என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள்.
    தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு, பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

    தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள்.

    பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். இதனால் தற்கொலை செய்து கொள்ளக்கூட நேரிடலாம்.

    இவற்றை போக்குவதற்கு சில வழிகள்!

    * நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள், உங்களை நீங்களே ரசியுங்கள்.

    * எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள். இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

    * உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்.

    * என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

    * உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

    * கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

    * அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

    * உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். உண்மையை மற்றவருக்கும் பகிருங்கள்.
    தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    வேப்ப எண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில்(வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.

    * தினமும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.

    * வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாக இருக்கும். தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.

    * குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.

    * வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.

    * படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.

    * தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

    * தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க, முக கவசம் அணிந்து இரண்டு மீட்டர் தூர இடைவெளியை கடைப்பிடிப்பது போதுமானது அல்ல என்று புதிய ஆய்வு கூறுகிறது.
    கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பது ஒருபுறமிருக்க தடுப்பூசி போட்டிருக்கும் தைரியத்தில் பலர் முக கவசத்தை முறையாக அணியாத நிலை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் மட்டுமின்றி மழைக்கால நோய்த்தொற்றுகளை பரப்பும் வைரஸ்களிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக கவசம் அணிவது அவசியம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க, முக கவசம் அணிந்து இரண்டு மீட்டர் தூர இடைவெளியை கடைப்பிடிப்பது போதுமானது அல்ல என்று புதிய ஆய்வு கூறுகிறது.

    இதுதொடர்பான ஆய்வை கியூபெக், இல்லினாய்ஸ் மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருகிறார்கள். இறுதியில் மக்கள் நெருக்கமாக கூடும் இடங்கள், உள் அரங்குகள் போன்ற இடங்களில் முக கவசம் அணிவதன் மூலம் காற்றை மாசுபடுத்தும் துகள்களின் வரம்பை சுமார் 67 சதவீதம் குறைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

    பொதுவாக, ஒரே குடும்பத்தை சாராதவர்களுடன் பொதுவெளியில் நடமாடும்போது இரண்டு மீட்டர் தூரம் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவுவதை தடுக்க இந்த தூரம் மட்டும் போதாது என்பதை ஆய்வு முடிவு வெளிப்படுத்துகிறது.

    ஆய்வின்படி, மக்கள் முக கவசம் அணியாதபோது ​​70 சதவீதத்திற்கும் அதிகமான வான்வழி துகள்கள் 30 விநாடிகளில் இரண்டு மீட்டர் தூரத்தை கடந்து செல்கின்றன. அதேவேளையில் முக கவசம் அணிந்தால் ஒரு சதவீதத்துக்கும் குறைவான துகள்களே இரண்டு மீட்டர் தூரத்தை கடக்கின்றன.

    ஆகையால் முக கவசம் அணிந்திருக்கும் பட்சத்தில் வான்வழி துகள்களில் கலந்திருக்கும் மாசுக்கள் அதன் வழியே வடிகட்டப்பட்டு விடும். அதனை நுகர்வும் அளவும் குறைந்துவிடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

    கொரோனா உள்ளிட்டநோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு முக கவசம் அணிவதும், நல்ல காற்றோட்டமான சூழலும் முக்கியமானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
    இந்த இரண்டு வேர் காய்கறிகளிலும் வைட்டமின் சி, ஏ, துத்தநாகம், போலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து, மாங்கனீஸ் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - பாதி
    கேரட் - 4
    இஞ்சி - சிறு துண்டு
    தண்ணீர் - அரை கப்
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    கேரட் மற்றும் பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலந்து ஜூஸ் பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.

    பின்பு வடிகட்டி பருகலாம்.

    காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. விரும்பினால் சிறிதளவு மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

    சூப்பரான கேரட் பீட்ரூட் ஜூஸ் ரெடி.

    மிக மிக மென்மையான மிங்க் ரகத்துணிகளால் வடிவமைக்கப்படும் போர்வைக்குள் இரண்டு அடுக்குகளாக வருவதால் குளிர் மற்றும் மழைக் காலத்திற்கு கதகதப்பாக போர்த்திக் கொள்ள ஏதுவானவையாக இருக்கும்.
    குழந்தைகளுக்குப் போர்வைகளைப் போர்த்தி கதகதப்பாக தூங்க வைத்தால் அவர்கள் நிம்மதியாகத் தூங்குவார்கள். மென்மையான போர்வைகள், மென்மையான க்வில்ட்டுகள் மற்றும் அவற்றில் பல்வேறு விதமான டிசைன்கள் மற்றும் மாடல்களில் எத்தனையோ வகைகள் வந்துவிட்டன.

