என் மலர்
பெண்கள் உலகம்
- நாட்பட்ட நோயாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்
- ஒரு சில காய்கறிகள் பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது.
சரியான உணவு உண்ணாமல் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைபாட்டினர்,
நாட்பட்ட நோயாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம். ஆரோக்கியமான சரிவிகித உணவு மிக அவசியம். எல்லாவிதமான கீரைகளிலும் இரும்புச்சத்தும் மற்ற விட்டமின்களும் நிறைந்திருக்கிறது. அத்துடன் பருப்பு, பால் மீன் முட்டை போன்றவை புரோட்டின் சத்தை கொடுக்கும்.
ஒரு சில காய்கறிகள் பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பேரிச்சை, முருங்கை புளிச்சக்கீரை.
- சிறு குழந்தைகளுக்கு மெல்லிய உள் அடுக்குகள் சேதமடைந்து நிரந்தர காது கேளாமை ஏற்படுகிறது.
- டி.ஜே. சத்தம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
திருமண நிகழ்ச்சிகள், விழாக்களில் தற்போது டி.ஜே. சத்தத்துடன் நடனமாடுவது புதிய கலாச்சாரமாக மாறிவிட்டது.
இதே போன்ற அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பி நடனம் ஆடும் போது திடீரென சிலர் இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இதேபோல நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுபவர்கள் திடீர் திடீரென இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் டி.ஜே. சத்தத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள மெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையம், டி.ஜே. ஒலிகளின் விளைவுகள் குறித்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 15,000 பேரிடம் ஒரு ஆய்வை நடத்தியது.
ஒலிபெருக்கிகள் மற்றும் டி.ஜே. ஒலிகள் போன்ற எந்தவொரு இசையும் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால், இதயத் துடிப்பு மாறுவது கண்டறியப்பட்டது.
மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டது. டி.ஜே.க்கள் போன்ற உரத்த ஒலிகளால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு வியத்தகு அளவில் அதிகரிக்கிறது.

ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதத்தால் இறக்கும் அபாயம் உள்ளது.
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம். 100 டெசிபலுக்கு மேல் ஒலிகளை நீண்ட நேரம்கேட்டால் காது கேட்கும் பிரச்சனைகள் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு மெல்லிய உள் அடுக்குகள் சேதமடைந்து நிரந்தர காது கேளாமை ஏற்படுகிறது.
டி.ஜே. சத்தங்கள் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கின்றன என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. ஒலி மாசுபாட்டால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
நமக்கு இதயத் துடிப்பு ஏற்படுவது போல, கருப்பையில் உள்ள குழந்தைகளும் அவற்றை அனுபவிக்கலாம். கர்ப்பத்தின் 4-வது மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் சத்தங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
டி.ஜே. சத்தம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நாய்கள், கால்நடைகள், ஆடுகள் மற்றும் கோழிகள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்கின்றன.
சமீபத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தெலுங்கானா மாநிலம் மொய்னாபாத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் டிஜே சத்தம் காரணமா அருகிலுள்ள கோழிப் பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்ததாக புகார் வந்தது.
பலவீனமான கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.
அதிர்வு விளைவு காரணமாக கட்டிடங்களும் அதிர்வுறும். இதன் விளைவாக, பலவீனமான கட்டமைப்புகள் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது.
டி.ஜே. பயன்படுத்தும் இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஹெட்போன் அல்லது நுரையால் ஆனவற்றை பயன்படுத்தலாம். அவை உரத்த ஒலிகளைத் தடுக்கின்றன. அவை 30 டெசிபல் சத்தத்தைக் குறைக்கின்றன.
காது செருகிகளை பயன்படுத்தி முழு காதையும் மறைக்காத ஹெட்போன் சந்தையில் வந்துள்ளன. அவை சத்தத்தை முழுமையாகத் தடுக்காமல் தெளிவான ஒலியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டி.ஜே. ஒலிபரப்பும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- ஒரு சிலருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் கூடுதலாக அதிகரித்து இருந்தால், இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.
