என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
வாய்ப்புண் உள்ளவர்கள், இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். இன்று இந்த கீரையை வைத்து துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - அரை கட்டு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 1 மேஜை கரண்டி
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 15
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை:
மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும அதில் பெருங்காய தூள், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
பிறகு அதில் மிளகு, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்பு அதில் சிறிய வெங்காயத்தை போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.
அதனுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்ட மணத்தக்காளி கீரை, தேங்காய் துருவலை போட்டு 5 நிமிடங்கள் நன்கு வதக்கி இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடவும்.
ஆறியதும் இந்த கலவையை ஒரு மிக்ஸியில் இட்டு அதனுடன் புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
மணத்தக்காளி கீரை துவையல் தயார்.
இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து தென் இந்திய உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.
மணத்தக்காளி கீரை - அரை கட்டு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 1 மேஜை கரண்டி
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 15
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்

மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும அதில் பெருங்காய தூள், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
பிறகு அதில் மிளகு, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்பு அதில் சிறிய வெங்காயத்தை போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.
அதனுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்ட மணத்தக்காளி கீரை, தேங்காய் துருவலை போட்டு 5 நிமிடங்கள் நன்கு வதக்கி இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடவும்.
ஆறியதும் இந்த கலவையை ஒரு மிக்ஸியில் இட்டு அதனுடன் புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
மணத்தக்காளி கீரை துவையல் தயார்.
இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து தென் இந்திய உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தற்போதுள்ள கூந்தல் பிரச்சனைக்கு முக்கிய காரணம் காற்று மாசு, உணவுமுறையாகும். கூந்தல் உதிர்வை நிறுத்தும் இயற்கை குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும். முடி கொட்டுவதும் நிற்கும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும். முடி கொட்டுவதும் நிற்கும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும்.
உடலில் எந்த மாதிரியான நோய்கள் ஏற்பட்டாலும், அதனை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. நோயை சரிசெய்ய ஒருசில செயல்களான உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். அதிலும் உடற்பயிற்சியை விட யோகாவிற்கு அதிக சக்தி உள்ளது. உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை தான் குறையும் என்று தெரியும். ஆனால் யோகா செய்தால், ஆஸ்துமா, மூட்டு வலி, நீரிழிவு, முதுகு வலி போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியும்.
ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.
பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
போதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.
முதுகு வலியைப் போக்க சூரிய நமஸ்காரத்தில் வரும் ஒரு நிலையான, இங்கே குறிப்பிட்டுள்ளதை செய்து வர வேண்டும். இதனால் முதுகு வலியை சரிசெய்யலாம்.
பலர் மூட்டு வலியால் நிறைய அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலியை குணப்படுத்த சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
பிரச்சனை கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உண்டாகும் ஒரு பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு நோய். இந்த கொழுப்புகளை கரைத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மிகவும் அடிப்படை யோகா நிலையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
ஆஸ்துமாவை யோகாவினாலேயே சரிசெய்துவிட முடியும். அதிலும் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்றான பிரணாயாமத்தை தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஆஸ்துமாவை சரிசெய்துவிட முடியும்.
பாலாசனத்தை தினமும் செய்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
போதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.
முதுகு வலியைப் போக்க சூரிய நமஸ்காரத்தில் வரும் ஒரு நிலையான, இங்கே குறிப்பிட்டுள்ளதை செய்து வர வேண்டும். இதனால் முதுகு வலியை சரிசெய்யலாம்.
பலர் மூட்டு வலியால் நிறைய அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலியை குணப்படுத்த சூரிய நமஸ்காரத்தில் வரும் நிலைகளை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
பிரச்சனை கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து உண்டாகும் ஒரு பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு நோய். இந்த கொழுப்புகளை கரைத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மிகவும் அடிப்படை யோகா நிலையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன் ஹீரோவாகவும், கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி வில்லியாகவும் மட்டுமே அறியப்படுவது வாடிக்கை.
திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் மனைவியோ, கணவனோ யார் ஈடுபட்டாலும் அது விபரீதம். 136 ஆண்டுகால சட்டப்பிரிவான 497-ஐ உச்சநீதிமன்றம் நீக்கிய பின்பும் சமூகத்தின் பார்வையில் கள்ளத்தொடர்பு என்பது அவமானகரமானது என்பதே எதார்த்தம்.
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை மரத்தில் கட்டி வைத்து ஊர்ப்பஞ்சாயத்தினர் அடித்தனர்.
“நண்பனுடன் தன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த கணவன், தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் சிலிண்டரால் அடித்துக் கொன்றான்”
“கள்ளத்தொடர்பு பற்றிய வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை”
இவை போன்ற செய்திகள் ஊடகங்களில் வழமையானவை. இவற்றையும் விஞ்சிய அதிர்ச்சி நிகழ்வு, கள்ளக்காதலனுக்காக தான் பெற்ற குழந்தைகளைத் தன் கையாலேயே கொலை செய்த குன்றத்தூர் அபிராமி செய்தி. கள்ளக்காதலுக்காக தான் பெற்ற குழந்தையை தாயே கொல்லும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதை சமீபத்திய பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.
