என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இட்லிக்கு அருமையான கொத்தமல்லி துவையல்
Byமாலை மலர்24 Jun 2019 4:25 AM GMT (Updated: 24 Jun 2019 4:25 AM GMT)
காலையில் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடுங்கள். இது சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி - 1 கட்டு
புளி - நெல்லிக்காய் அளவு
கடலைப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 4
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லியை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் தேங்காய் சேர்த்து வதக்கி, பின் புளி சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.
பின்பு அதில் கொத்தமல்லியை போட்டு 2 நிமிடம் வதக்கிய, பின்னர் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
அனைத்து நன்றாக ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்தால், கொத்தமல்லி துவையல் ரெடி!!!
கொத்தமல்லி - 1 கட்டு
புளி - நெல்லிக்காய் அளவு
கடலைப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 4
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லியை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் தேங்காய் சேர்த்து வதக்கி, பின் புளி சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.
பின்பு அதில் கொத்தமல்லியை போட்டு 2 நிமிடம் வதக்கிய, பின்னர் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
அனைத்து நன்றாக ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்தால், கொத்தமல்லி துவையல் ரெடி!!!
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X