என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.
    • பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

    • தயிர் பச்சடியில் பாலாடையை போட்டால் எளிதில் புளித்து விடாமல் இருக்கும்.

    • டீயில் சிறிதளவு சுக்குத்தூள், மிளகுத்தூள், ஏலக்காய் தூள் கலந்தால் அதிக ருசி கிடைக்கும். அஜீரணக் கோளாறும் சீராகும்.

    • முட்டையை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

    • வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரையை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.

    • சமையலுக்கு பட்டாணி பயன்படுத்தும்போது அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.

    • நறுக்கிய வெங்காயத்துடன் சிறிது வெண்ணெய் சேர்த்து வைத்தால் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும்.

    • எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.

    • பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

    • கோதுமை மாவு தோசைக்கு காலையிலேயே மாவை கரைத்து வைத்தால் மாலையில் சுடும் போது ஒட்டாமல் வரும்.

    • சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, பெருங்காயம், வெந்தயம், சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையோடு மட்டுமின்றி நீண்ட நேரம் கெடாமலும் இருக்கும்.

    • சுண்டல், வெள்ளை சுண்டல், ராஜ்மா, காராமணி போன்ற பருப்பு வகைகளை கிரேவியாக சமைக்கும் பொழுது, வெந்த பருப்பில் இருந்து சிறிதளவு எடுத்து அரைத்து கரைத்து விட்டால் கிரேவி கெட்டியாக இருப்பதுடன் ருசியும் கூடும்.

    • காய்ந்த ரொட்டியை துண்டுகளாக நறுக்கி நன்றாக காய வைத்து எடுத்து வைத்தால் அவற்றை புலாவ், பிரியாணி ஆகியவற்றில் வறுத்துப் போட சுவையாக இருக்கும்.

    • கத்திரிக்காய் காம்புகளை கழுவிக்கொண்டு ரசம் அல்லது சாம்பார் கொதிக்கும்போது போட்டால் சுவையாக இருக்கும்.

    • முருங்கைக்கீரை உருவிய காம்புகளை சுத்தம் செய்து ரசத்தில் போட்டு குடித்தால் மூட்டுகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.

    • கத்திரிக்காயை நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் கறுத்துப் போகாமல் இருக்கும்.

    • வாழைப்பூ, வாழைக்காய் போன்ற காய்கறிகளை நறுக்கும் பொழுது ஏற்படும் கறையைப் போக்க, கைகளை வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் தேய்த்து விட்டு சோப்பு போட்டு கழுவினால் கை பளிச்சென்று ஆகிவிடும்.

    • கசக்கும் காய்களை அரிசி கழுவிய நீரில் சில நிமிடம் போட்டு சமைத்தால் கசப்பு குறையும்.

    • சில முள்ளங்கிகள் அதிக வாடை வீசும். அவற்றை அரை மணி நேரம் முன்பாக தண்ணீரில் ஊறவைத்து பிறகு சமைத்தால் வாசனை வராது.

    • குளிர் காலத்தில் லேசான சுடு பாலில் உறை ஊற்றி வைத்தால் சீக்கிரம் கெட்டித்தயிர் கிடைக்கும்.

    • பன்னீரை, வினிகர் தெளித்த பாலீத்தின் பையில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    • சேமியா உப்புமா செய்யும் போது பாதி அளவு நீரும், பாதி தேங்காய் பாலும் கலந்து செய்தால் உப்புமா ருசிக்கும்.

    • வெண்ணெய் காய்ச்சிய வாணலியில் உருளைக்கிழங்கு அல்லது அவரைக்காயை வதக்கி வறுவல் செய்தால் சுவையும், மணமும் கூடுதலாக இருக்கும்.

    • பச்சடி, சூப் செய்ய சிவப்பு நிற வெங்காயத்தை பயன்படுத்துவது நல்லது. இது ருசியைக் கூட்டும்.

    • குடிநீரை கொதிக்க வைப்பதால் ரசாயன மாசுபடுத்திகளோ, பூச்சிக்கொல்லிகளோ நீக்கப்படாது.
    • குடிநீரை வடிகட்டி பயன்படுத்துவதும் பாதுகாப்பானது.

    குடிநீர் பருகுவது உடலுக்கு எந்த அளவுக்கு ஆரோக்கியமானதோ, அது எந்த அளவுக்கு சுத்தமான நீராக இருப்பதை கருத்தில் கொள்வதும் முக்கியமானது. காய்ச்சிய குடிநீர், வடிகட்டிய குடிநீர், பாட்டில் நீர் உள்ளிட்டவை பரவலாக பயன்பாட்டில் இருக்கும் நிலையில் எந்த தண்ணீரை பருகுவது ஆரோக்கியமானது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. எது சிறந்தது என்று பார்ப்போம்.

