என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் இன்று (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலும் ஒன்று. காஞ்சியில் நிலமாகவும், திருவானைக்காவில் நீராகவும், திருவண்ணாமலையில் தீயாகவும், காளகஸ்தியில் காற்றாகவும், சிதம்பரத்தில் விண்ணாகவும், சிவபெருமான் வணங்கப்படுகிறார். இந்த பஞ்சபூதங்களும் பூதப்பாண்டி பூதலிங்கசாமியை வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஒவ்வொரு வருடமும், தை, திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் அதன்படி கடந்த 6-ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்து வந்தது. 7-ம் திருநாளன்று இரவு சுவாமியும், அம்பாளும் கைலாசபர்வத கற்பக, விருட்சக வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
9-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருத்தேர்களில் விநாயகரையும், சுவாமி, அம்பாளையும் எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8-30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு சப்தா வர்ணம் கிகழ்ச்சியும் நடக்கிறது.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஒவ்வொரு வருடமும், தை, திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் அதன்படி கடந்த 6-ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்து வந்தது. 7-ம் திருநாளன்று இரவு சுவாமியும், அம்பாளும் கைலாசபர்வத கற்பக, விருட்சக வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
9-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருத்தேர்களில் விநாயகரையும், சுவாமி, அம்பாளையும் எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8-30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு சப்தா வர்ணம் கிகழ்ச்சியும் நடக்கிறது.
தைமாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று தை மாத பிரதோஷத்தையொட்டி தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.
காலை 6.50 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னரே மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பிரதோஷத்தையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், வாசனைத்திரவியங்கள் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தைமாத பிரதோஷம் என்பதாலும், குடியரசு தின விடுமுறை நாள் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
காலை 6.50 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னரே மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பிரதோஷத்தையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், வாசனைத்திரவியங்கள் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தைமாத பிரதோஷம் என்பதாலும், குடியரசு தின விடுமுறை நாள் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தொடர்ந்து 10-வது மாதமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது பக்தர்கள் மத்தியில் வேதனை அளிப்பதாகவும், உடனடியாக தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் நிகழ்ச்சிக்கு புகழ் பெற்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இதில் உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் சிறு வியாபாரிகள் முதல் பல்வேறு தரப்பினரும் பக்தர்களின் வருகையால் வருமானம் பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருவண்ணாமலையில் ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் 2021-ம் ஆண்டின் முதல் பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் 2 மணியளவில் தொடங்கி 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை சுமார் 2 மணி வரை உள்ளது. இந்த பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்
ஆனால் புதிய வகை கொரோனா பரவி வருவதால் மீண்டும் அதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்துள்ளார். மேலும் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து 10-வது மாதமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது பக்தர்கள் மத்தியில் வேதனை அளிப்பதாகவும், உடனடியாக தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்களும், ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் நிகழ்ச்சிக்கு புகழ் பெற்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இதில் உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் சிறு வியாபாரிகள் முதல் பல்வேறு தரப்பினரும் பக்தர்களின் வருகையால் வருமானம் பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருவண்ணாமலையில் ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் 2021-ம் ஆண்டின் முதல் பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் 2 மணியளவில் தொடங்கி 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை சுமார் 2 மணி வரை உள்ளது. இந்த பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்
ஆனால் புதிய வகை கொரோனா பரவி வருவதால் மீண்டும் அதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்துள்ளார். மேலும் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து 10-வது மாதமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது பக்தர்கள் மத்தியில் வேதனை அளிப்பதாகவும், உடனடியாக தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்களும், ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அருகே உள்ளது சிம்மக்கல் என்ற ஊர். இங்கு ஆதிசொக்க நாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இங்குள்ள மூலவர், ‘சொக்க நாதர்’ என்றும், அம்பாள் ‘மீனாட்சி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
மதுரை அருகே உள்ளது சிம்மக்கல் என்ற ஊர். இங்கு ஆதிசொக்க நாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இங்குள்ள மூலவர், ‘சொக்க நாதர்’ என்றும், அம்பாள் ‘மீனாட்சி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். இங்குள்ள சிவலிங்கம், உலகத்தில் உள்ள செல்வங்களை எல்லாம் தன் வசம் வைத்துக் காத்து வரும் குபேரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டது என்பது சிறப்புக்குரியது. தன்னிடம் உள்ள செல்வம், மென்மேலும் பெருக வேண்டும் என்பதற்காக, குரேபன் இந்தப் பகுதிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. மேலும் இந்தக் கோவில் புதன் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. நவக்கிரகங்களில் ஒருவரான புதன், இந்தத் தலம் வந்து இறைவனை வழிபட்டு பேறுபெற்றுள்ளார்.
