என் மலர்tooltip icon

    இது புதுசு

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • விரைவில் வெளியிட இருக்கும் மைக்ரோ எலெக்ட்ரிக் எஸ்யுவி காரின் கான்செப்ட்-ஐ எம்ஜி மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

    ப்ரிட்டனை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தியாளர் எம்ஜி மோட்டார்ஸ்-இன் கிளை நிறுவனமான பௌஜூன் புதிதாக மைக்ரோ எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதே மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த கார் எம்ஜி பிராண்டிங்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    சீனாவில் அறிமுகமாகி இருக்கும் ஆல்-எலெக்ட்ரிக் மைக்ரோ எஸ்யுவி கான்செப்ட் பிரபல எஸ்யுவி மாடல்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த கான்செப்ட் ஒட்டுமொத்த தோற்றம் சுசுகி ஜிம்னி, போர்டு பிரான்கோ மற்றும் டொயோட்டாவின் எப்ஜெ குரூயிசர் மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் வெளிப்புறம் எதிர்கால டிசைன் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    காரின் வெளிப்புறம் டூயல் டோன் நிறங்கள், நான்கு ஸ்ட்ரிப்கள் அடங்கிய எல்இடி டே-டைம் ரன்னிங் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ரக்கட் பாடிவொர்க், முன்புறம் இரண்டு டோயிங் ஹூக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் மொத்தத்தில் இரண்டு கதவுகளே வழங்கப்படுகின்றன. இதன் மூலம் காரின் விலையை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகன சோதனை இந்திய சாலைகளில் நடைபெற்றது. இந்த கார் E230 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது வுலிங் ஏர் எலெக்ட்ரிக் வாகனத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. வுலிங் என்பதும் எம்ஜி நிறுவனத்தின் துணை பிராண்டு ஆகும். வுலிங் பிராண்டின் ஏர் மாடல் சமீபத்தில் தான் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    • லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் S மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய உருஸ் S மாடலில் செயல்திறனுடன், ஆடம்பர வசதிகள் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன.

    லம்போர்கினி நிறுவனம் உருஸ் சீரிசில் புது மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லம்போர்கினி கார் உருஸ் S என அழைக்கப்படுகிறது. புதிய லம்போர்கினி உருஸ் S மாடலில் அதிக ஆடம்பர அம்சங்கள் மற்றும் கஸ்டமைசேஷன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இண்டீரியரை பொருத்தவரை புதிய உருஸ் S மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை.

    எனினும், இந்த காரில் ஆடம்பரத்திற்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த காரின் இண்டீரியர் அம்சங்கள் வித்தியாசமான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய உருஸ் S மாடலில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 666 ஹெச்பி பவர் மற்றும் 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். போக்ஸ்வேகன் குழுமத்தின் மிகவும் சக்திவாய்ந்த வி8 என்ஜின் என்ற பெருமையை இந்த மாடலும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

    புதிய லம்போர்கினி உருஸ் S மாடல்- சபியா, நீவ் மற்றும் டெர்ரா என மூன்று வித ஆஃப் ரோட் ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்டிரீட், ஸ்போர்ட் மற்றும் டிராக் போன்ற டிரைவிங் மோட்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் வினியோகம் ஆண்டு இறுதியில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் தான் லம்போர்கினி நிறுவனம் தனது 200-ஆவது எஸ்யுவியை இந்தியாவில் வினியோகம் செய்தி இருந்தது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    இந்திய கார் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் புதிய டியாகோ EV எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டியாகோ EV காருக்கான முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது. வினியோகம் ஜனவரி மாத வாக்கில் துவங்க உள்ளது.

    புதிய டியாகோ EV மாடலின் முன்புறம் பிளான்க்டு-ஆஃப் கிரில், பிரத்யேக EV பேட்ஜ், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் புளூ நிற ஹைலைட்கள், பக்கவாட்டு பகுதியில் ட்வீக் செய்யப்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் உள்புறமும் எலெக்ட்ரிக் புளூ நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த காரில் ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் வீல் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    மேலும் புதிய டியாகோ EV மாடலில் பல்வேறு டிரைவ் மோட்கள், ரி-ஜென் மோட்கள், குரூயிஸ் கண்ட்ரோல், 45 Zகனெக்ட் அம்சங்கள், ஸ்மார்ட்வாட்ச் வசதி, லெதர் இருக்கை மேற்கவர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், எலெக்ட்ரிக் ஆட்டோ போல்டு ORVMகள், பவர்டு பூட் ஒபனிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    புதிய டாடா டியாகோ EV மாடலில்- 192. கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 250 மற்றும் 315 கிமீ ரேன்ஜ் வழங்குகின்றன. இத்துடன் 3.3 கிலோவாட் மற்றும் 7.2 கிலோவாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளன. மேலும் டிசி பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதை கொண்டு காரை 57 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

