என் மலர்
பெண்கள் உலகம்
- கண்ணகி நகரை 'பிராண்ட்' ஆக்க வேண்டும் என்பதுதான் லட்சியம்.
- பெற்றோர்கள் தரும் ஊக்கத்தில்தான் பெண்களின் வளர்ச்சி அடங்கியுள்ளது.
கடந்த வாரம் முழுவதும் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட துருவ் விக்ரமின் 'பைசன்' படம் கவனம் ஈர்த்தநிலையில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் கபடி வீராங்கனை கார்த்திகா. 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கபடி அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனையான கார்த்திகா யார்? அவர் கடந்துவந்த பாதை என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
கண்ணகி நகர் கார்த்திகா
சென்னை, கண்ணகி நகரில் பிறந்தவர்தான் கபடி வீராங்கனை கார்த்திகா. தந்தை ரமேஷ் சென்டரிங் வேலை செய்துவருகிறார். தாய் சரண்யா தூய்மை பணியாளராக பணியாற்றிய நிலையில், தற்போது ஆட்டோ ஓட்டிவருகிறார். வீட்டில் வறுமைநிலை என்றாலும், விளையாட்டு போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார் கார்த்திகா. தனது நண்பர்களுடன் இணைந்து கபடி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இதில் கபடிமீது அதீத ஆர்வம் எழ, தனது 6ம் வகுப்புமுதல் பள்ளி அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்துள்ளார்.
இதில் பல பரிசுகளையும் வென்றுள்ளார். கபடி விளையாடுவதற்கு கண்ணகி நகர் பகுதியில் தகுந்த மைதானம் இல்லாவிட்டாலும், வீட்டின் அருகில் இருந்த மணல் மைதானத்தில் தினமும் காலை எழுந்து பயிற்சி பெற்று வந்துள்ளார் கார்த்திகா. கார்த்திகாவின் ஆர்வத்தை பார்த்த அவரது பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில், அவரை சேர்த்துவிட்டு பயிற்சி பெற ஊக்குவித்தனர். அங்கு தனது பயிற்சி ஆசிரியர் ராஜி மூலம் நன்கு பயிற்சி பெற்ற கார்த்திகா தற்போது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும்விதமாக இந்திய கபடி அணியில் இடம்பெற்று, தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.

கபடி வீராங்கனை கார்த்திகாவின் தாய்
தங்கப்பதக்கம்
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் கபடி பிரிவில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்றது. மகளிர் கபடிக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஈரானும் மோதின. இதில் இந்தியா 75-21 என்ற புள்ளியில் அபார வெற்றிப்பெற்றது. இதில் இந்திய மகளிர் அணியில் சிறப்பாக விளையாடிய கார்த்திகா தங்கம் வென்றார். அதுபோல ஆடவர் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினேஷ் தங்கம் வென்றார். தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும் அப்போதே அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். தொடர்ந்து கார்த்திகாவிற்கு பொதுமக்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். குதிரை சார்ட்டில் அமரவைத்து மாலை அணிவித்து, மகுடம் சூட்டி, மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக வரவேற்றனர்.
"கண்ணகி நகரை பிராண்ட் ஆக்க வேண்டும்"
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, "நான் 8-வது படிக்கும்போதே கண்ணகி நகரில் கபடி விளையாட்டை தொடங்கினேன். பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டு கபடி போட்டியில் நான் துணை கேப்டனாக விளையாடினேன். நான் தமிழ்நாடு திரும்பியதும் முதலமைச்சர் என்னை அழைத்து ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். கண்ணகி நகரை 'பிராண்ட்' ஆக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். கண்ணகி நகரில் போதிய வசதிகளை செய்து தருவதாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளனர். எனக்கு வீடு கட்டி தருவதாகவும், அரசு வேலை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். அரசு இப்படியான உதவி செய்வதால் நிறைய பேர் விளையாட்டு துறைக்கு வர ஆர்வம் காட்டுவார்கள். என்னுடைய பயிற்சியாளர் (coach) எனக்கு பெரிய அளவில் உதவிகரமாக இருந்தார். அவருக்கு நன்றி. என்னுடைய பயிற்சியாளர் போல அனைவருக்கும் ஒருவர் துணை இருந்தால் எல்லோராலும் சாதிக்க முடியும்" என தெரிவித்தார்.
"பெண்களை நம்பி வெளியே அனுப்புங்கள்"
மகளின் வெற்றி தொடர்பாக பேசிய கார்த்திகாவின் தாய், "பயிற்சியாளர் ராஜிக்கு நாங்கள் நன்றி சொல்லவேண்டும். அவர்தான் இவ்வளவு தூரம் கொண்டுவந்துள்ளார். 6வது படிக்கும்போது கார்த்திகாவை கபடியில் சேர்த்துவிட்டோம். இங்கு சரியான மைதானம் இல்லை. அரசு ஒரு கபடி மைதானம் கட்டித்தரவேண்டும். பெண்குழந்தைகளை நம்பி வெளியே அனுப்புங்கள். அவர்கள் அதிகம் வெளியே வரவேண்டும். பெற்றோர் அவர்கள்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்கள் வைக்கும் நம்பிக்கைக்கு நிச்சயம் பலன்கிடைக்கும். பெற்றோர் தரும் ஊக்கத்தில்தான் அவர்களின் வளர்ச்சி அடங்கியுள்ளது". என தெரிவித்தார்.
- குழந்தையின் நலனுக்காக பெற்றோர்கள் செய்யும் செயலே, தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறுகிறது.
- க்ரீம்கள், வாசனை திரவியங்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தாதீர்கள்!
குழந்தைகளின் சருமம் பெரியவர்களைவிட மென்மையானதாகவும், மிருதுவானதாகவும், மிகவும் உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும். மாசு, வானிலை மாற்றங்கள், குழந்தையின் சருமத்திற்கு நல்லது என நினைத்து நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் (பாடி லோஷன்கள், க்ரீம்கள்) அவர்களின் சருமத்தை பாதிப்படைய செய்கிறது. குழந்தையின் நலனை எண்ணித்தான் பெற்றோர்கள் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளது. குழந்தையின் சருமத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.
பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துதல்
சிலர் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவார்கள். இது தவறான ஒன்று. பெரியவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பொருட்கள் கடுமையான ரசாயனங்கள், ஆல்கஹால், சல்பேட்டுகள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும். குழந்தைகளின் தோல் மெல்லியதாகவும், அதிக ஊடுருவக்கூடியதாகவும், எளிதில் எரிச்சலுக்கு உள்ளாகக் கூடியதாகவும் இருக்கும். இதனால் அந்தப் பொருட்கள் குழந்தைகளின் தோலை எளிதில் பாதிக்கும். அதனால் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் தோல் பராமரிப்பு பொருட்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும்.