    * குழந்தையின் தலை, காது மற்றும் உடம்பையும் சேர்த்து இறுக்கமாகப் போர்த்தி வைக்க போர்வையிலேயே தலையை மூடும் முக்காடு (ஹூடட்) பகுதியானது இணைக்கப்பட்டது போல் வருவது பார்க்க அழகாக இருக்கின்றது. அந்த முக்காட்டில் கரடித்தலை, பான்டா கரடித்தலை, ஆட்டுக்குட்டித்தலை என வருவது குழந்தைகளுக்கு அணிவிக்கும் பொழுது அவை குளிரிலிருந்து பாதுகாப்பதோடு பார்க்கவும் அவ்வளவு அழகாக இருக்கின்றது.

    * நூறு சதவீதம் பருத்தியால் செய்யப்பட்ட குறைந்த எடையுடைய மென்மையான போர்வைகளில் இரண்டு புறமும் வெவ்வேறு டிசைன்கள் கொடுக்கப்பட்டு இருபுறமும் மாற்றி மாற்றி உபயோகப்படுத்திக் கொள்வது போல் வந்திருக்கும் போர்வைகள் அட்டகாசம் என்று சொல்லலாம். குழந்தைகளுக்குப் பிடித்தாற் போல் டைனோசர், போக்கிமான், டோரா புஜ்ஜி, பவர் ரேன்ஜர்ஸ் மற்றும் விலங்குகள் பிரிண்ட் செய்யப்பட்டு வரும் போர்வைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் மிகவும் பிடிக்கும்.

    * மிக மிக மென்மையான மிங்க் ரகத்துணிகளால் வடிவமைக்கப்படும் போர்வைக்குள் இரண்டு அடுக்குகளாக வருவதால் குளிர் மற்றும் மழைக் காலத்திற்கு கதகதப்பாக போர்த்திக் கொள்ள ஏதுவானவையாக இருக்கும்.
    ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது.
    தங்கத்தின் பயன்பாடு நம் நாட்டில் மிக அதிகம். குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம்.

    ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது. மேலும் திருமணம் உள்ளிட்ட குடும்பத்தாரின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை. இதனால் என்னவோ.. இப்போது தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது.

    முதலீடு செய்ய வேண்டும் நிலத்தில் காசை போட வேண்டும். அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

    ஈ.டி.எப் திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.

    இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம்.

    இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப் திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது. இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப் திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது.

    தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர்.

    பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிற போது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடையமுடிகிறது.

    தற்போது இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்கு மெண் டும் அனுப்பி வைப்பார்கள்.

    ஆனால் இந்த முதலீட் டை நீங்கள் திரும்பப் பெற நினைத்தால் அடுத்த இரண்டு தினங்களில் அப்போதைய தங்கத்தின் மதிப்பிற்கான பணத்தை பரஸ்பர நிதி நிறுவனம் உங்களுக்கு அளித்து விடுகிறது. இதில் அவர் களுக்கு ஒரு சிறிய லாபம் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்கள் எதுவுமே கிடையாது. தரம் மட்டுமே முக்கியம். சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரிய வரும். அதற்கு நம்பிக் கையான இடத்தில் தங்கத்தை வாங்கு வது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம்.

    ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது.
    சரியான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றினால் மிகுந்த பலனை அடைய இயலும்.
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கிளாரன்ஸ் டேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய தற்போதையச் சூழலில் விடுபட்ட மாதவிடாய், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்குடன் கூடிய மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. கொரோனாவால் மாதவிடாய் சுழற்சியில் ஏற்பட்ட தாக்கம் என தற்போது இதனை கூற இயலாது எனினும், பல காரணிகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஆகியவை பெரும்பங்கு வகித்து மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதை பார்க்க முடிகிறது.

    தற்போது செய்ய வேண்டிய வழிமுறைகள், தற்போது தவறாக நடந்தது என்ன? நாம் செய்த குறைகள் என்னென்ன? அவற்றை சரிசெய்வதற்கான வழிகளை அறிதல் மிக அவசியமாகும். முதன்மையாக டாக்டரைச் சந்தித்து இந்த நிலைக்கான காரணம் மற்றும் நோயறிதல் அவசியமாகும்.

