என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலின் உள்ளேயே நடைபெற்று வருகின்றன.
ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலின் உள்ளேயே நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் திருவிழாவின் 11-வது நாளான நேற்று சாமி- அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் 3-ம் பிரகாரத்தின் மையப்பகுதியில் எழுந்தருளினார். தொடர்ந்து ராமநாதசாமி பிரியாவிடையுடன் தங்க ரிஷப வாகனத்தில் 3-ம் காலத்திற்கு எழுந்தருளினார்.
பின்னர் சாமியை அம்பாள் 3 முறை சுற்றி வரவே சாமி கழுத்திலிருந்து அம்பாள் கழுத்திலும், அம்பாள் கழுத்திலிருந்து சாமி கழுத்திலும் மூன்று முறை மாலை மாற்றப்பட்டு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு 7 முதல் 8 மணிக்குள் கோவிலின் தெற்கு கோபுர வளாகப் பகுதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காணவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி அன்று சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு அதாவது கந்தமாதன பர்வதம் மண்டகப்படி செல்லும் நிகழ்ச்சியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராம தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டபத்தில் வைத்து வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் 2-வது ஆண்டாக மாலை மாற்றும் நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருவிழாவின் 11-வது நாளான நேற்று சாமி- அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் 3-ம் பிரகாரத்தின் மையப்பகுதியில் எழுந்தருளினார். தொடர்ந்து ராமநாதசாமி பிரியாவிடையுடன் தங்க ரிஷப வாகனத்தில் 3-ம் காலத்திற்கு எழுந்தருளினார்.
பின்னர் சாமியை அம்பாள் 3 முறை சுற்றி வரவே சாமி கழுத்திலிருந்து அம்பாள் கழுத்திலும், அம்பாள் கழுத்திலிருந்து சாமி கழுத்திலும் மூன்று முறை மாலை மாற்றப்பட்டு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு 7 முதல் 8 மணிக்குள் கோவிலின் தெற்கு கோபுர வளாகப் பகுதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காணவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி அன்று சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு அதாவது கந்தமாதன பர்வதம் மண்டகப்படி செல்லும் நிகழ்ச்சியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராம தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டபத்தில் வைத்து வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் 2-வது ஆண்டாக மாலை மாற்றும் நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் லக்னம் 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் உண்டாகிறது.
ஜாதகத்தில் சில கிரகங்களின் நிலை சரியில்லாமல் இருப்பதாலும், நாம் செய்யும் சில செயல்களின் வினைகளாலும் நமக்கு தோஷங்கள் ஏற்படுகின்றது. அப்படியான ஒரு தோஷம் தான் நாக தோஷம். ஒருவருக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் நாக தோஷத்திற்கான காரணங்களையும், அதற்கான பரிகாரங்களையும் இங்கு பார்ப்போம்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் லக்னம் 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் உண்டாகிறது. மேலும் பாம்பு புற்றுகளை இடிப்பதாலும், நாக பாம்புகளை கொல்வதாலும் நாக தோஷம் உண்டாகிறது. இந்த தோஷத்தால் திருமண தாமதம், கணவன் மனைவி பிரிதல், குழந்தை பாக்கியம் இல்லாதிருத்தல், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில் வியாபாரங்களில் நஷ்டம், திடீர் விபத்துகள் போன்ற துர்பலன்கள் ஏற்படக்கூடும்.
இந்த நாக தோஷம் கொண்ட நபர்கள். தினந்தோறும் காலையில் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு வருவது நல்லது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வள்ளி, தெய்வானை உடன் இருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட்டு வருவது நாக தோஷத்தின் கடுமைத்தன்மையை குறைக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்மரை வழிபட்டு வருவதும் சிறந்தது. பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று புற்றில் பாலூற்றி வழிபட்டு, அக்கோவிலிலிருக்கும் ராகு-கேது விக்கிரகங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டு வருவதும் நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.
வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரத்தில் கோமேதக ரத்தினத்தை பதித்து வலது கையின் நடுவிரலில் அணிந்து கொள்வதால் நாக தோஷம் கொண்டவர்களுக்கு தீய தோஷம் ஏற்படாமல் தடுக்கும். அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு பருப்பு வகையை தானமாக நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் ஆகும்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் லக்னம் 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் உண்டாகிறது. மேலும் பாம்பு புற்றுகளை இடிப்பதாலும், நாக பாம்புகளை கொல்வதாலும் நாக தோஷம் உண்டாகிறது. இந்த தோஷத்தால் திருமண தாமதம், கணவன் மனைவி பிரிதல், குழந்தை பாக்கியம் இல்லாதிருத்தல், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில் வியாபாரங்களில் நஷ்டம், திடீர் விபத்துகள் போன்ற துர்பலன்கள் ஏற்படக்கூடும்.
இந்த நாக தோஷம் கொண்ட நபர்கள். தினந்தோறும் காலையில் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு வருவது நல்லது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வள்ளி, தெய்வானை உடன் இருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட்டு வருவது நாக தோஷத்தின் கடுமைத்தன்மையை குறைக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்மரை வழிபட்டு வருவதும் சிறந்தது. பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று புற்றில் பாலூற்றி வழிபட்டு, அக்கோவிலிலிருக்கும் ராகு-கேது விக்கிரகங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டு வருவதும் நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.
வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரத்தில் கோமேதக ரத்தினத்தை பதித்து வலது கையின் நடுவிரலில் அணிந்து கொள்வதால் நாக தோஷம் கொண்டவர்களுக்கு தீய தோஷம் ஏற்படாமல் தடுக்கும். அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு பருப்பு வகையை தானமாக நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் ஆகும்.
ஆடிப்பூரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் வெளிநாட்டினர் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரத்தையொட்டி பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் ஆடிப்பூரம் தொடங்கியதால் பெரியகோவிலில் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு கோவில்களில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை பெரியகோவில் காலை முதலே மூடப்பட்டது. வழக்கம் போல 4 கால பூஜை பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கோவில் மூடப்பட்டது தெரியாமல் வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ரகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் வெளிநாட்டினர் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரத்தையொட்டி பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் ஆடிப்பூரம் தொடங்கியதால் பெரியகோவிலில் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு கோவில்களில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை பெரியகோவில் காலை முதலே மூடப்பட்டது. வழக்கம் போல 4 கால பூஜை பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கோவில் மூடப்பட்டது தெரியாமல் வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ரகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பஞ்சமியை ‘கருட பஞ்சமி’ என்று அழைப்பார்கள். இந்த நாளில் கருடாழ்வாரை தரிசனம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும்.
ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பஞ்சமியை ‘கருட பஞ்சமி’ என்று அழைப்பார்கள். இந்த நாளில் கருடாழ்வாரை தரிசனம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும். காசியப முனிவருக்கும் விநதைக்கும் பிறந்தவர் கருடன். கருடன் பிறந்தபோது, அவரது தாய் விநதை, தன்னுடைய சகோதரியான கத்ரு என்பவளிடம் அடிமையாக இருந்தாள்.
தன் தாயை விடுதலை செய்யும்படி கத்ருவிடம் கருடன் கேட்டார். அதற்கு அவள், “என்னுடைய பாம்பு குழந்தைகளுக்கு இந்திரனின் வசம் உள்ள அமிர்தத்தைக் கொண்டு வந்து கொடுத்தால், விநதையை விடுதலை செய்கிறேன்” என்று நிபந்தனை விதித்தாள்.
