என் மலர்
சினிமா செய்திகள்
- மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி.
- படப்பிடிப்பு அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.
துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது.

இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. அதன்பிறகு அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு சென்னை திரும்பியது.
இந்த நிலையில் விடாமுடற்சி படத்தின் ஒரே ஒரு பாடல் ஷூட் மட்டும் நிலுவையில் இருந்தது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. அதன்பிறகு படத்தின் புரொடக்ஷன் வேலைகள் தொடரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சியை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கிறார் அஜித் குமார். அந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சில காட்சிகளில் நடித்து முடித்துவிட்டார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்.
பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பி.சுசிலா சிகிச்சைக்கு பிறகு நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
இதுதொடர்பாக, பி.சுசீலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தற்போதுதான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளேன். நலமுடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளேன். நான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது.
- வேட்டையன் வெளியாகும் அதே நாளில்தான் சூர்யாவின் 'கங்குவா' திரைப்படமும் ரிலீசாகிறது.
'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
அக்.11-ந்தேதி ஆயுத பூஜை, விஜயதசமி, வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் வேட்டையன் படம் அக்.10-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
வேட்டையன் திரைப்படம் வெளியாகும் அதே நாளில்தான் சூர்யாவின் 'கங்குவா' திரைப்படமும் ரிலீசாகிறது.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே வாரத்தில் வெளியான 2 படங்களின் இயக்குனர்கள் தங்கள் ஹீரோக்களை மாற்றிக்கொண்டு தற்போது ஒரே நாளில் போட்டி போடவுள்ளனர் என்பது தான்.
3 ஆண்டுகளுக்கு முன்பு சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தே திரைப்படமும் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படமும் ஒரே வாரத்தில் வெளியானது.
2021 நவம்பர் 2-ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதே ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்கில் வெளியான அண்ணாத்தே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது.
தற்போது சூர்யாவின் ஜெய்பீம் பட இயக்குநரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படமும், ரஜினிகாந்தின் அண்ணாத்தே பட இயக்குநரின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.
2021 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் வென்றார். தற்போது நடக்கவுள்ள போட்டியில் ஞானவேல் வெல்வாரா? இல்லை சிறுத்தை சிவா வெல்வாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.
- நித்யாமேனன் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர் காணலில் அவரது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டார். நித்யாமேனன் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனரான பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.
பாண்டிராஜ் இதற்கு முன் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் பரோட்டா மாஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக விஜய்சேதுபதி பிரத்தியேகமான பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கப்போவதாகவும், வித்தியாசமான கதாப்பத்திரமாக இருக்கும் என நித்யா மேனன் கூறியுள்ளார். நித்யா மேனன் தற்பொழுது ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- தி கோட் படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகிறது.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த நடிகரும், தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பிரேமலதா விஜயகாந்த்-ஐ நேரில் சந்தித்தனர். சந்திப்பின் போது தி கோட் படத்தில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை காண்பித்து, அது தொடர்பான ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நானி, பிரியங்கா மோகன் நடித்துள்ள புதிய படம் சூர்யாஸ் சாட்டர்டே.
- சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நானி சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் நேற்று (ஆகஸ்ட் 18) வெளியானது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கும் நிலையில், படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் படக்குழு கலந்து கொண்டு வருகிறது. அந்த வரிசையில், படத்தின் நாயகன் நானி, கதாநாயகி பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் சமீபத்தில் பேட்டி அளித்தனர்.
அந்த பேட்டியின் போது தொகுப்பாளர் நானியிடம் பாட்டு பாடுமாறு கேட்கிறார். உடனே இடையில் குறுக்கிட்ட நடிகர் எஸ்ஜே சூர்யா நானியை பாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும், ஒருமுறை தான் பாடிய பாடல் வீடியோவை எடிட் செய்து ட்ரோல் செய்தனர். தற்போது உங்களையும் அதேபோல் டிரோல் செய்வார்கள் கவனமாக இருங்கள் என்று எஸ்ஜே சூர்யா நானியிடம் தெரிவித்தார்.