    • பிராபஸ் நிறுவனத்தின் புதிய P 900 ராக்கெட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் மொத்தத்தில் பத்து யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    ஜெர்மன் நாட்டு டியூனிங் நிறுவனமான பிராபஸ் P 900 ராக்கெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. பிராபஸ் P 900 ராக்கெட் எடிஷன் பிக்கப் டிரக் ஒட்டுமொத்தத்தில் பத்து யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    பிராபஸ் P 900 ராக்கெட் எடிஷன் ஜெர்மன் நாட்டை சேர்ந்த டியூனிங் நிறுவனமான பாங்கர்ஸ் 800 அட்வென்ச்சர் XLP பிக்கப் டிரக்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய P 900 ராக்கெட் எடிஷன் மாடல் அட்வென்ச்சர் ரக XLP மாடல்களின் பிக்கப் பாடி கொண்டிருக்கின்றன. இத்துடன் 900 ராக்கெட் எஸ்யுவியின் சேசிஸ் மற்றும் பவர்டிரெயின் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    புதிய P 900 ராக்கெட் எடிஷன் பிக்கப் டிரக்-இலும் 4.5 லிட்டர் ட்வின் டர்போ பிராபஸ் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை உருவாக்க 4.0 லிட்டர் ட்வின் டர்போ AMG வி8 பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் பெரிய டர்போ சார்ஜர்கள், பில்லட் கிரான்க்‌ஷாப்ட், போர்ஜ் செய்யப்பட்ட பிஸ்டன்கள், போர்ஜ் செய்யப்பட்ட கனெக்டிங் ராட்கள், பூஸ்ட்எக்ஸ்டிரா வால்வுகள், ஹை-பிரெஷர் பம்ப்கள், ரேம்-ஏர் இன்டேக் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்தனை மாற்றங்கள் செய்யப்பட்ட என்ஜின் 4470சிசி திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 888 ஹெச்பி பவர், 1250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பிராபஸ் P900 ராக்கெட் எடிஷன் ஒட்டுமொத்த எடை 2720 கிலோ ஆகும். இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 280 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த காருக்கான முன்பதிவு ஜூலை மாத வாக்கில் துவங்கி நடைபெற்று வந்தது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா மாடலின் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய கிராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யுவி விலை ரூ. 10 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. முன்னதாக மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு ஜூலை மாத வாக்கில் துவங்கியது.

    புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் சிக்மா, டெல்டா, சீட்டா, ஆல்பா, சீட்டா பிளஸ் மற்றும் ஆல்பா பிளஸ் என ஆறு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார்- நெக்சா புளூ, ஆர்க்டிக் வைட், ஸ்பிலெண்டிட் சில்வர், கிராண்டியர் கிரே, செஸ்ட்நட் பிரவுன், ஒபுலண்ட் ரெட், ஆர்க்டிக் வைட் மற்றும் பிளாக் ரூப், ஸ்பிலெண்டிட் சில்வர் மற்றும் பிளாக் ரூப், ஒபுலண்ட் ரெட் மற்றும் பிளாக் ரூப் என ஒன்பது விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    இந்த கார் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் என்ஜின், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் சிஸ்டம் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் 102 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் 91 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் eCVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கிராண்ட் விட்டாரா மாடல் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், காண்டிராஸ்ட் நிற ஸ்கிட் பிலேட்கள், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் பின் ஆண்டெனா, பானரோமிக் சன்ரூப், டூயல் டோன் பிளாக் மற்றும் பிரவுன் இண்டீரியர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் டிஜிட்டல் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், ஹெச்யுடி, பேடில் ஷிப்டர்கள், சுசுகி கனெக்ட் டெலிமேடிக்ஸ், டிரைவ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணண் செய்யப்பட்டு உள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டியாகோ EV இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய டாடா எலெக்ட்ரிக் கார் கனெக்டெட் தொழில்நுட்பம் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் டாடா டியாகோ EV மாடல் செப்டம்பர் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    ஹேச்பேக் மாடலில் முதல் முறை வழங்கப்படும் அம்சங்கள் டியாகோவில் வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இதில் Z-கனெக்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் சார்ந்த ரிமோட் அம்சங்களை இயக்க முடியும்.