- ஹெபடிடிஸ்-சி மற்றும் சில மூட்டு நோய்கள் இருந்தால் இந்த நிலை ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
குளியல் என்பது உடலை தூய்மையாக வைத்திருக்க அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆனால், குளியல் என்றாலே சிலருக்கு பயம் ஏற்படும் நிலையும் உள்ளது. ஏனென்றால் உடலில் தண்ணீர் படும்போது தோல் அரிப்பு தாங்க முடியாது. இந்த நிலைக்கு அக்வாஜெனிக் புரூரிட்டஸ் அல்லது தோல் தினவு என்று பெயர். இது ஒரு சிலருக்கு ஏற்படும் அரிதான தோல் பாதிப்பு ஆகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தோலில் தடிப்பு அல்லது நிற மாற்றம் எதுவும் ஏற்படுவது இல்லை. குளித்த உடன் உடலை அரிப்பில் இருந்து மீட்க துணியை கொண்டு நீண்ட நேரம் தேய்த்துக்கொண்டே இருக்கும் நிலைமை காணப்படும்.
இந்நோய் காரணம் குறித்து இதுவரை மருத்துவ உலகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. உடலில் தண்ணீர் பட்டதும், நரம்புகள் ஏன் இது போன்ற ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்று மட்டும் சொல்லப்படுகிறது. ஒரு சிலருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் கூடுதலாக அதிகரித்து இருந்தால், இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.
ஹெபடிடிஸ்-சி மற்றும் சில மூட்டு நோய்கள் இருந்தால் இந்த நிலை ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதே போல், மன அழுத்தம், தோல் கசிவு, சில மருந்துகள் காரணமாகவும் அரிப்பு அதிகரிக்கலாம். சில வேளைகளில், தண்ணீர் தோலின் மேல்புறத்தை தொட்டதும், 'மாஸ்ட் செல்கள்' எனப்படும் நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள ஹிஸ்டமின் போன்ற வேதிப்பொருட்கள் வெளியே வந்து அரிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. இயற்கையின் பல சிக்கலான கேள்விகளுக்கு விடை தெரிவதில்லை. அதில் இதுவும் ஒன்று என மருத்துவ உலகம் கூறுகிறது.
- பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன.
- வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும்.
ஓட்டல்களில் சாப்பாடோ, பிரியாணியோ சாப்பிட்டு முடித்ததும் பில் தொகை செலுத்தும் இடத்தில் ஒரு கிண்ணத்தில் பெருஞ்சீரகம் வைக்கப்பட்டிருக்கும். அது இனிப்பு கலந்து வெள்ளை நிறத்திலோ அல்லது எதுவும் சேர்க்கப்படாமல் பச்சை நிறத்திலோ காட்சியளிக்கும். அதனை சிறிது எடுத்து மெல்லும் வழக்கத்தை பலரும் பின்பற்றுவார்கள். அவை என்னென்ன நன்மைகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.
வாய்க்கு புத்துணர்ச்சி அளிக்கும்
பெருஞ்சீரகம் இயற்கையாகவே இனிமையான, புத்துணர்ச்சியூட்டும் சுவையை கொண்டது. வாய் துர்நாற்றத்தை எதிர்த்து போராடக்கூடியது. ரசாயன அடிப்படையிலான வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருட்களை போல் அல்லாமல், பெருஞ்சீரகம் சுவாசத்திற்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும்.
ஹார்மோன் சம நிலைக்கு உதவும்
பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. அவை ஈஸ்ட்ரோஜனை பிரதிபலிக்கும் தாவர அடிப்படையிலான சேர்மங்கள். குறிப்பாக மாதவிடாய் கோளாறுகள், வயிறு வீக்கம் மற்றும் மனக்குழப்பத்தை கையாளும் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்.
உடல் எடையை நிர்வகிக்கும்
பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது பசி உணர்வை போக்கி முழுதாகவும், திருப்தியாகவும் உணர வைக்கும். உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவது தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை குறைத்து காலப்போக்கில் உடல் எடையை நிர்வகிக்க உதவும்.
செரிமானத்தை மேம்படுத்தும்
அனெத்தோல், பென்சோன் மற்றும் எஸ்ட்ராகோல் போன்ற ஆவியாகும் எண்ணெய்கள் பெருஞ்சீரகத்தில் உள்ளன. அவை செரிமான நொதிகளை தூண்டி, ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கும், செரிமானத்தை விரைவுபடுத்துவதற்கும் உதவும். குறிப்பாக அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொண்டாலோ பெருஞ்சீரகம் மெல்வது நல்ல பலனை தரும்.
