என் மலர்
பெண்கள் உலகம்
- பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும்.
- வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன.
மாதவிடாய் காலமம் சங்கடமான நேரமாக இருக்கலாம். மாதவிடாய் பல விரும்பத்தகாத அறிகுறிகளுக்கு வழிவகுக்கும், மேலும் மாதவிடாய் கால வலி என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். அது பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும்.

மாதவிடாய் வலியை குறைக்க மருந்துகள் அல்லது வெப்பமூட்டும் பட்டைகள் போன்றவை உதவுகின்றன. மாதவிடாய் காலங்களில் நாம் உண்ணும் உணவுகள் மூலமாக கூட வலியை நீக்க முடியும். மாதவிடாய் காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பழங்கள்
பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன அவை:
* பெர்ரி
* வாழைப்பழங்கள்
* தர்பூசணிகள்
* பப்பாளிகள்
* ஆப்பிள்கள்
* அத்திப்பழம்
* ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்

காய்கறிகள்
வீக்கத்தை நிர்வகிக்க காய்கறிகள் சிறந்தவை. அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக திகழ்கிறது. மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் சில காய்கறிகள்:
* ப்ரோக்கோலி
* சர்க்கரை வள்ளிக்கிழங்கு
* காலிஃபிளவர்
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மாதவிடாய் வலியை நேரடியாகத் தடுக்காது என்றாலும், அவை மாதவிடாயின் போது ஏற்படும் செரிமான அறிகுறிகளில் இருந்து வலியைப் போக்க உதவும்.
* முழு தானியங்கள்
* பீன்ஸ்
* நட்ஸ்
* விதைகள்
கொழுப்பு மீன்
கொழுப்பு நிறைந்த மீன் உடலில் வீக்கத்தைக் குறைத்து மாதவிடாய் அறிகுறிகளை மேம்படுத்தும். இதற்கு அதன் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் தான் காரணம்.
* சால்மன் மீன்
* சூரை மீன்
* மத்தி மீன்கள்
* கானாங்கெளுத்தி
- கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது.
- சுற்றுப்புற வெப்பநிலையில் மாற்றம் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும்.
குளிர் தாங்கமுடியாமை என்பது உடலிலுள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறியாகும். இது உடலிலும் ஏற்படும் வளர்சிதை மாற்றம் சார்ந்த பிரச்சனையே ஆகும்.
உதாரணத்திற்கு வயதான, மிகவும் ஒல்லியான பெண்களால் சாதாரண குளிரைக்கூட தாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு உடலில் மிகமிகக் குறைவான அளவிலேயே கொழுப்பு இருக்கிறது.

நமது உடலிலுள்ள ரத்தத்தில் கலந்திருக்கும் கொழுப்பு வேறு. நமது உடலில் பரவி இருக்கும் கொழுப்பு வேறு. குளிர் தாங்க முடியாமைக்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. அவை:
ரத்த சோகை, பசியின்மை, அதிக குளிரினால் ரத்தக்குழாய்கள் இறுகிப்போதல், ஹைப்போதலாமஸ் சுரப்பியில் பிரச்சனை, தசை நார் வலி, ஹைப்போதைராய்டு குறைபாடு, நாள்பட்ட நோய், உடலில் கொழுப்பு குறைவாக இருப்பது.
பொதுவாக மனித உடலின் வெப்பநிலை பல அமைப்பு முறைகளினால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளைக்கு அடிப்பகுதியிலுள்ள ஹைப்போதலாமஸ் உறுப்பு முன் கழுத்துப் பகுதியிலுள்ள தைராய்டு சுரப்பிக்கு செய்தியை அனுப்புகிறது.
உடனே தைராய்டு சுரப்பி உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை கண்காணித்து அதிக கலோரி சக்தியை சேமித்து வைக்குமாறு உடலுக்கு உத்தரவிடுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது.
உடலில் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம் இந்த உடல் சூட்டை உடல் முழுக்க எடுத்துக்கொண்டு போகிறது. இதுபோக உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உடல் சூட்டை அப்படியே பாதுகாத்து வைத்துக் கொள்கிறது.

