என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டுவிடும். இதற்கான காரணங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டுவிடும். இதை மருத்துவ ரீதியாக, ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காண்டினன்ஸ் என்று கூறுவர். இதுவும் ஒரு வினோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார்கள்.

    வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள். வீட்டில் உள்ளவர்களிடத்திலேயே இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத பெண்கள் மருத்துவர்களிடத்தும் வருவதில்லை. மேலும் தங்கள் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெண்களிடம் பேசி, அவர்கள் இதை வயது முதிர்ச்சியால் வருவது, இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிவிடுவதால் இதை அப்படியே விட்டு விடுகின்றனர்.

    வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள்தான் அதிகம். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இப்போது இந்நிலை மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில்தான் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலைமை மாறி இங்கேயும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.



    சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தரமாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில்லை. உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம். இத்தகைய பிரச்சினைக்கு எளிதான தீர்வு வந்துள்ளது. ஸ்லிங் என்பது பத்து நிமிடத்தில் மாட்டப்படும் ஒரு எளிமையான சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை. இக்குறைபாடிற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறை இதுவே ஆகும். இதுதவிர பெண்களுக்கு சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன ஏற்படுகின்றன. அவற்றை குணப்படுத்த சில இயற்கை முறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும். சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும். தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும். குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும். அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும். 
    வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கோடையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சியில் ஈடுபட கூடாது. அந்த ஒரு மணி நேரத்திலும் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதுவே வெய்யில் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. அதனால் சம்மரின் போது ஜிம் செல்பவர்கள் இதையெல்லாம் தவறாமல் பின்பற்றவும்.

    ஜிம்முக்கு செல்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள். ஆனால் வெயில் காலத்தில் எப்போதும் குடிப்பதை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து இருக்கும்.

    அதிகம் வியர்ப்பதால் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் அளவு குறையும். அதனால் சோடியம், பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். அதிகமாக இளநீரும் குடிக்கலாம். கோடை காலத்தில் ஜிம் செல்ல ஏற்ற நேரம் அதிகாலை தான். உச்சி வெயிலில் ஜிம் செல்வதை தவிர்க்கவும்.

    உடற்பயிற்சிக்கு பின்னர் நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதே போல் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்கவும். ஏனென்றால் காற்றோட்டமான உடைகள் அணிவது அவசியம்.
    வெண்டைக்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நன்மை புரிகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது.
    வெண்டைக்காய் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது, என்பார்கள். அது அறிவு வளத்தை தூண்டும் ஒரு காய் என்றும் கூறுகிறார்கள். இந்த வெண்டைக்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நன்மை புரிகிறது. இதில் உள்ள நார்ப்பொருட்களால் கொழுப்பு கரைந்து, மலச்சிக்கல் நீங்கும். இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டை பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் போன்றவையும் தணியும்.

    வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரை காயவைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்கு குளிர்ச்சியை தரவும், தோல் வறட்சியை நீக்கவும், உடம்பை பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

    வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகிறது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

    உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயதுடிப்பை சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாக திகழ்கிறது.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். இன்று மாம்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாம்பழக் கூழ் - 2
    ரவை - கால் கப்
    நெய் - தேவையான அளவு
    சர்க்கரை - கால் கப்
    முந்திரி பருப்பு - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்



    செய்முறை :

    முந்திரியை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.

    மாம்பழத்தை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் சிறிது நெய் ஊற்றி அது உருகியதும் ரவையை கொட்டி பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் வாணலியில் சர்க்கரையை கொட்டி, அதனுடன் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    அடுத்து அதில் ரவையை கொட்டி கிளறவும்.

    ரவை நன்றாக வெந்ததும் மாம்பழக்கூழ், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.

    அதனுடன் நெய் சேர்த்து வேக வைக்கவும்.