குழந்தைகளை அதிக நேரம் சூரிய ஒளியில் படுமாறு வைத்திருப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இது முன்கூட்டியே வயதாவது, தோல் புற்றுநோய் பாதிப்புகள் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும். மேகமூட்டமாக இருந்தாலும், குறைந்தபட்சம் SPF 30 சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும். குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்மையான, மணம் இல்லாத சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.
அடிக்கடி குளிக்கவைத்தல்
சுத்தம் முக்கியம் என்றாலும், குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டுவது அல்லது வெந்நீரை பயன்படுத்துவது குழந்தையின் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய் பசையை எடுத்துவிடும். இது வறட்சி, எரிச்சல், தோலழற்சி போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். குழந்தையின் உடல்நிலையை பொறுத்து வாரத்திற்கு சிலமுறை மட்டுமே வெந்நீரை பயன்படுத்தவேண்டும். வியர்வை மற்றும் அழுக்கு அதிகமானால் குழந்தைகளை தினமும் குளிக்கவைக்கலாம். ஆனால் வெந்நீர் அதிகம் பயன்படுத்தவேண்டாம்.
மாய்ச்சுரைஸர்களை தவிர்த்தல்
குழந்தைகளின் சருமம் இயற்கையாகவே மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஈரப்பதம் தேவையில்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் குளிர் மற்றும் வெயில் காலங்களில் அவர்களது சருமம் ஈரப்பதத்தை விரைவாக இழந்துவிடும். மாய்ச்சுரைஸர்களை தவிர்ப்பது சருமத்தை இன்னும் பலவீனப்படுத்தும். இதனால் வறட்சி, அரிப்பு, தோல் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ள மென்மையான, ஒவ்வாமை ஏற்படுத்தாத மாய்ச்சுரைஸர்களை பயன்படுத்துவது நல்லது. குளித்த உடன், சருமம் சற்று ஈரமாக இருக்கும்போதே இதைப் பயன்படுத்துவது, ஈரப்பதத்தை எளிதில் சருமத்தில் தக்கவைக்கும்.

வெந்நீரில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டக்கூடாது
தோல் நோய்களை புறக்கணித்தல்
பெற்றோர்கள் சிலசமயம் குழந்தைகளின் தோலில் வரும் தடிப்புகள், திட்டுகளை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அவை தானாகவே சரியாகிவிடும் என நம்புகிறார்கள். கீழேவிழுவது, விளையாடும்போது ஏற்படும் தடிப்புகள், காயங்கள் நாளடைவில் தானாக குணமடைந்துவிடும் என்றாலும், மற்ற தோல் பிரச்சனைகள் மீதும் கவனம் செலுத்தவேண்டும்.
வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தல்
வாசனை திரவியங்கள் மற்றும் அதிகம் வாசம் தரும் குளியல் சோப்புகள் பயன்படுத்துவதற்கும், நுகர்வதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் அவை அனைத்தும் குழந்தைகளுக்கு தோல்நோய்களை ஏற்படுத்தும். ஹைபோஅலர்கெனி பொருட்களையே பெற்றோர்கள் தேடவேண்டும். எளிமையான, வாசனையற்ற பொருட்கள் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு நோய் அபாயங்களை குறைக்கின்றன.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து தராதீர்கள்
குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது அரிப்பு, காயம் அல்லது ஏதேனும் உடல் பிரச்சனைகள் என்றால் உடனே மருத்துவரிடம் செல்லாமல், தாங்களாகவே கடைகளில் கிடைக்கும் (OTC) க்ரீம்கள், மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது தவறு. சில க்ரீம்கள், குறிப்பாக ஸ்டீராய்டுகள் கொண்டவை தவறாக பயன்படுத்தப்பட்டால் சருமத்திற்கு தீங்குவிளைவிக்கும். குழந்தைகளின் சருமத்தை பராமரிப்பதற்கு பொறுமை, விழிப்புணர்வு உள்ளிட்டவை அவசியம்.
- உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடியது வாழைப்பழம்.
- நீரிழிவு இல்லாதவர்களுக்கு வாழைப்பழங்கள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தாது.
உடல் மிகவும் பலவீனமாக இருக்கிறது. உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில பழங்களை சேர்க்கவேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட்ட உடனேயே ஆற்றல் தரக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம்தான். வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும், அவற்றால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் இங்கு காணலாம்.
இரத்த சர்க்கரை அளவை சீராக்கும்
வாழைப்பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத என இரண்டு வகையான நார்ச்சத்துகள் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் நீண்டநேரம் பசி எடுக்காது. கரையாத நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பழுக்காத (பச்சை) வாழைப்பழங்களில் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் (resistant starch) அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு கடினமாக இருந்தாலும், நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு இல்லாதவர்களுக்கு வாழைப்பழங்கள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை உறிஞ்சுதலை சீராக்க உதவுகின்றன. இருப்பினும் பழுத்த வாழைப்பழங்களில் அதிகளவு சர்க்கரை உள்ளதால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக வாழைப்பழங்கள் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒரேயொரு சிறிய அல்லது நடுத்தர வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுவது நல்லது.
மலச்சிக்கலை நீக்கும்
பழுக்காத வாழைப்பழங்களில் காணப்படும் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் ஒரு ப்ரீபயாடிக் ஆகும். இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளித்து அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டைத் தூண்டுகிறது. இது புரோபயாடிக்குகள் (நேர்மறையான பாக்டீரியாக்கள்) செழித்து வளர உதவுகிறது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்க உதவுகிறது. வாழைப்பழங்களில் காணப்படும் பெக்டின் என்ற நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும் எனக் கூறப்படுகிறது.
எடை இழப்புக்கு உதவும்
வாழைப்பழங்கள் ஒப்பீட்டளவில் குறைந்தளவு கலோரிகளை கொண்டவை. ஒரு நடுத்தர வாழைப்பழத்தில் சுமார் 105 கலோரிகளே உள்ளன. ஆனால் அவை சத்தானவை மற்றும் நிறைவானவை.

வாழைப்பழம் கொழுப்புச்சத்தை அதிகரிக்காது
இதய ஆரோக்கியத்திற்கு உதவும்
பொட்டாசியம் என்பது இதய ஆரோக்கியத்திற்கும், குறிப்பாக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அவசியமானது. வாழைப்பழங்கள் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். ஒரு நடுத்தர வாழைப்பழம் தினசரி மதிப்பில் 10% பொட்டாசியத்தை வழங்குகிறது. பொட்டாசியம் நிறைந்த உணவு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும். வாழைப்பழங்களில் மெக்னீசியத்திற்கான DV-யில் 8% உள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கான மற்றொரு முக்கியமான கனிமமாகும். மெக்னீசியம் குறைபாடு (ஹைப்போமக்னீமியா) இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் அதிக அளவு கொழுப்புகள் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது. எனவே, உங்கள் உணவு அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் இந்த மெக்னீசியத்தை பெறுவது அவசியம்.