    காய்ச்சிய நீர்:

    குடிநீர் நன்கு தெளிந்த நிலையில், அசுத்தமின்றி சுத்தமாக இருப்பது போல் தோற்றம் கொண்டிருந்தாலும் வைரஸ், பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் பற்றிய கவலை எழுந்தால் கொதிக்க வைத்து பருகுவதே சரியானது. சுமார் ஒரு நிமிடமாவது நன்கு தண்ணீரை கொதிக்கவைத்து அதனை வடிகட்டி பருகலாம். அப்படி காய்ச்சிய நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானதாகிவிடும்.

    கவனிக்க வேண்டியவை:

    குடிநீரை கொதிக்க வைப்பதால் ரசாயன மாசுபடுத்திகளோ, பூச்சிக்கொல்லிகளோ நீக்கப்படாது. நீரின் சுவையும் மாறக்கூடும். பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு இது நடைமுறைக்கு உகந்தது அல்ல.

    பாட்டில் நீர்:

    பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர், யூ.வி., ஆர்.ஓ. போன்ற பல்வேறு சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு உட்பட்டிருக்கும். குறிப்பாக கிருமிகள் நீக்கப்பட்டிருக்கும். குடிப்பதற்கு சுவையாகவும் இருக்கும்.

    குறைபாடுகள்:

    எல்லா பாட்டில் நீரும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. தரம் மாறுபடலாம். அத்துடன் பாட்டில் நீரை அதிக நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மைக்ரோபிளாஸ்டிக் நீரில் கலக்க வாய்ப்பிருக்கிறது.

    எதை தேர்வு செய்ய வேண்டும்?

    குடிப்பதற்கு மட்டுமின்றி சமைப்பது உள்ளிட்ட அன்றாட உபயோகத்துக்கு வடிகட்டிய நீரை பயன்படுத்துவது நல்லது. அதற்கு தரமான சுத்திகரிப்பு சாதனத்தை வீட்டில் நிறுவலாம். ஆர்.ஓ. பயன்படுத்துவதாக இருந்தால் நீரில் இருக்கும் தாதுக்களை அறவே நீக்காமல் பாதுகாக்கும்படியான வடிகட்டிகளை இடம் பெறச் செய்ய வேண்டும்.

    வெளியிடங்களுக்கு பயணம் செய்யும்போது நம்பகமான தயாரிப்பு நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களை வாங்கி உபயோகிக்கலாம்.

    அல்லது வீட்டில் இருந்தே பாட்டில்களில் வடிகட்டிய, காய்ச்சிய நீரை கொண்டு செல்லலாம். எந்த வகை குடிநீராக இருந்தாலும் அதன் பருகும் முன்பு தூய்மையை உறுதி செய்து செய்து கொள்ள வேண்டும். பாட்டில்களில் உபயோகிப்பதாக இருந்தால் பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

    வடிகட்டிய நீர்:

    குடிநீரை வடிகட்டி பயன்படுத்துவதும் பாதுகாப்பானது. குறிப்பாக கார்பன் வடிகட்டிகள் நீரில் கலந்திருக்கும் குளோரினின் வீரியத்தை குறைத்து நீரின் சுவையை மேம்படுத்தும். மேலும் நீரில் படிந்திருக்கும் தேவையற்ற மாசுக்கள், அசுத்தங்களை போக்கும். தினசரி பருகுவதற்கு ஏற்றதாகவும் அமையும்.

    கவனிக்க வேண்டியவை:

    எல்லா வடிகட்டிகளும் ஒரே மாதிரியான செயல்திறன் கொண்டவை அல்ல. சில வடிகட்டிகள் அனைத்து அசுத்தங்களையும் வடிகட்டுவதில்லை. அவை திறம்பட செயல்பட, தவறாமல் சுத்தம் செய்வதும், சரியான நேரத்தில் மாற்றுவதும் முக்கியமானது. தரமான வடிகட்டிகளை வாங்கி உபயோகிப்பது அதை விட முக்கியமானது.