    நெய் நன்றாக பிரிந்து வந்ததும் இறக்கி, முந்திரி பருப்பு சேர்த்து ருசிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஈகோ தான் பெரும்பாலும் கணவன் மனைவி சண்டைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருமணம் பண்ணும்போதே முக்கியமான மனப்பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து கல்யாணம் பண்ணுங்கள். கணவனையோ அல்லது மனைவியையோ எந்தவித நிபந்தனையுமின்றி காதலியுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். எந்த அளவுக்கு உங்கள் எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு உங்கள் இல்வாழ்க்கை சிறக்கும் என்பது உறுதி.

    திருமணமான புதிதில் காமம் பூரணமாக ஆட்சி புரியும் போது கணவனது குறைகள் மனைவிக்கும், மனைவியின் குறைகள் கணவனுக்கும் தெரிவதேயில்லை. ஆனால் மோகம் தெளிந்த பின்? கணவனும் மனைவியும் அதிக நேரம் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கும் பொழுது கணவனுக்குப் பிடிக்காத விஷயங்கள் மனைவி பண்ணுவதற்கும், மனைவிக்குப் பிடிக்காத விஷயங்கள் கணவன் பண்ணுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஈகோ தான் பெரும்பாலும் கணவன் மனைவி சண்டைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

    'ஈகோ' வைத் தூக்கி எறியுங்கள். குறைகள் இல்லாத மனிதன் உலகின் எந்த மூலையிலும் இல்லை என்பதை உணருங்கள். உங்கள் துணையின் குறைகளை பொறுத்துக் கொள்ள பழகுங்கள். நீங்கள் உண்மையில் உங்கள் கணவனை அல்லது மனைவியை நேசித்தால் அவர்கள் குறைகள் கூட அழகாகத் தெரியும் என்பது நிஜம். உங்கள் துணைவரை மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அது தற்கொலைக்கு சமம். எவ்வளவு சண்டைகள் இருந்தாலும் இல்லற இன்பத்திற்கு மட்டும் 144 போட்டு விடாதீர்கள்.

    திருமணம் செய்யும்போதே அவர்களால் என்னென்ன நன்மைகள், சந்தோஷங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து திருமணம் செய்யாதீர்கள். காலம் முழுவதும் நம்முடன் இருப்பவருக்கு என்னென்ன கொடுக்கலாம் என்று நினைத்து திருமணம் செய்யுங்கள். திருமணம் என்பது இரு உடல்கள் மற்றும் இரு மனங்கள் ஒன்றாக இணைவதற்குச் செய்யும் புனித ஒப்பந்தம். இதில் எந்த நிர்பந்தத்திற்கும் இடமிருக்கக் கூடாது. எதைப் பெறலாம் என்று எதிர்பார்த்து திருமணம் செய்யாதீர்கள். என்ன கொடுக்கலாம் என்று நினைத்து திருமணம் செய்யுங்கள்.
    புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுயபயிற்சியைத் தவிர்த்து ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
    புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுயபயிற்சியைத் தவிர்த்து ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஜிம்முக்குப் போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் டிரெட்மில், சைக்கிளிங் போன்றபயிற்சிக் கருவிகளை வாங்கி வீட்டில் வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே.

    அதேபோல் ஜிம்மைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சிக் கருவிகள், தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மனதுக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்கும்படி பார்த்து சேர்ந்து பயிற்சி பெறவேண்டும்.

    அதிகாலையில் பயிற்சி பெறுவதே சிறந்தது. செய்துவிட்டு, நாளுக்குநாள் நேரத்தை அதிகரிக்க வேண்டும். வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் ஒரு மணிநேரத்திற்குக் குறையாத அளவிற்கு பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் நல்லது.

    நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப்பழக்கமும் தேவையானது. நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம். 
    இயற்கை சார்ந்த சில மூலிகைப் பொருட்கள் மற்றும் நம் இல்லங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முடியை எவ்வாறு பாதுகாத்து பராமரிப்பது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கூந்தலைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், அலங்கரிக்கவும் பெண்கள் செய்யும் செலவுகள் ரொம்பவே அதிகம். அவசர யுகத்தில் விற்பனையில் இருக்கும் பொருட்களில் நம்பகத்தன்மை இல்லை. அதிகமான ரசாயன கலப்பால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு எதிர்பாராதவிதமாக, சில நேரங்களில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்திவிடுகின்றன.