மதுரைப் பகுதியை, குசேல பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவன் கல்வியில் மிகச் சிறப்பு படைத்தவனாக இருந்தான். இதைக் கேள்விப்பட்டு, தமிழ்சங்கத்தில் புலவராக இருந்த கபிலரின் நண்பரான இடைக்காடர், பாண்டியனின் அரண்மனைக்கு வந்தார். மன்னனின் முன்பாக நின்று தான் இயற்றி வந்த பாடலைப் பாடினார். ஆனால் கல்வி அறிவால் செருக்கு கொண்டிருந்த மன்னன், இடைக்காடரின் பாடலை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. அதோடு இடைக்காடருக்கு உரிய மரியாதையையும் அவன் அளிக்கவில்லை.
இதனால் மன வருத்தம் அடைந்த இடைக்காடர், மதுரையில் வீற்றிருக்கும் இறைவன் முன்பாக அமர்ந்து வழிபட்டார். “இறைவா.. நான் மன்னனின் புலமை மேல் பற்று கொண்டு அவனிடம் என்னுடைய பாடலைப் பாடிக் காட்ட சென்றேன். ஆனால் அவன் என்னை அவமதித்து விட்டான். அவன் என்னை அவமதித்தானா, அல்லது உன்னை அவமதித்தானா என்பதை நீயே பார்த்துக் கொள்” என்று கூறிவிட்டு, தணியாத கோபத்துடன் வட திசை நோக்கி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இடைக்காடரின் உள்ளக்குமுறலைக் கேட்ட சிவபெருமான், தன்னுடைய லிங்க வடித்தை மறைத்து, உமாதேவியருடன் கோவிலை விட்டு வெளியேறி, மதுரை ஆலயத்தின் நேராக, வைகை ஆற்றுக்கு தெற்கே உள்ள கோவிலில் எழுந்தருளினார். இடைக்காடருக்கும் காட்சி கொடுத்து, மன்னனுக்கு பாடம் புகட்டுவதாகக் கூறினார். மறுநாள் அதிகாலை மதுரையம்பதியில் உள்ள இறைவனை தரிசிக்க வந்த பக்தர்கள், அங்கு சிவலிங்கம் காணாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை மன்னனிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக கோவில் நிர்வாகிகள் அனைவரும், அரண்மனையை நோக்கிச் சென்றனர். வழியெங்கும் மதுரை நகரமே, பொலிவிழந்து இருப்பதையும் கண்டார்கள்.
மன்னனின் முன்பாகச் சென்றவர்கள் பதற்றத்துடன், “மன்னா.. கோவிலில் இறைவனைக் காணவில்லை. அம்பாளும் இல்லை. நகரமே பொலிவிழந்து காணப்படுகிறது” என்றனர்.
அதைக் கேட்டு மன்னன் மிகவும் வருத்தம் அடைந்தான். “இறைவா.. நான் செய்த தவறு என்ன? தாங்கள் உமாதேவியுடன் இங்கிருந்து எங்கு சென்றீர்கள்?” என்று புலம்பினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “நீ என்னுடைய பக்தனான இடைக்காடரை அவமதித்து விட்டாய். அதனால்தான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது” என்றது அந்தக் குரல்.
அப்போது சிலர் ஓடி வந்து, “மன்னா.. இறைவனும், இறைவியும் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள்” என்று கூறினர். இதையடுத்து மன்னன் தன்னுடைய பரிவாரங்களுடன் அந்த ஆலயத்திற்குச் சென்றான்.
அங்கு எழுந்தருளியிருந்த இறைவன் முன்பாக மண்டியிட்டு, “சொக்கநாத பெருமானே.. தாங்கள் அங்கிருந்து இங்கே வந்து எழுந்தருளியிருப்பதன் காரணம் என்ன? நான் செய்த தவறை மன்னித்து மீண்டும் மதுரையில் எழுந் தருள வேண்டும்” என்று வேண்டினான். இறைவனை நினைத்து துதிப் பாடல் களையும் பாடினான்.
மன்னனின் வழிபாட்டால் மகிழ்ந்த இறைவன், “பாண்டியனே.. எல்லாத் தலங்களையும் விட, இந்த திருவாலவாயே உயர்ந்தது. மேலும் நான் இருக்கும் லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இன்று முதல் இந்த தலம் ‘வடதிருவாலவாய்’ என்று அழைக்கப்படும் என்று கூறினார்.
மதுரையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் சிம்மக்கல் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், ‘ஆதிசொக்கநாதர் கோவில்’ என்றும், ‘பழைய சொக்க நாதர் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
மதுரைப் பகுதியை, குசேல பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவன் கல்வியில் மிகச் சிறப்பு படைத்தவனாக இருந்தான். இதைக் கேள்விப்பட்டு, தமிழ்சங்கத்தில் புலவராக இருந்த கபிலரின் நண்பரான இடைக்காடர், பாண்டியனின் அரண்மனைக்கு வந்தார். மன்னனின் முன்பாக நின்று தான் இயற்றி வந்த பாடலைப் பாடினார். ஆனால் கல்வி அறிவால் செருக்கு கொண்டிருந்த மன்னன், இடைக்காடரின் பாடலை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. அதோடு இடைக்காடருக்கு உரிய மரியாதையையும் அவன் அளிக்கவில்லை.
