என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. ஆண்டு தோறும் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா சமாதி உள்ளது. ஆண்டு தோறும் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு விழா கொரோனா ஊரடங்கு காரணமாக மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா நேற்று இரவு தொடங்கியது.
முன்னதாக தர்கா அலங்காரவாசல் முன்பு தொட்டில் அமைக்கப்பட்டது. இதில் திரளானோர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.
கடந்த ஆண்டு விழா கொரோனா ஊரடங்கு காரணமாக மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா நேற்று இரவு தொடங்கியது.
முன்னதாக தர்கா அலங்காரவாசல் முன்பு தொட்டில் அமைக்கப்பட்டது. இதில் திரளானோர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. 5-ம் நாள் விழாவான நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் உற்சவர் சந்திரசேகரர் கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இதில் தட்சிணாய புண்ணிய கால உற்சவ விழாவும் ஒன்று. சூரியன் வடகிழக்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி செல்லும் மாத தொடக்கத்தில் இந்த திருவிழா நடைபெறும்.இதனை ஆனி பிரம்மோற்சவ விழா என்பார்கள்.
கடந்த 7-ம் தேதி அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னதிக்கு முன்புள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க ஆனி பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
5-ம் நாள் விழாவான நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் உற்சவர் சந்திரசேகரர் கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார். இதில் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தட்சிணாய புண்ணிய காலம் உற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்கள் தினமும் 5-ம் பிரகாரத்தில் காலை 9 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி -அம்மன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.
இதில் தட்சிணாய புண்ணிய கால உற்சவ விழாவும் ஒன்று. சூரியன் வடகிழக்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி செல்லும் மாத தொடக்கத்தில் இந்த திருவிழா நடைபெறும்.இதனை ஆனி பிரம்மோற்சவ விழா என்பார்கள்.
கடந்த 7-ம் தேதி அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னதிக்கு முன்புள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க ஆனி பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
5-ம் நாள் விழாவான நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் உற்சவர் சந்திரசேகரர் கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார். இதில் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தட்சிணாய புண்ணிய காலம் உற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்கள் தினமும் 5-ம் பிரகாரத்தில் காலை 9 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி -அம்மன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.
தேவாலயங்களின் நுழைவு வாசலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கோவை புலியகுளம் மற்றும் ஈச்சனாரி விநாயகர் கோவில், சித்தாபுதூர் அய்யப்பன் கோவில், மருதமலை முருகன் கோவில், காரமடை அரங்கநாதர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. அங்கு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் பள்ளி வாசல்களும் திறக்கப்பட்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர்.
அப்போது, காட்டூர் தேவாலயம் உள்பட ஒரு சில தேவாலயங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், டவுன்ஹால் புனித மைக்கேல் பேராலயம், நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், காந்திபுரம் புனித பாத்திமா ஆலயம், அவினாசி ரோடு இமானுவேல் சி.எஸ்.ஐ. ஆலயம், திருச்சி ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், ரேஸ்கோர்ஸ் ஆல்சோல்ஸ் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். அவர்கள், சமூக இடைவெளி விட்டு அமர்ந்தனர்.
முன்னதாக தேவாலயங்களின் நுழைவு வாசலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆலயத்துக்கு வந்தது மனநிம்மதி அளிப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.
அப்போது, காட்டூர் தேவாலயம் உள்பட ஒரு சில தேவாலயங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், டவுன்ஹால் புனித மைக்கேல் பேராலயம், நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், காந்திபுரம் புனித பாத்திமா ஆலயம், அவினாசி ரோடு இமானுவேல் சி.எஸ்.ஐ. ஆலயம், திருச்சி ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், ரேஸ்கோர்ஸ் ஆல்சோல்ஸ் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். அவர்கள், சமூக இடைவெளி விட்டு அமர்ந்தனர்.
முன்னதாக தேவாலயங்களின் நுழைவு வாசலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆலயத்துக்கு வந்தது மனநிம்மதி அளிப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.
நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தனர். அப்போது முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் சுமார் 2 மாதங்களாக மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதையொட்டி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த வாரம் முதல் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 5-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள வழிகாட்டுதல் படி, முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு 1,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் நலன் கருதி தரிசனத்துக்கு பாதை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக கோவிலுக்கு செல்லவும், படிப்பாதை வழியாக இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர 1-வது மின் இழுவை ரெயில் மூலமும் பக்தர்கள் தரிசனத்திற்காக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஆனால் ரோப்கார் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே ரோப்கார் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தனர். அப்போது முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் பழனி முருகன் கோவில் பகுதி மீண்டும் திருவிழா கோலம் பூண்டது. குறிப்பாக நேற்று பழனி மலை அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை கிழக்கு கிரிவீதி, மேற்கு கிரிவீதி அருகே உள்ள சுற்றுலா பஸ் நிலையங்களில் நிறுத்தினர். இதனால் அந்த பஸ் நிலையங்கள் சுற்றுலா வாகனங்களால் நிரம்பி காணப்பட்டது. மேலும் வாகனங்களின் வருகை அதிகம் இருந்ததால் பூங்கா ரோடு, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து போலீசார் ஒழுங்குப்படுத்தினர். இதேபோல் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 5-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள வழிகாட்டுதல் படி, முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு 1,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் நலன் கருதி தரிசனத்துக்கு பாதை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக கோவிலுக்கு செல்லவும், படிப்பாதை வழியாக இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர 1-வது மின் இழுவை ரெயில் மூலமும் பக்தர்கள் தரிசனத்திற்காக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஆனால் ரோப்கார் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே ரோப்கார் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தனர். அப்போது முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் பழனி முருகன் கோவில் பகுதி மீண்டும் திருவிழா கோலம் பூண்டது. குறிப்பாக நேற்று பழனி மலை அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை கிழக்கு கிரிவீதி, மேற்கு கிரிவீதி அருகே உள்ள சுற்றுலா பஸ் நிலையங்களில் நிறுத்தினர். இதனால் அந்த பஸ் நிலையங்கள் சுற்றுலா வாகனங்களால் நிரம்பி காணப்பட்டது. மேலும் வாகனங்களின் வருகை அதிகம் இருந்ததால் பூங்கா ரோடு, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து போலீசார் ஒழுங்குப்படுத்தினர். இதேபோல் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சந்திரனுக்குரிய மந்திரத்தை தினமும் 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும்.
‘பத்ம த்வாஜய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்’
இந்த சந்திரனுக்குரிய மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் வேளையில் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண் பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் 11 முறை ஜெபித்து வந்தாலும் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும்.
ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளித்தரும்.
ஹேம ரூபாய தீமஹி
ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்’
இந்த சந்திரனுக்குரிய மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் வேளையில் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண் பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் 11 முறை ஜெபித்து வந்தாலும் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும்.
ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளித்தரும்.
திருவெண்காடு குரவலூர் உக்கிர நரசிம்மர் பெருமாள் கோவிலில் சாமிக்கு பால், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவெண்காடு அருகே குரவலூரில் உக்கிர நரசிம்மர் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு பால், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர் நடராஜன், தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார், அர்ச்சகர் ராஜேந்திர பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல பொறையாறு அருகே அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் வந்த அமாவாசையையொட்டி, மூலவருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் ஜூன் மாதம் 23-ந் தேதியும், ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 2-ந் தேதியும் நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் ஜூன் மாதம் 23-ந் தேதியும், ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 2-ந் தேதியும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும் மற்றும் 10 வெள்ளிக்குடங்களில் புனித நீரை கோவில் பணியாளர்கள் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க வடக்குவாசல் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் புனிதநீர் மூலம் காலை 10 மணிக்கு சக்கரத்தாழ்வார் மற்றும் செங்கமலவல்லி தாயார் சன்னதிகளில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நெய்வேத்தியம் மாலை நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர்பெருமாள் கோவிலில் காலை 10 மணிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
சிங்கர்பெருமாள் கோவிலில் அழகிய சிங்கருக்கு அணிவிக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பழுது நீக்கி, சுத்தம் செய்யப்பட்டு, எடை சரிபார்க்கப்பட்டது. நேற்று முழுவதும் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லிதாயார், திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவில் சன்னதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும் மற்றும் 10 வெள்ளிக்குடங்களில் புனித நீரை கோவில் பணியாளர்கள் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க வடக்குவாசல் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் புனிதநீர் மூலம் காலை 10 மணிக்கு சக்கரத்தாழ்வார் மற்றும் செங்கமலவல்லி தாயார் சன்னதிகளில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நெய்வேத்தியம் மாலை நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர்பெருமாள் கோவிலில் காலை 10 மணிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
சிங்கர்பெருமாள் கோவிலில் அழகிய சிங்கருக்கு அணிவிக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பழுது நீக்கி, சுத்தம் செய்யப்பட்டு, எடை சரிபார்க்கப்பட்டது. நேற்று முழுவதும் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லிதாயார், திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவில் சன்னதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வழக்கமாக அமாவாசை நாட்களில் கோவில் நடை விடிய, விடிய திறந்து இருக்கும். இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளன. இதன் காரணமாக கோவில் நடை விடிய, விடிய திறக்கப்படவில்லை.
