என் மலர்
சினிமா செய்திகள்
- பி. வாசு இயக்கத்தில் ’சந்திரமுகி 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.

சந்திரமுகி 2
லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராதிகா பகிர்ந்த வீடியோ
இந்நிலையில், 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு 'ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி..' என்ற தனது காமெடியை நடிகை ராதிகாவுடன் இணைந்து ரீ கிரியேட் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை நடிகை ராதிகா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Love this cult dialogue of #Vadivelu ,recreating ❤️❤️❤️#comedy #tamilfilm #classic
— Radikaa Sarathkumar (@realradikaa) May 27, 2023
On the sets of #chandramukhi2 @LycaProductions pic.twitter.com/3T60Ad6wzs
- உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமானவர் இர்பான்.
- இர்பான் கார் மோதியதில் பத்மாவதி என்ற பெண் பலியானார்.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் புத்தேரி அருகே உள்ள கோனாதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (55). இவர் புத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி இரவு அவரது மகளை பார்ப்பதற்காக மறைமலை நகர் பகுதிக்கு சென்றுவிட்டு கோனாதியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பும் போது மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று பத்மாவதி மீது மோதி விபத்துக்குள்ளானது.

பத்மாவதி -இர்பான்
இந்த விபத்தில் சுமார் 20 அடிக்கு மேலாக தூக்கி வீசப்பட்ட பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பது தெரியவந்தது.
தொடந்து இந்த காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை கைது செய்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த காரில் யூ டியூபர் இர்பான் பயணம் செய்து வந்ததாக கூறப்பட்டதையடுத்து தற்போது இந்த சம்பவத்தின் போது இர்பான் இந்த காரில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக 304 (ஏ) என்ற பிரிவின் கீழ் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இர்பானின் மைத்துனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளார்.
- கங்குலியின் ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த முக்கியச் சம்பவங்களை இந்தப் படம் கூறவிருக்கிறது.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. இவரை தாதா என்றும் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார். இதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்று அர்த்தம் ஆகும். இந்திய கிரிக்கெட் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி.
இவர் 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து கவனத்தை ஈர்த்தவர். 2000-ம் ஆண்டில் இந்திய அணிக்குள் சூதாட்ட விவகாரம் தலைதூக்கிய போது கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார்.
தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்குச் சிறந்த கேட்பனாக கங்குலி வலம் வந்தார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.
இந்த நிலையில், கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளார். சமீபத்தில் கங்குலியை நேரில் சந்தித்து இதுகுறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் இதில் நாயகனாக ரன்பீர் கபூர் நடிக்க கங்குலி விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் கங்குலியின் ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த முக்கியச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜெயிலர்
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயிலர்
இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
- மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
- இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கினர்.

இதையடுத்து 'மாமன்னன்' படத்தின் அடுத்த பாடலான 'ஜிகு ஜிகு ரெயில்' லிரிக் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் 'புழு துளையிட்ட பழத்தின் விதையாக குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்துபோகிறேன்' என்ற வரிகளுடன் தற்போது வெளியாகியுள்ளது. யுகபாரதி வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும், இந்த வீடியோவில் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- சாரா அலி கான் மற்றும் சுப்மான் கில் ஒருநாள் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
- கில் மைதானத்தில் விளையாடும் போது சாரா என்ற பெயரைக் கூறி அவரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இந்திய அணியின் தற்போது நட்சத்திர கிரிக்கெட் வீரராக சுப்மன் கில் பார்க்கப்படுகிறார். 3 வடிவ (டெஸ்ட், ஒருநாள், டி20) கிரிக்கெட்டிலும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் தவிர மற்றொரு காரணத்திற்காகவும் கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் இவரையும் சாரா டெண்டுல்கர் மற்றும் சாரா அலிகான் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில காலமாக, சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்ததாகவும் மேலும் சிலர் அதை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்ததாகவும் நெட்டிசன்கள் குழப்பி வந்தனர்.
முன்னதாக, சாரா அலி கான் மற்றும் சுப்மான் கில் ஒருநாள் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது அனைவராலும் பகிரப்பட்டு பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் தங்கள் டேட்டிங் வதந்திகள் குறித்து மூவரும் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். அதே வேளையில், அவர் மைதானத்தில் விளையாடும் போது சாரா என்ற பெயரைக் கூறி அவரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சுப்மன் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் பிரிந்ததாகக் தகவல் வெளியாகி உள்ளது. சாரா டெண்டுல்கருடனான டேட்டிங் வதந்திகளுக்கு மத்தியில், சாரா கானும் கில்லும் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டனர். மற்றும் அவர்களின் சமீபத்திய நடவடிக்கை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- என்.டி.ராமாவ் 1923-ம் ஆண்டு மே மாதம்28-ந் தேதி ஒரு இந்து விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
- என்டி ராமாராவ் 1982 -ம் ஆண்டு மார்ச் மாதம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார்.
என்.டி .ராமராவ் நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் அரசியல்வாதி என பல துறைகளில் சாதனை படைத்தவர். ஆந்திர பிரதேசத்தின் முதல்-அமைச்சராக 3 முறை பதவி வகித்தார்.
என்.டி.ராமாவ் 1923-ம் ஆண்டு மே மாதம்28-ந் தேதி ஒரு இந்து விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கிருஷ்ணா மாவட்டத்தின் குடிவாடா தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமமான நிம்மகுருவில், இது பிரிட்டிஷ் இந்தியாவின் பழைய மெட்ராஸ் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக இருந்தது. அவரது மாமா மற்றும் அத்தைக்கு குழந்தை இல்லை. அவர் தனது தந்தைவழி மாமாவுக்கு தத்தெடுக்கப்பட்டார். அவர் முதன்முதலில் அருகிலுள்ள கிராமத்தில் இருந்து வந்த ஒரு ஆசிரியரால் கல்வி கற்றார்.