    இவற்றைத் தவிர்க்க இயற்கை சார்ந்த சில மூலிகைப் பொருட்கள் மற்றும் நம் இல்லங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முடியை எவ்வாறு பாதுகாத்து பராமரிப்பது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    ‘‘நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி இயற்கையாகவே கருமை கலந்த ஊதா நிறத்தை தருவது. மருதாணி இலை சிவப்பு நிறத்தை தரும். முதலில் மருதாணி இலையினை அரைத்து தலையில் தடவி சிறிது நேர இடைவெளியில், அவுரி பொடியையும் தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து சுத்தம் செய்தால் வெள்ளை முடிகளில் கருமை நிறம் ஏறி இருக்கும். எந்தவித பக்கவிளைவும் இல்லாத, ஆரோக்கியம் சார்ந்த, பாதுகாப்பான எளிய வழி இது.

    அதேபோல் தேயிலைப் பொடியை வெதுவெதுப்பான நீரில் சற்று ஊறவைத்து அரைமணிநேரத்திற்குப் பின் எலுமிச்சை சாற்றை இணைத்து, அரைத்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தாலும் நரை முடி ஒருவிதமான ப்ரவுன் நிறத்திற்கு மாறி இருக்கும்.

    அதேபோல், கரிசலாங்கண்ணியுடன் கறிவேப் பிலை மற்றும் நெல்லிக்காய் பொடி இணைத்து அரைத்து முடிகளின் வேர் கால்களில் படும்படி தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் வெள்ளை முடியின் வளர்ச்சி கட்டுக்குள் வரும்.

    தலைமுடிகளின் வேர்கால்களுக்கு இடையில் ஏதேனும் நோய்தொற்று (infection) இருப்பின் தேங்காய் எண்ணையில் எலுமிச்சை சாறு கலந்து பஞ்சில் நனைந்து வேர்கால்களின் இடையில் தடவினால், பித்தத்தைக் குறைத்து பாதிப்பில் இருந்து காத்து முடி வளர்ச்சியினை தூண்டும்.மேற்குறிப்பிட்டவை நாட்டு மருந்துக் கடைகளில் கண்டிப்பாக கிடைக்கும்.

    ஏதாவது ஒரு மூலிகை யாராவது ஒருவருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். எனவேமுடியில் தடவுவதற்கு முன், சிலமணித் துளிகள் உடலில் லேசாகத் தடவிப் பார்த்து அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை அறிந்த பிறகு பயன்படுத்தினால் மிகவும் நல்லது.வயது மூப்பின் காரணமாக உடலில் தோன்றும் சின்னச் சின்ன மாற்றங்களை மகிழ்ச்சியாய் வரவேற்போம். முதுமையைப் போற்றுவோம்.
    காலையில் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடுங்கள். இது சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொத்தமல்லி - 1 கட்டு
    புளி - நெல்லிக்காய் அளவு
    கடலைப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 4
    துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    எண்ணெய் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    கொத்தமல்லியை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் தேங்காய் சேர்த்து வதக்கி, பின் புளி சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.

    பின்பு அதில் கொத்தமல்லியை போட்டு 2 நிமிடம் வதக்கிய, பின்னர் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    அனைத்து நன்றாக ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்தால், கொத்தமல்லி துவையல் ரெடி!!!
    முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் பிரசவமாக தான் இருக்கும் என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ, பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன. மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம் காட்டுகிறார்கள்.

    முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் பிரசவமாக தான் இருக்கும் என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. முதல் குழந்தையை சிசேரியனில் பெற்றெடுத்து, 3 வருடங்கள் கழித்து அடுத்த குழந்தையைக் கருவுற்றால், அதை ‘வி பேக் ஆப்ஷன்’ என்போம். 2வது பிரசவத்தின் போது, மருத்துவர் அந்தப் பெண்ணின் அருகிலேயே இருந்து கவனிக்க வேண்டும். முதல் சிசேரியனின் போது, கர்ப்பப்பையின் மேல் போடப்பட்ட தையல் பிரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் குழந்தையை என்ன காரணத்துக்காக சிசேரியன் செய்து எடுத்தார்கள் என்பது முக்கியம்.