இதில் எந்த அமைப்பு சரியாக வேலை செய்யாவிட்டாலும் உடல் சூடு ஒரே நிலையில் இருக்காது. உடல் வெப்பநிலையில், சுற்றுப்புற வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும்.
அதிக குளிரில் விரைத்துப்போய் உடல் நடுக்கம் வந்தால், உங்கள் உடல் வெப்பத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறியாகும். உடனே, பல அடுக்கு வெப்ப உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
உள்ளங்கை பாதம் இரண்டையும் சூடேற்றுமாறு தொடர்ந்து நன்றாகத் தேய்க்க வேண்டும். குழந்தைகளாகவோ வயதானவர்களாகவோ இருந்தால் உடலோடு உடல் உரசிக் கொண்டு இருக்கிறமாதிரி அரவணைத்துக் கொண்டு சில நிமிடங்கள் இருந்தால் குளிர் குறைந்து உடல் சூடாகும்.

எல்லாம் சரியாக இருந்தும் மற்றவர்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய குளிரை உங்களால் தாங்க முடியவில்லை என்றால் உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனைப்படி சில ரத்த பரிசோதனைகளைச் செய்து என்ன காரணத்தினால் குளிரைத் தாங்க முடியவில்லை என்பதைக் கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குளிரை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடிந்தால் மழைக் காலமும் பனிக்காலமும் சுகமானவை தான்.
- மதிய வேளையில் சிறுதுயில் கொள்வது சிலரின் பழக்கம்.
- மதிய நேர தூக்க கலக்கத்தை எப்படி துரத்தலாம்.
மதிய வேளையில் சிறுதுயில் கொள்வது சிலரின் பழக்கம். அதை அவர்கள் அன்றாட வழக்கமாகவே வைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை பார்த்தாலும், மதியம் சிறிது நேர தூக்கம் இல்லாமல் அவர்களால் தொடர்ந்து இயங்க முடியாது.

ஆனால் அலுவலகப் பணி போன்றவற்றில் இருப்பவர்களுக்கு, மதியம் தூக்கம் வருவது பிரச்சனையை ஏற்படுத்தும். அந்த மாதிரியானவர்கள், மதிய நேர தூக்க கலக்கத்தை எப்படி துரத்தலாம் என்று பார்க்கலாம்...

லேசான, சத்தான உணவு
மதிய உணவின்போது அதிகமான, எண்ணெய் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது மந்தமான உணர்வை ஏற்படுத்துகிறது. தூக்கத்தை அழைத்து வருகிறது. அதற்குப் பதிலாக, புரதம், நார்ச்சத்து நிறைந்த மிதமான அளவு உணவை உட்கொள்ளலாம்.
சாதத்தைக் குறைத்து, பச்சைக் காய்கறிகள், சாலட் மற்றும் பழங்களை மதிய உணவில் கூடுதலாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும், தூக்கம் குறையும்.

டீ,காபி
ஒரு கப் டீ அல்லது காபி பருகுவது. பிற்பகல் தூக்கத்தைத் துரத்த உதவும். ஆனால், உடனடி உற்சாக உணர்வை தோற்றுவிக்கும் இந்த பானங்களை அளவோடு அருந்துவதே நல்லது. காரணம். அதிகப்படியான காபீன், உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி, வழக்கமான இரவு தூக்கத்தை பாதிக்கும்.

சிறிய இடைவெளி
தொடர்ச்சியான வேலை. ஒருவரை சோர்வடையச் செய்யும். அந்நிலையில் தூக்கம் வருவது இயற்கையானது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 5 முதல் 10 நிமிட இடைவெளி எடுத்துக்கொள்வது. உடலை இயல்பாக்கும். இந்த சிறிய இடைவெளி, நம் மனதை புத்துணர்ச்சியடையச் செய்து தூக்கத்தை விரட்ட உதவும்.

காற்றாட நடப்பது
மதிய நேரம் தூக்கம் அதிகமாக தொந்தரவு படுத்தினால், உடனே காற்றாட வெளியே சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். புதிய காற்றும். லேசான சூரிய ஒளியும் ஒருவர் உடலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். தூக்க கலக்கத்தைப் போக்கும்.
தண்ணீர் குடிப்பது
மதியம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது உடலை நீரேற்ற மாக வைத்திருக்கும், சோம்பலைக் குறைக்கும். அதிக நேரம் தண்ணீர் பருகாதபோது. சோர்வு அதிகரித்து தூக்கம் வரும்.

