என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    காதல், ஆக்ஷன், காமெடி, மருத்துவமனையில் நடக்கும் மாபியா, திரு நம்பியின் பிரச்சனை என திரைக்கதையை சுவாரசியமாக கொடுத்து இருக்கிறார்.

    சென்னையில் சாலை விபத்து ஒன்றில் வேன் முழுவதும் எரிந்து இருந்த நிலையில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உடல்கள் மீட்கப்படுகின்றனர். இறந்த 3 பேரும் கண் தெரியாத பெண்கள் என தெரிய வருகிறது. இதுகுறித்து விசாரிப்பதற்காக போலீஸ் உதவி கமிஷனரான ஆதித்ய மாதவன், இன்ஸ்பெக்டர் அஞ்சு குரியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முனிஷ் காந்த் ஆகியோர் விசாரணையில் ஈடுபடுகின்றனர்.

    இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது. இதனிடையே நாயகி கவுரி கிஷன் டாக்டராக பணிபுரிந்து வரும் மருத்துவமனையில் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையை கண்டுபிடிக்க கவுரி கிஷன் முயற்சி செய்கிறார்.

    இறுதியில் கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு வந்த பிரச்சினை என்ன? கவுரி கிஷன் அதை கண்டுபிடித்தாரா? வேன் விபத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பதை போலீஸ் அதிகாரியான ஆதித்ய மாதவன் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆதித்ய மாதவன் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். குறிப்பாக காட்சியில் ஸ்கோர் செய்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நாயகி கவுரி கிஷன் ஒரு டாக்டராக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். காதலனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது, மருத்துவமனையில் இருக்கும் பிரச்சனையை கண்டுபிடிக்க முயற்சி செய்வது என நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    மற்றொரு நாயகியாக நடித்து இருக்கும் அஞ்சு குரியன் போலீஸ் அதிகாரியாக மிடுக்கான நடை உடையுடன் அசத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சியில் மாஸ் காண்பித்து இருக்கிறார். மேலும் முனீஷ் காந்த், ஜெகன், ஆர். சுந்தர்ராஜன் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

    இயக்கம்

    மெடிக்கல் கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அபின் ஹரிஹரன். படம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். காதல், ஆக்ஷன், காமெடி, மருத்துவமனையில் நடக்கும் மாபியா, திரு நம்பியின் பிரச்சனை என திரைக்கதையை சுவாரசியமாக கொடுத்து இருக்கிறார். அதர்ஸ் என்கிற தலைப்பின் காரணத்தை படம் பார்ப்பவர்களுக்கு புரிய வைத்து இருப்பது சிறப்பு.

    இசை

    ஜிப்ரானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு

    அதேபோல் அரவிந்த்சிங்கின் ஒளிப்பதிவு கதையோடு அற்புதமாக பயணித்துள்ளது.

    சேரன் இயக்கி நடித்த ஆட்டோ கிராப் படம் தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது.

    இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கி 2004ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது.

    இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகிராப்' படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவியாளர்கள் தங்களின் அனுபவங்களை கலகலப்புடன் பகிர்ந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் சேரன், நடிகை சினேகா, சேரனின் உதவியாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெகதீசன், பாண்டிராஜ், உமாபதி, ஜெகன், பாடல் ஆசிரியர் சினேகன், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், முரளி, கலை இயக்குநர்கள் வைரபாலன், ஜே.கே, மணி ராஜ், நடிகர் கணேஷ் பாபு, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கேஜிஎப் சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருது பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் கமலின் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்கள்.
    • படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது. படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

    கமல் 237-ஆவது படத்தினை பிரபல சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ்(அன்புமணி, அறிவுமணி) சகோதர்கள் இயக்குகிறார்கள்.

    கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க மலையாள இயக்குநர் ஷ்யாம் புஷ்கரன் திரைக்கதையில் இப்படம் உருவாக உள்ளது.

    கேஜிஎப் சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருது பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் கமலின் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாவது அனைவரிடையே கவனம் பெற்றது.

    படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிப்பார் என்றும் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் கமல் 237 படத்தின் தொழில்நுட்ப குழுவை படக்குழு அறிமுகப்படுத்தி உள்ளது.

    அதன்படி, ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கு இசையமைப்பதாகவும், சுனில் கே.எஸ். ஒளிப்பதிவு செய்வதாகவும் ஷெமீர் கே.எம். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசையில் கடைசியாக வெளியான லோகா படம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    இவர்களுடன் இணைந்து கமல் எடுத்துக்கொண்ட புகைப்படங்ளும் வெளியாகி உள்ளது. 

    • மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார்.

    பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி மகேஷ் பாபுவை பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. படப்பிடிப்பு விறுவிறுபப்ான நடைபெற்று வருகிறது.

    இப்படத்தில் மலையாள மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் நடிக்கிறார் என்று ஏற்கனவே படக்குழு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இப்படத்தில் பிரித்விராஜ் மகேஷ் பாபுக்கு எதிராக வில்லன் வேடத்தில் கும்பா கேரக்டரில் நடிப்பார் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    ஸ்பைடர்மேன்-2 படத்தின் வில்லன் டாக்டர் ஆக்டோபஸ் வீல்சேரில் இருப்பதை இந்த போஸ்டர் நினைவூட்டுகிறது. அதேபோல் 24 படத்தில் சூர்யா வீல்சேரில் இருந்து கொண்டு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதையும் நினைவூட்டுகிறது.

    வருகிற 15-ந்தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெத்தி படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    ராம் சரண்- இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

    இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

    இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது என்ற அறிவிப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    இப்பாடலுக்கான ப்ரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சிகிரி பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது.