    தலை இறங்கவில்லை, இடுப்பெலும்பு பிரச்னை போன்றவை காரணங்கள் என்றால், அடுத்ததும் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம். மற்றபடி, குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததாலோ, ரத்த அழுத்தம் அதிகமானதாலோ, நஞ்சு கீழே வந்ததாலோ, பிரசவ வலியே வராததாலோ சிசேரியன் செய்யப்பட்டிருந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

    தற்போதைய கால கட்டத்தில் செல்போன் பயன்பாட்டின் ஆதிக்கத்தால் ஆரோக்கியமும், உடல் திறனையும் வளர்க்கும் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துபோய் விட்டன என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.
    தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எழுதப்படாத விதிமுறைகள் உண்டு. இன்று டாஸ்’ போட்டு விளையாட்டை தொடங்குவது போல கிராமிய விளையாட்டுகளில் ஆட்டத்தை தொடங்க ஆளை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முறை வைத்திருக்கிறார்கள். தப்பா ஒண்ணு, தவளை ரெண்டு என்று ஆரம்பித்து சுருங்கி விழு என்று முடியும் சிறுபாடலை பாடுவார்கள். சாப்பூட் திரி, காயா-பழமா?, ஒத்தையா-ரெட்டையா? என்று வாய்மொழிகளை கூறும் வழக்கமும் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை பாடி இறுதி வரி யார் மீது முடிகிறதோ அவர் ஆட்டத்தை தொடங்க வேண்டும் என்பது விதி.

    விளையாட்டுப் பருவம் என்றாலே அது குழந்தைப் பருவம்தான். குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் ஏராளம். வீடும், வீதியும், பொட்டலும், ஊர் மந்தையும் குழந்தைகளின் விளையாட்டு களங்கள்.

    குழந்தைகளின் ஆட்டங்கள் பெரும்பாலும் குழு நிலையில் ஆரம்பித்து பிறகு வருவோரையும் தம்முடன் இணைத்துக் கொள்வதாக இருக்கும். இவர்களின் ஆட்டங்கள் பொழுதுபோக்கும், மனமகிழ்ச்சியும் தருபவை. போட்டி விளையாட்டுகள், உடல் திறன் விளையாட்டுகள், அறிவு விளையாட்டுகள் என சில வகைகள் உண்டு. கிட்டிப்புள், பம்பரம், கோலி, கபடி, நீச்சல் என்று பருவம் தோறும் விளையாட்டுகள் மாறும்.

    சிறுவர்களின் பச்சைக்குதிரை ஆட்டம் பிரபலமானது. இது உயரம் தாண்டுதலின் முன்னோடி விளையாட்டு. இதில் முதலில் ஒருவர் தரையில் காலை நீட்டி அமருவார். மற்றவர்கள் காலை தாண்டுவார்கள். பிறகு கால்மேல் கால் வைத்து உயரம் கொஞ்சம் கூட்டப்படும். அதையும் எல்லோரும் தாண்டிவிட்டால் கைகளை நீட்டுவார், பிறகு குனிந்து நிற்பார், கழுத்தை மட்டும் குனிவார், இறுதியில் நிமிர்ந்து நிற்க அனைவரும் தாண்டுவர். இதில் எந்த நிலையில் ஒருவர் தாண்ட முடியாமல் போகிறாரோ அவர் தோற்றவராக காலை நீட்டி உட்காருவார், மற்றவர்கள் தாண்டுவார்கள். இது உடல் திறனை சோதிப்பதும், கூட்டுவதுமான விளையாட்டு.