சிறிதுநேர ஓய்வு
மதிய வேளையில் தூக்கத்தை தடுப்பது கடினமாகத் தோன்றினால், வாய்ப்பிருந்தால் சுமார் 10-15 நிமிடங்கள் கண்களை மூடி அறி துயில் ஓய்வு எடுக்கலாம். அதன் மூலம் புத்துணர்ச்சி பிறக்கும். உற்சாகமாக செயல் பட முடியும்.
பொதுவாக, மதிய உணவுக்குப் பிறகு. நமக்கு அலுப்பு,சலிப்பூட்டுவதாகத் தோன்றும் வேலைகளை கொஞ்ச நேரம் ஒத்திவைத்து, விருப்பமான வேலைகளை செய்யலாம். இதனால், மதிய நேர உறக்கம் நம்மை ஆக்கிரமிப்பதை தவிர்க்கலாம்.
- அதிக அளவில் காபி குடித்தால் நமது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.
- தினமும் காபி குடிப்பவர்களுக்கு சிறப்பான இருதய, மனநலன் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் இருக்கும்.
காலையில் எழுந்தவுடன் சூடா... ஒரு காபியை குடித்தால்தான் அன்றைய பொழுதே சுறுசுறுப்பாக இருக்கும் என்பர் பலர். அந்த அளவுக்கு காபி குடிக்கும் பழக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையுமே ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில், அதிக அளவில் காபி குடித்தால் நமது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.
போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோயிம்ப்ரா பல்கலைக்கழகத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் மூன்று கப் காபி குடிப்பவர்களின் ஆயுட்காலம் 1.84 ஆண்டுகள் அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
தினமும் காபி குடிப்பவர்களுக்கு சிறப்பான தசை, இருதய, மனநலன் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், அதிக அளவில் காபி குடிப்பவர்களுக்கு, வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான இருதய நோய்கள், பக்கவாதம், சில புற்றுநோய்கள், நீரிழிவு நோய், மறதி நோய் (டிமென்ஷியா) ,மனச்சோர்வு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கருத்தடை என்பது கர்ப்பத்தை கருவுறுதலை தடை செய்வது.
- தம்பதியர்கள் பலரும் கருத்தடை குறித்து தெரித்துகொள்ள வேண்டும்.
கருத்தடை என்பது கர்ப்பத்தை கருவுறுதலை தடை செய்வது. குழந்தைப்பேறு வேண்டாம் என்று சில காலத்துக்கு தள்ளிபோடும் தம்பதியர்கள் பலரும் கருத்தடை குறித்து தெரித்துகொள்ள வேண்டும்.

கருத்தடை மாத்திரைகள்
பெண்கள் கருத்தரிக்க விரும்பாத நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம். இந்த மாத்திரைகள் பாதுகாப்பானது. தினமும் இந்த மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும்.
ஒரு நாள் தவறினாலும் பலனில்லாமல் போய்விடும். மேலும் மாத்திரைகளை நிறுத்தும் போதும் சுயமாக நிறுத்தாமல் மருத்துவரின் ஆலோசனையோடு தான் நிறுத்த வேண்டும். ஏனெனில் இது சுழற்சி முறை என்பதால் குறிப்பிட்ட நாட்கள் வரை போட்ட பிறகு தான் நிறுத்த வேண்டும்.
இல்லையெனில் ஹார்மோன் சுழற்சியில் மாற்றம் உண்டாகக் கூடும். பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் எப்போதும் பாதுகாப்பானவை. இவை பக்க விளைவை உண்டாக்காது.