வழக்கம் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மற்றும் கிருமி நாசினி மருந்து கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாசாணியம்மனை தரிசனம் செய்தனர். அமாவாசையொட்டி பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவில் கடந்த 5-ந்தேதி திறக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் முகக்கவசம் உள்ளிட்ட அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களை வாங்குவதில்லை. இதற்காக தனியாக ஒரு பெரிய பாத்திரம் வைக்கப்பட்டு உள்ளது. அதில் பக்தர்கள் பொருட்களை போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
இதேபோன்று அமாவாசையையொட்டி பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன், கரியகாளியம்மன், பத்ரகாளியம்மன், மாகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கம் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மற்றும் கிருமி நாசினி மருந்து கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாசாணியம்மனை தரிசனம் செய்தனர். அமாவாசையொட்டி பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவில் கடந்த 5-ந்தேதி திறக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் முகக்கவசம் உள்ளிட்ட அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களை வாங்குவதில்லை. இதற்காக தனியாக ஒரு பெரிய பாத்திரம் வைக்கப்பட்டு உள்ளது. அதில் பக்தர்கள் பொருட்களை போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
இதேபோன்று அமாவாசையையொட்டி பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன், கரியகாளியம்மன், பத்ரகாளியம்மன், மாகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஆனி மாத அமாவாசையையொட்டி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
கொரோனா 2-வது அலை காரணமாக தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இதையடுத்து தொற்று பரவல் குறைந்து வந்ததை கருத்தில் கொண்டு படிபடியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சேலம் மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு அமாவாசையின் போதும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஆனி மாத அமாவாசையையொட்டி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள், நுழைவு வாயிலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து திரும்பி சென்றனர்.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு அமாவாசையின் போதும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஆனி மாத அமாவாசையையொட்டி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள், நுழைவு வாயிலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து திரும்பி சென்றனர்.
கும்பகோணத்தில் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. அப்படிப்பட்ட சில ஆலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. அப்படிப்பட்ட சில ஆலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.
மன நோய் அகல..
சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்து வழிபட்ட சிவலிங்கம் இருக்கும் திருத்தலம், திருவிடைமருதூர். இத்தல இறைவன் மகாலிங்கம் என்று அைழக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, மன நோய் அகலும். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டால் அதற்கான தீர்வு கிடைக்கும். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, இத் திருத்தலம்.
புற்றுநோய் தீர
கும்பகோணம் அருகே உள்ளது திருந்துதேவன்குடி. இங்கு கற்கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது இந்திரனால் வழிபடப்பட்ட ஆலயம் ஆகும். இத்தல இறைவியின் திருநாமம் ‘அருமருந்து அம்மை’ என்பதாகும். இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான நிவாரணி. அதிலும் குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக இது கருதப்படுகிறது.
கடன் தொல்லை நீங்க..
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சேறை. இங்கு ‘ரிண விமோச்சனர்’ என்ற நாமத்துடன் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால், அனைத்து விதமான கடன் தொல்லைகளும் நீங்கிவிடும். இறைவனை வழிபடுவதோடு, இத்தல மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைர வரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.
வழக்குகளில் இருந்து விடுபட..
திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரரை வணங்கி வருவது சிறப்பான ஒன்று. இவர் அனைத்து சங்கடங்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டவர். இந்த இறைவன், சூலினி- பிரத்தியங்கரா என தன் இரண்டு தேவியர்களுடன் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். சரபரை 11 விளக்கேற்றி, 11 முறை சுற்றி வந்து, தொடர்ச்சியாக 11 வாரங்கள் வழிபாடு செய்தால் வழக்குகள் சாதகமாகும். சுகமான வாழ்வு அமையும்.
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர..
கும்பகோணத்தை அடுத்துள்ளது ஸ்ரீவாஞ்சியம். காசிக்கு சென்றால் பாவமும் வளரும், புண்ணியமும் வளரும். ஆனால் இந்த ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும். அவ்வளவு சிறப்புக்குரியது இந்தத் திருத்தலம். இந்த ஆலயத்தில் ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரு கிறார்கள். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனிகளுக்கான பரிகாரத் தலமாகவும் இது திகழ்கிறது. இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்யதால் நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு- கேதுவை வழிபட்டு வந்தால், கால சர்ப்ப தோஷம் நீங்கும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும் என்கிறார்கள். இத்தல தீர்த்தமான குப்த கங்கையில் நீராடி, இறைவனையும், இறைவியையும், மகாலட்சுமியையும் வணங்கி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள் என்பது ஐதீகம்.
மன நோய் அகல..
சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்து வழிபட்ட சிவலிங்கம் இருக்கும் திருத்தலம், திருவிடைமருதூர். இத்தல இறைவன் மகாலிங்கம் என்று அைழக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, மன நோய் அகலும். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டால் அதற்கான தீர்வு கிடைக்கும். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, இத் திருத்தலம்.
புற்றுநோய் தீர
கும்பகோணம் அருகே உள்ளது திருந்துதேவன்குடி. இங்கு கற்கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது இந்திரனால் வழிபடப்பட்ட ஆலயம் ஆகும். இத்தல இறைவியின் திருநாமம் ‘அருமருந்து அம்மை’ என்பதாகும். இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான நிவாரணி. அதிலும் குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக இது கருதப்படுகிறது.