வீக்கம் மற்றும் வாயு தொல்லையை குறைக்கும்
வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும். அதிலிருக்கும் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் பண்புகள் குடலில் உள்ள தசைகளை தளர்த்தவும், பிடிப்புகள் மற்றும் வாயு தொந்தரவை குறைக்கவும் உதவும். உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவதன் மூலம் அந்த சங்கடமான நிலைமையை தவிர்க்க முடியும்.
எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?
உணவு உட்கொண்ட பிறகு அரை டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடலாம். பெருஞ்சீரகம் ஆரோக்கியத்திற்கு உகந்ததுதான் என்றாலும் ஏதேனும் உடல்நல பிரச்சினைகளை கொண்டிருந்தாலோ, மருந்து, மாத்திரைகள் உட்கொண்டிருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பெருஞ்சீரகத்தை உணவுக்கு பிறகு மெல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
எது நல்லது?
பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் பெருஞ்சீரகத்தை உட்கொள்வதே சிறந்தது. சர்க்கரை பாகு கலந்து வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும் பெருஞ்சீரகமும் செரிமானத்திற்கும், வாய் புத்துணர்ச்சிக்கும் உதவும் என்றாலும் அதிலிருக்கும் இனிப்பு கலோரிகளை அதிகரிக்க செய்யும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். ஊட்டச்சத்துக்களின் செறிவை நீர்த்து போகச்செய்யும். உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினை இருப்பவர்கள் இனிப்பு பெருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டும்.
- குளோரின் அணுக்கள் இணைந்து குளோரின் வாயுவை உருவாக்குகின்றன.
- காய்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை பதப்படுத்த உப்பு சேர்க்கப்படுகிறது.
இயற்கையில் பல்வேறு தனிமங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சோடியம் என்ற தனிமத்தின் அணுக்கள் இணைந்து சோடியம் என்ற தனிமத்தை உருவாக்குகின்றன, இது ஒரு மென்மையான, வெள்ளை நிற உலோக வகை தனிமம் ஆகும். இது காற்றில் தீவிரமாக எரியும் இயல்பு கொண்டது. அத்துடன் தண்ணீருடன் கலக்கும் போது வெடிக்கும் தன்மை கொண்டது.
குளோரின் அணுக்கள் இணைந்து குளோரின் வாயுவை உருவாக்குகின்றன. இது மஞ்சள்-பச்சை நிறத்தில் காணப்படும் ஒரு வாயு, உலோகங்களை அரிக்கும் தன்மை கொண்டது. மேலும், விலங்குகள், தாவரங்கள் இதனை நுகர்ந்தால் நஞ்சாக மாறும், மிகவும் நச்சுத் தன்மையுடையது.
இயற்கையின் விதியில், சோடியம் என்ற வெடிக்கும் தனிமம், நச்சுத்தன்மை கொண்ட குளோரின் என்ற இரண்டு தனிமங்கள் இணையும் போது, அவை இரண்டும் தங்கள் தீவிர தன்மையை இழந்து மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு உப்பை உருவாக்குகின்றன. அதுவே சோடியம் குளோரைடு எனப்படும் சமையல் உப்பு ஆகும். உணவு தயாரிப்பில் பெருமளவு சமையல் உப்பு பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை பதப்படுத்த உப்பு சேர்க்கப்படுகிறது. கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
உப்பு பல நேர்மறையான பண்புகளை கொண்டதாக இருந்த போதிலும், அதிக அளவில் சேர்க்கப்படும் உப்பு, கோழிகள், நாய்கள், பூனைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
பெரியவர்களுக்கு சோடியம் உப்பு தினசரி உட்கொள்ளல் அளவு 2,300 மி.கி.க்கும் குறைவாகவும், உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 500 மி.கி. என்ற சிறிய அளவு மட்டுமே தேவைப்படுகிறது. அதிக உப்பு உடலுக்கு ஆபத்து என்கின்றனர்.
- கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும்.
- வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும்.
* கிழங்குகளை உப்புப்போட்டு வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் சீக்கிரம் வேகாது.
* சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சம்பழச் சாறு பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
* உருளைக்கிழங்கை சீவியதும் சிறிது பயத்தம் பருப்பு மாவைத் தூவி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* பால் பாயசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
* ரவாதோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை நன்கு சிவந்தும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
* சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
* கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும்.