ஆக்ஸிஜனேற்றிகள்
காய்கறிகள், பழங்கள் அனைத்துமே அதிகளவு ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டிருக்கும். அந்த வகையில் வாழைப்பழங்களில் அமின்கள் உட்பட பல வகையான சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் இதய நோய் மற்றும் மாகுலர் சிதைவு அபாயத்தைக் குறைத்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் செல்களுக்கு ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்க உதவுகின்றன.
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டத்துக்கள்
வாழைப்பழத்தில் போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள், நீர், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இதில் புரதம் குறைவு என்றாலும், அதைவிட மிக மிக குறைவு கொழுப்புச்சத்து. இதனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.
ஒரு வாழைப்பழத்தில் உள்ளவை :
கலோரிகள்: 112
கொழுப்பு: 0.4 கிராம் (கிராம்)
புரதம்: 1 கிராம்
கார்போஹைட்ரேட்: 29 கிராம்
நார்ச்சத்து: 3 கிராம்
வைட்டமின் சி: தினசரி மதிப்பில் (DV) 12%
ரைபோஃப்ளேவின்: DVயில் 7%
ஃபோலேட்: DV யில் 6%
நியாசின்: DV யில் 5%
தாமிரம்: DV யில் 11%
பொட்டாசியம்: DV யில் 10%
மெக்னீசியம்: DV யில் 8%
- குழந்தைகள், முதல் சிரிப்பை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும்.
- பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது.
ஒரு உடலுக்குள் ஒரு உயிர் கருவாகி உருவாகி பூமியில் பிறத்தல் என்பது இறைவன் படைப்பில் ஆச்சர்ய விஷயங்களில் ஒன்று. அந்தவகையில் பிறந்த குழந்தைகள் பற்றி நாம் பலரும் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள் குறித்து பார்ப்போம்.
குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுவதில்லை...
உலகிற்கு வரும்போதே குழந்தை அழுதுகொண்டேதான் வருகிறது. அப்படி பிறக்கும்போது குழந்தை அழவில்லை என்றால், அதனை அழவைக்க மருத்துவர்கள் சில உத்திகளை பயன்படுத்துவர். குழந்தை அழுதால்தான் தாயிடம் கொடுப்பர். இதில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைய சில வாரங்கள் ஆகும். அதற்கு பின்தான் குழந்தைகள் கண்ணீர்விட்டு அழுவார்கள்.
300 எலும்புகளுடன் பிறக்கின்றனர்
பொதுவாக மனிதர்களுக்கு 206 எலும்புகள்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் உடலில் 300 எலும்புகள் இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். அப்போது மீதமுள்ள 94 எலும்புகள் எங்கு செல்லும் என நாம் யோசிப்போம். குழந்தைகளின் எலும்புகள் பல குறுத்தெலும்புகளால் ஆனவை. இவை வளரும்போது ஒன்றாக இணைகின்றன. காலப்போக்கில் குறுத்தெலும்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரியவர்களில் காணப்படும் எலும்பு அமைப்பை உருவாக்குகின்றன.
10,000 சுவை மொட்டுகள்
புதிதாக பிறக்கும் குழந்தைகள் சுமார் 10 ஆயிரம் சுவை மொட்டுகளுடன் பிறக்கின்றன. சுவை மொட்டுகள் என்பது நாக்கில் உள்ள சுவை உணர்திறன் கொண்ட செல்களாகும். இவை சுவையை உணர உதவுகின்றன. இந்த எண்ணிக்கை பெரியவர்களுக்கு இருப்பதைவிட பலமடங்கு அதிகம். இந்த மொட்டுகள் அவர்களின் நாக்கில் மட்டுமல்ல, கன்னங்களின் உட்புறத்திலும், வாயின் மேற்புறத்திலும், தொண்டையிலும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவை உணர்வுகளை வேறுபடுத்தி அறிய உதவுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கு தேன் அல்லது புதிதாக சில பொருட்களை கொடுக்கும்போது அவ்வளவு பாவனைகளை முகத்தில் காட்டுவர். குழந்தைகள் வளர வளர இந்த சுவை மொட்டுகளின் எண்ணிக்கை குறைந்து நம்மை போலவே சுவைதிறனை கொண்டிருப்பர்.

குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த 6-8 வாரங்கள் ஆகும்
வலது பக்கம் தலைசாய்க்க விரும்புவார்கள்
பிறந்த குழந்தைகளை படுக்க வைக்கும்போது அவர்கள் பெரும்பாலும் கழுத்தை வலதுபக்கம் வைத்து தூங்கவே விரும்புவர். இதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சுமார் 70-80% குழந்தைகள் இதைத்தான் செய்கிறார்கள். 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் இயக்க ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.
புன்னகைக்காக காத்திருக்க வைப்பர்
பிறந்த குழந்தைகள் அதிகம் அழுதுதான் பார்த்திருப்போம். அவர்கள் முதல் வாரத்திலேயே சிரித்து யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும். அதற்கு முன்னர் நீங்கள் பார்த்திருக்கும் முக அசைவுகள் அல்லது சிரிப்பு அனிச்சையானவை. அவர்களாக செய்திருக்க மாட்டார்கள். உங்கள் குரலை உணர தொடங்கும்போது உங்களுக்கு புன்னகையை பரிசாக அளிப்பார்கள். இதற்கு குறைந்தது 6 வாரங்கள் எடுக்கும்.
- கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சிக்கு முட்டை சிறந்த தேர்வாகும்
- முட்டையில் உள்ள ஊட்டச்சத்துகள் மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சிறியதாக இருந்தாலும் ஒரு சக்திவாய்ந்த ஊட்டச்சத்தாக இருப்பதுதான் முட்டை. ஒவ்வொரு நாளும் 27% அமெரிக்கர்கள் முட்டையை வேகவைத்தோ, ஆம்லெட்டாகவோ அல்லது சாண்ட்விச்சின் ஒரு பகுதியாகவோ எடுத்துக்கொள்கிறார்கள். காரணம் முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவாகக் கருதப்படுகிறது. ஆனால் முட்டையை தினமும் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை சாப்பிடும்போது உடலில் நிகழும் மாற்றம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
ஒரு முட்டையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்
கலோரிகள்: 71
மொத்த கொழுப்பு: 5 கிராம்
புரதம்: 6.24 கிராம்
வைட்டமின் பி12: 0.5 மைக்ரோகிராம்
வைட்டமின் டி: 1.24 மைக்ரோகிராம்
கால்சியம்: 24 மி.கி.