ஆணுறை
ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனங்களில் மிக முக்கியமானது. கருவுறுதலை தடுக்கும் வழிமுறைகளில் இது முக்கியமானது. பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளை தடுக்கும் நிலையில் இது சரியான தேர்வாக இருக்கும்.
ஆணுறை பயன்படுத்துவதும் எளிது என்பதால் கருத்தடைக்கு ஆணுறை சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் ஆணுறை அணியும் போது இருவருக்குமே பாதுகாப்பு. இது பாலியல் தொற்று நோய் உண்டாகாமலும் தடுக்கும்.
பெண் ஆணுறை
ஆண்களை போன்றே பெண்களுக்கும் பெண் ஆணுறை உண்டு. இது யோனிக்குள் செலுத்தப்படக்கூடியது. ஆண் ஆணுறைகள் உடலுறவுக்கு பிறகு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஆனால் பெண் ஆணுறைகள் கடினமானது அல்ல. இது ஈரப்பதமானாலும் சிதையாது. மெல்லிய பொருள்களால் தயாரிக்கப்படும் பெண் ஆணுறைகள் ஆண்களின் விந்தணுக்களை உள்ளே செல்லாமல் தடுக்கும்.
பெண்களின் உடல் எடைக்கேற்ப பல்வேறு அளவுகளில் இவை கிடைக்கிறது. பெண் ஆணுறையின் இரண்டு பக்கமும் வளையப்பகுதி இருக்கும். ஒரு பக்கத்தில் முனை நகராமல் இருக்கும் படியும் மற்றொரு முனையானது யோனிக்குள் செல்லும் வரையிலும் இருக்கும்.
இதை டேம்பன் போல் பொருத்திகொள்ளலாம். பெண் ஆணுறை குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் குறைவாக தான் உள்ளது. இதை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம்.
கருத்தடை கிரீம்கள்
ஆண்களின் விந்தணுக்களை அழிக்ககூடிய ரசாயனங்கள் கலந்த கிரீம் வகைகள், ஜெல்லிகள், களிம்புகள், மாத்திரைகள் கிடைக்கிறது. இதை பெண் உறுப்பில் கர்ப்பபையின் வாய்ப்பகுதியில் தடவிக் கொள்ள வேண்டும்.
இதனால் ஆண்களின் விந்தணுக்கள் உறவின் போது பெண் உறுப்புக்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கரு உருவாகாமல் தடுக்கப்படுகிறது.
துரதிஷ்டவசமாக இவை கரு உருவாவதை நிச்சயம் தடுத்துவிடும் என்று சொல்லமுடிவதில்லை. பயன்படுத்தும் முறை, அதன் நேரம் இவற்றில் அறியாமல் செய்யும் தவறு கூட கருவுறுதலை மேம்படுத்திவிடுகிறது.

கருத்தடை ஊசி
இது புரொஜெஸ்டிரான் ஹார்மோனில் தயாரிக்கப்பட்ட மருந்து. இது ஊசியாக பயன்படுத்தப்படுகீறது. இதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போட்டுகொள்ள வேண்டும். எனினும் இதை தொடர்ந்து வருடக்கணக்காக பயன்படுத்த முடியாது. ஏனெனில் இது மாதவிலக்கை சீரற்று ஆக்கும். எலும்புகளையும் பலவீனமாக்கிவிடும்.

காப்பர் டி
கர்ப்பபைக்குள் பதிவிடப்படும் லூப் போன்ற கருத்தடை சாதனம். செம்பு கலந்த காப்பர் டி போன்ற மற்றொரு சாதனம், ஹார்மோன் கலந்த (LNG) என உங்கள் உடலுக்கு தேவையான ஒன்றை மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் பொருத்திகொள்ள வேண்டும். மாதவிலக்கு முடிந்ததும் கர்ப்பபைக்குள் இதை பொருத்தி கொள்ள வேண்டும்.
பிரசவத்துக்கு பிறகு இதை பொருத்துவதாக இருந்தால் இரண்டு மாதங்களுக்கு பிறகு இதை பொருத்துவார்கள். எனினும் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் உரிய இடைவேளையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது இடம் மாறிவிட்டால் உடனடியாக வேறு மாற்றும்படி அறிவுறுத்துவார்கள்.
- எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றது.
- வைட்டமின் டி புற்றுநோய் செல் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகின்றது.
உடலில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றது. வயதானவர்களுக்கு எலும்பு முறிவு எளிதாக ஏற்படவும் காரணமாகின்றது.

வைட்டமி டி குறைபாட்டின் அறிகுறிகள்
அதிகப்படியான உடல் சோர்வு , வேலையில் கவனமின்மை, சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாது. சாதாரணமாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு உண்டாவது.
மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு எலும்புத்தேய்மானம் போன்றவை வைட்டமின் டி குறைப்பாட்டின் அறிகுறிகளாகும்.