தாயைக் காப்பதற்காக தன்னுடைய பெரிய சிறகுகளை அடித்துக் கொண்டு இந்திரலோகம் சென்றார் கருடன். அவர் அமிர்தத்தை தேடி வந்திருப்பதை அறிந்த தேவர்கள், கருடனுடன் போரிட்டனர். ஆனால் கருடனை யாராலும் வெல்ல முடியவில்லை. இந்திரனும் கூட கருடனை வெற்றிகொள்ள முடியவில்லை. இருப்பினும் இந்திரன் கையில் இருந்த வஜ்ராயுதத்திற்கு மதிப்பளித்த கருடன் தன்னுடைய சிறகில் இருந்து ஒரு இறகை மட்டும் உதிர்த்து விட்டு அமிர்தத்துடன் பூலோகம் சென்றார்.
இப்படி பராக்கிரமம் புரிந்து தன்னுடைய தாயை அடிமைச் சங்கிலியில் இருந்து விடுவித்தவர், கருடன். அவர் மகாவிஷ்ணுவின் சேவையே தனது பாக்கியம் என்று கருதியவர். அதனால்தான் அவரை தன்னுடைய வாகனமாகவும், கொடியாகவும் மாற்றிக்கொண்டார் மகாவிஷ்ணு. பெருமாள் கோவில் கொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் கருடாழ்வாரை தரிசிக்க முடியும். கோவில் விழாக்களில், கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வதை ‘கருட சேவை’ என்பார்கள்.
திருமால் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடலில், நாராயணருக்கு அருகில் இருந்து எப்போதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்களை ‘நித்ய சூரிகள்’ என்று அழைப்பார்கள். அதில் முக்கியமானவர், கருடன். பறவைகளின் அரசன் என்று கருதப்படும் கருடாழ்வார், விஷக்கடிகளை தீர்க்கும் வல்லமை படைத்தவர்.
தன் தாயை விடுதலை செய்யும்படி கத்ருவிடம் கருடன் கேட்டார். அதற்கு அவள், “என்னுடைய பாம்பு குழந்தைகளுக்கு இந்திரனின் வசம் உள்ள அமிர்தத்தைக் கொண்டு வந்து கொடுத்தால், விநதையை விடுதலை செய்கிறேன்” என்று நிபந்தனை விதித்தாள்.
தாயைக் காப்பதற்காக தன்னுடைய பெரிய சிறகுகளை அடித்துக் கொண்டு இந்திரலோகம் சென்றார் கருடன். அவர் அமிர்தத்தை தேடி வந்திருப்பதை அறிந்த தேவர்கள், கருடனுடன் போரிட்டனர். ஆனால் கருடனை யாராலும் வெல்ல முடியவில்லை. இந்திரனும் கூட கருடனை வெற்றிகொள்ள முடியவில்லை. இருப்பினும் இந்திரன் கையில் இருந்த வஜ்ராயுதத்திற்கு மதிப்பளித்த கருடன் தன்னுடைய சிறகில் இருந்து ஒரு இறகை மட்டும் உதிர்த்து விட்டு அமிர்தத்துடன் பூலோகம் சென்றார்.
இப்படி பராக்கிரமம் புரிந்து தன்னுடைய தாயை அடிமைச் சங்கிலியில் இருந்து விடுவித்தவர், கருடன். அவர் மகாவிஷ்ணுவின் சேவையே தனது பாக்கியம் என்று கருதியவர். அதனால்தான் அவரை தன்னுடைய வாகனமாகவும், கொடியாகவும் மாற்றிக்கொண்டார் மகாவிஷ்ணு. பெருமாள் கோவில் கொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் கருடாழ்வாரை தரிசிக்க முடியும். கோவில் விழாக்களில், கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வதை ‘கருட சேவை’ என்பார்கள்.
திருமால் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடலில், நாராயணருக்கு அருகில் இருந்து எப்போதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்களை ‘நித்ய சூரிகள்’ என்று அழைப்பார்கள். அதில் முக்கியமானவர், கருடன். பறவைகளின் அரசன் என்று கருதப்படும் கருடாழ்வார், விஷக்கடிகளை தீர்க்கும் வல்லமை படைத்தவர்.
கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டால் பெரும் திரளான பொதுமக்கள் கூடுவதுடன் 13-ந் தேதியன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் தங்கி விடக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே 12-ந் தேதி முதல் 15-ந் தேதி முடிய பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கோவில்களில் மேற்படி நாட்களில் தினசரி பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வழக்கம்போல் நடைபெறும். ஆடி கடைசி வெள்ளி திருவிழாவன்று உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தவும் பொதுமக்கள் வசதிக்காக மேற்படி நிகழ்வினை முழுவதும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டால் பெரும் திரளான பொதுமக்கள் கூடுவதுடன் 13-ந் தேதியன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் தங்கி விடக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே 12-ந் தேதி முதல் 15-ந் தேதி முடிய பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கோவில்களில் மேற்படி நாட்களில் தினசரி பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வழக்கம்போல் நடைபெறும். ஆடி கடைசி வெள்ளி திருவிழாவன்று உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தவும் பொதுமக்கள் வசதிக்காக மேற்படி நிகழ்வினை முழுவதும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை டவுன் மேலமாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்கபெருமாள் கோவிலில் ஆண்டாள் தாயாருக்கு ஆண்டு தோறும் ஆடிப்பூர மஹோத்சவம் நடைபெறும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெல்லை டவுன் நெல்லையப்பர், பாபநாசம் பாபவிநாச நாதர், காரையாறு சொரிமுத்து அய்யனார் ஆகிய கோவில்களில் ஆடிப்பூரம் மற்றும் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் கடந்த 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் இந்த கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாபநாசம், காரையாறு கோவில்களில் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் நெல்லையப்பர் கோவிலில் நேற்று முன்தினம் ஆடிப்பூர விழாவின் சிகர நிகழ்ச்சியான அம்பாளுக்கு முளைகட்டு வைபவம் நடைபெற்றது. இதில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் நேற்று முன்தினமும் கூடுதலாக ஒரு நாள் நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்த தடை முடிவடைந்து 10 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையாக நின்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாளை தரிசனம் செய்தனர்.
இதேபோல் நெல்லை டவுன் மேலமாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்கபெருமாள் கோவிலில் ஆண்டாள் தாயாருக்கு ஆண்டு தோறும் ஆடிப்பூர மஹோத்சவம் நடைபெறும். இந்த ஆண்டு நேற்று காலை ஆடிப்பூர மஹோத்சவ பூஜை நடைபெற்றது.
பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது. ஆண்டாளுக்கு 1,008 வளையல் அலங்காரம் மற்றும் அனைத்து வகை கனிகள் வைத்து சிறப்பு பூஜை, திருவாராதனம் சாத்துமுறை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இருந்த போதிலும் இந்த கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாபநாசம், காரையாறு கோவில்களில் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் நெல்லையப்பர் கோவிலில் நேற்று முன்தினம் ஆடிப்பூர விழாவின் சிகர நிகழ்ச்சியான அம்பாளுக்கு முளைகட்டு வைபவம் நடைபெற்றது. இதில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் நேற்று முன்தினமும் கூடுதலாக ஒரு நாள் நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்த தடை முடிவடைந்து 10 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையாக நின்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாளை தரிசனம் செய்தனர்.
இதேபோல் நெல்லை டவுன் மேலமாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்கபெருமாள் கோவிலில் ஆண்டாள் தாயாருக்கு ஆண்டு தோறும் ஆடிப்பூர மஹோத்சவம் நடைபெறும். இந்த ஆண்டு நேற்று காலை ஆடிப்பூர மஹோத்சவ பூஜை நடைபெற்றது.
பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது. ஆண்டாளுக்கு 1,008 வளையல் அலங்காரம் மற்றும் அனைத்து வகை கனிகள் வைத்து சிறப்பு பூஜை, திருவாராதனம் சாத்துமுறை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் அங்காளம்மன் புற்றில் சுயம்புவாக காட்சி தருவதாக அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்துள்ள கருக்கை கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சேகர் என்பவரது விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் சில மாதங்களாக மண் புற்று வளர்வதும், ஆடு, மாடுகள் மேயும்போது புற்று உடைந்து சிதிலமடைந்தும் வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேகரின் அண்ணன் மனைவி அந்த விவசாய நிலத்தில் மாடு மேய்த்தபோது, எதிர்பாராதவிதமாக மாடு முட்டியதில் அவர் மயக்கமடைந்தார். அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்க முயன்றபோது, அருகில் மண் புற்று இருந்ததை கண்டனர். அதனை உற்று பார்த்தபோது அதில் அம்மன் முக அமைப்பு போன்ற உருவம் இருந்தது. இதனால் பரவசம் அடைந்த அவர்கள், இது குறித்து சேகரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அங்கு வந்த சேகர் புற்று அமைந்திருந்த இடத்தை சுத்தம் செய்து கொட்டகை அமைத்து அம்மன் உருவில் உள்ள புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து அருகில் உள்ள வேப்ப மரத்திற்கும் பூ, வளையல் வைத்து, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து பாவாடை சாத்தி வழிபட்டனர். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் அங்காளம்மன் புற்றில் சுயம்புவாக காட்சி தருவதாக அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். இந்த தகவல் அக்கம், பக்கத்தில் உள்ள கிராம மக்களுக்கு காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் வந்து, அம்மன் உருவம் உள்ள புற்றை பார்த்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேகரின் அண்ணன் மனைவி அந்த விவசாய நிலத்தில் மாடு மேய்த்தபோது, எதிர்பாராதவிதமாக மாடு முட்டியதில் அவர் மயக்கமடைந்தார். அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்க முயன்றபோது, அருகில் மண் புற்று இருந்ததை கண்டனர். அதனை உற்று பார்த்தபோது அதில் அம்மன் முக அமைப்பு போன்ற உருவம் இருந்தது. இதனால் பரவசம் அடைந்த அவர்கள், இது குறித்து சேகரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அங்கு வந்த சேகர் புற்று அமைந்திருந்த இடத்தை சுத்தம் செய்து கொட்டகை அமைத்து அம்மன் உருவில் உள்ள புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து அருகில் உள்ள வேப்ப மரத்திற்கும் பூ, வளையல் வைத்து, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து பாவாடை சாத்தி வழிபட்டனர். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் அங்காளம்மன் புற்றில் சுயம்புவாக காட்சி தருவதாக அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். இந்த தகவல் அக்கம், பக்கத்தில் உள்ள கிராம மக்களுக்கு காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் வந்து, அம்மன் உருவம் உள்ள புற்றை பார்த்து வழிபட்டு செல்கின்றனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணியளவில் கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம் தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு 2 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜையில் பூசாரிகள் மட்டும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அதைத்தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு 2 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜையில் பூசாரிகள் மட்டும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன், பிரத்யங்கிரா தேவி கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சென்னை :
ஆடிப்பூரத்தையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கற்பகம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், வளையல் சாற்றுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் நிகழ்ச்சிகள் ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது.
அதேபோல், கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன், பிரத்யங்கிரா தேவி கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. உற்சவர் அம்மன் கருவுற்றிருப்பதாக கருதி பெண் பக்தர்கள் அம்மனுக்கு 1,008 சீமந்த நலுங்கு செய்தனர்.
கொரோனா பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியை பின்பற்றி காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை மட்டும் விழா நடந்தது. தொடர்ந்து இரவு வரை பக்தர்களுக்கு சீமந்த சாப்பாடு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடிப்பூர விழாவில் கலந்து கொண்டு நலுங்கு செய்து சாப்பிட்டு சென்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் பெண் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொண்டு நலுங்கு செய்தனர். பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக பொம்மை வழங்கப்பட்டது.
