search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    போர்டு பிகோ
    X
    போர்டு பிகோ

    போர்டு பிகோ புது வேரியண்ட் வெளியீட்டு விவரம்

    போர்டு நிறுவனத்தின் பிகோ மாடல் புது வேரியண்ட் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    போர்டு இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் பிகோ மற்றும் ஆஸ்பையர் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் விற்பனையை நிறுத்தியது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போர்டு நிறுவனம் மீண்டும் பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

     போர்டு பிகோ

    இவை இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என்றும் இந்த வேரியண்டில் முன்னதாக வழங்கப்பட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் பிகோ மாடல் மாருதி சுசுகியின் ஸ்விப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இரு மாடல்களிலும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×