என் மலர்
கார்
மஹிந்திரா நிறுவனம் கோளாறு ஏற்பட்டதால் டீசல் கார் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த 600 டீசல் கார்களை திரும்பப் பெறுகிறது. பாதிக்கப்பட்ட கார்களின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ரீகால் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மாடல்கள் ஜூன் 21 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை நாசிக் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.

இந்த பாதிப்பு எந்தெந்த மாடல்களில் ஏற்பட்டுள்ளது என மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மஹிந்திரா தொடர்பு கொண்டு காரை இலவசமாக சரி செய்து கொடுக்கும். மஹிந்திராவின் நாசிக் ஆலையில் தார், ஸ்கார்பியோ, மராசோ மற்றும் XUV300 போன்ற மாடல்களை உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த வாரம் மஹிந்திரா நிறுவனம் பொலிரோ நியோ மாடலை அறிமுகம் செய்தது. மேலும் XUV700 எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அல்காசர் மாடல் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான முதல் மாதத்திலேயே அல்காசர் மாடல் முன்பதிவில் 11,600 யூனிட்களை கடந்துள்ளது.
கிரெட்டா மாடலை தழுவி பெரிய வீல்பேஸ் கொண்டு உருவாகி இருக்கும் ஹூண்டாய் அல்காசர் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. தற்போது முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் 11,600 யூனிட்களில் 5 ஆயிரத்து 600 யூனிட்கள் ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டுவிட்டன.

ஹூண்டாய் அல்காசர் மாடலுக்கான முன்பதிவு ஜூன் 9 ஆம் தேதி துவங்கியது. இந்தியாவில் அல்காசர் மாடல் துவக்க விலை ரூ. 16.3 லட்சம் ஆகும். இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.
புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் பெட்ரோல் என்ஜின் 157 பிஹெச்பி பவர் வழங்குகிறது. டீசல் மோட்டார் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
போர்டு நிறுவனத்தின் பிகோ மாடல் புது வேரியண்ட் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர்டு இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் பிகோ மற்றும் ஆஸ்பையர் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் விற்பனையை நிறுத்தியது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போர்டு நிறுவனம் மீண்டும் பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இவை இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என்றும் இந்த வேரியண்டில் முன்னதாக வழங்கப்பட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் பிகோ மாடல் மாருதி சுசுகியின் ஸ்விப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இரு மாடல்களிலும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் AMG E53 மற்றும் AMG E63 S செடான் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் AMG E53 மற்றும் AMG E63 S சக்திவாய்ந்த செடான் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புது AMG மாடல்களின் துவக்க விலை ரூ. 1.02 கோடி ஆகும். இவற்றுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
வேரியண்ட் மற்றும் விலை விவரங்கள்:
மெர்சிடிஸ் பென்ஸ் AMG E53 4மேடிக் பிளஸ் பிரீமியம் ரூ. 1.02 கோடி
மெர்சிடிஸ் பென்ஸ் AMG E63 S 4மேடிக் பிளஸ் பிரீமியம் ரூ. 1.70 கோடி
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. புதிய பென்ஸ் AMG E53 மாடல் மோஜேவ் சில்வர் மற்றும் டிசைனோ ஹெசிந்த் ரெட் நிறத்தில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் AMG E63 S மாடல் டிசைனோ செலிநைட் கிரே நிறத்தில் கிடைக்கிறது.

புதிய AMG E53 மாடலில் 3 லிட்டர், 6 சிலிண்டர் ட்வின்-டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 429 பி.ஹெச்.பி. பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு AMG ஸ்பீடுஷிப்ட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக மணிக்கு 249 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் AMG E63 S மாடலில் 4 லிட்டர் ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 603 பி.ஹெச்.பி. பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு 299 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இ டிரான் வாடிக்கையாளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆடி பல்வேறு விவரங்களை வெளியிட்டு உள்ளது.
ஆடி நிறுவனம் தனது இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு பிந்தைய சேவை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இதில் சர்வீஸ் திட்டங்கள், நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் பைபேக் சலுகை உள்ளிட்டவை அடங்கும்.
இந்தியாவில் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் விவரங்கள் எலெக்ட்ரிக் வாகனம் பற்றி மக்களிடையே இருக்கும் சந்தேகங்களை விளக்கும் வகையில் உள்ளது. புதிய இ டிரான் மாடலுக்கு ஆடி இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.
இதில் உள்ள பேட்டரிக்கு எட்டு ஆண்டுகள் அல்லது 1,60,000 கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இவைதவிர வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் வாரண்டியை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் கூடுதல் தொகை செலுத்தி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு வாரண்டியை நீட்டித்துக் கொள்ளலாம்.