என்.டி.ஆர்
ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, குழந்தைகள் பொதுவாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், குடும்பத்தில் முதல் ஆண் குழந்தை என்ற காரணத்திற்காக, அவரது தந்தை அவரை விஜயவாடாவுக்கு அனுப்பினார். அங்கு அவர் தனது கல்வியைத் தொடர்ந்தார். குண்டூரில் உள்ள ஆந்திர கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார். 1947-ல், குண்டூர் மாவட்டத்தின் பிரதிபடு என்ற இடத்தில் சப்-ரிஜிஸ்ட்ராராக மெட்ராஸ் சர்வீஸ் கமிஷனில் சேர்ந்தார். பின்னர் ஆந்திர சினிமாவில் நுழைந்தார். ஆந்திர சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் ராமர், கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் என்றால் இன்றும் நினைவுக்கு வருபவர் என்.டி. ராமராவ்.
'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக என்.டி. ராமராவ் நடித்தார். ராமரின் குணங்களாக வர்ணிக்கப்படும் அமைதியும், சாந்தமும் ராமராக நடித்த என்.டி.ஆரின் முகத்தில் தவழும். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அலட்டிக் கொள்ளாமல் ஆனால், ஆழமாக நடித்திருப்பார். அவரை ராமர் வேடத்தில் மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் சம்பூர்ண ராமாயணம் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.
அதேபோல, கிருஷ்ணர் என்றாலும் ராமராவ்தான் கண் முன் நிற்பார். 'மாயா பஜார்', 'கர்ணன்' படங்களில் கிருஷ்ணராகத் தோன்றுவார். இதிகாசப்படி கிருஷ்ணர் கொஞ்சம் எதிரிகளிடம் குறும்புடன் விளையாடுவார். ராமராக நடிக்கும்போது அமைதியும் சாந்தமும் ராமராவின் உணர்ச்சி பாவங்களாக இருந்தது என்றால், கிருஷ்ணராக நடிக்கும்போதோ அதற்கேற்ப அவர் முகத்தில் குமிழ் நகையும் குறும்பும் கொப்பளிக்கும்.

