என் மலர்
இது புதுசு
சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் மாடல் கார் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போ 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் மாடல் கார் தாய்லாந்து சர்வதேச மோட்டார் எக்ஸ்போ 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய காரின் முன்புறம் சிறிய கிரில், மெஷ் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் பம்ப்பர் ஏர் டேம்கள், லிப்-ஸ்பாயிலர் மற்றும் ரெட் ஹைலைட் கொண்டிருக்கிறது. ஹெட்லேம்ப்பில் கார் நிறத்துடன் ஒற்றுபோகும் பேனல் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. பொனெட் நடுவே கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபென்டர் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. வீல் ஆர்ச்கள் பிரம்மாண்டமாகவும், மல்டி-ஸ்போக் அலாய் வீல்களும் புதிய காரின் குறிப்பி்டத்தக்க அம்சமாக இருக்கிறது.

காரின் பின்புறம் ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. ஸ்விஃப்ட் மாடல் கார் இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு முதல் விற்பனையாகிறது. தற்சமயம் இதன் மூன்றாம் தலைமுறை மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ஸ்விஃப்ட் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் ஒன்று பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையிலும், மற்றொன்று 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஆக்சா எனர்ஜீஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்திய பைக் வாரம் 2019 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. மாண்டிஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நேக்கெட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் மாடல் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் விற்பனை அடுத்த ஆண்டு மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 9 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரங்களே போதும்.

முழுமையான டிஜிட்டல் டேஷ்போர்டு கொண்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் விவரங்களை பிரத்யேக மொபைல் செயலி மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் மோட்டார்சைக்கிள் செல்லும் வேகம், பேட்டரி நிலவரம் போன்ற விவரங்களை பார்க்க முடியும்.
டிரையம்ப் நிறுவனத்தின் ராக்கெட் 3 ஆர் பிரீமியம் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் நிறுவனம் தனது புதிய மாடலான ராக்கெட் 3 ஆர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த மாடல் சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ராக்கெட் 3 ஆர் மோட்டார்சைக்கிள் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. என இரு மாடல்களில் அறிமுகமாகி உள்ளது. இன் விலை ரூ. 18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடல் 2,500 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 167 ஹெச்.பி. திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. புதிய என்ஜின் 18 கிலோ எடை குறைவானது.
மேலும் கிராங்க் கேஸ் அசெம்பிளி, லூப்ரிகேஷன் சிஸ்டம், பேலன்ஸ் ஷாஃப்ட் உள்ளிட்டவைகளின் எடையும் குறைந்ததால் ஒட்டுமொத்தமாக ராக்கெட் 3 மாடல் முந்தைய மாடலைக் காட்டிலும் 40 கிலோ வரை எடை குறைவாகும். இது முழுக்க முழுக்க மின்னணு கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் மோட்டார்சைக்கிளின் செயல்பாடு சரிவர உள்ளதா என்பதை இதில் உள்ள கருவிகளே சரிபார்த்து வெளிப்படுத்தும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிரேக்குகளும் தனித்துவமிக்கவை. முன்சக்கரத்தில் 320 மி.மீ. டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 300 மி.மீ. டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்.எஸ். இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இசட்.எஸ். இ.வி. கார் இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் காருடன் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ஜனவரி 2020 வாக்கில் விற்பனைக்கு வருகிறது. வெளியீட்டுக்கு முன் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் புதிய காரின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்திய சந்தயில் புதிய கார் இசட்.எஸ். இ.வி. என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது.
எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் புதிய காரில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹீட்டெட் முன்புற இருக்கைகள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஃபோர்டம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் 50 கிலோவாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் குர்கிராமில் துவங்கியது.
ஜாகுவார் நிறுவனம் இந்தியாவில் புதிய எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
ஜாகுவார் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜாகுவார் எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் விலை ரூ. 44.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த செடான் கார்: எஸ் மற்றும் எஸ்.இ. என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
முந்தைய மாடலை விட புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இதன் வடிவமைப்பு முந்தைய மாடலை விட அகலமாக இருக்கிறது. முன்புறம் பெரிய கிரில், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் பின்புறம் கூர்மையான எல்.இ.டி. டெயில்லைட்களும் பக்கவாட்டில் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் வெளிப்புறத்தை மேம்படுத்தி ஸ்போர்ட் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
உள்புறம் இரட்டை தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் வசதியையும், மற்றொன்று கிளைமேட் கண்ட்ரோல்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே 10.2 இன்ச் தொடுதிரை சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் கிடைக்கிறது.
ஜாகுவார் எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முந்தைய காரில் உள்ள என்ஜின்களே வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.0 லிட்டர் இன்ஜினியம் பெட்ரோல் மற்றும் 2.0 இன்ஜினியம் டீசல் யூனிட்களை கொண்டிருக்கிறது. எனினும், புதிய என்ஜின்கள் பி.எஸ்.6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.சி. கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய 2020 ஜி.எல்.சி. எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 52.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்.யு.வி.: ஜி.எல்.சி. 200 மற்றும் ஜி.எல்.சி. 220டி 4மேடிக் வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 57.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வடிவமைப்பை பொருத்தவரை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. மாடல் பார்க்க முந்தைய ஃபேஸ்லிஃப்ட் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த காரின் முன்புறம் புதிய கிரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட எல்.இ.டி. டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய கார் மெர்சிடிஸ் பென்ஸ் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் தொழில்நுட்பம் கொண்ட முதல் கார் ஆகும். இந்த தொழில்நுட்பம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்டீரிங் வீல், வாய்ஸ் மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற அம்சங்களை கொண்டுடிருக்கிறது.
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கார்: 255 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 192 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் 9-ஸ்பீடு ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இ.வி. கார் மும்பையில் டிசம்பர் 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. நெக்சான் இ.வி. காருக்கான புதிய டீசர்களை டாடா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் நெக்சான் இ.வி. கார் ஃபேஸ்லிஃப்ட் நெக்சான் எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என இதுவரை வெளியான டீசர்களில் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த கார் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பொனெட் மற்றும் முன்புற பம்ப்பர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள், மெல்லிய கிரில், டி.ஆர்.எல்.கள் கொண்ட ஹெட்லைட் யூனிட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய நெக்சான் கார் அக்டோபர் 2020 முதல் அமலாக இருக்கும் புதிய பாதசாரி பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது.
புதிய காரில் அலாய் வீல் வடிவமைப்புகள், பின்புற ஸ்டைலிங் போன்றவை தற்சமயம் விற்பனையாகும் காரை விட வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்சான் இ.வி. கார் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் விற்பனையகங்களில் எதிர்பார்க்கலாம்.
இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய அளவு திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபென்டர் எஸ்.யு.வி. மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் அறிமுகமானது முதல் 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் முதலில் டிஃபென்டர் 110 மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.
சிறிய டிஃபென்டர் 90 இந்தியாவில் 2020 டிசம்பர் மாத வாக்கில் துவங்கலாம். இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் டிஃபென்டர்: ஸ்டான்டர்டு, எஸ், எஸ்.இ., மற்றும் ஹெச்.எஸ்.இ. என நான்கு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம். அனைத்து வேரியண்ட்களிலும் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படலாம்.

