுறையைத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் இச்சமூகம் உள்ளது. நாம் உருவாக்கும் ஆட்சியாளர்கள் சமூகத்துக்கு வேண்டிய மாற்றங்களை நிகழ்த்தாத நிலையில் மக்களேதான் அந்த மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

    இத்தலைமுறை மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஆட்சியாளர்கள் தோற்றுப் போனால் அதைச் செயல்படுத்தும் அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஆசிரியர்கள் தான்கல்வி வியாபாரமாகாத காலத்தில் அரசுப் பள்ளிகள் அதிகமில்லா விட்டாலும் ஒவ்வொரு பள்ளியிலும் நிரம்பி வழிந்தன. “வாத்தியாரைய்யா எம் பையனுக்கு பாடம் சொல்லிக் குடுங்கய்யா அடங்க மாட்டேன்கிறான். தலையைத் தவிர்த்து உடம்பெல்லாம் எங்கு வேண்டுமானாலும் அடிச்சி சொல்லி கொடுங்கய்யா” என்று தம் மகனை ஆசிரியர்களிடம் ஒப்பவித்தவர்கள் அதிகம்.

    அன்று பெரும்பாலான ஆசிரியர்கள் ஒழுக்கசீலர்களாக வாழ்ந்து மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். ஆனால் இக்கால ஆசிரியர்கள் சமூகத்தையே மாற்றக் கூடிய மனிதத்தை வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இது மிக கடினமான ஒன்று அன்றைய பெற்றோர் சமூகம் மனிதத்தை வளத்தெடுக்க உதவியது.

    இன்றைய பெற்றோர் சமூகம் தங்களை அறியாமலேயே மனிதத்துக்கு எதிராக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் தலைவர்கள் வளர்த்தெடுக்கும் சமுதாயத்தில் ஒவ்வொரு தலைமுறையும் கூடுதலான சுயநலம் கொண்டதாகவே வளர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை நூறு சதவீதத்தை எட்டிப்பிடித்துக் கொண்டுள்ளது.

    தம் பிள்ளைகளை டாக்டராக்க வேண்டும். ஐ.ஏ.எஸ் ஆக்க வேண்டும் என்ற தம் கனவை நனவாக்கவே வளர்ந்து கொண்டிருக்கும் நியூகிளியர் குடும்பங்கள் அதிபெரும்பான்மையாக உள்ள சமூகம் இது. சட்டங்களின் குறைபாடுகளை நன்கு அறிந்த சமூகம் எளிதில் திருத்த இயலாத சமூகம். இவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கியே உள்ளது.

    யார் சொன்னாலும் இவர்கள் மாறப்போவதில்லை. ஆனால் லஞ்சம் வாங்கும் தந்தையிடம் “நீ லஞ்சம் வாங்கிய பணத்தில் என்னைப் படிக்க வைத்தால் நான் படிக்கமாட்டேன் உடுத்தமாட்டேன். உண்ணமாட்டேன்” என்று மகனோ, மகளோ புரட்சி செய்தால் நிச்சயம் தந்தை திருந்துவார். ஆசிரியர் சமூகம் முயற்சி செய்தால் குழந்தைகள் மூலமே தற்போதைய தலைமுறையை மாற்ற முடியும்.

    மு.அசோக்குமார், ஐ.பி.எஸ்.,
    போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு)
    தாய்மார்கள் எப்படி நடந்துகொண்டால் சமூகத்தில பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை பற்றி அவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டும்.
    பெண் பிள்ளைங்க நல்லா படிக்கணும், நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று பல வி‌ஷயங்களை யோசிக்கிறோம்; ஆனால், எப்படி நடந்துகொண்டால் இந்த சமூகத்தில அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை பற்றி அவர்களிடம் மனம் திறந்து பேசுவது இல்லை. இதனால்தான் பல பெண்கள் தங்களோட வாழ்க்கையில் தடம்புரண்டு விடுகிறார்கள். எனவே பெண் குழந்தைகளை சரியாக வழிநடத்தினால் நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.

    முன்பெல்லாம் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு பெண் சுலபமாக வெளி ஆட்களுடன் பேசிவிட முடியாது. ஆனால், இது செல்போன், கம்ப்யூட்டர் காலம். அதனால தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு யாருடனும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக பேச முடிகிறது.

    எனவே முன்பின் தெரியாத நபர்கள் போனில் வந்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துங்கள். செல்போனை காண்பித்து சில்மி‌ஷத்தில் ஈடுபடுவது; ஆபாச படங்களை காண்பித்து பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பது என பல வகைகளில் பெண் குழந்தைகள் திசைமாற்றப்படுகின்றனர்.

    எனவே, இவற்றில் எல்லாம் உ‌ஷாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். 7-வது, 8-வது படிக்கும் குழந்தைகள் முதல் சொல்லித்தரலாம். சின்ன பெண் தானே அவளுக்கு என்ன தெரியும் என்றோ, இப்ப எதுக்காக இதுப்பற்றி யெல்லாம் சொல்லித் தரவேண்டும் என்றோ நினைக்காதீர்கள்.

    எல்லையே இல்லாமல் இ‌ஷ்டத்துக்கு பிள்ளைகளை வளர விடுவது எத்தனை தவறோ, அதே போல்தான் குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் உங்கள் குழந்தையை வலம்வரச் செய்வதும். அதனால், உங்கள் குழந்தைகளை சக நண்பர்களிடம் பேச அனுமதியுங்கள்.