    • நாவல்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது.
    • நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிக முக்கியம். நீரிழிவு மேலாண்மையில் உதவக்கூடிய பருவகால பழமாக நாவல் பழம் அமைந்திருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் 10 நாவல் பழங்கள் வரை சாப்பிடலாம்

    மதிய உணவுக்கு பிறகு சாப்பிடுவது சிறந்தது. நாவல் பழம் நார்ச்சத்து நிறைந்தது. இது மலச்சிக்கலைத் தடுக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடுவதற்கு கட்டுப்பாடு இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுதான் அதற்கு காரணம். அதனால் பழங்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு வரப்பிரசாதமாக நாவல் பழம் அமைந்திருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் ஏன் நாவல் பழம் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

    1. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

    நாவல் பழத்தில் உள்ள ஜாம்போலின் மற்றும் எலாஜிக் அமிலம் போன்ற சேர்மங்கள், ரத்தத்தில் சர்க்கரை மெதுவாக கலக்க உதவுகின்றன. இவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    2. கல்லீரலை பாதுகாக்கும்

    நாவல் பழம் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்தது. இது உடலில் உள்ள நச்சுக்களை குறைத்து, அழற்சியை தணிக்க உதவும். கல்லீரல் செல்களை பாதுகாக்கவும் செய்யும்.

    3. குறைந்த கிளைசெமிக் குறியீடு

    நாவல்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. ஒரு நாவல் பழத்தில் சுமார் 25 வரையே இருக்கும். இதனால், ரத்தத்தில் திடீரென சர்க்கரை உயர்வதை தடுத்துவிடும்.

    4. இதய ஆரோக்கியம் காக்கும்

    நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது. நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பக்கவாத அபாயத்தை குறைக்கவும் துணை புரியும்.

    5. இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும்

    நாவல் பழத்தை டைப்-2 நீரிழிவு நோயாளிகள் முறையாக உட்கொள்வது, உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும். இதனால் உடலில் சரியாக சர்க்கரை பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

    • முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.
    • பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.

    * வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு போன்றவற்றில் காரம் அதிகமாகி விட்டால், சிறிது தேங்காய் பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதோடு சுவையாகவும் இருக்கும்.

    * சாம்பாருக்கு போடும் துவரம் பருப்பை லேசாக வறுத்து வேக வைத்தால் சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாது.

    * கேரட்டை நீரில் போட்டு வேக வைப்பதை விட இட்லி போல் ஆவியில் வேக வைத்தால் கேரட்டில் உள்ள சத்துக்கள் அழியாமல் இருக்கும்.

    * அவல் கேசரி செய்யும்போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு வாசனை வரும் வரை லேசாக வறுத்து, பின்பு மிக்சியில் லேசாக அரைத்து கேசரி செய்தால் ரவா கேசரி போல் இருக்கும்.

    * அடைக்கு ஊற வைக்கும்போது அரிசி, பருப்பு வகைகளுடன், ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயமும் ஊற வைத்து அரைத்தால் அடை மிருதுவாகவும், வாசனையாகவும் இருக்கும்.

    * ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்து பாருங்கள். தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென நன்றாக இருக்கும்.

    * சர்க்கரை பொங்கல் செய்யும் போது பாலுக்கு பதில் பால் பவுடர் சேர்த்து செய்தால் பொங்கலின் சுவை கூடும்.

    * எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்து பருப்பு ரசம் செய்யலாம். சுவையாக இருக்கும்.

    * காய்கறிகள், கீரை போன்றவற்றை வேக வைத்த நீரைக் கீழே கொட்டாமல் ரசத்தில் சேர்த்தால் சத்து மிகுந்த ரசம் தயார்.

    * சூப் செய்ய நல்ல கிரேவி பதம் வருவதற்கு சோள மாவு கிடைக்காத பட்சத்தில் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து சேர்த்தால் அடர்த்தியாக இருக்கும். சத்தும் அதிகம்.

    * பீட்ரூட்டைத்துருவி ஆவியில் வேக வைத்து, கெட்டியான தயிரில் போடவும். மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து பீட்ரூட் கலவையில் கலந்தால் சுவை மிகுந்த பீட்ரூட் பச்சடி தயார்.

    * நீர் மோரில் சிறிது ரசப்பொடி சேர்த்து பருகினால் சுவையாக இருக்கும்.

    * நீள மிளகாயை கிள்ளி, பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துக்கொண்டால், தாளிக்கும் போதும், மற்ற உபயோகத்துக்கும் சுலபமாக இருக்கும்.

    * இஞ்சியை துருவி, வெயிலில் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டால், டீ, குருமா, பொங்கல் போன்றவற்றில் சேர்க்க மணத்துக்கு மணம், உடலுக்கும் நல்லது.

    * சப்பாத்தியின் மேல் சிறிது எண்ணெய்யைத் தடவி ஒரு டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.

    * ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த்துருவல் மற்றும் வாழைப்பழத்தைச் சேர்த்து அரைத்து வைத்து ஆப்பம் வார்த்தால் ஆப்பம் சுவை மிகுந்து இருக்கும்.

    * மாங்காய்த்தொக்கு, இஞ்சித் தொக்கு என்று எதை செய்தாலும் அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தால் அந்த தொக்குகள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

    * முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.

    * பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.

    * இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஊற வைத்த அரிசியையும், உளுந்தையும் முப்பது நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்திருந்து அரைத்தால் மிக்சி சூடாவதை தவிர்க்கலாம்.

    • நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம், நீச்சல், யோகா, பளு தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடலாம்.
    • இதய ஆரோக்கியம் காக்கப்படும்.

    உடல் நலனை பேண பின்பற்றக்கூடிய நன்மை பயக்கும் பழக்கங்களில் உடற்பயிற்சியும் ஒன்றாகும். நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம், நீச்சல், யோகா, பளு தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடலாம்.

    அதன் சில நன்மைகள்:

    * சிறந்த தூக்கத்திற்கு வித்திடும்.

    * உடல் எடை மேலாண்மையை நிர்வகிக்கும்.

    * உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

    * மன அழுத்தத்தை குறைக்கும்.

    * இதய ஆரோக்கியம் காக்கப்படும்.

    * மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    • பழத்துண்டுகளின் மீதும், ஐஸ்கிரீம்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.
    • எந்த வகை கேசரி செய்தாலும், மூன்று டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால், அதன் சுவையே அலாதிதான்.

    சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    * குருமா, சட்னி போன்றவற்றிற்கு அவசரமாக அரைக்கும் நேரத்தில் ஜார் சூடாகி விடும். இதைத் தவிர்க்க ஐஸ் வாட்டர் சேர்த்து அரைக்கலாம்.

    * ஜாம், ஊறுகாய் பாட்டில்களின் மூடியைத் திறக்க கஷ்டமாக இருந்தால், கையில் கிளவுஸ் அணிந்து கொண்டால் எளிதாக திறந்து விடலாம்.

    * பழத்துண்டுகளின் மீதும், ஐஸ்கிரீம்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.

    * தேங்காய்க்கு பதில், வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும். இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்தும் கிடைக்கும்.

    * சாம்பார், ரசம், கூட்டு போன்றவற்றைத் தயாரித்து முடித்து தாளிக்கும்போது கடுகு வெடித்துச் சிதறும். இதைத் தவிர்க்க வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சிறிது மஞ்சள் தூள் போட்டு பிறகு கடுகு தாளித்தால் வெடித்துச் சிதறாது.

    * ஊறுகாய்களை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை தயார் செய்து பிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் குறைந்த அளவு உப்பு சேர்த்தாலே போதும்.

     

     

    * எலுமிச்சைப் பழங்கள் அதிகமாக இருந்தால், ஒவ்வொரு பழத்தையும் தனித்தனியாக டிஷ்யூ பேப்பரால் சுற்றி, எல்லாவற்றையும் சேர்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    * கரைத்த பஜ்ஜிமாவை மிக்ஸியில் அடித்து பஜ்ஜி போட்டால் பஜ்ஜியின் சுவையே அலாதி தான்.

    * பருப்பு சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு, சிறிதளவு புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால் சாம்பாரின் சுவை கூடும்.

    * கடலைப்பருப்பு போளி செய்யும்போது, பொடித்த சர்க்கரையைச்சேர்த்தால் போளி நிறமாகவும், சுவையாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.

    * இன்ஸ்டன்ட் மாவில் குலோப் ஜாமூன் செய்யப்போறீங்களா? மாவைக் கலக்கும்போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் ஜாமூன் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * எந்த வகை கேசரி செய்தாலும், மூன்று டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால், அதன் சுவையே அலாதிதான். ரவையை மாவாகத் திரித்து, அதில் வெல்லப்பாகு விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்துப் பிசைந்து பிடித்து வேகவைத்தால் வித்தியாசமான, சுவையான கொழுக்கட்டை ரெடி.

    * ரவா லட்டு செய்யும்போது அத்துடன் மிக்சியில் அவலையும் ரவைபோல் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து, மூன்று டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து சுவையான ரவா லட்டு பிடிக்கலாம்.

    * அரிசியையும், பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்து, சர்க்கரைப் பொங்கல் செய்தால், பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும். வாசனையாகவும் இருக்கும்.

    * இனிப்பு பணியாரம் மிருதுவாக இருக்க, அரிசி மாவை ஒரு துணியில் கட்டி, இட்லிப்பாத்திரத்தில் வைத்து ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்து, நன்றாக அவித்த பிறகு பணியாரம் செய்தால் பஞ்சுபோல இருக்கும்.

    * ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவைப் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால், பாயசம் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * பாயசம் செய்யும்போது, ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பின் நெய் சேர்த்து வறுத்தால் ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

    * தோல் சீவிய கேரட்டுகளை குக்கரில் வேக விட்டு கூழாக மசிக்கவும். பிறகு கடாயில் நெய் விட்டு சர்க்கரை மசித்த கலவையை சேர்த்து, கிளறினால் சுவையான அல்வா தயார்.

    * எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்தும் ரசம் வைக்கலாம். வாய்க்கசப்பும் நீங்கி விடும்.

    • கிரீமி தன்மை கொண்ட முந்திரியில் தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன.
    • உலர்ந்த அத்திப்பழங்களை ஊறவைக்கும்போது நார்ச்சத்தை மீண்டும் நீரேற்றம் செய்து குடல் எளிதாக ஜீரணிக்க வழிவகை ஏற்படும்.

    உலர்பழங்கள், நட்ஸ் வகைகளை பலரும் விரும்பி சுவைக்கிறார்கள். அவற்றை சரியான முறையில் உட்கொள்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சில உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை ஊற வைத்து உட்கொள்வதே சரியானது. அவை பற்றியும், ஏன் ஊறவைத்து உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.

    வால்நட்

    வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி பீனால்கள் அதிகம் காணப்படும். அடர்த்தியான கொழுப்பையும், சற்று கசப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். அதனை அப்படியே சாப்பிட்டால் செரிமானமாவதற்கும் கடினமாக இருக்கும்.

    தண்ணீரில் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைப்பது கசப்புத்தன்மையை குறைப்பதோடு மென்மையாக மாற்றும். அதிலிருக்கும் கொழுப்பை உடல் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாற்றி செரிமான மண்டலத்திற்கு குறைந்த அழுத்தத்தையே கொடுக்கும்.

    2 அல்லது 4 வால்நட்டுகளை 12 மணி முதல் 24 மணி நேரம் வரை ஊற வைத்து உட்கொள்வது, எந்த உணவுப்பொருளுடனும் சேர்க்காமல் தனியாக உட்கொள்வது அதிகபட்ச நன்மையை அளிக்கும்.

    முந்திரி

    கிரீமி தன்மை கொண்ட முந்திரியில் தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. அதனை அப்படியே சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஊறவைக்கும்போது முந்திரியில் உள்ள நொதிகள் நடுநிலையாக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து எதிர்ப்பு தன்மையும் குறையும்.

    ஆரோக்கியமான கொழுப்புகளின் தன்மையும் மேம்படுத்தப்படும். 4-5 முந்திரிகளை 2 அல்லது 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அவற்றை ஸ்மூத்தி அல்லது சிற்றுண்டிகளில் பயன்படுத்தலாம்.

    ஊற வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

    பெரும்பாலான உலர் பழங்கள், நட்ஸ் வகைகளில் பைடிக் அமிலம் உள்ளது. இது இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களுடன் வினைபுரிந்து அவை உடலுக்குள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

    ஊறவைப்பதன் மூலம் இந்த அமிலத்தின் வீரியத்தை சிதைக்க முடியும். அதன் காரணமாக செரிமானம் எளிதாகும். வயிற்று உப்புசத்தை கட்டுப்படுத்தலாம். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவிடலாம்.

    உலர் அத்திப்பழம்

    உலர்ந்த அத்திப்பழங்களில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளன. அவற்றில் அதிக நார்ச்சத்து அடர்த்தியும் இருப்பதால், அவற்றை ஜீரணிப்பதற்கு செரிமான மண்டலம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுவே உலர்ந்த அத்திப்பழங்களை ஊறவைக்கும்போது நார்ச்சத்தை மீண்டும் நீரேற்றம் செய்து குடல் எளிதாக ஜீரணிக்க வழிவகை ஏற்படும்.

    மேலும் கால்சியம், இரும்பை உடல் சிறப்பாக உறிஞ்சுவதற்கும் அனுமதிக்கும். மலச்சிக்கலை குறைப்பதற்கும், எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். 10 முதல் 12 உலர் அத்திப்பழங்களை வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் உட்கொள்வது செரிமானத்தை இலகுவாக்கும். ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்தும்.

    • புகைப்பிடித்தல், தூக்கமின்மை, ஆரோக்கியமில்லாத உணவு பழக்கம் உள்ளிட்டவையும் நெற்றியில் சுருக்கங்களை விரைவாக வரவழைத்துவிடுகின்றன.
    • இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் எழுந்ததும் நெற்றி பகுதியை கழுவி விடலாம்.

