மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
மேல்மலையனூர் அங்காளம்மன் 2லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி அளித்தபோது எடுத்த படம்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணியளவில் கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம் தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு 2 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜையில் பூசாரிகள் மட்டும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.