என் மலர்
இது புதுசு
- பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய M சீரிஸ் ஸ்பெஷல் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- M சீரிசின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் 50 ஜாரெ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய M5 50 ஜாரெ M எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ M5 50 ஜாரெ M எடிஷன் விலை ரூ. 1 கோடியே 79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எட்டாவது 50 ஜாரெ எடிஷன் மாடல் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கார் இந்தியாவுக்கு சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது.
50 ஜாரெ எடிஷன் மாடலில் லிமிடெட் எடிஷன் M5 கார் பிஎம்டபிள்யூ தனித்துவம் மிக்க பெயிண்ட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது அவென்டியுரைன் ரெட் மற்றும் 50 ஜாரெ M எடிஷன் லோகோ அடங்கிய பிஎம்டபிள்யூ பாரம்பரியம் மிக்க கிட்னி கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே M எடிஷன் லோகோ காரின் பின்புறம், வீல் ஹப் கேப்களிலும் வழங்கப்பட்டு உள்ளது.

பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் சரவுண்ட், M சீரிஸ் டபுள் பார்கள், M கில், மிரர் கேப் உள்ளிட்டவைகளில் மெஷ் உள்ளது. காரின் உள்புறம் M5 50 ஜாரெ M எடிஷன் மாடலில் அரகோன் பிரவுன் நிற மெரினோ லெதர், பிஎம்டபிள்யூ தனித்துவம் மிக்க ஹெட்லைனர், ஹெட் ரெஸ்ட்ரெயிண்ட்களில் M5 லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ M5 50 ஜாரெ எடிஷனில் ட்வின் டர்போ 4.4 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 625 ஹெச்பி பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு M ஸ்பெக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
- போல்ஸ்டார் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
- இது போல்ஸ்டார் நிறுவனத்தின் இரண்டாவது ப்ரோடக்ஷன் மாடல் ஆகும்.
போல்ஸ்டார் நிறுவனம் தனது இரண்டாவது சீரிஸ்-ப்ரோடக்ஷன் மாடலை போல்ஸ்டார் 3 பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இவை காருக்கு 517 ஹெச்பி பவர், 910 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
வால்வோவின் SPA2 பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் போல்ஸ்டார் 3 வால்வோ EX90 காரின் ட்வின் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். போல்ஸ்டார் 1 மற்றும் 2 வால்வோ கான்செப்ட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் போல்ஸ்டார் 3 டிசைன் மற்றும் கான்செப்ட் முழுக்க முழுக்க போல்ஸ்டார் மூலம் வடிவமைக்கப்பட்டது.

போல்ஸ்டார் 3 மாடல் டூயல் மோட்டார் பவர்டிரெயினுடன் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இவை ஒருங்கிணைந்து 489 ஹெச்பி பவர், 840 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் ரியர்-சார்ந்த ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.0 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
பெர்பார்மன்ஸ் பேக் பயன்படுத்தும் போது இந்த கார் 517 ஹெச்பி பவர், 910 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும். 111 கிலோவாட் ஹவர் பேட்டரி பயன்படுத்தும் போது போல்ஸ்டார் 3 மாடல் முழு சார்ஜ் செய்தால் 620 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார் மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகமாகும் என தெரிகிறது.
டாடா டியாகோ EV மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், எம்ஜி நிறுவனம் காம்பேக்ட் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
புதிய எலெக்ட்ரிக் கார் கொண்டு விலை அடிப்படையில் போட்டியை ஏற்படுத்தும் திட்டம் இல்லை என எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் எம்ஜி சிட்டி EV என அழைக்கப்படலாம். 2023 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இதைத் தொடர்ந்து எம்ஜி சிட்டி EV மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஏற்கனவே ஆசிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் வுலிங் ஏர் EV மாடலை அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்ட காராக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சாலைகளில் எம்ஜி சிட்டி EV சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் புதிய சிட்டி EV மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலை போன்றே எம்ஜி சிட்டி EV நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. எனினும், விலையை பொருத்தவரை எம்ஜி சிட்டி EV டாடா காருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படாது. எம்ஜி மோட்டார் இந்திய தலைவர மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா பயணிகள் வாகன பிரிவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.
- ஹோண்டா நிறுவனத்தின் புதிய 750 சீரிஸ் மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- புதிய XL750 டிரான்சால்ப் மாடல் இத்தாலியில் நடைபெற இருக்கும் 2022 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஹோண்டா நிறுவனம் தனது மிடில்வெயிட் அட்வென்ச்சர் பைக், ஹோண்டா XL750 டிரான்சால்ப் மாடலை இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் 2022 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா வரலாற்றில் டிரான்சால்ப் பெயர் மீண்டும் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. முன்னதாக டிரான்சால்ப் மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளது.