    நெற்றியில் சுருக்கங்கள் தோன்றுவது முதுமையின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அடிக்கடி கோபமாகவோ, ஆக்ரோஷமாகவோ, ஆச்சரியமாகவோ முக பாவனைகளை வெளிப்படுத்துதல், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை குறைதல், சூரிய ஒளி சருமத்தில் படர்தல், முதுமையை நெருங்குதல் உள்ளிட்ட காரணங்களால் சருமத்தில், நெற்றியில் கோடுகளும், மடிப்புகளும் உருவாகின்றன. அந்த சமயத்தில் சரும தசைகள் சுருங்கவும் செய்கின்றன. இதே நிலை நீடிக்கும்போது காலப்போக்கில் நிரந்தர கோடுகள் ஏற்பட்டு நெற்றி சுருக்கங்கள் தோன்ற வழிவகுக்கின்றன.

    பொதுவாகவே வயதாகும்போது கொலாஜன், எலாஸ்டின் ஆகிய இரண்டு முக்கிய புரதங்களை சருமம் இழக்கிறது. இவைதான் சருமத்தை உறுதியாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இவை பலவீனமடைவதுடன், நீர்ச்சத்து குறைபாடு, மன அழுத்தம், புற ஊதா கதிர் வீச்சு உள்ளிட்ட காரணிகளும் சருமத்தில் சுருக்கங்கள் விரைவாக தோன்றுவதற்கு வழிவகுத்துவிடுகின்றன. புகைப்பிடித்தல், தூக்கமின்மை, ஆரோக்கியமில்லாத உணவு பழக்கம் உள்ளிட்டவையும் நெற்றியில் சுருக்கங்களை விரைவாக வரவழைத்துவிடுகின்றன.

    நெற்றி சுருக்கம் முதுமையின் ஒரு அங்கம் என்றாலும் கூட அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் வேகமாகவே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்த்துவிடும். சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் நெற்றியில் சுருக்கங்கள் தோன்றும் செயல்முறையை தாமதப்படுத்தலாம். அதற்கு செய்ய வேண்டியவை...

    விளக்கெண்ணெய்

    விளக்கெண்ணெய்யில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இது நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி சுருக்கங்களை மென்மையாக்கும். தூங்குவதற்கு முன்பு நெற்றியில் சிறிதளவு விளக்கெண்ணெய்யை தடவவும். மேல்நோக்கிய நிலையில் மசாஜ் செய்துவிட்டு, காலையில் முகத்தை கழுவி விடலாம்.

    தேங்காய் எண்ணெய்

    தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை அளிக்கக்கூடியது. முன்கூட்டியே சுருக்கங்களை ஏற்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கக்கூடியது. செக்கில் தயாரான தேங்காய் எண்ணெய்யை சில துளிகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதை லேசாக சூடாக்கி, தூங்க செல்வதற்கு முன்பு நெற்றியில் வட்ட வடிவில் தேய்த்து, சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் எழுந்ததும் நெற்றி பகுதியை கழுவி விடலாம்.

    முட்டை வெள்ளைக்கரு

    முட்டை வெள்ளைக்கரு சருமத்தை தற்காலிகமாக இறுக வைக்கும். மெல்லிய கோடுகளைச் சரிசெய்ய உதவும் புரதங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடிக்கவும். அதை நெற்றியில் தடவி, 15 நிமிடங்கள் உலர விட்டு, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை மேற்கொள்ளலாம்.

    வெள்ளரிக்காய்

    வெள்ளரிக்காய் சருமத்தை ஈரப்பதமாக்கி, அதன் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தும். இதனால் சருமத்தில், நெற்றியில் கோடுகள் தோன்றுவது குறையும். ஒரு வெள்ளரிக்காயை துருவி, சாறு பிழிந்து கொள்ளவும். பஞ்சு உருண்டையை வெள்ளரி சாற்றில் முக்கி நெற்றியில் தடவவும். 15 நிமிடங்கள் உலர விட்டு, பின்பு கழுவி விடலாம். வாரத்திற்கு 3 அல்லது 4 முறை இவ்வாறு செய்வது நல்ல பலனை தரும்.

    கற்றாழை ஜெல்

    கற்றாழையில் வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்துள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. கற்றாழை ஜெல்லை நெற்றியில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு இருபது நிமிடங்கள் உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை தினமும் பயன்படுத்துவது நெற்றி சுருக்கங்கள் விரைவாக எட்டிப்பார்ப்பதை தடுக்கும்.

    தேன் மற்றும் எலுமிச்சை

    தேன், சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை அதிகரித்து, நெற்றியில் தோன்றும் மெல்லிய கோடுகளை மங்கச் செய்யக்கூடியது. ஒரு டீஸ்பூன் தேனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து நெற்றியில் தேய்த்து, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இந்த செய்முறையை பின்பற்றிய பிறகு உடனே சூரிய ஒளி சருமத்தில் படுவதை தவிர்க்கவும்.

