என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    காலம் பொன்போன்றது என்பதை மாணவர்கள் எந்த நேரத்திலும் நினைத்து செயல்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம். இந்த காலகட்டத்தில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு சில ஆலோசனைகள்.
    உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வருவது ஸ்மார்ட்போன்கள். அவற்றிற்கு அடிமையாகி இருப்பவர்கள் ஏராளம். ஆனால் அதில் இருக்கும் நன்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள மாணவ-மாணவிகள் நேரம் ஒதுக்க வேண்டும். பொழுதை கழிக்கக்கூடிய அம்சங்களில் ஆர்வம் காட்டினால் யாருக்கும் பயனில்லை. காலம் பொன்போன்றது என்பதை மாணவர்கள் எந்த நேரத்திலும் நினைத்து செயல்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம். இந்த காலகட்டத்தில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு சில ஆலோசனைகள்:

    * முடிந்தவரை தகவல் தொடர்புக்காகவும், படிப்புக்கு தேவையான தகவல்களை திரட்டுவதற்கு மட்டும் செல்போன்களை பயன்படுத்துங்கள்.

    * வீடியோ விளையாட்டுகளில் முடங்கிப்போதல், சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடத்தல், நண்பர்களுடனும், தோழிகளுடனும் அரட்டை அடித்தல் போன்றவற்றில் பொழுதை கழிக்கவேண்டாம்.

    * ஒரு நொடி நம்மை கடந்தாலும், அது திரும்ப கிடைக்காது. நாம் கைவிட்ட ஒவ்வொரு மணித்துளிகளும் நம்முடைய பயனுள்ள வாய்ப்புக்கான இழப்பாகும். அதனால் காலவிரயத்தை தவிருங்கள்.

    * பள்ளி, கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்களில் படிப்பு தொடர்பானவற்றில் மனதை செலுத்துங்கள்.

    * விடுமுறை நாட்களில் நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுங்கள். அப்போது கல்வி தொடர்பான நூல்களை படிப்பது அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், பொது அறிவுகளை வளர்த்துக் கொள்ளவும் உதவும்.

    * இந்த காலகட்டத்தில் செல்போன்களிலேயே நாட்டு நடப்புகள் வந்துவிடுகிறது என்பதால் மாணவ-மாணவிகளிடம் பத்திரிகைகள், இதழ்கள் படிக்கும் பழக்கம் குறைந்துவருகிறது. ஆனால் அனைத்து தகவல்களையும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நூலகங்களுக்கு சென்று நாளிதழ்களை கற்பதே நலம்.

    * படிக்கும் பாடத்தை தவிர்த்து பொது அறிவு, வரலாறு, அரசியல், விளையாட்டு, சமூக நிகழ்வுகள், தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கற்கவேண்டும். இது சிவில் சர்வீசஸ் தேர்வு, பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகள் எழுதும்போது மிகுந்த பயனளிக்கும். இதற்கு வெறும் செல்போனால் மட்டும் பயன்பெற்றுவிடமுடியாது. கண்டிப்பாக நூல்கள், நாளிதழ்களை கற்க வேண்டும்.

    * எல்லா படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, தேசிய தகுதிகாண் தேர்வு என்று வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி படிப்பு மட்டும் அதற்கு உதவிவிடாது. அதற்கு தேவையான பயிற்சி பெறுவதிலும் ஆர்வம் கொள்ள வேண்டும்.

    * வெற்றிக்கான இலக்கை முதலில் மனதில் நிறுத்தி, அதை அடைவதற்கு தேவையான நேரம், முயற்சி, உழைப்பு ஆகியவற்றை இந்த மாணவ பருவத்தில் சரியாக கொடுத்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 
    வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் ‘மட்டம்’ போட்டுவிட்டு நண்பர்கள், தோழிகளுடன் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என ஊர் சுற்றுவதையே மாணவ பருவத்தில் செய்ய வேண்டும் என்று தவறான நினைப்புடன் இருந்து தங்களது வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள்.
    மாணவ பருவம் என்பது மகிழ்ச்சியான பருவம், மகத்துவம் நிறைந்த பருவம். தான் நினைத்ததை சாதிக்கும் பருவம். கல்வி, விளையாட்டு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் என்று எதிலும் சாதிக்கக்கூடிய தன்னம்பிக்கை நிறைந்த பருவம். இந்த பருவத்தில் சாதிக்க நினைக்கும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் உண்டு. ஆனால் பல மாணவ-மாணவிகள் இந்த பருவத்தை ஏதோ, ஜாலியாக இருக்க வேண்டிய தருணம் என நினைத்து விடுகிறார்கள்.

    வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் ‘மட்டம்’ போட்டுவிட்டு நண்பர்கள், தோழிகளுடன் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என ஊர் சுற்றுவதையே மாணவ பருவத்தில் செய்ய வேண்டும் என்று தவறான நினைப்புடன் இருந்து தங்களது வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள். இது கல்லூரி அளவில் என்று மட்டுமல்ல... பள்ளி மாணவ-மாணவிகளிடமும் இந்த மோகம் அதிகரித்துவிட்டது.

    அதனால்தான் பள்ளி, கல்லூரி வேலை நாட்களில்கூட சீருடை அணிந்த பல மாணவ-மாணவிகள் சுற்றுலா இடங்களிலும், தியேட்டர்களிலும் கண்களில் தென்படுகிறார்கள். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கல்விச்சாலையில் திறம்பட பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டு இருப்பதுதான் வேதனைக்குரியது.

    அவ்வாறு மாணவ பருவத்து வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறிக்கொண்டு பல மாணவர்கள் சிகரெட், புகையிலை, மதுப்பழக்கம் என்று உயிர்க்கொல்லிகளுக்கு அடிமையாகி தங்களது உடலையும், வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்கிறார்கள். பல சமயங்களில் மாணவர்கள், ஏன்..? மாணவிகள்கூட மது குடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுவது இதற்கு சான்று. மதுக்கடைகளுக்கு மது வாங்க வரும் மாணவர்கள் மத்தியில் கேட்டால், மதுப்பழக்கம் என்பது எங்களிடம் நிரந்தரமாக இருப்பதில்லை. ஏதாவது விழா, விருந்து என்றால் மட்டுமே அது இருக்கும் என்று அதற்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.

    மது அரக்கன்

    மது அரக்கன் என்பவன் தன்னை பிடித்தவர்களை அவ்வளவு சுலபமாக விட்டுவிடுவானா? ஒருபோதும் கிடையாது. குடிப்பழக்கத்தில் வீழ்பவர்களின் எண்ணிக்கையைவிட, அதில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அப்படியிருக்கும்போது தற்போதைய மாணவ சமுதாயம் அதை நோக்கி செல்வது, அவர்களுக்கு மட்டுமல்ல... நாட்டின் எதிர்காலத்திற்கே கேடு விளைவிப்பது ஆகும். இதை கருத்தில் கொண்டுதான் கேரளாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டது. அத்தகையதுபோன்று தமிழகத்திலும் வந்தால் மதுக்கடைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கும்.

    இதுஒருபுறமிருக்க மாணவர்கள் மத்தியில் மற்றொரு போதையாக ராகிங் உள்ளது. கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள், ஜூனியர்களை ராகிங் செய்வது சென்னை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களில் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கல்லூரிகளில் மாணவர்கள் செய்யும் ராகிங் கொஞ்சம் வெட்டவெளிச்சமாகிறது என்றால், மாணவிகளின் ராகிங் விடுதிகளில் அவ்வப்போது அரங்கேறுகிறது. பல கல்லூரி நிர்வாகங்கள் ராகிங் பிரச்சினைக்கு தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளை இடைநீக்கம் செய்துவிடுகின்றன.

    ஆனால் பெரும் பணக்காரர்களின் வாரிசுகள் படிக்கும் ‘சர்வதேச’ தர கல்லூரிகளில் ராகிங் பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதன் விளைவு ராகிங்கினால் பாதிக்கப்படும் சில மாணவர்களின் உயிரை கூட தற்கொலை என்ற பெயரில் பறித்துவிடுகிறது. சென்னையில் ஒரு சில கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் தற்கொலைகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

    மோதல்

    அதேபோல் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரிவினைகள் அடிக்கடி மோதலாக வெடிப்பதும் கல்லூரிகளில் நடக்கின்றன. அதற்கு ஒரு உதாரணம்தான் சென்னையில் சமீபத்தில் நடந்த ‘ரூட் தல’ பிரச்சினை. இரு தரப்பு மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் ஒருவரையொருவர் விரட்டி தாக்கிக் கொண்ட காட்சிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களை கலங்க வைத்தன.