இத்தகைய நிகழ்வுகளில் விவாகரத்தான பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறேன் என முன் வரும் இளைஞர்களால் அவளுடைய முதல் மணத்தின் விளைவான குழந்தையைக் கொல்லச் சொல்லும் நிகழ்வுகளும் கவனத்துக்கு வந்துள்ளன.
தாய்மையை மிக உயர்வாக போற்றும் தமிழ் கலாசார சூழலில் அபிராமியைப் போன்றவர்கள் உருவாக யார் அல்லது எது காரணம்?
ஆண், பெண் இரு பாலருமே தான் காரணம். அனுதினமும் நம் நேரத்தை அதிக அளவில் விழுங்கும் இன்றைய பொழுது போக்கு சாதனங்களும் காரணம்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் திரையரங்குகளுக்கு சென்று பார்க்கும் திரைப்படங்கள் மட்டுமே பெரும்பாலும் மக்களின் பிரதான பொழுதுபோக்காக இருந்தது. இன்றைக்கு 200-க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்கள், எண்ணிலடங்கா யூ டியூப் சேனல்கள், பேஸ்புக், வாட்ஸ் அப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் என பொழுதுபோக்குகளின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது.
அந்த பொழுது போக்குகள் பண்டைய காலத்தைப் போன்று அறம் போதிப்பவையாக இன்றி வெறும் கேளிக்கையாகவே அமைந்திருப்பது துரதிர்ஷ்டம். குடும்ப உறவுகளின் அடித்தளமான அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றுக்கு பொருந்தாத சுயநலம், பேராசை, போட்டி, பொறாமை, காமவெறி, பிறர் துணை நாடல் போன்ற எதிர்மறை குணங்களின் குவியலாகவே இன்றைய பொழுதுபோக்கு ஊடகங்கள் பெரும்பாலும் விளங்குகின்றன.
அக்கால பெண் வீட்டை மட்டும் நிர்வகிப்பவளாக இருந்தாள். இன்றைய பெண், வீட்டை நிர்வகிப்பதுடன் கூட வேலைக்கும் போய் சம்பாதித்து குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துபவளாக திகழ்கிறாள். வேலைக்கு போகும் ஆண் எத்தனை விதமான இன்னல்களை எதிர்கொள்கிறானோ அதே போன்ற இன்னல்களை பெண்ணும் எதிர்கொள்கிறாள்.
வீட்டு நிர்வாகம், வேலைப்பளு என்கிற இரட்டைக் குதிரை சவாரி செய்யும் பெண்ணின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் ஆண்கள் குடும்பங்கள் மிகவும் குறைவே.

அதிகம் பேசுவதையும், தான் பேசுவதைப் பிறர் கேட்பதையும் விரும்புவது பெண்ணின் இயல்பு என்கின்றனர் உளவியலாளர்கள்.
எத்தனை ஆண்கள் தம் மனைவியரிடம் மனம் விட்டு பேசுகிறார்கள் அல்லது குறைந்தபட்சம் மனைவி பேசுவதைக் காது கொடுத்து கேட்கும் பொறுமை எத்தனை ஆண்களிடம் இருக்கிறது? மனம் விட்டு பேசினாலே பாதிப்பிரச்சினை தீர்ந்து விடும் என்று மனநல வல்லுநர்கள் சொல்கிறார்கள். பெண் தன் பிரச்சினைகளைப் பேசுவதற்கான இயல் வெளியை எத்தனை குடும்பங்கள் வழங்குகின்றன?
“கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை” என்பது தமிழ் மூதுரை. “உனக்கு உண்மையானவனாக (உன்னுடன் வாழும் வரை) இருப்பேன்” என்ற வாக்குறுதியை தன் வாழ்க்கை துணையிடம் கொடுக்கும் ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும்... அந்த இல்வாழ்வு நீடிக்கும் வரை வாக்குறுதியைக் கடைப்பிடிப்பது கடமை. தன் வாழ்க்கைத் துணையின் போக்கு பிடிக்காமற்போனால், அந்த துணையைச் சட்ட பூர்வமாக பிரிந்த பின் தனது விருப்பப்படி வேறொரு வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து வாழ்தலே நவீன அறம்.
எவ்வளவு காலம் ஒரே துணையுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதோ, எத்தனை முறை ஜோடியை மாற்றினார்கள் என்ற எண்ணிக்கையோ கற்பின் பாற்பட்டதல்ல. அது அவரவர் மனப்பக்குவம் அல்லது பக்குவமின்மையின்; பாற்பட்டதே.
பெரியார் சொன்னது போல திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் விதிகளை சம்பந்தப்பட்ட இருவரும் அல்லது இரு குடும்பத்தினரும் சட்டவிதிகளுக்கேற்ப அமைத்துக்கொண்டு அதன்படி இணைந்து வாழ்தலே முறை. மு.வ. தனது நாவலில் நாற்பதாண்டுகளுக்கு முன் சொன்ன நவீன கால கற்பின் விளக்கமான எந்த வாழ்க்கை துணையுடன் ஒரே கூரையின் கீழ் கணவனாக, மனைவியாக வாழ்கிறார்களோ அந்த வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொரு பெண்ணுடனோ, ஆணுடனோ பாலியல் உறவு இன்றி வாழும் நேர்மைக்கு பெயர்தான் கற்பு. அது ஆறு மாதமே ஆயினும் சரி, அன்றி ஆயுள் முழுதும் ஆயினும் சரி என்பதையாவது இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் கருதிப்பார்ப்பது சிறந்தது.