புதிய ஹோண்டா XL750 டிரான்சால்ப் பேரிங், சைடு பேனல்கள், விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஹெட்லைட் டிசைன் விவரங்கள் காப்புரிமை படங்களில் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா CB750 ஹார்னெட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜினே புதிய டிரான்சால்ப் மாடலிலும் வழங்கப்படுகிறது. இது 270 டிகிரி பேரலெல் ட்வின் என்ஜின் ஆகும்.
இந்த என்ஜின் 90.6 ஹெச்பி பவர், 75 நியீட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய ஹோண்டா மாடலில் ரிகிட் ஸ்டீல் டைமண்ட் பிரேம் வழங்கப்படுகிறது. தோற்றத்தில் இது CB750 ஹார்னெட் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. எனினும், இந்த மாடலில் அதிக சஸ்பென்ஷன் டிராவல், பெரிய முன்புற வீல், நீண்ட வீல்பேஸ் மற்றும் அதிக சவுகரியமான ஸ்டீரிங் ஆங்கில் வழங்கப்படுகிறது.
- கியா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய எதிர்கால திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
- இத்துடன் புதிய எலெக்ட்ரிக் கார் விலை விவரங்களையும் கியா வெளியிட்டு உள்ளது.
கியா நிறுவனம் பிரிட்டனில் 2023 சோல் எலெக்ட்ரிக் கார் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. 2021 ஆண்டு சோல் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு முந்தைய ஆண்டை விட 28 சதவீதம் அதிகரித்து இருந்தது. தற்போது இதனை மேலும் அதிகபடுத்த கியா நிறுவனம் மேம்பட்ட சோல் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
முதல் முறையாக புதிய "அர்பன்" அம்சங்கள் "எக்ஸ்ப்ளோர்" கிரேடுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்குகிறது. இதில் மீடியம் ரேன்ஜ் பேட்டரியும் அடங்கும். பிரிட்டனில் புதிய சோல் மாடல்களினி வினியோகம் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் துவங்குகிறது. புதிய சோல் மாடல் அர்பன் கிரேடு மற்றும் மீடியம் ரேன்ஜ் பேட்டரி மாடல் விலை 32 ஆயிரத்து 795 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 29 லட்சத்து 82 ஆயிரத்து 117 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கியா சோல் எக்ஸ்ப்ளோர் மற்றும் லாங் ரேன்ஜ் பேட்டரி பேக் விலை 38 ஆயிரத்து 995 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 35 லட்சத்து 45 ஆயிரத்து 896 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கியா நிறுவனத்தின் சிறிய கார் ஆகும். இத்துடன் நிரோ மற்றும் EV6 பிளாக்ஷிப் மாடல்களை கியா விற்பனை செய்து வருகிறது.
2023 வாக்கில் கியா EV9 மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் ட்ரியோ பெயரில் அறிமுகமாகும். இது பெரிய பேட்டரி கொண்ட கியா மாடலாக இருக்கும் என தெரிகிறது. 2027 வாக்கில் உலகம் முழுக்க 14 புது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய கியா திட்டமிட்டுள்ளது. இதில் பத்து மாடல்கள் புதிய எலெக்ட்ரிக் குளோபல் மாட்யுலர் பிளாட்பார்ம் (e-GMP) ஆர்கிடெக்சரில் உருவாகிறது. மற்ற மாடல்கள் ஏற்கனவே விற்பனையாகும் கார்களை தழுவி உருவாக்கப்படுகிறது.
- டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மல்டிஸ்டிராடா V4 S மாடலை அறிமுகம் செய்தது.
- 2022 V4 S மாடல் கணிசமான அப்டேட்களை பெற்று புது அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் 2022 மல்டிஸ்டிராடா V4 S அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2022 டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 S மாடல் ஐஸ்பெர்க் வைட் என புதிய நிறத்தில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 26 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலின் டாப் எண்ட் S வெர்ஷனை விட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
2022 டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 S மாடலில் பிரீலோட் செட்டப், ரிவைஸ்டு இன்போடெயின்மெண்ட் செட்டப், லோயர்டு சஸ்பென்ஷன் கிட் மற்றும் அலுமினியம் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பவர்டிரெயினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் 2022 மல்டிஸ்டிராடா V4 S மாடலிலும் 1158சிசி, கிரான்டூரிஸ்மோ V4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 167.6 ஹெச்பி பவர், 121 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் டுகாட்டி ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் இவோ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் வயர்-ஸ்போக் வீல்கள், 6.5 இன்ச் டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், நேவிகேஷன், கால்ஸ், மியூசிக் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 30 லிட்டர் பியூவல் டேன்க் உள்ளது.
புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 S மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் எண்டியூரோ என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கார்னெரிங் ஏபிஎஸ், வீலி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
- விடா பிராண்டிங்கில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிரிவாக விடா பிராண்டு உருவாக்கப்பட்டது. ஹீரோ விடா பிராண்டிங்கின் கீழ் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
விடா பிராண்டில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், ஸ்கூட்டரை தொடர்ந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளும் விடா பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது.

"ஒட்டுமொத்த சந்தையிலும் முதலில் ஸ்கூட்டர் அறிமுகம் செய்வதே வழக்கமாக உள்ளது. கிட்டத்தட்ட அனைவரும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், சிலர் மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளனர். அந்த வகையில், நாங்கள் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்வதை ஏற்கனவே அறிவித்துவிட்டோம். நிச்சயமாக மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகம் செய்கிறோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சல் தெரிவித்து இருக்கிறார்.
ஹீரோ விடா V1 மாடல் இந்திய சந்தையில் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஓவர் தி ஏர் அப்டேட்கள், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், கீலெஸ் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், எஸ்ஒஎஸ் அலெர்ட், டு-வே திராட்டில் என ஏராள அம்சங்கள் உள்ளன. இத்துடன் இகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா பிராண்டிங்கில் மொத்தம் மூன்று மாடல்களாக அறிமுகமாகி உள்ளன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் விடா V1 என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் கழற்றக்கூடிய வகையில் இரண்டு பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.
புதிய ஹீரோ விடா V1 மாடல் முழு சார்ஜ் செய்தால் 143 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. ப்ரோ மாடல் முழு சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இரு வேரியண்ட்களும் மணிக்கு அதிகபட்சம் 80 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. V1 பிளஸ் மாடல் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும் ப்ரோ மாடல் 3.2 நொடிகளிலும் எட்டிவிடும்.

அம்சங்களை பொருத்தவரை ஹீரோ விடா V1 மாடலில் எல்இடி இலுமினேஷன், 7 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, குரூயிஸ் கண்ட்ரோல், 2 வழி திராட்டில், கீலெஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, எஸ்ஒஎஸ் அலர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஸ்ப்லிட் சீட் செட்டப், டெலிஸ்கோபிக் முன்புற போர்க், பின்புறம் சிங்கில் ஷாக், சிங்கில் டிஸ்க் பிரேக் உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஹீரோ விடா V1 பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் என்றும் V1 ப்ரோ மாடல் விலை ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரை வாங்குவோர் லீஸ் மற்றும் பைபேக் ஆப்ஷன்களில் பயன்பெறலாம்.
- ஹூண்டாய் நிறுவனம் தனது ஐயோனிக் சீரிசில் புது எலெக்ட்ரிக் காரை சில மாதங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தியது.
- இந்த எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக டீசர்கள் வடிவில் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஹூண்டாய் நிறுவனம் ஜூலை மாத வாக்கில் முற்றிலும் புதிய ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரை சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தி இருந்தது. நான்கு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் செடான் மாடலான ஐயோனிக் 6 ஸ்வூபிங் ரூப்லைன் கொண்டிருக்கிறது. காரை காட்சிப்படுத்தியதோடு ஐயோனிக் 6 அம்சங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் புதிய ஐயோனிக் 6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதன் 2WD வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 614 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் 18 இன்ச் மற்றும் 20 இன்ச் என இருவித வீல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 20 இன்ச் வீல் கொண்ட வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 545 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

ஹூண்டாய் ஐயோனிக் 6 AWD வேரியண்ட் (20 இன்ச் வீல்) முழு சார்ஜ் செய்தால் 583 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதன் 20 இன்ச் வீல் கொண்ட வேரியண்ட் 519 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதன் பேஸ் வேரியண்டில் 53 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதன் 18 இன்ச் வீல் கொண்ட வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 429 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
சார்ஜிங்கை பொருத்தவரை ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடலை 800 வோல்ட் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜர் கொண்டு 10 இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும். புதிய ஐயோனிக் 6 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், ஹூண்டாய் நிறுவனம் விரைவில் ஐயோனிக் 5 கிராஸ் ஒவர் மாடலை வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் அக்சஸ் 125 ஸ்கூட்டரை புதிய நிறங்களில் அறிமுகம் செய்தது.
- அந்த வகையில் அக்சஸ் 125 மாடல் தற்போது டூயல் டோன் நிற ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது அக்சஸ் 125 ஸ்கூட்டரின் டூயல் டோன் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் சுசுகி அக்சஸ் 125 சாலிட் ஐஸ் கிரீன் / பியல் மிரேஜ் வைட் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. புதிய டூயல் டோன் ஆப்ஷன் சுசுகி அக்சஸ் 125 ரைடு கனெக்ட் மற்றும் ஸ்பெஷல் எடிஷனில் மட்டுமே கிடைக்கிறது.
முன்னதாக சுசுகி அக்சஸ் 125 மாடல் மெட்டாலிக் ராயல் பிரான்ஸ், பியல் மிரேஜ் வைட், மெட்டாலிக் மேட் பிளாக், மெட்டாலிக் மேட் போர்டௌக்ஸ் ரெட், பியர் மிரேஜ் வைட், மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர். பியர் மிரேஜ் வைட் மற்றும் மெட்டாலிக் டார்க் கிரீனிஷ் புளூ போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வரிசையில் தான் தற்போது டூயல் டோன் ஆப்ஷன் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