இதனால் மன வருத்தம் அடைந்த இடைக்காடர், மதுரையில் வீற்றிருக்கும் இறைவன் முன்பாக அமர்ந்து வழிபட்டார். “இறைவா.. நான் மன்னனின் புலமை மேல் பற்று கொண்டு அவனிடம் என்னுடைய பாடலைப் பாடிக் காட்ட சென்றேன். ஆனால் அவன் என்னை அவமதித்து விட்டான். அவன் என்னை அவமதித்தானா, அல்லது உன்னை அவமதித்தானா என்பதை நீயே பார்த்துக் கொள்” என்று கூறிவிட்டு, தணியாத கோபத்துடன் வட திசை நோக்கி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இடைக்காடரின் உள்ளக்குமுறலைக் கேட்ட சிவபெருமான், தன்னுடைய லிங்க வடித்தை மறைத்து, உமாதேவியருடன் கோவிலை விட்டு வெளியேறி, மதுரை ஆலயத்தின் நேராக, வைகை ஆற்றுக்கு தெற்கே உள்ள கோவிலில் எழுந்தருளினார். இடைக்காடருக்கும் காட்சி கொடுத்து, மன்னனுக்கு பாடம் புகட்டுவதாகக் கூறினார். மறுநாள் அதிகாலை மதுரையம்பதியில் உள்ள இறைவனை தரிசிக்க வந்த பக்தர்கள், அங்கு சிவலிங்கம் காணாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை மன்னனிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக கோவில் நிர்வாகிகள் அனைவரும், அரண்மனையை நோக்கிச் சென்றனர். வழியெங்கும் மதுரை நகரமே, பொலிவிழந்து இருப்பதையும் கண்டார்கள்.
மன்னனின் முன்பாகச் சென்றவர்கள் பதற்றத்துடன், “மன்னா.. கோவிலில் இறைவனைக் காணவில்லை. அம்பாளும் இல்லை. நகரமே பொலிவிழந்து காணப்படுகிறது” என்றனர்.
அதைக் கேட்டு மன்னன் மிகவும் வருத்தம் அடைந்தான். “இறைவா.. நான் செய்த தவறு என்ன? தாங்கள் உமாதேவியுடன் இங்கிருந்து எங்கு சென்றீர்கள்?” என்று புலம்பினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “நீ என்னுடைய பக்தனான இடைக்காடரை அவமதித்து விட்டாய். அதனால்தான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது” என்றது அந்தக் குரல்.
அப்போது சிலர் ஓடி வந்து, “மன்னா.. இறைவனும், இறைவியும் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள்” என்று கூறினர். இதையடுத்து மன்னன் தன்னுடைய பரிவாரங்களுடன் அந்த ஆலயத்திற்குச் சென்றான்.
அங்கு எழுந்தருளியிருந்த இறைவன் முன்பாக மண்டியிட்டு, “சொக்கநாத பெருமானே.. தாங்கள் அங்கிருந்து இங்கே வந்து எழுந்தருளியிருப்பதன் காரணம் என்ன? நான் செய்த தவறை மன்னித்து மீண்டும் மதுரையில் எழுந் தருள வேண்டும்” என்று வேண்டினான். இறைவனை நினைத்து துதிப் பாடல் களையும் பாடினான்.
மன்னனின் வழிபாட்டால் மகிழ்ந்த இறைவன், “பாண்டியனே.. எல்லாத் தலங்களையும் விட, இந்த திருவாலவாயே உயர்ந்தது. மேலும் நான் இருக்கும் லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இன்று முதல் இந்த தலம் ‘வடதிருவாலவாய்’ என்று அழைக்கப்படும் என்று கூறினார்.
மதுரையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் சிம்மக்கல் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், ‘ஆதிசொக்கநாதர் கோவில்’ என்றும், ‘பழைய சொக்க நாதர் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
‘என்னையும் இரக்க தன்னையும், ஒன்றாய் இருக்கவே இசைவிந்து என் உயிர் தான் உயிர் இரக்கந்தான் ஒன்றதே இரண்டிலை’ என்பன வள்ளலாரின் சத்திய வசனங்களாகும்.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமையாபிள்ளை-சின்னமையார் ஆவார். அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகள்.
‘என்னையும் இரக்க தன்னையும், ஒன்றாய் இருக்கவே இசைவிந்து என் உயிர் தான் உயிர் இரக்கந்தான் ஒன்றதே இரண்டிலை’ என்பன வள்ளலாரின் சத்திய வசனங்களாகும்.
