என் மலர்
கார்
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் அமேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய காம்பேக்ட் செடான் மாடலுக்கான முன்பதிவு ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம், விற்பனையகங்களில் ரூ. 21 ஆயிரம் கட்டணத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய சந்தையில் புதிய அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டை தொடர்ந்து விரைவில் இந்த மாடலுக்கான வினியோகமும் துவங்குகிறது. முன்பதிவுடன் புதிய மாடலுக்கான டீசரையும் ஹோண்டா வெளியிட்டுள்ளது. இதில் புதிய கார் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது.
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா அமேஸ் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 9.99 லட்சம். எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் செடான் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 740Li M ஸ்போர்ட் இன்டிவிஜூவல் (Individual) எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. துவக்க விலை ரூ. 1.42 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். பி.எம்.டபிள்யூ. செடான் மாடலின் லிமிடெட் எடிஷன் ஒற்றை வேரியண்டில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இன்டிவிஜூவல் அக்சஸரீக்களை கொண்டிருக்கிறது.
புதிய ஆடம்பர செடான் மாடலுக்கான முன்பதிவு பி.எம்.டபிள்யூ. அதிகாரப்பூர்வ வலைதளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 740Li M ஸ்போர்ட் இன்டிவிஜூவல் எடிஷன் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இந்த செடான் மாடல் டன்ஸனைட் புளூ மற்றும் டிராவிட் கிரே நிறங்களில் கிடைக்கிறது.

பி.எம்.டபிள்யூ. 740Li M ஸ்போர்ட் இன்டிவிஜூவல் எடிஷனில் 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு டர்போ சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. செடான் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. பி.எம்.டபிள்யூ. 740Li M- ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், கம்பர்ட், கம்பர்ட் பிளஸ், இகோ ப்ரோ மற்றும் அடாப்டிவ் என ஆறு டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.
ஜாகுவார் நிறுவனத்தின் புதிய F Type R டைனமிக் பிளாக் மாடல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய F Type R டைனமிக் பிளாக் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் பிளாக் தீம் செய்யப்படுகிறது. புதிய ஜாகுவார் F Type R டைனமிக் மாடல் - சன்டோரினி பிளாக், எய்கர் கிரே மற்றும் பிரென்ஸ் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இதில் வழங்கப்படும் 5-ஸ்ப்லிட் ஸ்போக் கொண்ட 20 இன்ச் அலாய் வீல்களும் முற்றிலும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. உள்புறம் விண்ட்சர் லெதர், ஒய்ஸ்டர் ஸ்டிட்ச் மற்றும் மார்ஸ், பிளேம் ரெட் ஸ்டிட்ச் போன்ற ஆப்ஷன்களில் இருக்கை வழங்கப்படுகிறது.
புதிய ஜாகுவார் F Type R டைனமிக் மாடலில் 5 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 444 பி.ஹெச்.பி. பவர், 580 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு குவிக்ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் கஸ்டோ பெயரில் புதிய எம்.பி.வி. மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கஸ்டோ எம்.பி.வி. மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டது. புதிய எம்.பி.வி. முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது. தற்போதைய தகவல்களின்படி இந்த மாடல் சீன சந்தையில் மட்டுமே பிரத்யேகமாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
புதிய கஸ்டோ எம்.பி.வி. மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. மேலும் இந்த கார் 6 மற்றும் 7 பேர் பயணிக்கக்கூடிய இருக்கை அமைப்புகளில் வெளியாகும் என தெரிகிறது. டீசர்களின்படி ஹூண்டாய் கஸ்டோ கியா கார்னிவல் மாடலில் உள்ளதை போன்ற ஸ்லைடிங் கதவுகளை கொண்டிருக்கிறது.