சூரிய ஒளி குறைவான இடங்களில் அதிக நேரம் வேலை செய்வது, அளவுக்கதிகமான சன் ஸ்க்ரீன் பயன்பாடு மற்றும் அதிகளவு மெலனின் உற்பத்தியுள்ளவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகின்றது.
உயரமான கட்டடங்களில் சூரிய ஒளி கிடைக்காத இடங்களில் அதிக நேரம் இருப்பதும் வைட்டமின் டி குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
வைட்டமின் டி இருந்தால் தான் எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் இந்த வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது.
வைட்டமின் டி , டுனா, சார்டைன்ஸ், கார்ட்லிவர் ஆயில், காளான், இறால் போன்ற உணவுப்பொருட்களில் கிடைக்கிறது. பால் பொருட்களான செறிவூட்டப்பட்ட பால், தானியங்கள், ஓட்ஸ் , தயிர் மற்றும் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு பழச்சாற்றில் காணப்படுகின்றது.
- பாதங்களில் உள்ள நரம்பு முனைகள் தூண்டப்படும்.
- கால் தசைகளை பலப்படுத்தும்.
இன்றைய காலகட்டத்தில் வெறுங்காலுடன் நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் கூட பலரும் வெறுங்காலுடன் நடப்பதற்கு விரும்புவதில்லை.
தெருக்கள், சாலைகள் சமநிலையின்மை, சுத்தமின்மை, உடைந்த கண்ணாடி, கட்டிட பொருட்கள், குப்பைகள் குவிந்து கிடப்பது உள்ளிட்ட காரணங்கள் வெறுங்காலுடன் நடப்பதற்கு தடையாகவும் இருக்கின்றன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளை சேர்ந்தவர்கள் பலரும் வெறுங்காலுடன் நடக்கும் வழக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் புல்வெளிகள், மணல் பரப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் வெறுங்காலுடன் சில நிமிடங்களாவது நடக்கும் வழக்கத்தை பின்பற்றினால் ஏராளமான நன்மைகளை பெறலாம். அவற்றுள் முக்கியமானவை பற்றி பார்க்கலாம்.
இயற்கையுடன் தொடர்பு ஏற்படுத்தும்
வெறுங்காலுடன் நடப்பது மண்ணின் ஆற்றலுடன் இணைந்திருப்பதை உணர உதவும். ஆஸ்திரேலியர்கள் இயற்கை மீது மிகுந்த மரியாதை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். வெறுங்காலுடன் நடப்பதன் மூலம் இயற்கையுடன் இணைந்திருப்பதை உணர்வதாக கூறுகிறார்கள்.
மன அழுத்தம் குறையும்
வெறுங்காலுடன் நடக்கும்போது பாதங்களில் உள்ள நரம்பு முனைகள் தூண்டப்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படி கால்களுக்கும், நரம்புகளுக்கும் அழுத்தத்தை கொடுத்து இயக்குவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க உதவும். தளர்வான, மன அழுத்தம் இல்லாத சூழலை ஏற்படுத்தவும் இந்த நடை பயணம் உதவிடும்.
தோரணையை மேம்படுத்தும்
வெறுங்காலுடன் நடப்பது கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களை துரிதமாக வேலை செய்ய தூண்டும். உடல் தோரணையை மேம்படுத்தவும் துணை புரியும். காலணிகளை அணிந்து நடக்கும்போது கால்களின் முழு அசைவையும் அனுபவிக்க முடியாது. அது ஒரு விதத்தில் உடல் தோரணையை மாற்றலாம்.
அடிக்கடி வெறுங்காலுடன் நடப்பதன் மூலம் உடலை நன்கு சமநிலைப்படுத்தக் கற்றுக் கொள்ளலாம் என்றும் ஆஸ்திரேலியர்கள் நம்புகிறார்கள்.
கால் தசைகளை பலப்படுத்தும்
காலணிகளை அணிவது கால்களின் இயல்பான இயக்கத்தை மட்டுப்படுத்தலாம். அதே சமயம் வெறுங்காலுடன் நடப்பது கால்களின் தசைநார்கள் மற்றும் தசைகள் வலுப்பெற உதவிடும்.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
வெறுங்காலுடன் நடப்பது உள்ளங்கால்களுக்கு அழுத்தம் கொடுக்கும். அதன் மூலம் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த வழிவகை செய்யும். இதய ஆரோக்கியத்துக்கும் பலம் சேர்க்கும். தொடர்ந்து கால் பாதங்களை தரையில் அழுத்தி மசாஜ் செய்வது கால்களில் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

