என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பரங்குன்றம் கோவிலில் உள் திருவிழாவாக நடந்த ஆடிப்பூர விழா
Byமாலை மலர்11 Aug 2021 8:32 AM GMT (Updated: 11 Aug 2021 8:32 AM GMT)
இந்த ஆண்டும் ஊரடங்கு அமலில் இருப்பதால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடந்தது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் ஐப்பசி பூர விழாவும், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஐப்பசி பூர விழா மற்றும் ஆடிப்பூர விழா உள் திருவிழாவாக நடந்தது. இதனால் அம்மன் வீதி உலா நடைபெற வில்லை. கோவிலுக்குள் அம்மன் வலம் வந்தார்.
இந்த நிலையில் இந்த ஆண்டும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆடிப்பூர விழா நேற்று கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடந்தது. இதையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகைக்கு சகல அபிஷேகமும், சர்வ அலங்காரமும் நடந்தது. மேலும் அம்பாளுக்கு தீப, தூப, ஆராதனை நடந்தது.
பூஜையைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கோவர்த்தனாம்பிகை எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் இந்த ஆண்டும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆடிப்பூர விழா நேற்று கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடந்தது. இதையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகைக்கு சகல அபிஷேகமும், சர்வ அலங்காரமும் நடந்தது. மேலும் அம்பாளுக்கு தீப, தூப, ஆராதனை நடந்தது.
பூஜையைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கோவர்த்தனாம்பிகை எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X