சினிமாக்களில் ரசிகர் பட்டாளங்களை கொண்ட ஹீரோ கமலாவுக்கு தெரியாமல் விமலாவுடன் கொஞ்சிக் குலவுவது நகைச்சுவையாக மக்களால் பார்க்கப்படுகிறது.
இரண்டு மனைவிக்கார ஹீரோ என்பது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எப்போதும் நகைச்சுவைக்கான களமாகவே இருந்து வந்திருக்கிறது.
கற்பனையாக யோசித்து பார்த்தால் கூட இரண்டு கணவர்க்காரி என்று ஏதாவது ஒரு பெண் கதாபாத்திரம் ஹீரோயினாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறதா என்று யோசித்து பார்த்தால், இதுவரை இல்லை. தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்ட திரவுபதி இதற்கு விதிவிலக்கு. மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன் ஹீரோவாகவும், கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி வில்லியாகவும் மட்டுமே அறியப்படுவது வாடிக்கை.
திலகவதி, ஐ.பி.எஸ். முன்னாள் காவல்துறை தலைவர்
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை மரத்தில் கட்டி வைத்து ஊர்ப்பஞ்சாயத்தினர் அடித்தனர்.
“நண்பனுடன் தன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த கணவன், தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் சிலிண்டரால் அடித்துக் கொன்றான்”
“கள்ளத்தொடர்பு பற்றிய வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை”
இவை போன்ற செய்திகள் ஊடகங்களில் வழமையானவை. இவற்றையும் விஞ்சிய அதிர்ச்சி நிகழ்வு, கள்ளக்காதலனுக்காக தான் பெற்ற குழந்தைகளைத் தன் கையாலேயே கொலை செய்த குன்றத்தூர் அபிராமி செய்தி. கள்ளக்காதலுக்காக தான் பெற்ற குழந்தையை தாயே கொல்லும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதை சமீபத்திய பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.
இத்தகைய நிகழ்வுகளில் விவாகரத்தான பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறேன் என முன் வரும் இளைஞர்களால் அவளுடைய முதல் மணத்தின் விளைவான குழந்தையைக் கொல்லச் சொல்லும் நிகழ்வுகளும் கவனத்துக்கு வந்துள்ளன.
தாய்மையை மிக உயர்வாக போற்றும் தமிழ் கலாசார சூழலில் அபிராமியைப் போன்றவர்கள் உருவாக யார் அல்லது எது காரணம்?
ஆண், பெண் இரு பாலருமே தான் காரணம். அனுதினமும் நம் நேரத்தை அதிக அளவில் விழுங்கும் இன்றைய பொழுது போக்கு சாதனங்களும் காரணம்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் திரையரங்குகளுக்கு சென்று பார்க்கும் திரைப்படங்கள் மட்டுமே பெரும்பாலும் மக்களின் பிரதான பொழுதுபோக்காக இருந்தது. இன்றைக்கு 200-க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்கள், எண்ணிலடங்கா யூ டியூப் சேனல்கள், பேஸ்புக், வாட்ஸ் அப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் என பொழுதுபோக்குகளின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது.
அந்த பொழுது போக்குகள் பண்டைய காலத்தைப் போன்று அறம் போதிப்பவையாக இன்றி வெறும் கேளிக்கையாகவே அமைந்திருப்பது துரதிர்ஷ்டம். குடும்ப உறவுகளின் அடித்தளமான அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றுக்கு பொருந்தாத சுயநலம், பேராசை, போட்டி, பொறாமை, காமவெறி, பிறர் துணை நாடல் போன்ற எதிர்மறை குணங்களின் குவியலாகவே இன்றைய பொழுதுபோக்கு ஊடகங்கள் பெரும்பாலும் விளங்குகின்றன.
அக்கால பெண் வீட்டை மட்டும் நிர்வகிப்பவளாக இருந்தாள். இன்றைய பெண், வீட்டை நிர்வகிப்பதுடன் கூட வேலைக்கும் போய் சம்பாதித்து குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துபவளாக திகழ்கிறாள். வேலைக்கு போகும் ஆண் எத்தனை விதமான இன்னல்களை எதிர்கொள்கிறானோ அதே போன்ற இன்னல்களை பெண்ணும் எதிர்கொள்கிறாள்.
வீட்டு நிர்வாகம், வேலைப்பளு என்கிற இரட்டைக் குதிரை சவாரி செய்யும் பெண்ணின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் ஆண்கள் குடும்பங்கள் மிகவும் குறைவே.
நாள் ஒன்றுக்கு ஓர் ஆண் 600, 900 வார்த்தைகளை மட்டுமே பேசுவதாகவும், ஒரு பெண் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வார்த்தைகளைப் பேசுவதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

அதிகம் பேசுவதையும், தான் பேசுவதைப் பிறர் கேட்பதையும் விரும்புவது பெண்ணின் இயல்பு என்கின்றனர் உளவியலாளர்கள்.