    • கடந்த செப்டம்பர் மாதம் தாங்கள் பெற்றோர்களாக போவதாக சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
    • திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல்-கத்ரீனா கைப். மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் இணைந்து நடித்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் தாங்கள் பெற்றோர்களாக போவதாக சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை தங்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இருவருக்கும் பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி, கரீனா கபூர், மாதுரி தீட்சித், பிபாஷா பாசு உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



    சென்னை ஐகோர்ட்டில் நாயகன் ரீ ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

    கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கினார். படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

    இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா அறிமுகமானார். மேலும், ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ்நாட்டில் 214 நாட்கள் ஓடியது.

    நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'நாயகன்' திரைப்படம் நேற்று வெளியாக இருந்தது.

    இதற்கிடையே, எஸ் ஆர் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் ஆர் ராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் நாயகன் ரீ ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதாவது, தாங்கள் நாயகன் படத்தின் வெளியீட்டு உரிமைய பெற்றிருந்தபோதும், வி.எஸ். பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் முறைகேடாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 'நாயகன்' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் ரீ-ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி என்.செந்தில்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, நீதிபதி செந்தில் குமார்," நாயகன் திரைப்படத்தை 16 முறை பார்த்திருக்கிறேன். காட்சி வாரியாக என்னால் சொல்ல முடியும்" என்று கருத்து தெரிவித்தார்.

    இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா படத்தை தொடர்ந்து, தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்றது.

    இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

    அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நதியே மியூசிக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

    தி கேர்ள் ஃபிரண்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

    இந்தநிலையில், தி கேர்ள் பிரண்ட் திரைப்படத்தின் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

    அதில்," தி கேர்ள் பிரண்ட் படத்தின் மூலம், படக்குழுவினர் சக்திவாய்ந்த ஒன்று.. முக்கியமான ஒன்று உருவாக்கியுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஜீரணிக்க கடினமாக இருக்கும் ஒன்று.

    அனைத்து நடிகர்களின் நடிப்பும் டாப் கிளாஸ் என்பது எனக்குத் தெரியும். குறிப்பாக, ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி, ராகுலஅ, அனு இமானுவேல் ஆகியோர் ஒரு தாக்கத்தை உருவாக்கப் போகிறார்கள்.

    நாளை நாம் அனைவரும் தி கேர்ள் பிரண்ட் படத்துடன் நடப்பதைப் பார்ப்போம். திரையரங்குகளில் சென்று அதை அனுபவியுங்கள்

    அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நிறைய அன்பும் பெரிய அணைப்புகளும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    தேவரகொண்டாவின் இந்த பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

    அந்த பதிவில்," இது சக்திவாய்ந்த ஒன்று. இது முக்கியமான ஒன்று. இதை ஜீரணிக்க கடினமாக இருக்கும் - நன்றாகச் சொன்னீர்கள். நன்றி..!

    தேவரகொண்டா நீங்கள் ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் மறைமுக ஆதரவாளராக இருந்து வருகிறீர்கள். இதற்காக நீங்கள் என்னைப் பற்றி பெருமைப்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

    • தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கவுரி கிஷனுக்கு பாராட்டுகள்.
    • அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா?

    அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள 'அதர்ஸ்' படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. சென்னையில் கடந்த வாரம் நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் 'பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே... வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று வேடிக்கையாக கேட்கப்பட்டது. இதையடுத்து யூ-டியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசிய கவுரி கிஷன், இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இதற்கிடையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய கவுரி கிஷனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது கவுரி கிஷன் 'இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு?', என்று ஆவேசப்பட்டார். இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

    அப்போது கவுரி கிஷன், ''இத்தனை ஆண்கள் உள்ள இடத்தில் ஒரு பெண்ணான என்னை 'டார்கெட்' செய்து கேள்வி கேட்கிறீர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனி உடலமைப்பு இருக்கும். அதற்காக என் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் கேட்கலாமா... இது உருவக்கேலி செய்வது போலத்தான். என் எடையை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?'', என்று ஆதங்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் படக்குழுவினர் கேட்டுக்கொண்டதால் அவர் அமைதியானார். இது படவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகையும், பா.ஜ.க. மாநில துணை தலைவியுமான குஷ்பு, கவுரி கிஷனுக்கு ஆதரவாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    * பத்திரிகைத்துறை தனது தளத்தை இழந்துவிட்டது.

    * பத்திரிகையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பத்திரிகைத்துறையை சாக்கடைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

    * ஒரு பெண்ணின் எடை எவ்வளவு என்பது அவர்களின் வேலை இல்லை. அதைப் பற்றி ஹீரோவிடம் கேட்பது?? என்ன ஒரு அவமானம்!

    * தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கவுரி கிஷனுக்கு பாராட்டுகள்.

    * அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா?

    * மரியாதை ஒருபோதும் ஒரு வழி போக்குவரத்து அல்ல. மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 



    • தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார்.
    • ராஷ்மிகா, ‘இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர்.

    ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லி வருகிறது. அந்த மோதிரமும் தற்போது வைரலாகி வருகிறது.

    இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

    இந்த நிலையில், விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இவர்களின் திருமணம் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ஹரிஷ் ராய் நேற்று காலமானார்.
    • அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    'கே.ஜி.எப்.' மற்றும் உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஓம்' படங்களில் நடித்து பிரபலமானவர் ஹரிஷ் ராய். இவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பெங்களூருவில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் ஹரிஷ் ராய்க்கு நுரையீரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ஹரிஷ் ராய் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, நடிகர் யாஷ் மறைந்த ஹரிஷ் ராய் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

    கன்னட சினிமாவில் மூத்த நடிகராக இருந்த ஹரிஷ் ராய் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

    சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதைதொடர்ந்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் நடிகர் அருண் விஜய் வீட்டில் சோதனை செய்தனர்.

    ×