என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • ரஜினிகாந்த் படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். மூவரும் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தொடக்கம் குறித்து ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்தது.

    ஆனால் சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். எதிர்பாராத காரணங்களால் விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே அண்மையில் செய்தியார்களிடம் பேசிய கமல் ஹாசன், 'அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்' என்றார்.

    இந்நிலையில், ரஜினியின் 173 வது படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பதாக ராஜ் கமல் பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.

    நாயகி சிந்தியா லூர்டே தனது குழந்தையுடன் ஊரிலிருந்து சென்னைக்கு வருகிறார். அதேசமயம் சக்தி வாசு சட்டவிரோதமாக கள்ளக் கடத்தல் செய்கிறார். சிந்தியா குழந்தையுடன், சக்திவாசு வைத்திருக்கும் கண்டெய்னர் குடோனுக்கு எதிர்பாராத விதமாக செல்கிறார். சென்ற இடத்தில் சக்தி வாசு உங்களிடம் சிக்கிக் கொள்கிறார்.

    ஒரு கட்டத்தில் கண்டெய்னர் குடோனில் இருந்து வெளியேறும் சிந்தியா, தனது குழந்தையையும் ஒரு பையையும் அங்கு தொலைத்து விடுகிறார்.

    இறுதியில் குழந்தையும் பையையும் சிந்தியா மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிந்தியா லூர்டே, குழந்தை பாசம், ஆக்சன் என நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பு செயற்கை தனமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    படத்திற்கு பெரிய பலம் சக்தி வாசு தேவன் நடிப்பு. வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். கபீர் சிங், இனியா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    கடத்தல் கும்பலிடம் சிக்கி அவர்களை போலீசிடம் சிக்க வைக்கும் பெண்ணை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் தீனா. பழைய கதையை தூசி தட்டி எடுத்து இருக்கிறார் இயக்குனர். அதிக லாஜிக் மீறல்கள், காட்சிகளின் தொடர்ச்சி இல்லை. திரைக்கதை வலுவில்லை. காட்சிகளின் சுவாரசியம் இல்லை. இவை அனைத்தையும் சரி செய்து இருக்கலாம்.

    இசை

    தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு கவரவில்லை.

    ரேட்டிங்-1.5/5

    கெவின் டிகோஸ்டா இசை மற்றும் பின்னணி இசை காமெடி படத்துக்கு ஏற்ப அமைத்திருக்கிறார்.

    மதுரையில் குடும்பத்துடன் வசிக்கும் நாயகி ரோஸ்மினின் திருமணம் மண மேடை வரை வந்து மாப்பிள்ளையான தேனி கே பரமன் மோசமானவன் என தெரிந்து நின்று விடுகிறது. அதன் பின் அவன் தொல்லை தாங்காமல் குடும்பமே சென்னைக்கு வருகிறது.

    வந்த இடத்தில் நாயகியின் தங்கை சாய் தன்யாவை கூலி வேலை பார்க்கும் சென்றாயன் காதலிக்கிறார். முதலில் அக்காவுக்கு திருமணம் நடந்தால் தான் தங்கையை தான் கரம் பிடிக்க முடியும் என சென்றாயன் அதற்கான வேலைகளிலும் இறங்குகிறார்.

    ஒரு கட்டத்தில் நாயகி ரோஸ்மினுக்கு இனிகோ பிரபாகர் மேல் காதல் வருகிறது. என் அக்காவுக்கு அவன் விரும்பியவனை திருமணம் செய்து வைத்தால் நான் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்கிறார் சாய் தன்யா.

    அதே நேரம் மதுரையில் இருந்து நாயகியை அடைந்தே தீருவேன் என கிளம்புகிறார் தேனி கே பரமன். இந்த முக்கோண சூழலில் நாயகி விரும்பியபடி திருமணம் நடந்ததா? சென்றாயன் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிகதை..

    நடிகர்கள்

    நாயகனாக இனிகோ பிரபாகர் திரையில் தோன்றும் நேரம் கொஞ்சம் குறைவு தான் என்றாலும் நாயகனுக்குரிய குணங்களுடன் அமைந்த ஒரு கதாபாத்திரம். மரக்கன்று நடுவதின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு இயற்கை ஆர்வலராக நடித்திருக்கிறார். நாயகியாக ரோஸ்மின். முதிர்ச்சியான நல்ல நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.