ஹூண்டாய் கஸ்டோ எம்.பி.வி. மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பூட் லிட் பகுதியின் மேல் எல்.இ.டி. ஸ்ட்ரிப் லைட், நடுவில் ஹூண்டாய் எழுத்துக்கள் இடம்பெற்று இருக்கிறது. மேலும் ஸ்போர்ட் ஸ்பாயிலர், சற்றே உயரமாக ஸ்டாப் லேம்ப் இடம்பெற்றுள்ளது.
இந்த மாடலில் 1.6 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின், 2.0 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 170 பி.ஹெச்.பி. பவர், 236 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா எம்.பி.வி. மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டா எம்.பி.வி. மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. இம்முறை இன்னோவா மாடல் விலை 2 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டா மாடலின் புதிய விலை ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணம் என டொயோட்டா தெரிவித்து உள்ளது. இந்தியாவில் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடல்- GX, VX மற்றும் ZX என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 16.11 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24.59 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

2021 இன்னோவா க்ரிஸ்டா மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 164 பி.ஹெச்.பி. பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டீசல் என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் மாருதி மெகா அப்கிரேடு சலுகையை அறிவித்து இருக்கிறது. அரினா பேனரின் கீழ் விற்பனை செய்யப்படும் அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு பலன்கள் வழங்கப்படுகின்றன. சிறப்பு சலுகைகள் VXI பெட்ரோல் வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மாருதி மெகா அப்கிரேடு திட்டம் ஜூலை 31 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் பலன்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர் மற்றும் குறிப்பிட்ட நகரத்திற்கு ஏற்ப வேறுபடும். இதனால் புது சலுகையில் பயன்பெற விரும்புவோர் அருகாமையில் உள்ள விற்பனை மையம் சென்று முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

சிறப்பு சலுகையின் கீழ் மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 55 ஆயிரமும், விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-பிரெஸ்ஸோ மாடல்களுக்கு முறையே ரூ. 51 ஆயிரம் மற்றும் ரூ. 47,100 வரையிலான பலன்களும் வழங்கப்படுகின்றன.
இதேபோன்று மாருதி சுசுகி ஆல்டோ, டிசையர் மாடல்களுக்கு முறையே ரூ. 47,100 மற்றும் ரூ. 41 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன. மற்ற அரினா மாடல்களான வேகன் ஆர் ரூ. 31,700, ஈக்கோ ரூ.34,100, செலரியோ ரூ. 22,100, செலரியோ எக்ஸ் ரூ. 22,100 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பலன்கள்- தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் கார்ப்பரேட்/ஊரக சலுகை வடிவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 6/7 சீட்டர் எஸ்.யு.வி. வாகனங்கள் விற்பனையில் டாடா சபாரி முன்னணி இடம்பிடித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சபாரி மாடல் உற்பத்தியில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமான ஐந்தே மாதங்களில் இந்த மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் எட்டி இருக்கிறது. டாடா சபாரி மாடல் அந்நிறுவனத்தின் பூனே ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் சபாரி பிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலின் 100-வது யூனிட்டை வெளியிட்டது. அதன்பின் சுமார் 9,900 யூனிட்கள் நான்கே மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்திய சந்தையின் 6/7 சீட்டர் எஸ்.யு.வி. மாடல்கள் பிரிவில் புதிய சபாரி மாடல் 25.2 சதவீத பங்குகளுடன் முன்னணி இடம் பிடித்து இருக்கிறது.

இத்துடன் டாடா நிறுவனத்தின் சபாரி மற்றும் ஹேரியர் மாடல்கள் இணைந்து சுமார் 41.2 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன. இந்திய சந்தையில் புதிய டாடா சபாரி மாடல் விலை ரூ. 14.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.81 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. .அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
புதிய டாடா சபாரி மாடலில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ NRG மாடல் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2018 வாக்கில் டியாகோ NRG வேரியண்டை அறிமுகம் செய்தது. காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமான டியாகோ NRG விற்பனை 2020 வாக்கில் நிறுத்தப்பட்டது. தற்போது டாடா டியாகோ NRG மாடல் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய டியாகோ NRG ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தோற்றத்தில் டியாகோ NRG ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த மாடலில் பாக்ஸ் கிளாடிங் கொண்டு புது டிசைன் செய்யப்பட்ட பம்ப்பர்கள், NRG பேட்ஜிங், பாக்ஸ் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டியாகோ NRG மாடலில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம்.

உள்புறம் டியாகோ NRG மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவற்றுடன் முன்புறம் இரட்டை ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டியாகோ NRG மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் எம்ஜி ஒன் எஸ்.யு.வி. மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய எஸ்யுவி மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய எம்ஜி எஸ்.யு.வி. மாடல் ஜூலை 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் எம்ஜி ஒன் என அழைக்கப்பட இருக்கிறது. இது சிக்மா ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கிறது.

டீசரின்படி புதிய எஸ்.யு.வி. மாடல் அதிக பிரகாசமான ஆரஞ்சு நிறமும், ரூப் பகுதியில் கருப்பு நிறமும் பூசப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் ஸ்போர்ட் டிசைன் கொண்ட கிரில், நடுவில் எம்ஜி லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்த மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள் வழங்கப்படுகின்றன. பாக் லேம்ப்கள் பிளாக் இன்சர்ட்களில் செங்குத்தாக பொருத்தப்படுகிறது.
எம்ஜி ஒன் மாடலில் வழங்கப்பட இருக்கும் என்ஜின் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதில் வழங்கப்படும் என்ஜின் ஐ.சி.இ. ஆப்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இவற்றுடன் புதிய எஸ்.யு.வி. மாடலில் பல்வேறு அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் அமேஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பேஸ்லிப்ட் செய்யப்பட்ட அமேஸ் மாடல் தோற்றத்தில் சில மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. அமேஸ் பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புற தோற்றம், உள்புற அம்சங்கள் மாற்றப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

அதன்படி அமேஸ் பேஸ்லிப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்படலாம். காரின் உள்புறத்தில் புதிய இருக்கைகள், மேம்பட்ட ஏ.சி. பில்ட்டர் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய அமேஸ் மாடல் சில புதிய நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. அமேஸ் பேஸ்லிப்ட் இந்திய வெளியீடு குறித்து ஹோண்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்தியாவில் ஹோண்டா அமேஸ் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.99 லட்சம். எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
ஆடி நிறுவனம் இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் இ டிரான் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன. புதிய இ டிரான் துவக்க விலை ரூ. 99.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இ டிரான் 55 மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்கள் விலை முறையே ரூ. 1.16 கோடி மற்றும் ரூ. 1.17 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
ஆடி விற்பனை மையங்கள் மற்றும் ஆடி இந்தியா வலைதளங்களில் புதிய எலெக்ட்ரிக் மாடல்களின் முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தோற்றத்தில் இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்கள் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன.

ஆடி இ டிரான் 55 மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்களில் 95kW பேட்டரியும், இ டிரான் 50 மாடலில் 71 kW பேட்டரியுடம் வழங்கப்பட்டு இருக்கின்றன. எலெக்ட்ரிக் மாடல்கள் 408 பி.ஹெச்.பி. பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும்.
புதிய இ டிரான் சீரிஸ் மாடல்களில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பானரோமிக் சன்ரூப், ஆரஞ்சு நிற பிரேக் கேலிப்பர்கள், 20-இன்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன. இ டிரான் 55 மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 359 முதல் 484 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இ டிரான் 50 மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 264 முதல் 379 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.
மஹிந்திரா நிறுவனம் XUV700 எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV700 இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய XUV700 மாடலுக்கான அம்சங்கள் ஒவ்வொன்றையும் டீசர் வடிவில் மஹிந்திரா வெளியிட்டு வருகிறது. எனினும், இந்த காரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக புதிய தலைமுறை தார் மாடலை மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்தது. அந்த வகையில் மஹிந்திராவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV700 எஸ்.யு.வி. மாடலை மஹிந்திரா இந்த தினத்தில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய மஹிந்திரா XUV700 பல்வேறு அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

புதிய XUV700 மாடலில் - பிளஷ் கைப்பிடிகள், ஸ்கை-ரூப் பானரோமிக் சன்ரூப், ஆட்டோ ஹெட்லேம்ப் இன்டென்சிட்டி பூஸ்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இத்துடன் லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம், ரேடார் சார்ந்து இயங்கும் குரூயிஸ் கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் வழங்கப்பட இருக்கிறது.
மஹிந்திரா தனது XUV700 மாடலில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டர்போ டீசல் என இருவித என்ஜின்களை வழங்க இருக்கிறது. இவை முறையே 200 பி.ஹெச்.பி. பவர், 185 பி.ஹெச்.பி. பவர் வழங்குகின்றன. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.