    மற்றவர்களிடம் உரையாடும் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துக்கூறுங்கள். உதாரணமாக, அடுத்து இருப்பவர்களிடம் பேசும் போது அவர்களின் முகத்தை பார்த்து, நேராக நின்று பேசச் சொல்லுங்கள். குறிப்பாக, ஆண்களிடம் அப்படி இல்லாமல், வெட்கப்பட்டு பேசும்போதோ அல்லது நாணிக் கோணி பேசும் போது, ஏதோ ஒரு விதத்தில் எதிர் இருப்பவர் மனதில் நீங்கள் பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவீர்கள்.

    தற்போதைய சூழ்நிலையில், கல்வி சம்பந்தமான புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பதான் இந்த சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அறிய முடியும். அதனால, செய்தித்தாள் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். அதோடு, நாட்டு நடப்புகளை அவர்களுடன் விவாதியுங்கள்; அவர்கள் எப்படி இருந்தால் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வரமுடியும் என்பதை விளக்குங்கள். நல்வழிக்காட்டுங்கள்.
    குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

    குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

    இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

    அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
    குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஹோம் வொர்க் நேரத்தில் குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பார்க்கலாம்.
    குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஹோம் வொர்க் நேரத்தில் குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பார்க்கலாம்.

    ‘`பொதுவாக அம்மாக்கள், தங்கள் வேலைக்கு என ஒரு அட்டவணை வைத்திருப்பார்கள். அதில் ஒன்றாக, மாலை நேரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரம் பிள்ளைகளின் ஹோம்வொர்க்குக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்துக்குள் குழந்தைகளை வீட்டுப்பாடம் முடிக்க வைத்து, சீரியல், இரவு சமையல் என தங்களின் அடுத்த வேலையைப் பார்க்கச் செல்ல வேண்டுமே என்கிற அவசரம் அவர்களுக்கு இருக்கும்.

    ஆனால், உங்களின் அவசரத்துக்கு குழந்தைகளால் ஈடுகொடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ‘ஒரு மணி நேரமா சொல்லிக் கொடுக்கிறேன், இன்னும் படிக்கல’ என்பது போன்ற உங்களின் கோபம், பதற்றம், கண்டிப்பு போன்றவை குழந்தைகளை அடுத்த ஐந்து நிமிடங்களில் அனைத்தையும் கற்க வைத்துவிடாது. ரைம்ஸையோ, எழுத்துக்களையோ, கணித எண்களையோ அவர்கள் கற்கும்வரை பொறுமையாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். அதற்கு முதல்படியாக, உங்கள் அட்டவணையில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும்!

    படிக்க, விளையாட, சாப்பிட என குழந்தைகளை அந்தந்த நேரத்துக்கான செயல்களைச் செய்யப் பழக்கப்படுத்துங்கள். அதே நேரம், செல்போன், டி.வி, அவுட்டிங் என்பதை எல்லாம்விட உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அதிகப்படியான நேரத்தை ஒதுக்குங்கள். அப்படி செய்யும்போது, வீட்டுப்பாடத்துக்கான நேர நிர்ணயத்துக்குள் முடிக்கவைக்க வேண்டிய கட்டாயம் காணாமல் போகும்.



    குழந்தைகளுக்குப் புரியும்படி பாடம் கற்றுக் கொடுப்பதற்கான வழி என்ன தெரியுமா? அதை அவர்களுக்குப் பிடிக்கும் விதங்களில் கற்றுக்கொடுப்பதுதான். அதற்கு உங்களின் கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்யுங்கள். ஒரு வாரமாக கஷ்டப்பட்டும், திட்டியும், அடித்தும் சொல்லிக்கொடுத்து அவர்கள் மனதில் பதியாத ரைம்ஸை, நடனம், கதை என உடல் அசைவுகளின் வாயிலாகவும், சந்தோஷமான மனநிலையிலும் சொல்லிக்கொடுங்கள்.

    அது நிச்சயம் அவர்கள் மனதில் பதிந்துவிடும். ‘சர்க்கிள் ஷேப்’பை கற்றுக்கொடுக்க, புத்தகத்தில் உள்ள வட்டத்தையே நம்பாமல் பூரி, வளையல், தட்டு என்று வாழ்க்கையில் இருந்து அவர்களுக்கு அந்த வடிவத்தைக் காட்டுங்கள். மேலும், கண்ணால் பார்த்து, வாய்விட்டுப் படித்து, எழுதிப் பார்த்து என இந்த மூன்று முறைகளில், எந்த முறையில் பாடம் கற்க உங்கள் குழந்தைக்கு விருப்பம் என்பதைத் தெரிந்து, அதற்கேற்ற வகையிலும் சொல்லிக் கொடுங்கள்.

    கவனிக்கும் திறன் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு சற்று கூடுதல் மெனக்கெடல் தேவைப்படும்தான். ஆனால், அது இயலாத காரியம் என்றில்லை. இவர்களுக்கு அடிப்படைகளை தெளிவுறப் புரியவைப்பது, மீண்டும் மீண்டும் அவற்றை நினைவுபடுத்துவது, கூடுதல் பொறுமையுடன் கற்றுக் கொடுப்பது அவசியம்.

    சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் படிப்பில் அக்கறை வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கற்றுக் கொடுக்கும் பாடத்தின் அருமை உங்களுக்குப் பெரிதாக தெரியலாம். குழந்தைகளுக்கோ அது ஒரு வீட்டுப்பாடம்… அவ்வளவுதான். விளையாட்டு, பொழுதுபோக்குபோல அன்றாடமான ஒரு விஷயம்தான் அவர்களைப் பொறுத்தவரை படிப்பும். 
    இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.
    ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும். ஒரு உயிர் படும் துன்பத்தை கண்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு.

    அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும்.

    மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு உரிய மனப்பான்மை வளர்த்து கொள்ளவேண்டும். குறிப்பாக தெருக்களை தூய்மையாக வைக்க உதவவேண்டும். மேலும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட்களை தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.

    எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை கற்றுக்கொடுக்கலாம். செய்திதாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்பநலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய குறும்படங்களை பொதுமக்களிடம் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

    மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் குறித்து விளக்கி கூறலாம். அதில் வேளாண்மை திட்டங்களில் அரசின் உதவி பெறுதல், விவசாயிகள் ஓய்வு நேரத்தில் கோழிப்பண்ணைகள், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல் உள்ளிட்ட தொழில்கள் செய்வது குறித்து அறிவுரைகளை வழங்கலாம்.

    கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க உதவலாம். நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க மாணவர்கள் போலீசாருக்கு உதவிட முன்வரவேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் உதவவேண்டும்.

    ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவ வேண்டும். புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் அவற்றால் பாதிக்கும் மக்களுக்கு உதவிட வேண்டும். சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும்.
    குழந்தைகள் தானாக சாப்பிடுவது எப்படி, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தரவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
    குழந்தைகள் தானாக சாப்பிடுவது எப்படி, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தரவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

    குழந்தைகள் தானாக சாப்பிடுவது எப்படி, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தரவேண்டியது மிகவும் அவசியமானதாகும். குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் அவர்களுக்கு தண்ணீர் முதல் ஆடை, உணவு, மருந்து என சின்னச் சின்னதாக

    அத்தனை விஷயங்களிலும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். அதனால் குழந்தை கொஞ்சம் வளர ஆரம்பித்ததும் அவர்களுக்கு எது தேவையோ அதை அவர்களாகவே புரிந்து கொண்டு, செய்து கொள்ள முயற்சி செய்யும் அளவுக்கு பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும்.

    அதேசமயம் அவற்றை ஆரோக்கியமான முறையில் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுப்பது அவசியம். குறிப்பாக, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று குழந்தைகளுக்குக் கற்றுத் தருவது மிக அவசியம்…

    குழந்தைகள் தங்களுக்குப் பிடித்ததையோ ஏதாவது விளையாட்டுப் பொருட்களையோ தொட்டு, எடுப்பதுண்டு. அதனால் எப்போது சாப்பிடுகிற பொருட்களைத் தொட நேர்ந்தாலும் அதற்கு முன்பாக கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று சொல்லிப் பழக்க வேண்டும்.

    அதைவிட வீட்டில் குழந்தைகள் உள்ள வீடாக இருந்தால் எனாமல் போர்டு கொண்ட வெஜிடபிள் கட்டர்களைத் தவிர்க்க வேண்டும். அவை காய்கறியோடு கலந்து குழந்தைகளின் வயிற்றுக்குள் போய்விடும்.

    வண்ணத்தாள்களில் சுற்றப்படுகிற, அல்லது வண்ணங்கள் சேர்க்கப்படுகிற உணவுகளை முற்றிலும் தவிர்க்கக வேண்டும். அவற்றில் உள்ள குறைபாடுகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது மிக அவசியம்.

    சாப்பிடும்பொழுது வேறு விடியோ கேம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது. இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.
    குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறித்த பின் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர்.
    குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறித்த பின் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் குழந்தைகள் கண்டிப்பாக நூறு சதவிகிதம் பெற்று, பெற்றோரை போலவே மாறுகின்றனர். பெற்றோர்கள் நல்லவர்களானால், குழந்தையும் நல்லவர்களாக வளர்வர்; பெற்றோரே கேடு கெட்டவர்களானால், குழந்தையும் அப்படியே வளரும். நீங்கள் பெற்று எடுத்த குழந்தை நல்லவராவதும் கெட்டவராவதும் உங்கள் கையில்! 

    உணவு நீங்கள் எப்படி உண்ணுகிறீர்களோ அதே போல் தான் குழந்தையும் உண்ணும். நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை குழந்தையும் சுவை பார்க்க ஆசைப்படும்; நீங்கள் வெறுத்து ஒதுக்கும் உணவுகளை உங்கள் முகபாவனையை பார்த்தே குழந்தையும் ஒதுக்கிவிடும். நீங்கள் உணவினை சிந்தி சாப்பிட்டால், குழந்தையும் அதையே செய்யும்; அது தவறு என்று குழந்தை உணரவே வெகுகாலம் ஆகலாம்.

    குடும்பமாக அனைவரும் அமர்ந்த பின், அனைவரும் சேர்ந்து சாப்பிடுதல், உணவுகளை வீணாக்காத பண்பு, உணவிற்கு தரும் மரியாதை போன்ற முக்கிய விஷயங்களை குழந்தைகள் முதன் முதலாக பெற்றோரிடம் இருந்து கற்கின்றனர்; கற்றதையே அப்படியே சரியா தவறா என்று அறியாமலேயே தன் வாழ்க்கை முழுவதும் பின்பற்றுகின்றனர்.

    நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்தால் உங்கள் குழந்தையும் உங்களோடு சேர்ந்து செய்ய ஆரம்பித்துவிடும்; அதுவே நீங்கள் மதியம் வரை உறங்குபவராக, சோம்பேறியாக இருந்தால் உங்கள் குழந்தையும் கண்டிப்பாக வாழ்வில் பெரும் சோம்பேறியாக திகழ்வான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உங்கள் வீட்டு வேலைகளை நீங்கள் செய்வது, வீட்டில் உள்ளோரின் வேலைகளில் பங்கு கொண்டு, வேலைகளை பகிர்ந்து செய்வது போன்ற விஷயங்களை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து உள்வாங்கிக் கொள்கின்றனர்.



    நீங்கள் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற செயல்கள், உங்கள் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே அவற்றை செய்ய வைக்கும்; குழந்தைகளுக்கு விளையாட்டின் மீது இயற்கையான ஆர்வம் உருவாகும். நீங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் குழந்தையும் அதை பின்பற்றும்; நீங்கள் நன்கு தின்று கொண்டு தீனிப்பண்டாரமாக உண்டு கொளுத்து இருந்தால், குழந்தையும் அதையே தன் வாழ்வில் பின்பற்றும்.

    உங்கள் நட்பு வட்டம் எப்படிப்பட்டது, எப்படி அவர்களுடன் பழகுகிறீர்கள், அவர்கள் முன்னிலையில் எப்படி பேசுகிறீர், அவர்கள் பின்னால் எப்படி பேசுகிறீர் போன்ற அத்தனை விஷயங்களையும் குழந்தைகள் வெகு ஜாக்கிரதையாக கவனிப்பர்; அதையே தன் பழக்க வழக்கமாக மேற்கொள்வர். நீங்கள் புறம் பேசினால் குழந்தையும் புறம் பேசும்; நீங்கள் நல்ல நண்பனாக இருந்தால், குழந்தையிடமும் அந்த பண்பு காணப்படும்.

    நீங்கள் எந்த நேரத்தில் உறங்குகிறீர், எப்பொழுது விழிக்கிறீர், எந்த நேரத்தில் என்ன செயல்களை செய்கிறீர், உங்கள் உழைப்பினை எப்படி மதிக்கிறீர், வேலைக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு, நேரத்திற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு போன்ற விஷயங்களை உங்கள் ஒவ்வொரு செயலின் மூலம் குழந்தைகள் கவனித்து கற்றுக்கொண்டு அதையே தாங்கள் வளர்ந்த பின் தங்களது பழக்க வழக்கமாக மேற்கொள்கின்றனர்.

    நீங்கள் எந்த அளவு உங்கள் வீட்டை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்கிறீர், உங்கள் உடலின் சுத்தம் போன்ற விஷயங்களை குழந்தைகள் கவனித்து கண்டிப்பாக அதே போன்று செய்ய முயற்சிப்பர். மேலும் நீங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்யும் உதவி, மற்றவர்களுக்கு செய்யும் உதவி போன்ற விஷயங்களை பார்த்து உணர்ந்து அதையே தன் வாழ்க்கையிலும் மேற்கொள்வர்.

    பணம் என்று நீங்கள் அலைந்தால், உங்களுக்கு பிறந்த பிள்ளை உங்களை விட பலமடங்கு பணத்தின் பின் அலையும்; இப்படி அலைய வேண்டும் என்பதை அது பெற்றோரான உங்களை பார்த்து தான் கற்றுக் கொள்கிறது. பணத்தை மிச்சப்படுத்த உங்கள் பெற்றோரை நீங்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பினால், நாளை உங்கள் பிள்ளையும் அதே பணம் எனும் காரணத்திற்காக உங்களையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்ப பெருமளவு வாய்ப்பு இருக்கிறது. 
    குழந்தைகளை இயல்பாக விடுவதற்கும் நமது வழிக்குக் கொண்டுவருவதற்கும் இடையே உள்ள சமநிலையை அடைய முடிந்தால் அதுவே நலம்தரும்.
    குழந்தைகளைக் கண்டிக்கவே கூடாதா? அவர்கள் போக்கிலேயே சீரழிய விடுவதா என்றால், கட்டாயம் கண்டிக்கத்தான் வேண்டும். கடிவாளம் இல்லாத குதிரைபோல்தான் கண்டித்து வளர்க்கப்படாத குழந்தைகளும். ஆனால், கண்டிப்பது என்பது பலரும் நினைப்பதுபோல் கண்மூடித்தனமாக அடித்தோ திட்டியோ தண்டிப்பது அல்ல.

    குழந்தைகள் இயல்பாகவே தங்களுக்குப் பிடித்த செயல்களை மட்டுமே செய்வார்கள். ஆகவே, நீங்கள் எதிர்பார்க்கும் செயலைச் செய்ய வேண்டுமானால் அதை அவர்களுக்குப் பிடித்ததாக மாற்ற வேண்டும். அதேபோல் நமக்குப் பிடிக்காத செயல் ஒன்றை அவர்கள் செய்யாமல் இருக்க வேண்டுமானால், அதைவிட சுவாரசியமான ஒரு செயலைச் செய்யச் சொல்ல வேண்டும்.

