என் மலர்
ஆரோக்கியம்
ரவை, சேமியாவில் எப்போது உப்புமா, கிச்சடி செய்து சலித்து விட்டதா? இன்று இவை இரண்டுடன் வெஜிடபிள் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சேமியா - 1/4 கப்,
கோதுமை ரவை - 1 கப்,
உப்பு- தேவைக்கு,
தயிர் - 1 கப்,
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பச்சைப்பட்டாணி கலந்து - 1 கப்,
நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 4,
நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை
கடாயில் சிறிது நெய் விட்டு சேமியாவை வறுத்துக் கொள்ளவும்.
இத்துடன் கோதுரவை, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்த பின்னர் இஞ்சி பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பச்சைப்பட்டாணி, பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கோதுமை ரவை கலவையில் கொட்டி நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து, இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
சேமியா - 1/4 கப்,
கோதுமை ரவை - 1 கப்,
உப்பு- தேவைக்கு,
தயிர் - 1 கப்,
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பச்சைப்பட்டாணி கலந்து - 1 கப்,
நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 4,
நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை
கடாயில் சிறிது நெய் விட்டு சேமியாவை வறுத்துக் கொள்ளவும்.
இத்துடன் கோதுரவை, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்த பின்னர் இஞ்சி பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பச்சைப்பட்டாணி, பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கோதுமை ரவை கலவையில் கொட்டி நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து, இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான ரவா - சேமியா வெஜிடபிள் இட்லி ரெடி.
இதையும் படிக்கலாம்....இன்று மாம்பழ பர்ஃபி செய்யலாம் வாங்க
பெண்கள் தங்களது உடல் நிறம் மற்றும் உடல் வாகிற்கு ஏற்றாற் போல் சுடிதார்களை கனக்கச்சிதமாக தைத்து அணியும் பொழுது அவை தன்னம்பிக்கையும், ஆளுமையும் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.
சுரிதாரில் பல பாணிகள் இருந்தாலும் அனார்கலி சுடிதார், ஃபிளேர்டு சுடிதார், ஷார்ட் சுடிதார், லாங் டாப் சுடிதார், பாட்டியாலா சுடிதார், பதானி சுடிதார், ட்ரௌஸர் ஸ்டைல் சுடிதார், பலாஸ்ஸோ சுடிதார் போன்றவற்றை நாம் எளிதாகக் கண்டு பிடித்து விடலாம்.
எளிதான காட்டன் சுடிதார்: பெண்கள் மத்தியில் இவ்வகை காட்டன் சுடிதார்கள் எப்பொழுதுமே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும். பெண்களது சருமப் பொருத்தம் மற்றும் வடிவமைப்பிற்கு ஏற்றாற் போல் தைத்து உடுத்தப்படும் எளிதான காட்டன் சுடிதார்கள் அலுவலகம், பண்டிகைகள் மற்றும் தோழிகள் கூட்டத்திற்கு அணிவதற்கு ஏற்ற கண்ணியமான தோற்றத்தைத் தருகின்றது. இவ்வகை காட்டன் சுடிதார்கள் இப்பொழுது மட்டுமல்ல நீண்ட காலமாகவே பெண்களுக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது.
காட்டன் சில்க் சுடிதார்கள்: காட்டன் சில்க் துணிகளின் பளபளப்பானது திருவிழாக் கொண்டாட்டங்களுக்கு அணிய ஏற்றவையாகும். உடலோடு ஒட்டி சிக்கென தைக்கப்படும் சுடிதார்கள் நம்மை மெலிதாகவும், உயரமாகவும் காட்டும் என்பதில் ஐயமில்லை.
டிசைனர் முழு ஸ்லீவ் சுடிதார்கள்: முழுக்கை ரிப்பன் பார்டர் மற்றும் வட்டக்கழுத்து வடிவமைப்புடன் தைத்து போடப்படும் சுடிதார்கள் அணிபவருக்கு ஒரு பணக்காரத் தோற்றத்தைத் தருவதாக இருக்கும்.
உயர் கழுத்து காலர் கொண்ட சுடிதார்கள்: உயர் காலர் கழுத்து, நீண்ட கைகளுடன் தைக்கப்படும் சுடிதார்கள் புதுப்பாணியாகி உள்ளன. காட்டன் சில்க் க்ரஷ் மெட்டீரியலில் இவ்வகை சுடிதார் டிசைனைத் தைத்து அணியும்பொழுது அனைவராலும் உற்று நோக்கக்கூடிய நபராக நாம் இருப்போம்.
ஸ்ட்ரெயிட் கட் சுடிதார்கள்: பட்டு, பனாரஸ், ராசில்க் போன்ற துணிகளில் இதுபோன்ற ஸ்ட்ரெயிட் கட் டிசைனர் சுடிதார்களை அணியும் பொழுது அவை ஆளுமையான தோற்றத்தைத் தரும் என்று உறுதியாக நம்பலாம். திருமணம் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்ல இவ்வகை டிசைனர் சுடிதார்கள் சரியான தேர்வாக இருக்கும்.
கருப்பு நிற ஷார்ட் சுடிதார்: கருப்பு பிளெயின் நிறத்தில் சுடிதார் பேன்ட், அதன் மேலே பலவித வேலைப்பாடுகள் செய்யப்பட்ட டிசைனர் ஷார்ட் குர்தாவிற்கு ஃபிஸ்ட்டுகளுடன் கூடிய நீளமான கை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
ஸ்டைலிஷ் ப்ரோகெட் சுடிதார்: ப்ரோகெட் துணிகளில் ‘வி’ வடிவக் கழுத்து மற்றும் நீளமான நெட்டட் கை வைத்து தைக்கப்படும். டாப்பிற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் சுடிதார் பேன்ட். பல்வேறு வண்ணங்களில் அழகான மற்றும் அளவான வேலைப்பாட்டுடன் தைக்கப்படும். இவ்வகை சுடிதார்கள் அணிவதற்கு நேர்த்தியானவையாகும்.
சிவப்பு நிற நெட்டட் சுடிதார்கள்: லாங் டாப்பில் அழகான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் குறிப்பாக கழுத்திலிருந்து மார்பு வரையிலும், கைகள் முடிவிலும் இருக்க சுடிதார் பேன்ட்டிலும் எம்பிராய்டரி டிசைனானது டாப்பின் பிளவு வழியாக தெரிவது போல் வடிவமைக்கப்படுபவை. அட்டகாசமான தோற்றத்தைத் தருகின்றன. இவ்வகை சிவப்பு நிறச் சுடிதார்கள் பெரும்பாலும் திருமணப் பெண்களால் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் சிறிய விழாக்களில் அணியப்படுகின்றன.
டிசைனர் சல்வார் சுடிதார்: கழுத்திலிருந்து இடுப்பு வரை கைகளும் சேர்த்து ஒரு ரகக்துணியிலிருக்க இடுப்பிலிருந்து முன்பக்கம் குட்டையாகவும், பின் பக்கம் நீண்டும் வரும் துணியானது மற்றொரு ரகமாக வேலைப்பாடுடன் இருக்க பேன்ட் முழுவதும் அழகிய சமக்கி மற்றும் தங்கநிற நூலினால் செய்யப்பட்ட வேலைப்பாடானது வெளியில் தெரியுமாறு மேலாடைத்துணி இருக்கின்றது. இதுபோன்ற டிசைனர் சல்வார் அணிந்தால் பெண்கள் விழாவின் நாயகி என்று உறுதியாகச் சொல்லலாம்.
