என் மலர்
நீங்கள் தேடியது "Sudha Kongara Prasad"
- டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
- தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தனர்.
இந்நிலையில் பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது.
மத்திய தணிக்கை வாரியம் சான்று வழங்கியதை அடுத்து நாளை திட்டமிட்டபடி பராசக்தி திரைப்படம் வெளியாகிறது.

- இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பான காட்சிகளை நீக்க பரிந்துரை
- திருத்தங்கள் படத்தின் கதை ஓட்டத்தை வெகுவாகப் பாதிக்கும்
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஆனால் தற்போது வரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் குறித்தநேரத்தில் படம் நாளை மறுநாள் வெளியாகுமா? என குழப்பம் நிலவியுள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து 23 காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் (CBFC) பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக, இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பான சில காட்சிகளுக்கு வாரியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும், அவற்றை நீக்க அல்லது மாற்றியமைக்கப் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்தத் திருத்தங்கள் படத்தின் கதை ஓட்டத்தை வெகுவாகப் பாதிக்கும் என்றும், அதன் வரலாற்றுத் தன்மை வலுவிழந்துவிடும் என்றும் கூறி இயக்குநர் சுதா கொங்கரா, மும்பையிலுள்ள தணிக்கை வாரியத்தின் மறுசீராய்வுக் குழுவை (Revising Committee) அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை, படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுமா என்பது குறித்து இன்னும் எந்தத் தெளிவான தகவலும் வெளியாகவில்லை.
தணிக்கை சான்றிதழ் இழுபறியால் ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
- பராசக்திக்கு முன்பு வெளியாக உள்ள விஜய்யின் ஜன நாயகனுக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது. டிரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துவரும் நிலையில் இன்று படம் குறித்த மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு பராசக்தி ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேநேரத்தில் பராசக்திக்கு முன்பு வெளியாக உள்ள விஜய்யின் ஜன நாயகனுக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது
- ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. அதர்வா, ஜெயம்ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லரில், டெல்லிதான் இந்தியாவா?, எங்களுக்கு இந்தி திணிப்புதான் எதிரியே தவிர, இந்தி மொழியோ, அதைப்பேசும் மக்களோ கிடையாது, 'என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
- புதுமுக தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
- படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.
கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை புறநானூறு படத்தில் நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் உலா வருகிறது.
அதில், புறநானூறு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் அமரன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தையும் முடித்துவிட்டு, சுதா கொங்கராவின் 'புறநானூறு' படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் 2டி எஎண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில், தற்போது புதுமுக தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க உள்ளார் என்று தெரிகிறது. அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