    ஒரு செயலைக் கண்டிக்கும்போது அச்செயல் மட்டும்தான் நமக்குப் பிடிக்கவில்லை, அந்தக் குழந்தையையே ஒட்டுமொத்தமாக வெறுக்கவில்லை என்பதை அந்தக் குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும். ‘இதை மட்டும் செய்யாமல் இருந்தால், நீ எவ்வளவு நல்ல பையன் தெரியுமா?’ என்பதற்கும் ‘நீ எதற்குமே லாயக்கில்லாதவன்’ என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

    அதுபோல் குழந்தைகளுக்கு ஒழுக்கங்களையும் நல்ல பழக்கங்களையும் எவ்வளவு சீக்கிரம் அறிமுகப்படுத்துகிறோமோ, அவ்வளவு நல்லது. ஐந்தில் வளைக்காமல் ஐம்பத்து எட்டில் ரிட்டயர் ஆகும்போது, வளைக்க நினைத்தால் ஒடிந்துவிடும்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதை உணர்ந்து பொதுமைப்படுத்திப் பிறருடன் ஒப்பிடாமல் இருப்பதும் முக்கியம். குழந்தைகளை இயல்பாக விடுவதற்கும் நமது வழிக்குக் கொண்டுவருவதற்கும் இடையே உள்ள சமநிலையை அடைய முடிந்தால் அதுவே நலம்தரும். 
    பள்ளி அட்மிஷனுக்கு முன்பாக, அந்தப் புதிய சூழலுக்கு குழந்தைகள் ஈடுகொடுக்க இயலும் அளவுக்கு அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்.
    இன்றைய குழந்தைகள் இரண்டு வயதிலேயே ப்ளே ஸ்கூலில் சேர்க்கப்படுகின்றனர். இரண்டரை வயது முதல் கேஜி வகுப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பள்ளி அட்மிஷனுக்கு முன்பாக, அந்தப் புதிய சூழலுக்கு அவர்களால் ஈடுகொடுக்க இயலும் அளவுக்கு அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்.

    * பயண தூரம் குறைவாக / வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது நலம். இதனால், அலைச்சல்/அசதியைத் தவிர்க்கலாம்.

    * குழந்தைகளைத் தங்கள் அரவணைப்பில் மட்டுமே வைத்து வளர்க்கும் பெற்றோர், பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக அவர்களை நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என்று சில மணி நேரமாவது அழைத்துச் சென்று, அங்கிருக்கும் பெரியவர்கள், குழந்தைகளுடன் பழகவைக்க வேண்டும்.

    * கிண்டர் கார்டன், கேஜி வகுப்புகளில் குழந்தைகளை மதிய வேளைகளில் சிறிது நேரம் உறங்கவைக்கலாம். எனவே, பள்ளி செல்வதற்கு முன்னர், வீட்டிலும் அவர்களை அதே நேரத்தில் உறங்கவைத்துப் பழக்கலாம்.

    * ஆரம்பத்தில் சில வாரங்களுக்குக் குழந்தைகள் பள்ளி செல்ல மறுத்து அடம்பிடித்து அழுவது இயல்பானதே. அதுவே மாதங்களைக் கடந்தும் அழுகை தொடர்ந்தால், என்ன பிரச்னை என்பதைக் குழந்தையிடமும் பள்ளித் தரப்பிடமும் விசாரிக்க வேண்டும், குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.



    * பென்சில், சாக்பீஸ் உள்ளிட்ட பொருள்களைக் கடிக்கும் மற்றும் சாப்பிடும் பழக்கம் (Pica) சில குழந்தைகளுக்கு இருக்கும். இதை முன்பே சரிசெய்ய வேண்டும். பள்ளித் தரப்பிடம் தெரிவித்துக் குழந்தைக்கு இந்தப் பழக்கம் இருக்கிறதா எனக் கண்காணிக்கச் சொல்லலாம்.

    * தன் பார்வையில் படும் கவர்ச்சிகரமான பொருள்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பது சில குழந்தைகளின் இயல்பு. இந்தப் பழக்கம் பள்ளியில் நிகழ்வது நல்லதல்ல. இதனால், பள்ளியில் சேர்க்கும் சில மாதங்களுக்கு முன்பே, செய்முறையுடன் விளக்கி, ‘இது தவறு’ எனக் குழந்தைக்குப் புரியும்படிப் பெற்றோர் தீர்க்கமாகப் புரியவைக்க வேண்டும்.

    * சில குழந்தைகள் மற்றவர்களை அடிப்பது, கையில் உள்ளதைப் பிறரின் மீது எறிவது என்று மூர்க்கமாக இருப்பார்கள். பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகப் பெற்றோர், கதைகள், தொடர் உரையாடல்கள், தேவைப்பட்டால் கண்டிப்பின் மூலம் இவற்றையெல்லாம் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

    * பசித்தால் சொல்லத் தெரிவது, தானே சுயமாகச் சாப்பிடுவது, சிறுநீர் மற்றும் மலம் வந்தால் பாத்ரூம் சென்று கழிப்பது, சளி வந்தால் கைக்குட்டை கொண்டு துடைத்துக் கொள்வது, சாப்பிடும் முன், பின் கைகளைக் கழுவுவது உள்ளிட்ட அவசியமான பழக்கங்களைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.