நீண்ட அனார்கலி சுடிதார்: நீளமான கௌன் போன்று அதிகமான ஃப்ளேர்களுடன் தரையைத் தொடும் மேலாடை அதற்கும் மேலே எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் வரும் நீளமான நெட்டட் அங்கி, முழு நீளக்கை, இதற்குத் தேவைப்பட்டால் அணிந்து கொள்ள நெட்டட் ஷால். இவ்வகை அனார்கலி சுடிதார்கள் பெண்களின் விருப்பத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அம்பர்லா கட் அனார்கலி சுடிதார்கள்: கழுத்திலிருந்து மார்பு வரை துணியானது உடலைச் சிக்கெனப் பிடித்திருக்க இடுப்பிலிருந்து கணுக்கால் வரை அதிகமான ஃப்ளேர்களுடன் பார்ப்பதற்கு குடைபோல் விரிந்திருப்பது அம்பர்லா கட் அனார்கலி சுரிதாராகும்.
இவை மட்டுமல்லாமல் ஃப்ராக் ஸ்டைல் அனார்கலி சுடிதார், காட்டன் அனார்கலி, லேர்யா சுடிதார், ஸ்டைலிஷ் பார்ட்டி வேர் அனார்கலி சுடிதார், கவர்ச்சியான மொகல் தோற்றத்துடன் கூடிய பாந்தனி அனார்கலி சுடிதார், கைகளால் செய்யப்பட்ட பாந்தனி சுடிதார் சல்வார் கமீஸ், புதிய வரவு ப்ரைடல் சுடிதார், க்ளாஸிக் கண்ணாடி வேலைப்பாட்டுடன் கூடிய அனார்கலி சுடிதார், டிசைனர் ஃபேஷன் சுடிதார், ஸ்பிலிட் சுடிதார் என பெண்களுக்கான சுடிதார் மாடல்களில் எத்தனையோ புதிய வகை டிசைன்கள் வந்து விட்டன.
எளிதான காட்டன் சுடிதார்: பெண்கள் மத்தியில் இவ்வகை காட்டன் சுடிதார்கள் எப்பொழுதுமே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும். பெண்களது சருமப் பொருத்தம் மற்றும் வடிவமைப்பிற்கு ஏற்றாற் போல் தைத்து உடுத்தப்படும் எளிதான காட்டன் சுடிதார்கள் அலுவலகம், பண்டிகைகள் மற்றும் தோழிகள் கூட்டத்திற்கு அணிவதற்கு ஏற்ற கண்ணியமான தோற்றத்தைத் தருகின்றது. இவ்வகை காட்டன் சுடிதார்கள் இப்பொழுது மட்டுமல்ல நீண்ட காலமாகவே பெண்களுக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது.
காட்டன் சில்க் சுடிதார்கள்: காட்டன் சில்க் துணிகளின் பளபளப்பானது திருவிழாக் கொண்டாட்டங்களுக்கு அணிய ஏற்றவையாகும். உடலோடு ஒட்டி சிக்கென தைக்கப்படும் சுடிதார்கள் நம்மை மெலிதாகவும், உயரமாகவும் காட்டும் என்பதில் ஐயமில்லை.
டிசைனர் முழு ஸ்லீவ் சுடிதார்கள்: முழுக்கை ரிப்பன் பார்டர் மற்றும் வட்டக்கழுத்து வடிவமைப்புடன் தைத்து போடப்படும் சுடிதார்கள் அணிபவருக்கு ஒரு பணக்காரத் தோற்றத்தைத் தருவதாக இருக்கும்.
உயர் கழுத்து காலர் கொண்ட சுடிதார்கள்: உயர் காலர் கழுத்து, நீண்ட கைகளுடன் தைக்கப்படும் சுடிதார்கள் புதுப்பாணியாகி உள்ளன. காட்டன் சில்க் க்ரஷ் மெட்டீரியலில் இவ்வகை சுடிதார் டிசைனைத் தைத்து அணியும்பொழுது அனைவராலும் உற்று நோக்கக்கூடிய நபராக நாம் இருப்போம்.
ஸ்ட்ரெயிட் கட் சுடிதார்கள்: பட்டு, பனாரஸ், ராசில்க் போன்ற துணிகளில் இதுபோன்ற ஸ்ட்ரெயிட் கட் டிசைனர் சுடிதார்களை அணியும் பொழுது அவை ஆளுமையான தோற்றத்தைத் தரும் என்று உறுதியாக நம்பலாம். திருமணம் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்ல இவ்வகை டிசைனர் சுடிதார்கள் சரியான தேர்வாக இருக்கும்.
கருப்பு நிற ஷார்ட் சுடிதார்: கருப்பு பிளெயின் நிறத்தில் சுடிதார் பேன்ட், அதன் மேலே பலவித வேலைப்பாடுகள் செய்யப்பட்ட டிசைனர் ஷார்ட் குர்தாவிற்கு ஃபிஸ்ட்டுகளுடன் கூடிய நீளமான கை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
ஸ்டைலிஷ் ப்ரோகெட் சுடிதார்: ப்ரோகெட் துணிகளில் ‘வி’ வடிவக் கழுத்து மற்றும் நீளமான நெட்டட் கை வைத்து தைக்கப்படும். டாப்பிற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் சுடிதார் பேன்ட். பல்வேறு வண்ணங்களில் அழகான மற்றும் அளவான வேலைப்பாட்டுடன் தைக்கப்படும். இவ்வகை சுடிதார்கள் அணிவதற்கு நேர்த்தியானவையாகும்.
சிவப்பு நிற நெட்டட் சுடிதார்கள்: லாங் டாப்பில் அழகான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் குறிப்பாக கழுத்திலிருந்து மார்பு வரையிலும், கைகள் முடிவிலும் இருக்க சுடிதார் பேன்ட்டிலும் எம்பிராய்டரி டிசைனானது டாப்பின் பிளவு வழியாக தெரிவது போல் வடிவமைக்கப்படுபவை. அட்டகாசமான தோற்றத்தைத் தருகின்றன. இவ்வகை சிவப்பு நிறச் சுடிதார்கள் பெரும்பாலும் திருமணப் பெண்களால் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் சிறிய விழாக்களில் அணியப்படுகின்றன.
டிசைனர் சல்வார் சுடிதார்: கழுத்திலிருந்து இடுப்பு வரை கைகளும் சேர்த்து ஒரு ரகக்துணியிலிருக்க இடுப்பிலிருந்து முன்பக்கம் குட்டையாகவும், பின் பக்கம் நீண்டும் வரும் துணியானது மற்றொரு ரகமாக வேலைப்பாடுடன் இருக்க பேன்ட் முழுவதும் அழகிய சமக்கி மற்றும் தங்கநிற நூலினால் செய்யப்பட்ட வேலைப்பாடானது வெளியில் தெரியுமாறு மேலாடைத்துணி இருக்கின்றது. இதுபோன்ற டிசைனர் சல்வார் அணிந்தால் பெண்கள் விழாவின் நாயகி என்று உறுதியாகச் சொல்லலாம்.
நீண்ட அனார்கலி சுடிதார்: நீளமான கௌன் போன்று அதிகமான ஃப்ளேர்களுடன் தரையைத் தொடும் மேலாடை அதற்கும் மேலே எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் வரும் நீளமான நெட்டட் அங்கி, முழு நீளக்கை, இதற்குத் தேவைப்பட்டால் அணிந்து கொள்ள நெட்டட் ஷால். இவ்வகை அனார்கலி சுடிதார்கள் பெண்களின் விருப்பத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அம்பர்லா கட் அனார்கலி சுடிதார்கள்: கழுத்திலிருந்து மார்பு வரை துணியானது உடலைச் சிக்கெனப் பிடித்திருக்க இடுப்பிலிருந்து கணுக்கால் வரை அதிகமான ஃப்ளேர்களுடன் பார்ப்பதற்கு குடைபோல் விரிந்திருப்பது அம்பர்லா கட் அனார்கலி சுரிதாராகும்.
