என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குழந்தைக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தெந்த வயதுக் குழந்தைகளுக்கு, என்னென்ன மாதிரி உணவு கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.
”குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சத்துமாவுக்கஞ்சி, பருப்பு, மசித்த இட்லி, மசித்த சாதம், இடியாப்பம், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழம், வேகவைத்த கேரட், வேகவைத்த ஆப்பிள் எனக் கொடுக்கலாம்.
ஒரு வயசுக்கு அப்புறம், பெரியவங்க சாப்பிடும் எல்லா வகை உணவுகளையுமே கொடுக்கலாம். 3, 4 வயதுக்கு மேல் லிமிட்டேஷன் இருக்கத் தேவையில்லை. எப்பவுமே பருப்பு வகைகள், கீரை வகைகள், தானியங்கள், விட்டமின் நிறைந்த உணவு வகைகள், புரதம் சார்ந்தவை, அசைவம் என பேலன்ஸ்டு டயட்டை பழக்குங்க உங்க குழந்தைக்கு.
”நாளொன்றுக்கு 3 வகை தானியங்கள், 2 - 3 வகை பருப்புகள், 2 - 3 வகை காய்கள், 2 - 3 வகை பழங்கள் (ஜூஸாக அல்லாமல் துண்டுகளாக), 2 3 டீஸ்பூன் எண்ணெயை உணவில் சேர்க்கணும். இப்படியான உணவு… வளமான ஆரோக்கியம், சீரான வளர்ச்சி, தேவையான நோய் எதிர்ப்புசக்தினு உங்க குழந்தைகளை முறையா வளர்க்கும்.
பிறந்ததிலிருந்து 12 வயது வரையிலான குழந்தைகளின் எடை எவ்வளவு இருக்க வேண்டும், மேலும் அவர்கள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு கலோரி மற்றும் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நட்ஸ், இறைச்சி, மீன் உணவுகள், பால் பொருட்கள்னு குழந்தைகளை சாப்பிட வைக்கணும். பால்தான் சத்துனு அவங்ககூட மல்லுக்கட்டி ஒரு நாளைக்கு மூணு டம்ளர் பால் சாப்பிட வைக்கிறது; குண்டா இருக்காங்கனு மொத்தமா கொழுப்பு உணவுகள்ல இருந்து விலக்கி வைக்கிறது; நட்ஸ் நல்லா சாப்பிடுவாங்கனு, தொடர்ந்து அதையே கொடுக்கறதுனு பிடிவாதமா இருக்கக் கூடாது. இதையெல்லாம் செய்தா… சில சத்துகள் மட்டுமே அவங்களுக்கு தொடர்ந்து கிடைக்கற மாதிரியாயிடும். சில சத்துகள் அவங்க உடம்பில் சேராமலே போகும் சூழலையும் ஏற்படுத்தும்.
ஒரு வயசுக்கு அப்புறம், பெரியவங்க சாப்பிடும் எல்லா வகை உணவுகளையுமே கொடுக்கலாம். 3, 4 வயதுக்கு மேல் லிமிட்டேஷன் இருக்கத் தேவையில்லை. எப்பவுமே பருப்பு வகைகள், கீரை வகைகள், தானியங்கள், விட்டமின் நிறைந்த உணவு வகைகள், புரதம் சார்ந்தவை, அசைவம் என பேலன்ஸ்டு டயட்டை பழக்குங்க உங்க குழந்தைக்கு.
”நாளொன்றுக்கு 3 வகை தானியங்கள், 2 - 3 வகை பருப்புகள், 2 - 3 வகை காய்கள், 2 - 3 வகை பழங்கள் (ஜூஸாக அல்லாமல் துண்டுகளாக), 2 3 டீஸ்பூன் எண்ணெயை உணவில் சேர்க்கணும். இப்படியான உணவு… வளமான ஆரோக்கியம், சீரான வளர்ச்சி, தேவையான நோய் எதிர்ப்புசக்தினு உங்க குழந்தைகளை முறையா வளர்க்கும்.
பிறந்ததிலிருந்து 12 வயது வரையிலான குழந்தைகளின் எடை எவ்வளவு இருக்க வேண்டும், மேலும் அவர்கள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு கலோரி மற்றும் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நட்ஸ், இறைச்சி, மீன் உணவுகள், பால் பொருட்கள்னு குழந்தைகளை சாப்பிட வைக்கணும். பால்தான் சத்துனு அவங்ககூட மல்லுக்கட்டி ஒரு நாளைக்கு மூணு டம்ளர் பால் சாப்பிட வைக்கிறது; குண்டா இருக்காங்கனு மொத்தமா கொழுப்பு உணவுகள்ல இருந்து விலக்கி வைக்கிறது; நட்ஸ் நல்லா சாப்பிடுவாங்கனு, தொடர்ந்து அதையே கொடுக்கறதுனு பிடிவாதமா இருக்கக் கூடாது. இதையெல்லாம் செய்தா… சில சத்துகள் மட்டுமே அவங்களுக்கு தொடர்ந்து கிடைக்கற மாதிரியாயிடும். சில சத்துகள் அவங்க உடம்பில் சேராமலே போகும் சூழலையும் ஏற்படுத்தும்.
கறிவேப்பிலை மிளகு குழம்பு பிரசவித்த பெண்களுக்கு மிகவும் நல்லது. மழை நேரத்தில் ஏற்படும் ஜுரம், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு,
மிளகு - 20,
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,

செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து… புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு,
மிளகு - 20,
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து… புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
சூப்பரான கறிவேப்பிலை மிளகு குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது, அரோமா ஆயில். அரோமா ஆயில் உதவியுடன் வீட்டிலேயே தேக வனப்பை மீட்கும் எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
அரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசம்மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது, மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்துக் கடை மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். ‘‘சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது, அரோமா ஆயில்!’’. அரோமா ஆயில் உதவியுடன் வீட்டிலேயே தேக வனப்பை மீட்கும் எளிய வழிகள் இதோ!
க்ளென்சிங் கவர்ச்சி!
தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தைக் கழுவவும்.
பலன்: சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், அரோமா ஆயிலின் வாசனையானது, சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.
நீராவி பியூட்டி!
எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கான குறிப்பு இது. ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் பெப்பர் மின்ட் ஆயில், லாவெண்டர் ஆயில், மின்ட் ஆயில் தலா இரண்டு சொட்டுகள் விட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் ஏற்றி கொதிக்கவிடவும். இதில் முகத்துக்கு நீராவி எடுக்கவும்.