    * குழந்தையின் வயதுக்கு ஏற்றாற்போல, பெற்றோரின் மொபைல் எண், வீட்டு முகவரி ஆகியவற்றை மனப்பாடமாகச் சொல்லக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அதேபோல, பெற்றோர் சார்பாக யாராவது தன்னைப் பள்ளியிலோ, வேறெங்கும் வெளியிடத்திலோ வந்து அழைத்தால், அவர்களிடம் பாஸ்வேர்டு சொல்லச் சொல்லிக் கேட்கப் பழக்க வேண்டும். (அந்த பாஸ்வேர்டை, ஏற்கெனவே பெற்றோர் குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்)

    * வாரம் ஒருமுறை நகம் வெட்டுவது, குழந்தைக்குத் தொந்தரவு தராத வகையிலான ஹேர்கட் போன்றவை முக்கியம். பெண் குழந்தைகளுக்கு தொங்கட்டான், ஜிமிக்கி, செயின் போன்ற அணிகலன்கள் விளையாடும்போது/சண்டையிடும்போது இழுக்கப்பட்டு விபரீதமாக வாய்ப்புள்ளது என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
    பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். இந்த பழக்கத்தை மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.
    குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

    மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது.

    பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும்.

    நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும். டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால். தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல் பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

    விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

    விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.

    4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம்.

    குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம். எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். 

    அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.
    மாணவப் பருவம் என்பது தேர்வை எதிர்கொள்வதிலேயே கழியக்கூடாது. வாழ்வை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்படுத்தலாகவும், அதில் வெற்றி பெறுவதற்கான தகுதியை வளர்க்கும் களமாகவும் அமைய வேண்டும்.
    மாணவப் பருவம் என்பது தேர்வை எதிர்கொள்வதிலேயே கழியக்கூடாது. வாழ்வை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்படுத்தலாகவும், அதில் வெற்றி பெறுவதற்கான தகுதியை வளர்க்கும் களமாகவும் அமைய வேண்டும். அந்த வெற்றிக்குத் தேவை விழிப்புணர்வு. விழிப்புடன் இருப்பவர்கள் எப்போதும் தோற்றுப்போவதில்லை. சின்னச்சின்ன சறுக்கல்களும் அவர்களுக்கு வெற்றியை அடையாளம் காட்டி கடந்து செல்லும். நீங்கள் மாணவப் பருவத்தில் விழிப்புடன் செயல்பட கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

    விழிப்புணர்வுதான் வெற்றியின் வித்து. விழிப்புடன் இருப்பது என்பது தூக்கமின்றி இருப்பதல்ல. எதிர்காலம் பற்றிய தெளிவுடன் இருப்பது. ஒவ்வொரு கணத்தையும், நிகழ்வையும் அந்த வெற்றிக்காக தயார்படுத்துவது, பயன்படுத்துவதே விழிப்புணர்வு.

    ஆசிரியர் பாடம் நடத்தும்போதும், வீட்டில் படிக்கும் போதும் அதிகமான கவனத்துடன், விழிப்புடன் இருப்பவர்களே சிறந்த மாணவர்கள். அந்த விழிப்புணர்வே அவர்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்கவும் காரணம். அதே நேரத்தில் அவர்கள் மதிப்பெண் வாங்குவதில் மட்டும் விழிப்புடன் இருப்பது போதாது. ஏனெனில் பள்ளிப்பாடங்கள் மட்டும் வாழ்க்கையாகிவிடாது.

    பள்ளிப்பருவத்தில் சிறப்பாக செயல் படாத எத்தனையோ பேர் பின்னர் வாழ்க்கைப்பாடங்களை கற்றுக் கொண்டு வெற்றி மனிதர்களாக உச்சத்திற்கு சென்றிருக்கிறார்கள். இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் ஒருவர் எப்போது விழிப்புடன் இருக் கிறாரோ, அப்போது அவர் வெற்றி கொள்கிறார் என்பதே. அதாவது பள்ளிப்பருவத்தில் விழிப்புடன், கவனம் சிதறாமல் செயல்பட்டவர்கள் நிறைய மதிப்பெண்கள் பெற்று வெற்றி மாணவராக வலம் வருகிறார்கள். சிலர் அதற்குப் பின்னால் வாழ்க்கையில் விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடைகிறார்கள்.

    நீங்கள் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இருந்தால், நிச்சயம் ஒவ்வொரு நாளும் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது பொருளாகும். உதாரணமாக நீங்கள் எப்போதுமே பள்ளி அடையாள அட்டையை தவறவிடாதவராக, பேனா பென்சில் போன்றவற்றை மறந்துவிட்டு மற்றவர்களிடம் இரவல் வாங்காதவர்களாக வலம் வந்தால் நீங்கள் சின்னச்சின்ன விஷயங்களிலும் விழிப்பாக இருப்பதாக கொள்ளலாம்.