    இந்த கலாசாரம் தலைநகரத்தோடு நின்றுவிடவில்லை. திருச்சி பிராட்டியூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியிலும் சில நாட்களுக்கு முன்பு இறுதியாண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடையே மோதல் சம்பவம் நடந்தது. இதில் இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கம்புகள், உருட்டுக் கட்டைகள், பீர் பாட்டிலால் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் திருச்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது அடங்குவதற்குள் திருச்சியில் மற்றொரு பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. திருச்சி துவாக்குடியில் உள்ள மத்திய அரசு கல்லூரி மாணவி ஒருவர் விடுதியில் இருந்து தனது காதலன் ஒருவருடன் வெளியேறி சில நாட்களாக அவருடன் சுற்றி உள்ளார். அப்படி வந்த இடத்தில் போலி போலீஸ்காரர் மணிகண்டன் என்பவர் அந்த காதலனை தாக்கிவிட்டு, மாணவியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கற்பழித்துள்ளார். பெற்றோர்களின் நெஞ்சை பதை,பதைக்க செய்யும் இந்த சம்பவம் திருச்சி மாநகருக்கே ஒரு கரும்புள்ளியாகி இருக்கிறது.

    ஒரு மாணவி தான் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து வார்டனுக்கு தெரியாமல் எப்படி வெளியேற முடியும்? அப்படியே வார்டனின் அனுமதி பெற்று வெளியே வந்தால்கூட அன்றைய தினமே இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்துவிடவேண்டுமே? இரண்டொரு தினங்கள் விடுதிக்கே வராமல் எப்படி இருக்க முடியும்? கற்பழிப்புக்கு ஆளான அந்த மாணவியை விடுதி பொறுப்பாளர்கள் யாருமே கண்காணிக்க வில்லையா? அல்லது அங்கும் லஞ்சம் புகுந்து தனது வேலையை காண்பித்துவிட்டதா? என்பன போன்ற பல கேள்விகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தலைநகரமாம் சென்னை கலாசாரத்தைபோன்று திருச்சி மாறிவிட்டதா? என்ற ஐயப்பாடு பெற்றோர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. மாணவர்களின் பாதை கல்வி என்பதை விட்டு, வேறு திசைக்கு மாறிவிட்டதோ என்று பெற்றோர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்படுவதை இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு காவல்துறை, கல்லூரி நிர்வாகங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    கல்லூரி நிர்வாகங்களை பொறுத்தவரை மாணவ-மாணவிகளுக்கு கல்வியை மட்டும் கற்றுத்தருவது மட்டுமின்றி, சமுதாய பிரச்சினைகள், வாழ்க்கை முறைகள், நன்னெறி ஒழுக்கங்கள் போன்ற அவசிய தேவைகளையும் கற்றுத்தரவேண்டும். வெறும் கல்வி மட்டும் ஒரு மனிதனை சிறந்தவனாக்கிவிடாது. கல்வியோடு சிறந்த நாகரிகம், உயர்ந்த பண்பாடு, தெளிந்த சிந்தனைகள் போன்றவையும் இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தை காண முடியும். மாணவர்கள் கல்விப்பாதையில் இருந்து விலகுவதாக தெரியவரும்பட்சத்தில் அவர்களின் பெற்றோரை அழைத்து தெரியப்படுத்தி அவர்களை நல்வழிகாட்ட கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும். ஆனால் இதை பெரும்பாலான நிறுவனங்கள் செய்வதில்லை. அதேபோல் கல்வி நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க காவல்துறையும் அவ்வப்போது கல்வி நிறுவனங்களில் கூட்டங்கள் நடத்தி தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். ஏதாவது பிரச்சினைகள், மாணவர்களிடையே மோதல் வரும் சூழல் தெரியவந்தால் அதுபற்றி முன்கூட்டியே காவல்துறைக்கு கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். பிரச்சினைக்குரிய மாணவர்கள் என்று யாராவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பெற்றோர், கல்லூரி நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கவுன்சிலிங் வழங்க வேண்டும்.

    நல்லொழுக்கம்

    இவற்றிற்கெல்லாம் மேலாக மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோருக்கும் பெரும் கடமை உண்டு. அவர்களுக்கு நல்லொழுக்கங்களை பெற்றோர்கள் சொல்லித்தந்து வளர்க்கவேண்டும். தங்களது பிள்ளைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு முறையாக செல்கிறார்களா? படிப்பில் கவனம் செலுத்துகிறார்களா? என்பன போன்ற பல விஷயங்களை சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள், முதல்வர்களை அவ்வப்போது சந்தித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பில் இருந்து விலகிச் செல்வதைப்போல் தெரிந்தால் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு நல் ஆலோசனைகள் வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றால் இதயமே மாணவ சமுதாயம் என்று சொன்னால் மிகையாகாது. இன்றைய மாணவர்கள் நாளைய பாரதத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக இருப்பவர்கள்.

    அந்த தூண்களில் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், சட்டமேதைகள், சிறந்த அரசியல் வாதிகள், சாதனையாளர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதற்கு இப்போதைய மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
    விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் மாணவர்களே படிப்பிலும் பல தனித்திறமைகளிலும் சிறந்து விளங்கி எதிர்கால வாழ்விலும் சாதனையாளராக முன்னேற்றம் அடைகின்றனர்.
    கூட்டுக்குடும்ப வாழ்க்கை அஸ்தமனமாகி, தனிக்குடுத்தன வாழ்க்கை உதயமானபின், அடுக்குமாடி குடியிருப்புகளாகி விட்ட நகர வாழ்க்கையில் குழந்தைகள் தினசரி வெளியில் சென்று விளையாடுவதே அரிதாகி விட்டது. நகரங்களில் தான் இத்தகைய நிலை என்றால் கிராமங்களிலும் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை பார்க்க முடிவதில்லை.

    கையில் மொபைல் போனுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதன் விளைவாக உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்கள் இளம்வயதிலேயே வந்துவிடுகிறது. இந்தியாவில் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிக்குழந்தைகள் உடல்பருமனால் அவதிபடுகின்றனர். உண்ணும் உணவுமுறைகளில் ஆரோக்கிய குறைபாடுகள் ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது குறைந்ததே இதற்கு காரணம். கணினி மற்றும் மொபைல் போனில் அதிக நேரம் செலவிடுவதால் விடுமுறை நாட்களில் கூட வீட்டிலேயே சிறார்கள் சிறைபடுகின்றனர்.

    விளையாட்டு உடலுக்கு தேவையான ஆரோக்கியம் தருவதோடு மனதிற்கும் புத்துணர்ச்சி தருகிறது. இன்றைய உலகில் வெற்றிகரமாக ஜொலிக்கும் தொழில் அதிபர்கள் தங்களை பற்றிய நேர்காணலில் “தன் சிறுவயதில் ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபாட்டுடன் விளையாடியதாக” தெரிவிக்கின்றனர். விளையாட்டுக்கும் மன உறுதிக்கும் நேரடி தொடர்பு உள்ளது என பல உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் மாணவர்களே படிப்பிலும் பல தனித்திறமைகளிலும் சிறந்து விளங்கி எதிர்கால வாழ்விலும் சாதனையாளராக முன்னேற்றம் அடைகின்றனர். நவீன தொழில்நுட்பங்களின் தாக்கத்தால் வெளியில் சென்று விளையாடும் விளையாட்டுகள் மட்டுமின்றி வீட்டிலேயே சிறுக்குழுக்களாக விளையாடும் விளையாட்டுகளும் தற்போது குறைந்துகொண்டே வருகின்றன.

