என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்11 July 2021 2:56 AM GMT (Updated: 11 July 2021 2:56 AM GMT)
திருவெண்காடு குரவலூர் உக்கிர நரசிம்மர் பெருமாள் கோவிலில் சாமிக்கு பால், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவெண்காடு அருகே குரவலூரில் உக்கிர நரசிம்மர் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு பால், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர் நடராஜன், தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார், அர்ச்சகர் ராஜேந்திர பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல பொறையாறு அருகே அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் வந்த அமாவாசையையொட்டி, மூலவருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X