இவை மட்டுமல்லாமல் ஃப்ராக் ஸ்டைல் அனார்கலி சுடிதார், காட்டன் அனார்கலி, லேர்யா சுடிதார், ஸ்டைலிஷ் பார்ட்டி வேர் அனார்கலி சுடிதார், கவர்ச்சியான மொகல் தோற்றத்துடன் கூடிய பாந்தனி அனார்கலி சுடிதார், கைகளால் செய்யப்பட்ட பாந்தனி சுடிதார் சல்வார் கமீஸ், புதிய வரவு ப்ரைடல் சுடிதார், க்ளாஸிக் கண்ணாடி வேலைப்பாட்டுடன் கூடிய அனார்கலி சுடிதார், டிசைனர் ஃபேஷன் சுடிதார், ஸ்பிலிட் சுடிதார் என பெண்களுக்கான சுடிதார் மாடல்களில் எத்தனையோ புதிய வகை டிசைன்கள் வந்து விட்டன.
பெண்கள் தங்களது உடல் நிறம் மற்றும் உடல் வாகிற்கு ஏற்றாற் போல் சுடிதார்களை கனக்கச்சிதமாக தைத்து அணியும் பொழுது அவை தன்னம்பிக்கையும், ஆளுமையும் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.
இதையும் படிக்கலாம்...இயற்கை தாவரங்களால் உருவாக்கப்படும் புடவைகள்
சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கைப்பைகளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும், ஒவ்வொரு வடிவத்திலும், கண்களை கவரும் வகையில், பல்வேறு வண்ணங்களிலும் வைத்திருப்பார்கள்.
பெண்கள் எங்கே வெளியே சென்றாலும் அவர்கள் கைப்பையுடன் தான் செல்வார்கள். கைப்பை இன்றி வெளியே செல்லும் பெண்களை காண்பது அரிது. அந்த அளவுக்கு பெண்களுக்கு பிடித்த பொருட்களில் ஒன்று கைப்பை. இதில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கைப்பைகளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும், ஒவ்வொரு வடிவத்திலும், கண்களை கவரும் வகையில், பல்வேறு வண்ணங்களிலும் வைத்திருப்பார்கள்.
இப்படிப்பட்ட கைப்பை நமது நாட்டு பெண்களிடம் காலம் காலமாக இருந்து வரும் ஒன்று. இவற்றை மொத்தமாக ஆர்டர் செய்து, அதில் சில அலங்காரங்களை செய்து, அதனை பெண்களை கவரும் வகையில் அழகுப்படுத்தி விற்பனை செய்யலாம். இதற்கு கைப்பை, கிளிட்டர் கலர், மார்க்கர் பேனா, குந்தன் கல், பிளாஸ்டிக் போன்ற கவர்ச்சியான பலகை பூக்கள் போன்ற பொருட்கள் தேவை.
உங்களுக்கு விருப்பமான, உங்களால் வரைய முடிந்த பூக்கள் படத்தை மார்க்கர் பேனாவால் கைப்பையில் வரையுங்கள். அது செடி ஒன்றில் நிறைய சிறிய பூக்களும், பெரிய பூ ஒன்றும் இருப்பது போல வரைந்து கொள்ளவும். அவ்வாறு படம் வரைய தெரியாது என்றாலும் கவலையில்லை. ஒரு டிரேஸ் பேப்பர் மூலம் படம் ஏதாவது வரைந்து கொள்ளவும். பின்னர் படத்தின் மீது கிளிட்டர் கொடுக்கவும். பின்னர் சிறிய பூக்கள் மீது குந்தன் கல் வைத்து நன்கு ஒட்டவும்.
இப்படிப்பட்ட கைப்பை நமது நாட்டு பெண்களிடம் காலம் காலமாக இருந்து வரும் ஒன்று. இவற்றை மொத்தமாக ஆர்டர் செய்து, அதில் சில அலங்காரங்களை செய்து, அதனை பெண்களை கவரும் வகையில் அழகுப்படுத்தி விற்பனை செய்யலாம். இதற்கு கைப்பை, கிளிட்டர் கலர், மார்க்கர் பேனா, குந்தன் கல், பிளாஸ்டிக் போன்ற கவர்ச்சியான பலகை பூக்கள் போன்ற பொருட்கள் தேவை.
உங்களுக்கு விருப்பமான, உங்களால் வரைய முடிந்த பூக்கள் படத்தை மார்க்கர் பேனாவால் கைப்பையில் வரையுங்கள். அது செடி ஒன்றில் நிறைய சிறிய பூக்களும், பெரிய பூ ஒன்றும் இருப்பது போல வரைந்து கொள்ளவும். அவ்வாறு படம் வரைய தெரியாது என்றாலும் கவலையில்லை. ஒரு டிரேஸ் பேப்பர் மூலம் படம் ஏதாவது வரைந்து கொள்ளவும். பின்னர் படத்தின் மீது கிளிட்டர் கொடுக்கவும். பின்னர் சிறிய பூக்கள் மீது குந்தன் கல் வைத்து நன்கு ஒட்டவும்.
பிறகு நீங்கள் வரைந்துள்ள பூக்கள் மீது அழகாக ஒட்டவும். அதே போல பெரிய பூ மீது ஜமிக்கி வைத்து நெருக்கமாக ஒட்டவும். இதனையும் நீங்கள் வரைந்து வைத்துள்ள படத்தில் வசதியாக ஒட்டவும். அதில் இலைகள் வரைந்துள்ள பகுதியில் பச்சை நிற வண்ணம் பூசவும். இதே போல பிளாஸ்டிக்கால் ஆன பட்டாம்பூச்சி ஒன்றை பூக்களின் மீது பறக்கிற மாதிரி ஒட்டலாம். இவை பார்ப்பதற்கு அழகாகவும், அனைவரையும் கவரும் விதமாகவும் இருக்கும். இது போன்ற கைப்பைகள் பெண்களை அதிகளவில் கவரும். அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கும்.
இதையும் படிக்கலாம்...மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் சுஜி முத்திரை
பழங்களின் அரசி என்று அழைக்கப்படும் இந்த திராட்சை பழம், இதய பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்சினைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் உண்டு.
திராட்சை பழம் பச்சை, வெள்ளை, சிவப்பு, கருப்பு என பல நிறங்களில் கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி, ஏ, கே, கரோட்டினாய்ட், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் ஓரளவுக்கு உள்ளன.
அதேபோல் தாமிரம், இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன.
பழங்களின் அரசி என்று அழைக்கப்படும் இந்த திராட்சை பழம், இதய பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்சினைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் உண்டு. மேலும் செரிமானக் குறைபாட்டைப் போக்கும்.
திராட்சையில் உள்ள ஒரு வகையான ரசாயனப் பொருள் குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயில் இருந்தும், இதய ரத்த குழாய் நோய்களில் இருந்தும், நரம்பு தொடர்பான பிரச்னைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.
இந்த ரசாயன பொருள் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, ரத்த குழாய்களை தளர்வுற செய்வதால், மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
திராட்சையில் புளிப்பு சுவை இருப்பதால் அசிடிட்டி, அல்சர், வாயுப் பிரச்னை, நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் தாமிரம், இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன.
பழங்களின் அரசி என்று அழைக்கப்படும் இந்த திராட்சை பழம், இதய பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்சினைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் உண்டு. மேலும் செரிமானக் குறைபாட்டைப் போக்கும்.
திராட்சையில் உள்ள ஒரு வகையான ரசாயனப் பொருள் குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயில் இருந்தும், இதய ரத்த குழாய் நோய்களில் இருந்தும், நரம்பு தொடர்பான பிரச்னைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.