எத்தனை ஆண்கள் தம் மனைவியரிடம் மனம் விட்டு பேசுகிறார்கள் அல்லது குறைந்தபட்சம் மனைவி பேசுவதைக் காது கொடுத்து கேட்கும் பொறுமை எத்தனை ஆண்களிடம் இருக்கிறது? மனம் விட்டு பேசினாலே பாதிப்பிரச்சினை தீர்ந்து விடும் என்று மனநல வல்லுநர்கள் சொல்கிறார்கள். பெண் தன் பிரச்சினைகளைப் பேசுவதற்கான இயல் வெளியை எத்தனை குடும்பங்கள் வழங்குகின்றன?
“கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை” என்பது தமிழ் மூதுரை. “உனக்கு உண்மையானவனாக (உன்னுடன் வாழும் வரை) இருப்பேன்” என்ற வாக்குறுதியை தன் வாழ்க்கை துணையிடம் கொடுக்கும் ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும்... அந்த இல்வாழ்வு நீடிக்கும் வரை வாக்குறுதியைக் கடைப்பிடிப்பது கடமை. தன் வாழ்க்கைத் துணையின் போக்கு பிடிக்காமற்போனால், அந்த துணையைச் சட்ட பூர்வமாக பிரிந்த பின் தனது விருப்பப்படி வேறொரு வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து வாழ்தலே நவீன அறம்.
எவ்வளவு காலம் ஒரே துணையுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதோ, எத்தனை முறை ஜோடியை மாற்றினார்கள் என்ற எண்ணிக்கையோ கற்பின் பாற்பட்டதல்ல. அது அவரவர் மனப்பக்குவம் அல்லது பக்குவமின்மையின்; பாற்பட்டதே.
பெரியார் சொன்னது போல திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் விதிகளை சம்பந்தப்பட்ட இருவரும் அல்லது இரு குடும்பத்தினரும் சட்டவிதிகளுக்கேற்ப அமைத்துக்கொண்டு அதன்படி இணைந்து வாழ்தலே முறை. மு.வ. தனது நாவலில் நாற்பதாண்டுகளுக்கு முன் சொன்ன நவீன கால கற்பின் விளக்கமான எந்த வாழ்க்கை துணையுடன் ஒரே கூரையின் கீழ் கணவனாக, மனைவியாக வாழ்கிறார்களோ அந்த வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொரு பெண்ணுடனோ, ஆணுடனோ பாலியல் உறவு இன்றி வாழும் நேர்மைக்கு பெயர்தான் கற்பு. அது ஆறு மாதமே ஆயினும் சரி, அன்றி ஆயுள் முழுதும் ஆயினும் சரி என்பதையாவது இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் கருதிப்பார்ப்பது சிறந்தது.
சினிமாக்களில் ரசிகர் பட்டாளங்களை கொண்ட ஹீரோ கமலாவுக்கு தெரியாமல் விமலாவுடன் கொஞ்சிக் குலவுவது நகைச்சுவையாக மக்களால் பார்க்கப்படுகிறது.
இரண்டு மனைவிக்கார ஹீரோ என்பது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எப்போதும் நகைச்சுவைக்கான களமாகவே இருந்து வந்திருக்கிறது.
கற்பனையாக யோசித்து பார்த்தால் கூட இரண்டு கணவர்க்காரி என்று ஏதாவது ஒரு பெண் கதாபாத்திரம் ஹீரோயினாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறதா என்று யோசித்து பார்த்தால், இதுவரை இல்லை. தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்ட திரவுபதி இதற்கு விதிவிலக்கு. மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன் ஹீரோவாகவும், கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி வில்லியாகவும் மட்டுமே அறியப்படுவது வாடிக்கை.
திலகவதி, ஐ.பி.எஸ். முன்னாள் காவல்துறை தலைவர்
பப்பாளியில் உள்ள நார்சத்து மனித உடலில் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் வராமல் இருக்க உதவும். பப்பாளி இஞ்சி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பப்பாளி பழம் - சிறியது (பாதி),
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்),
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்,
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
கிரீம் - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
பப்பாளி பழம், இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து அதனுடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... சூப் கப்பில் ஊற்றவும்.
அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.
பப்பாளி பழம் - சிறியது (பாதி),
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்),
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்,
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
கிரீம் - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
பப்பாளி பழம், இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து அதனுடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... சூப் கப்பில் ஊற்றவும்.
அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.
சூப்பரான பப்பாளி இஞ்சி சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
பாடப்புத்தகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை மறந்து மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து இருப்பார்கள். அதில் இருந்து வெளியே வந்து பள்ளிச்சூழலுக்குள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் படிப்பில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்.
பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ - மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு மாணவ - மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். படிப்போடு மாணவ - மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தவறுகளில் ஈடுபடாமலும், நல் வழியில் பயணிக்கவும் முடியும்.
பள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை தாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும். செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டால் எந்த வேலையையும் எளிதாக செய்துவிட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.
பள்ளிக்கூடம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மாணவ - மாணவிகளுக்கு தேவையான சீருடை, காலணி, நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெற்றோர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் வாங்கிக் கொடுத்து இருப்பார்கள். இதை உணர்ந்து மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய அன்றே படித்து விட வேண்டும். படிப்பில் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு மாணவ - மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த உறுதி மொழியை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும். படிப்போடு மாணவ - மாணவிகள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடல் நலத்தையும் பேண வேண்டும். தீய, தவறான பழக்கங்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தவறுகளில் ஈடுபடாமலும், நல் வழியில் பயணிக்கவும் முடியும்.