மென்மை அடையும்
வெறுங்காலுடன் செல்வது உள்ளங்கால்களில் படிந்திருக்கும் இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இதன் விளைவாக பாதங்கள் மென்மையாக இருக்கும்.
நினைவாற்றலை அதிகரிக்கும்
வெறுங்காலுடன் நடப்பது நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்யும். ஆஸ்திரேலியர்கள் விழிப்புடன் இருக்க இது ஒரு சிறந்த வழியாகும் என்று கருதுகிறார்கள்.
- சர்க்கரை நோயாளிகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேருக்கு ஏற்படுகிறது.
- உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல், உணவு எதிர்களித்தல் மற்றும் வாந்திக்கு காரணம் இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோயாகும் (அமில பின்னோட்ட நோய்). இது ஆங்கிலத்தில் ஜி.ஈ.ஆர்.டி என்று அழைக்கப்படுகிறது. இது சர்க்கரை நோயாளிகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேருக்கு ஏற்படுகிறது.
பொதுவாக உணவுக் குழாயின் கீழ்ப்பகுதியில் உள்ள தசை நார்களும், இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் இயல்பாகவே இருக்கக்கூடிய வால்வு, நாம் விழுங்கும் உணவு மீண்டும் மேலே செல்வதை தடுக்கிறது.

இந்த வால்வு தளர்வடையும் போது வயிற்றில் இருக்கும் உணவுகள், அமிலம் மற்றும் திரவங்கள் உணவு குழாய்க்குள் மேல் நோக்கி தள்ளப்படுகிறது. இது உணவுக் குழாயில் ஒரு அழற்சியை ஏற்படுத்தி அமில பின்னோட்ட நோய் உண்டாக வழிவகுக்கிறது.
இந்நோய் ஏற்பட முக்கிய காரணங்கள் வருமாறு:
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தன்னியக்க நரம்பு பாதிப்பு, உடல் பருமன், புகைப்பிடித்தல், மது பழக்கம். ஹையாட்டஸ் ஹெர்னியா (இரைப்பை ஏற்றம்), சில மருந்துகளின் பக்க விளைவுகள். (உதாரணமாக-செமாக்ளூட்டைட், லிராக்ளூட்டைட், அமிட்ரிப்டில்லின், டையசிபாம், ஆஸ்பிரின், இப்யூபுரூபன்).
இந்த அமில பின்னோட்ட நோயை உதாசீனப்படுத்தினால் இது உணவுக்குழாய் இறுக்கம், பாரட்ஸ் உணவுக்குழாயாக மாறுதல் மற்றும் புற்றுநோய் போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கலாம்.

இந்த நோயை குணப்படுத்துவதற்கு எச் 2 தடுப்பான்கள் அல்லது புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள் போன்ற மருந்துகளை மருத்துவரிடம் கலந்தாலோசித்து பயன்படுத்த வேண்டும்.
இதில் குணமடையவில்லை என்றால் பண்டோப்ளிகேஷன், லிங்க்ஸ் சாதனம் பொருத்துதல் போன்ற அறுவை சிகிச்சை முறைகள் பலனளிக்கும்.
அமில பின்னோட்ட நோய் வராமல் தடுக்க சர்க்கரை நோயாளிகள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
இடது புறமாக தூங்குவது, தலை மற்றும் உடலின் மேற்பாகம் உயரே இருக்குமாறு தலையணையை பயன்படுத்துதல், இரவில் குறைந்த அளவு உணவு உட்கொள்ளுதல், உறங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னர் உணவு அருந்துதல், காபி, சோடா, பாட்டிலில் உள்ள குளிர்பானங்கள், முட்டைக்கோஸ், வேர்க்கடலை, பூண்டு, பச்சை வெங்காயம், கொழுப்பு அல்லது வறுத்த உணவுகள் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
- அதிக எடை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.
- உடல் எடை அதிகரிப்பைத் தவிர்க்க வேண்டும்.
இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்கள் தான் கருப்பையை உறுதியாக, வலுவாக வைத்திருக்கும் ஆதாரங்கள். இவை பலவீனமடையும் போது கருப்பை கீழ்ச்சரிவு ஏற்பட்டு, கருப்பை மெதுவாக கீழே இறங்குகிறது அல்லது யோனியிலிருந்து வெளியே வருகிறது.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுகப்பிரசவத்தின் போது அதிக நேரம் கடந்த கடினமான பிரசவங்கள், பிரசவத்தின் போது குழந்தையின் அளவு பெரிதாக இருப்பது மற்றும் அதிக எடையுடன் இருப்பது, மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு திடீரென குறைவது, நாள்பட்ட மலச்சிக்கல், இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, கடினமான பொருட்களை எப்போதும் தூக்குதல், பிரசவத்திற்கு பிறகு உடனே கடினமான வேலைகளை செய்வது இவைகளால் கருப்பை கீழிறங்குதல் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால், இடுப்பில் கனம் அல்லது இழுத்தல் போன்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகாமல் இருப்பது போன்ற உணர்வு, சிறுநீர் கசிவு, மலச்சிக்கல் மற்றும் குடல் இயக்கத்தில் பிரச்சனை, உட்கார்ந்து இருக்கும் போதும் நடக்கும் போதும் சிரமமாக இருப்பது மற்றும் யோனி ஆடையில் தேய்ப்பது போன்ற உணர்வு, இடுப்பு அல்லது கீழ் முதுகில் அழுத்தம் அல்லது அசவுகரியம், பிறப்புறுப்பு திசு தளர்வாக இருப்பது போன்ற உணர்வு மற்றும் தாம்பத்தியம் சார்ந்த கவலைகள் ஏற்படும்.