    பூப்பறிக்க வருகிறோம் ஆட்டம் சிறுமிகளுக்கானது. முதலில் இரு குழுவாக பிரிவர். ஒரு பிரிவினர் ஒவ்வொருவருக்கும் பூக்களின் பெயரைச் சூட்டிக்கொள்வர். பிறகு எதிர் குழுவினர் பூப்பறிக்க வருகிறோம் என்று பாடிக்கொண்டே முன்னே வருவர். என்ன பூ என்று கேட்டதும் ஒரு பூவின் பெயரைச் சொல்வார்கள். அந்த பூ பெயருடையவர் முன்னே வந்து நிற்க (கயிறு இழுத்தல் ஆட்டம் போல) அவரை தங்கள் பக்கம் இழுக்க எதிர் குழு முயற்சிக்கும். இதை பூக்குழுவினர் தடுப்பர். இந்த ஆட்டம் பூக்களை அறிதல் மற்றும் உடல்திறனை மேம்படுத்துகிறது. குழுவாக செயல்படுதல், பொறுப்புணர்ச்சியை வளர்க்கிறது.

    இளம் வயதுப் பெண்கள் ஆடும் ஆட்டங்கள் மிகவும் குறைவு. அதுவும் வீட்டுக்குள் ஆடும் ஆட்டமே. கடும் கட்டுப்பாடு, மிகுதியான வேலை நேரம் தவிர்த்து பல்லாங்குழி, தாயம், சில்லுக்கோடு, தட்டாமலை போன்ற ஆட்டங்களை ஆடுவர்.

    வெளியில் சென்றால் கும்மியாட்டம், கோலாட்டம் ஆடுவார்கள். திருவிழா காலங்களில்தான் இந்த விளையாட்டுகள் மிகுதியாக ஆடப்படும். மகளிர் விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் அடிப்படையாக கொண்டுள்ளன. இவ்விளையாட்டுகள் அறிவுத்திறனையும், உடல்திறனையும் மேம்படுத்துகின்றன.

    தற்போதைய கால கட்டத்தில் செல்போன் பயன்பாட்டின் ஆதிக்கத்தால் ஆரோக்கியமும், உடல் திறனையும் வளர்க்கும் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துபோய் விட்டன என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.

    காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளானை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
    காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளானை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    காச நோயை உருவாக்கும் பாக்டீரியா கிருமிகள், நோய் தாக்கியவர்களின் உடலில் வைட்டமின்-டி சத்துக்களை சேரவிடாமல் தாக்குதல் நடத்திவிடுகிறது. உடலின் அத்தியாவசிய வைட்டமின்களில் ஒன்றான இது தடுக்கப்படுவதால் நோயாளிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.

    இதற்காக வைட்டமின்-டி நிறைந்த உணவுப்பொருட்களை காசநோயாளிகளுக்கு வழங்குவது வாடிக்கை. தற்போது அவர்களுக்கு சிறந்த மாற்று உணவுப்பொருளாக சிப்பிக் காளானை வழங்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார் ஜெர்மனைச் சேர்ந்த ஹோகென்கெய்ம் பல்கலைக் கழக மருத்துவ முனைவர் பட்ட ஆய்வாளர் சேயோம் கெப்லி.

    பொதுவாக சிப்பிக் காளானில் வைட்டமின்-டி அதிக அளவில் இருப்பதில்லை. ஏனெனில் காளான்கள் பெரும்பாலும் வெயிலில் விளைவதில்லை. இருந்தாலும் இவற்றை வெயிலில் காய வைப்பதன் மூலமும், இவை உடலில் செரிமானம் ஆகும் போதும் நிறைய வைட்டமின்-டி சத்து உடலுக்கு கிடைப்பதாக தெரியவந்துள்ளது.

    மருத்துவர் கெப்லி தனது குழுவி னருடன் சேர்ந்து 32 காசநோயாளிகளுக்கு 4 மாதத்திற்கு காளான் உணவுகளை கொடுத்து ஆய்வு செய்தார். அப்போது 95 சதவீதம் பேருக்கு நோய் பாதிப்பு அதிகமாவது தடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே நோயின் தீவிரம் காளான் உணவுகளால் கட்டுப்படுத்தப்படுவது நிரூபணமானது.