பலன்: முகத்தில் சுரக்கும் அதிக எண்ணெய்ப் பசையை மட்டுப்படுத்துவதுடன், சருமத்தில் படிந்துள்ள அழுக்கை வெளியேற்றி பொலிவாக்கும்.
வறண்ட சருமத்தினருக்கும் இருக்கிறது அழகுக் குறிப்பு. ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் ஜெரேனியம் ஆயில் (geranium oil), லாவெண்டர் ஆயில், யலாங் யலாங் ஆயில் (ylang ylang oil) தலா இரண்டு சொட்டுகள் விட்டு, மூடிக் கொதிக்க விடவும். கொதித்த பின் நீராவி பிடிக்கவும்.
பலன்: முகத்தின் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்.
சரும அடுக்குகளில் ஊடுருவும் ஆயில்!
பொதுவாக பொலிவிழந்த சருமத்தை உடனடியாகப் பளிச்சென காட்டவும், அந்தப் பொலிவு அதிகபட்சம் மூன்று நாட்கள் நிலைக்கவும் ஃபேஸ்பேக் உதவி செய்யும். ஆனால் கரும்புள்ளி, பரு, மங்கு போன்ற சருமத்தின் இரண்டாவது அடுக்கின் பிரச்னைகளையும், சுருக்கம், கோடுகள், வயதான தோற்றம், சருமத் தளர்வு போன்ற சருமத்தின் மூன்றாவது அடுக்கின் பிரச்னைகளையும் சரிசெய்வது, அரோமா ஆயிலின் தனிச்சிறப்பு. இதற்கு, லாவெண்டர் ஆயில், லைம் ஆயில், பச்சோலி ஆயில், சீடர் வுட் ஆயில், யலாங் யலாங் ஆயில் இவற்றில் ஏதாவது இரண்டு ஆயில்களில் தலா இரண்டு சொட்டுகளை, ஃபேஸ்பேக் போடும் முன் அதில் கலந்து முகத்துக்கு அப்ளை செய்யவும்.
பலன்: அரோமா ஆயிலின் மூலக்கூறுகள் சருமத்தின் துவாரங்களைவிட மிகச்சிறியது. அதனால் ஃபேஸ்பேக் போட்ட 2 முதல் 20 விநாடிகளுக்குள் இந்த ஆயில் சருமத்தின் மூன்றாவது அடுக்குவரை ஊடுருவி சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும்.
க்ளென்சிங் கவர்ச்சி!
தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தைக் கழுவவும்.
பலன்: சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், அரோமா ஆயிலின் வாசனையானது, சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.
நீராவி பியூட்டி!
எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கான குறிப்பு இது. ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் பெப்பர் மின்ட் ஆயில், லாவெண்டர் ஆயில், மின்ட் ஆயில் தலா இரண்டு சொட்டுகள் விட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் ஏற்றி கொதிக்கவிடவும். இதில் முகத்துக்கு நீராவி எடுக்கவும்.
பலன்: முகத்தில் சுரக்கும் அதிக எண்ணெய்ப் பசையை மட்டுப்படுத்துவதுடன், சருமத்தில் படிந்துள்ள அழுக்கை வெளியேற்றி பொலிவாக்கும்.
வறண்ட சருமத்தினருக்கும் இருக்கிறது அழகுக் குறிப்பு. ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் ஜெரேனியம் ஆயில் (geranium oil), லாவெண்டர் ஆயில், யலாங் யலாங் ஆயில் (ylang ylang oil) தலா இரண்டு சொட்டுகள் விட்டு, மூடிக் கொதிக்க விடவும். கொதித்த பின் நீராவி பிடிக்கவும்.
பலன்: முகத்தின் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்.
சரும அடுக்குகளில் ஊடுருவும் ஆயில்!
பொதுவாக பொலிவிழந்த சருமத்தை உடனடியாகப் பளிச்சென காட்டவும், அந்தப் பொலிவு அதிகபட்சம் மூன்று நாட்கள் நிலைக்கவும் ஃபேஸ்பேக் உதவி செய்யும். ஆனால் கரும்புள்ளி, பரு, மங்கு போன்ற சருமத்தின் இரண்டாவது அடுக்கின் பிரச்னைகளையும், சுருக்கம், கோடுகள், வயதான தோற்றம், சருமத் தளர்வு போன்ற சருமத்தின் மூன்றாவது அடுக்கின் பிரச்னைகளையும் சரிசெய்வது, அரோமா ஆயிலின் தனிச்சிறப்பு. இதற்கு, லாவெண்டர் ஆயில், லைம் ஆயில், பச்சோலி ஆயில், சீடர் வுட் ஆயில், யலாங் யலாங் ஆயில் இவற்றில் ஏதாவது இரண்டு ஆயில்களில் தலா இரண்டு சொட்டுகளை, ஃபேஸ்பேக் போடும் முன் அதில் கலந்து முகத்துக்கு அப்ளை செய்யவும்.
பலன்: அரோமா ஆயிலின் மூலக்கூறுகள் சருமத்தின் துவாரங்களைவிட மிகச்சிறியது. அதனால் ஃபேஸ்பேக் போட்ட 2 முதல் 20 விநாடிகளுக்குள் இந்த ஆயில் சருமத்தின் மூன்றாவது அடுக்குவரை ஊடுருவி சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும்.
‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடிய அல்சைமர் நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது.
வருகிற 2030-ம் ஆண்டில் உலகெங்கும் அல்சைமருடன் வாழ்பவர்கள் எண்ணிக்கை ஏழரைக் கோடியாக உயரும் என்றும், 2050-ல் அது 13 கோடியே 15 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அல்சைமரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவில் அல்சைமர் தொடர்பான பிரச்சினைகளால் இறப்பவர்களில் மூன்றில் இருவர் பெண்கள்.
அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்சைமரே பெண்களை அதிகம் பாதித்திருக்கிறது.
60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பெண்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம். 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகம் பேரை பலிவாங்கும் நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதய நோயைப் பின்னுக்குத் தள்ளி பெண்களிடையே அதிகளவில் இறப்புக்குக் காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது. இதன் எண்ணிக்கை மிகப்பெரிதாக உள்ளது. இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார், அன்டோநெல்லா சன்ட்கின்சாதா.
இவர் சுவிட்சர்லாந்தில் அல்சைமர் சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறு நிபுணராகவும் உள்ளார். பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவதால் இதில் விரிவான ஆய்வு அவசியம் என்கிறார் இவர். அல்சைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. வயது ஏற ஏற அல்சைமர் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்சைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.