வள்ளலார் பிறந்த ஆறாவது மாதத்திலேயே தந்தையை இழந்தார். அதன்பின் தாய் சின்னமையார் வள்ளலார் மற்றும் அவருடன் பிறந்த 4 பேரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். வள்ளலார் தமது ஆசிரியராகிய காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி கற்றார். வள்ளலார் கவிபாடித் துதித்தலை கண்ட மகாவித்துவான் கற்பிப்பதை கைவிட்டார். பின்னர் வள்ளலார் கற்கவேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார். கேட்கவேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார்.
பள்ளி பருவத்தில் பள்ளி பயிலாததால், வள்ளலார் வீட்டில் தங்காமல் நாள்தோறும் கந்த கோட்டத்திற்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டார். வள்ளலார் இடையில் அணியும் ஆடையை முழங்கால் மறையும் அளவுக்கு அணிவார். மேலாடையை உடல் முழுவதும் போர்த்தி இருப்பார். தலை முழுவதும் முக்காடு அணிந்திருப்பார். வள்ளலார் எப்போதும் கைகட்டி கொண்டே இருப்பார்.
சில நாட்களில் தூய வெண்ணிற ஆடையை உடுத்தி வந்தார். வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடம் இரக்கம் காட்டுவது வள்ளலாரின் ஜீவகாருண்யம்.
கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியர். உயிர் பலி கூடாது. புலால் உண்ண கூடாது. ஏழைகளின் பசி தவிர்த்தல் ஆகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல், சாதி, சமயம் முதலிய எவ்வித வேறுபாடும் கூடாது. எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கைகொள்ள வேண்டும் என்பன வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை ஆகும்.
‘உருவமாகியும், அருவமாகியும், அரு உருவமாகியும் கடவுள் ஒருவரே’ உள்ளார். கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது.
சன்மார்க்கத்தின் முடிவு சாதிப்பதற்காகவே, சகாதேவனே சன்மார்க்கி. உடம்பு 96 தத்துவங்களால் ஆனது. ஆன்ம தத்துவம் 24, வித்தியா தத்துவம் 7, சிவ (சுத்த)தத்துவம் 5, புறக்கருவிகள் 60 என்று வள்ளலார் கூறினார். 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார்.
வள்ளலாரின் வாழ்க்கை சரித்திரத்தை கைக்கொள்ளும் நாமும் அவரை போன்று இறைவனோடு ஒன்றி வாழ நம்மை அர்ப்பணிப்போம்.
‘என்னையும் இரக்க தன்னையும், ஒன்றாய் இருக்கவே இசைவிந்து என் உயிர் தான் உயிர் இரக்கந்தான் ஒன்றதே இரண்டிலை’ என்பன வள்ளலாரின் சத்திய வசனங்களாகும்.
வள்ளலார் பிறந்த ஆறாவது மாதத்திலேயே தந்தையை இழந்தார். அதன்பின் தாய் சின்னமையார் வள்ளலார் மற்றும் அவருடன் பிறந்த 4 பேரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். வள்ளலார் தமது ஆசிரியராகிய காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி கற்றார். வள்ளலார் கவிபாடித் துதித்தலை கண்ட மகாவித்துவான் கற்பிப்பதை கைவிட்டார். பின்னர் வள்ளலார் கற்கவேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார். கேட்கவேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார்.
பள்ளி பருவத்தில் பள்ளி பயிலாததால், வள்ளலார் வீட்டில் தங்காமல் நாள்தோறும் கந்த கோட்டத்திற்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டார். வள்ளலார் இடையில் அணியும் ஆடையை முழங்கால் மறையும் அளவுக்கு அணிவார். மேலாடையை உடல் முழுவதும் போர்த்தி இருப்பார். தலை முழுவதும் முக்காடு அணிந்திருப்பார். வள்ளலார் எப்போதும் கைகட்டி கொண்டே இருப்பார்.
சில நாட்களில் தூய வெண்ணிற ஆடையை உடுத்தி வந்தார். வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடம் இரக்கம் காட்டுவது வள்ளலாரின் ஜீவகாருண்யம்.
கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியர். உயிர் பலி கூடாது. புலால் உண்ண கூடாது. ஏழைகளின் பசி தவிர்த்தல் ஆகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல், சாதி, சமயம் முதலிய எவ்வித வேறுபாடும் கூடாது. எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கைகொள்ள வேண்டும் என்பன வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை ஆகும்.
‘உருவமாகியும், அருவமாகியும், அரு உருவமாகியும் கடவுள் ஒருவரே’ உள்ளார். கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது.
சன்மார்க்கத்தின் முடிவு சாதிப்பதற்காகவே, சகாதேவனே சன்மார்க்கி. உடம்பு 96 தத்துவங்களால் ஆனது. ஆன்ம தத்துவம் 24, வித்தியா தத்துவம் 7, சிவ (சுத்த)தத்துவம் 5, புறக்கருவிகள் 60 என்று வள்ளலார் கூறினார். 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார்.