கருப்பை கீழிறங்குதல் அபாயத்தைக் குறைக்க மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், முழு தானிய உணவுகளை உண்ண வேண்டும்.

அதிக எடை தூக்குவதை தவிர்க்க வேண்டும். நாள்பட்ட இருமல் அல்லது மூச்சுக்குழாய் அழற்சிக்கு உடனே சிகிச்சை பெற வேண்டும். உடல் எடை அதிகரிப்பைத் தவிர்க்க வேண்டும். இடுப்பு தசைகளை வலுப்படுத்துவதற்கான கெகல் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
- முதல் முறையாக கருவுற்றவர்களுக்கு பிரசவம் குறித்து அதிக பயம் இருக்கும்.
- கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும்.
முதல் முறை கருவுறுதலின் போது சந்தோஷமாக உணரும் நேரத்தில் பிரசவம் குறித்தும் அதிகம் பயப்படுவார்கள். கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும்.
அதே சமயம் பிரசவ வலிக்கும், பொய் வலிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை பற்றி கர்ப்பிணிப் பெண்கள் அறிந்து கொள்வது அவசியமானது.

பொதுவாக பிரசவ வலி என்பது மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் கவலையும் இருக்கும். பெண்ணின் கர்ப்பகாலத்தில் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் இந்த வலி உணர்வு தொடங்கும். முதல் குழந்தையை சுமக்கும் பெண்கள் அடிக்கடி பிரசவ வலி என்று மருத்துவமனைக்கு செல்லும் நிகழ்வுகளும் நடக்கும்.
பல பெண்கள் தங்களது இறுதி மூன்று மாதங்களில் பிரசவ வலி ஆரம்பித்துவிட்டதாக நினைத்து அடிக்கடி மருத்துவமனை செல்கிறார்கள். இது பொய் வலி அல்லது சூட்டு வலி என்பதை அறிந்த பிறகு வீடு திரும்புகிறார்கள்.
பொய் வலி விட்டு விட்டு இருக்காது. தொடர்ந்து இருக்கும். உட்கார்ந்தால், நின்றால், படுத்தால் என நிலை மாறும் போது வலி குறையும். இடைவிடாத வலி இருந்தாலே அது பெரும்பாலும் பொய் வலி தான்.

பிரசவ வலிகள் கீழ் முதுகில் தொடங்கி பின் அடிவயிற்றில் பரவி சில சமயங்களில் கால்கள் வரை பரவும். சில சமயங்களில் வயிற்றில் வலியை உண்டாக்கும். சிலநேரங்களில் வயிற்றுப்போக்குடன் இருக்கலாம்.
கர்ப்பப்பை வாய் விரிவடைதல் மற்றும் வெளியேற்றத்தின் ஆரம்பமாக இருக்கலாம். குழந்தையின் தலை இடுப்புக்குள் இறங்கி இருக்கலாம். கர்ப்பிணியின் இடுப்பு மற்றும் மலக்குடல் மீது அதிக அழுத்தத்தின் உணர்வு இருக்கும்.
- ஆஸ்துமா சுவாசத்தை கடினமாக்குகிறது.
- நுரையீரலுக்கு செல்லும் சுவாசப்பாதையில் உண்டாகும் அழற்சி ஆஸ்துமா.
ஆஸ்துமா என்பது நுரையீரலுக்கு செல்லும் சுவாசப்பாதையில் உண்டாகும் அழற்சி நோயாகும். இது சுவாசத்தை கடினமாக்குகிறது. ஆஸ்துமாவை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வதற்கு முன்பு சுவாசிக்கும் பாதையில் என்ன நடக்கிறது என்பதை அறிவது அவசியம்.