சர்வீசை பொருத்தவரை இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதன்மூலம் சரியான கால இடைவெளியில் சர்வீஸ் செய்து கொள்ளலாம். சில திட்டங்களில் நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகின்றன.
இத்துடன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி ஐந்து ஆண்டுகளுக்கு ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் சேவையை ஆடி வழங்குகிறது. மேலும் காரை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் ஆடியிடம் விற்பனை செய்யும் பைபேக் சலுகை வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பொலிரோ நியோ மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 8.48 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். பொலிரோ நியோ மாடலுக்கான முன்பதிவு மஹிந்திரா வலைதளம் மற்றும் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. விரைவில் இதன் வினியோகம் துவங்க இருக்கிறது.
இந்தியாவில் புதிய மஹிந்திரா பொலிரோ நியோ மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பொலிரோ நியோ N4 விலை ரூ. 8.48 லட்சம், N8 விலை ரூ. 9.48 லட்சம், N10 விலை ரூ. 9.99 லட்சம், N10 (O) விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மஹிந்திரா பொலிரோ நியோ மாடல் - சில்வர், நபோலி பிளாக், ஹைவே ரெட், ராக்கி பெய்க் மற்றும் பியல் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் புது ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 15 இன்ச் அலாய் வீல்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், புது பாக் லேம்ப்கள், டெயில்கேட் பகுதியில் ஸ்பேர் வீல், பக்கவாட்டுகளில் பூட்-ஸ்டெப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர் டீசல் எம்ஹாக் என்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பொலிரோ நியோ இகோ டிரைவ் மோட், மைக்ரோ ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் குஷக் இந்திய வினியோக விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா குஷக் இந்திய வினியோகம் துவங்கி இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் 1 லிட்டர் வேரியண்ட் முதற்கட்டமாக வினியோகம் செய்யப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் வேரியண்ட் ஆகஸ்ட் மாதம் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் மிகவும் சவால்மிக்க பிரிவாக காம்பேக்ட் எஸ்.யு.வி. இருக்கிறது. அந்த வகையில் ஸ்கோடா நிறுவனத்தின் மிகமுக்கிய வெளியீடுகளில் ஒன்றாக குஷக் உள்ளது. முன்னதாக ஸ்கோடா பிராண்டை விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

தற்போது ஸ்கோடா நிறுவனம் குஷக் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை- ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. சக்திவாய்ந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஸ்டைல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஸ்கோடா குஷக் பேஸ் வேரியண்ட், மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஸ்கோடா குஷக் அனைத்து வேரியண்ட்களும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக், 1.5 லிட்டர் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் சி.என்.ஜி. மாடல்கள் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஸ்விப்ட் மற்றும் அனைத்து சி.என்.ஜி. மாடல்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது விலை உயர்வு ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு இன்று (ஜூலை 12) முதல் அமலுக்கு வந்தது.