65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே அல்சைமர் வருவது குறைந்தது இச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இதய நோய்கள், புகைப்பிடித்தல் பற்றி மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களே இதற்குக் காரணம். மேற்கண்ட இரண்டும்தான், அல்சைமரை ஏற்படுத்துவதற்கான முக்கியக் காரணிகளாகும். பெண்களிடையே மனஅழுத்தப் பிரச்சினை இருக்கும் நிலையில் அது அல்சைமருக்கு வழி வகுக்கிறது.

பிரசவ கால சிக்கல்கள், மாத விடாயை அறுவைசிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள், காரணிகளும் அல்சைமருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்சைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர் கூறுகிறார். அமெரிக்காவில் இது போன்று இருப்பவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதுபோன்ற தகவல்கள் பாலின அடிப்படையில் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உதவும் என்கிறார் மரியா தெரசா பெரட்டி. ஜூரிச் பல்கலைக்கழகத்தில் அல்சைமர் குறித்து ஆய்வு செய்து வரும் மருத்துவ ஆராய்ச்சியாளர் இவர். இந்த யோசனை வேகமாக செயல்வடிவம் பெற்றுவருகிறது.
பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அல்சைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் காணப்படும் மன ரீதியான வெளிப்பாடுகள், அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுகிறது என்கிறது இந்த ஆலோசனைக் குழு. இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.
மூளையில் சேர்ந்துள்ள இரு வகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வருகிறது.
ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என ஆராயப்பட வேண்டியுள்ளது.
வருகிற 2030-ம் ஆண்டில் உலகெங்கும் அல்சைமருடன் வாழ்பவர்கள் எண்ணிக்கை ஏழரைக் கோடியாக உயரும் என்றும், 2050-ல் அது 13 கோடியே 15 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அல்சைமரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவில் அல்சைமர் தொடர்பான பிரச்சினைகளால் இறப்பவர்களில் மூன்றில் இருவர் பெண்கள்.
அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்சைமரே பெண்களை அதிகம் பாதித்திருக்கிறது.
60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பெண்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம். 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகம் பேரை பலிவாங்கும் நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதய நோயைப் பின்னுக்குத் தள்ளி பெண்களிடையே அதிகளவில் இறப்புக்குக் காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது. இதன் எண்ணிக்கை மிகப்பெரிதாக உள்ளது. இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார், அன்டோநெல்லா சன்ட்கின்சாதா.
இவர் சுவிட்சர்லாந்தில் அல்சைமர் சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறு நிபுணராகவும் உள்ளார். பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவதால் இதில் விரிவான ஆய்வு அவசியம் என்கிறார் இவர். அல்சைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. வயது ஏற ஏற அல்சைமர் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்சைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.
65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே அல்சைமர் வருவது குறைந்தது இச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இதய நோய்கள், புகைப்பிடித்தல் பற்றி மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களே இதற்குக் காரணம். மேற்கண்ட இரண்டும்தான், அல்சைமரை ஏற்படுத்துவதற்கான முக்கியக் காரணிகளாகும். பெண்களிடையே மனஅழுத்தப் பிரச்சினை இருக்கும் நிலையில் அது அல்சைமருக்கு வழி வகுக்கிறது.

பிரசவ கால சிக்கல்கள், மாத விடாயை அறுவைசிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள், காரணிகளும் அல்சைமருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்சைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர் கூறுகிறார். அமெரிக்காவில் இது போன்று இருப்பவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதுபோன்ற தகவல்கள் பாலின அடிப்படையில் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உதவும் என்கிறார் மரியா தெரசா பெரட்டி. ஜூரிச் பல்கலைக்கழகத்தில் அல்சைமர் குறித்து ஆய்வு செய்து வரும் மருத்துவ ஆராய்ச்சியாளர் இவர். இந்த யோசனை வேகமாக செயல்வடிவம் பெற்றுவருகிறது.
பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அல்சைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் காணப்படும் மன ரீதியான வெளிப்பாடுகள், அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுகிறது என்கிறது இந்த ஆலோசனைக் குழு. இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.
மூளையில் சேர்ந்துள்ள இரு வகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வருகிறது.
ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என ஆராயப்பட வேண்டியுள்ளது.
தற்போது கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது. சரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா?
அதற்கான ஆலோசனைகள் இதோ...
சுய வரையறையை நிர்ணயித்துக் கொள்வது
ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள்.
முதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.
நீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறிப்பிட்ட வரையறையை நெருங்கும்போது அல்லது தாண்டும்போது கார்டு நிறுவனம் உங்களை எச்சரிக்கும்.
உங்கள் கார்டு திருடப்பட்டு பயன் படுத்தப்பட்டாலும், அந்த வரையறையைத் தாண்டி செலவு செய்ய முடியாது.

வலுவான ‘பாஸ்வேர்டு’
புதிய ‘டிஜிட்டல் இந்தியா’ உந்துதலால், தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கணக்கில், நாம் செய்திருக்கும் பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பதால், நாம் எப்போதும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்துவது நல்லது. நமது பாஸ்வேர்டு, எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கொண்டதாய், எளிதில் ஊகிக்க முடியாததாய் இருக்க வேண்டும்.
வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றுவதும் அவசியம். ஆன்லைன் என்றாலும், ஆப்லைன் என்றாலும், பரிவர்த்தனையின்போது நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பிறரிடம் நமது பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக் கூடாது.
பொது இடங்களில்...
பொது இடங்களில் கிரெடிட், டெபிட் கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நமது கார்டு எண், ஏமாற்றுப் பேர்வழிகளால் திருடப்படவோ, படம் எடுக்கப்படவோ வாய்ப்பு அதிகம்.
உங்களின் கிரெடிட் கார்டு குறித்த எந்தத் தகவலையும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. காரணம், இணைய வழியிலான தகவல் திருட்டு இன்று மிக அதிகம்.
‘வருமுன் காக்க வேண்டும்’ என்பது பழமொழி. மோசடிக்கு உள்ளானபின் வருந்துவதை விட, அது நடக்காமல் தற்காத்துக்கொள்வதே சிறப்பு.
பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு வசதியான வழியாக இருக்கலாம், நாம் கார்டை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப ஊக்கப்பரிசுகளும் தள்ளுபடிகளும் கிடைக்கலாம். அதேநேரம், கிரெடிட் கார்டில் மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகம்.
எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், எப்போதும்போல் வசதியாக கார்டுகளை பயன்படுத்துங்கள்.
அதற்கான ஆலோசனைகள் இதோ...
சுய வரையறையை நிர்ணயித்துக் கொள்வது
ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள்.
முதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.
நீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறிப்பிட்ட வரையறையை நெருங்கும்போது அல்லது தாண்டும்போது கார்டு நிறுவனம் உங்களை எச்சரிக்கும்.
உங்கள் கார்டு திருடப்பட்டு பயன் படுத்தப்பட்டாலும், அந்த வரையறையைத் தாண்டி செலவு செய்ய முடியாது.
உங்களின் தனிப்பட்ட கிரெடிட் லிமிட்டை பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக அமைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் பயன்படுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய பயன்படுத்துவது, உணவகங்களில் உணவு உண்ண உபயோகிப்பது இப்படி. ‘ஆட்-ஆன்’ கார்டுகள் எனப்படும் கூடுதல் கார்டுகளிலும் இதுபோல ‘சப் லிமிட்’டை பிரதான கார்டுதாரர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.

வலுவான ‘பாஸ்வேர்டு’
புதிய ‘டிஜிட்டல் இந்தியா’ உந்துதலால், தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கணக்கில், நாம் செய்திருக்கும் பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பதால், நாம் எப்போதும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்துவது நல்லது. நமது பாஸ்வேர்டு, எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கொண்டதாய், எளிதில் ஊகிக்க முடியாததாய் இருக்க வேண்டும்.
வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றுவதும் அவசியம். ஆன்லைன் என்றாலும், ஆப்லைன் என்றாலும், பரிவர்த்தனையின்போது நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பிறரிடம் நமது பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக் கூடாது.
பொது இடங்களில்...
பொது இடங்களில் கிரெடிட், டெபிட் கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நமது கார்டு எண், ஏமாற்றுப் பேர்வழிகளால் திருடப்படவோ, படம் எடுக்கப்படவோ வாய்ப்பு அதிகம்.
உங்களின் கிரெடிட் கார்டு குறித்த எந்தத் தகவலையும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. காரணம், இணைய வழியிலான தகவல் திருட்டு இன்று மிக அதிகம்.
‘வருமுன் காக்க வேண்டும்’ என்பது பழமொழி. மோசடிக்கு உள்ளானபின் வருந்துவதை விட, அது நடக்காமல் தற்காத்துக்கொள்வதே சிறப்பு.
பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு வசதியான வழியாக இருக்கலாம், நாம் கார்டை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப ஊக்கப்பரிசுகளும் தள்ளுபடிகளும் கிடைக்கலாம். அதேநேரம், கிரெடிட் கார்டில் மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகம்.
எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், எப்போதும்போல் வசதியாக கார்டுகளை பயன்படுத்துங்கள்.
பல்லாண்டு காலம் உடற்பயிற்சிகள் இன்றி சோம்பேறியாக நாட்களைக் கழித்த நடுத்தர வயதினரும், தமது வாழ்க்கையில் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்களை இல்லாமல் போக்கமுடியும் என அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நடுத்தர வயதுக்காரர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அமெரிக்க ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.
பல்லாண்டு காலம் உடற்பயிற்சிகள் இன்றி சோம்பேறியாக நாட்களைக் கழித்த நடுத்தர வயதினரும், தமது வாழ்க்கையில் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்களை இல்லாமல் போக்கமுடியும் என அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதற்காக நடுத்தர வயதினர் முறையான உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த முறையான உடற்பயிற்சிகளின் மூலம், முந்தைய பாதிப்புக்களை நீக்கி புதுப்பொலிவைப் பெறலாம் என அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க இதய சங்கத்தின் உடற்பயிற்சி வழிகாட்டல்கள் அடிப்படையில் ஓர் இரண்டாண்டு காலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட நடுத்தர வயதினரின் இதயங்கள் சிறப்பாக வேலை செய்ததாகவும், மாரடைப்பு அபாயம் குறைந்ததாகவும் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெஞ்சமின் லெவின் தெரிவித்தார்.
‘இப்பகூட ஒண்ணும் கெட்டுப் போகல’ என்பார்களே, அதுபோல ஒரு மகிழ்ச்சியான முடிவை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது.
நடுத்தர வயதினரிடம் பொதுவாக ஒரு மூடநம்பிக்கை இருக்கிறது, அதாவது உடற்பயிற்சிகள் இல்லாமல் தொப்பையும் பருத்த உடலும் கொண்டவர்கள் இனிமேல் தம்மால் பழைய உடலமைப்பைப் பெறமுடியாது என நினைக்கின்றனர்.
உண்மையில் இது தவறான கணிப்பாகும். எந்த வயதினருக்கும் உடற்பயிற்சி இளமையான தோற்றத்தை மீட்டுத் தந்துவிடும் என அறிவியல் சொல்கிறது.
தமது உடலமைப்பு குறித்து நடுத்தர வயதினர் மத்தியில் நிலவும் மேற்படி மூடநம்பிக்கைதான் அவர்களை வேகமாக மரணமடைய வைக்கிறது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உழைப்பும் உடற்பயிற்சியும் எந்தக் காலத்திலும் பயன் தரும்!
பல்லாண்டு காலம் உடற்பயிற்சிகள் இன்றி சோம்பேறியாக நாட்களைக் கழித்த நடுத்தர வயதினரும், தமது வாழ்க்கையில் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்களை இல்லாமல் போக்கமுடியும் என அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதற்காக நடுத்தர வயதினர் முறையான உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த முறையான உடற்பயிற்சிகளின் மூலம், முந்தைய பாதிப்புக்களை நீக்கி புதுப்பொலிவைப் பெறலாம் என அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க இதய சங்கத்தின் உடற்பயிற்சி வழிகாட்டல்கள் அடிப்படையில் ஓர் இரண்டாண்டு காலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட நடுத்தர வயதினரின் இதயங்கள் சிறப்பாக வேலை செய்ததாகவும், மாரடைப்பு அபாயம் குறைந்ததாகவும் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெஞ்சமின் லெவின் தெரிவித்தார்.
‘இப்பகூட ஒண்ணும் கெட்டுப் போகல’ என்பார்களே, அதுபோல ஒரு மகிழ்ச்சியான முடிவை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது.