    ஆசிரியர் சொன்ன விஷயங்களை மறந்துவிட்டு தலையைச் சொரிபவர்கள், தண்டனை பெறுபவர்கள், அம்மா மளிகைக் கடைக்குச் சென்றுவரச் செல்லும்போது ஒன்றிரண்டு பொருட்களை மறந்துவிட்டு ஏதேதோ காரணத்தை சொல்லி சமாளிப்பவர்கள், பயணம் கிளம்பும்போது சாவியையும், பணப்பையையும் மறந்துவிட்டுச் செல்பவர்கள், நேரம் தவறிச் சென்றுவிட்டு வாகனத்தை தவற விடுபவர்கள், விழா அரங்கில் அனுமதி மறுக்கப்படுபவர்கள், டிக்கெட் தீர்ந்து தியேட்டர் வரை சென்று திரும்பி வருபவர்கள், கையில் கொண்டு சென்ற பொருட்களை எங்கோ வைத்துவிட்டு வீட்டில் வந்து தேடுபவர்கள் இப்படி இருப்பவர்களெல்லாம் மற்றொரு ரகம். இவர்களை மறதிப் பேர்வழிகள், சோம்பேறிகள், அலட்சியமானவர்கள் என்று எத்தனையோ பேர்களில் அழைத்தாலும் அவர்களுக்கெல்லாம் ஒரே பெயர் விழிப்புணர்வு அற்றவர்கள் என்பதே.

    அவர்கள் அந்த விழிப்புணர்வற்ற நிலையால் எத்தனையோ விஷயங்களை கோட்டை விட்டுவிடுகிறார்கள். ரசிக்க நினைத்த படத்தை ரசிக்க முடிவதில்லை, செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய முடிவதில்லை. இதெல்லாம் தோல்விகள் இல்லை, சாதாரணமான விஷயங்கள்தானே என்று நினைப்பவர்கள்தான் மிகப்பெரிய விஷயங்களிலும் உச்சிவரை சென்றுவிட்டு, இலக்கை அடையும் முன் இடறிவிழுந்துவிடுகிறார்கள். அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொள்வார்கள். விழிப்புடன் செயல்பட்டால் இந்த இன்னல்கள் ஏற்படாது. இதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகள் உண்டு. அவற்றில் ஒரு வரலாற்று நாயகன் விழிப்புணர்வற்ற நிலையில் கண்ட தோல்வியையும், மற்றொரு வரலாற்று நாயகன் பெற்ற வெற்றியையும் இங்கே தெரிந்து கொள்வோம்.

    மாவீரன் நெப்போலியன் பல நாடுகளை வென்றவன். உலகமே வியந்த மாவீரன். வெற்றிகளையே குவித்த நெப்போலியனின், கடைசிக் காலம் சோகமாக கழிந்தது. விழிப்புணர்வு இல்லாததால் அவரது வாழ்க்கை வீணாக தோல்வியில் முடிந்தது. பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறைப்பிடித்து இருந்தது. ஆப்பிரிக்காவில் தனிமை சிறையில் நெப்போலியனை அடைத்து வைத்தனர். எத்தனையோ போர்களில், எத்தனையோ சறுக்கல்களை சமாளித்து வெற்றி வீரராக வலம் வந்த அவரை ‘தனிமைச் சிறை’ தடுமாற வைத்தது. அவர் தப்பிக்க சிறப்பான வாய்ப்பு ஏற்பட்டும், அவர் விழித்துக் கொள்ளாமல் வேதனையில் கிடந்ததால், மாண்டுபோகும் நிலைமை ஏற்பட்டது.

    ஆம், அவர் சிறையில் இருந்தபோது, அவரைப் பார்க்க வந்த ஒரு நண்பர், ஒரு சதுரங்க அட்டையை அவரிடம் கொடுத்தார். “இந்த சதுரங்க அட்டை உங்கள் சிந்தனையைக் கூராக்க உதவும். சிறப்பாக செயல்பட வைக்கும். உங்களது தனிமையைப் போக்கவும் உதவும். இதனை நன்கு பயன்படுத்துங்கள்” என்று சொல்லி சென்றார்.

    தனிமைச்சிறையின் வேதனையால், அவரால் சதுரங்கம் விளையாட முடியவில்லை. அதை வாங்கி மூலையில் போட்டுவிட்டார். கவலையில் சரியாக உண்ணாமல் மனம் வாடி இறுதியில் இறந்தே போனார். ஆனால் அந்த சதுரங்க அட்டையில் அவர் தப்பிக்கும் வழி குறிப்பிடப்பட்டிருந்ததை அவரது மரணத்திற்குப் பின்புதான் அறிந்தார்கள். கவலையில், வேதனையில் அதை உற்றுக் கவனிக்காத காரணத்தால், உலகின் மாவீரன் மரணம் அடைந்தான்.

    ஆனால் விழிப்புடன் செயல்பட்ட சத்ரபதி சிவாஜி, இதுபோன்ற சூழலில் சாதுரியமாக செயல்பட்டு தப்பித்த நிகழ்வையும் நீங்கள் அறியலாம். ஒருமுறை எதிரியிடம் சிக்கிய சிவாஜி, ஆயுதமற்ற நிலையில் புலிநகத்தால் எதிரியை வீழ்த்தியும், சிறையில் அடைபட்டபோது பழக்கூடைக்குள் பதுங்கி தப்பித்தும் சோதனையில் இருந்து வெளியே வந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

    விழிப்புணர்வு என்பது இதுதான், வீரம் உலகையே வெற்றிகாணும் அளவு இருந்தாலும், எந்த நிலையிலும் சோர்ந்துவிடாமல் விழிப்புடன் இருந்திருந்தால் நெப்போலியனும் தப்பித்திருக்கலாம். இன்னும் பல வெற்றிகளை குவித்திருக்கலாம்.