    இந்த வகை காளான்களை எங்கும் எளிமையாக வளர்க்க முடியும் என்பதால் காளான் உணவை, காசநோயாளிகளுக்கான சிறந்த மாற்று உணவாக வழங்கலாம் என்று ஆய்வுக்குழு கூறி உள்ளது. காளானில் வைட்டமின்-டி சத்துகளை அதிகமாக சேமிப்பது எப்படி என்பது பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது ஆய்வுக்குழு. அமெரிக்காவில் விரைவில் நடைபெற உள்ள சத்துக்கள் தொடர்பான வருடாந்திர மாநாட்டில் இந்த காளான் உணவு பற்றி விவாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    மருத்துவ குணங்களும், போஷாக்கும் நிறைந்த சிறுதானியங்களை அதிக அளவில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்பது சாலச்சிறந்தது.

    மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம், இவைகளில் முக்கியமாக உணவு அமைந்துள்ளது. மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், ஊட்டங்களும் நம்முடைய உணவில் ஒரு சேர உள்ளது. இவைகளில் முக்கிய பங்கு வகிப்பவை சிறு தானியங்கள். இதில் புரதம், வைட்டமின்கள், கொழுப்பு சத்து, மினரல்கள், கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் உடல் எடை அதி கரித்தல், இதய நோய்கள் வராமல் நமது உடலை பாதுகாக்கிறது.

    இன்றைய நவீன உலகில் சுத்திகரிக்கப்பட்ட -எனும் முறையால் தானியத்தில் தவிடு மற்றும் கிருமி முழுவதுமாக நீக்கப்படுகிறது. மீதம் உள்ள சூழ்தசையில் வெறும் கார்போஹைரேட்டு சத்து மட்டுமே இருக்கிறது. மற்ற சத்துக்கள் முழுவதுமாக நீக்கப்படுகிறது. இதை உட்கொள்ளும் மனிதனுக்கு நோய்கள் அழையா விருந்தாளியாக வந்து விடுகிறது.

    எந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரியாமலேயே மனிதன் வாழ்ந்து வருகிறான். பிறகு நோய்கள் வந்த நிலையில் மருந்துகளையே உணவிற்கு பதிலாக உண்டு வாழும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறான். சிறு தானிய உணவு உண்பதால் கிடைக்கும் 20 விதமான நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

    ஊட்டச்சத்து

    உடலின் சரியான செயல் பாட்டிற்கு தேவையான பல ஆரோக்கியமான ஊட்டசத்துக்கள் சிறு தானியங்களில் நிறைந்துள்ளன. ரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் ரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைபடும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன. மேலும் சிறு தானியங்களில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. எனவே இது ரத்த கோசையை குணப்படுத்த உதவும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்து கொண்டால் எலும்புகளை வலுவடைய செய்கிறது.

    கரோனரி தமனி கோளாறுகளை தடுக்கிறது

    சிறுதானியங்கள் அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளில் அளவினைக் குறைக்க உதவும். சிறுதானியங்கள் ரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து ரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் வாதம் மற்றும் கரோனரி தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகிறது.

    அதிக அளவு வைட்டமின் “பி”

    சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் “பி” கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் திறமையாக உடைத்து அதனை ஆற்றலாக மாற்றுகின்றது. வைட்டமின் பி ரத்தத்தில் உள்ள ஹோர்மோசைஸ்டீன் அளவைக்குறைக்கிறது. இவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்பு கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது. நியாசின் ரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்துச் செல்லப்படுவதை தடுக்கிறது. மேலும் நல்ல கொழுப்பு எனப்படும் உயர் அடர்த்தி புரத கொழுப்பின் அளவினை ரத்தத்தில் அதகரிக்க செய்கிறது. இது ரத்த நாளங்களின் தடிப்பு மற்றும் ரத்தக் கசிவு ஏற்படுவதிலிருந்தும் இதயத்தை பாதுகாக்கிறது.