உயர் ரக எஸ்.இ. மற்றும் ஹெச்.எஸ்.இ. வேரியண்ட்களில் க்ளியர்சைட், 360-டிகிரி கேமரா, விர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிரீமியம் லெதர் இருக்கைகள், பிளைன்ட்-ஸ்பாட் வார்னிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் டிஃபென்டர் சீரிஸ் அனைத்து மாடல்களிலும் அர்பன் பேக், கண்ட்ரி பேக், அட்வென்ச்சர் பேக் மற்றும் எக்ஸ்புளோரர் பேக் என பல்வேறு அக்சஸரீ பேக்கேஜ்களுடன் கிடைக்கிறது. இது ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ற அம்சங்களை வழங்குகிறது.
இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒற்றை என்ஜின் ஆப்ஷனில் வெளியாகலாம். இது 296 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் இக்னியம் பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடன் கிடைக்கிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் முதலில் டிஃபென்டர் 110 மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.
சிறிய டிஃபென்டர் 90 இந்தியாவில் 2020 டிசம்பர் மாத வாக்கில் துவங்கலாம். இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் டிஃபென்டர்: ஸ்டான்டர்டு, எஸ், எஸ்.இ., மற்றும் ஹெச்.எஸ்.இ. என நான்கு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம். அனைத்து வேரியண்ட்களிலும் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படலாம்.

