என் மலர்tooltip icon

    இது புதுசு

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய டியாகோ எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், தனது தற்போதைய கார் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டாடா ஹேரியர் மிட்-சைஸ் எஸ்யுவி மற்றும் பன்ச் மைக்ரோ எஸ்யுவி உள்ளிட்டவை எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை உருவாக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டின் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே போன்று டாடா பன்ச் எலெக்ட்ரிக் வெர்ஷனும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 2025 வாக்கில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது.


    புதிய ஹேரியர் எலெக்ட்ரிக் மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோ என இதுவரை எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வு நடைபெற இருப்பதை அடுத்து ஹேரியர் எலெக்ட்ரிக் மாடல் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் மாடல் விலை இந்தியாவில் ரூ. 20 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும்.

    டாடா டிகோர் மற்றும் நெக்சான் எலெக்ட்ரிக் மாடல்களின் இடையில் பன்ச் எலெக்ட்ரிக் மாடல் நிலை நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. வழக்கமான பெட்ரோல் கார் மாடல்களை விட எலெக்ட்ரிக் கார் விலை 30 முதல் 40 சதவீதம் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது டாடா பன்ச் மாடல் பெட்ரோல் வடிவில் மட்டுமே கிடைக்கிறது. ஹேரியர் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    Photo Courtesy: Cartoq

    • போர்டு நிறுவனம் ஏழாம் தலைமுறை மஸ்டங் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய போர்டு மஸ்டங் மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்டு தனது பாரம்பரியம் மிக்க மஸ்டங் மாடலின் ஏழாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த காரில் புதிய எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியர், சக்திவாய்ந்த வி8 சேர்த்து இருவித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    போர்டு வரலாற்றில் முதல் முறையாக மஸ்டங் டார்க் ஹார்ஸ் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இது டிராக் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும். இதில் அதிக செயல்திறன் வழங்கும் அப்கிரேடுகளை கொண்டிருக்கிறது.


    புதிய தலைமுறை மஸ்டங் மாடல் ஜிடி மற்றும் இகோபூஸ்ட் ட்ரிம் லெவல்களில் கூப் மற்றும் கன்வெர்டிபில் பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்டீரியர் டிசைன் 1960-க்களில் வெளிவந்த ஒரிஜினல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதல் முறையாக ஜிடி மற்றும் இகோபூஸ்ட் மாடல்கள் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.

    ஒட்டுமொத்தத்தில் புதிய மஸ்டங் ஹெக்சகன் வடிவ கிரில், பெரிய ஏர் இன்லெட்கள், மூன்று பார் எல்இடி ஹெட்லைட்கள், எக்ஸ்டெண்ட் செய்யப்பட்ட பூட், கூர்மையான டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் மொத்தத்தில் 11 நிறங்களில் கிடைக்கிறது. இதில் வேப்பர் புளூ மற்றும் எல்லோ ஸ்பிலாஷ் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    ஏழாம் தலைமுறை போர்டு மஸ்டங் மாடல் 5.0 லிட்டர் கோயோட் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டூயல் கோல்டு ஏர் இண்டேக், டூயல் திராட்டில் பாடி டிசைன் மற்றும் அதிக ஏர்-ஃபுளோ ரேட்களை வழங்குகிறது. இத்துடன் 2.3 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட ட்வின் ஸ்கிரால், இகோபூஸ்ட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இகோபூஸ்ட் வெர்ஷனில் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், வி8 என்ஜினில் ஆப்ஷனாகவும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்களின் செயல்திறன் பற்றி போர்டு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் இரண்டு மற்றும் நான்கு கதவுகள் கொண்ட வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    லேண்ட் ரோவர் நிறுவனம் டிபெண்டர் 75th லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. 1948 முதல் விற்பனை செய்யப்பட்டு வருவதை கொண்டாடும் வகையில் இந்த லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடல் இரு கதவுகள் கொண்ட 90 மற்றும் நான்கு கதவுகள் கொண்ட 110 ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் 90 மாடலின் விலை 85 ஆயிரத்து 995 யூரோக்கள் என்றும் 110 மாடல் விலை 89 ஆயிரத்து 995 யூரோக்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டிபெண்டர் லிமிடெட் எடிஷன் காரின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. சந்தையில் விற்பனையாகும் சிறந்த ஆப்ரோடர் மாடல்களில் ஒன்றாக டிபெண்டர் விளங்கி வருகிறது.