    • வாழ்நாள் முழுவதும் தண்ணீரிலேயே இளமைப் பருவத் தோற்றத்துடன்.
    • ஆக்சோலோட்ல்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மற்ற உயிரினங்களை விட 1000 மடங்கு குறைவு.

    இயற்கை அன்னை படைத்துள்ள சில விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க விலங்குகள் இந்த உலகில் வாழ்கின்றன. ஒவ்வொரு விலங்குகளும் தப்பிப்பிழைப்பதற்காகத் தங்களுக்குள் தனித்துவமான திறன்களைக் கொண்டுள்ளன.

    இதில், ஆக்சோலோட்ல் (Axolotl) எனப்படும் ஒரு தனித்துவமான நீர்வாழ் உயிரி குறித்து இங்கு பார்க்கலாம்.

    ஆக்சோலோட்ல் (Axolotl) எனப்படும் இது மெக்சிகோவில் காணப்படும் ஒரு வகை நீர்வாழ் உயிரி (Salamander). ஆக்சோலோட்ல் என்றால் என்றும் இளமை என்று அர்த்தமாம். இந்த உயிரிக்கு 'மீளுருவாக்கம்' (Regeneration) செய்யும் அதீத ஆற்றல் உண்டு. தனது கை, கால், வால் மட்டுமல்லாமல், இதயம் மற்றும் மூளையின் சில பகுதிகள் சேதமடைந்தால் கூட அதனை மீண்டும் வளர்த்துக்கொள்ளும் திறன் கொண்டது.

    இது உருமாற்றம் அடைந்து நிலத்திற்கு வராமல், வாழ்நாள் முழுவதும் தண்ணீரிலேயே இளமைப் பருவத் தோற்றத்துடன் (Neoteny) வாழ்கிறது.

    ஆக்சோலோட்ல்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மற்ற உயிரினங்களை விட 1000 மடங்கு குறைவு. இவற்றின் செல்கள் சேதமடைந்தால், அவை புற்றுநோயாக மாறாமல், மீண்டும் புதிய உறுப்புகளாக வளரும் தன்மையைக் கொண்டுள்ளன.

    ஒரு ஆக்சோலோட்லின் உடல் உறுப்பை மற்றொன்றுக்கு மாற்றினால், அது எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

    செதில்கள் (Gills) மூலம், நுரையீரல் மூலம் மற்றும் தோல் வழியாக என இவற்றுக்கு மூன்று விதமான சுவாச முறைகள் உள்ளன.

    மனிதர்களுக்குக் காயம் ஏற்பட்டால், அந்த இடத்தில் தழும்பு (Scar) உண்டாகும். ஆனால், ஆக்சோலோட்ல்களுக்கு எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும், அந்த இடம் பழையபடி தழும்பே இல்லாமல் முழுமையாகக் குணமாகும்.

    அதனால, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மனித உடலில் தழும்புகள் ஏற்படாமல் காயங்களை எப்படிக் குணப்படுத்துவது என்பதை ஆராய இவை உதவுகின்றன.

    இதனால் தான், ஆக்சோலோட்ல் (Axolotl) மருத்துவ உலகின் அதிசயம் என்று கூறப்படுகிறது.

    • முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை.
    • முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.

    முட்டையின் வெள்ளைக்கருவில் சுமார் 90 சதவீதம் நீரும், 10 சதவீதம் புரதமும் கலந்திருக்கும். ஆனால் முக்கியமான வைட்டமின்களான ஏ, டி, இ, கே மற்றும் கொழுப்புகள் இருப்பதில்லை. சோடியம் அதிகமாக இருக்கும். கலோரிகளோ குறைவாகவே (17 கலோரிகள்) இருக்கும். ஆனால் முட்டையின் மஞ்சள் கரு ஊட்டச்சத்து மிக்கது. அதில் சுமார் 17 சதவீதம் புரதம், ஏ, டி, இ, கே, பி12 போன்ற வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படும். சுமார் 50 கலோரிகளையும் கொண்டிருக்கும்.

    எது சிறந்தது?

    சமச்சீரான ஊட்டச்சத்தை நாடுபவர்களுக்கு வெள்ளை கரு, மஞ்சள் கரு இரண்டும் கலந்த முழு முட்டையே சிறந்தது. முட்டையின் மஞ்சள் கரு ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்துவிடும்.

    அதே நேரத்தில் கலோரிகள், கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்தது. மூளை ஆரோக்கியம், கண் ஆரோக்கியம், தசை வளர்ச்சிக்கு முட்டையின் மஞ்சள் கரு சிறந்த தேர்வாக அமையும்.