இந்த ரசாயன பொருள் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, ரத்த குழாய்களை தளர்வுற செய்வதால், மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
திராட்சையில் புளிப்பு சுவை இருப்பதால் அசிடிட்டி, அல்சர், வாயுப் பிரச்னை, நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து வர வேண்டியது அவசியம். பரிசோதனையின்போது ரத்த அழுத்தம் குறித்து அளவிடப்படும் எண்ணையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கார்டியோவாஸ்குலார் நோய், உலகளவில் அச்சுறுத்தலான நோய் பட்டியலில் இணைந்திருக்கிறது. மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது. ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம்தான் கார்டியோவாஸ்குலார் நோய் உண்டாகுவதற்கு முக்கிய காரணமாகும். உலகளவில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதயத்தின் நலனை பாதுகாக்கலாம். ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து வர வேண்டியது அவசியம்.
பரிசோதனையின்போது ரத்த அழுத்தம் குறித்து அளவிடப்படும் எண்ணையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 90/60-க்கும் 120/80-க்கும் இடைப்பட்ட அளவில் இருந்தால் ரத்த அழுத்தம் சீராக இருப்பதை உறுதி படுத்திக்கொள்ளலாம். 120/80-க்கு அதிகமாகவும் 140/90-க்கு குறைவாகவும் இடைப்பட்ட எண்ணிக்கையில் அமைந்திருந்தால் பாதிப்பில்லை. ஆனால் அது சிறந்தது அல்ல. வழக்கத்தை விட ரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருப்பதாக அர்த்தம். அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். 140/90 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட வழிவகுத்துவிடும். உடனே டாக்டரின் ஆலோசனை பெற்று உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் சிறுவர்களுக்கு பாதிப்பு உருவாகக்கூடும். 1 முதல் 3 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தை களுக்கு ரத்த அழுத்தம் 80/34 முதல் 120/75 என்ற நிலையில் இருக்க வேண்டும். அதுவே பெண் குழந்தைகளுக்கு 83/3 முதல் 117/76 என்ற இடைப்பட்ட அளவுகளில் இருக்க வேண்டும். 4 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளாக இருந்தால் 88/47 முதல் 128/84 வரையிலும், பெண் குழந்தையாக இருந்தால் 88/50 முதல் 122/83 என்ற அளவிலும் இருக்க வேண்டும்.
7 முதல் 10 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு (92/53 முதல் 130/90), பெண் குழந்தை களுக்கு (93/55 முதல் 129/88) என்ற அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாக 55 வயதை கடந்த ஆண்களுக்கும், மெனோபாஸ் காலகட்டத்தை அடைந்த பெண்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகரிக்க தொடங்கும். அதனை கருத்தில் கொண்டு ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இதய நோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட தொடங்கிவிடும்.
பரிசோதனையின்போது ரத்த அழுத்தம் குறித்து அளவிடப்படும் எண்ணையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 90/60-க்கும் 120/80-க்கும் இடைப்பட்ட அளவில் இருந்தால் ரத்த அழுத்தம் சீராக இருப்பதை உறுதி படுத்திக்கொள்ளலாம். 120/80-க்கு அதிகமாகவும் 140/90-க்கு குறைவாகவும் இடைப்பட்ட எண்ணிக்கையில் அமைந்திருந்தால் பாதிப்பில்லை. ஆனால் அது சிறந்தது அல்ல. வழக்கத்தை விட ரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருப்பதாக அர்த்தம். அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். 140/90 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட வழிவகுத்துவிடும். உடனே டாக்டரின் ஆலோசனை பெற்று உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் சிறுவர்களுக்கு பாதிப்பு உருவாகக்கூடும். 1 முதல் 3 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தை களுக்கு ரத்த அழுத்தம் 80/34 முதல் 120/75 என்ற நிலையில் இருக்க வேண்டும். அதுவே பெண் குழந்தைகளுக்கு 83/3 முதல் 117/76 என்ற இடைப்பட்ட அளவுகளில் இருக்க வேண்டும். 4 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளாக இருந்தால் 88/47 முதல் 128/84 வரையிலும், பெண் குழந்தையாக இருந்தால் 88/50 முதல் 122/83 என்ற அளவிலும் இருக்க வேண்டும்.
7 முதல் 10 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு (92/53 முதல் 130/90), பெண் குழந்தை களுக்கு (93/55 முதல் 129/88) என்ற அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாக 55 வயதை கடந்த ஆண்களுக்கும், மெனோபாஸ் காலகட்டத்தை அடைந்த பெண்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகரிக்க தொடங்கும். அதனை கருத்தில் கொண்டு ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இதய நோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட தொடங்கிவிடும்.
வீட்டுச்சுவரில் ஆங்காங்கே குழந்தைகளின் கிறுக்கல்கள் இடம் பிடித்திருந்தால் அவற்றை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாகவே அகற்றிவிடலாம்.
கொரோனா அச்சுறுத்தலால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் குழந்தைகள் பலர் தங்களின் தனித்திறன்களை மெருகேற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க குழந்தைகளின் கிறுக்கல்கள் இல்லாத வீட்டு சுவர்களை பார்ப்பது அரிது. பேனா, பென்சில், கிரையான்ஸ் இவற்றுள் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தங்கள் கைவண்ணத்தை காண்பித்திருப்பார்கள். வீட்டுச்சுவரில் ஆங்காங்கே குழந்தைகளின் கிறுக்கல்கள் இடம் பிடித்திருந்தால் அவற்றை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாகவே அகற்றிவிடலாம்.
பேக்கிங் சோடா: இது சமையலறையில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். சுவர் கறைகளை போக்கும் தன்மையும் இதற்கு உண்டு. பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். அதனை பெயிண்ட் பிரஷிலோ, வீணான பல் துலக்கும் பிரஷிலோ முக்கி சுவரில் கறைகள் படிந்திருக்கும் பகுதியில் அழுத்தி தேய்த்தால் போதும். எல்லாவிதமான கறைகளும் முற்றிலும் நீங்கிவிடும்.
பற்பசை: பல் துலக்க பயன்படுத்தும் பற்பசையையும் குழந்தைகளின் கிறுக்கல்களை போக்குவதற்கு பயன்படுத்தலாம். பென்சில், கிரையான்ஸ் கறைகள் எளிதில் நீங்கிவிடும். பற்பசையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போல் கெட்டியாக குழப்பிக்கொள்ளவும். அதனை பிரஷில் முக்கி கறை படிந்திருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்தாலே போதும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவினால் கறைகள் இருந்த சுவடே தெரியாது.
வினிகர்: தண்ணீரின் அளவில் நான்கில் ஒரு பங்கு வினிகர் கலந்து அதில் பஞ்சை நனைத்து கறை படிந்துள்ள பகுதியில் துடைக்க வேண்டும். சில கறைகள் எளிமையாக நீங்கிவிடும். இல்லாவிட்டால் சிறிது நேரம் கழித்து வினிகரை மட்டும் பஞ்சில் நனைத்து தேய்த்தால் போதும். வெதுவெதுப்பான நீரில் வினிகரை ஊற்றி பயன்படுத்துவது சிறந்தது.
வாஷிங் சோடா: சுவர் கறைகளை அகற்றும் விஷயத்தில் இது பேக்கிங் சோடாவை விட சிறப்பாக செயல்படக்கூடியது. வாஷிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து குழப்பி, கறை படிந்திருக்கும் இடத்தில் அழுத்தி தேய்க்க வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து அந்த இடத்தில் பிரஷ் கொண்டு தேய்த்தால் கறைகள் காணாமல் போய்விடும்.