    பசையம் (குளுட்டம்) அறவே இல்லை

    காய்கறிகளை மட்டும் உண்ணும் சைவப் பிரியர்களால் மிகவும் நேசிக்கப்படும் உணவு சிறு தானியங்களாகும். ஏனெனில் சிறு தானியங்களில் நிறைந்திருக்கும் புரதசத்து தான் இதற்கு காரணம். தினசரி கார்போஹைட்ரேட் மூலம் தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிக அளவில் கிடைக்கிறது. இறைச்சி உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் சிறு தானியங்களில் இருக்கும் புரதகூட்டமைப்பு கோதுமையில் உள்ளது போலவே இருக்கிறது. ஒரே ஒரு விதிவிலக்கு என்ன வென்றால் அதிக சத்துகள் அடங்கிய சிறு தானியங்களில் பசையம் (குளுட்டன்) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படுவது இல்லை. ஆனால் முழு கோதுமையில் அதிக அளவு பசையம் (குளுட்டன்) உள்ளது. பசையம் சிறுதானியங்களில் இல்லாத காரணத்தால் செரிமானத் தன்மையை அதிகமாக்குகிறது.



    விரைவான உடல் எடை இழப்பு

    சிறுதானியங்களில் டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலத்தை கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையை குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுகிறது. டிரிப்டோபான் மூலம் உணவு செரிமானத்தை மெதுவான வேகத்தில் நடத்துகிறது. இதன் மூலம் நீண்ட காலத்திற்கு வயிற்றினை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அடிக்கடி பசிப்பதை தடுத்து அதிகமாக உண்பதையும் தடுக்கிறது. இதனால் உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாக சிறுதானியங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

    புற்றுநோய்

    சிறுதானியங்களில் நார்சத்து மற்றும் தாவர ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. நார்சத்து மற்றும் தாவர ஊட்டசத்துக்கள் இவ்விரண்டும் சேர்ந்து க்கோலான் புற்று நோய் வளரும் அபாயத்தை குறைக்கும். லிக்னைன் எனப்படுவது சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது. பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உண்மையில் சிறுதானியங்களை உட்கொள்வது மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலிருந்து 50% குறைக்கலாம்.

    உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்தல்

    தமனிகளில் உள்ள உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறு தானியங்களில் உள்ள மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. மேலும் இது மூச்சுத்தடை நோய் (ஆஸ்துமா) மற்றும் ஒற்றைதலைவலிகள் ஏற்படுவதன் அளவினை குறைக்கிறது.

    பசையம் ஒவ்வாமை நோயை தடுத்தல்:

    பசையம் ஒவ்வாமை நோய் என்பது சிறு குடலை சேதப்படுத்தும் ஒரு வகையான நோய் ஆகும். இந்நோய் ஏற்படுவதினால் சிறுகுடல் பாதிக்கப்பட்டு உணவில் இருந்து ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் பசையம் போன்ற பசை தன்மை கொண்ட பொருளை தாங்கி கொள்ள முடியாது. இதன் காரணமாகத் தான் சிறுதானியங்களை உட்கொள்ள அதிக அளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. சிறுதானியங்களில் பசையம் கிடையாது. எனவே இந்நோயிலிருந்து காத்து கொள்ளலாம்.

    நீரிழிவு நோய்

    சிறு தானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதினால் செரிமானத்திற்கான செய்முறைகள் குறைந்த அளவில் மெதுவாக நடைபெறுகின்றது. இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்து கொள்ள உதவுகிறது. அதிலும் குறிப்பாக வைகை-2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய். மேலும் வழக்கமாக உட்கொள்ளப்படும் கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது.

    நார்ச்சத்து நிறைந்தது

    சிறு தானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறு தானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை இல்லாத தானிங்களாக கருதப்படுகிறது. சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து உடலுக்கு தீங்குகளை விளைவிக்கும் கொழுப்பினை வெளியேற்ற உதவுகின்றன.