என்.டி.ஆர் -எம்.ஜி.ஆர்
தமிழ் திரையுலகின் சாகாவரம் பெற்ற திரைப் பாடல்களில் ஒன்றான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற 'உள்ளத்தில் நல்ல உள்ளம்..' பாடலில், வயோதிகராக வந்து அசத்துவார் ராமராவ். கர்ணனனாக நடிக்கும் சிவாஜி கணேசனிடம் தர்மத்தை தானமாகப் பெற முயலும்போது, கர்ணனின் நிலையைப் பார்த்து பரிதாபப் பார்வை பார்ப்பார். அதேநேரம், அவனுடைய தர்மப் பலன்கள் அனைத்தையும் பெற்றால்தான் கர்ணன் உயிர்போகும் என்பதால் தானத்தைப் பெற்றுவிடுவதில் காட்டும் முனைப்பு என்று நடிப்பில் என்.டி. ராமராவ் கொடி நாட்டியிருப்பார்.
ராமராவ் நடித்து 1951-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'பாதாள பைரவி' திரைப்படத்தை இந்த தலைமுறை மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையும் ரசிக்கும். என்டி ராமராவ் 1982 -ம் ஆண்டு மார்ச் மாதம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். தகுதியற்ற ஆட்சியில் இருந்து ஆந்திராவை விடுவிப்ப தற்கான வரலாற்று தேவையின் அடிப்படையில் இந்த கட்சி ஆரம்பிக்க ப்பட்டதாக அவர் கூறினார். ஊழலில் ஈடுபடாத படித்த வேட்பா ளர்களை நிறுத்த முடிவு செய்தார்.
இது அந்த நேரத்தில் ஒரு புதுமையான அரசியல் கருத்தாக இருந்தது. எம்ஜிஆர் பாணியில் திறந்த வேனில் சென்று ஆந்திரா முழுவதும் 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். தெலுங்கு மக்களின் சுயமரியாதை என்ற நோக்கத்துடன் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது. இதனால் 1983-ம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 294 இடங்களில் 202 இடங்களில் வென்று அவர் முதல் முறையாக முதல் அமைச்சரானார். தொடர்ந்து 3 முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக மக்கள் பணியாற்றினார்.
என்.டி. ராமாராவ் 1996 -ம் ஆண்டு ஜனவரி 18-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் 72 வயதில் மாரடைப்பால் காலமானார். அவர் தகனம் செய்யப்பட்டார். அவரது அஸ்தியை அவரது 2-வது மனைவி லட்சுமி பார்வதி எட்டு ஆண்டு களுக்குப் பிறகு, மே 2004 -ல் ஸ்ரீரங்கப்ப ட்டினத்தில் கரைத்தார்.

என்.டி.ஆர் -எம்.ஜி.ஆர் -இந்திரா காந்தி
உயிருடன் இருந்தவரை அந்திர மக்களுக்கு வாழும் கடவுளாகவே விளங்கிய என்.டி.ஆர்., சினிமாவையும் தாண்டி சென்னை மக்களின் தாகம் தணிக்க உதவியவர். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ராமராவுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரின் பெயரிலும் ராமன் உண்டு. தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர். சூப்பர் ஸ்டார் என்றால் தெலுங்குத் திரையுலகில் என்.டி.ஆர். இருவருமே அரசியலில் ஈடுபட்டு மாநில முதல்-அமைச்சரானவர்கள்.
எம்.ஜி.ஆருக்கும் என்.டி.ராமராவுக்கும் உள்ள நட்பும் நெருக்கமும் நாடறிந்தது. 'எனது குருநாதர் எம்.ஜி.ஆர்.' என்று வெளிப்படையாகவே அறிவித்தவர் ராமராவ்.
ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 1983-ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திர முதல்-அமைச்சராக என்.டி. ராமராவ் பதவியேற்றார். தன்னிடம் ஆசிபெறுவதற்காக சென்னை வந்த என்.டி.ராமராவுக்கு அவரை கவுரவிக்கும் விதமாக தனது தோட்டத்தில் எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்படியே சென்னை நகரின் குடிநீர் பற்றாக்குறையையும் அதைத் தீர்க்க ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் யோசனையையும் என்.டி.ராமராவிடம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர் சொன்னால் என்.டி.ஆரிடம் மறுப்பேது? அப்போது உருவானதுதான் கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் 'தெலுங்கு கங்கைத் திட்டம்'. பதவியேற்ற அடுத்த 4 மாதங்களில் 1983,மே 25-ந் தேதி சென்னையில் நடந்த தெலுங்கு கங்கைத் திட்ட தொடக்க விழாவில், திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் பங்கில் முதல் தவணைக்கான காசோலையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மூலம் ராமராவிடம் கொடுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர். அந்த வகையில் சென்னை நகரின் தாகம் தீர்க்க உதவியிருக்கிறார் நூற்றாண்டு நாயகர் என்.டி. ராமராவ்.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையம் மண்டலம் வேமகிரியில் இன்றும் நாளையும் முன்னாள் முதல் -அமைச்சர் எம் டி ராமராவ் நூற்றாண்டு விழா மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. என்.டி.ஆர் நூற்றாண்டு பிறந்த ஆண்டு என்பதாலும், தெலுங்கு தேசம் கட்சி நிறுவப்பட்டு 41 ஆண்டுகள் ஆனதாலும், மாநாடு வரலாற்றில் இடம்பிடிக்க எல்லாம் தயாராகி விட்டது. இதற்காக 10 ஏக்கரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வெகு தொலைவில் அமர்ந்திருப்ப வர்களும் நிகழ்வைக் காணும் வகையில் 20 எல்இடி திரைகள் பொருத்த ப்பட்டுள்ளன. நாளை மாலை 15 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பொதுக் கூட்டம் நடக்கிறது. சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அமர்வதற்காக 4,000 சதுர அடியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
- மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர் மந்தைவெளியில் வசித்து வருகிறார்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.வி.சேகரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசினார்.
மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர் மந்தைவெளியில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.வி.சேகர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதைத்தொடர்ந்து எஸ்.வி.சேகர் மயிலாப்பூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து எஸ்.வி.சேகர் கூறியதாவது, கடந்த 22-ந்தேதி மதியம் வீட்டில் இருந்தபோது எனது செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு என்னை ஒருமையில் ஆபாசமாக தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்கள் கூறுவதாக கூறி என்னை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஆபாச வார்த்தைகள் அதிகரிக்கவே நான் போனை கட் பண்ணினேன். மீண்டும் சில நிமிடங்களில் 3 போன்கள் தொடர்ந்து வந்து மீண்டும் ஆபாச வார்த்தைகளுடன் பேசி மிரட்டினர்.
என்னுடைய வீட்டில் ஏற்கனவே 2 முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடந்தது. நான் இந்துத்துவாவுக்கு ஆதவராக பேசி வருவதாக அடிக்கடி இந்த அச்சுறுத்தல் வருகிறது. இந்த நிலையில் எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை நேற்று திரும்ப பெற்றுக் கொண்டனர். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் போலீசாரே பொறுப்பு. இவ்வாறு அவர் கூறி னார்.
- விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மும்பைக்கர்.
- ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கைந்து இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக ஒரே புள்ளியில் அவர்கள் சந்திப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.

