என் மலர்
சினிமா செய்திகள்
- தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
- இயக்குனர் பி. வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பிறகு, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட தலைவி படத்தில் நடித்திருந்தார்.
இவர், இயக்குனர் பி. வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். இதன்பிறகு, இந்தியில் உருவான தேஜஸ் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் துவாரகா கோவிலுக்கு சென்றிருந்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கங்கனா அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கங்கனா ரனாவத், "கடவுள் கிருஷ்ணர் ஆசீர்வதித்தால், நான் போட்டியிடுவேன். பா.ஜ.க. அரசின் முற்சிகளால், இந்தியர்களாகிய நாம் 600 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றியை பார்க்க போகிறோம். உலகம் முழுக்க சனாதன தர்மத்தின் கொடியை பறக்க செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.
- 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோவை இன்று மாலை 5.30 மணிக்கு தமிழில் ரஜினி, தெலுங்கில் இயக்குனர் ராஜமவுலி, இந்தியில் நடிகர் அமீர்கான், கன்னடத்தில் கிச்சா சுதீப், மலையாளத்தில் மோகன் லால் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. 'எங்கு தப்பு நடந்தாலும் கண்டிப்பா நான் வருவேன்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகர் ரஜினி இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார்.
- இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படத்தின் மும்பை படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இதைத்தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்நிலையில், ரஜினியின் 171-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ், ரஜியின் மிகப்பெரிய ரசிகர் என்பதால் எப்படி வில்லனாக நடிப்பார் என்ற கேள்வியும் வலம் வருகிறது.
விஜய்யின் சில படங்களில் ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'.
- இப்படம் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் 'மெட்ராஸ்' படம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது, மெட்ராஸில் வளர்ந்த பசங்க யாருக்குமே சாதி தெரியாது. நமக்கு பேர் மட்டும் தான் தெரியும். அதை தாண்டி எதுவுமே பார்த்தது கிடையாது. அந்த கதையில் எனக்கு பிடித்திருந்தது சுவர் தான். உலக சினிமா மாதிரி ஒரு சுவரை சுற்றி ஒரு அரசியல் மட்டும் தான் என் கண்ணில் பட்டது. அதில் இருக்கிற கதாபாத்திரங்கள் மட்டும் தான் என் கண்ணில் பட்டது. அதை சாதி படமாக இப்போது வரை பார்த்ததில்லை.