    ஒருவேளை ஏதேனும் நோய் அல்லது குறைபாடு கண்டறியப்பட்டால் அதனைச் சரிசெய்யவும், மீண்டும் பழைய உடல் இயக்க நிலைக்கு கொண்டுவர உடலில் நச்சுநீக்கம் செய்ய ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா (உடல்நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள்) சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அதன் மூலம் சீரான மாதவிடாய் சுழற்சியினை ஏற்படுத்த இயலும். முறையான வழிமுறைகள், மருத்துவ வழிகாட்டுதலுடன் கூடிய உணவுப் பழக்க வழக்கங்கள் உடற்பயிற்சி. யோகாபயிற்சிகள் முதலானவை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

    சரியான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றினால் மிகுந்த பலனை அடைய இயலும். மாதவிடாய்க் கோளாறுகளுடன் அவதிப்படும் பெண்கள் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவில் சிறப்பு மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று உடல் நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள் குறித்து அறிந்து ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    குழந்தைகளுக்கு சளி பிரச்சனை இருந்தால் அவற்றை சாதாரணமாக நினைக்கக்கூடாது. குழந்தையை கவனிக்கும்போது நாம் செய்கின்ற சிறுசிறு தவறுகள் குழந்தைக்கும் சளி பிரச்சனை வருவதற்கு நாமே காரணமாகிறோம்.
    குழந்தைகள் படுக்கும் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் உடனே துணிகளை மற்ற வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை  தூங்க வைக்கக்கூடாது.

    மழை மற்றும் குளிர் காலத்தில் ஈரக்காற்று படாதவாறு குழந்தையின் உடலையும், காதுகளையும் கம்பளியால் சுற்றி மூடவேண்டும்.
     
    குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் நன்கு கொதிக்க வைத்த ஆறிய தண்ணீரை கொடுக்கவேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை கொடுக்க  வேண்டும்.
     
    குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்க கூடாது. பாலூட்டும் தாய்மார்களுக்கு முதலில் சளி தொல்லை  ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
     
    தலை குளித்தால் தலை முடியை நன்கு துவட்டிய பிறகே குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைக்கு பாலூட்டும்போது குழந்தைக்கும் வயிற்று கோளாறுகளை உண்டாக்கிவிடும்.
     
    பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்ச்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும்.
    நமது உணவு பழக்க வழக்கம் மாறியுள்ளதுடன், நுகர்வின் விகிதமும் அதிகரித்துள்ளது. இன்று இந்தியாவின் சிறிய நகரங்களில்கூட சாண்ட்விச் என்பது சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது.
    மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும் என்றாலோ அல்லது ஒரு சின்ன விருந்து என்றாலோ உடனடியாக பீட்சா, பர்க்கர் என கிளம்பி விடுகிறது ஒரு பட்டாளம். யோசித்து பாருங்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பான நிலைமையை. இட்லி, தோசை என்றாலே அது தீபாவளிக்கும் பொங்கலுக்குமான சிறப்பு உணவாக அந்த நாட்கள் இருந்தன. இன்று இந்தியாவின் சிறிய நகரங்களில்கூட சாண்ட்விச் என்பது சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது.

    இந்த உணவு கலாசார மாற்றம் என்பது சாதாரணமாக நிகழ்ந்து விடவில்லை. இதற்கு பின்னாலும் சர்வதேச பொருளாதார தொடர்புகள் இருப்பதுதான் உண்மை. நமது உணவு பழக்க வழக்கம் மாறியுள்ளதுடன், நுகர்வின் விகிதமும் அதிகரித்துள்ளது. 1991-ம் ஆண்டுகளிலிருந்து விறு விறுவென இந்தியா உள்வாங்கிக் கொண்ட புதிய பொருளாதார கொள்கைகளின் உப விளைவுகளில் ஒன்றுதான் இந்த உணவு கலாசார மாற்றம்.

    இந்த ஆண்டு தாராளமயமாக்கலின் 30-ம் ஆண்டு. சர்வதேச அளவில் திறந்த சந்தை பொருளாதார நாடாக இந்தியா இன்னும் முழுமையாக திறந்துவிடப்பட வில்லை என்றாலும் அதில் 50 சதவீத அளவையாவது இப்போது எட்டி விட்டது. இந்த 50 சதவீதம் சந்தை சூழ்நிலையிலேயே இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் காணாமல் போய்விட்டன என்கிறது ஆய்வுகள்.

