search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு காது கேட்கவில்லையா? பேச்சில் குறைபாடா?
    X
    குழந்தைகளுக்கு காது கேட்கவில்லையா? பேச்சில் குறைபாடா?

    குழந்தைகளுக்கு காது கேட்கவில்லையா? பேச்சில் குறைபாடா?

    பிறப்பின்போதோ அல்லது அதன் பின்பு குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும்போது, அதன் பாதிப்பின்தன்மைக் கேற்ப குழந்தைகளுக்கு மொழி கற்று கொள்வதிலும், பேசுவதிலும் தடையோ, தாமதமோ ஏற்படுகிறது.
    பிறப்பின் முதற்கொண்டே குழந்தைகள் மொழிகள் கற்றுக் கொண்டு சராசரியாக 10 முதல் 12 மாதத்தில் தனது முதல் வார்த்தையை உச்சரிக்க தொடங்குகிறது.

    பிறப்பின்போதோ அல்லது அதன் பின்பு குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும்போது, அதன் பாதிப்பின்தன்மைக் கேற்ப குழந்தைகளுக்கு மொழி கற்று கொள்வதிலும், பேசுவதிலும் தடையோ, தாமதமோ ஏற்படுகிறது.

    ஆகையால் பிறந்த இளம் குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனை செய்வது அவசியம். பிறந்த 3ம் நாள் முதல் செவித்திறன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    செவித்திறன் குறைபாட்டினால் மட்டுமின்றி வேறு சில காரணங்களினாலும் குழந்தைகளுக்கு பேசுவதிலும், மொழிகள் கற்றுக் கொள்வதிலும் தடையோ தாமதமோ ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக ஆட்டிஸம், ஹைப்பர் ஆக்டிவ், உச்சரிப்பு தெளிவின்மை, அன்னபிளவு, மூளை முடக்குவாதம் மற்றும் திக்கி பேசுபவர்கள், பெண் குரலில் பேசுபவர்கள் மற்றும் அனைத்து விதமான பேச்சு மற்றும் குரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் அனுபவமிக்க நிபுணர்கள் (Senior Speech Therapist) மூலம் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஒருவரின் காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு கேட்பதிலும் புரிந்து கொள்வதிலும், சிலருக்கு காதில் இரைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. வேறு சிலருக்கோ செவித்திறன் குறைபாட்டினால் குரல் மற்றும் பேச்சில் மாற்றமும் ஏற்படுகிறது.

    இவற்றை தவிர்க்க இத்துறை சார்ந்த நிபுணர்களின் (Audiologist) ஆலோசனைப்படி சரியான காது கருவியை தேர்வு செய்து அணிவது அவசியம். காது கருவிகள் பலவித மாடல்களிலும் பலவித வர்ணங்களிலும் மட்டுமின்றி டிஜிட்டல், புரோகிராமபிள் காது கருவிகள் இங்கு கிடைக்கும்.

    1. bte

    2. ric

    3. CIC

    4. IIC (கண்ணுக்கு சிறிதும் தெரியாத காது கருவிகள்)

    இரண்டு காதுகளுக்கும் காது கருவிகள் அவசியமா?

    நாம் எல்லோரும் அன்றாட கேட்கும் சப்தங்கள் இரண்டு காதுகள் மூலமே கேட்கப்படுகிறது. ஒருவரின் செவித்திறன் குறையும்போது இரண்டு காதுகளின் அளவையும் தனித்தனியே கண்டறிய முடியும். ஒரு காதில் மட்டும் காது கருவி பொறுத்தும்போது சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒலியின் திசையை கண்டறியவும், பேச்சின் தெளிவு துள்ளியமாக கேட்கவும், இரண்டு காது கருவிகள் மிகவும் அவசியம்.

    மேலும் விபரங்களுக்கு :

    ரோஸ் ஸ்பீச் தெரபி - ஹியரிங் எய்டு சென்டர், 8A, மிலிட்டரி லைன், அன்டன் சவுண்டு சர்வீஸ் அருகில், சமாதானபுரம், பாளையங் கோட்டை, திருநெல்வேலி-2, Mobile : 94427 59958
    Next Story
    ×