    அறிவுக்கூர்மையை சோதிக்கும் இந்தியாவில் உருவான விளையாட்டான சதுரங்க விளையாட்டும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒருநபர் மட்டுமே கணினியுடன் மோதும் விளையாட்டாக மாறிப்போனது. குழு விளையாட்டுகளான கிரிக்கெட், கால்பந்து போன்றவைகளும் மொபைல் திரையிலேயே செயலிகளாக வந்துவிட்டன.

    இன்றைய நவீன தொழில்நுட்பம் மனிதனை நோய்களிலிருந்து பாதுகாப்பதை விட நோய்களுக்கே காரணமாக மாறிவருவது மறுக்க முடியாத உண்மை. வசதி படைத்தவர்கள் தங்கள் பணத்தை கிளப், ஜிம் போன்ற இடங்களில் கொட்டி உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்கி தங்கள் ஆரோக்கியம் காக்கின்றனர். ஏழைகளுக்கு இங்கு செல்வதெல்லாம் இயலாது. ஆனால் ஏழைகள் கடினமாக உழைக்கின்றனர். இந்த கடின உடல் உழைப்பே ஏழைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இன்றைய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் அகோர பணப்பசிக்கு இரையாவது நடுத்தர வர்க்க மக்களின் ஆரோக்கியமே.

    இதற்கு என்ன தான் தீர்வு என நினைக்கும்போது, பாம்பின் விஷத்தை வைத்தே பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து தயாரிப்பது போல, ஆரோக்கியத்தை கெடுக்கும் இத்தகைய தொழில்நுட்பத்தை வைத்து ஆரோக்கியத்தை காக்கவும் தொழில்நுட்பம் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. இது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்று.

    வீட்டிலேயே நடைபயிற்சி செய்யும் உபகரணங்களில் ஆரம்பித்து வெளியில் நடைபயிற்சி செய்தால் எவ்வளவு தூரம் நடந்தோம், எந்த திசையில் நடந்தோம், நடக்கும்போது நம் இதயம் எத்தனை முறை துடித்தது, எவ்வளவு கலோரிகள் குறைந்தது என்ற தகவல்களை செல்போன் திரையில் பார்க்கக்கூடிய வசதிகள் தற்போது வந்துவிட்டன. சர்வதேச விளையாட்டுகளில் நடுவர்கள் துல்லியமாக முடிவெடுக்க தொழில்நுட்பத்தின் உதவியை நாடுகின்றனர். உலகத்தில் எங்கோ நடக்கும் விளையாட்டை திரையில் பார்ப்பது மட்டுமல்லாமல் நேரில் சென்று பார்க்கும் அனுபவத்தையும் வெர்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது.

    ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் ஆரம்பித்து அவர்கள் அணியும் ஆடைகளிலும் சென்சார் போன்ற உயர் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மூங்கிலை வைத்து நீளம் தாண்டும் போட்டியில் மூங்கிலுக்கு பதிலாக நைலான் பைபர் இழைகளால் ஆன கம்பங்கள் பயன்படுத்தி வருவது விளையாட்டு துறையில் எந்திரப் பொறியியலின் பங்களிப்பே. இது நம் அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் ஒரு ஆரோக்கியமான தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.

    விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களின் ஆரோக்கியம் மேம்படவும் உலக அளவில் பல ஆராய்ச்சிகள் ஆங்காங்கே நடந்துவருகின்றன. இதற்காக பல சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்கள் ஒன்றிணைந்து குழுக்களாக அசோசியேசன்களை ஏற்படுத்தி அவசியமான தொழில்நுட்பங்களை பற்றி விவாதித்து வருகின்றனர்.

    சர்வதேச அளவில் பல ஆராய்ச்சி பயிலரங்கம் நடத்தி விளையாட்டில் தொழில்நுட்பத்திற்கான பங்கை அதிகரித்து வருகின்றனர். இந்தியாவிலும் டிஜிஸ்போர்ட்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் இந்திய இளைஞர்களின் தொழில்நுட்ப திறமையை வெளிக்கொணர பயிலரங்கம், சொற்பொழிவு போன்றவற்றை கன்னியாகுமரி போன்ற சுற்றுலா இடங்களில் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மருத்துவர்கள், சத்துணவு நிபுணர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் விளையாட்டு வீரர்களை தினசரி கண்காணித்து ஆலோசனை கூறி ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதேபோல இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப உதவியால் பயிற்சியின்போதே விளையாட்டு வீரர்கள் நுட்பமாக கண்காணிக்கப்பட்டு அவர்களின் திறனை மேம்படுத்தி வெற்றியை பெறுமாறு செய்யலாம். இந்தியா போன்ற நாடுகளில் பொறியியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் விளையாட்டு துறைக்கு தேவையான தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்கான நேரத்திற்கு வந்துவிட்டோம்.

    இந்தியர்களுக்கு இயற்கையாகவே கிரேட்டிவிட்டி எனும் ஆக்கத்திறன் அதிகம் உள்ளது. இந்த தனித்திறமையை விளையாட்டை மேம்படுத்தும் சிந்தனையிலும் நேரம் செலவழிக்க ஆரம்பித்தால் சுய முன்னேற்றம் ஏற்படுவதோடு வேலைவாய்ப்பு வசதிகளையும் பெருக்கலாம். பொறியியலில் மின்னணு வகை பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி மெக்கானிக்கல், உயிரியியல் மற்றும் கட்டிட பொறியியல் வல்லுநர்களும் விளையாட்டுத்துறைக்கும், அதனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் மேலான பங்களிப்பை விரும்பி கொடுக்கலாம்.

    ரா.ராஜ்குமார், துணை பேராசிரியர், தனியார் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னை.
    ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு அதன் உணவு முறை மிக முக்கியமானது. 2 வயது வரை குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
    ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு அதன் உணவு முறை மிக முக்கியமானது. குழந்தையின் முதல் ஐந்து வருடங்கள் மிக முக்கியமான காலகட்டமாகும். அதிகவேகமான வளர்ச்சி முதல் 2-3 வருடங்களில் இருப்பதால் அது இன்னும் முக்கியத்துவமானது. மேலும் இந்த வயதில் குழந்தைகள் பெற்றோரை நம்பி இருப்பதால் இது முக்கியத்துவமானது.

    முதல் ஆறு மாதம்

    முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் தவிர மற்ற திர, திடவ உணவுகள் முதல் ஆறு மாதத்திற்கு கொடுக்கக் கூடாது. தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. குழந்தை நோய் வாய்ப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது.

    குழந்தை தாய்ப்பால் சப்பி குடிக்க குடிக்கத் தான் தாய்ப்பாலே உற்பத்தி ஆகும். தாய்ப்பால் இல்லை என தவறாக கற்பனை செய்து குழந்தைக்கு தாய்பால் கொடுக்காமல் நிறுத்தினால் தாய்ப்பால் உற்பத்தி ஆவதும் குறைந்துவிடும்.

    ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை

    ஆறு மாதம் முடிந்த பின்னும் தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இனி சிறிது சிறிதாக மற்ற ஆகாரங்களும் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு ஆகாரங்களாக ஆரம்பிக்க வேண்டும். அதாவது ஒரு உணவு ஆரம்பித்து ஒரு வாரமாவது ஆன பின் தான் அடுத்த உணவை கொடுத்து பழக்க வேண்டும். மாதுளை, ஆரஞ்சு சாறு கொடுக்கலாம். ஆப்பிளை மிக்சியில் அடித்து கொடுக்கலாம்.

    ஆப்பிளை வேக வைத்து கொடுத்தால் அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் போய் விடும். மசித்த இட்லி, இடியாப்பம், வேக வைத்த மசித்த காய்கறிகள் (உருளைக் கிழங்கு, கேரட்) கொடுக்கலாம். வாழைப்பழம், சப்போட்டா மசித்து கொடுக்கலாம். ஒவ்வொரு முறை உணவு ஊட்டும் போதும் தாய் தனது கையை சோப்பு போட்டு கழுவி விட்டு தான் உணவு ஊட்ட வேண்டும்.

    எட்டு மாதத்திற்கு பின் முட்டை, பருப்பு சாதம், கீரை சாதம், நெய் சாதம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டும்.

    பாட்டிலில் தண்ணீரை அடைத்து ரப்பர் மூலம் கொடுக்காமல், சிறிய கரண்டி மூலமோ அல்லது டம்ளர் மூலமோ தண்ணீர் கொடுத்து பழக்குவது நல்லது.