    100 சதவீதம் திறந்த பொருளாதார சந்தை நாடாக இந்தியா மாறும் காலகட்டங்களில் உணவு தானிய உற்பத்தியை நம்பி இருப்பவர்களின் நிலைமை என்னாவது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் இளைய தலைமுறையினர் சப்பாத்தி சாப்பிடுவதைவிட பீட்சா சாப்பிடுவது அதிகரித்துள்ளது. அதாவது நமது உணவு பழக்கம் எந்த அளவுக்கு வேறுபட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. இந்த ஆய்வில் பல உணவுப் பொருட்களின் நுகர்வு விகிதத்தையும் பட்டியலிட்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட 17 முக்கிய உணவு பொருட்கள் அதிகமாக நுகரப்பட்டு வருகிறது என்கிறது. குறிப்பாக முட்டையும், ஆல்கஹாலும் இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளன.

    இந்த உணவு மாற்றத்தில் சிறப்புமிக்க பல்வேறு சிறுதானியங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தற்போதைய வளர்ச்சியிலிருந்து இருமடங்காக இருக்கும் என்கிற புள்ளிவிவரம் மட்டுமே சிறுதானிய உற்பத்தியில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இளையோர்களின் விருப்ப உணவாக உள்ள நூடுல்ஸ்க்கு இந்தியாவில் சுமார் ரூ.6,000 கோடிக்கு சந்தை வாய்ப்பு உள்ளது.

    அதே சமயத்தில் தாராளமயமாக்கலுக்கு பிறகு இந்தியர்களின் சராசரி உணவு நுகர்வு விகிதம் அதிகரித்துள்ளது. உதாரணமாக முட்டையின் நுகர்வை பார்க்கலாம் 1961-ம் ஆண்டை விட 2013-ம் ஆண்டுகளில் இதன் நுகர்வு விகிதம் சுமார் 8 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் தானியம் மற்றும் பருப்பு வகைகளின் நுகர்வு குறைந்துள்ளது. 1991-க்கும் 2013-க்கும் இடையில் விலங்குகளின் கொழுப்பு வகைகளும் நுகர்வில் முன்னிலையில் உள்ளன.

    குறிப்பாக ஆடு, மாடு, பன்றி இறைச்சிகளின் நுகர்வு குறைந்து கோழி இறைச்சியின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதேபோல கடந்த 20 ஆண்டுகளில் ஓட்டல்களின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. 34 சதவீதம் மக்கள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது வெளியில் உணவருந்துகின்றனர். 12 சதவீதம் பேர் தினசரி ஓட்டல்களுக்குச் செல்கின்றனர். ஓட்டல்களுக்குச் செல்வோரில் இரவு நேர உணவுக்கு 60 சதவீதம் பேர் செல்கின்றனர். தனிக்குடும்பங்களின் முதன்மையான தேர்வாக ஓட்டல்கள் உருவாகிவிட்டன.
    ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சரும செல்களை புத்துயிர் பெறச்செய்து, சருமத்திற்கு கூடுதல் பொலிவு அளிக்க உதவும். ஒளிரும் சருமத்தை பெறவும் சுவையான ஆப்பிள் ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 4
    எலுமிச்சை - அரை பழம்
    இஞ்சி - சிறு துண்டு
    தண்ணீர் - 1 கப்
    உப்பு - சிறிதளவு

    செய்முறை:

    ஆப்பிள்களை தோலுரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து கிளறிவிடவும்.

    இந்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் பருகி வருவதன் மூலம் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

    சூப்பரான ஆப்பிள் எலுமிச்சை ஜூஸ் ரெடி.

    திருமண வயதை தள்ளிப்போடுவது பெண்களுக்குத்தான் பாதகமானது. வயது அதிகரிக்கும்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை பெறுவதற்கான சூழல் குறைய தொடங்கிவிடும்.
    படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலையில் சேர்ந்து, ஓரளவு செட்டிலான பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மன நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி திருமண வயதை தள்ளிப்போடுவது பெண்களுக்குத்தான் பாதகமானது. வயது அதிகரிக்கும்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை பெறுவதற்கான சூழல் குறைய தொடங்கிவிடும்.

    வயது அதிகரிப்பு கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?

    20 வயதுகளின் ஆரம்ப காலகட்டம் குழந்தை பேறுக்கு ஏற்றது. அந்த சமயத்தில் கருத்தரிப்பில் சிக்கல்கள் ஏற்படாது. ஆனால் 30 வயதை நெருங்கும்போது கர்ப்பம் தரிக்கும் திறன் குறைய தொடங்கிவிடும். 35 வயதை கடக்கும்போது கருவுறுதல் திறன் வேகமாக குறைய தொடங்கும். 45 வயதுக்கு பிறகு பெரும்பாலான பெண்களுக்கு இயற்கையாக கர்ப்பம் தரிக்கும் திறன் சாத்தியமில்லை.