    சென்றாயன், ஹீரோவை விட திரையில் அதிகம் தோன்றுபவர். ஆனாலும் தனக்கே உரிய காமெடி சென்ஸ் மூலம் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். சாய் தன்யா ஏற்கனவே சில காமெடி கலந்த காதல் படங்களில் நடித்தவர், இந்த படத்திலும் அவரின் குழந்தைத்தனம் கலந்த அந்த அழகோடு நம்மை ரசிக்க வைக்கிறார். ரோஸ்மின் முழுக்க சீரியஸ் என்றால் இவர் வரும் காட்சிகள் கலகலப்பு. இவர்களை தாண்டி நானே களத்துல இறங்குறேண்டா என இயக்குனர் தேனி கே பரமன் அவர் பங்குங்கு வந்து ரகளை செய்கிறார்.

    இயக்கம்

    இயக்குனர் தேனி கே பரமன். வன்முறை படங்களாக வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தானும் அதற்குள் சிக்கிக் கொள்ளாமல் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். பழைய கதை தான் என்றாலும் படத்தை காமெடி கலந்து கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார். ஆங்காங்கே காட்சிகளில் உள்ள இழுவையை தவிர்த்திருக்கலாம்.

    இசை

    கெவின் டிகோஸ்டா இசை மற்றும் பின்னணி இசை காமெடி படத்துக்கு ஏற்ப அமைத்திருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    சுரேஷ்குமார் ஒளிப்பதிவில் சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம் என சுற்றி சுற்றி படம் பிடித்திருந்தாலும் பார்ப்பதற்கு ஏதுவாக காட்சிகளை அமைத்திருக்கிறார்.

    ரேட்டிங்-1/5

    • அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
    • படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு வெளியாகிறது

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

    ஜன நாயகன் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி, ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ஜனவரி 3 ஆம் தேதி (நாளை) மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்றும் படத்தின் நான்காவது பாடலான ராவண மவன்டா பாடலை வெளியிட்டுள்ளது. 

    ஏற்கனவே, ஜன நாயகன் படத்தில் இருந்து தளபதி கச்சேரி, ஒரே பேரே வரலாறு, செல்ல மகளே ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று நான்காவது பாடல் வெளியாகி உள்ளது. 



    BTS மிகப்பெரிய உலகளாவிய இசைப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டம்.

    உலகப்புகழ் பெற்ற BTS இசைக்குழுவின் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் புதிய ஆல்பம் வரும் மார்ச் 20ம் தேதி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று புத்தாண்டை முன்னிட்டு, BTS உறுப்பினர்கள் தங்களது ரசிகர்களான 'ARMY'-க்கு எழுதிய கையெழுத்துக் கடிதங்கள் வாயிலாக இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளனர்.

    2022-ல் வெளியான 'Proof' ஆல்பத்திற்குப் பிறகு, அனைத்து 7 உறுப்பினர்களும் (RM, Jin, Suga, J-Hope, Jimin, V, Jungkook) இணைந்து வெளியிடும் முதல் முழு ஆல்பம் இதுவாகும்.

    அனைத்து உறுப்பினர்களும் தங்களது கட்டாய ராணுவ சேவையை 2025 ஜூன் மாதத்தில் வெற்றிகரமாக முடித்த பிறகு வெளியாகும் முதல் இசைத் தொகுப்பு இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஆல்பம் வெளியானதைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் BTS மிகப்பெரிய உலகளாவிய இசைப் பயணத்தை (World Tour) மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக 'Bighit Music' நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு வெளியானவுடன் சமூக வலைதளங்களில் #BTSComeback மற்றும் #March20 போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

    • படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது
    • படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார்.

    முருகா, புடிச்சிருக்கு, கோழி கூவுது, பெஸ்டி, பிரியமுடன் பிரியா போன்ற படங்களில் நடித்த அசோக்குமார் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள படம் 'அலப்பறை'. கதாநாயகியாக பிரபல இயக்குநரும், நடிகருமான "யார்" கண்ணனின் மகள் சாயாதேவி நடித்திருக்கிறார். சி.எஸ்.கே சினிமா தயாரிக்கும் இப்படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார். 