கோலின்: 169 மி.கி.

கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சிக்கு முட்டை சிறந்த தேர்வாகும்
முட்டையில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள்
புரதம்
முட்டையில் அதிகளவு புரதம் உள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்கும். மேலும் பசியை கட்டுப்படுத்தும். முட்டைகள் தசைகளைப் பராமரிக்கவும், திசுக்களைச் சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதியில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
வைட்டமின் டி
முட்டையில் நிறைந்துள்ள பலவிதமான வைட்டமின்கள் பல நன்மைகளைத் தருகின்றன. இதில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பயோட்டின் (Biotin), மற்றும் ஃபோலேட் ஆகியவை அடங்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தி, எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன.
கோலின்
செல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான கோலின், முட்டையில் உள்ளது. கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிப்பதைத் தவிர, கோலின் கொழுப்பைக் கடத்துவதற்கும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு, முட்டைகள் கருவின் வளர்ச்சிக்கு சிறந்த தேர்வாகும். ஏனெனில் அவை மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வைட்டமின் பி12
இரண்டு முட்டைகள் ஒரு நாளைக்குத் தேவையான பி12- ல் மூன்றில் ஒரு பங்கை கொடுக்கின்றன. இந்த வைட்டமின் "சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும், நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை ஆதரிப்பதற்கும் அவசியம்.
ஆக்ஸிஜனேற்றிகள்
முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டு ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
தினசரி முட்டை எடுத்துக்கொள்ளலாமா?
ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது. வயதானவர்கள், அதிக புரதத் தேவைகள் உள்ளவர்கள் ஒருநாளைக்கு இரண்டு முட்டை எடுத்துக்கொள்ளலாம். எப்போதாவது அதிகமாக சாப்பிடுவது பிரச்சனையில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கும்மேல் சாப்பிடுவது நீரிழிவு, அதிக கொழுப்பு அல்லது இதய நோய் உள்ளவர்களுக்கு உகந்ததாக இருக்காது. அவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக்கொள்ளலாம். புரதச்சத்துக்கு வெறும் முட்டையை மட்டும் நம்பியில்லாமல், மீன் போன்ற மற்ற புரதச்சத்து நிறைந்தவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
- ஆரஞ்சு தோல் பொடி இயற்கையிலேயே பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது.
- ஆரஞ்சு சாற்றை கற்றாழையுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சரும அழகையும் கூட்டுகிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழத்தை பயன்படுத்துவதால் சருமம் அடையும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
முகப்பரு தடுப்பு
ஆரஞ்சு தோல் பொடி முகப்பருவைக் குறைப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். இது இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. மேலும் ஆரஞ்சில் உள்ள சிட்ரிக் அமிலம் முகப்பருவை உலர்த்தவும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் முகத்துளைகளில் உள்ள அழுக்கை அகற்றுகிறது. இறந்த செல்களை அகற்றி, கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.
வயதாகும் அறிகுறிகளை கட்டுப்படுத்தும்
ஆரஞ்சில் நிறைந்துள்ள வைட்டமின் சி ஹைப்பர் பிக்மென்டேஷன், கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
நச்சுத்தன்மை வெளியேற்றம்
ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்தில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன, இதனால் சரும செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.
நீரேற்றம்
ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இது சருமத்திற்கு அவசியம். இதில் உள்ள வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு, மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
பிரகாசம்
ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி மற்றும் இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தை பிரகாசமாக்கி இயற்கையான பளபளப்பை அளிக்கின்றன. இது இறந்த சரும செல்களை மெதுவாக நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கிறது. சருமப் பராமரிப்பில் ஆரஞ்சுப் பழங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது சரும அமைப்பை மென்மையாக்கவும் செம்மைப்படுத்தவும் உதவுகிறது. அதுபோல இதில் உள்ள வைட்டமின் சி, உங்கள் சருமத்தில் மெலனின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்க உதவுகிறது.

ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி & இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்கள் நிறைந்துள்ளன
வீக்கத்தை குறைக்கும்
ஆரஞ்சில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. அவை பல்வேறு காரணிகளால் ஏற்படும் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குணப்படுத்த உதவுகின்றன.
புத்துணர்ச்சி அளிக்கும்
ஆரஞ்சு எப்போதும் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது. ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி முகத்துளைகளை இருக்குகிறது.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள்
ஆரஞ்சுகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை உங்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
சருமப் பராமரிப்பில் ஆரஞ்சுப் பழத்தை சேர்ப்பது எப்படி?
தினசரி உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்த்து கொள்ளுங்கள். ஆரஞ்சில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஆதரிக்கிறது. அல்லது காலையில் ஆரஞ்சை சாறாக எடுத்துக்கொள்ளலாம். சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும் வைட்டமின் சி கிடைக்கும். சாற்றின் சக்கையை ஸ்கரப்பராகவும் முகத்தில் பயன்படுத்தலாம். அது சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். அல்லது ஆரஞ்சு துண்டுகளை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ஒரு நல்ல வழியாகும்.
முகத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம்?
ஆரஞ்சு கலந்த ஃபேஷ் வாஷ்களை பயன்படுத்தலாம். ஆரஞ்சு ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து, அதனை தயிர் போன்ற மற்ற அழகுக்கு நன்மை பயக்கும் பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சு சாற்றை தேன் அல்லது தயிருடன் கலந்து ஃபேஸ் மாஸ்க் போடலாம். ஆரஞ்சு சாற்றை கற்றாழையுடன் சேர்த்து மாஸ்க்காக பயன்படுத்தலாம்.
- தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கும்!
- பயணம், மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகப்படுத்தி, படைப்பாற்றால் திறனை அதிகரிக்கும்.
நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் சென்று மனது கொஞ்சம் கவலையாக இருக்கிறது எனக்கூறினால், பலரின் அறிவுரை "வெளியே சென்று வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்" என்பதுதான். பலரும் இவ்வாறு கூறுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? நீண்ட தொலைவு பயணம் செய்வது மனதுக்கும், உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்தவகையில், ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் அடிக்கடி பயணம் செல்வது அவர்களுக்கு நல்ல ஆறுதலையும், ஆரோக்கியத்தையும் தருமாம். தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாம். தொலைதூர பயணத்தால் நாம் பெறும் பலன்கள் குறித்து பார்ப்போம்.