    லேண்ட் ரோவர் டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடல் HSE வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், மூன்று ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், மெமரி சீட்கள், 11.4 இன்ச் பிவி ப்ரோ இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர லேண்ட் ரோவர் டிபெண்டர் லிமிடெட் எடிஷன் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் என்ஜின் ஆப்ஷ்கள் லேண்ட் ரோவர் டிபெண்டர் ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த காரின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், காரை வாங்க பல ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

    மாருதி சுசுகி நிறுவனம் கிராண்ட் விட்டாரா மாடலின் விலையை சில தினங்களுக்கு முன் அறிவித்தது. தற்போது இந்த காரை வாங்க சுமார் 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது.

    ஜூலை 11 ஆம் தேதி புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது .புதிய கிராண்ட் விட்டாரா மாடலின் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்டை வாங்க 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.


    இந்த காரை வாங்கியவர்களில் பெரும்பாலானோர் மைல்டு ஹைப்ரிட் வேரியண்டையே தேர்வு செய்துள்ளனர். அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கிராண்ட் விட்டாரா பெயர் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த கார் மைல்டு ஹைப்ரிட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    இதன் 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் மாடல் 114 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் 101 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மாடல் புதிய மஹிந்திரா லோகோவுடன் விற்பனையகம் வந்தடைந்துள்ளது.
    • முன்னதாக XUV700, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N போன்ற மாடல்களில் மட்டுமே புது லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது புது லோகோவை அனைத்து மாடல்களிலும் வழங்கும் பணிகளை மெல்ல துவங்கி இருக்கிறது. தற்போது மஹிந்திராவின் புது லோகோ XUV700, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N என மூன்று மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் மஹிந்திரா பொலிரோ நியோ மாடலும் விரைவில் புது லோகோவுடன் விற்பனைக்கு வருகிறது.


    புகைப்படத்தில் இருப்பதை போன்றே மஹிந்திரா பொலிரோ நியோ மாடல் நாட்டின் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ட்வின் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் காரின் கிரில், வீல் மற்றும் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் புதிய பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. புகைப்படத்தில் இருப்பது மஹிந்திரா பொலிரோ நியோ டாப் எண்ட் N10 (O) வேரியண்ட் ஆகும்.

    காரை சுற்றி புது லோகோ தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட எம் ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    Photo Courtesy: The Car Show

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் பிரிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்த நிலையில், புதிதாக டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தனது புது வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புது எலெக்ட்ரிக் கார் டாடா டியாகோ EV பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் இதே மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த கார் இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

    தற்போது டாடா டிகோர் EV மற்றும் நெக்சான் EV என இரண்டு எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. முன்னதாக 2017 வாக்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா டியாகோ EV கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. வரும் வாரங்களில் இந்த கார் முற்றிலும் வித்தியாசமான மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    புதிய டியாகோ EV மாடலில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டிகோர் EV மாடலில் இருப்பதை போன்ற பவர்டிரெயின் வழங்கப்படலாம். சிப்டிரான் சார்ந்த டிகோர் எலெக்ட்ரிக் செடான் மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 74 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 306 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    இது மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடகை கார் ஓட்டுவோருக்காக டிகோர் EV X-Pres T EV மாடலையும் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடலில் 21.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள மோட்டார் 40 ஹெச்பி பவர், 105 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் துவங்க உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் XUV400 எலெக்ட்ரிக் கார் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வரும் மாதங்களில் இந்த காரின் வெளியீடு நடைபெற இருக்கிறது. புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மூலம் மஹிந்திரா நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி உள்ளது.

    டிசைனை பொருத்தவரை புதிய மஹிந்திரா XUV400 மாடல் டூயல் டோன் பெயிண்ட், மூடப்பட்ட கிரில் பகுதி, X வடிவ இன்சர்ட்கள், ட்வின் பீக் லோகோ, ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், ஃபாக் லைட்கள், இவி சார்ஜிங் அவுட்லெட் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இத்துடன் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களில் சில்வர் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன.


    புதிய மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் காரில் 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கல், டூயல் டோன் ORVMகள், பிளாக்டு அவுட் பி பில்லர்கள், ரூப் ரெயில்கள், முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள், எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. XUV300 மாடலை விட புதிய XUV400 அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த காரில் உள்ள பேட்டரியை 50 கிலோவாட் டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்களே ஆகும். இதுவே 7.2 கிவோவாட் 32 ஏ அவுட்லெட் மூலம் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 6 மணி 30 நிமிடங்கள் ஆகும். ஸ்டாண்டர்டு 3.3 கிலோவாட் 16 ஏ சாக்கெட் பயன்படுத்தினால் 13 மணி நேரம் ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 456 கிமீ ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய அட்வென்ச்சர் பைக் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • புது ஹோண்டா அட்வென்ச்சர் பைக் டிரான்சால்ப் 800 எனும் பிராண்டிங்கில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புது மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஹோண்டா டிரான்சால்ப் 800 மாடல் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்கள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டு இருப்பதை போன்றே காட்சியளிக்கின்றன.

