என் மலர்
பள்ளி மற்றும் கல்லூரியில் காதல் தோல்விகளை சந்தித்த நாயகன் கிஷன் தாஸ், மேட்ரிமோனியல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு மேனேஜராக இருக்கும் நாயகி ஷிவாத்மிகாவுடன் சில சண்டைகள் போடுகிறார். பிறகு ஒரு கட்டத்தில் அவரையும் காதலிக்க ஆரம்பிக்கிறார். அவரோ காதலுக்கு ஓகே சொல்லும் நேரத்தில் சில காரணங்களால் பிரிகிறார்.
இறுதியில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? ஷிவாத்மிகா, கிஷன் தாசை விட்டு செல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கிஷன் தாஸ், பள்ளி மாணவன், கல்லுாரி மாணவன், வேலைக்கு செல்லும் இளைஞன் என மூன்று தோற்றங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.
நாயகியாக நடித்திருக்கும் ஷிவாத்மிகா, துணிச்சலான பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். கோபம், பாசம், காதல் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நண்பராக நடித்து இருக்கும் ஹர்சத் கான் பல இடங்களில் சிரிக்க வைத்து இருக்கிறார். விடிவி கணேஷ் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். அம்மா பாசத்தில் நெகிழ வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சாரங் தியாகு. இயக்குனர் கவுதம் மேனனின் உதவியாளராக பணியாற்றியதால் அவருடைய சாயல் ஆங்காங்கே தெரிகிறது.
சிலம்பரசனின் பின்னணி குரல் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. காதலை தேடி போக முடியாது... கொடுக்க தான் முடியும்... நீ எப்போ கொடுக்குற இடத்துல இருக்கியோ... காதல் உன்னை தேடி வரும்... அதுதான் காதல்... என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர். காதல் காட்சிகள் அழுத்தம் இல்லாதது வருத்தம். மேட்ரிமோனியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் வருவதை குறைத்து இருக்கலாம். பிரிவதற்கான காரணம் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை.
இசை
சித்து குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
- இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகிறது.
- இன்று மாலை வெளியாகும் பாடலை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையே, இப்படத்திற்கான ப்ரேமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் பாடல் இன்று மாலை 6.03-க்கு வெளியாகும் என்றும் இப்பாடலை விஜய் பாடியிருப்பதாக கூறப்படுகிறது.
இன்று மாலை வெளியாகும் பாடலை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது, 'ஜன நாயகன்' படத்தின் ஆடியோ வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 27-ந்தேதி மலேசியாவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து 'ஜன நாயகன்' படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
ஜனநாயகன் முதல் பாடல் இன்று (நவம்பர் 8) வெளியாகும் என படக்குழு நேற்று முன்தினம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் அந்த பாடல் இன்று மாலை 6.03-க்கு வெளியாகிறது என கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்களின் பாடல்கள் மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் விஜய் குரலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
- தி பேமிலி மேன் 2 தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆக்ஷன் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் தொடர்களை விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள் இடையே தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி வெளியான 'தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்தது.
இந்நிலையில், தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் & டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்
தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் நவம்பர் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் சீசன் - 3 டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
- ஆலுவாவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் நண்பர்களுடன் மது அருந்த வந்தார்.
- ஐ.டி.ஊழியரை காரில் கடத்தி சென்று, வெடிமரா பகுதியில் வைத்து தாக்கினர்.
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். தமிழில் கும்கி, வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். கொச்சி அருகே ஆலுவா நகரில் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி எர்ணாகுளம் பானர்ஜி சாலையில் உள்ள மதுபாருக்கு லட்சுமி மேனன் தனது 4 நண்பர்களுடன் சென்றதாக தெரிகிறது.

அங்கு ஆலுவாவை சேர்ந்த ஐ.டி. ஊழியரான ஷா சலீம் என்பவர் நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அப்போது அவருக்கும், லட்சுமி மேனனுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஷா சலீமை காரில் கடத்தி சென்று, வெடிமரா பகுதியில் வைத்து தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார், நடிகை லட்சுமி மேனன், அவரது நண்பர்கள் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் லட்சுமி மேனன் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை மூலம் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக நடிகை லட்சுமி மேனன், ஐ.டி. ஊழியர் ஆகிய 2 பேரும் ஐகோர்ட்டில் தெரிவித்தனர். இதை பரிசீலித்த நீதிபதி டயஸ் தலைமையிலான அமர்வு, நடிகை லட்சுமி மேனன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
- மலையாள சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படுபவர்.
- 47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக படங்கள் நடித்து வருகிறார்.
மலையாள சினிமா கொண்டாடும் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். மோகன்லால், மம்முட்டி என முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்த இவர் தமிழில் 'அசுரன்', 'துணிவு', 'விடுதலை-2', 'வேட்டையன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
மலையாள சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர், 47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக படங்கள் நடித்து வருகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார்.
இந்தநிலையில் 'இப்போதும் அதே ஸ்டைல் மற்றும் இளமையுடன் நீங்கள் வலம் வருகிறீர்களே... அதன் ரகசியம் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு, ''உடற்பயிற்சி மற்றும் நடனம் தான் காரணம். சரியான உணவு முறைகளும் என்னை பாதுகாப்பதாக உணருகிறேன்'' என்று சிரித்தபடி கூறுகிறார்.
மஞ்சு வாரியர் தினமும் தவறாமல் 'ஜிம்'முக்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
- திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
- சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன.
கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
மேலும் திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன.
இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அத்துடன் சிறந்த நடிப்புக்கான விருதுகளும் பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த விழாவை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.
- இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
- பர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா பாடலும் அண்மையில் வெளியானது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா பாடலும் அண்மையில் வெளியானது.
இந்நிலையில் 'ரெட்ட தல' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர்.
கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப்படம் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அகண்டா-2 தாண்டவம் படத்தின் டீசர் கடந்த 25ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முதல் பாடலான "அகண்டா தாண்டவம்" வருகிறது 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இன்று இப்பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமன் இசையமைக்க கல்யாணசக்ரவர்த்தி, திரிபுரனேனி ஆகியோர் பாடலை எழுதியுள்ளனர். சங்கர்மகாதேவன், கைலாஷ் கெர் பாடியுள்ளனர்.
விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.
மிகப்பெரிய வெற்றி படத்திற்குப் பிறகு சிவாஜி கணேசன் பேரன் தர்சன் கணேசனை வைத்து புதுப்படம் தயாரிப்பதாக அறிவித்திருந்தது. இப்படத்தில் கங்கை அமரன், ரோஜா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தை புதுமுக இயக்குனர் பாலசந்திரன் இயக்குகினார்.
இப்படத்திற்கு லெனின் பாண்டியன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்சனின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் போலீசாக நடிக்கிறார்.
தர்சன் கணேசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் இரண்டாவது மகனாவார். ராம் குமாரின் மூத்த மகனான துஷ்யந்த் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கிரார். பிரபுவின் மகனான விக்ரம் பிரபு ஏற்கனவே கதாநாயகனாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தர்சன் கணேசனும் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகர் கார்த்தி இந்த வீடியோவை வெளியிட்டு தர்சன் கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வம்சம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த டிமான்டி காலனி, டிமான்டி காலனி 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த ராம்போ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது தகவல் கொடுக்கப்படவில்லை.
- பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
- பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும்
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
ஜனநாயகன் முதல் பாடல் நாளை (நவம்பர் 8) வெளியாகும் என படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில் 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் அந்த பாடல் நாளை மாலை 6.03-க்கு வெளியாகும் என பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த பாடல் விஜய் குரலில் இருக்கும் என கூறப்படுகிறது.








