என் மலர்
கார்
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கார் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் பொலிரோ நியோ மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய பொலிரோ மாடல் இம்மாதமே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொலிரோ நியோ மாடல் அம்சங்களை வெளிப்படுத்தும் டீசர் வீடியோக்களை மஹிந்திரா வெளியிட்டு உள்ளது.
அதன்படி புதிய பொலிரோ நியோ மாடலின் முன்புறம் முழுமையாக மாற்றப்பட்டு 6-ஸ்லாட் கொண்ட குரோம் கிரில், புது தோற்றம் கொண்ட ஹெட்லேம்ப்கள், DRL-கள், பாக் லைட்கள், பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் 5-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 1.5 லிட்டர் எம்-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 100 பிஹெச்பி பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ மாடல் கியா சொனெட், மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ரெனால்ட் கைகர், ஹூண்டாய் வென்யூ, டொயோட்டா அர்பன் குரூயிசர், நிசான் மேக்னைட் மற்றும் டாடா நெக்சான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய AMG மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் AMG E53 4 மேடிக் பிளஸ் மற்றும் AMG E63 S 4 மேடிக் பிளஸ் மாடல்களை ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
மெர்சிடிஸ் AMG E53 4 மேடிக் பிளஸ் மாடலில் 3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்-லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 450 பிஹெச்பி பவர் வழங்குகிறது.

இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும். மெர்சிடிஸ் AMG E63 S 4 மேடிக் பிளஸ் மாடலில் 4 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த காரும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர், நெக்சான் மற்றும் அல்ட்ரோஸ் கார்களின் பிளாக் எடிஷன் வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் புது பிளாக் எடிஷன் மாடல்கள் டாடா விற்பனை மையகங்களை வந்தடையும் என தெரிகிறது. டாடா கார்களின் பிளாக் எடிஷன் மாடல் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் மாடலின் டார்க்-தீம் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. ஹேரியர் டார்க் எடிஷன் மாடல் சந்தையில் ரூ. 18.35 மற்றும் ரூ. 19.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
புதிய பிளாக் எடிஷன் கார்களின் வெளிப்புறம் பிளாக்டு-அவுட் தீம் கொண்டிருக்கும் என தெரிகிறது. வெளிப்புறம் மட்டுமின்றி, உள்புறத்திலும் கருப்பு நிறம் பூசப்படும் என தெரிகிறது. புது நிறம் தவிர காரின் அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எம்5 காம்படீஷன் மாடல் சிபியு முறையில் இந்தியா கொண்டு வரப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடல் இந்தியாவில் அறிமுகமானது. புதிய பி.எம்.டபிள்யூ. கார் விலை ரூ. 1.62 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். சிபியு முறையில் கிடைக்கும் புதிய பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடலுக்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளத்தில் நடைபெறுகிறது.

புதிய பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடலில் வி8 ட்வின்பவர் டர்போ தொழில்நுட்பம் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 625 ஹெச்பி திறன், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடிகளில் எட்டிவிடும்.
பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடல்- ரோட், ஸ்போர்ட் மற்றும் டிராக் என மூன்றுவித மோட்களை கொண்டிருக்கிறது. இவற்றை சென்டர் கன்சோலில் உள்ள எம் பட்டன் கொண்டு தேர்வு செய்ய முடியும்.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வாகனங்கள் விற்பனை குறித்து அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் பதில் அளித்துள்ளார்.
கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் ஆன்லைன் மூலம் வாகன விற்பனையை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்லைன் விற்பனை மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது. இதன் காரணமாக ஆடம்பர கார் உற்பத்தியாளர்களும் ஆன்லைன் மூலம் தங்களின் வாகனங்களை விற்பனை செய்ய துவங்கின.

அந்த வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனமும் தனது விற்பனையை டிஜிட்டல் தளத்திற்கு கொண்டுவந்தது. இதற்காக பென்ஸ் நிறுவனம் ‘Merc From Home' வலைதளத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்த வலைதளம் மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் பெரும் பங்கு வகித்துள்ளது.
``மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் 20 சதவீதம் ஆன்லைன் மூலம் நடைபெற்று இருக்கிறது. உலகளவில் ஒப்பிடும் போது இந்தியா ஆன்லைன் விற்பனையில் முன்னணி இடம்பிடிக்கும். இது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம் ஆகும்," என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் சந்தோஷ் ஐயர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ XT O வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலை ரூ. 5.48 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது வேரியண்ட் டியாகோ XT மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் விலை XT வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய டியாகோ XT O மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. XT மாடலில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மற்றப்படி புதிய XT O வேரியண்டிலும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ XT O மாடல் மாருதி சுசுகி செலரியோ, வேகன்ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் டேட்சன் கோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக இந்தியா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த இன் செல் மற்றும் பேட்டரி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணி அமைத்து இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை இந்த ஆண்டு மட்டும் இரண்டு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் இவி மாடல் விற்பனையில் இதுவரை 4 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.
"எலெக்ட்ரிக் வாகன விற்பனை எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். 2025 வாக்கில் பத்து புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதவிர நாடு முழுக்க சார்ஜிங் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதலீடு செய்ய இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
ஸ்கோடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா நிறுவனம் ஐரோப்பாவின் முன்னணி ஆட்டோமொபைல் விற்பனையாளர் என்ற பெருமையை பெற அசத்தலான எதிர்கால திட்டத்தை வகுத்துள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கவும் ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி 2030 ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீத ஸ்கோடா மாடல்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட இருக்கின்றன.