    புதிய டியாகோ EV மாடலில் ரிஜெனரேஷன் மோட்கள் வழங்கப்பட உள்ளது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது விற்பனை செய்யப்படும் டாடா டிகோர் EV மாடலில் CCS2 சார்ஜிங் மற்றும் 25 கிலோவாட் DC பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதே சார்ஜிங் வசதி புதிய டியாகோ EV மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    பவர்டிரெயினை பொருத்தவரை டியாகோ EV மாடலில் டிகோர் EV காரில் வழங்கப்பட்ட 55 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 26 கிலோவாட் ஹவர் லிக்விட் கூல்டு பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.

    • மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் G4 புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட 4WD வேரியண்டிற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது அல்டுராஸ் G4 புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய அல்டுராஸ் மாடல் விலை ரூ. 30 லட்சத்து 68 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது வேரியண்ட் 2WD ஹை என அழைக்கப்படுகிறது. இந்த வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த 4WD மாடலுக்கு மாற்றாக அமைகிறது.

    தற்போதைய 4WD வேரிண்ட் உடன் ஒப்பிடும் போது மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை வேரியண்டில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் நீக்கப்பட்டு இருக்கிறது. புது வேரியண்ட் காரணமாக அல்டுராஸ் G4 விலை தற்போது ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை குறைந்து இருக்கிறது. அல்டுராஸ் G4 4WD வேரியண்ட் விலை தற்போது ரூ. 31 லட்சத்து 88 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் 2WD வேரியண்ட் விலை ரூ. 30 லட்சத்து 68 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை வேரியண்ட் ஹெச்ஐடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லைட்கள், கார்னரிங் வசதி, 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், டிண்ட் செய்யப்பட்ட கிளாஸ், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங், 8 ஏர்பேக், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூப் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 178 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் XC60 மற்றும் XC90 என இரு கார்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இரண்டு புதிய வால்வோ கார்களிலும் பெரும்பாலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

    வால்வோ இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய XC60 மற்றும் XC90 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் XC40 பேஸ்லிப்ட், 2023 வால்வோ S90 போன்ற மாடல்களையும் வால்வோ அறிமுகம் செய்து இருக்கிறது. 2023 வால்வோ XC60 மாடலின் விலை ரூ. 65 லட்சத்து 90 ஆயிரம், என துவங்குகிறது. வால்வோ XC90 மாடல் விலை ரூ. 94 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வால்வோ XC60 மாடலில் முற்றிலும் புது கிரில், ஹெட்லேம்ப், புது மாற்றம் செய்யப்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் ஆண்ட்ராய்டு சார்ந்த ஒஎஸ், டச் ஸ்கிரீன், 1100 வாட் போவர்கள், வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், ADAS அம்சம், 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஏர் பியூரிபையர், பானரோமிக் சன்ரூப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வால்வோ XC90 மாடலில் மேம்பட்ட ஏர் பியுரிபையர், PM 2.5 பில்ட்டர், ஆண்ட்ராய்டு சார்ந்த டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பில்ட்-இன் கூகுள் சேவைகள், ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 19 ஸ்பீக்கர் போவர் மற்றும் வில்கின்ஸ் ஸ்டீரியோ சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பிற்கு இந்த மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், 360 டிகிரி கேமரா, லேன் கீப் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    புதிய வால்வோ XC90 மாடலில் 2.0 லிட்டர் என்ஜினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 300 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    வால்வோ XC60 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோவ்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இறுக்கிறது. இந்த என்ஜின் 250 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய XC60 மாடல் ஆடி கியூ5, பிஎம்டபிள்யூ X3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பன்ச் மைக்ரோ எஸ்யுவி மாடலின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய டாடா பன்ச் மாடல் கேமோ கிரீன் நிற பெயிண்ட் கொண்டிருக்கும் என டீசர்களில் தெரியவந்துள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எஸ்யுவி மாடல்களின் ஜெட் எடிஷனை சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது டாடா பன்ச் மாடலின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் கேமோ எடிஷன் என அழைக்கப்படும் என தெரிகிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் கேமோ பேட்ஜ்கள், கேமோ கிரீன் வெளிப்புற பெயிண்ட், ORVM-கள், அலாய் வீல், ரூப் உள்ளிட்டவைகளில் கிளாஸ் பிளாக் அக்செண்ட் செய்யப்பட்டு உள்ளது. உள்புறம் காண்டிராஸ்ட் நிற இன்சர்ட், லெதர் இருக்கை மேற்கவர்களில் புதிய தீம் செய்யப்பட்டு இருக்கிறது.

     இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய கேமோ எடிஷன் மாடல்: 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    தற்போது டாடா பன்ச் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 93 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய டாடா பன்ச் கேமோ எடிஷன் மாடல் நாளை (செப்டம்பர் 22) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQS 580 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் பூனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது EQS 580 4மேடிக் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு கட்டணம் ரூ. 25 லட்சம் ஆகும். கடந்த மாதம் இதே காரின் AMG வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது EQS 580 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடல் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடலில் 107.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் 516 ஹெச்பி பவர், 885 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    அளவில் இந்த கார் 5216எம்எம் நீளமாகவும், 1926 எம்எம் அகலம், 1512 எம்எம் உயரமாக இருக்கிறது. இதில் மொத்தம் மூன்று டிஸ்ப்ளே ஸ்கிரீன்கள், ஆக்டிவ் ஆம்பியன்ட் லைட்டிங், பானரோமிக் சன்ரூப் வழங்கப்படுகிறது. இத்துடன் லெதர் இருக்கை கவர்கள், பிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் உள்ளது.

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது XC40 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய வால்வோ காரில் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

    வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் XC40 பேஸ்லிப்ட் மற்றும் XC90 பேஸ்லிப்ட் மாடல்களை செப்டம்பர் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு கார்கள் அறிமுகமாகும் முன்பே புதிய XC40 பேஸ்லிப்ட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    தற்போது லீக் ஆன தகவல்களின் படி புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 12.3 இன்ச் அளவில் இரண்டாம் தலைமுறை டிரைவர் டிஸ்ப்ளே, க்ரிஸ்டல் கியர் நாப், இரண்டு டைப் சி போர்ட்கள், புதிய இண்டீரியர் தீம், ஆக்டிவ் நாய்ஸ் கண்ட்ரோல், ஏர் பியூரிபையர், மல்டி பில்ட்டர், ஆட்டோ டிம்மிங் ORVM-கள், ஆப்பிள் கார்பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.


    புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் டிரைவ் மோட் ஸ்விட்ச்கள், டூயல் டோன் ஆப்ஷன், ரோட் சைன் விவரங்கள், ஹெட்லேம்ப் ஸ்டேடிக் பெண்டிங் பன்ஷன் உள்ளிட்டவை நீக்கப்படுகிறது. புதிய மாடல் க்ரிஸ்டல் வைட், ஜார்ட் புளூ, பியுஷன் ரெட், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    2022 வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டர்போ என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவி மாடல் ஒற்றை வேரியண்டில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த கார் வால்வோ XC40 அல்டிமேட் B4 மைல்டு ஹைப்ரிட் எனும் பெயரில் கிடைக்கிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கார் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
    • புதிய பென்ஸ் கார் பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் செடான் மாடல் ஆகும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த மாதம் இந்திய சந்தையில் புதிய EQS சீரிசை அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் செடான் மாடலின் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் EQS 580 எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கார் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடலில் 107.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை 523 ஹெச்பி பவர், 856 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. மேலும் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 770 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.


    மெர்சிடிஸ் AMG-EQS 53 மாடலுடன் ஒப்பிடும் போது EQS 580 மாடலில் சற்றே எளிமையான டிசைன் வழஹ்கப்படும் என தெரிகிறது. இந்த காரில் பிளான்க்டு-அவுட் கிரில், 21 இன்ச் அளவில் வீல்கள், இருபுறமும் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படுகின்றன.

    காரின் உள்புறம் பென்ஸ் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஹைப்பர் ஸ்கிரீன்- டேஷ்போர்டின் முழு அளவுக்கு நீள்கிறது. இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடலுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்த எந்த காரும் விற்பனை செய்யப்படவில்லை. 

    ×