பள்ளிக்கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதை தாண்டி, சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது வாழ்க்கையின் சவால்களை சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும். பாடப்புத்தங்களை தாண்டி அறிவை வளர்க்க உதவும் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் தான் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு அக்கறையும், அர்ப்பணிப்பும் வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கு மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும். செல்போன் செயலி மற்றும் கணினி விளையாட்டுகளில் மாணவ-மாணவிகள் மூழ்கி விடாமல் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். அதோடு அவர்களும் செல்போனை அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் முன்மாதிரியாக நடந்து கொண்டால் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். நேரத்தை நல்ல முறையில் கையாள கற்றுக்கொண்டால் எந்த வேலையையும் எளிதாக செய்துவிட முடியும். எந்த செயலும் கடினமான ஒன்றாகவே தோன்றும். ஆனால் அதையே தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் சாதிக்க முடியும்.
உடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது ‘ஸ்கிப்பிங்’ (கயிறு தாண்டும்) பயிற்சி.
உடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது ‘ஸ்கிப்பிங்’ (கயிறு தாண்டும்) பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகை உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. ‘ஸ்கிப்பிங்’ செய்வதால் கிடைக்கும் நன்மைகளாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். உடலின் உள் உறுப்புகளுக்கும் நரம்புகளுக்கும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை நீங்க உதவும்.
இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும். தினமும் ‘ஸ்கிப்பிங்’ செய்வதால், உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும். கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இது ஒரு முழு உடலுக்கான பயிற்சி.
பெண்களை அதிகமாகத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற எலும்புகள் மென்மையாகிற நோய்த் தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுவடையும். ஸ்கிப்பிங் பயிற்சி செலவில்லாதது. எங்கும் எப்போதும் செய்யலாம். ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும். உடலின் சமநிலைத் தன்மை மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.
ஸ்கிப்பிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை:-
ஸ்கிப்பிங் எந்த அளவுக்கு உடலுக்கு முக்கியமோ, அதே அளவு ஸ்கிப்பிங் கயிற்றின் நீளம் மிக முக்கியம். கயிற்றை உங்களின் உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கயிற்றில் சரியான நீளத்தை தேர்வுசெய்ய, நீங்கள் கயிற்றின் மத்தியில் கால்களை வைத்து உயர்த்திப்பிடிக்க வேண்டும். அது உங்களின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்தால் அது சரியான அளவு. ஸ்கிப்பிங் கயிற்றின் முனையில் அதிக கயிறு கையைவிட்டு வெளியே வராத அளவு நடுவில் பிடிக்க வேண்டும். ஸ்கிப்பிங் கயிற்றை கைகளில் பிடிக்கும்போது கயிற்றின் நுனியிலும் கையின் நுனியிலும் பிடிக்கக் கூடாது. அதேபோன்று அதிக கயிறு கைகளைவிட்டு வெளியில் வரும்படியும் பிடிக்கக் கூடாது. தரம் குறைவான ஸ்கிப்பிங் கயிற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது உங்களின் பயிற்சியை கடினமானதாக மாற்றும். நல்ல தரமான கயிற்றை பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும்.
ஸ்கிப்பிங் யார் செய்யக் கூடாது என்றால் அதிக உயரம் கொண்டவர்கள் கயிறு தாண்டும் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. இதய நோயாளிகள் ஸ்கிப்பிங் பயிற்சியை தவிர்க்கவும். கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியை தவிர்க்கலாம். பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுச் செய்வது நல்லது. எலும்பு முறிவு உடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் இந்த பயிற்சிகளை தவிர்க்கவும்.
இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும். தினமும் ‘ஸ்கிப்பிங்’ செய்வதால், உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும். கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இது ஒரு முழு உடலுக்கான பயிற்சி.
பெண்களை அதிகமாகத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற எலும்புகள் மென்மையாகிற நோய்த் தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுவடையும். ஸ்கிப்பிங் பயிற்சி செலவில்லாதது. எங்கும் எப்போதும் செய்யலாம். ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும். உடலின் சமநிலைத் தன்மை மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.
ஸ்கிப்பிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை:-
ஸ்கிப்பிங் எந்த அளவுக்கு உடலுக்கு முக்கியமோ, அதே அளவு ஸ்கிப்பிங் கயிற்றின் நீளம் மிக முக்கியம். கயிற்றை உங்களின் உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கயிற்றில் சரியான நீளத்தை தேர்வுசெய்ய, நீங்கள் கயிற்றின் மத்தியில் கால்களை வைத்து உயர்த்திப்பிடிக்க வேண்டும். அது உங்களின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்தால் அது சரியான அளவு. ஸ்கிப்பிங் கயிற்றின் முனையில் அதிக கயிறு கையைவிட்டு வெளியே வராத அளவு நடுவில் பிடிக்க வேண்டும். ஸ்கிப்பிங் கயிற்றை கைகளில் பிடிக்கும்போது கயிற்றின் நுனியிலும் கையின் நுனியிலும் பிடிக்கக் கூடாது. அதேபோன்று அதிக கயிறு கைகளைவிட்டு வெளியில் வரும்படியும் பிடிக்கக் கூடாது. தரம் குறைவான ஸ்கிப்பிங் கயிற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது உங்களின் பயிற்சியை கடினமானதாக மாற்றும். நல்ல தரமான கயிற்றை பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும்.