ஸ்கோடா எதிர்கால திட்டத்தை `நெக்ஸ்ட் லெவல்' என அழைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஐரோப்பிய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 2030 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 70 சதவீத பங்குகளை பெற ஸ்கோடா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2022 என்யார்க் கூப் மாடலை காம்பேக்ட் கிராஸ்-ஓவர் மாடலாக மாற்ற ஸ்கோடா முடிவு செய்துள்ளது.
இத்துடன் வோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB-லைட் பிளாட்பார்மை பயன்படுத்தி சிறிய ரக அர்பன் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கவும் ஸ்கோடா திட்டமிட்டு உள்ளது. ஐரோப்பா மட்டுமின்றி இந்தியா, ரஷ்யா மற்றும் வட ஆப்ரிக்கா சந்தைகளிலும் முன்னணி இடம்பிடிக்க ஸ்கோடா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் குஷக் மாடலை மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
மாசிராட்டி நிறுவனத்தின் புதிய MC20 மாடல் இந்திய வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாசிராட்டி நிறுவனத்தின் MC20 இந்திய முன்பதிவு துவங்கியுள்ளது. இந்த காரின் முதல் யூனிட் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்திய சந்தையில் ஜிப்லி, லிவான்டி மற்றும் குவாட்ரோபோர்ட் போன்ற மாடல்களை மாசிராட்டி விற்பனை செய்ய இருக்கிறது.

சர்வதேச சந்தையில் மாசிராட்டி MC20 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் 3 லிட்டர் வி6 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 621 பிஹெச்பி பவர், 730 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும்.
மாசிராட்டி MC20 மாடல் - வெட், ஜிடி, ஸ்போர்ட், கோர்சா மற்றும் ESC என ஐந்து விதமான டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இவற்றை சென்டர் கன்சோலில் உள்ள டயல் மூலம் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய சூப்பர்கார் பற்றிய இதர விவரங்கள் வரும் மாதங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் இ-டிரான் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்கள் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. இரு எஸ்யுவி மாடல்கள் விலை ரூ. 1.20 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆடி இ டிரான் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் EQC மற்றும் ஜாகுவார் ஐ பேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய ஆடி எஸ்யுவி மாடல் பெரிய கிரில், கூர்மையான ஹெட்லைட்களை கொண்டுள்ளது. காரின் பக்கவாட்டு பகுதிகள் ஆடி கியூ5 போன்றே காட்சியளிக்கிறது.
ஆடி இ டிரான் மாடலில் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேண்-கீப் அசிஸ்ட், பானரோமிக் சன்ரூப், பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீரிங் வீல் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.
நிசான் நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நிசான் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நேபால் போன்ற நாடுகளுக்கு மேக்னைட் இறுதிக்கட்ட யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

நேபாலில் நிசான் மேக்னைட் மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இந்த மாடலை வாங்க முப்பது நாட்களில் 760 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நேபாலில் மாதாந்திர பயணிகள் வாகன விற்பனை 1580 யூனிட்களாக இருந்தது என நிசான் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2020 மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் மாடல் மே இறுதிவரை 15,010 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இவற்றில் உள்நாட்டில் 13,790 யூனிட்களும் வெளிநாடுகளுக்கு 1220 யூனிட்களும் அனுப்பப்பட்டன.
மினி இந்தியா நிறுவனத்தின் புதிய கார் மாடல்கள் இந்தியாவில் ரூ. 38 லட்சம் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.
மினி இந்தியா நிறுவனம் மூன்று புதிய கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மினி 3 கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடல் விலை ரூ. 38 லட்சம், மினி கன்வெர்டிபில் மாடல் விலை ரூ. 44 லட்சம், மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் (JCW) மாடல் விலை ரூ. 45.50 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மூன்று புதிய மாடல்களும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே அறிமுகமாகி இருக்கின்றன. இவை சிபியு முறையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. மினி விற்பனை மையங்கள் மற்றும் மினி ஆன்லைன் தளங்களில் புது மாடல்களுக்கான முன்பதிவு மற்றும் டெஸ்ட் டிரைவ் துவங்கி உள்ளது.

மினி 3 கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மற்றும் மினி கன்வெர்டிபில் மாடல்கள் - ரூப்டாப் கிரே மெட்டாலிக், ஐலேண்ட் புளூ மெட்டாலிக், எனிக்மேடிக் பிளாக் மற்றும் செஸ்டி எல்லோ என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல்களில் 2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ட்வின்பவர் டர்போ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த யூனிட் 192 பிஹெச்பி/141kW திறன், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. மினி 3 கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும். மினி கன்வெர்டிபில் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 7 ஸ்பீடு டபுள் கிளட்ச்ஸ் ஸ்டெப்டிரானிக்ஸ் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
மினி JCW மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் ட்வின்பவர் டர்போ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 231 பிஹெச்பி / 170 kW திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.