மேலும், வடிவேலு காமெடி காட்சி ஒன்றை நானியிடம் விளக்கிய எஸ்ஜே சூர்யா உங்களை பாட வைப்பதாக முயற்சித்து காமெடியில் வருவதை போல் உங்களது கிட்னியை எடுத்துக் கொள்வார்கள், பத்திரமாக இருங்கள் என்று எஸ்ஜே சூர்யா கூறுகிறார். இந்த சம்பவம் பேட்டியின் போது கலகலப்பை ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.
- இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுப்போக்கு திரைப்படமாக உருவாக இருக்கிறது.
கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கருடன்' படத்தை தொடர்ந்து, கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
'ஹாட்ரிக் கமர்சியல் ஹீரோ' சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை 'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சூரி -பிரசாந்த் பாண்டியராஜ் -லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பதால் இந்தத் திரைப்படமும் பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுப்போக்கு திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் ஒன் லைன் கேட்ட சூரி " இந்த மாதிரி ஒரு கதைக்குத்தான் இவ்வளவு நாள் காத்து இருந்தேன் என்று கூறியுள்ளார்.
படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக தற்பொழுது நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
- படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக சமீபத்தில் விக்ரம் தெரிவித்து இருந்தார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வசூலை பெற்று வருகிறது. இதுவரை திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக சமீபத்தில் விக்ரம் தெரிவித்து இருந்தார். படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.
படத்தின் இடம் பெற்றுள்ள `மினிக்கி மினிக்கி' பாடலின் வீடியோ பாடலை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர். பாடல் வெளியானதில் இருந்து மிகவும் வைரலாகியும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இப்பாடல்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
- நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை யுவன் தனது ஸ்டூடியோவாக பயன்படுத்தி வருகிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வாடகை விவகாரம் தொடர்பாக விசாரணையை துவங்கியது சென்னை காவல்துறை. போலீசார் விசாரணையில் வாடகை பாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
வாடகை விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் போலீசார் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் மொத்தமாக வாடகையை யுவன் செலுத்தி வந்த நிலையில், இம்முறை GOAT பட ஆடியோ வெளியான பிறகு வாடகை தருவதாக கூறியிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே வீட்டை காலி செய்ய யுவன் முயன்றதாக வீட்டு உரிமையாளர் புகார் அளித்தார். சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்த நிலையில், அவர் தரப்பு விளக்கத்தை கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- `பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
- வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
`பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கினர்.
மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது 'வாழை' என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வாழை மர அறுவடை செய்வதற்கு மக்கள் ஒரு கிராமத்தில் இருந்து செல்லும் வழக்கம் இருக்கிறது. அந்த ஊரை சேர்ந்த சிவலிங்கம் என்ற சிறுவனுக்கு செல்ல விருப்பமில்லை இதைச் சுறீயே டிரைலர் காட்சிகள் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
- இதுவரை தங்கலான் திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வசூலை பெற்று வருகிறது. இதுவரை திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் சமுத்திரகனி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் "தங்கலான் அசுர உழைப்பு தம்பி பா ரஞ்சித்????? சீயான் விக்ரம் தீபிடிக்குது சார் ?குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️" என பதிவிட்டுள்ளார்.
படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக சமீபத்தில் விக்ரம் தெரிவித்து இருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிவ ராஜ்குமார்.
- தற்பொழுது அவரது 131- வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிவ ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார்.
தற்பொழுது அவரது 131- வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு நேற்று பெங்களூருவில் தொடங்கியது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகவுள்ளது.
இப்படம் கார்த்திக் அத்வைத் இயக்கும் முதல் கன்னட திரைப்படமாகும். இவர் இதற்கு முன் பாயும் ஒளி நீ எனக்கு என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் நடிகர் யாஷ் சிவ ராஜ்குமாரை சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் அங்கு பேசினர். இவர்கள் சந்தித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