மேலும், "நான் சாதி பார்ப்பதில்லை. அது அவரவர் பார்வையில் இருக்கிறது. இப்போது ஸ்கூலில் எதுக்கு ஒரே மாதிரி சீருடை கொடுக்கிறாங்க. வித்தியாசம் இருக்கக்கூடாது என்பதற்காகதான். நான் அப்படி வளர்க்கப்பட்டவன். எனக்கு அந்த வித்தியாசம் தெரியாது" என்றார்.
- விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'.
- இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'ரவுடீசத்துக்கு ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணப்போறேன்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- ஒரு ஏக்கரில் மற்றொரு பகுதியை வாங்கிய நடிகை பூஜாபட் வழக்கு தொடர்ந்தனர்.
- நடிகை பூஜா பட் பெயரில் உள்ள நிலம் மட்டுமே இதுவரை அரசு எடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவில், குப்பன் என்பவருக்கு 1978-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி ஒரு ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியது. அப்போது, 10 ஆண்டுகளுக்கு இந்த நிலத்தை விற்பனை செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்தது.
இதன்படி, இந்த நிலத்தை 1988-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி பவர் ஏஜெண்ட் மூலம் குப்பன் விற்பனை செய்தார். அதன்பின்னர், அந்த நிலத்தை பகுதி பகுதியாக பலர் வாங்கியுள்ளனர். அதில், 27 சென்ட் நிலத்தை அரவிந்த தேவி என்பவர் 1999-ம் ஆண்டு விலைக்கு வாங்கினார்.
அதில், 13.84 சென்ட் நிலத்தை தன் மகள் பிங்கிள் ரமேஷ் ரெட்டிக்கு எழுதி கொடுத்தார். இதற்கிடையில், குப்பன் கொடுத்த கோரிக்கை மனுவை ஏற்று, இந்த நிலத்துக்குரிய பட்டாவை ரத்து செய்து கோத்தகிரி தாசில்தார் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பிங்கிள் ரமேஷ் ரெட்டி வழக்கு தொடர்ந்தார். இந்த ஒரு ஏக்கரில் மற்றொரு பகுதியை வாங்கிய நடிகை பூஜாபட், ருக்மணி குமாரமங்கலம் ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த நிலம் மட்டுமல்லாமல், நீலகிரி மாவட்டத்தில் தனியாருக்கு நிபந்தனைகளுடன் வழங்கப் பட்ட அரசு நிலங்கள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் மறுஆய்வு செய்ய வேண்டும். அதில் ஏதாவது விதிமீறல் இருந்தால், அந்த நிலத்தை பொது பயன்பாட்டுக்காக மீண்டும் கையகப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்'' என்று உத்தர விட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பிங்கிள் ரமேஷ் ரெட்டி, நடிகை பூஜா பட், ருக்மணி குமாரமங்கலம் ஆகியோர் தனித்தனியாக மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிங்கிள் ரமேஷ் ரெட்டி தரப்பில் மூத்த வக்கீல் அப்துல் சலீம் ஆஜராகி, நிலத்தின் ஒதுக்கீட்டை 45 ஆண்டுகளுக்கு பின்னர் ரத்து செய்துள்ளனர். இதன்மூலம், மனுதாரருக்கு சொத்தின் மீதுள்ள உரிமை பறிக்கப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பா.முத்து குமார், ''நடிகை பூஜா பட் பெயரில் உள்ள நிலம் மட்டுமே இதுவரை அரசு எடுத்துள்ளது'' என்றார். இதை பூஜாபட் தரப்பில் ஆஜரான வக்கீல் மறுப்பு தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ''இந்த வழக்கை வருகிற டிசம்பர் 8-ந்தேதி தள்ளிவைக்கிறோம். அதுவரை அனைத்து தரப்பினரும் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.
- நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
- ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இந்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.
அறிமுக இயக்குனர் ரா.சவரி முத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகுகிறது. டார்லிங்க், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய ரா.சவரி முத்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை துவாரகா புரொடக்ஷன்ஸ் (Dwarka Productions) நிறுவனம் சார்பில் பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை, திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
- 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.
- இப்படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியாகுகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோ இன்று மாலை 5.30 மணிக்கு திரைப்பிரபலங்கள் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்தியன்-2 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு கத்தியில் அறிமுக வீடியோ மாலை 5.30 மணிக்கு என குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'தளபதி 68'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு நவம்பர் 1-ஆம் தேதி தாய்லாந்து சென்றதாக தகவல் வெளியானது.

நடிகர் விஜய்
இந்நிலையில் நடிகர் விஜய் 'தளபதி 68' படப்பிடிப்பிற்காக தாய்லாந்து புறப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’.
- இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் 'ஜெய் பீம்'. இந்த படத்தில் லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.

இந்நிலையில், 'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மகிழ்ச்சியை படக்குழுவினர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா, முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சூர்யா பதிவு
அதில், "ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
— Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2023
திரைப்படம்… pic.twitter.com/kW25rvVgGM
- ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’.
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தியன் 2 போஸ்டர்
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோவை தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்தியன் 2 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'இந்தியன் 2' படத்தின் தெலுங்கு வீடியோவை இயக்குனர் ராஜமவுலியும், இந்தியில் நடிகர் அமீர்கானும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன் லாலும் வெளியிடவுள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Mr. IGR Maraar ? is on call ✨ No better way to 'Complete' the announcement #TheCompleteActorForUlaganayagan ?
— Lyca Productions (@LycaProductions) November 2, 2023
'The Complete Actor' @Mohanlal will release 'Ulaganayagan' @ikamalhaasan & @shankarshanmugh's INDIAN-2 AN INTRO tomorrow at 5:30 PM ?#Indian2 ?? @anirudhofficial… pic.twitter.com/m8LfmrhSjm