    இதனால் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாய் பெண்கள் நார்ச் சத்து மிகுதியான உணவு களை உட்கொண்டால் கல் உருவாகுதலை தடுக்க உதவும். மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு காரணமான பித்த அமிலங்களின் சுரப்பை குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவினை உண்ணாதவர்களுடன் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உண்பவர்களுக்கு 13 சதவீதம் பித்தப்பை கற்கள் உருவாகுவது குறைக்கப்படுகிறது என பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    சிறுதானியங்களில் உள்ள அதிக அளவிலான உயிர்வளியேற்ற எதிர்பொருள்கள் உடலில் உள்ள தீவிரமான நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுகின்றன. மேலும் உயிர்வளியேற்ற எதிர்ப் பொருள்கள் மிக விரைவில் வயதாவதற்கான செயல் முறையின் வேகத்தையும் குறைக்கின்றன. இதனாலேயே மருத்துவர்கள் சிறுதானியங்களை மிகப்பெரும் மருந்தாக சிறியவர்கள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பரிந்துரைக்கின்றனர். தசைகள் சீரழிவதை குறைக்கிறது.

    சிறுதானியங்கள் அதிக புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் குறைபாட்டை குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது. எனவே சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது.

    தூக்கக் குறைபாட்டினை குறைக்கிறது

    சிறுதானிங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். செரோபோனின் அளவை அதிகப்படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் ஒரு குவளை சிறுதானியங்களால் செய்யப்படும் கஞ்சியினைக் குடித்து வந்தால் ஒலியற்ற மற்றும் அமைதியான தூக்கத்தினைப் பெற முடியும். தூக்கமின்மையால் அல்லல்படுபவர்கள் இரவில் சிறு தானியங்களை உண்ணலாம். பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகு அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கேழ்வரகு உடலில் மார்பகப் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் தாய் தன் குழந்தைக்கு நீண்ட காலம் உணவளிக்க உதவுகிறது.

    அதிக அளவு பாஸ்பரஸ்

    சிறுதானியங்களில் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ் செல்களின் வடிவத்தை கட்டமைக்க உதவுகிறது. சிறு தானியங்களில் உள்ள அடினைன் டிரைபாஸ்ட் எனும் கலவைகள் உள்ளன. இவை உடலின் ஆற்றலை பலமடங்கு அதிகரிக்கின்றது. மேலும் பாஸ்பரஸ் உடலின் அத்தியாவசியமான லிப்பிடு கூட்டமைப்பினை கொண்டுள்ளது.அதிலும் குறிப்பாக உயிரணு சவ்வுகள் மற்றும் நரம்பு மண்டல அமைப்பு போன்றவற்றிற்கு பாஸ்பரஸ் இன்றியமையாத தேவையாக உள்ளது.

    இளமையான சருமம் பெறுதல்

    அதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமையுடன், மிருதுவான தோற்றத்துடனும், பொலிவடைய செய்கிறது. சேதமடைந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

    சிறுதானியங்களில் உள்ள செலினியம், வைட்ட மின்&சி, வைட்டமின்&பி போன்றவை சூரியனால் தோலில் ஏற்படும் சேதம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக சருமத்தை காக்கிறது. சிறுதானியங்களில் தோலில் புதுசெல்கள் வளர்வதை ஊக்குவிக்கிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கின்றன.

    சிறுதானியங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது.

    இளநரை

    இளம் வயதிலேயே முடி நரைப்பது அல்லது மொட்டையாவது, செம்பட்டையாக மாறுவது திசுக்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றம் மூலம் நடைபெறுகிறது. சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் திசுக்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன. இதன் மூலம் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன-. சிறுதானியங்களை இளைஞர்கள், இளைஞிகள் அதிக அளவில் பயன்படுத்துவது நல்லது.

    கீழ்வாதம் எலும்பு முறிவு

    கீழ்வாதம் வருவது தடுக்கப்படுகிறது. எலும்பு முறிவுகளிலிருந்து மிக விரைவில் மீள உதவுகிறது. இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய சிறு தானியங்களை அதிகம் உணவாக எடுத்து கொள்வது நல்லது. இவ்வளவு மருத்துவ குணங்களும், போஷாக்கும் நிறைந்த சிறுதானியங்களை அதிக அளவில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்பது சாலச்சிறந்தது.
    ×