பிரசவ வலியையும், சூட்டு வலியையும் எப்படி கண்டறிவது?

முதல் முறையாக கருவுற்றவர்களுக்கு பிரசவம் குறித்து அதிக பயம் இருக்கும். கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும்.
பிரசவ வலியையும், சூட்டு வலியையும் எப்படி கண்டறிவது?
Published on

முதல் முறை கருவுறுதலின் போது சந்தோஷமாக உணரும் நேரத்தில் பிரசவம் குறித்தும் அதிகம் பயப்படுவார்கள். கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும்.

அதே சமயம் பிரசவ வலிக்கும், பொய் வலிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை பற்றி கர்ப்பிணிப் பெண்கள் அறிந்து கொள்வது அவசியமானது.

பொதுவாக பிரசவ வலி என்பது மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் கவலையும் இருக்கும். பெண்ணின் கர்ப்பகாலத்தில் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் இந்த வலி உணர்வு தொடங்கும். முதல் குழந்தையை சுமக்கும் பெண்கள் அடிக்கடி பிரசவ வலி என்று மருத்துவமனைக்கு செல்லும் நிகழ்வுகளும் நடக்கும்.

பல பெண்கள் தங்களது இறுதி மூன்று மாதங்களில் பிரசவ வலி ஆரம்பித்துவிட்டதாக நினைத்து அடிக்கடி மருத்துவமனை செல்கிறார்கள். இது பொய் வலி அல்லது சூட்டு வலி என்பதை அறிந்த பிறகு வீடு திரும்புகிறார்கள்.

பொய் வலி விட்டு விட்டு இருக்காது. தொடர்ந்து இருக்கும். உட்கார்ந்தால், நின்றால், படுத்தால் என நிலை மாறும் போது வலி குறையும். இடைவிடாத வலி இருந்தாலே அது பெரும்பாலும் பொய் வலி தான்.

பிரசவ வலிகள் கீழ் முதுகில் தொடங்கி பின் அடிவயிற்றில் பரவி சில சமயங்களில் கால்கள் வரை பரவும். சில சமயங்களில் வயிற்றில் வலியை உண்டாக்கும். சிலநேரங்களில் வயிற்றுப்போக்குடன் இருக்கலாம்.

கர்ப்பப்பை வாய் விரிவடைதல் மற்றும் வெளியேற்றத்தின் ஆரம்பமாக இருக்கலாம். குழந்தையின் தலை இடுப்புக்குள் இறங்கி இருக்கலாம். கர்ப்பிணியின் இடுப்பு மற்றும் மலக்குடல் மீது அதிக அழுத்தத்தின் உணர்வு இருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com