குறையும் மன அழுத்தம்
வேலைக்கு செல்வோர் அல்லது குடும்பத்தை விட்டு வெளியூர்களில் இருப்போர், நகரத்தில் வாழ்பவர்களுக்கு அதிகளவு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. காரணம் அவர்களின் வாழ்க்கைச்சூழல்... ஒரே இடத்தில் அதிக நேரம் இருப்பது, வெளியில் அதிகம் செல்லாதது, வேலையைவிட்டு வந்தால் வீடு, வீட்டைவிட்டால் அலுவலகம், மற்ற வேலைகளை பார்ப்பது, சாப்பிடுவது இதற்கே நேரம் சரியாக இருக்கும். மனிதர்களிடம் அதிகம் பேச நேரம் இருக்காது. ஒருவரிடம் பேசும்போது நம் மனதில் இருக்கும் எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். பேசாதபோது அந்த உணர்ச்சிகள் உள்ளுக்குள்ளே இருக்கும். மேலும் சோகமான நிகழ்வு என்றால் அதை மீண்டும் மீண்டும் நினைத்து நம்மை நாமே அழுத்தத்திற்கு உள்ளாக்கி கொள்வோம். உணர்ச்சி ரீதியான அதிகப்படியான சுமையை சுமப்போம். இதன் விளைவாக பதற்றம் மற்றும் மன சோர்வு ஏற்படலாம்.
மேலும் அதிகப்படியான தனிமை ஒருவித வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும். எதன்மீதும் ஆர்வம் இருக்காது. இந்த மனநிலையில் இருந்து மாற்றம் தேவை என்றால், இந்த அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டுமென்றால் ஒரு பயணம் அவசியம். அது சொந்த ஊர்களுக்கு செல்வதாக இருக்கலாம், செல்லாத ஊர்களுக்கு செல்வதாக இருக்கலாம் அல்லது நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்வதாகவும் இருக்கலாம். பயணத்தில் மனிதர்கள் இல்லையென்றாலும் நாம் இயற்கையில் இருக்கும் எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வோம். இயற்கை சூழலில் நமது மனமும், உடலும் ஓய்வெடுக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் மன அழுத்தம் குறையும். மேலும் பயணம் மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகரிக்கும். இது வேலையில் கவனம் செலுத்த உதவும்.
படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும்
அனுபவங்களைப் போலவே இயற்கையும் நிறைய பாடங்களை கற்றுக்கொடுக்கும். நீங்கள் கவனித்திருப்பீர்களா? என தெரியவில்லை. பூங்காவிற்கோ அல்லது பசுமையான, பசுமை நிறைந்த இடத்திற்கோ நாம் சென்றால் மனதில் என்ன கவலைகள் இருந்தாலும் அது நினைவில் வராது. அதாவது எந்த எண்ண ஓட்டமும் மனதில் இருக்காது. வெற்றிடமாக எதுவும் தோன்றாது. அமைதியாக உட்கார்ந்திருப்போம். வெளியில் இருப்பது நம் மனதில் நிம்மதியான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். ஒரு தெளிவு கிடைக்கும். மனம் தெளிவாக, அமைதியாக இருக்கும்போது பிரச்சனைகளுக்கான தீர்வு எளிதில் கிடைக்கும். நிறைய தோன்றும். படைப்பாற்றால் அதிகரிக்கும். எழுத்தாளர்கள் பலரும் அமைதியான, பசுமையான சூழலைத்தான் விரும்புவார்கள்.
உடல்நலன் மேம்படும்
இயற்கை சூழலில் இருக்கும்போது கார்டிசோல் அளவு குறைகிறது. கார்டிசோல் அளவு குறைந்தால் மனஅழுத்தம் குறையும். அடிக்கடி வெளியே இருப்பது இதய நோய் விகிதங்களைக் குறைக்க வழிவகுக்கும். மேலும் எலும்புகள், இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமான வைட்டமின் டி அளவு சூரிய ஒளியால் அதிகரிக்கும்.
மன ஆரோக்கியம்
இயற்கை, மன அழுத்தம் மற்றும் கோப உணர்வுகளைக் குறைக்க உதவும். உடற்பயிற்சியும் இதற்கு உதவும், ஆனால் நீங்கள் வெளியில் இருக்கும்போது இது இன்னும் சிறந்தது. பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. வெளியில் இருப்பது சமூகத்தோடு இணங்கச்செய்யும். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமென்றால், ஒரு பூங்காவுக்கு செல்கிறோம் என்றால் அங்கு நமக்கு தெரியாதவர்கள் சிலரை பார்ப்போம். இரண்டு, மூன்று நாட்கள் பூங்காவிற்கு சென்றால் அவர்களுடன் ஒன்றிணைவோம். வெளியூர்களுக்கு செல்லும்போது முகம் தெரியாதவர்களோடு பேசுவோம்.

பல கவலைகளுக்கு ஒரேமருந்து பயணம்
இது மனிதர்களிடம் எளிதில் ஒன்றாக உதவும். கூடுதலாக, நீங்கள் தொடர்ந்து வெளியே இருக்கும்போது நன்றாக தூங்குவதைக் காணலாம். இயற்கை ஒளியில் தினமும் படுவது தூக்கம்/விழிப்பு சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் சூரிய ஒளியில் வெளியே செல்வதை உறுதி செய்வதன் மூலம், இரவில் தூங்கும் திறனை மேம்படுத்தலாம். பூங்காக்கள் மற்றும் பசுமையான இடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறைவான மன உளைச்சலைக் கொண்டுள்ளனர். அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகின்றனர். மேலும் நீண்ட ஆயுட்காலத்தை கொண்டுள்ளனர். இயற்கையின் மீதான வெளிப்பாடு நாள்பட்ட நோயால் ஏற்படும் இறப்பைக் குறைக்கும்.
பயணம் செல்லவில்லையென்றால், என்ன செய்யலாம்?
ஒருநாளைக்கு குறைந்தது 5 நிமிடமாவது சூரிய ஒளியில்படுங்கள். காலில் இருக்கும் செருப்பை கழற்றிவிட்டு கொஞ்சநேரம் புல்வெளியில் நடந்து செல்லுங்கள். பூங்காக்கள் அல்லது வெளியில் மதிய உணவை சாப்பிடுங்கள். தொலைபேசியில் பேசினால் வெளியே நின்று பேசுங்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடியாவிட்டாலும், பூங்காவிற்கு செல்லுங்கள். உங்கள் சைக்கிளில் தூசியைத் தட்டிவிட்டு, அக்கம் பக்கத்தைச் சுற்றி வாருங்கள். ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ஒரு நிழல் தரும் மரத்தடியில் உட்காருங்கள். வீட்டு முற்றத்திலோ, முன்புறமோ செடி, கொடிகளை நடுங்கள். வாரத்திற்கு ஒருமுறையாவது மனதுக்கு நெருக்கமானவரிடம், யாராக இருந்தாலும் சரி மனம்விட்டு பேசுங்கள்.