ஆடிப்பூரத்தையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கற்பகம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், வளையல் சாற்றுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் நிகழ்ச்சிகள் ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது.
அதேபோல், கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன், பிரத்யங்கிரா தேவி கோவிலில் அம்மனுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. உற்சவர் அம்மன் கருவுற்றிருப்பதாக கருதி பெண் பக்தர்கள் அம்மனுக்கு 1,008 சீமந்த நலுங்கு செய்தனர்.
கொரோனா பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியை பின்பற்றி காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை மட்டும் விழா நடந்தது. தொடர்ந்து இரவு வரை பக்தர்களுக்கு சீமந்த சாப்பாடு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடிப்பூர விழாவில் கலந்து கொண்டு நலுங்கு செய்து சாப்பிட்டு சென்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் பெண் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொண்டு நலுங்கு செய்தனர். பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக பொம்மை வழங்கப்பட்டது.
புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.
ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன.
பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர். கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின. அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.
புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன் நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.
ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப் பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அதுவே நாகசதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி.
தங்கள் விருப்பம் போல் நாகசதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.
விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.
பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர். கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின. அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.
புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன் நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.
ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப் பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அதுவே நாகசதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி.
தங்கள் விருப்பம் போல் நாகசதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.
விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு துவராபதி கண்ணன் அலங்காரமும், உற்சவருக்கு சோலைமலைப்பெருமான் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
ஆடிப்பூர உற்சவத்தின் 3-வது நாளான 4-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல்நாதன் அலங்காரமும், உற்சவருக்கு கண்ணன் ஆண்டாளின் சிற்றில் சிதைத்தல் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான 5-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு பரமஸ்வாமி அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 8-ம் நாளான 9-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு ராஜகோபாலன் அலங்காரமும், உற்சவருக்கு ஸ்ரீ ராமர்-அகல்யா சாப விமோசனம் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
9-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு துவராபதி கண்ணன் அலங்காரமும், உற்சவருக்கு சோலைமலைப்பெருமான் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியை இணையதளத்தில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
ஆடிப்பூர உற்சவத்தின் 3-வது நாளான 4-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல்நாதன் அலங்காரமும், உற்சவருக்கு கண்ணன் ஆண்டாளின் சிற்றில் சிதைத்தல் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான 5-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு பரமஸ்வாமி அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 8-ம் நாளான 9-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு ராஜகோபாலன் அலங்காரமும், உற்சவருக்கு ஸ்ரீ ராமர்-அகல்யா சாப விமோசனம் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
9-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு துவராபதி கண்ணன் அலங்காரமும், உற்சவருக்கு சோலைமலைப்பெருமான் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியை இணையதளத்தில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆண்டும் ஊரடங்கு அமலில் இருப்பதால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடந்தது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் ஐப்பசி பூர விழாவும், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஐப்பசி பூர விழா மற்றும் ஆடிப்பூர விழா உள் திருவிழாவாக நடந்தது. இதனால் அம்மன் வீதி உலா நடைபெற வில்லை. கோவிலுக்குள் அம்மன் வலம் வந்தார்.
இந்த நிலையில் இந்த ஆண்டும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆடிப்பூர விழா நேற்று கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடந்தது. இதையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகைக்கு சகல அபிஷேகமும், சர்வ அலங்காரமும் நடந்தது. மேலும் அம்பாளுக்கு தீப, தூப, ஆராதனை நடந்தது.
பூஜையைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கோவர்த்தனாம்பிகை எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் இந்த ஆண்டும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆடிப்பூர விழா நேற்று கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடந்தது. இதையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகைக்கு சகல அபிஷேகமும், சர்வ அலங்காரமும் நடந்தது. மேலும் அம்பாளுக்கு தீப, தூப, ஆராதனை நடந்தது.
பூஜையைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கோவர்த்தனாம்பிகை எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