கடன் தொல்லை நீங்க..
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சேறை. இங்கு ‘ரிண விமோச்சனர்’ என்ற நாமத்துடன் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால், அனைத்து விதமான கடன் தொல்லைகளும் நீங்கிவிடும். இறைவனை வழிபடுவதோடு, இத்தல மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைர வரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.
வழக்குகளில் இருந்து விடுபட..
திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரரை வணங்கி வருவது சிறப்பான ஒன்று. இவர் அனைத்து சங்கடங்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டவர். இந்த இறைவன், சூலினி- பிரத்தியங்கரா என தன் இரண்டு தேவியர்களுடன் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். சரபரை 11 விளக்கேற்றி, 11 முறை சுற்றி வந்து, தொடர்ச்சியாக 11 வாரங்கள் வழிபாடு செய்தால் வழக்குகள் சாதகமாகும். சுகமான வாழ்வு அமையும்.
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர..
கும்பகோணத்தை அடுத்துள்ளது ஸ்ரீவாஞ்சியம். காசிக்கு சென்றால் பாவமும் வளரும், புண்ணியமும் வளரும். ஆனால் இந்த ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும். அவ்வளவு சிறப்புக்குரியது இந்தத் திருத்தலம். இந்த ஆலயத்தில் ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரு கிறார்கள். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனிகளுக்கான பரிகாரத் தலமாகவும் இது திகழ்கிறது. இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்யதால் நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு- கேதுவை வழிபட்டு வந்தால், கால சர்ப்ப தோஷம் நீங்கும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும் என்கிறார்கள். இத்தல தீர்த்தமான குப்த கங்கையில் நீராடி, இறைவனையும், இறைவியையும், மகாலட்சுமியையும் வணங்கி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள் என்பது ஐதீகம்.
கூனஞ்சேரியில், பார்வதி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் வெளிப்பிரகாரத்தில் அஷ்டவக்கிரர் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்து அமைந்துள்ளது சுவாமிமலை திருத்தலம். இங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கூனஞ்சேரி திருத்தலம். இது மிகவும் சிறப்பு மிக்க சிவாலயத் தலமாகும். திவ்ய தேசங்களான புள்ளபூதங்குடி மற்றும் ஆதனூர் ஆகிய இரண்டு வைணவத் தலங்களுக்கு இடையே இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. கூனஞ்சேரியில், பார்வதி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.
உடல் ஊனமுற்றவர்கள், வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தால், அங்க குறைபாடுகள் நீங்குவதாக நம்பிக்கை. தொடர்ந்து 11 அஷ்டமி தினங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் அஷ்டமியன்று, கோவிலில் உள்ள விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 2-வது அஷ்டமி அன்று, கயிலாசநாதரையும், 3-வது அஷ்டமி முதல் தொடர்ந்து எட்டு அஷ்டமிகள் அஷ்ட லிங்கங்களையும், இறுதியாக 11 அஷ்டமி அன்று பார்வதி தேவியையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக அங்க குறைபாடுகள் நீங்கும் என்கிறார்கள்.
உடல் ஊனமுற்றவர்கள், வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தால், அங்க குறைபாடுகள் நீங்குவதாக நம்பிக்கை. தொடர்ந்து 11 அஷ்டமி தினங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் அஷ்டமியன்று, கோவிலில் உள்ள விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 2-வது அஷ்டமி அன்று, கயிலாசநாதரையும், 3-வது அஷ்டமி முதல் தொடர்ந்து எட்டு அஷ்டமிகள் அஷ்ட லிங்கங்களையும், இறுதியாக 11 அஷ்டமி அன்று பார்வதி தேவியையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக அங்க குறைபாடுகள் நீங்கும் என்கிறார்கள்.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த 5-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோவில் உள்ளது. 2-ம் கட்ட கொரோனா பரவல் காரணமாக இந்த கோவில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியவில்லை.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த 5-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலை திறக்க வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.
இந்தநிலையில் கோவிலை திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் யோகேஸ் சிங், களக்காடு துணை இயக்குனர் அன்பு ஆகியோர் உத்தரவின் பேரில் 2½ மாதங்களுக்கு பிறகு நேற்று கோவில் திறக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்குள்ள சோதனைச்சாவடியில் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லவோ, ஆற்றில் குளிக்கவோ அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். கோவில் திறக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த 5-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலை திறக்க வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.
இந்தநிலையில் கோவிலை திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் யோகேஸ் சிங், களக்காடு துணை இயக்குனர் அன்பு ஆகியோர் உத்தரவின் பேரில் 2½ மாதங்களுக்கு பிறகு நேற்று கோவில் திறக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்குள்ள சோதனைச்சாவடியில் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லவோ, ஆற்றில் குளிக்கவோ அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். கோவில் திறக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