- பெண்களின் தங்கம் என ஷியா வெண்ணெய் அழைக்கப்படுகிறது.
- நீச்சல் வீரர்கள் பலர், ஷியா வெண்ணெயை தலையில் தடவிக்கொண்டுதான் தண்ணீரில் இறங்குகின்றனர்!
ஷியா வெண்ணெய் என அழகு சாதனப் பொருட்களில் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதைப்பற்றிய முழுமையான விவரங்கள் நம்மில் பலருக்கு தெரியாது. ஆப்பிரிக்காவில் ஏராளமாகக் காணப்படும் ஷியா மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படுவதுதான் ஷியா வெண்ணெய். ஷியா மரத்தின் பழத்தில் உள்ள விதைகள் எடுக்கப்பட்டு, அவை நசுக்கப்பட்டு, வேகவைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு இந்த வெண்ணெய் எடுக்கப்படுகிறது. தோல் பராமரிப்பில் பல நூற்றாண்டுகளாக ஷியா வெண்ணெய் முக்கிய பங்காற்றி வருகிறது என்றால் நம்ப முடியுமா? ஆம். கிளியோபாட்ராவின் காலத்தில் இருந்து ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிளியோபாட்ரா, தனது அழகின் ரகசியங்களில் ஒன்றாக இதைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது பெண்களின் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. தோல் மட்டுமின்றி முடி பராமரிப்பிற்கும் ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஷியா வெண்ணெயில் உள்ள ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான பல நன்மை பயக்கும் பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
சருமத்திற்கு தரும் நன்மைகள்
ஷியா வெண்ணெய் ஒரு சிறந்த மாய்ச்சுரைசர் ஆகும். குறிப்பாக குளிர்காலங்களில் இது சரும பராமரிப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது. ஷியா வெண்ணெயில் நிறைந்துள்ள ஒலிக், ஸ்டீரிக், லினோலிக் அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, ஈ, சி ஆகியவை, சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கின்றன. ஷியா வெண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், அதன் குறிப்பிடத்தக்க மென்மை மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் வறண்ட சருமத்தில் விழும் விரிசல்களை குணப்படுத்த உதவுகின்றன. குறிப்பாக குதிகால் மற்றும் வெட்டுக்காயங்கள் போன்ற பகுதிகளை குணப்படுத்த உதவுகின்றன.

பல அரசிகள், தங்கள் சரும பராமரிப்பிற்கு ஷியா வெண்ணெயைப் பயன்படுத்தியிருக்கின்றனர்!
முடிக்கு தரும் நன்மைகள்
ஷியா வெண்ணெய் முடிக்கு கண்டிஷனராக பயன்படுகிறது. உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடி புத்துயிர் பெற உதவுகிறது. முடியின் நுனியில் உள்ள கிளைத்த முடிகளை சரிசெய்கிறது. மேலும் முடியின் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. சூரிய கதிர்களின் சேதத்திலிருந்து முடியை பாதுகாக்க ஆப்பிரிக்காவில் பாரம்பரியமாக ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீச்சல் வீரர்கள் பலரும் ஷியா வெண்ணெயை தலையில் தடவிகொண்டு, பின்தான் தண்ணீரில் இறங்குகின்றனர். காரணம், குளோரின் சேதத்திலிருந்து முடியைப் பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தையும், உயிர்ச்சக்தியையும் ஷியா வெண்ணெய் பாதுகாக்கும்.
ஆரோக்கிய நன்மைகள்
ஷியா வெண்ணெய் வலி நிவாரணி பண்புகளை கொண்டுள்ளது. ஆப்பிரிக்க மருத்துவத்தில் தசை வலி மற்றும் புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வாத நோய் போன்றவைகளுக்கு நன்மை பயக்கும். வலியைத் தணிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, தோல் ஒவ்வாமைகளை ஆசுவாசப்படுத்தவும், பூச்சி கடிக்கு சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவான தோல் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வை வழங்குகிறது.
- ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதயநோய் அபாயம் குறைவாம்!
- ஆலிவ் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் எடை இழப்பிற்கு வழிவகுக்கும்.
ஆலிவ் எண்ணெய், சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது என நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இருந்தபோதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் ஆலிவ் எண்ணெயின் முழு பலனையும் அறிந்தால் கண்டிப்பாக அதனை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம். ஆலிவ் எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.
மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள்
இதயத்திற்கு நன்மை பயக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் (Monounsaturated Fats - MUFAs) ஆலிவ் எண்ணெயில் நிறைந்துள்ளது. மேலும் 13.8% நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. அதேசமயம் 10.5% பாலிஅன்சாச்சுரேட்டட் உள்ளது. அதாவது ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இருப்பினும் ஆலிவ் எண்ணெயின் முக்கிய கொழுப்பு அமிலம் ஒலிக் அமிலமாகும். நிறைவுறா கொழுப்பான ஒலிக் அமிலம் மொத்த எண்ணெய் உள்ளடக்கத்தில் 71% ஆகும். ஒலிக் அமிலம் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் புற்றுநோயுடன் தொடர்புடைய மரபணுக்களில் கூட நன்மை பயக்கும் பண்புகளை விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஆக்ஸிஜனேற்றிகள்
1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயில் தினசரி மதிப்பில், 13% வைட்டமின் E-யும், 7% வைட்டமின் K-யும் உள்ளது. மேலும் பாலிஃபீனால்கள், வைட்டமின் E, ஸ்குவாலீன் போன்ற உயிரியல் ரீதியாக செயல்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களும் நிறைந்துள்ளன. இவை இருதய மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்க உதவும். அவை வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதோடு, ரத்தக் கொழுப்பை ஆக்சிஜனேற்றத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
புற்றுநோய், இதய நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, வகை 2 நீரிழிவு நோய், அல்சைமர், கீல்வாதம், உடல் பருமன் போன்ற நோய்களுக்கு அடிப்படை காரணம் நாள்பட்ட அழற்சி எனக் கண்டறியப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயில் உள்ள முக்கிய அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த நோய்களுக்கு எதிராகப் போராடுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, வீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதில் முக்கியமானது ஓலியோகாந்தல் கலவை. இது இப்யூபுரூஃபன் (ibuprofen) போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் போலவே செயல்படுவதாகவும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒலிக் அமிலம், சி-ரியாக்டிவ் புரதம் அழற்சிகளைக் குறைக்கின்றன.