ஸ்கிப்பிங் யார் செய்யக் கூடாது என்றால் அதிக உயரம் கொண்டவர்கள் கயிறு தாண்டும் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. இதய நோயாளிகள் ஸ்கிப்பிங் பயிற்சியை தவிர்க்கவும். கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியை தவிர்க்கலாம். பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுச் செய்வது நல்லது. எலும்பு முறிவு உடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் இந்த பயிற்சிகளை தவிர்க்கவும்.
நிலத்திலும், தங்கத்திலும் மட்டுமே முதலீடு செய்து வந்த நம்மில் பலருக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி காண்போம்.
நிலத்திலும், தங்கத்திலும் மட்டுமே முதலீடு செய்து வந்த நம்மில் பலருக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு என்பது இன்றும் ஒரு புதிய முதலீடாகவே உள்ளது. இந்த தருணத்தில் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி காண்போம்.
மியூச்சுவல் பண்டுகளில் பொதுவாக 2 வகை உள்ளன. ஒன்று, கடன் பத்திரம் சார்ந்த முதலீடு திட்டங்கள். மற்றொன்று, பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்கள். இவை இரண்டும் கலந்தவை கலப்பின திட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
உங்கள் முதலீட்டு காலம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். குறைந்தது 5 வருடங்களுக்காவது தேவைப்படாத பணத்தையே பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். ஏனென்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில், குறுகிய காலங்களில் ஏற்ற, இறக்கம் இருப்பது சகஜம்.
ஆகவே, சில மாதங்களுக்குள் தேவைப்படும் பணத்தை லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பண்டுகளிலேயே முதலீடு செய்யுங்கள். அதேபோல, ஓரிரு வருடங்களுக்குள் தேவைப்படும் பணத்தை பிற கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள்.
மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்குள் நுழையும்போது, உங்களின் முதலீட்டு கால அளவை குறிப்பாக கவனியுங்கள். அதைப் பொறுத்தே நீங்கள் முதலீடு செய்யப் போகும் மியூச்சுவல் பண்ட் தேர்வு செய்யப்பட வேண்டும்.
உங்கள் வயது என்ன, நீங்கள் இந்த முதலீட்டிலிருந்து வரும் வருமானத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவரா, எந்த தேவைக்காக நீங்கள் இதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் போன்றவற்றை நீங்கள் முதலீடு செய்யப்போகும் முன் கவனிக்க வேண்டியது அவசியம். அடுத்த 6 மாதங்களில் நடக்கவிருக்கும் உங்கள் மகள் அல்லது மகனின் திருமணத்துக்காக வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்ய உள்ளீர்கள் எனில், அதற்கேற்றாற் போல் ரிஸ்க் இல்லாத திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல் 25 வருடங்கள் கழித்து வரப்போகும் உங்கள் ஓய்வு ்காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் எனில், அதற்கேற்றாற்போல் அதிக ரிஸ்க் உள்ள, அதே சமயத்தில் அதிக லாபத்தை தரக்கூடிய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதேபோல்தான் உங்களின் வயதையும் ஒரு முக்கிய அங்கமாக திட்டத்தை தேர்வு செய்வதில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இளம் வயதினர் எனில், தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருப்பீர்கள். ஆகவே, உங்களிடம் தொடர்ந்து பணப்புழக்கம் இருக்கும். உங்கள் தேவையும் பல ஆண்டுகள் கழித்துதான் இருக்கும். ஆகவே, நீங்கள் அதிக ரிஸ்க் உடைய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து, உங்கள் அன்றாட வாழ்வுக்கு தேவையான பணத்தை முதலீடு செய்யும்போது மிகவும் குறைவான ரிஸ்க் உடைய திட்டங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆகவே, உங்கள் தேவை மற்றும் வயதை, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்முன் கவனியுங்கள்.
மியூச்சுவல் பண்டுகளில் பொதுவாக 2 வகை உள்ளன. ஒன்று, கடன் பத்திரம் சார்ந்த முதலீடு திட்டங்கள். மற்றொன்று, பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்கள். இவை இரண்டும் கலந்தவை கலப்பின திட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
உங்கள் முதலீட்டு காலம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். குறைந்தது 5 வருடங்களுக்காவது தேவைப்படாத பணத்தையே பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். ஏனென்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில், குறுகிய காலங்களில் ஏற்ற, இறக்கம் இருப்பது சகஜம்.
ஆகவே, சில மாதங்களுக்குள் தேவைப்படும் பணத்தை லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பண்டுகளிலேயே முதலீடு செய்யுங்கள். அதேபோல, ஓரிரு வருடங்களுக்குள் தேவைப்படும் பணத்தை பிற கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள்.
மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்குள் நுழையும்போது, உங்களின் முதலீட்டு கால அளவை குறிப்பாக கவனியுங்கள். அதைப் பொறுத்தே நீங்கள் முதலீடு செய்யப் போகும் மியூச்சுவல் பண்ட் தேர்வு செய்யப்பட வேண்டும்.