* பச்சை மிளகாயைக் காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பெருங்காயம் கட்டியாகாமல் மிருதுவாக இருக்கும்.
* வத்தல் குழம்பு தயார் செய்யும் போது அவரை, கத்திரி, கொத்தவரங்காய் வத்தல்களை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்து விடும்.
* எலுமிச்சை, தக்காளி, புளி, தேங்காய் சாத வகைகள் செய்யும் முன்பு சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும்.
* வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும். எண்ணெய்யும் அதிகம் குடிக்காது.
- இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதன் மூலம் தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
- வழுவழுப்பான இந்த பழத்தை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தொண்டையில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ரம்புட்டான், ஒரு சுவையான மற்றும் சத்தான பழம். இது மருத்துவ ரீதியாகவும் பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தின் வெளித்தோற்றம் முள் போன்று கரடுமுரடாக இருந்தாலும், உள்ளே இருக்கும் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து ருசியாகவே இருக்கும். இந்த பழத்தின் தாயகம் மலேசியா மற்றும் இந்தோனேஷியா. தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட பகுதிகளில் விளைகிறது. ரம்புட்டான் பழம், காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும், பழுத்த பிறகு சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாகவும் மாறும்.
ரம்புட்டான் பழத்தில் கலோரி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் பருமனால் அவதிப்படுவோர், ரம்புட்டானை அடிக்கடி சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதையும் தடுக்கும். இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள், உடல் உழைப்புக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவும். உடல் சீரான வளர்ச்சி பெறவும் முக்கிய பங்காற்றும். ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கண் ஆரோக்கியத்தையும் காக்கும். உடலில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கவும் செய்யும். இதனால், மாரடைப்பு அபாயம் குறைகிறது.

ரம்புட்டான் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால், தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் பளபளப்புடன் இருக்கும். எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் இதில் உள்ளன. இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதன் மூலம் தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதில் பாஸ்பரஸ் இருப்பதால் சிறுநீரகத்தில் இருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும். மேலும் திசுக்கள் மற்றும் உடல் உயிரணுக்களின் வளர்ச்சி, புத்துணர்ச்சி மற்றும் பராமரிப்பு போன்ற செயல்களில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரம்புட்டானில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. அதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். அதிகமாக சாப்பிட தோன்றும் எண்ணத்தையும் குறைத்துவிடும். இந்த பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தண்ணீரில் கரைந்து குடலில் ஜெல் போன்ற ஒரு பொருளை உருவாக்குகிறது. இந்த ஜெல் போன்ற பொருள் செரிமானத்தையும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் மெதுவாக்க உதவுகிறது, இதனால் பசி உணர்வு குறைகிறது.
இந்த பழம், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் சாப்பிட வேண்டும். வழுவழுப்பான இந்த பழத்தை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தொண்டையில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கவனத்துடன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
- மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
- பருப்புவடை மீந்து விட்டால், மறுநாள் வடைகறி செய்யலாம்.
உணவுப்பொருட்கள் மீந்துவிட்டால் வீட்டில் பெண்கள் கவலைப்படுவார்கள். ஆனால் சில உணவுப்பொருட்கள் மீதமாகிவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. அவற்றை வேறு மாதிரி தயாரித்து பயன்படுத்தலாம்.
அதற்கான குறிப்புகள்...
* மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால், சுவையான மோர்க்குழம்பு தயார்.
* ஊறுகாய் பாட்டிலில் காய் எல்லாம் தீர்ந்த பிறகு மிளகாய் வண்டல் மீந்திருந்தால், பாகற்காய், வெண்டைக்காய் போன்றவற்றுக்குள் அடைத்து 'ஸ்டப்டு' வெஜிடபிள் கறி செய்யலாம்.
* மீதமான குழம்பு, சாம்பாரை பயன்படுத்தி சுவையான டிபன் சுலபமாக செய்யலாம். அவற்றில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறவும். வித்தியாசமான சுவையில் உடனடி கிச்சடி ரெடி.
* பிரட் மீந்து விட்டதா? அதை மிக்சியில் போட்டு பொடியாக்கி, உப்பு, கரம் மசாலா, கொத்தமல்லித் தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து 'கட்லெட்டாக பொரித்து எடுக்கலாம். சுவையாக இருக்கும்.
* மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
* கொத்தமல்லிச் சட்னி மீந்துவிட்டால், மோரில் சட்னியைப் போட்டுக் கரைத்து விடுங்கள். மசாலா மோர் போல் சுவையாக இருக்கும்.
* இடியாப்பம் மீந்துவிட்டதா? அதை ஒருநாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு. நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டால் தேவைப் படும்போது சுவையான வற்றலாக பயன்படுத்தலாம்.
* சமையலுக்கு வாங்கிய முட்டைக்கோஸ் மிச்சமாகிவிட்டதா? கோஸை பொடிப்பொடியாக நறுக்கி, அத்துடன் நிறைய வெங்காயத்தையும் நறுக்கிப்போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கி இக்கலவையுடன் கடலைமாவு, அரிசிமாவு, உப்புத் தூள், மிளகாய்ப்பொடி கலந்துகொண்டு லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து சுவையான பக்கோடா தயார் செய்யலாம்.
* தேன்குழலுக்கு அரைத்த மாவு மீந்து விட்டால், அதைக் கரைத்து உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால், மிருதுவாக தோசை ருசியுடன் இருக்கும்.
* சாதம் மீந்துவிட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடாம் போல பிழிந்து வெயிலில் காய வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் மொறுமொறுவென்று இருப்பதுடன், சுவையிலும் அசத்தும்.
* பருப்புவடை மீந்து விட்டால், மறுநாள் வடைகறி செய்யலாம். அல்லது மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்க, உசிலி சுவையாக இருக்கும்.
- ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்குள் இருப்பதே சிறந்தது.
- ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவ கட்டுக்கோப்பான உணவு பழக்கத்துடன் உடலளவில் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும்.
அமெரிக்க இதய சங்கம் மற்றும் அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி ஆகியவை இணைந்து இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய சாராம்சங்கள் குறித்து பார்ப்போம்.
ஆபத்து
இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய், இதயத்தின் மேல் அறைகள் (ஏட்ரியா) ஒழுங்கற்றதாகவும், வேகமாகவும் துடிப்பதால் ஏற்படும் பாதிப்பான ஏட்ரியல் பைப்ரிலேஷன் உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் ஏற்பட உயர்ரத்த அழுத்தமே காரணமாக இருக்கிறது. அதுவே இதயத்துக்கு மிகப்பெரிய ஆபத்து காரணியாக இருக்கிறது என்று அமெரிக்க இதய சங்கம் கூறுகிறது.
அவசர சிகிச்சை
ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்குள் இருப்பதே சிறந்தது. இந்த அளவை விட கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். மார்பு வலி, மூச்சுத்திணறல், முதுகுவலி, உணர்வின்மை, பலவீனம், பார்வை திறனில் மாற்றம், பேசுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அவசர சிகிச்சை மிகவும் முக்கியமானது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும்.
வழக்கமான பரிசோதனை
ஒவ்வொருவரும் ரத்த அழுத்தத்தை தவறாமல் சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
உணவு
பெரியவர்கள் தினமும் 2,300 மி.கி. சோடியம் (சுமார் ஒரு டீஸ்பூன் உப்பு) அல்லது அதற்கும் குறைவான அளவையே உணவு மூலம் உட்கொள்ள வேண்டும். 1,500 மி.கி. என்ற அளவுக்கு படிப்படியாக உப்பின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது சிறந்தது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய்கள் போன்ற இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க அல்லது குறைக்க மதுப்பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
உடல் எடை
உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தால், உங்கள் உடல் எடையில் 5 சதவீதம் குறைப்பது கூட உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் அல்லது தடுப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் எடையை 5 சதவீதம் குறைப்பது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அது ரத்த அழுத்தம் மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடல் செயல்பாடு
ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவ கட்டுக்கோப்பான உணவு பழக்கத்துடன் உடலளவில் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும். தியானம், சுவாச பயிற்சி, யோகா உள்ளிட்ட மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளிலும் கவனம் பதிக்க வேண்டும்.
- ஏலக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடும்.
- மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும்.