    வாழ்க்கையில் நாள்தோறும் மன அழுத்தமும், பதற்றங்களும் எல்லா மனிதர்களின் வாழ்விலும் வந்துபோகலாம். மாணவர்களான உங்களுக்கும் அது பொருந்தும். அதுபோன்ற சூழலில் விழிப்புணர்வுடன் இருந்தால் வெற்றி பெறலாம். ஆம், எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. விழிப்புடன் இருந்தால் அதை எளிதில் கண்டுபிடிக்கலாம் இல்லையேல் தோல்வியில் துவள வேண்டியிருக்கும். எனவே மாணவர்களுக்குத் தேவை ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வு!
    படிப்பு உள்ளிட்ட இதர நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் குழந்தைகள் வீடு மாற்றம் செய்யும்போது, சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள அதிக சிரமம் அடைகிறார்கள்.
    தற்போதைய காலகட்ட வாழ்க்கை முறைகளில் பணியிட மாற்றம், வாடகை மற்றும் சொந்த வீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பலரும் குடியிருக்கும் வீடுகளை மாற்றம் செய்வதுண்டு. அந்த நிலையில், வளரும் குழந்தைகள் வீடு மாற்றத்திற்கேற்ப தங்களை சீரமைத்துக்கொள்வதில் சிரமம் அடைவதாக மன நல வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    நிம்மதியான வீட்டு சூழல்

    அதாவது, ஒரே இடத்தில் வளரும் குழந்தைகளுக்கு நிம்மதியான வீட்டு சூழலில் பெற்றோருடன் இணைந்து வசிப்பதால் திடமானவர்களாக வளர்கிறார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. அந்த நிலையில் படிப்பு உள்ளிட்ட இதர நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் குழந்தைகள் வீடு மாற்றம் செய்யும்போது, சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள அதிக சிரமம் அடைகிறார்கள்.

    குழந்தைகள் மன நலம்

    நல்ல நட்பு உள்ளிட்ட சுற்றுப்புற தொடர்புகளை உருவாக்கிக்கொள்வதிலும் குழந்தைகள் தடுமாறுகிறார்கள். அதன் காரணமாக வீடு மாறுவது அல்லது புதியதாக வீடு வாங்கி குடியேறுவது போன்ற நிலைகளில் சிறு குழந்தைகளின் மன நலனுக்கு ஏற்ற சூழலை கருத்தில் கொண்டு செயல்படுவதும் அவசியமானது.

    சூழல் அறிமுகம்

    வாடகை வீட்டிலிருந்து புதுவீடு வாங்க முடிவு செய்யும் நிலையில் குழந்தைகளின் படிப்பு, நட்பு வட்டம், செயல்திறன் உள்ளிட்ட பல விஷயங்களை கணக்கில் கொள்வது பெற்றோர்களுக்கு அவசியமானது. அவ்வாறு வீடு வாங்கும் நிலையில் குழந்தைகளின் மனதில் புது வீடு பற்றிய ஆவலை ஏற்படுத்தி, அங்குள்ள சூழலுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பழக்கம் ஏற்படுத்தி பின்னர் குடியேறுவதும் ஒரு வகையில் நல்லது.

    படிப்பு மற்றும் விளையாட்டு

    வாடகை வீடு அல்லது சொந்த வீட்டில் குடியேறும்போது அவற்றின் சுற்றுப்புற சூழ்நிலைகள், குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களது விளையாட்டு மற்றும் வீட்டுக்கு அருகில் பள்ளி ஆகிய விஷயங்களுக்கு ஏற்றதாக அமையவேண்டும்.



    அமரும் சேர்கள்

    குறிப்பாக, வீடுகளில் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற பிரத்யேகமான நாற்காலி, மேசை, ஊஞ்சல் போன்றவற்றை வாங்குவது அவசியமானது. வழக்கமான பர்னிச்சர் வகைகளை விடவும் அவர்களின் உடல் அளவிற்கு பொருத்தமாக பிரம்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட சிறு கூடை சேர்கள் குழந்தைகள் கச்சிதமாக அமர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    குழந்தைகள் ‘டைனிங்’

    பொதுவாக, வீடுகளில் டைனிங் டேபிள் மற்றும் சேர்கள் பெரியவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதனால், குழந்தைகளுக்கான பிரத்யேக டைனிங் சேர்களை பயன்படுத்தலாம். அவை, உயரம் கூடுதலாகவும், அதன் பகுதி குறுகலாகவும் இருப்பதால் அதில் உட்கார்ந்து சாப்பிடும் குழந்தைகள் டேபிளில் வசதியாக சாப்பிடுவார்கள்.

    படிப்பு மேசை

    பொதுவாக, குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக படிப்பு மேஜை இருந்தால் அவர்களின் கவனம் சிதறாது. உட்காரும் சேரிலேயே இணைந்த மேஜை, சேரில் ஒரு பலகை இணைத்து அதன் மேல் புத்தகம் வைத்து கொள்வது போன்ற எளிய மாடல்கள் அவர்களுக்கு ஏற்றது.

    குட்டி ஊஞ்சல்

    சிறு ஊஞ்சல் அல்லது சாய்ந்து ஆடக்கூடிய ராக்கிங் சேர், குட்டியான சைஸ் கொண்ட பீன் பேக், பொம்மை, துணிகள் போன்றவற்றை சுலபமாக வைத்து எடுப்பதற்கு வசதியான அலமாரிகள் வீடுகளில் இருப்பது அவர்களுக்கு குஷியாக இருக்கும். குழந்தைகள் உறங்க வசதியான பங்கர் கட்டில்களும் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
    ×