பேக்கிங் சோடா: இது சமையலறையில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். சுவர் கறைகளை போக்கும் தன்மையும் இதற்கு உண்டு. பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். அதனை பெயிண்ட் பிரஷிலோ, வீணான பல் துலக்கும் பிரஷிலோ முக்கி சுவரில் கறைகள் படிந்திருக்கும் பகுதியில் அழுத்தி தேய்த்தால் போதும். எல்லாவிதமான கறைகளும் முற்றிலும் நீங்கிவிடும்.
பற்பசை: பல் துலக்க பயன்படுத்தும் பற்பசையையும் குழந்தைகளின் கிறுக்கல்களை போக்குவதற்கு பயன்படுத்தலாம். பென்சில், கிரையான்ஸ் கறைகள் எளிதில் நீங்கிவிடும். பற்பசையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போல் கெட்டியாக குழப்பிக்கொள்ளவும். அதனை பிரஷில் முக்கி கறை படிந்திருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்தாலே போதும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவினால் கறைகள் இருந்த சுவடே தெரியாது.
வினிகர்: தண்ணீரின் அளவில் நான்கில் ஒரு பங்கு வினிகர் கலந்து அதில் பஞ்சை நனைத்து கறை படிந்துள்ள பகுதியில் துடைக்க வேண்டும். சில கறைகள் எளிமையாக நீங்கிவிடும். இல்லாவிட்டால் சிறிது நேரம் கழித்து வினிகரை மட்டும் பஞ்சில் நனைத்து தேய்த்தால் போதும். வெதுவெதுப்பான நீரில் வினிகரை ஊற்றி பயன்படுத்துவது சிறந்தது.
வாஷிங் சோடா: சுவர் கறைகளை அகற்றும் விஷயத்தில் இது பேக்கிங் சோடாவை விட சிறப்பாக செயல்படக்கூடியது. வாஷிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து குழப்பி, கறை படிந்திருக்கும் இடத்தில் அழுத்தி தேய்க்க வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து அந்த இடத்தில் பிரஷ் கொண்டு தேய்த்தால் கறைகள் காணாமல் போய்விடும்.
எடை அதிகரிப்பது, ஹார்மோன்கள் பாதிப்படைவது, தூங்கும்போது தவறான கோணத்தில் உடலை வைத்திருப்பது உள்பட பல்வேறு காரணங்களாலும் கர்ப்பகாலத்தில் வலி ஏற்படக்கூடும்.
கருவில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரிப்பது, ஹார்மோன் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுவது காரணமாக கர்ப்பிணி பெண்கள் இடுப்பு வலியை எதிர்கொள்கிறார்கள்.
கர்ப்பகாலத்தில் இடுப்புவலி என்பது கர்ப்பத்தில் பொதுவானது. பெண்கள் கர்ப்பகாலத்தில் இடுப்பு வலியை ஆரம்ப கட்டத்தில் உணர்வதில்லை. கர்ப்பத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் உண்டாகிறது.
கர்ப்பகாலத்தில் இடுப்புவலி என்பது கர்ப்பத்தில் பொதுவானது. பெண்கள் கர்ப்பகாலத்தில் இடுப்பு வலியை ஆரம்ப கட்டத்தில் உணர்வதில்லை. கர்ப்பத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் உண்டாகிறது.
கர்ப்பகாலத்தில் பெண்கள் அன்றாடம் செய்யும் சில தவறுகளாலும் இடுப்பு வலி உண்டாகிறது. இவை தவிர நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, குறிப்பிட்ட நிலையில் உட்கார்ந்துகொண்டே இருப்பது, எப்போதும் சரியான போஸில் இல்லாமல் படுத்துகொண்டே இருப்பது போன்றவையும் இடுப்பு வலியை அதிகரித்துவிடுகிறது
இது கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். பொதுவாகவே கர்ப்பிணிகள் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் தசை நார் வலி பிரச்சினையை அனுபவிப்பார்கள். எடை அதிகரிப்பது, ஹார்மோன்கள் பாதிப்படைவது, தூங்கும்போது தவறான கோணத்தில் உடலை வைத்திருப்பது உள்பட பல்வேறு காரணங்களாலும் கர்ப்பகாலத்தில் வலி ஏற்படக்கூடும்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
கர்ப்பகாலத்தில் இடுப்புவலி என்பது கர்ப்பத்தில் பொதுவானது. பெண்கள் கர்ப்பகாலத்தில் இடுப்பு வலியை ஆரம்ப கட்டத்தில் உணர்வதில்லை. கர்ப்பத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் உண்டாகிறது.
கர்ப்பகாலத்தில் இடுப்புவலி என்பது கர்ப்பத்தில் பொதுவானது. பெண்கள் கர்ப்பகாலத்தில் இடுப்பு வலியை ஆரம்ப கட்டத்தில் உணர்வதில்லை. கர்ப்பத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் உண்டாகிறது.
கர்ப்பகாலத்தில் பெண்கள் அன்றாடம் செய்யும் சில தவறுகளாலும் இடுப்பு வலி உண்டாகிறது. இவை தவிர நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, குறிப்பிட்ட நிலையில் உட்கார்ந்துகொண்டே இருப்பது, எப்போதும் சரியான போஸில் இல்லாமல் படுத்துகொண்டே இருப்பது போன்றவையும் இடுப்பு வலியை அதிகரித்துவிடுகிறது
இது கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். பொதுவாகவே கர்ப்பிணிகள் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் தசை நார் வலி பிரச்சினையை அனுபவிப்பார்கள். எடை அதிகரிப்பது, ஹார்மோன்கள் பாதிப்படைவது, தூங்கும்போது தவறான கோணத்தில் உடலை வைத்திருப்பது உள்பட பல்வேறு காரணங்களாலும் கர்ப்பகாலத்தில் வலி ஏற்படக்கூடும்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
நூலினால் தயாராகும் சேலைகளுக்கு இருக்கும் அத்தனை அழகும், வனப்பும் நார்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் சேலைகளிலும் இருக்கின்றன.
பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் அதிகமாகவே அறிந்திருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டு புடவைகள் தயாராகின்றன. அதுவும் கற்றாழை, சணல், வாழை மற்றும் மூங்கில் நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன என்பதைக் கேட்கும்பொழுது கொஞ்சமல்ல அதிகமாகவே ஆச்சரியம் ஏற்படுகிறதல்லவா? நூலினால் தயாராகும் சேலைகளுக்கு இருக்கும் அத்தனை அழகும், வனப்பும் நார்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் சேலைகளிலும் இருக்கின்றன.
கற்றாழை நார் புடவைகள்:-
மருந்து மற்றும் அழகு சாதனைப் பொருட்கள் தயாரிப்பில் மட்டுமே பயன்பட்டு வந்த கற்றாழையானது இப்பொழுது வண்ணப் புடவைத் தயாரிப்பிலும் களமிறங்கி விட்டன என்று சொல்லலாம். நூல்களின் விலையேற்றத்தால் அவற்றிற்கு மாற்றாக வந்த கற்றாழை நார்ச் சேலைகளுக்கு இப்பொழுது மக்களிடையே ஏகவரவேற்பு இருப்பதினால் அதன் தேவை மிக அதிக அளவில் இருக்கின்றது என்று சொல்லலாம்.
பச்சையாக இருக்கும் நார்களை மொத்த விலைக் கடைகளிலிருந்து வாங்கி வந்து அவற்றை எளிமையான பிளீச்சிங் மூலம் சுத்தம் செய்து அதிலிருக்கும் கொழுப்புகளை அகற்றுகிறார்கள். அதன் பிறகு மென்மையான முறையில் ஒற்றை ஒற்றை நார்களாக பிரித்தெடுத்து பின்பு அந்த நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.