    அந்த வகையில் புதிய ஹோண்டா டிரான்சால்ப் 800 மாடல் இத்தாலியில் நடைபெற இருக்கும் EICMA 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக் ரெட், வைட் மற்றும் புளூ போன்ற நிறங்களில் காட்சியளிக்கிறது. புகைப்படத்தில் இருப்பது டாப் எண்ட் மாடலாகவே இருக்கும் என கூறப்படுகிறது.


    இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் ஆப்ரிக்கா ட்வின் மாடல்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய டிரான்சால்ப் மாடல் ரோட் சார்ந்த மாடலாகவே காட்சியளிக்கிறது. இந்த பைக்கில் 21 இன்ச் அளவில் ஸ்போக் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சை்க்கிள் ஆப் ரோடிங் திறன்களையும் பெற்று இருக்கும் என தெரிகிறது.

    புதிய ஹோண்டா டிரான்சால்ப் 800 மாடலில் 800சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் ஹார்னெட் ரோட்ஸ்டர் மாடலிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் மூலம் ஹோண்டா நிறுவனம் யமஹா டெனெர் 700 மாடலை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

    இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது புதிய ஹோண்டா டிரான்சால்ப் மாடல் விலை ரூ. 12 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டலாம். இதே மோட்டார்சைக்கிளின் டிசிடி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • ஹோண்டா நிறுவனத்தின் சப்-காம்பேக்ட் செடான் அமேஸ் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
    • இந்திய சந்தையில் ஹோண்டா அமேஸ் மாடல் 2013 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது அமேஸ் சப்-காம்பேக்ட் செடான் மாடல் இந்திய விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 2013 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஹோண்டா அமேஸ் மாடல் ஒன்பது ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் இரண்டு ஜெனரேஷன் மாடல்கள் மற்றும் சில பேஸ்லிப்ட் வெர்ஷன்களில் அமேஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஹோண்டா அமேஸ் இருந்து வருகிறது. ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த மாதாந்திர விற்பனையில் அமேஸ் மாடல் மட்டும் 40 சதவீத பங்குகளை பெற்றுள்ளது. இதுதவிர அமேஸ் மாடலின் மொத்த விற்பனையில் 60 சதவீதம் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சந்தைகளில் நடைபெற்று இருக்கிறது.


    அதிக விற்பனை மட்டுமின்றி இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் குறைந்த விலை கார் மாடல் என்ற பெருமையை அமேஸ் பெற்று இறுக்கிறது. புதிய ஹோண்டா அமேஸ் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 63 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    "ஹோண்டா அமேஸ் மாடல் விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை எட்டி இருப்பது பெருமை மிக்க தருணம் ஆகும். இந்த காரை அன்புடன் ஏற்றுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மிக்க நன்றி. மேலும் பிராண்டுக்கு தொடர்ச்சியாக ஆதரவாக செயல்பட்டு வரும் விற்பனையாளர்களுக்கும் நன்றி. இந்தியாவில் எங்களின் எண்ட்ரி லெவல் மாடலாக ஹோண்டா அமேஸ் இருந்து வருகிறது."

    "பிரீமியம் செடான் மாடல் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, அவர்களின் எதிர்பார்ப்புகளை கடந்துள்ளது. இதுவே அமேஸ் மாடல் பெரிய மற்றும் சிறிய நகரங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் ஆகும்," என ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டகுயா சுமுரா தெரிவித்தார்.

    • லம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மாடல்கள் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இதற்காக லம்ப்ரெட்டா நிறுவனம் பேர்டு மொபிலிட்டி நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது.

    இந்திய இருசக்கர வாகன சந்தையில் அதிக பிரபல பிராண்டாக லம்ப்ரெட்டா இருந்து வந்தது. இத்தாலி நாட்டு நிறுவனமான லம்ப்ரெட்டா இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் லம்ப்ரெட்டா மீண்டும் இந்தியாவில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரி எண்ட்ரி கொடுக்க பேர்டு மொபிலிட்டி எனும் நிறுவனத்துடன் லம்ப்ரெட்டா கூட்டணி அமைப்பதாக தெரிகிறது.