வள்ளலாரின் வாழ்க்கை சரித்திரத்தை கைக்கொள்ளும் நாமும் அவரை போன்று இறைவனோடு ஒன்றி வாழ நம்மை அர்ப்பணிப்போம்.
ஜனவரி மாதம் 26-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
26-ம் தேதி செவ்வாய் கிழமை :
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - கேட்டை
27-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - மூலம்
28-ம் தேதி வியாழக்கிழமை :
* பௌர்ணமி
* தைப்பூசம்
* வடசாவித்திரி விரதம்
* சந்திராஷ்டமம்- பூராடம்
29-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* பிரதமை
* சந்திராஷ்டமம் - உத்திராடம்
30-ம் தேதி சனிக்கிழமை :
* கரிநாள்
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - திருவோணம்
31-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சங்கடஹரசதுர்த்தி
* இன்று சூரிய வழிபாடு நன்று
* சந்திராஷ்டமம் - அவிட்டம்
1-ம் தேதி திங்கள் கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - கேட்டை
27-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சந்திராஷ்டமம் - மூலம்
28-ம் தேதி வியாழக்கிழமை :
* பௌர்ணமி
* தைப்பூசம்
* வடசாவித்திரி விரதம்
* சந்திராஷ்டமம்- பூராடம்
29-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* பிரதமை
* சந்திராஷ்டமம் - உத்திராடம்
30-ம் தேதி சனிக்கிழமை :
* கரிநாள்
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - திருவோணம்
31-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சங்கடஹரசதுர்த்தி
* இன்று சூரிய வழிபாடு நன்று
* சந்திராஷ்டமம் - அவிட்டம்
1-ம் தேதி திங்கள் கிழமை :
* சுபமுகூர்த்தம்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரலாற்றிலேயே முதல்முறையாக கோவிலுக்குள் தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பக்குளத்தில் சாமி வலம்வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவையொட்டி காலையிலும், இரவிலுமாக தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி விதவிதமான வாகனங்களில் எழுந்தருளி நகர் வலம் வந்துபக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை கார்த்திகை தினத்தன்று நகரின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். இதேபோல ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவத்தன்று தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி தெப்ப மிதவை தேரில் அமர்ந்து காலையில் 3 முறையும், இரவில் மின்னொளியிலும் வலம்வருவது கண்கொள்ளா காட்சியாக அமையும்.
தெப்ப உற்சவத்தை தொடர்ந்து சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்ஹார லீலை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு முதல்முறையாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் நகர் வீதிகளில் சாமி புறப்பாடு, தேரோட்டம், தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளல் ஆகியவை தவிர்க்கப்பட்டது.
அதேசமயம் கடந்த 15-ந்தேதி தெப்பத்திருவிழாவிற்கு வழக்கம்போல கோவிலுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட கம்பத்தில் கொடியேற்றம் நடந்து தெப்பத் திருவிழா தொடங்கியது. கடந்த 10 நாட்களாக கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கண்கான பக்தர்கள் புடைசூழ, அரோகரா கோஷங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் தெப்பக்குளத்தில் நடந்த தெப்ப உற்சவம் இந்த ஆண்டு முதல்முறையாக உள்திருவிழாவாக நேற்று கோவிலுக்குள் நடந்தது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தில் வலம் வந்தார்.
தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளுவதற்கு வசதியாக தண்ணீர் நிரப்பப்படாத நிலை ஏற்பட்டது. மேலும் தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளச் செய்து தெப்ப உற்சவம் நடைபெறும் என்று பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறாததால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக துணை கமிஷனர் நியமிக்கப்படாத நிலைநீடித்து வருகிறது.
மதுரையில் உள்ள ஒரு கோவிலின் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நிர்வாகத்தை கவனித்து வருவதால் பணிச்சுமையால் திருவிழாக்களிலும், வளர்ச்சி பணிகளிலும் தனி கவனம் செலுத்தாத நிலையே இருந்து வருகிறது. இதனால் திட்டப் பணிகளும் திருவிழாக்களும் பக்தர்கள் எதிர்பார்த்தபடி நடக்காத நிலையே நீடித்து வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை கார்த்திகை தினத்தன்று நகரின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். இதேபோல ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவத்தன்று தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி தெப்ப மிதவை தேரில் அமர்ந்து காலையில் 3 முறையும், இரவில் மின்னொளியிலும் வலம்வருவது கண்கொள்ளா காட்சியாக அமையும்.
தெப்ப உற்சவத்தை தொடர்ந்து சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்ஹார லீலை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு முதல்முறையாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் நகர் வீதிகளில் சாமி புறப்பாடு, தேரோட்டம், தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளல் ஆகியவை தவிர்க்கப்பட்டது.