பக்கவாதத்தை தடுக்க உதவும்
இரத்த உறைவு அல்லது இரத்தப்போக்கு காரணமாக மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, மரணம் ஏற்படுவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாதம் உள்ளது. 2014ஆம் ஆண்டு 841,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆலிவ் எண்ணெய் சாப்பிட்ட இவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதயநோய் அபாயம் குறைவாக இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் 2020ல் ஆலிவ் எண்ணெய் உட்கொள்ளலுக்கும், பக்கவாத ஆபாயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கண்டறியப்பட்டது.

புற்றுநோய் அபாயத்தை ஆலிவ் எண்ணெய் குறைக்கிறது
இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், மத்திய தரைக்கடல் நாடுகளில் இதய நோய் அபாயங்கள் குறைவாக இருந்தன. இது அந்நாடுகளின் உணவுமுறை பழக்கத்தை ஆய்வுசெய்ய வழிவகுத்தது. அப்போது அவர்கள் உணவில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் முக்கியப் பொருளாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ஆலிவ் ஆயில் ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டது.
எடை இழப்பு
ஆலிவ் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் எடை இழப்பிற்கு வழிவகுக்கின்றன என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது. காரணம் இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFA) பசியைக் கட்டுப்படுத்தவும், உடலில் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. இருப்பினும், எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் என்பதையும், ஆலிவ் எண்ணெய் விதிவிலக்கல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
அல்சைமர் நோயை எதிர்த்து போராடும்
அல்சமைர் நரம்புச்சிதைவு நிலைகளில் ஒன்றாகும். இது மறதி நோய்க்கும் வழிவகுக்கும். அல்சைமர் நோய்க்கு முக்கிய காரணம் மூளை செல்களுக்குள் பீட்டா-அமிலாய்டு (Beta-amyloid) பிளேக்குகள் குவிவதாகும். ஆலிவ் எண்ணெய் இந்த பீட்டா- அமிலாய்டு சுரப்பிகளை தடுக்கும் என்றும், அல்சைமர் நோய் மற்றும் அறிவாற்றல் குறைபாட்டை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
வகை 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்
ஆலிவ் எண்ணெய் வகை 2 நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது புற்றுநோய்க்கு முக்கிய காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைக் குறைக்க உதவும். அதுபோல ஆலிவ் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் CRP (சி-ரியாக்டிவ் புரதம்) அளவைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஹெலிகோபாக்டர் பைலோரி (எச். பைலோரி) பாக்டீரியாவுக்கு எதிராக போராடக்கூடிய பண்பு ஆலிவ் எண்ணெயில் உள்ளது.
- சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க தக்காளி உதவும்.
- ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.
சமையலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பயன்படுகிறது தக்காளி. உங்களின் செயற்கை அழகு சாதனப் பொருட்களை தள்ளிவைத்துவிட்டு தக்காளியை போட்டாலே போதும். சரும அழகை மெருகூட்டலாம். தக்காளி சருமத்திற்கு எப்படி நன்மை பயக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
இறந்த செல்களை நீக்கும்...
தக்காளியை தொடர்ந்து முகத்தில் தடவினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். தக்காளியில் இயற்கையான நொதிகள் உள்ளன. அவை சருமத்தை உரிப்பதற்கு (exfoliating) உதவுகின்றன. இந்த நொதிகள் இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன. தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்றவற்றில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இது சரும செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
முகப்பரு
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளன. மேலும், இது அமிலத்தன்மை கொண்டது. இது உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, சருமத்தின் pH அளவையும் பராமரிக்க உதவுகிறது. முகப்பரு பாதிப்புள்ள சருமத்தில் தக்காளியைத் தொடர்ந்து தடவுவது, அதன் இயற்கையான பண்புகளால் முகப்பரு வெடிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.
எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது
தக்காளியில் சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளதால் அது சருமத்தில் எண்ணெய் பசை உருவாவதை தடுக்கிறது. தக்காளியை இரண்டாக வெட்டி, அந்தத் துண்டை முகத்தில் தேய்த்து, 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் பச்சை தண்ணீரில் முகத்தை கழுவவும். எண்ணெய் பசை இல்லாத மென்மையான சருமத்திற்கு இதை தொடர்ந்து செய்யுங்கள். வாரத்திற்கு மூன்று முறை பச்சை தக்காளியை முகத்தில் தேய்க்கலாம்.
வெயில் பாதிப்பு
சூரியனின் புறஊதா கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்துவதிலும், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்குவதிலும் தக்காளி சிறந்தது. சருமத்தின் பழுப்பு நிறத்தை நீக்கவும் உதவுகிறது.

தக்காளியை தேன், மஞ்சள், சர்க்கரையுடனும் பயன்படுத்தலாம்
சருமத்தை ஆற்றும்
சருமத்திற்கு அவசியமான பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை தக்காளியில் உள்ளன. இது தோல் அழற்சியை தணிக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவை எரிச்சலூட்டும் சருமத்திற்கு நல்லது.
வயதான அறிகுறியைக் குறைக்கும் தக்காளி
சுற்றுசூழல் மாசு, நமது உணவுமுறைகள், நாம் பயன்படுத்தும் செயற்கை அழகு சாதனப்பொருட்கள் இளமையிலேயே சருமத்திற்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதை சரிசெய்ய தக்காளி மிகவும் உதவியாக இருக்கும். வயதானதற்கான பொதுவான அறிகுறிகளில் கருவளையங்கள், சுருக்கங்கள், புள்ளிகள் போன்றவை அடங்கும். தக்காளியில் உள்ள வைட்டமின் டி இவற்றை குறைக்க உதவுகிறது.
விளைவுகள்
தக்காளி சருமத்திற்கு நல்லது என்றாலும், சிலருக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அல்லது முகத்தில் ஏதேனும் காயம் இருந்தால் தக்காளி பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும். தக்காளி அமிலத்தன்மை கொண்டது, எனவே அதிகமாக தக்காளி உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். தக்காளியை முகத்தில் தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால் தடவுவதை நிறுத்துங்கள். தக்காளியைப் பயன்படுத்திய பிறகு முகம் சிவத்தல், அரித்தல் அல்லது தோல் எரிச்சல் ஏற்பட்டால், பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
- குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது.
- குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பிறந்தது முதல் தவழும்வரை குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை அடிக்கடி எதுக்களிப்பது, சாப்பிட்ட உடன் வாந்தி எடுப்பது. இது நோய் அல்ல. ஆனால் உணவு உடனேயே வெளியேவந்தால், போதுமான அளவு வயிறு நிறையாது. சத்தும் கிடைக்காது. பிறந்த குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் மென்மையாக இருக்கும். மேலும் அவர்களின் வயிற்றில் உள்ள வால்வுகள் இணக்கமாக வேலை செய்யாது. இதன் விளைவாக, தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் காற்றை எளிதில் விழுங்கலாம். இந்த அதிகப்படியான காற்று அசௌகரியத்தை ஏற்படுத்தி, உணவளித்த பிறகு எச்சில் ஊறவும், வாந்தி எடுக்கவும் வழிவகுக்கும். குழந்தைகள் சாப்பிட்ட உடனேயே அதனை வெளியே உமிழாமல் இருக்க தாய்மார்கள் தங்கள் தாய்ப்பால் கொடுக்கும் நுட்பங்களை கொஞ்சம் மாற்றினாலே அவற்றை தடுக்கலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக...
குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது. இதனால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அதிகமாக உணவளிக்காமல், நேர இடைவெளி எடுத்து கொடுக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் குறைந்த அளவு பால் கொடுக்க வேண்டும். இது விரைவாகவும், எளிதிலும் ஜீரணமாக உதவும்.
தாய்ப்பால் கொடுத்த உடன் படுக்க வைக்கக்கூடாது
பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பால் கொடுத்தவுடன் உடனேயே குழந்தையை படுக்கவைக்கக்கூடாது. கொஞ்சநேரம் தோளில் வைத்துக்கொண்டு, பின்னர் படுக்கவைக்கலாம். குழந்தையை உடனடியாக படுக்க வைத்தால், எச்சில் ஊறவும், வாந்தி எடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது.
அளவு
நாம் குழந்தைகளுக்கு எந்த அளவு பால் அல்லது உணவுக் கொடுக்கிறோம் என்பது மிக முக்கியம். பால் கொடுத்த கொஞ்ச நேரத்திலேயே குழந்தை அழுதால், பசிக்கிறது என்று மீண்டும் பால் கொடுப்பார்கள். அப்போது வயிற்றில் இடம்கொள்ளாமல் உணவு மேலே எகித்து கொண்டுவரும். அதுபோல குழந்தைகளை வேகமாக பால்குடிக்க விடக்கூடாது. புரை ஏறிவிடும். இதனால் குடித்த மொத்த பாலும் வெளியே வந்துவிடும். குழந்தையை மெதுவாக மட்டுமே பால் குடிக்க பழக்க வேண்டும். அதேபோல் ஒரேநேரத்தில் அதிகமாக பால் கொடுக்கக்கூடாது.

குழந்தைகளுக்கு ஒரேநேரத்தில் அதிகமாக பால் கொடுக்கக்கூடாது
சிகரெட் புகையை தவிர்க்க வேண்டும்
சிகரெட் புகை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். சிகரெட் புகையை குழந்தை சுவாசித்தால், வயிற்றில் அதிக அமிலம் உற்பத்தியாக வழிவகுக்கும். இதனால் குழந்தைக்கு அருகில் யாரேனும் புகைபிடித்தால் அவர்களை தள்ளி செல்ல சொல்லுங்கள். அல்லது குழந்தையை வேறு இடத்திற்கு மாற்றுங்கள்.
கால்சியம் குறைபாடு
தூக்கத்தில் சிரமம் அல்லது இருமல், அடிக்கடி எச்சில் துப்புதல், வாந்தி எடுத்தல் போன்றவை குழந்தைக்கு கால்சியம் குறைபாடு இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதனால் கால்சியம் உள்ள உணவுப்பொருட்களை குழந்தைக்கு வழங்கலாம்.
- வாரத்திற்கு 5 அவுன்ஸ் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன.
- வால்நட்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அப்படியேப்பெற உப்பு சேர்க்காத வால்நட்ஸ் சாப்பிடுவது நல்லது.
ஆரோக்கிய உணவுமுறை பட்டியல் என்று இப்போது எடுத்தால் அதில் கண்டிப்பாக நட்ஸ் இருக்கும். ஏனெனில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது நமது உணவுகள் சத்தானதாக இல்லை. அதனால் உடல் ஆரோக்கியத்தைப்பெற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. அப்படிப்பட்ட நட்ஸ் வகைகளில் முக்கியமான ஒன்றுதான் அக்ரூட் பருப்பு, அதாவது வால்நட்ஸ். ஒருகாலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே இதனை சாப்பிட்டு வந்தார்கள். அப்படி அரச குடும்பத்தினர் மட்டும் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த வால்நட்ஸில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
வால்நட்ஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்பா-லினோலெனிக் அமிலத்தின் (ALA) சிறந்த மூலமாகும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படும் ஒரே பருப்புவகை வால்நட்ஸ் ஆகும். அதிக கொழுப்பு பெரும்பாலும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது இதய நோய்களை ஏற்படுத்துகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கின்றன.
மூளை ஆரோக்கியம்
வால்நட்ஸில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பாலிபினால்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் வயதாகும்போது ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டை மெதுவாக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடல் ஆரோக்கியம்
குடல் பாக்டீரியாக்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்கள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை எளிதாக்கவும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகின்றன. வால்நட்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் வால்நட் சாப்பிடும் பெரியவர்களுக்கு குடலின் நுண்ணுயிர் உற்பத்தி அதிகமாக இருப்பதாகக் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன
புற்றுநோய் தடுப்பு
குடலில் உள்ள நுண்ணுயிரிகள் வால்நட்ஸில் காணப்படும் சேர்மங்களை கொண்டு யூரோலிதின் (தசைகளின் வலிமையை மேம்படுத்த உதவும் ) கலவையை உற்பத்தி செய்கின்றன. இந்த யூரோலிதின்கள் சில புற்றுநோய்களுக்கான ஆபத்தைக் குறைக்க உதவும். குறிப்பாக வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும்.
எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?
அமெரிக்க விவசாயத் துறை பரிந்துரைப்படி, அமெரிக்காவில் வாரத்திற்கு 5 அவுன்ஸ் வால்நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதிகமாக எடுத்துக் கொண்டால் கலோரி அளவு அதிகமாகி விடும். ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 190 கலோரிகள் உள்ளன. கலோரிகளைப் போலவே வால்நட்ஸில் ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளன. வால்நட்டில் உள்ள ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகள் நீண்டநேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் எளிதில் பசி எடுக்காது. மேலும் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியத்தை தருகிறது.
எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்?
வால்நட்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை அப்படியேப்பெற பச்சையாக எடுத்துக்கொள்ளவேண்டும். வாங்கும்போது உப்பு சேர்க்காததாக பார்த்து வாங்குங்கள். ஓட்மீலில் கலந்து சாப்பிடலாம்.