உங்கள் வயது என்ன, நீங்கள் இந்த முதலீட்டிலிருந்து வரும் வருமானத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவரா, எந்த தேவைக்காக நீங்கள் இதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் போன்றவற்றை நீங்கள் முதலீடு செய்யப்போகும் முன் கவனிக்க வேண்டியது அவசியம். அடுத்த 6 மாதங்களில் நடக்கவிருக்கும் உங்கள் மகள் அல்லது மகனின் திருமணத்துக்காக வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்ய உள்ளீர்கள் எனில், அதற்கேற்றாற் போல் ரிஸ்க் இல்லாத திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல் 25 வருடங்கள் கழித்து வரப்போகும் உங்கள் ஓய்வு ்காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் எனில், அதற்கேற்றாற்போல் அதிக ரிஸ்க் உள்ள, அதே சமயத்தில் அதிக லாபத்தை தரக்கூடிய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதேபோல்தான் உங்களின் வயதையும் ஒரு முக்கிய அங்கமாக திட்டத்தை தேர்வு செய்வதில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இளம் வயதினர் எனில், தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருப்பீர்கள். ஆகவே, உங்களிடம் தொடர்ந்து பணப்புழக்கம் இருக்கும். உங்கள் தேவையும் பல ஆண்டுகள் கழித்துதான் இருக்கும். ஆகவே, நீங்கள் அதிக ரிஸ்க் உடைய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து, உங்கள் அன்றாட வாழ்வுக்கு தேவையான பணத்தை முதலீடு செய்யும்போது மிகவும் குறைவான ரிஸ்க் உடைய திட்டங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆகவே, உங்கள் தேவை மற்றும் வயதை, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்முன் கவனியுங்கள்.
தசைகளின் காரணத்தினால் ஏற்படும் வலி சில பயிற்சிகள், சிறிது ஓய்வு இவற்றின் மூலம் மறைந்துவிடும். ஆனால், சில சமயங்களில் இந்த வலி பல பிரச்சினைகளைக் கூறும் அறிகுறிகளாக இருக்கலாம்.
* முதுகுவலி இன்றைய கால கட்டத்தில் பலர் கூற கேட்கின்றோம். தசைகளின் காரணத்தினால் ஏற்படும் வலி சில பயிற்சிகள், சிறிது ஓய்வு இவற்றின் மூலம் மறைந்துவிடும். ஆனால், சில சமயங்களில் இந்த வலி பல பிரச்சினைகளைக் கூறும் அறிகுறிகளாக இருக்கலாம். ஆகவே இதில் சற்று கவனம் தேவை.
* தசை, தசை நார்களில் பாதிப்பு.
* மூட்டு வலி.
* எலும்புகளின் முறையின்மை அமைப்பு போன்றவைகளும் முதுகுவலியின் அறிகுறிகளாக இருக்க முடியும்.
* சிறுநீர் பை கீழ் வயிற்றில் அமைந்துள்ளது. சிறுநீர் வெளிப் போக்கு, கழிவு வெளிப்போக்கில் கட்டுப்பாடில்லாமல் இருப்பது, கீழ் முதுகு வலி, கால், உள் தொடை, பாதம் இவற்றில் உணர்வில்லாதது போல் இருப்பது எல்லாம் அவசர சிகிச்சை தேவைப்படுபவை ஆகும்.
* தூக்கத்தில் திடீரென ஏற்படும் முதுகுவலி கோணல் மாணலாக படுப்பதன் காரணமாக இருக்கலாம். பிறகு சரி செய்து கொண்டும் வலி அதிகமாக இருப்பின் மருத்துவ கவனம் தேவை.

* பொதுவான முதுகுவலி, நெஞ்சில் ஒரு அழுத்தம், கழுத்து, தாடை, தோள் பட்டை இவற்றில் வலி.
* வியர்வை அதிகம்.
* வயிற்றுப் பிரட்டல்.
* மூச்சு விடுவதில் சிரமம்.
* சோர்வு போன்றவை மாரடைப்பின் வெளிப்பாடுகளாக இருக்கலாம். வயது கூடக் கூட காலையில் எழுந்திருக்கும் பொழுது உடல் சற்று கடினமாகவும், வலியுடனும் இருக்கும். இது சற்று நீண்ட நேரம் கூட இருக்கலாம். இது ஒருவித வீக்கத்தின் பாதிப்பு. ஆரம்ப நிலையிலேயே இதற்கு நல்ல கவனம் கொடுத்தால் பாதிப்புகள் வெகுவாய் குறையும்.
* திடீரென உயரம் குறைந்தது போல் இருத்தல்.
* அதிக கை, கால் அசைவுகள் இயலாமை.
* நடப்பதும், நிற்பதும் வலியினை அதிகப்படுத்துவது.
* திடீரென அதிக முதுகு வலி போன்றவை உடனடியாக மருத்துவ கவனம் தேவை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.