இரவு உணவை உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடும் வழக்கத்தை தொடர்ந்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். அவற்றுள் முக்கியமான சில நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
செரிமானத்திற்கு உதவும்
ஏலக்காய் செரிமான நொதிகளை தூண்டக்கூடியது. வயிறு வீக்கம், அசிடிட்டி மற்றும் வாயுத்தொல்லையை குறைக்கக்கூடியது. இரவு உணவு உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்று பிரச்சினைகளுக்கு சிறந்த இயற்கை தீர்வாகவும் அமையும்.
சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும்
ஏலக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடும். அதனால் வாய் துர்நாற்றத்தை போக்கி புத்துணர்ச்சியான சுவாசத்தை அளிக்கும். வாய் சுகாதாரத்தை பராமரிக்க செயற்கை புத்துணர்ச்சியூட்டும் பொருட்கள் அல்லது சூயிங்கம் உபயோகிப்பதற்கு இயற்கையான மாற்றாக ஏலக்காய் அமையும்.
தூக்கத்தை ஊக்குவிக்கும்
ஏலக்காயில் இருக்கும் சேர்மங்கள் நரம்புகளை தளர்த்த உதவும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும். தூக்க தரத்தை மேம்படுத்துவதற்கும், அமைதியான இரவிற்கும் பங்களிக்கும்.
நச்சுகளை வெளியேற்றும்
ஏலக்காயில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்றவும், சிறுநீரகங்களை சுத்தப்படுத்தவும் துணைபுரியும். கல்லீரல் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த ஏலக்காய், உடலில் கொழுப்பு அளவை குறைப்பதன் மூலமும், ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்தும். இதய ஆரோக்கியத்திற்கும் பலம் சேர்க்கும்.
ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும்
ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த பொருளான ஏலக்காய், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இது நீரிழிவு நோயாளிகள் அல்லது குளுக்கோஸ் அளவை நிலையாக பராமரிக்க விரும்புவோருக்கு நன்மை பயக்கும்.
நெஞ்செரிச்சலை குறைக்கும்
ஏலக்காயில் இருக்கும் காரத்தன்மை வயிற்று அமிலங்களை நடுநிலையாக்க உதவும். அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை குறைக்கும். குறிப்பாக இரவு உணவு உட்கொண்ட பிறகு ஏற்படும் அசவுகரியத்தில் இருந்து விரைவாக நிவாரணம் அளிக்கும். தொண்டையில் சளி படிவதையும் தடுக்கும். தொண்டை புண்ணை ஆற்றும். இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாச கஷ்டங்களை தடுப்பதிலும் பயனுள்ளதாக அமையும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்
வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, கலோரி எரிப்பை ஊக்குவிக்கும் ஆற்றலும் ஏலக்காய்க்கு உண்டு. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையை சீராக நிர்வகிக்கவும் உதவிடும்.
- நம்முடைய தேவையும், வீட்டின் கட்டமைப்புதான், வாக்குவம் கிளீனரை தீர்மானிக்கின்றன.
- சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளாக இருந்தால், சத்தமில்லாத வாக்குவம் கிளீனர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
வீடுகளை சுத்தப்படுத்தும் வாக்குவம் கிளீனர்களை வாங்குவதாக இருந்தால், ஒருசில விஷயங்களை கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். குறிப்பாக உங்கள் வீட்டுத் தேவைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். குப்பையை உறிஞ்சும் திறன், உங்கள் வீட்டின் தளம் (டைல்ஸ், தரைவிரிப்புகள், மரம்) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கிளீனரின் வகையை (கம்பியில்லா, தரைவிரிப்புக்கான, ரோபோடிக்) தீர்மானிக்க வேண்டும். கூடுதலாக, சக்கரங்கள், நீளமான வயர், குறைந்த சத்தம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையுடன் கூடிய சக்கரங்கள் போன்ற வசதிகளையும் கவனிக்க வேண்டும். அப்படி நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை:
* தரை வகைகள்
உங்கள் வீட்டின் தரைப்பகுதியானது, எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்துதான், வாக்குவம் கிளீனரை தேர்வு செய்யமுடியும். தரைவிரிப்புகள், டைல்ஸ், மரம் சார்ந்த தரை வேலைப்பாடுகள் என மாறக்கூடிய கட்டமைப்புகளுக்கு ஏற்ப, அவற்றை சுத்தமாக்கக்கூடிய வாக்குவம் கிளீனரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பயன்பாட்டு வகைகள்
வயர் இணைப்பு கொண்ட வாக்குவம் கிளீனர், வயர் இல்லாத கையடக்க கிளீனர், தூசியை மட்டும் சுத்தம் செய்யும் கிளீனர், தூசியுடன் சேர்த்து அசுத்த நீரையும் உறிஞ்சி எடுக்கும் கிளீனர் என பல வகைகள் இருக்கின்றன. சமீபகாலமாக ரோபோட்டிக் வகையிலான, தானாக நகரும் வாக்குவம் கிளீனர்களும் உள்ளன. நம்முடைய தேவையும், வீட்டின் கட்டமைப்புதான், வாக்குவம் கிளீனரை தீர்மானிக்கின்றன.