மும்பைக்கர்
மாநகரம் திரைப்படம் இந்தியில் மும்பைக்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ராகவ் பினானி, தான்யா மணிக்ட்லா, ரன்வீர் ஷோரே, சச்சின் கேட்கர், சஞ்சய் மிஸ்ரா, ஹிரித்து ஹருண், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தை ஜோதி தினேஷ் பாண்டே, ரியா ஷிபு இணைந்து தயாரித்துள்ளனர். சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

மும்பைக்கர் போஸ்டர்
ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பைக்கர் திரைப்படம் வருகிற ஜூன் 2-ஆம் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
Bohat saari kahaniyan aur ek galat kidnapping ? Kya isse hogi inn kahaniyon ki ek new beginning? L#MumbaikaronJioCinema streaming free, 2 June onwards, only on @officialjiocinema@vikrantmassey @hridhuharoon @imsanjaimishra @RanvirShorey @sachinskhedekar @santoshsivan… pic.twitter.com/0GOsiikhC7
— VijaySethupathi (@VijaySethuOffl) May 26, 2023
- இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'.
- இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

அடியே
சமீபத்தில் 'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'வா செந்தாழினி' பாடல் இன்று (மே 26-ம் தேதி) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பகவதி பி.கே வரிகளில் சித்ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத்.
- இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தற்போது 'சந்திரமுகி 2', 'எமர்ஜென்சி' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக உள்ள கங்கனா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.

கங்கனா ரணாவத்
இமாசலப்பிரதேசத்தில் பஷிநாத் கோவிலில் பெண் ஒருவர் இரவு ஆடைகளை அணிந்து கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ததாக ஒரு நபர் இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்து அந்த பெண்ணை விமர்சித்திருந்தார். அந்த பதிவை பகிர்ந்த நடிகை கங்கனா அந்த பெண்கள் குறித்து தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி தனக்கு வாடிகனில் நடந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.

ஷார்ட்ஸ் அணிந்த பெண் -கங்கனா ரணாவத்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இவை மேற்கத்திய ஆடைகள், வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவை, நான் ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்திருந்ததற்காக வாடிகனில் என்னை வளாகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை. நான் மீண்டும் எனது ஓட்டலுக்குச் சென்று உடை மாற்ற வேண்டியிருந்தது. சாதாரணமாக இரவு ஆடைகளை அணியும் இவர்கள் கோமாளிகள் மற்றும் சோம்பேறிகள். அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை, ஆனால் அத்தகைய முட்டாள்களுக்கு கடுமையான விதிமுறைகள் இருக்க வேண்டும் ..." என்று பதிவிட்டுள்ளார்.
These are western clothes, invented and promoted by white people, I was once at the Vatican wearing shorts and t shirt, I wasn't even allowed in the premises, I had to go back to my hotel and change…. These clowns who wear night dresses like they are casuals are nothing but lazy… https://t.co/EtPssi3ZZj
— Kangana Ranaut (@KanganaTeam) May 26, 2023
- உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமானவர் இர்பான்.
- இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

பத்மாவதி -இர்பான்
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே நேற்றிரவு யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று மோதி 55 வயதான பத்மாவதி என்ற மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை கைது செய்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த போது யூடியூபர் இர்பான் காரில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.