சுசுகி அக்சஸ் 125 ரைடு கனெக்ட் எடிஷனில் ப்ளூடூத் சார்ந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், அழைப்புகள், அதிவேக எச்சரிக்கை, போன் பேட்டரி நிலை, எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் அலெர்ட், மிஸ்டு கால் என ஏராளமான விவரங்களை காண்பிக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் வெளிப்புறம் பியூல் லிட், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பொசிஷன் லைட்கள், யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்திய சந்தையில் புதிய சுசுகி அக்சஸ் 125 டூயல் டோன் விலை ரூ. 85 ஆயிரத்து 200, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- சர்வதேச சந்தையில் இந்த கார் பெண்ட்லி பெண்ட்யகா, பெராரி புரோசங் மற்றும் லம்போர்கினி உருஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
உலகின் சக்திவாய்ந்த ஆடம்பர் எஸ்யுவி மாடல்- ஆஸ்டன் மார்டின் DBX707 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஆஸ்டன் மார்டின் DBX707 விலை ரூ. 4 கோடியே 63 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே இந்தியாவில் கிடைக்கும் ஆஸ்டன் மார்டின் DBX மாடலின் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும்.
புதிய ஆஸ்டன் மார்டின் DBX707 பெயரில் உள்ள 707 என்பது இந்த கார் வெளிப்படும் திறனை குறிக்கிறது. அந்த வகையில் இது உலகின் சக்திவாய்ந்த ஆடம்பர எஸ்யுவி என்ற பெருமையை ஆஸ்டன் மார்டின் DBX707 பெற்று இருக்கிறது. இது லம்போர்கினி உருஸ் மாடலை விட வேகமானது ஆகும். மேலும் விலை உயர்ந்த ஆடம்பர எஸ்யுவி மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் பெண்ட்லி பெண்ட்யகா, பெராரி புரோசங் மற்றும் லம்போர்கினி உருஸ் போன்ற மாடல்களுக்கு புதிய ஆஸ்டன் மாமர்டின் DBX707 போட்டியாக அமைகிறது.

ஆஸ்டன் மார்டின் DBX707 மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 707 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு வெட் கிளட்ச் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 311 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
ஸ்டைலிங்கை பொருத்தவரை ஆஸ்டன் மார்டின் DBX707 மாடலில் முற்றிலும் புதிய முன்புறம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது DBX மாடலில் இருப்பதை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த காரின் முன்புறம் பெரிய கிரில், புது தோற்றம் கொண்ட டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய ஏர் இண்டேக், பிரேக் கூலிங் டக்ட்கள், முன்புற ஸ்ப்லிட்டர் ப்ரோபைல் வழங்கப்பட்டு உள்ளன.
- மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV300 ஸ்போர்ட்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
- முன்னதாக 2022 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் காரை காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா நிறுவனம் விரைவில் XUV300 காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் சக்திவாய்ந்த வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வேரியண்ட் XUV300 ஸ்போர்ட்ஸ் எனும் பெயரில் வெளியாக உள்ளது. 2022 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் மஹிந்திரா நிறுவனம் XUV300 ஸ்போர்ட்ஸ் மாடலை காட்சிக்கு வைத்திருந்தது.
புதிய மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினின் ரி-டியுன் செய்யப்பட்ட மாடல் ஆகும். இதில் உள்ள என்ஜின் 128 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களில் மஹிந்திரா நிறுவனம் XUV300 ஸ்போர்ட்ஸ் மாடலை நான்கு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.

காட்சிக்கு வைக்கப்பட்ட மாடலை பொருத்தவரை இந்த எஸ்யுவி மாடலில் ஸ்போர்ட்ஸ் பேட்ஜிங், காண்டிராஸ்ட் நிற பாடி டீகல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் காரின் டேஷ்போர்டு மற்றும் செண்டர் கன்சோல் போன்ற பகுதிகளில் ரெட் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் மாடல் பற்றிய இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய மஹிந்திரா XUV300 ஸ்போர்ட்ஸ் மாடல் கியா சொனெட் 1.0 மற்றும் ஹூண்டாய் வென்யூ 1.0 டர்போ என இரண்டு கார்களுக்கு போட்டியாக அமையும்.