    கரு முட்டைகள் எத்தகைய பாதிப்புகளை அடையும்?

    பெண்கள் பருவமடையும்போது கருப்பையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகள் நிறைந்திருக்கும். வயது அதிகரிக்க, அதிகரிக்க கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கும். மேலும் பெண்களுக்கு வயதாகும்போது, ​​கருப்பை கட்டிகள் மற்றும் எண்டோமெட்ரியசிஸ் போன்ற கருவுறுதலை பாதிக்கக்கூடிய பாதிப்புகள் உண்டாகக் கூடும்.

    வயதாகும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைவதற்கு காரணம் என்ன?

    20 முதல் 30 வயதுடைய தம்பதியரில் மாதவிடாய் சுழற்சியின்போது 4-ல் 1 பெண் கர்ப்ப மடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 40 வயதை நெருங்கும்போது மாதவிடாய் சுழற்சியில் 10 பெண்களில் ஒருவர் தான் கர்ப்பமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. வயதுக்கு ஏற்ப கருவுறுதல் திறன் குறைந்துவிடுகிறது.

    தாமதமாக கர்ப்பமடைவதால் பாதிப்பு நேருமா?

    குறிப்பிட்ட வயதை கடந்து தாமதமாக கர்ப்பமாகும்போது ஒருசில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக 40 வயதை கடக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்தும் பிரீக்ளாம்ப்சியா எனப்படும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகக்கூடும். இளம் பெண்களை விட வயதான பெண்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வயதானவர் களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்த பிரச் சினைதான் பாதிப்பை அதிகப்படுத்தக்கூடும்.
    கலம்காரி பிரிண்டட் புடவைகள் இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.
    கலம்காரி என்பது ‘கலாம்’ - எழுதுகோல் மற்றும் ‘காரி’- கைவினைத்திறன் என்ற இரண்டு பாரசீக வார்த்தைகள் இணைந்த ஒரு சொல்லாகும். பேனாவால் வடிவங்களை வண்ணங்களில் தீட்டி உருவாக்கப்படும் கலையே ‘கலம்காரி’.

    கலம்காரி புடவைகள் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல் கலம்காரி டிசைன்களை அச்சிடுவதற்கு அதிக அளவில் இயற்கை சாயங்களையே உபயோகப்படுத்துகிறார்கள்.

    கலம்காரி சில்க் புடவைகள்:- கலம்காரி சில்க் புடவைகள் நேர்த்தி மற்றும் க்ளாஸாக புடவை அணியும் பெண்களுக்கு ஏற்றவை. ப்ளாக் பிரிண்ட்டுகளுடன் வரும் இவ்வகை புடவைகள் அணிபவருக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும், அனைத்து சந்தர்ப்பங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்ற புடவைகள் என்று இவற்றைச் சொல்லலாம்.

    கலம்காரி காட்டன் புடவைகள்:- மதிப்புடைய காட்டன் ரகங்களில் கலம்காரி சாயமானது இடப்பட்டு அதில் அச்சுகளை புடவை முழுவதும் அல்லது புடவையின் பார்டர் மற்றும் பல்லுவில் இருப்பது போல் வடிவமைக்கிறார்கள். கையால் அச்சிடப்படும் இவ்வகைப் புடவைகள் பல்வேறு வடிவமைப்புகளுடன் அனைவராலும் வாங்கக் கூடிய விலையில் வருகின்றன. கலம்காரி டிசைன்களில் வரும் காட்டன் புடவைகளை பெரும்பாலான பெண்கள் உடுத்துவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். இப்புடவைகள் தினசரி உடுத்திக் கொள்ள ஏற்றவை.

    கலம்காரி க்ரேப் புடவைகள்:- இலகுரக புடவைகளை விரும்புபவர்களின் சரியான தேர்வு இவ்வகை க்ரேப் புடவைகள் மிகவும் மெல்லிய துணியால் உருவாக்கப்படும் இவை அணிபவரின் உடலில் லேசான உணர்வைத் தருகின்றன. திறமையான கைத்தறி நிபுணர்களால் இவ்வகை புடவைகளில் டிசைன்கள் அச்சிடப்படுகின்றன. அலுவலகம் செல்லும் பெண்கள் தினசரி அணிய ஏற்றவை இவை.