    • சிறிய கருப்பு பழங்களும், பச்சை இலைகளும் கொண்டது.
    • நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    சத்து மிகுந்த கீரை வகைகள் தெருக்களில் அதிகமாக விற்கப்படுகிறது. அதிலும், தற்போதைய காலகட்டத்தில் மணத்தக்காளி கீரை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். பாரம்பரிய காட்டு கீரையான இது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

    சிறிய கருப்பு பழங்களும், பச்சை இலைகளும் கொண்டது. பொதுவாக இதனை தமிழ்நாட்டில் நேரடி உணவாக சமைத்து உண்பது வழக்கம். இதனை தொடர்ந்து உணவாக உட்கொள்ளும் போது வயிற்று புண்கள், அஜீரணம், மலச்சிக்கலை குணப்படுத்தும். தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பை நீக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    சளி, இருமல், கண் புரை பாதிப்புகளை தவிர்க்க உதவும். பொதுவாக, இதனை பயத்தம்பருப்புடன் வேகவைத்து மசித்து உண்ணலாம். இந்த கீரையில், ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

    மணத்தக்காளி கீரையின் தனித்துவம், அது பெண்களின் கருப்பையை வலுப்படுத்துகிறது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 100 கிராம் மணத்தக்காளி கீரையில், நீர்ச்சத்து 82 சதவீதம், புரதம் 5.9 கிராம், கொழுப்பு, ரிபோப்ளாவின் 59 மி.கி. நியாசின் 0.9 மி.கி. நிறைந்துள்ளன. நாட்டுக்கீரைகள் மிகப்பெரிய அளவில் மனிதனுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை போக்கி நோய்களையும் வரவிடாமல் தடுக்கின்றன. உலக அளவில் தற்போது உள்நாட்டு கீரைகளை உண்ண மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும்.
    • தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல.

    தயிர் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கக்கூடியது. அதில் உள்ள ஊட்டச்சத்துகள் ஏராளமான நன்மைகளை அளிக்க வல்லது. ஆனாலும் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல என்று பலர் நினைக்கிறார்கள். சளியை உண்டாக்கிவிடும் என்ற எண்ணமே அதற்கு காரணம். சளி, இருமல் ஏற்படாத வண்ணம் தயிரை எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறீர்களா?

    பொதுவாகவே குளிர் காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும். தயிரும் குளிர்ச்சி தன்மை கொண்டது. அப்படியிருக்கையில் குளிர்ந்த அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்த தயிரை சாப்பிட்டால் உடல் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி அடையக்கூடும். தொண்டை வலி அல்லது சளிக்கு வழி வகுக்கும். அதனால் அந்த தவறை செய்யாதீர்கள்.

    எப்படி சாப்பிடலாம்?

    தயிரே குளிர்ச்சியானது. அதனை குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து சாப்பிடுவது ஏற்புடையதல்ல. அறை வெப்பநிலையில் தயிரை சாப்பிடுவதுதான் சரியானது. குளிர் சாதனப்பெட்டியில் இருந்து எடுத்தால் அரை மணி நேரம் கழித்து உட்கொள்வது நல்லது.

    இரவில் தயிர் சாப்பிடுவதும் கூடாது. அதன் குளிர்ச்சித்தன்மை உடல் வெப்பநிலையை மேலும் குறைத்து சளியை அதிகரிக்க செய்துவிடும். எனவே, காலையிலோ அல்லது மதிய உணவிலோ தயிர் கலந்து சாப்பிடுவது நல்லது.

    யார் சாப்பிடக்கூடாது?

    இருமல், சளி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வதோ அல்லது தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதோ நல்லது.

    குளிர் காலத்திலும் தயிர் ஏன் சாப்பிட வேண்டும்?

    குளிர்காலத்தில் இயல்பாகவே பசி உணர்வு அதிகரிக்கும். உடல் குளிர்ச்சி தன்மைக்கு மாறுவதை தடுத்து, உடல் சூடாக இருக்க அதிக கலோரிகள் எரிக்கப்படும். அப்படி வெப்பத்தை உருவாக்க உடல் அதிக சக்தியை பயன்படுத்துவது பசியை தூண்டி விட்டு விடும். அதனை கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட தோன்றும். அப்படி கனமான உணவுகளை சாப்பிடுவது செரிமான செயல்திறனை குறைக்கும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். அஜீரணத்தையும் குறைக்கும். வயிற்று ஆரோக்கியத்தையும் காக்கும். அதனால் குளிர் காலத்தில் தயிரை தவிர்க்கக்கூடாது.

    சருமத்துக்கும் நன்மை பயக்குமா?

    குளிர் காலத்தில் தோல் வறண்டு போகும். தயிரில் உள்ளடங்கி இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். முகத்துக்கு 'பேஸ் பேக்'காகவும் தயிரை பயன்படுத்தலாம். தயிரில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி போன்றவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தும்.

    ×