    பி.எல் தேனப்பன், 'யார்' கண்ணன், 'நமோ' நாராயணன், அன்வர் அலிகான், கோதண்டம், வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி, தம்பிசிவன், ஹரிநாத், ரதியா ஹரி, ஆலந்தூர் பிரவீன்குமார் மற்றும் வேல்குமார் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். 



    உலக அரசியலை கற்றுத் தேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக தன் நண்பன் மூலம் அரசியலில் நுழைகிறான். விதியோ அவனை ஒரு ஆன்மீகத் தலைவனாக மாற்றி விட்டது. முடிவில் அவன் காதலின் நிலை என்ன? தன் அரசியலின் பார்வை என்ன?அல்லது ஆன்மீகவாதியாக தொடர்ந்தானா? என்பதே கதைகளம் என்கிறார் இயக்குநர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அந்தப் பிஞ்சு சிறுவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவன் மரணத்திற்குப் பழகிப் போய்விட்டான்.
    • அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றதாகிவிட்டன.

    71 வயதான ஜாக்கி சான் 'Unexpected Family" என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சீன தலைநகர் பீஜிங்-இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜாக்கி சான் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்வில் பேசிய ஜாக்கி சான், அண்மையில், காசா குழந்தைகளின் துயரங்களை விவரிக்கும் வீடியோ ஒன்றை பார்த்து மனமுடைந்தேன். 

    அந்த வீடியோவில், ஒரு பாலஸ்தீன சிறுவனிடம், பெரியவனானதும் நீ என்னவாக விரும்புகிறாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்தச் சிறுவன் எவ்வித உணர்ச்சியுமின்றி, மிகச் சாதாரணமாக, "எங்கள் ஊரில் குழந்தைகள் வளர்வதே இல்லை. ஏனெனில் வளர்வதற்கு முன்பே கொல்லப்பட்டு விடுகிறோம்" என்று பதிலளித்தான்.

     அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றதாகிவிட்டன.

    என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தப் பிஞ்சு சிறுவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவன் மரணத்திற்குப் பழகிப் போய்விட்டான்.

    நாம் முதுமையை ஒரு சுமையாக நினைக்கிறோம். ஆனால் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு அந்த முதுமை மறுக்கப்படுகிறது. அவர்கள் வளர்வதற்கு முன்பே போரினால் சிதைக்கப்படுகிறார்கள்.

    வன்முறை என்பது ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருந்தால், மரணத்தைப் பற்றி அந்தச் சிறுவனால் இவ்வளவு சாதாரணமாகப் பேச முடியும் என்பதுதான் உலகிற்கு அது சொல்லும் செய்தி" என்று உருக்கமாக தெரிவித்தார்.

    2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசா போரில் இதுவரை 71,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பாக 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த 23 மாதங்களில் காசாவில் 1 மணி நேரத்துக்கு 1 குழந்தை கொல்லப்பட்டுள்ளது.

    ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

    விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

    ஜன நாயகன் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகிறது.

    அதன்படி, ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ஜனவரி 3 ஆம் தேதி (நாளை) மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் 'ராவண மவன்டா' பாடல் இன்று இரவு 7.50 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    ஏற்கனவே, ஜன நாயகன் படத்தில் இருந்து தளபதி கசசேரி, ஒரே பேரே வரலாறு, செல்ல மகளே ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று 4வது பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.
    • அதில் கதாநாயகன் அருள்நிதி ஒரு நாற்காளியில் வில்லன் சிரிப்பில் உட்கார்ந்து கொண்டாருக்கிறார்.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. உலகளவில் இப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து முடிந்த நிலையில் படப்பிடிப்பை ஜூலை மாதம் படக்குழு பூஜை விழாவுடன் தொடங்கியது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில் கதாநாயகன் அருள்நிதி ஒரு நாற்காளியில் வில்லன் சிரிப்பில் உட்கார்ந்து கொண்டாருக்கிறார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில் படத்தின் கதாநாயகியான பிரியா பவானி சங்கர் கையில் இரத்த காயத்துடன் சிரித்தபடி உள்ளார். 

    • பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு தடைவிதித்தால் பெருத்த இழப்பு ஏற்படும்
    • அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் தாக்கல் செய்ய வேண்டும்

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ள படம் 'பராசக்தி'. இப்படம் முதலில் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், பின் ஜன.10க்கு மாற்றப்பட்டது. இதனிடையே தனது 'செம்மொழி' என்ற கதையை திருடி இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி, வெளியீட்டிற்கு தடைவிதிக்க கோரி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அதில், தன் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்தபோது, தயாரிப்பாளர் சேலம் தனசேகரன், கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க, அவர் அதை இயக்குனர் சுதா கொங்கராவிடம் கொடுத்ததாக கூறியிருந்தார். மேலும் தனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் படத்தை வெளியிட இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

    இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதொடர்பாக இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் ஆகியோர் ஜன.2ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில், கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

    அப்போது இணை இயக்குநர் ராஜேந்திரன் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என 'பராசக்தி' தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு தடைவிதித்தால் பெருத்த இழப்பு ஏற்படும் என்ற வாதத்தையும் முன்வைத்தது. 

    இதனைக்கேட்ட நீதிபதி பட வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் முந்தைய உத்தரவின்படி அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பதால், அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார். 

    • அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
    • ‘ஜன நாயகன்’ படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு வெளியாகிறது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

    விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

    இதனை தொடர்ந்து 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லரை தியேட்டர்களில் ரசிகர்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள ARK ராம் முத்துராம் சினிமாஸ் ஆர்ஜிபி-யில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 'ஜன நாயகன்' டிரெய்லரை காண ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர். 

    தாஜ்னுர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

    நாயகன் ஸ்ரீகாந்த் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், நண்பர்களான பிளாக்பாண்டி, வி.ஜே.பப்பு, விக்ரம் ஆகியோருடன் வார விடுமுறையை கொண்டாட நினைக்கிறார். நண்பர்கள் மற்றும் போதாது என்று 'கால் கேர்ள்' ஆன சிருஷ்டி டாங்கேவையும் ஊட்டிக்கு அழைத்து செல்கின்றார்.

    ஊட்டி ரிசார்ட்டில் 5 பேரும் தங்கி இருக்கும்போது 'கால்கேர்ள்' சிருஷ்டி டாங்கே காணாமல் போகிறார். இதைத் தொடர்ந்து நண்பரான விக்ரமும் காணாமல் போகிறார். இதை விசாரிப்பதற்காக போலீஸ் அதிகாரியான ஜான்விஜய் களத்தில் இறங்குகிறார்.

    இறுதியில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, நண்பர் விக்ரம் ஆகியோரை கண்டுபிடித்தார்? காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் ஒரு சில இடங்களில் மட்டுமே நடிக்க செய்து இருக்கிறார். சிருஷ்டி டாங்கே மீது காதல் கொள்வது, காணாமல் போன சிருஷ்டி டாங்கேவை தேடி அலைவது என ஆங்காங்கே நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக போலீஸ் விசாரணையில் சித்ரவதைக்குள்ளாகும் காட்சிகளில் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

    கதாநாயகியான சிருஷ்டி டாங்கே 'கால்கேர்ள்' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குடும்பப்பாங்கான கேரக்டரில் பார்த்த சிருஷ்டி டாங்கே இந்த படத்தில் கவர்ச்சியும், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் மது அருந்துவது என காட்சிகளில் வியக்க வைத்துள்ளார்.

    பிளாக் பாண்டி, வி.ஜே.பப்பு மற்றும் நண்பர்களின் காமெடி காட்சிகள் பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. போலீஸ் அதிகாரியான ஜான்விஜய் நடிப்பு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாக போலீஸ் கதாபாத்திரத்திலேயே நடித்துவரும் ஜான் விஜய் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

    இயக்கம்

    நண்பர்களின் காமத்தால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மணி பாரதி. விழிப்புணர்வு படமாக கொடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் வலுவான காட்சிகளும் சுவாரஸ்யமான காட்சிகளும் இல்லாமல் சாதாரண படமாக மாறிவிட்டது. அதிக லாஜிக் மிரல்களை தவிர்த்து இருக்கலாம்.

    இசை

    தாஜ்னுர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

    ஒளிப்பதிவு

    கோகுல் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ரேட்டிங்: 2/5

    ×