    டிசைனர் கலம்காரி புடவைகள்:- ஆடம்பரமான தோற்றம், வாங்கக்கூடிய விலை இவையே இப்புடவைகள் அதிக அளவில் தேவையை ஏற்படுத்துவதற்குக் காரணம். பல்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் வரும் இவை தனித்தன்மையைக் கொண்டவையாக இருக்கின்றன. டிசைனர் கலம்காரி புடவைகள் கையால் நெய்யப்பட்ட மற்றும் கையால் அச்சிடப்பட்ட கைவினைத் திறன் சேர்ந்த கலவையாகும்.

    கலம்காரி பிரிண்டட் புடவைகள்:- இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக இவற்றைச் சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.

    கலம்காரி பார்டர் புடவைகள்:- உடல் முழுவதும் பிளையின் வண்ணத்தில் இருக்க புடவையின் பார்டர்கள் கலம்காரி டிசைனில் வருவது நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. கான்ட்ராஸ்ட் நிறங்களில் கலம்காரி பார்டர்கள் மற்றும் பல்லு இருப்பது போல் வரும் இவ்வகை புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    கலம்காரி பட்டுப் புடவைகள்: திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அணிய ஏற்ற புடவைகள் இவையாகும். ராசில்க் துணி வகைகளில் உற்பத்தி செய்யப்படும் இவ்வகை பட்டுப் புடவைகள் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன. பரந்த அளவிலான பாரம்பரிய மற்றும் சமகாலப் பாணிகளுடன் வரும் இந்த பட்டுப் புடவைகள் அனைத்துப் பெண்களிடமும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

    கையால் வண்ணம் தீட்டப்படும் கலம்காரி புடவைகள்:- திறமையான கைவினைஞர்களால் கைகளால் வரைந்து வண்ணம் தீட்டப்படும் இவ்வகைப் புடவைகளை வாங்குவதற்கென்றே தனியான ரசிகைகள் இருக்கிறார்கள். இப்புடவைகளில் பழங்கால புராண கதைகள் மற்றும் ஓவியங்களில் வரும் படங்களை வண்ணமயமாகவும் துடிப்பாகவும் சித்தரித்து உருவாக்குகிறார்கள்.

    கலம்காரி ஜியார்ஜெட் புடவைகள்:- உடலமைப்பை குறைத்துக் காட்டும் இவ்வகைப் புடவைகள் பெரும்பாலான பெண்களின் வரவேற்பை பெற்றுள்ள நவீனப் போக்கு சேலைகளாகும். இவற்றை அணிவதும், பராமரிப்பதும் எளிது.

    கலம்காரி ஷிஃபான்புடவைகள்:- உடல் முழுவதும் பூக்களால் அச்சிடப்பட்டு வரும் இவ்வகை புடவைகள் அணிவதற்கு இலகுவாகவும், வாங்கக்கூடிய விலையிலும் இருக்கின்றன.

    கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள்:- காட்டன்
    புடவைகளில் வரும் கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள் அபாரமாக இருக்கின்றன. அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற புடவைகள் இவை.

    ஹாஃப் அண்டு ஹாஃப் புடவைகள்:- புத்தம் புதிய போக்கில் வந்திருக்கும் இவை ஹாஃப் சேரி மாடலில் இருக்கின்றன. தனித்துவமான வடிவமைப்புடன் வரும் இவை பெண்களின் இளவயதில் பாவாடைத் தாவணி அணிந்த நாட்களை ஞாபகப்படுத்தும் விதத்தில் உள்ளன.

    சந்தேரி கலம்காரி புடவைகள்:- சந்தேரி காட்டன் சில்க் காட்டன் மற்றும் ப்யூர்சில்க் துணிகளில் இப்புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகைப் புடவைகளை அணியும்பொழுது கௌரவமான தோற்றம் ஏற்படுவதால் பெண்களுக்கு பிடித்த புடவைகளில் முதன்மையான இடத்தை இவை பெற்றிருக்கின்றன.

    இவை மட்டுமல்லாது பெத்தண்ணா (ஆந்திரா) கலம்காரி புடவைகள், கேரளா கலம்காரி புடவைகள் என கலம்காரி புடவைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. பிளெயின் புடவைகளுக்கு கலம்காரி பிளவுஸ்களை அணியும் பொழுது அவை மிகவும் துடிப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றது. அதேபோல், பளிச்சென்றிருக்கும் கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் புரோகேட் பிளவுஸ்களை அணியும் பொழுது அவை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன. கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பிளவுஸ்களை அணிவதும் இன்றைய போக்காக உள்ளது.

    ×