    ஒரு வயதுக்கு மேல்


    குழந்தை விரும்பும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் உண்ணும் உணவையே இனி கொஞ்சம் கொஞ்சமாக பழக்கலாம். தாய் தனது கையையும், குழந்தையின் கையையும் சோப்பு போட்டு கழுவிய பின்பே உணவு கொடுக்க வேண்டும். இந்த வயதில் தன் உணவை தானே எடுத்து சாப்பிட குழந்தையை பழக்க வேண்டும் முடிந்த வரை ஊட்டக் கூடாது.

    இரண்டு வயதுக்கு மேல்

    பசும் பால் கொடுத்தால் தண்ணீர் சேர்க்காத பாலே கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுக்க வேண்டும். நாம் சாப்பிடுவது போல் முட்டை, பழங்கள் உணவில் சேர்க்க வேண்டும். சாப்பிடு வதற்கு முன் கைகளை சோப்பு போட்டு கழுவி விட்டு சாப்பிட பழக்க வேண்டும்.

    எந்த உணவையும் தயார் செய்த இரண்டு மணி நேரத்தில் கொடுத்து விட வேண்டும். உணவுகளை பிரிஜ்ஜில் வைத்தால் ஒரு நாளைக்கு மேல் வைக்கக்கூடாது.

    பசும் பால், பழச்சாறு கொடுத்தால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்பது கட்டுக்கதை. இது தவறு பால் மற்றும் பழங்களால் சளி ஏற்படுவதில்லை.

    மூன்று வயதுக்கு கீழ் தவிர்க்க வேண்டிய உணவுகள்

    மசிக்காத கேரட், வருத்த பயறு, நிலக்கடலை வகைகள், பயறு, பருப்பு வகைகள், பாப்கார்ன், வலுவான சாக்லெட் துண்டுகள், முழு திராட்சைப் பழங்கள். ஏனெனில் இவை குழந்தைகள் சாப்பிடும் போது புரையேறி தொண்டை மூச் சுக்குழாயை அடைக்க வாய்ப்பு உள்ளது.

    குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
    குழந்தை நடக்க ஆரம்பித்ததுமே ஷூக்களை மாட்டிவிட்டு அழகு பார்க்கிறோம். கீச்… கீச்… என்று அதிலிருந்து ஒலியை கேட்டு குழந்தைகளும் குதூகலிக்கிறார்கள். ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம்.

    ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

    ‘வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது. விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.

    அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry, Barefoot babies result in Smarter Children என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி. வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது. சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
    ‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ, மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம், வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக் கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
    பெற்றோர்கள் குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்கின்றனர் என்பதற்காகவே குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம்.
    தற்போதைய வாழ்க்கைமுறையில் ஆண்ட்ராய்டு போன் இல்லாத குடும்பமே இல்லை. இன்றைய தலைமுறை குழந்தைகள் அனைத்தும் செல்போன்களுக்கு அடிமையாக உள்ளனர். பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்கின்றனர் என்பதற்காகவே குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கின்றனர்.

    குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனில் வீடியோ பார்ப்பதால், பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இன்றைய தலைமுறையில் பிறக்கும் குழந்தைகள் பேசுவதற்கு ரொம்ப தாமதம் ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் மொபைலில் வீடியோ பார்ப்பது தான்.

    குழந்தைகள் வீடியோ பார்ப்பதால், கற்றல் திறனும் குறைகிறது. குழந்தைகள் நீண்டநேரம் வீடியோவில் நேரத்தை செலவிடுவதால் வீட்டில் உள்ள உறுப்பினர்களிடம் சரியாக பழக மாட்டார்கள். எப்பொழுதுமே குனிந்துகொண்டு வீடியோ பார்ப்பதால் விரைவில் கழுத்துவலி ஏற்படும்.

    குழந்தை வயதிலேயே வீடியோ பார்ப்பதால், வயதானபிறகு தண்டுவடம் பாதிக்கப்படும். குழந்தைகள் வீடியோ பார்ப்பதை ஆரம்பத்திலே தடுத்துவிட்டால் மேற்கொண்ட பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை தவிர்க்கலாம். ஆரம்பத்திலே குழந்தைகளிடம் நீண்ட நேரம் செலவிடுங்கள். தங்களின் சுயநலத்திற்காக குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டு அவர்களின் எதிர்காலத்தை வீணாக்காதீர்கள்.
    குட்டீஸ்... உங்களுக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள்? நல்ல நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியும், உயர்வும் நிச்சயம் கிடைக்கும்.
    குட்டீஸ்... உங்களுக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள்? உங்கள் செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டி, அம்மா, அப்பா, பள்ளியில் அவள், அவன் என்று ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்களா? அப்படியானால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். நல்ல நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியும், உயர்வும் நிச்சயம் கிடைக்கும். உலகில் சிறந்த உறவு முறைகளில் நட்புக்கு முக்கிய இடம் உண்டு. நட்பை பெருமைப்படுத்துவதற்காக ஒரு தினம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆம், நண்பர்கள் தினமான அது ஆகஸ்டு முதல் ஞாயிறு (வரும் 4-ந்தேதி) வருகிறது. இந்த நண்பர்கள் தினத்தில் நாம் நட்பின் பெருமை பற்றி சிறிது பேசுவோமா...

    நட்புறவு வாழ்க்கைக்கு முக்கியமானது. பிறந்த குழந்தைகள் 9 மாதம் ஆகிவிட்டால் அவர்கள் மற்றவர்களின் நட்புறவை நாடுவார்கள். நட்பை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்கிறது ஆராய்ச்சி. அவர்கள் தன்னுடன் பழகும் சகோதரன் சகோதரி மற்றும் பிற குழந்தைகளுடன் நட்புறவாக பழகுவதும், அவர்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை அறிந்து வைத்துக் கொள்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

    நட்புறவு என்பது நமது மனநலன், உடல்நலனில் சிறந்த விளைவுகளை உருவாக்குவதாகவும் ஆய்வு சொல்கிறது. நிறைய நண்பர்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுள் பெறுகிறார்களாம். நண்பர்கள் மன அழுத்தங்கள், கவலைகளைப் போக்குவதில் பங்கெடுப்பதால் நம் மகிழ்ச்சி அதிகரித்து ஆயுளும் கூடுவதாக சொல்கிறார்கள். நண்பர்களுடன் கூட்டாக இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

    சில நேரங்களில் நண்பர் குழுவில் இருந்து வெளியேறி தன்னை ஈர்ப்புடையவராக, சிறந்தவராக காட்டிக் கொள்ள முற்படுவோம். இதற்கு “மகிழ்ச்சியான தலைமை விளைவு” என்று பெயர். அதாவது குழுவில் உள்ளவர்களின் பார்வை அல்லது சிந்தனை தன்னைப் பற்றியும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் வெளியேற்றத்திற்கான காரணமாகும் என்கிறது ஆய்வு.

    நட்பு வட்டாரமானது 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேய்ந்து, மலர்வதாக தெரிகிறது. அதாவது சிறந்த நட்பாக இருப்பவர்களின் உறவு, 7 ஆண்டுகால தொடர் நட்புக்குப் பின்பு சரிவு காண்பதும், பின்னர் புதிய நட்பு வட்டாரம் ஒன்று உருவாவதும், அடுத்த 7 ஆண்டில் அதிலும் பாதிக்கு மேலான நட்புறவுகள் சிதைவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    பிள்ளைகளே நட்பால் உயர்வோம்

    மனிதர்களைவிட விலங்குகள் சிறந்த நட்புறவாக திகழும் என்கிறது ஒரு ஆய்வு. அதனால்தான் குழந்தைகளான உங்களுக்கு மற்ற பிள்ளைகளைவிட பொம்மைகள், விலங்குகள் முதலில் நண்பர்களாகிவிடுகிறார்கள். அவற்றிடம் பாசம் வைத்தால் அவை நம்மை ஏமாற்றாமல், எதிர்பார்க்காமல் அன்பை வெளிப்படுத்தும் என்பது உண்மையே. நாய், பூனை, ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் தங்களை வளர்ப்பவர்களுடன் நெருக்கமான பாசம் காட்டுவதை நாம் அறிவோம்.

    விலங்குகளும் நட்புறவு பேணும். மனித குரங்குகள், பபூன் குரங்குகள், செந்நாய், யானைகள், டால்பின்கள், குதிரைகள், வவ்வால்கள் போன்றவை தங்களுக்குள் மிகுந்த நட்புறவுடன் பழகுகின்றன.

    நம்முடன் நெருங்கிய குண ஒற்றுமை, மரபணு ஒற்றுமை கொண்டவர்களுடன்தான் நம்மால் நட்புறவு பேண முடியும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. மற்றவர்களுடன் நாம் வலிந்து நட்புறவு ஏற்படுத்தினாலும் அவை நிலைப்பதில்லை. அவ்வப்போது கருத்து வேறுபாடுகளால் முட்டி மோதிக்கொள்ள வேண்டியது வரும்.

    உங்களால் எவ்வளவு நண்பர்களைப் பெற முடியும் என்றும் ஒரு ஆய்வு மதிப்பிட்டுக் கூறுகிறது. அதிகபட்சம் 396 நண்பர்களை நீங்கள் பெற்றுவிட முடியுமாம், ஆனால் அவர்களில் வெகு சொற்பமாக 36 பேர்தான் உண்மையான நட்புறவுடன் இருப்பார்கள். அதாவது நான்கில் ஒருவர்தான் நல்ல நட்புடன் பழகுவார். மற்றவர்கள் தேவை கருதியோ, சூழல் கருதியோ நட்பை தொடர்வார்கள் என்கிறது அந்த ஆய்வு.

    உங்களுக்கு சிறந்த நண்பர்கள் இருக்கிறார்களா? அவர்கள் உங்களுக்கு எப்போதும் கைகொடுப்பார்களா? நீங்களும் அவர்களின் தேவைக்கும், நட்புக்கும் கைகொடுத்து வாழ்வில் சிறந்த உயரங்களை எட்டுங்கள். மகிழ்ச்சி கொள்ளுங்கள்!
    பல குழந்தைகளின் தாய், தந்தையர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் பள்ளி, கல்லூரி முடித்து வரும்போது அப்பிள்ளைகளை வரவேற்கவோ, அன்புடன் பேசிச் சிற்றுண்டி தருவதற்கோ யாரும் இன்றித் தனிமைக்குள் தள்ளப்படுகிறார்கள்.
    சொன்ன சொல் தவறாமல் கேட்கும் என் பிள்ளைகள் பதின்மூன்று வயதில் எப்படி மாறினார்கள்? ஏன் மாறினார்கள்? அன்று அன்பொழுக வகுப்பில் நடந்தவற்றை எல்லாம் சொல்லி சொல்லி மடியில் தலைவைத்துத் தூங்கிய பிள்ளைகள் இன்று ஏன் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிறார்கள் என்ற வருத்தம் தோய்ந்த கேள்வி எழுகிறதா? பதின்மூன்று வயதிலிருந்து பத்தொன்பது வயது வரை உள்ள குழந்தைப் பருவத்தையே பதின்பருவம் என்றும் வளரிளம் பருவம் என்றும் அழைக்கிறோம். ஆண், பெண் பிள்ளைகளிடம் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மாற்றம் நடப்பது இக்காலகட்டத்தில்.

    அந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைப் பதற்றத்துடனும், பயத்துடனும் எதிர்கொள்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் பதினொன்றாம் வகுப்புப் பொதுத்தேர்வையும் பிளஸ்-2 அரசுப்பொதுத்தேர்வையும் எதிர்கொள்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாய் அமையும் உயர்கல்விக்காகக் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களைக் கலக்கமுறச் செய்கின்றன.

    அதுவரை குழந்தைகளாய் இருந்த தங்களை அவர்கள் பெரியோராக மெல்லமெல்ல உணரத்தொடங்குகிறார்கள். எதிர்பாலினங்களின் மேல் வரும் ஈர்ப்பை அவர்கள் காதல் என்று தவறாகப் புரிந்துகொண்டு சொல்லமுடியாத தீராத மனவலிக்கு ஆளாகிறார்கள். தங்களின் மன உடல் மாற்றத்தைத் தங்கள் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூச்சப்பட்டு நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.

    அவர்களின் உலகம் என்னும் புரியாத புதிருக்குள் நுழையும் வழியறியாமல் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். கூட்டுப் பறவைகளாய் அதுவரை வீட்டிற்குள் வளர்ந்த குழந்தைகள் பொதுவெளிக்கு வரவிரும்புகிறார்கள், அவர்களின் உளவியல் உடலியல் சிக்கல்களைச் சரியாகப் புரிந்துகொண்டு அவர்களைச் சரியாக வழிநடத்தத் தவறினால் அவர்களின் எதிர்காலமே பாழாகும் நிலை ஏற்படலாம்.

    பெற்றோர்களின், ஆசிரியர்களின், சமூகத்தின் கட்டுப்பாடுகளைக்கண்டு எரிச்சலடைந்து எதிர்வினை புரிகிறார்கள். சுதந்திரமாய் நாலுபேரோடு பேசிப் பழக விரும்புகிறார்கள், தடுக்கும் பெற்றோர்களை எதிர்க்கவும் எடுத்தெறிந்து பேசவும் துணிகிறார்கள். தங்கள் உடலைக் கொண்டாடத் தொடங்கி கண்ணாடிமுன் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். லட்சரூபாய் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் பறக்கத்தொடங்குகிறார்கள். சில பிள்ளைகள் மன அழுத்தத்தால் மதுப்பழக்கம், போதைப்பழக்கம் போன்றவற்றிற்கு ஆளாகிறார்கள்.

    அவர்களின் கவனம் எதிர்காலத்திலிருந்து திசைமாறி வேறுதிசை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறது. எப்போதும் தனிமை, வெறுமை, இறுக்கம் போன்றவற்றிற்கு ஆட்படுகிறார்கள். அந்தக் காலத்தில்தான் வைரத்தை வாசலில் எறிந்துவிட்டு கூழாங்கற்களை அவர்கள் கையில் ஏந்திக்கொண்டிருப்பதாய் சமூகம் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசத் தொடங்குகிறது.

    பதின்பருவத்துக் குழந்தைகள் அன்புக்கும் தங்கள் பெற்றோர்களின் அங்கீகாரத்திற்கும் ஏங்குகிறார்கள். பல குழந்தைகளின் தாய், தந்தையர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் பள்ளி, கல்லூரி முடித்து வரும்போது அப்பிள்ளைகளை வரவேற்கவோ, அன்புடன் பேசிச் சிற்றுண்டி தருவதற்கோ யாரும் இன்றித் தனிமைக்குள் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் தனிமைக்குச் சமூக ஊடகங்கள் தீனியாய் அமைகின்றன. நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கதிகமான செல்போன் பயன்பாட்டிற்குள்ளாகிச் சமூக ஊடகங்களுக்குள் நுழைகிறார்கள்,

    முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர், டிக்டாக் கணக்குகளைத் தொடங்குகிறார்கள். இணையத்தின் மாயஉலகில் அப்பிள்ளைகள் நுழைவது இப்படித்தான். சமூக ஊடகங்கள் மூலமாக அரும்பும் காதல் அவர்களைக் கவனத்துடன் படிக்கவிடாமல் வேறு திசை நோக்கித் திருப்புகிறது. அறிமுகம் இல்லாதவர்களிடம் தங்கள் சொந்த வாழ்வைத் தந்து அவர்கள் வழி தவறுவதற்கு யார் காரணம்? பள்ளிச் சீருடைகளுடன் அவர்களைக் காதல் பிம்பங்களாய் சித்தரிக்கும் திரைப்படங்கள் அவர்களின் வழி தவறுதலுக்கு ஒருவகையில் காராணம்தான். உண்மை எது? போலி பிம்பங்கள் எது என்று தெரியாமல் அப்பிள்ளைகள் பதின்பருவத்தில் வழி தவறுவதற்குப் பெற்றோர்களும், சமூகமும் ஏன் காரணமாக வேண்டும்?

    பதின்பருவப் பிள்ளைகளின் சிறுநடவடிக்கைகளைக் கூட பெற்றோர்கள் கூர்ந்து கவனமாக நோக்க வேண்டும், பாதை தவறுவதாய் உணர்ந்தால் நம் செயல்கள்தான் நம் முகங்களாக அமைகின்றன என்று மென்மையான சொற்களால் அவர்களைத் திருத்த முயலவேண்டும். அவர்களை அடிப்பதோ, அவர்களைக் கண்டபடி திட்டுவதிலோ பயனில்லை, வாழ்வின் மாயைகளை அவர்களுடன் பேசிப்பேசியே உணர்த்தமுடியும். அவர்கள் செய்யும் செயல் அவர்களின் வாழ்வில் உண்டாக்கப் போகும் தீயவிளைவுகளை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

    அவர்கள் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் வாழ்வைப் பாழாக்கும் என்பதை அவர்கள் உணரச்செய்யவேண்டும். விலையுயர்ந்த ஸ்மார்ட் செல்பேசிகளையும், விலையுயர்ந்த பைக்குகளையும் பெற்றோர்கள் அப்பிள்ளைகளுக்கு வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும். அருகருகே இருந்தாலும் தண்டவாளங்கள் எந்தப் புள்ளியிலும் ஒன்று சேரமுடியாது. அவர்கள் நியாயப்படுத்தும் தவறுகள் பெற்றோர்களைக் காயப்படுத்தத்தான் செய்யும். அதனால் செய்த தவறுகளை நியாயப்படுத்தாமல் ஒத்துக்கொண்டு இனிமேல் செய்யாமல் இருப்பதற்கான நேர்மையை அவர்களுக்குக் கற்றுத்தரவேண்டும்.

    கல்கண்டு போல்தான் உடைந்த கண்ணாடியும் காட்சியளிக்கிறது, கவனமாய் இல்லையென்றால் குத்திக்கிழித்துவிடும் இந்த வாழ்க்கை என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். பெண்பிள்ளைகளுடன் தாய் நட்பாகப் பழகுவதன் மூலம் சமூகத்தின் பல்வேறு முகங்களை அவர்களுக்குக் காட்டி கவனமாய் இருக்கவைக்க முடியும். மனத்தெளிவே அவர்களின் மகிழ்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் ஒரே வழி. அத்தெளிவை அவர்களுக்கு உண்டாக்கி அல்லதை விலக்கி, நல்லதை நோக்கி நகர்த்தப் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் மட்டுமே முடியும்.

    சுத்தியல்களால் அடிக்கப்படும் ஆணிகள் மாதிரி சொற்களால் அப்பிள்ளைகளை அடிப்பதைவிட மென்மையாலும் உண்மையாலும் அவர்களுக்கு நன்மையை உணர்த்துவோம். காரிருளைப் பழிப்பதைவிட அகல்விளக்காய் இருக்கலாமே. நடந்துபோக மட்டுமல்ல பிடிக்காதவற்றைக் கடந்துபோகவும்தான் கால்கள். காலம் மாறிக்கொண்டிருக்கிறது, பிள்ளைகளின் உளவியலும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு உண்மையைச் சொல்லி நன்மையைச் சொல்லி வாழ நம் பிள்ளைகளை நாம் பயிற்றுவிக்க வேண்டும்.

    என்னால் முடியாமல் போன என் கனவுகளை என் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. அவர்களின் ஆர்வமறியாமல் நாம் முன்னிறுத்தும் லட்சியங்களே அப்பிள்ளைகளை மனஅழுத்தத்தில் கொண்டு சேர்க்கின்றன. உறுத்திய கண்களால் உலகைப் பார்க்கும்போது எல்லாம் கலங்கலாகத்தான் இருக்கும், எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது, நம் பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும், எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவதை விட்டுவிட்டு அவர்களை நம்புவோம், வழி தவறும்போது நண்பர்களைப் போல் நாசுக்காய் அவர்களைத் திருத்துவோம்.

    பேராசிரியர் சவுந்தர மகாதேவன், தனியார் கல்லூரி, திருநெல்வேலி.
    பிறப்பின்போதோ அல்லது அதன் பின்பு குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும்போது, அதன் பாதிப்பின்தன்மைக் கேற்ப குழந்தைகளுக்கு மொழி கற்று கொள்வதிலும், பேசுவதிலும் தடையோ, தாமதமோ ஏற்படுகிறது.
    பிறப்பின் முதற்கொண்டே குழந்தைகள் மொழிகள் கற்றுக் கொண்டு சராசரியாக 10 முதல் 12 மாதத்தில் தனது முதல் வார்த்தையை உச்சரிக்க தொடங்குகிறது.

    பிறப்பின்போதோ அல்லது அதன் பின்பு குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும்போது, அதன் பாதிப்பின்தன்மைக் கேற்ப குழந்தைகளுக்கு மொழி கற்று கொள்வதிலும், பேசுவதிலும் தடையோ, தாமதமோ ஏற்படுகிறது.

    ஆகையால் பிறந்த இளம் குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனை செய்வது அவசியம். பிறந்த 3ம் நாள் முதல் செவித்திறன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    செவித்திறன் குறைபாட்டினால் மட்டுமின்றி வேறு சில காரணங்களினாலும் குழந்தைகளுக்கு பேசுவதிலும், மொழிகள் கற்றுக் கொள்வதிலும் தடையோ தாமதமோ ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக ஆட்டிஸம், ஹைப்பர் ஆக்டிவ், உச்சரிப்பு தெளிவின்மை, அன்னபிளவு, மூளை முடக்குவாதம் மற்றும் திக்கி பேசுபவர்கள், பெண் குரலில் பேசுபவர்கள் மற்றும் அனைத்து விதமான பேச்சு மற்றும் குரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் அனுபவமிக்க நிபுணர்கள் (Senior Speech Therapist) மூலம் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஒருவரின் காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு கேட்பதிலும் புரிந்து கொள்வதிலும், சிலருக்கு காதில் இரைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. வேறு சிலருக்கோ செவித்திறன் குறைபாட்டினால் குரல் மற்றும் பேச்சில் மாற்றமும் ஏற்படுகிறது.

    இவற்றை தவிர்க்க இத்துறை சார்ந்த நிபுணர்களின் (Audiologist) ஆலோசனைப்படி சரியான காது கருவியை தேர்வு செய்து அணிவது அவசியம். காது கருவிகள் பலவித மாடல்களிலும் பலவித வர்ணங்களிலும் மட்டுமின்றி டிஜிட்டல், புரோகிராமபிள் காது கருவிகள் இங்கு கிடைக்கும்.

    1. bte

    2. ric

    3. CIC

    4. IIC (கண்ணுக்கு சிறிதும் தெரியாத காது கருவிகள்)

    இரண்டு காதுகளுக்கும் காது கருவிகள் அவசியமா?

    நாம் எல்லோரும் அன்றாட கேட்கும் சப்தங்கள் இரண்டு காதுகள் மூலமே கேட்கப்படுகிறது. ஒருவரின் செவித்திறன் குறையும்போது இரண்டு காதுகளின் அளவையும் தனித்தனியே கண்டறிய முடியும். ஒரு காதில் மட்டும் காது கருவி பொறுத்தும்போது சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒலியின் திசையை கண்டறியவும், பேச்சின் தெளிவு துள்ளியமாக கேட்கவும், இரண்டு காது கருவிகள் மிகவும் அவசியம்.

    மேலும் விபரங்களுக்கு :

    ரோஸ் ஸ்பீச் தெரபி - ஹியரிங் எய்டு சென்டர், 8A, மிலிட்டரி லைன், அன்டன் சவுண்டு சர்வீஸ் அருகில், சமாதானபுரம், பாளையங் கோட்டை, திருநெல்வேலி-2, Mobile : 94427 59958
    படிப்பில் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு மாணவ - மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும்.
    பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ - மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு மாணவ - மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும்.

    படிப்போடு மாணவ - மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தவறுகளில் ஈடுபடாமலும், நல் வழியில் பயணிக்கவும் முடியும். பள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை தாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும்.

    அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்.

    செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டால் எந்த வேலையையும் எளிதாக செய்துவிட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.
    பச்சிளம் குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. பலர் குழந்தை பிறந்ததுமே சர்க்கரை தண்ணீர் கொடுப்பார்கள். இது தவறான பழக்கம். இதனால், கலோரி அதிகமாவதோடு, குழந்தைக்கு இன்பெக்‌ஷனும் வரக்கூடும். தாய்ப்பாலிலேயே தேவையான நீர்ச்சத்து உள்ளது. அதனால் தண்ணீர் தர தேவை இல்லை. ஏழாவது மாதத்தில் திட உணவை கொடுக்க தொடங்கலாம். பலர் செரிமானம் எளிதாக, நன்கு குழைத்த மோர், தயிர்சாதம் மட்டும் கொடுப்பார்கள். குழந்தைக்கு பருப்பு சாதமும் கொடுக்கலாம். இதனால், உடலில் புரதம், விட்டமின் பி, நார்ச்சத்து ஆகியவை சேரும்.

    வேலைக்கு போகும் தாய்மார்கள் தாய்ப்பாலை சுத்தமான எவர்சில்வர் கிண்ணத்தில் பிடித்து, இறுக்கமான மூடி போட்டு, ப்ரிட்ஜில் வைத்துவிடலாம். தேவைப்படும்போது (12 மணி நேரத்துக்குள்) எடுத்துப் புகட்டலாம். ப்ரிட்ஜில் வைத்த பாலை கொதிக்க வைக்கக் கூடாது. ப்ரிட்ஜிலிருந்து எடுத்து, ஒரு மணி நேரம் வெளியே வைத்து, குளிர்ச்சி குறைந்ததும் குழந்தைக்கு புகட்ட வேண்டும். குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது, பால் வழிந்து கழுத்து, தோள்பட்டைமேல் பட வாய்ப்புள்ளது. இதை உடனுக்குடன் துடைக்காமல் விட்டால், சருமத்தில் சிறு ஒவ்வாமை ஏற்படலாம்.

    முதல் 3 மாதங்கள் வரை, குழந்தை 18 முதல் 20 மணி நேரம் தூங்கும். பிறகு, தூக்கம் படிப்படியாக குறையும். குழந்தை தூங்கும் இடத்தில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவலை பயன்படுத்துவது நல்லது. ரசாயன கொசுவத்திகளை தவிர்க்க வேண்டும். ஹெபடைட்டிஸ் பி, போலியோ தடுப்பூசிகளை, குழந்தை பிறந்த ஆறாவது, ஒன்பதாவது மற்றும் பதின்மூன்றாவது மாதங்களில் அவசியம் போட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த ஊசிகள் போடப்படுகின்றன.

    குழந்தையின் உடலை முற்றிலுமாக மூடும் இறுக்கமான உடைகளை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான பருத்தி உடைகள் சிறந்தவை. காலை 7 முதல் 9 மணி வரை புற ஊதாக்கதிர்கள் இல்லாத சூரிய ஒளியில், குழந்தையை சூரிய ஒளிக்குளியல் எடுக்க வைப்பதால், விட்டமின் டி சத்து கிடைக்கும். இப்போது குழந்தைகளை, முதுகில் சுமக்கும் சிந்தெடிக் பேக்குகளில் தூக்கிக் கொண்டு போவது நாகரிகமாகி விட்டது. இது தவறு. சிந்தெடிக் ரப்பர் மற்றும் கடினமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பேக்குகள் குழந்தையின் தோலை உறுத்தும்.

    குழந்தைகளுக்கான டயப்பரை ஒருமுறை சிறுநீர், மலம் கழித்த உடனே அகற்றிவிட வேண்டும். இல்லை என்றால் பிறப்புறுப்பு, தொடை இடுக்குகளில் படை, அரிப்பு ஏற்படலாம். தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் டயப்பர் பொருத்தியபடியே இருப்பதும் குழந்தைகளின் மென்மையான சருமத்தை பாதிக்கும் என்பதால், சிறிது நேரமாவது காற்றோட்டமாக விடுவது நல்லது. குழந்தைகளுக்கு டால்கம் பவுடர் போடக் கூடாது. ஏனெனில், குழந்தைகளுக்கு வியர்வை துளைகள் திறந்திருக்காது. இதனால், பவுடர் படியும் மடிப்புப் பகுதிகளில் சரும ஒவ்வாமை, தடிப்பு, அரிப்பு ஏற்படலாம்.

    இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. முடிந்தவரை பீடிங் பாட்டிலை குழந்தைக்குப் பழக்க வேண்டாம். இதனால், 3 வயதில் டம்ளரில் பால் குடிக்கப் பழக்குவது சிரமமாகிவிடும். குழந்தைக்கு ஒரு வயது நிறைவடையும் வரை, பசும்பாலை தவிர்ப்பது நல்லது. குழந்தையின் கை, கால், உடலில் மஞ்சள் தடவிக் குளிக்க வைப்பதால், மருத்துவ ரீதியாக எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், அது கண், காது, மூக்கு ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    மொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
    வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என்று அடிக்கடி செல்பேசியை திறந்து பார்ப்பதே ஒரு கட்டாயச் செயலாகிவிட்டது. இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடவே முடியாது போலிருக்கிறது.

    கடமையாற்ற வேண்டிய அலுவலர்கள் கூட கைப்பேசியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்காடி, பஸ், பஸ் நிலையம், ரெயில், ரெயில் நிலையம் என்று எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. பள்ளிகளில் செல்பேசியை எடுத்துச்செல்ல தடை உள்ளது. ஆனாலும் சில மாணவர்களிடம் செல்பேசிகள் உள்ளன. சிறைச்சாலைக்குள் கைப்பேசிகள் இருப்பதைப் போலத்தான் தடை செய்யப்பட்ட பள்ளி விடுதியிலும் கைப்பேசிகள் உள்ளன. சில வேளைகளில் பெற்றோர்களே ரகசியமாக பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுகிறார்கள்.

    மாணவர்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டரில் விளையாடிய விளையாட்டை இப்போது கைப்பேசியில் விளையாட வசதி வந்துவிட்டது. இதனால் இளைஞர்கள் கைப்பேசியில் தீவிரமாக புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். இது ஒரு வகை போதை. இந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு தினசரி கடமைகளை செய்து முடிக்க முடியாமல் போய்விடுகிறது. காலப்போக்கில் எந்த தொழிலையும் செய்து முடிக்கும் திறமையும், மனமும் இல்லாமல் போய்விடுவதால் அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது.

    கைப்பேசி விளையாட்டுகள் சிலிர்ப்பையும், நடுக்கத்தையும், திகிலையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்துகிறது. இளைஞர்களை கவர்ந்து ஈர்க்கும் விதமாகத்தான் விளையாட்டுகளை சுவாரசியமாக வடிவமைத்திருக்கிறார்கள். வளர் இளம் பருவத்தினர் தேடும் புதுமை, சாகசம், திரில், வெற்றியுணர்வு போன்றவை இந்த விளையாட்டில் கிடைக்கிறது. பாலியல் உணர்வு, பலாத்கார உணர்வு போன்றவை தூண்டப்பட்டு மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு உடல் முழுவதும் அது உற்சாக தீயாக பரவுகிறது.

    எனவேதான் இந்த கம்யூட்டர் விளையாட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் மாணவர்கள் பல மணிநேரம் அதிலே விழுந்துகிடக்கிறார்கள். இவர்கள் இரவு முழுவதும் இந்த மாய விளையாட்டில் முடங்கிக் கிடப்பதால் பகலில் அவர்களால் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல முடிவதில்லை. சென்றாலும் அங்கேயே தூங்கிவிடுகிறார்கள். பாடங்களில் இவர்கள் சாதாரணமாக தோற்றுவிடுகிறார்கள். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. இந்த சூழ்நிலையில்தான் பெரும்பாலும் பெற்றோர்கள் விழித்துக்கொள்கிறார்கள்.

    கல்லூரிகளிலிருந்தும் பெற்றோர்களுக்கு தகவல் வந்துள்ளது. அதில் இப்போது ‘பப்ஜி’ என்ற ஆன்லைன் விளையாட்டுதான் பெருவாரியாக மாணவர்கள் விளையாடும் கம்ப்யூட்டர் விளையாட்டு என்றும், 40 கோடி இளைஞர்கள் உலகளவில் விளையாடுகிறார்கள் என்றும், அதில் 8 கோடி பேர் இந்தியர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இது தடை செய்யப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டு. ஆனால் இளைஞர்கள் எந்த தடையுமின்றி விளையாடுகிறார்கள். இதற்கு முன்னர் தடை செய்யப்பட்ட ‘ப்ளு வேல்’ என்ற விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதையும் சிலர் பெற்றோர்களை கூட கொலை செய்ததையும் நாம் கேள்விப்பட்டோம்.

    இன்று கிட்டத்தட்ட எல்லா கைப்பேசியிலும் இந்த விளையாட்டுகளை விளையாடலாம். சராசரி இந்தியன் ஒரு மணி நேரம் விளையாடும் அளவிற்கு கைப்பேசி விளையாட்டு வளர்ந்துவிட்டது. அதாவது எல்லாரும் விளையாடவில்லை என்றாலும் ஒரு சிலர் பல மணிநேரங்கள் விளையாடுகிறார்கள் என்பது அதன் பொருள். விளையாடும் நபர் தினமும் 2 முறையாவது விளையாடுகிறார்கள். இந்தியாவில் 25 கோடி மக்கள் இந்த கைப்பேசி வீடியோ விளையாட்டு விளையாடி உலகில் முதல் ஐந்து இடத்தில் நாம் இருக்கிறோம்.

    நான் குறிப்பிட்ட பப்ஜி என்ற ஆபத்தான விளையாட்டு கடந்த மார்ச் மாதம் தான் கைப்பேசியில் அறிமுகமாகி இருக்கிறது. அதற்குள் அத்தனை பேர் பதிவிறக்கம் செய்துவிட்டார்கள்.

    இந்த பப்ஜி விளையாட்டில் விமானத்திலிருந்து பாராசூட்டில் குதித்து ஒரு தீவில் இறங்க வேண்டும். அங்கு கவசத்தையும் வாங்கிக்கொண்டு துப்பாக்கியையும், எதிரிகளையும் எதிர்கொள்ள வேண்டும். பின்னர் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு ஒரு கமாண்டோ வீரர்போல எதிரிகளைச் சுட்டுக்கொல்ல வேண்டும். அனைத்து எதிரிகளையும் ஒழித்த பின்னர் இறுதியில் நாம் மிஞ்சியிருந்தால் நாம்தான் வெற்றியாளர். நாம் சுடப்பட்டால் போர்க்களத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும்.

    குழந்தைகளின் கைப்பேசி விளையாட்டு போதை

    ஒரு ரவுண்டு விளையாட 30 நிமிடம் என்று பத்து ரவுண்டு விளையாடினால் என்னவாகும்? கிட்டத்தட்ட ஒரு 20 மதிப்பெண் பாடம் படித்து முடிக்கும் நேரம் வீணாகிவிடும். ஆனால் பாடம் படிக்கும் ஒரு அயற்ச்சியோ இதில் இல்லை. இங்கு உலக மக்களை எதிர்கொள்ளவும், ராணுவப் போர் புரியவும் வாய்ப்பு கிடைக்கிறது. வாய்மொழி உத்தரவு பிறப்பித்துக்கூட எதிரியை சாகடிக்கலாம். இதில் போட்டிகள் உண்டு. அதில் பதக்கங்கள் வேறு கிடைத்துவிடுகிறது. எனவே மாணவர்கள் இதனால் கவரப்பட்டும், கவ்வப்பட்டும், விளையாடியும், தோற்றும், ஜெயித்தும் அடிமையாகி விடுகின்றனர். தொடர்ந்து விளையாடுவது அவர்களின் உயிரியல் தேவையாக மாறிவிடுகிறது. அதாவது விளையாடவில்லை என்றால் குடிகாரர்களைப் போல கை உதறல் ஏற்படும்.

    கைப்பேசி விளையாட்டு போதைக்கு அடிமையான மாணவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். இரவு முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது கைப்பேசியுடன் உறவாடிக்கொண்டிருப்பார்கள். பெற்றோர் பார்த்ததும் சுதாரித்துக்கொண்டு பள்ளி அசைன்மெண்ட் என்று சொல்லிவிடுகிறார்கள். காலையில் எழமாட்டார்கள், கல்லூரிக்கும் வழக்கமாக போகமாட்டார்கள். பகலிலும் தூங்கிவழிவார்கள்.

    வீடியோ விளையாட்டிற்கு அடிமையானவர்கள் கம்ப்யூட்டர் விளையாட்டு உலகத்தில் மட்டும் இருந்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு தன்னை சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவர்கள் விளையாட தேவையான நபர்கள் வரும் நேரத்திற்காக காத்திருப்பார்கள். அந்த நேரம் வந்ததும் துரிதமாக ஓடிச்சென்று அவர்கள் விளையாட்டைத் தொடர்வார்கள்.

    செய்ய வேண்டிய தினசரி கடமைகளையும் புறக்கணித்து இந்த கம்யூட்டர் விளையாட்டில் மூழ்கிக் கிடப்பதால் இந்த இளைஞன் பெரிய உடல்நலப்பாதிப்பிற்கும், மனநல பாதிப்பிலும், சமூக நல பாதிப்பிற்கும், அவமதிப்பிற்கும் உள்ளாகி விடுகிறார்கள்.

    இப்படிப்பட்ட நிலையை கண்டதும் உடனே மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. பெற்றோர், ஆசிரியர், உறவினர் என்று தனித்தனியாகவும் கூட்டாகவும் இவனது செயல்பாட்டில் தலையிட்டு இந்த விபரீத விளையாட்டை நிறுத்த முயற்சிக்கலாம். மாணவர்கள் மதிக்கும் ரோல்மாடல்கள் உண்டு. அவர்களிடம் அழைத்துச்சென்று ஆலோசனை பெறலாம். ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச்சென்று இந்த விளையாட்டிற்கு இடைவெளி ஏற்படும் ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம். உடலால் விளையாடும் ஓடுதல், சைக்கிள், கைப்பந்து, கால்பந்து என்ற விளையாட்டுகளில் தினமும் 2 மணி நேரமாவது ஈடுபடுத்தலாம். பெற்றோர்களாகிய நீங்களே பிள்ளைகளுடன் நடைபயணம் செல்லலாம். விளையாட்டிற்காக ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பு வீணானாலும் பரவாயில்லை. இது ஒரு சிகிச்சை என்றே எடுத்துக்கொள்ளலாம்.

    1996-ம் ஆண்டு முதல் போக்கிமேன் விளையாட்டை பல மாணவர்கள் விளையாடி நேரத்தை வீணடித்து பள்ளி கல்வியை தவறவிட்டார்கள். அதில் சிலர் சுதாரித்துக்கொண்டு பின்னர் தங்களை திருத்திக்கொண்டார்கள்.

    உணவு போதை, சினிமா போதை, கிரிக்கெட் போதை, புகை போதை, மது போதை, பாலியல் போதை என்ற வரிசையில் இன்று இளைஞன் சீரழிவது இந்த கைப்பேசி போதையால்தான். மற்ற எல்லா போதைகளையும் விட கொடிய ஒரு நோய் இது என்று சந்தேகமின்றி கூறிவிடலாம்.

    மாணவர்கள் கைப்பேசி விளையாட்டிற்கு அடிமையாயிருப்பதை அறிந்த தயாரிப்பு நிறுவனங்கள் 700 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்திருக்கிறார்கள். எனவே இன்னும் அதிகமாக போதை தரும் கவர்ச்சி விளையாட்டுகள் சந்தையில் விரைவில் வெளிவந்துவிடும். எனவே பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள். கஜா புயல் எச்சரிக்கை, ஆசிய சுனாமி எச்சரிக்கை போன்று இந்த கைப்பேசி விளையாட்டு போதையின் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை சீரியசாக எடுத்து கொள்ளுங்கள்.

    மாணவர்களே இது வேண்டாம் நீங்கள் விளையாட வேண்டியது கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், நீச்சல் போன்ற நிஜமான விளையாட்டுகள். மொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

    முனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., காவல்துறை இயக்குனர்.
    ×