* உறிஞ்சி திறன்
750 வாட்ஸ், 1000 வாட்ஸ், 1250 வாட்ஸ் என தூசியையும், அசுத்த தண்ணீரையும் உறிஞ்சக்கூடிய மோட்டார்களும், ஒவ்வொரு வாக்குவம் கிளீனருக்கு ஏற்ப மாறுபடும். அதனால், நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய வாக்குவம் கிளீனர்கள், அதிகமாக உறிஞ்சும் திறனை பெற்றிருக்க வேண்டும்.
* சுலபமான பயன்பாடு
வாக்குவம் கிளீனர்களை கொண்டு, வீட்டின் எல்லா அறைகளையும் சுத்தம் செய்ய இருந்தால் சில விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும். அதாவது, சக்கரங்கள் இருக்கக்கூடியதாக, நீளமான மற்றும் பல்வேறு வடிவங்களை கொண்ட உறிஞ்சு குழாய் இருக்கக்கூடிய வாக்கும் கிளீனரை தேர்வு செய்வதன் மூலம் விரும்பிய இடங்களில் சுலபமாக நகர்த்தலாம், சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளாக இருந்தால், சத்தமில்லாத வாக்குவம் கிளீனர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
- முடவாட்டுக்காலை ஆட்டுக்கால் சூப் செய்வது போன்று சூப் சமைத்து பருகலாம்.
- ஒரே இடத்தில் முடங்கியவர்களை எழுந்து நடக்க வைக்கும் அருமருந்து என்றும் சொல்லப்படுகிறது.
முடவாட்டுக்கால் கிழங்கு செடிகள் தமிழகத்தில் பெரும்பாலும் கொல்லிமலை, சேர்வராயன் மலை, குற்றாலம் மற்றும் குமரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. இந்த செடிகள் ஈரபதம் உள்ள நிலங்கள், பாறைக்கட்டுகள், மரங்களில் பற்றிப்படர்ந்து வளரும் பெரணி வகை செடிகளாகும். இதன் கிழங்கு ரோமங்கள் அடர்ந்த ஆடுகளின் கால் போல் இருப்பதால் இதனை ஆட்டுக்கால், முடவாட்டுக்கால் என்று கூறுகின்றனர்.
குறிப்பாக இதன் மருத்துவக்குணம் காரணமாக சைவ ஆட்டுக்கால் என்றும் கூறுகின்றனர்.
இந்த கிழங்கில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதாக சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் கூறுகிறது. குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான மூட்டு வலி, முடக்குவாதம், எலும்பு அடர்த்தி குறைபாடு உள்ளவர்களுக்கு இது மருந்தாக அமைகிறது என்றும், ஒரே இடத்தில் முடங்கியவர்களை எழுந்து நடக்க வைக்கும் அருமருந்து என்றும் சொல்லப்படுகிறது.
இந்த வகை கிழங்குகள் இரும்பு, கால்சியம், செம்பு, தங்கம், மற்றும் சிலிக்கா போன்ற கனிமச்சத்துக்களை பாறைகளில் இருந்து உறிஞ்சி எடுப்பதால் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதாக கூறுகின்றனர். முடவாட்டுக்காலை ஆட்டுக்கால் சூப் செய்வது போன்று சூப் சமைத்து பருகலாம். மேலும் இதனை உலர வைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். இது செரிமானத்தை மேம்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்றும் கூறப்படுகிறது.
அதே வேளையில் முடவாட்டுக்கால் கிழங்கை அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஒவ்வாமை, தோலில் அரிப்பு, வீக்கம், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம். எனவே இதனை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பயன்படுத்துவது நல்லது.