கற்றாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எழிலான புடவைகளின் விலையானது பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் புடவைகளின் விலையை விடக் குறைவாகவே உள்ளது. மேலும் இதுபோன்று இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களின் நார்களினால் உருவாக்கப்படும் இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. இவை ஆர்கானிக் புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் புடவைகள் என்று பெயர் பெற்ற சணல், வாழைநார், மூங்கில், காட்டுபட்டு மற்றும் கற்றாழை நார் கொண்டு நெசவாளர்களின் புத்திசாலித்தனமான கைவினைத் திறனைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் இவ்வகை சேலைகள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் புடவைகளைக் காட்டிலும் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.
ஜூட் புடவைகள்:-
காய்கறிச் செடிகளின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் தங்கநிற நார்களால் மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்படுபவையே ஜூட் புடவைகள். முற்றிலும் மக்கக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய சணலினால் உருவாக்கப்படும் இந்த ஆர்கானிக் புடவைகளில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன.
எந்தவொரு முறையான மற்றும் குடும்ப விழாக்களுக்கு இந்த புடவைக்கு ஏற்ற நகை அலங்காரத்துடன் அணியும் பொழுது அனைவரின் கவனமும் உங்களைச் சுற்றியே இருக்கும். மலர்கள் மற்றும் செக்கர்டு பிரிண்ட்டுகளுடன் வரும் இந்தப் புடவைகளின் அழகை வெல்ல வேறு புடவைகள் இல்லை என்று சொல்லலாம்.
மூங்கில் பட்டுப் புடவைகள்:-
மூங்கிலின் உட்புறமிருக்கும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நார்களைக் கொண்டு இந்தப் புடவைகள் நெசவு செய்யப்படுகின்றன. பாராட்டத்தக்க உறிஞ்சுதல் திறனுடன், வெப்பத்தை மூழ்கடித்து, கோடை காலத்தில் அணியும் பொழுது குளிர்ச்சி தரக்கூடிய மூங்கில் இழைகளால் ஆன புடவைகள், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் கொண்டவையாக இருப்பதால் இவை புதிய யுகத்தின் பாராட்டுக்கு தகுதியானவையாகும்.
இந்த மூங்கில் நார்களும் பட்டு நூல்களைப் போலவே மென்மையாக இருப்பதால் அவை இரண்டையும் இணைத்து மூங்கில் பட்டுப் புடவைகளை உருவாக்குகிறார்கள். பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் கைகளினால் அச்சிடப்பட்டு வரும் மூங்கில் புடவைகள் இயற்கையானவை என்ற நம்பகத்தன்மையை அளிக்கின்றன. பாரம்பரிய அச்சிடு மற்றும் சிறந்த ஜரி அலங்காரங்களுடன் வரும் மூங்கில் புடவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அணியக் கூடிய சிறந்த தேர்வாகும். கனமான பார்டர்கள் மற்றும் விரிவான புட்டாக்களுடன் வரும் மூங்கில் பட்டுப்புடவையை நீங்கள் அணியும் பொழுது அவை உங்கள் பெண்மைக்கு ஒரு தனித்துவமான பிரம்மாண்டத்தைக் கொடுக்கும்.
கற்றாழை நார் புடவைகள்:-
மருந்து மற்றும் அழகு சாதனைப் பொருட்கள் தயாரிப்பில் மட்டுமே பயன்பட்டு வந்த கற்றாழையானது இப்பொழுது வண்ணப் புடவைத் தயாரிப்பிலும் களமிறங்கி விட்டன என்று சொல்லலாம். நூல்களின் விலையேற்றத்தால் அவற்றிற்கு மாற்றாக வந்த கற்றாழை நார்ச் சேலைகளுக்கு இப்பொழுது மக்களிடையே ஏகவரவேற்பு இருப்பதினால் அதன் தேவை மிக அதிக அளவில் இருக்கின்றது என்று சொல்லலாம்.
பச்சையாக இருக்கும் நார்களை மொத்த விலைக் கடைகளிலிருந்து வாங்கி வந்து அவற்றை எளிமையான பிளீச்சிங் மூலம் சுத்தம் செய்து அதிலிருக்கும் கொழுப்புகளை அகற்றுகிறார்கள். அதன் பிறகு மென்மையான முறையில் ஒற்றை ஒற்றை நார்களாக பிரித்தெடுத்து பின்பு அந்த நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.
கற்றாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எழிலான புடவைகளின் விலையானது பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் புடவைகளின் விலையை விடக் குறைவாகவே உள்ளது. மேலும் இதுபோன்று இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களின் நார்களினால் உருவாக்கப்படும் இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. இவை ஆர்கானிக் புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் புடவைகள் என்று பெயர் பெற்ற சணல், வாழைநார், மூங்கில், காட்டுபட்டு மற்றும் கற்றாழை நார் கொண்டு நெசவாளர்களின் புத்திசாலித்தனமான கைவினைத் திறனைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் இவ்வகை சேலைகள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் புடவைகளைக் காட்டிலும் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.
ஜூட் புடவைகள்:-
காய்கறிச் செடிகளின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் தங்கநிற நார்களால் மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்படுபவையே ஜூட் புடவைகள். முற்றிலும் மக்கக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய சணலினால் உருவாக்கப்படும் இந்த ஆர்கானிக் புடவைகளில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன.
எந்தவொரு முறையான மற்றும் குடும்ப விழாக்களுக்கு இந்த புடவைக்கு ஏற்ற நகை அலங்காரத்துடன் அணியும் பொழுது அனைவரின் கவனமும் உங்களைச் சுற்றியே இருக்கும். மலர்கள் மற்றும் செக்கர்டு பிரிண்ட்டுகளுடன் வரும் இந்தப் புடவைகளின் அழகை வெல்ல வேறு புடவைகள் இல்லை என்று சொல்லலாம்.
மூங்கில் பட்டுப் புடவைகள்:-
மூங்கிலின் உட்புறமிருக்கும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நார்களைக் கொண்டு இந்தப் புடவைகள் நெசவு செய்யப்படுகின்றன. பாராட்டத்தக்க உறிஞ்சுதல் திறனுடன், வெப்பத்தை மூழ்கடித்து, கோடை காலத்தில் அணியும் பொழுது குளிர்ச்சி தரக்கூடிய மூங்கில் இழைகளால் ஆன புடவைகள், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் கொண்டவையாக இருப்பதால் இவை புதிய யுகத்தின் பாராட்டுக்கு தகுதியானவையாகும்.
இந்த மூங்கில் நார்களும் பட்டு நூல்களைப் போலவே மென்மையாக இருப்பதால் அவை இரண்டையும் இணைத்து மூங்கில் பட்டுப் புடவைகளை உருவாக்குகிறார்கள். பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் கைகளினால் அச்சிடப்பட்டு வரும் மூங்கில் புடவைகள் இயற்கையானவை என்ற நம்பகத்தன்மையை அளிக்கின்றன. பாரம்பரிய அச்சிடு மற்றும் சிறந்த ஜரி அலங்காரங்களுடன் வரும் மூங்கில் புடவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அணியக் கூடிய சிறந்த தேர்வாகும். கனமான பார்டர்கள் மற்றும் விரிவான புட்டாக்களுடன் வரும் மூங்கில் பட்டுப்புடவையை நீங்கள் அணியும் பொழுது அவை உங்கள் பெண்மைக்கு ஒரு தனித்துவமான பிரம்மாண்டத்தைக் கொடுக்கும்.
டபுள் பீன்ஸில் உள்ள அதிகளவு கால்சியம், மக்னீசியம் சத்துக்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்
டபுள் பீன்ஸ் - 1 கப்
சோம்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன்
இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
டபுள் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சித்துருவல் போட்டு தாளித்த பின்னர் வேக வைத்த டபுள் பீன்ஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
டபுள் பீன்ஸ் - 1 கப்
சோம்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன்
இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
டபுள் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சித்துருவல் போட்டு தாளித்த பின்னர் வேக வைத்த டபுள் பீன்ஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான டபுள் பீன்ஸ் சுண்டல் ரெடி.