நடுத்தர வயதினரிடம் பொதுவாக ஒரு மூடநம்பிக்கை இருக்கிறது, அதாவது உடற்பயிற்சிகள் இல்லாமல் தொப்பையும் பருத்த உடலும் கொண்டவர்கள் இனிமேல் தம்மால் பழைய உடலமைப்பைப் பெறமுடியாது என நினைக்கின்றனர்.
உண்மையில் இது தவறான கணிப்பாகும். எந்த வயதினருக்கும் உடற்பயிற்சி இளமையான தோற்றத்தை மீட்டுத் தந்துவிடும் என அறிவியல் சொல்கிறது.
தமது உடலமைப்பு குறித்து நடுத்தர வயதினர் மத்தியில் நிலவும் மேற்படி மூடநம்பிக்கைதான் அவர்களை வேகமாக மரணமடைய வைக்கிறது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உழைப்பும் உடற்பயிற்சியும் எந்தக் காலத்திலும் பயன் தரும்!
மீனில் குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீன் முட்டையில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதன் சுவை அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மீன் முட்டை - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 10 பற்கள்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பச்சைமிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
சின்ன வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவேண்டும்.
அடுத்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவேண்டும்.
பின் மீன் முட்டையை போட்டு கைவிடாமல் அடிபிடிக்காமல் கிளறவேண்டும். மீன் முட்டை நன்கு வெந்து உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவேண்டும்.
கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும்.
சூப்பரான மீன் முட்டை பொரியல் ரெடி.
மீன் முட்டை - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 10 பற்கள்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பச்சைமிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - சிறிதளவு

செய்முறை
சின்ன வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவேண்டும்.
அடுத்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது நன்றாக வதங்கியதும சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவேண்டும்.
பின் மீன் முட்டையை போட்டு கைவிடாமல் அடிபிடிக்காமல் கிளறவேண்டும். மீன் முட்டை நன்கு வெந்து உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவேண்டும்.
கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும்.
சூப்பரான மீன் முட்டை பொரியல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இன்றைய இளம் பெண்களின் மனநிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உருவாகியிருக்கிறது. அவர்களின் மன நிலையை உணர்ந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துதர சமூகம் முன்வரவேண்டும்.
“எனது பெற்றோர் வசதி படைத்தவர்கள். நான் அவர்களுக்கு ஒரே மகள். கணக்கு பார்க்காமல் காசை வாரியடித்து எனக்கு ஊரே வியக்கும் அளவுக்கு திருமணம் செய்துவைக்க என் அப்பா திட்டம் போட்டுவைத்திருக்கிறார். நான் அவரிடம், ‘அப்பா.. ஐந்தாயிரம் பேரை திரட்டப்போகிறீர்கள். எல்லோரும் கஷ்டப்பட்டு ஒரு கல்யாண மண்டபத்தில் குவியப் போகிறார்கள்.
எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அவர்கள் முன்னால் ஏன் சடங்கு சம்பிரதாயங்களை நடத்தவேண்டும். தேவையில்லாமல் நமது உறவினர்களையும், உங்கள் நண்பர்களையும் அலையவைக்காதீர்கள். திருமணம் என்பது இரு மனங்கள் இணைய வேண்டிய சிம்பிளான விஷயம். எனது மனதுக்கு பிடித்தவரோடு நான் இணைந்துவிட்டேன். நாங்கள் ஒன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
கல்யாணம் என்பது இரண்டு பேர் வாழ்க்கையில் ஏற்படும் ரகசியமான திருப்பம். அதற்கு கூட்டம்.. கொண்டாட்டம்.. லட்சங்களில் பணச்செலவு போன்றவைகள் எல்லாம் தேவையில்லை’ என்று என் தந்தையிடம் சொல்லப்போகிறேன். அது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனாலும் உண்மையை நான் அவரிடம் சொல்லித்தானே ஆகவேண்டும்” என்று, திருமணம் பற்றி நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் அதிரடியாய் கருத்து தெரிவித்திருக்கிறார், இளம் பெண் ஒருவர். அவர் வயது 25. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.
பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள பெண்களிடம், ‘மாறி வரும் திருமண விருப்பங்கள்’ என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பெண்கள் வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள், அடிப்படையையே புரட்டிப்போடும் அளவுக்கு அதிரடியாய் அமைந்திருக்கிறது.
‘திருமணம் செய்துகொள்ளாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு, அது ‘தவறு’ என்று சொன்னவர்கள் 48 சதவீதம் என்றால், கிட்டத்தட்ட அதே சதவீதத்தினர் அது ‘தவறில்லை’ என்று சொல்லும் அளவுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மீதமுள்ளவர்களும், ‘எதிர்காலத்தில் ஒருவேளை அதுதான் சரி என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை’ என்றே கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சர்வே, ‘பெண்களின் மனநிலை மாற்றத்தை சமூகம் புரிந்துகொள்ளவில்லை. அவர்களது எதிர்பார்ப்புகள் எங்கோ போய்விட்டன. சமூகம் இன்னும் பழைய நினைப்பில் இங்கேயே நின்று கொண்டிருக்கிறது’ என்று சுட்டிக்காட்டுகிறது.
எப்படி என்றால், ‘அம்மாவைப்போல் நானும் அதிகாலையிலே விழித்து கோலம்போடுவேன். அவரிடமிருந்து மீன்குழம்பும், சாம்பாரும் தயாரிக்க கற்றுக்கொண்டு, நீண்ட கூந்தலையும் பராமரிப்பேன். வெளியாட்கள் யாராவது வந்தால் வீட்டுக்குள் போய் முடங்கிக்கொள்வேன்.. என்ற கோணத்தில்தான் என் குடும்பம் என்னை கணித்துவைத்திருக்கிறது. 1980-ம் ஆண்டுகளில் உள்ள பெண்களாக எங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் சில நேரங்களில் அவர்களது எதிர்பார்ப்புக்கு தக்கபடி கஷ்டப்பட்டு நடித்துக்கொண்டிருக்கிறோம். எங்களது உண்மையான சிந்தனையையும், செயல்பாட்டையும் அவர்கள் இனியாவது சரியாக புரிந்துகொள்ள முன்வரவேண்டும்’ என்று சர்வேயில் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

‘உங்கள் திருமணம் எப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, பெண்கள் அளித்திருக்கும் பதில் யோசிக்கவைக்கிறது.
‘மத ஆச்சாரங்களின்படி ஆர்ப்பாட்டமில்லாமல் நடக்கவேண்டு்ம். தகுதிக்கு மீறி அழைப்பிதழ்கள் அச்சடித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் வினியோகித்து, 500 பேர் கூட உட்காரமுடியாத இடத்தில் 5 ஆயிரம் பேரை அழைத்து கணக்கற்ற உணவுப் பொருட்களை வைத்து, யாரும் நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு இப்போது நெருக்கடியை உருவாக்குகிறார்கள். இதைத்தான் பல்வேறு திருமணங்களில் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு சிரமத்தை எங்கள் திருமணத்தில் யாரும் அனுபவித்து விடக்கூடாது. அமைதியாக, மகிழ்ச்சியாக எங்கள் திருமணம் நடக்கவேண்டும்’ என்று 65 சதவீதம் பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
காதல் திருமண ஆர்வமும் பெண்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. காதலித்துக்கொண்டிருக்கும் பெண்களிடம், ‘உங்கள் காதலரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள உங்கள் பெற்றோர் எதிர்த்தால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு 52 சதவீதம் பேர், ‘என்ன ஆனாலும் காதலித்தவரை கைவிடமாட்டோம்’ என்று கூறி யிருக்கிறார்கள். 30 சதவீதம் பேர், ‘காதலரைவிட பெற்றோர் முக்கியம். அவர்களது எண்ணங் களுக்கு மரியாதை கொடுப்போம்’ என்று நெகிழவைத்திருக்கிறார்கள். 18 சதவீதம் பேர், ‘காதலுக்கு எதிர்ப்பு வந்தால் திருமணமே வேண்டாம் என்று கூறிவிடுவோம்’ என்று அதிரடிகாட்டியிருக்கிறார்கள்.
‘நீங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆணின் வயது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு, ‘ஆணுக்கு, எங்களைவிட ஐந்து வயது வரை கூடுதலாக இருக்கலாம்’ என்று 75 சதவீத பெண்களும், ‘ஐந்து வயதுக்கு மேல் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை’ என்று 7 சதவீத பெண்களும், ‘சமவயது இருந்தால் போதும்’ என்று 9 சதவீத பெண்களும், அதே சதவீதத்தினர் ‘ஆணுக்கு எங்களைவிட வயது குறைவாக இருந்தாலும் பரவாயில்லை’ என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
ஜோதிட பொருத்தங்கள் பார்க்கும் விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று 52 சதவீதம் பேர் கூறியிருக் கிறார்கள். ஓரளவு நம்புவதாக 37 சதவீதம் பேரும், முழுமையாக நம்புவதாக 11 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள்.
இந்த சர்வே முடிவுகளை பற்றி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், “இன்றைய இளம் பெண்களின் மனநிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உருவாகியிருப்பது உண்மைதான். அவர்களின் மன நிலையை உணர்ந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துதர சமூகம் முன்வரவேண்டும். ஆர்ப்பாட்டமான திருமணங்களும், அடுத்த சில மாதங்களிலே நடக்கும் விவாகரத்துக்களும் பெண்களின் மனதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அதன் வெளிப்பாட்டை சர்வேக்களில் காண முடிகிறது” என்கிறார்கள்.
கலாசாரம் முக்கியம்! அது காப்பாற்றப்படவேண்டியது அவசியம்!
எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அவர்கள் முன்னால் ஏன் சடங்கு சம்பிரதாயங்களை நடத்தவேண்டும். தேவையில்லாமல் நமது உறவினர்களையும், உங்கள் நண்பர்களையும் அலையவைக்காதீர்கள். திருமணம் என்பது இரு மனங்கள் இணைய வேண்டிய சிம்பிளான விஷயம். எனது மனதுக்கு பிடித்தவரோடு நான் இணைந்துவிட்டேன். நாங்கள் ஒன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
கல்யாணம் என்பது இரண்டு பேர் வாழ்க்கையில் ஏற்படும் ரகசியமான திருப்பம். அதற்கு கூட்டம்.. கொண்டாட்டம்.. லட்சங்களில் பணச்செலவு போன்றவைகள் எல்லாம் தேவையில்லை’ என்று என் தந்தையிடம் சொல்லப்போகிறேன். அது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனாலும் உண்மையை நான் அவரிடம் சொல்லித்தானே ஆகவேண்டும்” என்று, திருமணம் பற்றி நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் அதிரடியாய் கருத்து தெரிவித்திருக்கிறார், இளம் பெண் ஒருவர். அவர் வயது 25. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.
பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள பெண்களிடம், ‘மாறி வரும் திருமண விருப்பங்கள்’ என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பெண்கள் வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள், அடிப்படையையே புரட்டிப்போடும் அளவுக்கு அதிரடியாய் அமைந்திருக்கிறது.
‘திருமணம் செய்துகொள்ளாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு, அது ‘தவறு’ என்று சொன்னவர்கள் 48 சதவீதம் என்றால், கிட்டத்தட்ட அதே சதவீதத்தினர் அது ‘தவறில்லை’ என்று சொல்லும் அளவுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மீதமுள்ளவர்களும், ‘எதிர்காலத்தில் ஒருவேளை அதுதான் சரி என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை’ என்றே கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சர்வே, ‘பெண்களின் மனநிலை மாற்றத்தை சமூகம் புரிந்துகொள்ளவில்லை. அவர்களது எதிர்பார்ப்புகள் எங்கோ போய்விட்டன. சமூகம் இன்னும் பழைய நினைப்பில் இங்கேயே நின்று கொண்டிருக்கிறது’ என்று சுட்டிக்காட்டுகிறது.
எப்படி என்றால், ‘அம்மாவைப்போல் நானும் அதிகாலையிலே விழித்து கோலம்போடுவேன். அவரிடமிருந்து மீன்குழம்பும், சாம்பாரும் தயாரிக்க கற்றுக்கொண்டு, நீண்ட கூந்தலையும் பராமரிப்பேன். வெளியாட்கள் யாராவது வந்தால் வீட்டுக்குள் போய் முடங்கிக்கொள்வேன்.. என்ற கோணத்தில்தான் என் குடும்பம் என்னை கணித்துவைத்திருக்கிறது. 1980-ம் ஆண்டுகளில் உள்ள பெண்களாக எங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் சில நேரங்களில் அவர்களது எதிர்பார்ப்புக்கு தக்கபடி கஷ்டப்பட்டு நடித்துக்கொண்டிருக்கிறோம். எங்களது உண்மையான சிந்தனையையும், செயல்பாட்டையும் அவர்கள் இனியாவது சரியாக புரிந்துகொள்ள முன்வரவேண்டும்’ என்று சர்வேயில் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

‘உங்கள் திருமணம் எப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, பெண்கள் அளித்திருக்கும் பதில் யோசிக்கவைக்கிறது.
‘மத ஆச்சாரங்களின்படி ஆர்ப்பாட்டமில்லாமல் நடக்கவேண்டு்ம். தகுதிக்கு மீறி அழைப்பிதழ்கள் அச்சடித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் வினியோகித்து, 500 பேர் கூட உட்காரமுடியாத இடத்தில் 5 ஆயிரம் பேரை அழைத்து கணக்கற்ற உணவுப் பொருட்களை வைத்து, யாரும் நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு இப்போது நெருக்கடியை உருவாக்குகிறார்கள். இதைத்தான் பல்வேறு திருமணங்களில் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு சிரமத்தை எங்கள் திருமணத்தில் யாரும் அனுபவித்து விடக்கூடாது. அமைதியாக, மகிழ்ச்சியாக எங்கள் திருமணம் நடக்கவேண்டும்’ என்று 65 சதவீதம் பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
காதல் திருமண ஆர்வமும் பெண்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. காதலித்துக்கொண்டிருக்கும் பெண்களிடம், ‘உங்கள் காதலரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள உங்கள் பெற்றோர் எதிர்த்தால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு 52 சதவீதம் பேர், ‘என்ன ஆனாலும் காதலித்தவரை கைவிடமாட்டோம்’ என்று கூறி யிருக்கிறார்கள். 30 சதவீதம் பேர், ‘காதலரைவிட பெற்றோர் முக்கியம். அவர்களது எண்ணங் களுக்கு மரியாதை கொடுப்போம்’ என்று நெகிழவைத்திருக்கிறார்கள். 18 சதவீதம் பேர், ‘காதலுக்கு எதிர்ப்பு வந்தால் திருமணமே வேண்டாம் என்று கூறிவிடுவோம்’ என்று அதிரடிகாட்டியிருக்கிறார்கள்.
‘நீங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆணின் வயது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு, ‘ஆணுக்கு, எங்களைவிட ஐந்து வயது வரை கூடுதலாக இருக்கலாம்’ என்று 75 சதவீத பெண்களும், ‘ஐந்து வயதுக்கு மேல் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை’ என்று 7 சதவீத பெண்களும், ‘சமவயது இருந்தால் போதும்’ என்று 9 சதவீத பெண்களும், அதே சதவீதத்தினர் ‘ஆணுக்கு எங்களைவிட வயது குறைவாக இருந்தாலும் பரவாயில்லை’ என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
ஜோதிட பொருத்தங்கள் பார்க்கும் விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று 52 சதவீதம் பேர் கூறியிருக் கிறார்கள். ஓரளவு நம்புவதாக 37 சதவீதம் பேரும், முழுமையாக நம்புவதாக 11 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள்.
இந்த சர்வே முடிவுகளை பற்றி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், “இன்றைய இளம் பெண்களின் மனநிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உருவாகியிருப்பது உண்மைதான். அவர்களின் மன நிலையை உணர்ந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துதர சமூகம் முன்வரவேண்டும். ஆர்ப்பாட்டமான திருமணங்களும், அடுத்த சில மாதங்களிலே நடக்கும் விவாகரத்துக்களும் பெண்களின் மனதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அதன் வெளிப்பாட்டை சர்வேக்களில் காண முடிகிறது” என்கிறார்கள்.
கலாசாரம் முக்கியம்! அது காப்பாற்றப்படவேண்டியது அவசியம்!
சர்க்கரை நோயாளிகள் தங்கள் பற்களின் நலனை பாதுகாக்க எந்தெந்த வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே பற்களின் மீது அதிக ஆரோக்கியம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஈறுகளில் உண்டாகும் பாதிப்பு இதயத்தை பாதிக்கும் என ஆய்வுகளில் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, வாய் சுகாதாரம் குறைபாடு ஏற்பட்டால் உடலில் எளிதாக பாக்டீரியாக்கள் அதிகம் தேங்கும் அபாயம் உண்டாகும். இதில், சர்க்கரை நோயாளிகள் தங்கள் பற்களின் நலனை பாதுகாக்க எந்தெந்த டிப்ஸ் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என இனி காணலாம்…
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பற்களை சுற்றி ஆரோக்கிய சீர்கேடு ஏற்படும் அபாயம் நிறையவே இருக்கிறது.
ஃபங்கல் இன்பெக்ஷன் போன்ற தொற்றுகள் உண்டானால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குணமாக நாட்கள் அதிகம் எடுத்துக் கொள்ளும்.
பற்களின் ஆரோக்கியம் சீர்குலைந்து போகாமல் இருக்க, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஃப்ளோரைடு டூத்பேஸ்ட் கொண்டு பல் துலக்க வேண்டியது அவசியம்.
பொதுவாகவே நாளுக்கு இரண்டு முறை பல் துலக்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது கட்டாயம் என்கின்றனர் பற்கள் நல மருத்துவ நிபுணர்கள்.
ஒருவேளை பற்கள் அல்லது ஈறுகளில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவது போல இருந்தால், நேரம் தாழ்த்தாமல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
இதுமட்டுமின்றி, வாய் சுகாதாரம் குறைபாடு ஏற்பட்டால் உடலில் எளிதாக பாக்டீரியாக்கள் அதிகம் தேங்கும் அபாயம் உண்டாகும். இதில், சர்க்கரை நோயாளிகள் தங்கள் பற்களின் நலனை பாதுகாக்க எந்தெந்த டிப்ஸ் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என இனி காணலாம்…
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பற்களை சுற்றி ஆரோக்கிய சீர்கேடு ஏற்படும் அபாயம் நிறையவே இருக்கிறது.
ஃபங்கல் இன்பெக்ஷன் போன்ற தொற்றுகள் உண்டானால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குணமாக நாட்கள் அதிகம் எடுத்துக் கொள்ளும்.
பற்களின் ஆரோக்கியம் சீர்குலைந்து போகாமல் இருக்க, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஃப்ளோரைடு டூத்பேஸ்ட் கொண்டு பல் துலக்க வேண்டியது அவசியம்.
பொதுவாகவே நாளுக்கு இரண்டு முறை பல் துலக்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது கட்டாயம் என்கின்றனர் பற்கள் நல மருத்துவ நிபுணர்கள்.
ஒருவேளை பற்கள் அல்லது ஈறுகளில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவது போல இருந்தால், நேரம் தாழ்த்தாமல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
இடியாப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, சாதம், இட்லி என அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள தோங்காய் பால் சொதி அருமையாக இருக்கும்.
தேவையான பொருள்கள்
உருளைக்கிழங்கு - 200 கிராம்,
கேரட் - 150 கிராம்,
பீன்ஸ் - 75 கிராம்,
பச்சைமிளகாய் - 3,
இஞ்சி - சிறிய துண்டு,
வெங்காயம் - 100 கிராம்,
தேங்காய் - 1,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
மிளகு - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - தேவையான அளவு,
பட்டை, கிராம்பு கசகசா,
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,

செய்முறை
கேரட், பீன்ஸை சிறிதாக வெட்டி அரைவேக்காடு அளவில் வேக வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சியைச் சிறிதாகவும், வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கிலும் வெட்டிக்கொள்ளுங்கள்.
பட்டை, மிளகு, கிராம்பு, கசகசா, ஜாதிக்காய், ஏலக்காயை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் வேக வைத்த காய்கறிகள், உருளைக்கிழங்கை சேர்த்து, உப்புப் போட்டு இரண்டாம் பால் ஊற்றி வேகவையுங்கள்.
அடுத்து அதில் அரைத்த பேஸ்ட் போட்டு, ஒரு கொதி வந்ததும், முதல் பாலை ஊற்றி இறக்குங்கள்.
உருளைக்கிழங்கு - 200 கிராம்,
கேரட் - 150 கிராம்,
பீன்ஸ் - 75 கிராம்,
பச்சைமிளகாய் - 3,
இஞ்சி - சிறிய துண்டு,
வெங்காயம் - 100 கிராம்,
தேங்காய் - 1,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
மிளகு - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் - தேவையான அளவு,
பட்டை, கிராம்பு கசகசா,
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை
கேரட், பீன்ஸை சிறிதாக வெட்டி அரைவேக்காடு அளவில் வேக வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சியைச் சிறிதாகவும், வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கிலும் வெட்டிக்கொள்ளுங்கள்.
பட்டை, மிளகு, கிராம்பு, கசகசா, ஜாதிக்காய், ஏலக்காயை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் வேக வைத்த காய்கறிகள், உருளைக்கிழங்கை சேர்த்து, உப்புப் போட்டு இரண்டாம் பால் ஊற்றி வேகவையுங்கள்.
அடுத்து அதில் அரைத்த பேஸ்ட் போட்டு, ஒரு கொதி வந்ததும், முதல் பாலை ஊற்றி இறக்குங்கள்.
சூப்பரான சொதி ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது.
உங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வீட்டில் இருந்தே சில எளிய உடற்பயிற்சி செய்தால் போதும். உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது.
குந்து பயிற்சி : உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும்.
ஸ்டேப்-அப்ஸ் : வீட்டில் இருந்தே செய்யக்கூடிய படிகள் ஏறி இறங்கும் பயிற்சியினால் உங்கள் பின்னழகில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறைந்து வட்டவடிவாக உதவும்.

லாஞ்சஸ் : லாஞ்சஸ் என்பது எடையை கைகளில் தாங்கி ஒரு காலை முன்வைத்து மற்றொரு காலை மட்டும் மண்டியிட வேண்டும். இதன் மூலம் உங்கள் கால்கள் ஸ்ட்ரெச்சிங் ஆகும். இது போல இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்வதனால் உங்கள் பின்னபக்கம் இருக்கும் கொழுப்பு விரைவில் குறையும்.
கிக்-பேக் : ஒரு முனையில் எடையுடன் கட்டப்பட்ட கம்பி இருக்கும். மற்றொரு முனை உங்கள் காலோடு இணைக்கப்பட்டிருக்கும். இப்போது உங்கள் காலை பின்னோக்கி உதைப்பதை போல இழுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால், தொடை, பின்பகுதி மற்றும் இடுப்பு பகுதி வலிமைடையும். இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் முட்டி பகுதி மடங்காது செய்ய வேண்டும்.
குந்து பயிற்சி : உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும்.
ஸ்டேப்-அப்ஸ் : வீட்டில் இருந்தே செய்யக்கூடிய படிகள் ஏறி இறங்கும் பயிற்சியினால் உங்கள் பின்னழகில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறைந்து வட்டவடிவாக உதவும்.

லாஞ்சஸ் : லாஞ்சஸ் என்பது எடையை கைகளில் தாங்கி ஒரு காலை முன்வைத்து மற்றொரு காலை மட்டும் மண்டியிட வேண்டும். இதன் மூலம் உங்கள் கால்கள் ஸ்ட்ரெச்சிங் ஆகும். இது போல இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்வதனால் உங்கள் பின்னபக்கம் இருக்கும் கொழுப்பு விரைவில் குறையும்.
கிக்-பேக் : ஒரு முனையில் எடையுடன் கட்டப்பட்ட கம்பி இருக்கும். மற்றொரு முனை உங்கள் காலோடு இணைக்கப்பட்டிருக்கும். இப்போது உங்கள் காலை பின்னோக்கி உதைப்பதை போல இழுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால், தொடை, பின்பகுதி மற்றும் இடுப்பு பகுதி வலிமைடையும். இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் முட்டி பகுதி மடங்காது செய்ய வேண்டும்.
ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நேச்சுரல் ஃபேட்டி ஆசிட்டுகள் அடங்கியுள்ளன. இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் ஏராளமாக இருப்பதால் தான், இது சருமபராமரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
* ஆலிவ் ஆயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.
* முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்தால் தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். மேலும் இச்செயல் மூலம் நாளடைவில் தழும்புகளும் மறையும்.
* தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் ஈ, சரும செல்கள் சீரழிவடைவதைத் தடுத்து, சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும். மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.
* உங்களுக்கு மிகுந்த வறட்சியான சருமம் என்றால், ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள். இப்படி தினமும் செய்வதன் மூலம், சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
* ஆலிவ் ஆயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.
* முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்தால் தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். மேலும் இச்செயல் மூலம் நாளடைவில் தழும்புகளும் மறையும்.
* தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் ஈ, சரும செல்கள் சீரழிவடைவதைத் தடுத்து, சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும். மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.
* உங்களுக்கு மிகுந்த வறட்சியான சருமம் என்றால், ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள். இப்படி தினமும் செய்வதன் மூலம், சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.