அதேசமயம் கடந்த 15-ந்தேதி தெப்பத்திருவிழாவிற்கு வழக்கம்போல கோவிலுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட கம்பத்தில் கொடியேற்றம் நடந்து தெப்பத் திருவிழா தொடங்கியது. கடந்த 10 நாட்களாக கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கண்கான பக்தர்கள் புடைசூழ, அரோகரா கோஷங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் தெப்பக்குளத்தில் நடந்த தெப்ப உற்சவம் இந்த ஆண்டு முதல்முறையாக உள்திருவிழாவாக நேற்று கோவிலுக்குள் நடந்தது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தில் வலம் வந்தார்.
தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளுவதற்கு வசதியாக தண்ணீர் நிரப்பப்படாத நிலை ஏற்பட்டது. மேலும் தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளச் செய்து தெப்ப உற்சவம் நடைபெறும் என்று பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறாததால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக துணை கமிஷனர் நியமிக்கப்படாத நிலைநீடித்து வருகிறது.
மதுரையில் உள்ள ஒரு கோவிலின் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நிர்வாகத்தை கவனித்து வருவதால் பணிச்சுமையால் திருவிழாக்களிலும், வளர்ச்சி பணிகளிலும் தனி கவனம் செலுத்தாத நிலையே இருந்து வருகிறது. இதனால் திட்டப் பணிகளும் திருவிழாக்களும் பக்தர்கள் எதிர்பார்த்தபடி நடக்காத நிலையே நீடித்து வருகிறது.
சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். இங்கு பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை பார்க்கலாம்.
"ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்."
"ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்.”
"ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்."
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்."
"ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்.”
"ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்."
வடலூர் ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நாளை மறுநாள்(புதன்கிழமை) தொடங்குகிறது.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை மறுநாள்(புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணமும், காலை 7.30 மணிக்கு தருமசாலையில் சன்மார்க்க கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேசமயத்தில் மருதூர், நற்கருங்குழி, மேட்டுக்குப்பம் வள்ளலார் சன்னதிகளிலும் கொடியேற்றப்படுகிறது. அதன்பிறகு காலை 10 மணியளவில் ஞானசபையில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 7 மணியளவில் தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிநடைபெறும்.
சிகர விழாவாக 28-ந்தேதி(வியாழக்கிழமை) தைப்பூச விழாவையொட்டி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் மறுநாள் 29-ந்தேதி காலை 5.30 மணி ஆக 6 காலம், 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
இதையடுத்து வருகிற 30-ந்தேதி மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறைதரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
கொரோனா வழிகாட்டுதலின்பேரில் தைப்பூச திருவிழாவையொட்டி சன்மார்க்க சங்கங்கள் சார்பில் நடைபெறும் சொற்பொழிவு, இசைநிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க ஏதுவாக இந்தாண்டு கடைகள், நடன நாட்டிய அரங்குகள், ராட்டினம் உள்ளிட்டவைகள் வைக்க தடைசெய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு ஞானசபை வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலையத்தின் செயல் அலுவலர் சரவணன் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.
சிகர விழாவாக 28-ந்தேதி(வியாழக்கிழமை) தைப்பூச விழாவையொட்டி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் மறுநாள் 29-ந்தேதி காலை 5.30 மணி ஆக 6 காலம், 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
இதையடுத்து வருகிற 30-ந்தேதி மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறைதரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
கொரோனா வழிகாட்டுதலின்பேரில் தைப்பூச திருவிழாவையொட்டி சன்மார்க்க சங்கங்கள் சார்பில் நடைபெறும் சொற்பொழிவு, இசைநிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க ஏதுவாக இந்தாண்டு கடைகள், நடன நாட்டிய அரங்குகள், ராட்டினம் உள்ளிட்டவைகள் வைக்க தடைசெய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு ஞானசபை வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலையத்தின் செயல் அலுவலர் சரவணன் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.
மனக்குழப்பத்தில் இருந்தும் மனோபயத்தில் இருந்து நம்மை விடுவித்து, நமக்கு மனோதைரியத்தைத் தந்தருள்வார் மனோகாரகன் சந்திர பகவான்!
நம்முடைய மனத்தை ஆட்டிவைப்பவனே சந்திரன். அதனால்தான் சந்திரனை மனோகாரகன் என்கிறார்கள். சந்திர பலம் சரியாக இருந்துவிட்டால் மனமானது சரியாக சிந்திக்கத் தொடங்கிவிடும். எண்ணம் சரியாக அமைந்துவிடும். மனதில் குழப்பமோ கவலையோ இல்லாமல் சந்திர பகவான் பார்த்துக்கொள்வான்.
தஞ்சை, கும்பகோணம் முதலான ஊர்களைச் சுற்றி நவக்கிரகத் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானுக்கு, தஞ்சையை அடுத்துள்ள திருக்கண்டியூருக்கு அருகில் திங்களூர் எனும் திருத்தலம் அமைந்திருக்கிறது. இந்தத் தலம் நவக்கிரக பரிகார திருத்தலங்களில், சந்திர பகவானுக்கு உரிய திருத்தலம் என்று போற்றப்படுகிறது.