இதையும் படிக்கலாம்...சூப்பரான பட்டர் பீன்ஸ் புலாவ்
வங்கி கணக்கு ரகசியங்களை திருடும் வைரஸ்களை பலர் உருவாக்கி வருகின்றனர். எனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாடிக்கையாளர்கள் கையாள வேண்டியுள்ளது.
நாகரீக வளர்ச்சியில் இன்று நெட்பேங்கிங் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வங்கிகளுக்கு சென்று பணபரிமாற்றம் செய்வதற்கு பதிலாக இருந்த இடத்திலேயே கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போன் மூலம் இணையதளம் வழியாக பணபரி மாற்றத்தை பொதுமக்கள் விரும்புகின்றனர்.
வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன் டைம் பாஸ்வேர்டை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் வழங்குகின்றன. இது தவிர இன்டர்நெட் பேங்கிங்கும் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு ரகசியங்களை திருடும் வைரஸ்களை பலர் உருவாக்கி வருகின்றனர். எனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாடிக்கையாளர்கள் கையாள வேண்டியுள்ளது.
பாதுகாப்பாக மொபைல் பேங்கிங் செய்ய சில குறிப்புகள்:
உங்கள் செல்போனுக்கு பாஸ்வேர்ட் வைக்கவும். செல்போனில் எஸ்.எம்.எஸ். அலர்ட் வருமாறு பதிவு செய்யவும். செல்போனை வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இன்டர்நெட் வசதி கொண்ட நவீன செல்போன்களை வைரஸ்கள் பாதிக்கக் கூடிய ஆபத்து அதிகம். உங்கள் செல்போனில் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை பதிவேற்றம் செய்யவும்.
இணையதளத்தில் இருந்து எந்த விதமான கோப்புகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். (உதாரணமாக பயன்பாடுகள், விளையாட்டுகள், படங்கள், இசை). டெபிட் / கிரெடிட் கார்ட்டு எண்கள், சிவிவி எண்கள் மற்றும் பின் நம்பர் போன்ற ரகசிய தகவல்களை செல்போனில் பதிவு செய்ய வேண்டாம். உங்களது செல்போன் தொலைந்து போனால் மொபைல் பேங்கிங் வசதியை செயலிழக்கச் செய்யுங்கள். மொபைல் பேங்கிக்கிற்கான ரகசிய எண்களை அவ்வப்போது மாற்றுங்கள். அது பிறர் திருட வாய்ப்பை தவிர்க்கும்.
வெளிப்படையான பாஸ்வேர்டுகளை (பிறப்பு பெயர், தேதி) பயன்படுத்த வேண்டாம். மொபைல் பேங்கிங்கின் போது பாதுகாப்பற்ற வை-பை இணைப்பை பயன்படுத்த வேண்டாம். ப்ளூடூத்துடன் கூடிய சேவைகளை துண்டியுங்கள். எனினும், மேற்கண்ட விஷயங்களை முறையாக பின்பற்றினாலும் மொபைல் பேங்கிங் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும், ஒரு பயன்பாட்டாளராக உங்கள் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என உறுதி செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன் டைம் பாஸ்வேர்டை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் வழங்குகின்றன. இது தவிர இன்டர்நெட் பேங்கிங்கும் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு ரகசியங்களை திருடும் வைரஸ்களை பலர் உருவாக்கி வருகின்றனர். எனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாடிக்கையாளர்கள் கையாள வேண்டியுள்ளது.
பாதுகாப்பாக மொபைல் பேங்கிங் செய்ய சில குறிப்புகள்:
உங்கள் செல்போனுக்கு பாஸ்வேர்ட் வைக்கவும். செல்போனில் எஸ்.எம்.எஸ். அலர்ட் வருமாறு பதிவு செய்யவும். செல்போனை வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இன்டர்நெட் வசதி கொண்ட நவீன செல்போன்களை வைரஸ்கள் பாதிக்கக் கூடிய ஆபத்து அதிகம். உங்கள் செல்போனில் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை பதிவேற்றம் செய்யவும்.
இணையதளத்தில் இருந்து எந்த விதமான கோப்புகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். (உதாரணமாக பயன்பாடுகள், விளையாட்டுகள், படங்கள், இசை). டெபிட் / கிரெடிட் கார்ட்டு எண்கள், சிவிவி எண்கள் மற்றும் பின் நம்பர் போன்ற ரகசிய தகவல்களை செல்போனில் பதிவு செய்ய வேண்டாம். உங்களது செல்போன் தொலைந்து போனால் மொபைல் பேங்கிங் வசதியை செயலிழக்கச் செய்யுங்கள். மொபைல் பேங்கிக்கிற்கான ரகசிய எண்களை அவ்வப்போது மாற்றுங்கள். அது பிறர் திருட வாய்ப்பை தவிர்க்கும்.
வெளிப்படையான பாஸ்வேர்டுகளை (பிறப்பு பெயர், தேதி) பயன்படுத்த வேண்டாம். மொபைல் பேங்கிங்கின் போது பாதுகாப்பற்ற வை-பை இணைப்பை பயன்படுத்த வேண்டாம். ப்ளூடூத்துடன் கூடிய சேவைகளை துண்டியுங்கள். எனினும், மேற்கண்ட விஷயங்களை முறையாக பின்பற்றினாலும் மொபைல் பேங்கிங் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும், ஒரு பயன்பாட்டாளராக உங்கள் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என உறுதி செய்ய வேண்டும்.
உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும், பொலிவும் உடலிலும், உள்ளத்திலும் நிலைத்திருக்கும். அதற்கு உறுதுணையாகும் விதத்தில் இளநீர் செயல்படுகிறது.
இளநீர் நமது உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புக்கள் அடங்கிய பானம். இதை பருகும்போது உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களை சேர்த்து உடலின் செயல் திறனையும் அதிகரிக்கும்.
இளநீரில் நம் உடலின் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன.
100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. ரத்த விருத்திக்கு தேவையான இரும்பு சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.
இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். இளநீரில் இருக்கும் சோடியம் உப்பு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கவும், தசை பகுதியில் அதிகமாக சுண்ணாம்பு சத்து தங்க விடாமல் தடுக்கவும் உதவுகிறது.
இளநீர் இளமையை பாதுகாக்கும் அரிய பானம். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும், பொலிவும் உடலிலும், உள்ளத்திலும் நிலைத்திருக்கும். அதற்கு உறுதுணையாகும் விதத்தில் இளநீர் செயல்படுகிறது. 100 கிராம் இளநீரில் 312 மி.கி. பொட்டாசியமும், 30 மி.கி. மெக்னீசியமும் உள்ளது. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும், தசைகளுக்கும் புத்துணர்ச்சியையும், வலுவையும் ஊட்டும்.
ஒரு இளநீர் நீங்கள் பருகினால் உங்கள் உடலுக்கு 37 மி.கி. பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன. பாஸ்பரஸ் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கும். வைட்டமின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எல்லோருமே பளபளப்பான சருமத்திற்கு ஆசைப்படுகிறார்கள். அதற்கு தேவையான கந்தகம் உப்பு 24 மி.கி. இளநீரில் இருக்கிறது. கந்தக உப்பு ரத்தம் சுத்தம் அடையவும், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவும். தோல், முடி, நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் துணை புரியும்.
உணவு எளிதில் ஜீரணமாகுவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால், செரிமான உறுப்பு கோளாறுகளால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது இளநீர் அருந்தக் கொடுக்கலாம்.