சி.என்.ஜி. மாடல்கள் மட்டுமின்றி பெட்ரோல் கார்களின் விலையும் விரைவில் உயர்த்தப்பட இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. "முந்தைய அறிவிப்பின் படி பல்வேறு செலவீனங்கள் அதிகரித்துள்ளதால் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது," என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.
இந்த ஆண்டு மட்டும் மாருதி சுசுகி விலை உயர்வு மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் தேர்வு செய்யப்பட்ட மாடல்கள் விலை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. ஆண்டு துவக்கம் முதலே கார் விலை உயர்வுக்கு செலவீனங்கள் அதிகரித்ததையே காரணமாக தெரிவித்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய கார் வாங்குவோருக்கு நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கார் வாங்குவோருக்கு அசத்தல் நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதற்காக டாடா நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியுடன் இணைந்துள்ளது. புது அறிவிப்பின்படி மிக குறைந்த மாத தவணை, நீண்ட காலத்திற்கு தவணை செலுத்தும் வசதி, எளிய நிதி திட்டங்கள் போன்றவை வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு சிக்கலற்ற நிதி சலுகைகளை வழங்க டாடா மோட்டார்ஸ் பல்வேறு வங்கிகளுடன் கூட்டணி அமைத்து வருகிறது. அந்த வரிசையில் புது கூட்டணி மூலம் கார் வாங்குவோருக்கு 3 முதல் 6 மாதங்களுக்கு மிக குறைந்த மாத தவணை வழங்கப்படுகிறது. இதில் வழக்கமான மாத தவணை தொகையை விட 60 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது ஒரு லட்சத்திற்கு மாதம் ரூ. 834 மாத தவணை வழங்கப்படுகிறது. மிக குறைந்த மாத தவணை கார் வாங்கிய முதல் 3-6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர் தேர்வு செய்யும் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப மாத தவணை 1 முதல் 7 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 முதல் அரையாண்டு கால வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் 2021 ஆண்டின் முதல் ஆறு மாத விற்பனையில் 65 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் பென்ஸ் நிறுவனம் 4857 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது 2020 ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட 2948 யூனிட்களை விட அதிகம் ஆகும்.

2021 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய ஏ கிளாஸ் லிமோசின், இ கிளாஸ் LWB பேஸ்லிப்ட், AMG A35 4M, புதிய தலைமுறை GLA, AMG GLA 35 4M, GLS மேபக் 600, முற்றிலும் புதிய எஸ் கிளாஸ் போன்ற மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
என்ட்ரி லெவல் மாடல்களான GLA மற்றும் ஏ கிளாஸ், இ கிளாஸ் பேஸ்லிப்ட் மற்றும் GLA முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன. மொத்த விற்பனையில் 20 சதவீத யூனிட்கள் பென்ஸ் ஆன்லைன் தளம் மூலம் நடைபெற்றுள்ளன.
அல்ட்ரா பிரீமியம் விலையில் பெராரி நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
பெராரி நிறுவனம் இந்தியாவில் ரோமா ஸ்போர்ட்ஸ் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்போர்ட்ஸ் மாடல் விலை ரூ. 3.76 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். சர்வதேச சந்தையில் இந்த மாடல் 2019 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
பெராரி ரோமா மாடலில் அடாப்டிவ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், குவாட் எல்.இ.டி. டெயில் லைட்கள், பிளார்டு ரியர் வீல் ஆர்ச், மூன்று மோட்கள் கொண்ட பின்புற ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருக்கிறது.

உள்புறம் 16 இன்ச், வளைந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், சென்டர் கன்சோல், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
பெராரி ரோமா மாடலில் 3.9 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 612 பி.ஹெச்.பி. பவர், 760 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தை 9.3 நொடிகளில் எட்டிவிடும். இது அதிகபட்சம் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அல்ட்ரோஸ், நெக்சான் மாடல்களின் டார்க் வேரியண்டை அறிமுகம் செய்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ரோஸ், நெக்சான் மற்றும் நெக்சான் இ.வி. மாடல்களுக்கான டார்க் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புது வேரியண்ட்களுக்கான முன்பதிவு அந்நிறுவன விற்பனை மையங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய அல்ட்ரோஸ் டார்க் மாடல் விலை ரூ. 8.71 லட்சம் என துவங்குகிறது. நெக்சான் டார்க் மாடல் விலை ரூ. 10.40 லட்சம், நெக்சான் இ.வி. டார்க் விலை ரூ. 15.99 லட்சம் ஆகும். டாடா ஹேரியர் டார்க் எடிஷன் விலை ரூ. 18.04 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

டாடா அல்ட்ரோஸ் டார்க் மாடலின் வெளிப்புறம் காஸ்மோ பிளாக் நிறம், ஆர்16 அலாய் வீல்களில் டார்க் டின்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. காரின் உள்புறங்களில் கிரானைட் பிளாக் மற்றும் மெட்டாலிக் கிளாஸ் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. புதிய அல்ட்ரோஸ் டார்க், இந்த காரின் டாப் எண்ட் மாடல்களில் ஒன்றாக வெளியாகி இருக்கிறது.
நெக்சான் டார்க் மாடல் XZ+, XZA+, XZ+(O) மற்றும் XZA+(O) வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இவை பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. நெக்சான் இ.வி. டார்க் மாடல் XZ+ மற்றும் XZ+ லக்ஸ் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.