திங்கட்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்வதும் தரிசித்துப் பிரார்த்தனை செய்வதும் விசேஷமானவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மேலும் சந்திர பகவானின் தியான ஸ்லோகத்தையும் சந்திர பகவானுக்கு உரிய காயத்ரியையும் சொல்லி மனதார பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், நம் மனதை செம்மையாக்குவார் சந்திர பகவான். மனதை அமைதிப்படுத்துவார். ஆற்றுப்படுத்துவார். நிம்மதியை நிலைக்கச் செய்வார்.
மனதை செம்மையாக்கி, சீர்படுத்தி, அமைதி நிலைக்குக் கொண்டு வரும் சந்திர பகவானை மனதார வேண்டுவோம். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள சந்திர பகவானை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். திங்கட்கிழமைகளில், நவக்கிரகத்தின் சந்திர பகவானை வேண்டுங்கள். எல்லா நலமும் வளமும் தந்தருளுவார் சந்திர பகவான்.
தஞ்சை, கும்பகோணம் முதலான ஊர்களைச் சுற்றி நவக்கிரகத் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானுக்கு, தஞ்சையை அடுத்துள்ள திருக்கண்டியூருக்கு அருகில் திங்களூர் எனும் திருத்தலம் அமைந்திருக்கிறது. இந்தத் தலம் நவக்கிரக பரிகார திருத்தலங்களில், சந்திர பகவானுக்கு உரிய திருத்தலம் என்று போற்றப்படுகிறது.
திங்கட்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்வதும் தரிசித்துப் பிரார்த்தனை செய்வதும் விசேஷமானவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மேலும் சந்திர பகவானின் தியான ஸ்லோகத்தையும் சந்திர பகவானுக்கு உரிய காயத்ரியையும் சொல்லி மனதார பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், நம் மனதை செம்மையாக்குவார் சந்திர பகவான். மனதை அமைதிப்படுத்துவார். ஆற்றுப்படுத்துவார். நிம்மதியை நிலைக்கச் செய்வார்.
மனதை செம்மையாக்கி, சீர்படுத்தி, அமைதி நிலைக்குக் கொண்டு வரும் சந்திர பகவானை மனதார வேண்டுவோம். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள சந்திர பகவானை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். திங்கட்கிழமைகளில், நவக்கிரகத்தின் சந்திர பகவானை வேண்டுங்கள். எல்லா நலமும் வளமும் தந்தருளுவார் சந்திர பகவான்.
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ந் திருநாளான நேற்று காலை அம்மன் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
மாலையில் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சமயபுரம் வந்திருந்தனர். அவர்களில் பலர் முடிக்காணிக்கை செலுத்தியும், கரும்புத்தொட்டிலில் குழந்தையை சுமந்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கோவில் முன்புறம் நெய்விளக்கு ஏற்றும் இடத்திலும் ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்குவதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் திருச்சி சத்திரம் பஸ் நிலையம், துறையூர் போன்ற பகுதிகளிலிருந்து வந்த அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை புதிய பஸ்நிலையம் வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
மாலையில் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சமயபுரம் வந்திருந்தனர். அவர்களில் பலர் முடிக்காணிக்கை செலுத்தியும், கரும்புத்தொட்டிலில் குழந்தையை சுமந்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கோவில் முன்புறம் நெய்விளக்கு ஏற்றும் இடத்திலும் ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்குவதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் திருச்சி சத்திரம் பஸ் நிலையம், துறையூர் போன்ற பகுதிகளிலிருந்து வந்த அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை புதிய பஸ்நிலையம் வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் விரதம் இருந்து மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும்.
பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் சேர்த்து வழிபடுவதில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது. மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும். திரயோதசி திதியின் மாலை நேரமான 4.30 மணி முதல் 6.30 மணி வரையான காலகட்டமே ‘பிரதோஷ காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில்தான் நாம் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இது நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவபெருமான் நடனம் ஆடிய கால நேரம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பிரதோஷத்தைப் பொறுத்தவரை, 20 வகையான பிரதோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் முக்கியமான 5 வகை பிரதோஷத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
தினசரி பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் பகலும், இரவும் சந்திக்கின்ற நேரத்தை ‘சந்தியா காலம்’ என்பார்கள். அந்த காலமானது மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இதனை ‘பிரதோஷ காலம்’ என்றும் சொல்வார்கள். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு நாளும் இந்த கால நேரத்தில் சிவனையும், நந்தியையும் வழிபாடு செய்யலாம். நித்தய பிரதோஷம் என்றும் அழைக்கப்படும் இந்த பிரதோஷ கால வழிபாட்டை, ஒருவர் தொடர்ந்து 5 வருடங்கள் செய்து வந்தால், அவருக்கு நிச்சயமாக முக்தி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.
பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வருவது ‘திரயோதசி’ திதி. இந்த வளர்பிறை திரயோதசி திதியே, ‘பட்சப் பிரதோஷம்’ ஆகும். பட்சப் பிரதோஷ தினத்தின் மாலை நேரத்தில், பட்சி லிங்க வழிபாடு (பறவையோடு சம்பந்தப்பட்ட லிங்கம் அமைந்த மயிலாப்பூர், மயிலாடுதுறை போன்ற திருக் கோவில்களில்) செய்வது சிறப்பான பலன்களை நமக்குப் பெற்றுத்தரும்.
மாதப் பிரதோஷம்: பவுர்ணமிக்குப் பிறகு வரும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் திரயோதசி திதியை ‘மாதப் பிரதோஷம்’ என்பார்கள். இந்த தேய்பிறை திரயோதசி திதியின் மாலை நேரத்தில்‘பாணலிங்க’ வழிபாடு (பல்வேறு லிங்க வகைகளில் பாண லிங்கம் ஒரு வகை) செய்வது உத்தமமான பலனை அள்ளித் தரும்.
நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ வழிபாடு வரும் திரயோததி திதி அன்று ஏதாவது ஒரு நட்சத்திரம் வரும். அப்படி வரும் நட்சத்திரத்திற்கு உரிய சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்வதையே, ‘நட்சத்திரப் பிரதோஷம்’ என்கிறார்கள்.
பூரண பிரதோஷம்: ஒரு சில நாட்கள் ஒரே நாளில் இரண்டு திதிகள், அதாவது காலையில் ஒரு திதி... அதன்பிறகு ஒரு திதி என்று வரும். அப்படி திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேர்ந்து வராமல், திரயோதசி திதி மட்டுமே இருக்கும் நாளில் வரும் பிரதோஷத்தை ‘பூரண பிரதோஷம்’ என்று சொல்வார்கள். இந்தப் பிரதோஷத்தின் போது, சுயம்பு லிங்கம் அமைந்த கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் பலன்கள் இருமடங்காகக் கிடைக்கும்.
தினசரி பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் பகலும், இரவும் சந்திக்கின்ற நேரத்தை ‘சந்தியா காலம்’ என்பார்கள். அந்த காலமானது மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இதனை ‘பிரதோஷ காலம்’ என்றும் சொல்வார்கள். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு நாளும் இந்த கால நேரத்தில் சிவனையும், நந்தியையும் வழிபாடு செய்யலாம். நித்தய பிரதோஷம் என்றும் அழைக்கப்படும் இந்த பிரதோஷ கால வழிபாட்டை, ஒருவர் தொடர்ந்து 5 வருடங்கள் செய்து வந்தால், அவருக்கு நிச்சயமாக முக்தி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.
பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வருவது ‘திரயோதசி’ திதி. இந்த வளர்பிறை திரயோதசி திதியே, ‘பட்சப் பிரதோஷம்’ ஆகும். பட்சப் பிரதோஷ தினத்தின் மாலை நேரத்தில், பட்சி லிங்க வழிபாடு (பறவையோடு சம்பந்தப்பட்ட லிங்கம் அமைந்த மயிலாப்பூர், மயிலாடுதுறை போன்ற திருக் கோவில்களில்) செய்வது சிறப்பான பலன்களை நமக்குப் பெற்றுத்தரும்.
மாதப் பிரதோஷம்: பவுர்ணமிக்குப் பிறகு வரும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் திரயோதசி திதியை ‘மாதப் பிரதோஷம்’ என்பார்கள். இந்த தேய்பிறை திரயோதசி திதியின் மாலை நேரத்தில்‘பாணலிங்க’ வழிபாடு (பல்வேறு லிங்க வகைகளில் பாண லிங்கம் ஒரு வகை) செய்வது உத்தமமான பலனை அள்ளித் தரும்.
நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ வழிபாடு வரும் திரயோததி திதி அன்று ஏதாவது ஒரு நட்சத்திரம் வரும். அப்படி வரும் நட்சத்திரத்திற்கு உரிய சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்வதையே, ‘நட்சத்திரப் பிரதோஷம்’ என்கிறார்கள்.
பூரண பிரதோஷம்: ஒரு சில நாட்கள் ஒரே நாளில் இரண்டு திதிகள், அதாவது காலையில் ஒரு திதி... அதன்பிறகு ஒரு திதி என்று வரும். அப்படி திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேர்ந்து வராமல், திரயோதசி திதி மட்டுமே இருக்கும் நாளில் வரும் பிரதோஷத்தை ‘பூரண பிரதோஷம்’ என்று சொல்வார்கள். இந்தப் பிரதோஷத்தின் போது, சுயம்பு லிங்கம் அமைந்த கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் பலன்கள் இருமடங்காகக் கிடைக்கும்.