சுவாசத்தில் காற்று உங்கள் மூக்கு அல்லது வாய் வழியாக, உங்கள் தொண்டைக்குள் மற்றும் உங்கள் காற்றுப்பாதைக்குள் சென்று இறுதியில் நுரையீரலுக்கு செல்கிறது.
நுரையீரலில் ஏராளமான காற்றுப்பாதைகள் உள்ளன அவை காற்றில் இருந்து ரத்த ஓட்டத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகின்றன. காற்றுப்பாதைகளில் புறணி வீங்கி அவற்றை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடையும் போது ஆஸ்துமா அறிகுறிகள் உண்டாகின்றன. சளி காற்றுப்பாதைகளை அடைத்து காற்று உள் செல்லும் அளவை குறைக்கிறது.

ஆஸ்துமாவே இல்லாமல் செய்ய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. ஆனால் அதை கட்டுப்படுத்தி வைக்கலாம். ஆஸ்துமாவை தூண்டும் காரணங்களிலிருந்து தள்ளி இருக்கலாம்.

அறிகுறிகள்
ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறி மூச்சுத்திணறல் ஆகும். இது நீங்கள் சுவாசிக்கும் போது ஏற்படும் சத்தம் அல்லது விசில் சத்தம் என்று கூறலாம்.
* இருமல் குறிப்பாக இரவில்
* சிரிக்கும் போது அல்லது உடற்பயிற்சியின் போது மார்பில் இறுக்கம்
* மூச்சுத்திணறல்
* பேசுவதில் சிரமம்
* கவலை அல்லது பீதி
* சோர்வு
* நெஞ்சு வலி
* விரைவான சுவாசம்
* அடிக்கடி தொற்று
* தூங்குவதில் சிரமம்
- நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை.
- சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு தேன் மிகவும் நல்லது.
* உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இவ்வாறு 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும்.

* கடுமையான வயிற்றுவலி, உள்ளவர்கள் கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்றவேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன் அந்த நீரை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதனால் வயிற்றுவலி, நின்றுவிடும், ஜீரணக்கோளாறுகளும் குணமாகும்.
* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியவை குணமாகிவிடும்.

* இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சிவக்கும்படி வறுக்கவேண்டும். அதில் ஒரு கப் நீரையும், இரண்டு ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்சவேண்டும். சுண்டக்காய்ந்ததும் இறக்கி வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.
* ஒரு டீஸ்பூன் மிளகை தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளவேண்டும். செரிமாக்கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும்.

* அகத்திக்கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்கவேண்டும். அதை சாறுபிழிந்து எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் எல்லாவித வயிற்றுக்கோளாறுகளும் குணமாகும்.
* ஆலமரத்திலிருந்து ஒரு ஸ்பூன் பால் எடுத்து அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். இவ்வாறு அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும், வயிற்றுப் புண்களும் குணமாகும்.
* குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அந்த கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.
* பத்து கொன்றை மரப்பூக்களை 100 மில்லி பசும்பாலில் இட்டு காய்ச்சி பூ நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம். இதனால் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.
* சீதளபேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுபாலை ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்தவேண்டும். 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சை பழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும்.
இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும் அதிகாலையிலும், படுக்கச்செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

* நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்க வேண்டும். பின்பு 1 ஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
* என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். 40 வயதை கடந்தவர்கள் தினமும் தேனை அருந்தலாம். ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும்.

* சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும் இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.
* ஒரு மேஜைக்கரண்டி தேனை இரவில் படுக்கும் போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும்.
* நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை.
* தேனை துளசி சாறில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.