இது குஜராத் ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக இருக்கும் மேத்தி முத்தியா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெந்தயக்கீரை - 2 கட்டு,
பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்,
பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1½ டீஸ்பூன்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - 1/2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எள் - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரையை போட்டு அதனுடன் பச்சைமிளகாய் விழுது, இஞ்சி விழுது, பூண்டு விழுது, பெருங்காயத்தூள், மஞ்சள்ள தூள், சர்க்கரை, தயிர், கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், எள், உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
வெந்தயக்கீரை - 2 கட்டு,
பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்,
பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1½ டீஸ்பூன்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - 1/2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எள் - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரையை போட்டு அதனுடன் பச்சைமிளகாய் விழுது, இஞ்சி விழுது, பூண்டு விழுது, பெருங்காயத்தூள், மஞ்சள்ள தூள், சர்க்கரை, தயிர், கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், எள், உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான மேத்தி முத்தியா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தமிழ்நாட்டில் 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணத்தையும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் சதவிகிதம் 55.1%. அதுபோல, 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்தசோகையால் ஏன் இவ்வளவு பேர் பாதிக்கின்றனர். எதனால் இந்த பிரச்சனை வருகிறது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். முதலில் ஹீமோகுளோபின் பற்றித் தெரிந்தால் ரத்தசோகை பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.
* ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது புரதம் (Protein), சிவப்பு ரத்த அணுக்களில் (Red Blood Cells) இந்த ஹீமோகுளோபின் எனும் புரதம் இருக்கும்.
* நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும்.
* சிவப்பு ரத்த அணுக்களின் தோற்றத்தை சரியாக பராமரிப்பதற்கும் ஹீமோகுளோபின் முக்கியம்.
* பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் ரத்தசோகை.
* மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்தசோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.
* ரத்தசோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
* ரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
* பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் ரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.
* இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.
* வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
* ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது புரதம் (Protein), சிவப்பு ரத்த அணுக்களில் (Red Blood Cells) இந்த ஹீமோகுளோபின் எனும் புரதம் இருக்கும்.
* நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும்.
* சிவப்பு ரத்த அணுக்களின் தோற்றத்தை சரியாக பராமரிப்பதற்கும் ஹீமோகுளோபின் முக்கியம்.
* பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் ரத்தசோகை.
* மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்தசோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.
* ரத்தசோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
* ரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
* பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் ரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.
* இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.
* வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம்.
குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் விளம்பரங்களைப் பார்த்து கண்ட கிரீம்களை குழந்தையின் மீது தடவக்கூடாது. குறை மாத குழந்தைகளுக்கு உடலின் வளர்ச்சியைவிட சருமத்தின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், எதை தடவினாலும் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறைமாத குழந்தைகளின் உடலினுள் இருக்கும் நீர், நீராவியாக மாறி சருமத்தின் வழியாகத்தான் அதிகமாக வெளியேறும்.
இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை (Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.
அதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிறிது தண்ணீரில் துடைத்து விட்டு, 6 மணி நேரம் கழித்து குளிக்க வைப்பது நல்லது. குறைமாத குழந்தைகளின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பிறகு தினமும் குளிக்க வைப்பது நல்லது. குளிப்பாட்டும்போது, நீரின் சூடானது, குழந்தை உடம்பின் சூட்டோடு ஒத்து இருக்க வேண்டும். மிதமான திரவ வடிவிலான க்ளென்சர் அல்லது ஸின்டெட்ஸ் சோப் போன்ற தோலை எரிச்சல் படுத்தாத பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சிலர் ஸ்பாஞ்ச் போன்றவைகளை உபயோகப்படுத்தி துடைப்பார்கள். இது தவறு.
குழந்தையை துடைக்கும்போது உலர்ந்த மென்மையான பருத்தி துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுந்த துடைக்கக் கூடாது. ஆடையை உடனே அணிவிக்க வேண்டும். நம் ஊரின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும். பருத்தி உடைகளையே குழந்தைகளுக்கு உடுத்த வேண்டும். குழந்தையைப் படுக்க வைக்க உபயோகப்படுத்தும் துணியும் பருத்தியாக இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டியவுடன் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பவுடரை கொட்டி பூசுவார்கள். இது முற்றிலும் தவறானது. குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதுவே குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.
இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை (Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.
அதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிறிது தண்ணீரில் துடைத்து விட்டு, 6 மணி நேரம் கழித்து குளிக்க வைப்பது நல்லது. குறைமாத குழந்தைகளின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பிறகு தினமும் குளிக்க வைப்பது நல்லது. குளிப்பாட்டும்போது, நீரின் சூடானது, குழந்தை உடம்பின் சூட்டோடு ஒத்து இருக்க வேண்டும். மிதமான திரவ வடிவிலான க்ளென்சர் அல்லது ஸின்டெட்ஸ் சோப் போன்ற தோலை எரிச்சல் படுத்தாத பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சிலர் ஸ்பாஞ்ச் போன்றவைகளை உபயோகப்படுத்தி துடைப்பார்கள். இது தவறு.
குழந்தையை துடைக்கும்போது உலர்ந்த மென்மையான பருத்தி துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுந்த துடைக்கக் கூடாது. ஆடையை உடனே அணிவிக்க வேண்டும். நம் ஊரின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும். பருத்தி உடைகளையே குழந்தைகளுக்கு உடுத்த வேண்டும். குழந்தையைப் படுக்க வைக்க உபயோகப்படுத்தும் துணியும் பருத்தியாக இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டியவுடன் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பவுடரை கொட்டி பூசுவார்கள். இது முற்றிலும் தவறானது. குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதுவே குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.