இளநீரில் நம் உடலின் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்களும் அதிகமாக காணப்படுகின்றன.
100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. ரத்த விருத்திக்கு தேவையான இரும்பு சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.
இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். இளநீரில் இருக்கும் சோடியம் உப்பு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கவும், தசை பகுதியில் அதிகமாக சுண்ணாம்பு சத்து தங்க விடாமல் தடுக்கவும் உதவுகிறது.
இளநீர் இளமையை பாதுகாக்கும் அரிய பானம். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும், பொலிவும் உடலிலும், உள்ளத்திலும் நிலைத்திருக்கும். அதற்கு உறுதுணையாகும் விதத்தில் இளநீர் செயல்படுகிறது. 100 கிராம் இளநீரில் 312 மி.கி. பொட்டாசியமும், 30 மி.கி. மெக்னீசியமும் உள்ளது. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும், தசைகளுக்கும் புத்துணர்ச்சியையும், வலுவையும் ஊட்டும்.
ஒரு இளநீர் நீங்கள் பருகினால் உங்கள் உடலுக்கு 37 மி.கி. பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன. பாஸ்பரஸ் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கும். வைட்டமின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எல்லோருமே பளபளப்பான சருமத்திற்கு ஆசைப்படுகிறார்கள். அதற்கு தேவையான கந்தகம் உப்பு 24 மி.கி. இளநீரில் இருக்கிறது. கந்தக உப்பு ரத்தம் சுத்தம் அடையவும், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவும். தோல், முடி, நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் துணை புரியும்.
உணவு எளிதில் ஜீரணமாகுவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால், செரிமான உறுப்பு கோளாறுகளால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது இளநீர் அருந்தக் கொடுக்கலாம்.
சக மாணவர்களின் வற்புறுத்தலாலும், மாணவர்களின் மனதில் போதை பொருட்களை பயன்படுத்துவது ஸ்டைலாக காட்சியளிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதாலும் 90 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள்.
இந்தியாவில் ஏழ்மை, கல்லாமையை விட கொடுமையானது போதை பழக்கம். இந்தியாவை போதை பழக்கம் இல்லாத நாடாக நாம் மாற்ற வேண்டும். பொதுவாக பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு எதனால் போதை பழக்கம் ஏற்படுகிறது. காரணங்கள் என்ன? அதிலிருந்து அவர்கள் விடுபட பெற்றோர்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து திண்டுக்கல் ‘ஸ்பீக் யுவர் மைண்ட் கவுன்சிலிங் சென்டர்’ டாக்டர் டீன் வெஸ்லி கூறியதாவது:-
இன்றைய நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கூல்லிப்ஸ், ஹேன்ஸ், கெய்னி, சுபாரி, குட்கா, மாவா, பான் போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது எஸ்.எல்.டி எனும் புகையில்லா புகையிலை போதை பழக்கம் ஆகும். இதில் 4:200 கெமிக்கல் இருக்கிறது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை உட்கொள்வதால் கண்டிப்பாக வாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பற்கள் சீர் கெடும். வயிற்றில் புண் ஏற்படும். ஆரம்பத்தில் இதனை பழகும் மாணவர்கள் பின் மெதுவாக சிகரெட், பீடி, கஞ்சாவிற்கும், பலர் மதுவுக்கும் அடிமை ஆகின்றனர்.
சக மாணவர்களின் வற்புறுத்தலாலும், மாணவர்களின் மனதில் போதை பொருட்களை பயன்படுத்துவது ஸ்டைலாக காட்சியளிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதாலும் 90 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அதேபோல் கவலைகளை மறக்க குடிப்பதாக பலர் கூறுகின்றனர். பொதுவாக போதையில் இருக்கும் போது ஞாபகசக்தி குறைவாக இருக்கும். அதனால் தங்களுக்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி விடும் என நினைப்பார்கள். ஆனால் மனக்கவலையையும், மன பயத்தையும், மன அழுத்தத்தையும் போதை பொருட்களால் தடுக்க முடியாது.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அவர்களின் நடத்தையை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு அன்பு, பாசத்தை புரிய வைக்க வேண்டும். அவர்களை அதிக நேரம் தனிமையில் இருக்க விடக்கூடாது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை ஆரம்ப நிலையிலேயே டாக்டரிடம் அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு ‘காக்னடிவ் பிகேவியர் தெரபி’ மற்றும் ‘பேமிலி தெரபி’ மூலமாகவும் தேவையான மருந்துகள் கொடுக்க வேண்டும். இதனை ஒரு நல்ல டாக்டரால் எளிதாக கையாள முடியும். அத்தகைய கவுன்சிலிங், சிகிச்சையை திண்டுக்கல்லில் உள்ள எங்களது ‘ஸ்பீக் யுவர் மைண்ட் கவுன்சிலிங் சென்டரில்’ வழங்குகிறோம். எனவே போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை கிண்டல், கேலி செய்யாமல் அவர்களுக்கு உதவியாக இருந்து, ஊக்குவித்து சமுதாயத்தில் அவர்களும் நல்ல வாழ்க்கை வாழ உதவுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கூல்லிப்ஸ், ஹேன்ஸ், கெய்னி, சுபாரி, குட்கா, மாவா, பான் போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது எஸ்.எல்.டி எனும் புகையில்லா புகையிலை போதை பழக்கம் ஆகும். இதில் 4:200 கெமிக்கல் இருக்கிறது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை உட்கொள்வதால் கண்டிப்பாக வாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பற்கள் சீர் கெடும். வயிற்றில் புண் ஏற்படும். ஆரம்பத்தில் இதனை பழகும் மாணவர்கள் பின் மெதுவாக சிகரெட், பீடி, கஞ்சாவிற்கும், பலர் மதுவுக்கும் அடிமை ஆகின்றனர்.
சக மாணவர்களின் வற்புறுத்தலாலும், மாணவர்களின் மனதில் போதை பொருட்களை பயன்படுத்துவது ஸ்டைலாக காட்சியளிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதாலும் 90 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அதேபோல் கவலைகளை மறக்க குடிப்பதாக பலர் கூறுகின்றனர். பொதுவாக போதையில் இருக்கும் போது ஞாபகசக்தி குறைவாக இருக்கும். அதனால் தங்களுக்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி விடும் என நினைப்பார்கள். ஆனால் மனக்கவலையையும், மன பயத்தையும், மன அழுத்தத்தையும் போதை பொருட்களால் தடுக்க முடியாது.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அவர்களின் நடத்தையை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு அன்பு, பாசத்தை புரிய வைக்க வேண்டும். அவர்களை அதிக நேரம் தனிமையில் இருக்க விடக்கூடாது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை ஆரம்ப நிலையிலேயே டாக்டரிடம் அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு ‘காக்னடிவ் பிகேவியர் தெரபி’ மற்றும் ‘பேமிலி தெரபி’ மூலமாகவும் தேவையான மருந்துகள் கொடுக்க வேண்டும். இதனை ஒரு நல்ல டாக்டரால் எளிதாக கையாள முடியும். அத்தகைய கவுன்சிலிங், சிகிச்சையை திண்டுக்கல்லில் உள்ள எங்களது ‘ஸ்பீக் யுவர் மைண்ட் கவுன்சிலிங் சென்டரில்’ வழங்குகிறோம். எனவே போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை கிண்டல், கேலி செய்யாமல் அவர்களுக்கு உதவியாக இருந்து, ஊக்குவித்து சமுதாயத்தில் அவர்களும் நல்ல வாழ்க்கை வாழ உதவுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் டீன் வெஸ்லி
இதையும் படிக்கலாம்...ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை