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய லம்ப்ரெட்டா திட்டமிட்டுள்ளது. லம்ப்ரெட்டா பிராண்டின் தாய் நிறுவனமான இன்னோசெண்டி எஸ்ஏ இந்தியாவில் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2024 வாக்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. லம்ப்ரெட்டா பிராண்டின் பெரும்பாலான மாடல்கள் 200 சிசி முதல் 300 சிசி வரையிலான திறன் கொண்டிருக்கும்.


    இந்தியாவில் களமிறங்குவதன் மூலம் உள்நாட்டிலேயே தனது வாகன உற்பத்தியை துவங்க லம்ப்ரெட்டா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். அறிமுகமாகும் போது இந்திய சந்தையில் குறைந்த விலை ஸ்கூட்டர்களாக லம்ப்ரெட்டா மாடல்கள் நிச்சயம் இருக்காது. இது தற்போது விற்பனையாகும் பிரீமியம் ஸ்கூட்டர்களை போன்ற விலையிலேயே அறிமுகமாகும்.

    பேர்டு மொபிலிட்டி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதை அடுத்து லம்ப்ரெட்டாவிடம் 51 சதவீத பங்குகளும், பேர்டு மொபிலிட்டி 49 சதவீத பங்குகளை கொண்டிருக்கும். உலகம் முழுக்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக ஸ்கூட்டர்களை லம்ப்ரெட்டா விற்பனை செய்து இருக்கிறது. இந்தியாவில் களமிறங்குவதன் மூலம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. தற்போது உலகின் 70 நாடுகளில் லம்ப்ரெட்டா வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    • ஜீப் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியிடுவது பற்றி முக்கிய தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.
    • எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய திட்டங்களை ஜீப் நிறுவனம் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது.

    ஜீப் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஜீப் எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடுவது பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. செப்டம்பர் 8 ஆம் தேதி நிகழ்வை ஜீப் நிறுவனம் 4xe தினம் என அழைக்கிறது.

    முதல் எலெக்ட்ரிக் காரை இதுவரை அறிமுகம் செய்யாத நிலையில், ஜீப் நிறுவனம் தற்போது தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷனை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்கள் இ ஹைப்ரிட் மற்றும் 4xe பிராண்டுகளின் கீழ் விற்பனையாகி வருகின்றன.


    முன்னதாக ஜீப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தின் ரெண்டர் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது. இது காம்பஸ் மற்றும ரெனகேடு போன்று காம்பேக்ட் எஸ்யுவி-யாக இருக்கும் என தெரிகிறது. இந்த கார்களின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் 2023 ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    ஜீப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஸ்டெலாண்டிஸ் STLA பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. இதே பிளாட்பார்மில் இந்த நிறுவனத்தின் மற்ற கார் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வருகின்றன.

    முதல் முறையாக 2021 மார்ச் மாத வாக்கில் ஜீப் நிறுவனம் மேக்னெடோ கான்செப்ட் எஸ்யுவி-யை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாடலில் 285 பிஎஸ் பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் இ மோட்டார், 70 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்பட்டு இருந்தது.

    • சிட்ரோயன் நிறுவனம் முற்றிலும் புதிய C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் டீசரை வெளியிட்டு உள்ளது.
    • இந்த மாடலில் டச் ஸ்கிரீன் கொண்ட கேபின் மற்றும் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

    சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் இந்திய சந்தையில் அப்டேட் செய்யப்பட உள்ளது. பேஸ்லிப்ட் செய்யப்பட்ட சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்தியாவில் புதிய சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய 2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி தோற்றத்தில் இந்த கார் அதன் சர்வதேச வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. இந்த காரின் முகப்பு பகுதியில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புற பம்ப்பரில் அகலமான ஏர் டேம், மெல்லிய ட்வின் ஸ்லாட் கிரில், புதிய எல்இடி ஹெட்லைட் யூனிட், வி வடிவ டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன.


    பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அதிக மாற்றம் செய்யப்படவில்லை. டெயில் லைட் மற்றும் புதிய 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2022 சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் புதிதாக எக்லிப்ஸ் புளூ நிறத்தில் கிடைக்கும். டீசரில் புது காரின் கேபின் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்களும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த மாடல் தனித்து நிற்கும் டச் ஸ்கிரீன் யூனிட், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோலுக்கு தனி கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.

    ஐரோப்பிய சந்தையில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் பேஸ்லிப்ட் மாடல் பிளக்-இன்-ஹைப்ரிட் வெர்ஷனில் கிடைக்கிறது. எனினும், இந்த அம்சம் இந்தியாவிலும் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய சந்தையில் C5 ஏர்கிராஸ் மாடல் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 177 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    ×