உயர் ரக எஸ்.இ. மற்றும் ஹெச்.எஸ்.இ. வேரியண்ட்களில் க்ளியர்சைட், 360-டிகிரி கேமரா, விர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிரீமியம் லெதர் இருக்கைகள், பிளைன்ட்-ஸ்பாட் வார்னிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் டிஃபென்டர் சீரிஸ் அனைத்து மாடல்களிலும் அர்பன் பேக், கண்ட்ரி பேக், அட்வென்ச்சர் பேக் மற்றும் எக்ஸ்புளோரர் பேக் என பல்வேறு அக்சஸரீ பேக்கேஜ்களுடன் கிடைக்கிறது. இது ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ற அம்சங்களை வழங்குகிறது.
இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒற்றை என்ஜின் ஆப்ஷனில் வெளியாகலாம். இது 296 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் இக்னியம் பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடன் கிடைக்கிறது.
சென்னையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களை முதல் அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிறமுதலீட்டாளர்களிடமிருந்து தமிழ் நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளைப் ஈர்த்திடவும், நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகியநாடுகளுக்கு முதல்- அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குழுவினர் அரசு முறைப் பயணம் மேற்கொண்டனர்.
இந்த பயணத்தில் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். இப்பயணத்தின் நிறைவாக, துபாயில், இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பு ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச் சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாயின் கே.எம்.சி. குழுமம் மற்றும் எம். ஆட்டோ எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் விதமாக, நிறுவனத்தால் பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு மாசுவிளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றியமைக்கப்பட்டு, முதற்கட்டமாக சென்னையில் 100 மின்சார ஆட்டோக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று மின்சார ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மின்சார ஆட்டோக்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலம் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டோக்களில் சிசிடிவி கேமரா, ஆபத்து பொத்தான் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களை பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள முடியும். பெரும்பான்மையான மின்சார ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் பெண்கள், மற்றும் திருநங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மஸ்டாங் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபோர்டு இந்தியா நிறுவனம் புதிய மஸ்டாங் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரின் விற்பனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் புதிய ஃபோர்டு மஸ்டாங் சிலகாலமாக விற்பனை செய்யப்படுகிறது.
முந்தைய மாடலை விட புதிய ஃபோர்டு மஸ்டாங் காரில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொனெட் சற்று கீழே இறக்கப்பட்டுள்ளது. இதில் ஏர் வென்ட்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் முன்புறம் மேம்பட்ட கிரில், முந்தைய மாடலில் இருப்பதை விட மெல்லியதாக இருக்கிறது.

புதிய மஸ்டாங் காரின் முன்பறம் மற்றும் பின்புறத்தில் மேம்பட்ட பம்ப்பர் மற்றும் புதிய வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் 12 இன்ச் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், உள்புற அம்சங்கள் முழுக்க மென்மையான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்துடன் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், எல்.இ.டி. லைட்டிங், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், மவுண்ட்டெட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 450 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் H2X மாடல் கார் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் H2X கான்செப்ட் மாடலை ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்த மாடல் உற்பத்திக்கு தயாரான வடிவம் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய H2X மாடல் கார் டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வீல்பேஸ் நீண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கான்செப்ட் வடிவம் இந்த ஆண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
டாடா H2X கான்செப்ட் காரில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் வடிவமைப்பு, பெரிய அலாய் வீல்கள், பெரிய வீல் ஆர்ச்கள், பானரோமிக் சன்ரூஃப் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதன் உண்மை வடிவில் இவை வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

புதிய காரில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் தற்சமயம் விற்பனை செய்யப்படும் டாடா டியாகோ மாடலில் பி.எஸ். 4 விதிகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் டாடா H2X காரின் விலை ரூ. 4.75 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மாருதி சுசுகியின் இக்னிஸ், மஹிந்திரா கே.யு.வி.100 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ரோஸ் கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் புதிய வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் ஜனவரி 2020 வாக்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அல்ட்ரோஸ் காரை இந்த ஆண்டிலேயே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.
எனினும், டாடா நிறுவனம் புதிய அல்ட்ரோஸ் காரை நேரடியாக பி.எஸ். 6 விதகளுக்கு பொருந்தும் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியிட முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அல்ட்ரோஸ் காரின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக தெரிகிறது.

இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் கார் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
டாடா அல்ட்ரோஸ் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டாடா அல்ட்ரோஸ் கான்செப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் விழாவில் ஹேரியர் மற்றும் இதர வாகனங்களுடன் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியது.






