என் மலர்tooltip icon

    கார்

    அசாம் மாநிலத்தை சேர்ந்த கார் மெக்கானிக் மாருதி ஸ்விப்ட் காரை தோற்றத்தில் லம்போர்கினியாக மாற்றி வடிவமைத்து இருக்கிறார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த நுருல் ஹக்யூ என்ற மெக்கானிக் பழைய ஸ்விப்ட் காரை ஆடம்பர லம்போர்கினி மாடல் போன்று மாற்றி இருக்கிறார். ஊரடங்கு காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடி யூடியூப் வீடியோக்கள் உதவியுடன் ஹக்யூ இவ்வாறு செய்து அசத்தி இருக்கிறார்.

    காரை முற்றிலுமாக மாற்றியமைக்க ரூ. 6 லட்சம் வரை செலவானதாக அவர் தெரிவித்தார். இந்த பணிகளை முழுமையாக செய்து முடிக்க எட்டு மாதங்கள் ஆனது. காரை முழுமையாக மாற்றியமைத்ததும் புகைப்படங்களை ஹக்யூ சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பதிவிட்டது முதல் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

     மாருதி சுசுகி ஸ்விப்ட்

    பலர் ஹக்யூ மேற்கொண்ட பணியை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். இவர் தனக்கு பிரபல ஹாலிவுட் திரைப்படமான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் மிகவும் பிடிக்கும் என்றும் லம்போர்கினி காரை ஓட்ட வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். 

    கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின் இந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ள தனது மாருதி ஸ்விப்ட் மாடல் தோற்றத்தை மாற்ற ஹக்யூ முடிவு செய்தார். அதன்படி கடந்த எட்டு மாதங்களில் ரூ. 6.2 லட்சம் வரை செலவிட்டு கார் தோற்றத்தை மாற்றியதாக அவர் தெரிவித்தார்.  
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 5 சீரிஸ் பேஸ்லிப்ட் மாடல் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் பேஸ்லிப்ட் மாடல் ஜூன் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் பேஸ்லிப்ட் ஸ்டைலிங் மாற்றப்படுகிறது. இத்துடன் பல்வேறு புது அம்சங்கள், தொழில்நுட்பங்கள் இந்த மாடலில் வழங்கப்பட இருக்கிறது.

     பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் பேஸ்லிப்ட்

    இவைதவிர இந்த மாடலின் என்ஜின் முந்தைய வேரியண்டில் உள்ள யூனிட்களே புது மாடலிலும் வழங்கப்படலாம். பேஸ்லிப்ட் மாடல் என்பதால் இதன் விலை முந்தைய வேரியண்டை விட சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    புதிய 5 சீரிஸ் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர், இன்-லைன் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர், இன்லைன் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்காசர் எஸ்யுவி மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்காசர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அல்காசர் துவக்க விலை ரூ. 16.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அல்காசர் மாடல் ஆறு வேரியண்ட்கள், இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய ஹூண்டாய் அல்காசர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புது எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். இதுவரை புது ஹூண்டாய் காரை வாங்க சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருக்கிறது.

     ஹூண்டாய் அல்காசர்

    அல்காசர் 7 சீட் மாடலில் நடு வரிசையில் பெஞ்ச் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 3 வது இருக்கைக்கு எளிதாக செல்லும்வகையில் ஒன் டச் டம்பிள் எனப்படும் பட்டனை அழுத்தி இரண்டாது வரிசை இருக்கையை மடக்கும் வசதி உள்ளது. இதனால் 3-வதுவரிசை பயணிகள் எளிதாக ஏறி, இறங்க முடியும். 

    புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் பெட்ரோல் என்ஜின் 157 பிஹெச்பி பவர் வழங்குகிறது. டீசல் மோட்டார் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிரெட்டா எஸ்யுவி மாடலின் புது வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.


    ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டா SX எக்சிகியூடிவ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது வேரியண்ட் துவக்க விலை ரூ. 13.18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    ஹூண்டாய் கிரெட்டா SX பெட்ரோல் மாடல் விலை ரூ. 13.18 லட்சம் என்றும் டீசல் மாடலின் விலை ரூ. 14.18 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்படவில்லை. புதிய SX எக்சிகியூடிவ் வேரியண்ட் விலை SX பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை விட ரூ. 78 ஆயிரம் குறைவு ஆகும்.

     ஹூண்டாய் கிரெட்டா

    கிரெட்டா எஸ்யுவி புது வேரியண்ட் விவரங்கள் இதுவரை ஹூண்டாய் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாற்றப்படவில்லை. புது மாடலில் ஷார்க் பின் ஆன்டெனா, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ப்ளூடூத் மைக் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் கிரெட்டா SX மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் போன்ற என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 115 பிஹெச்பி பவர், 144 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் என்ஜின் 115 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    இந்திய சந்தையில் ஸ்கோடா குஷக் எஸ்யுவி மாடல் MQB-A0-IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் குஷக் எஸ்யுவி மாடல் ஜூன் 28 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. புதிய குஷக் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

     2021 ஸ்கோடா குஷக்

    குஷக் எஸ்யுவி வோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் உருவாகி இருக்கும் முதல் மாடல் ஆகும். இது இந்தியாவுக்கான பிரத்யேக MQB-A0-IN பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்பார்மில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் உருவாகி இருக்கிறது.

    டைகுன் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் 2021 குஷக் மாடல் - ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என ஸ்கோடா தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த கார் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யுவி மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி மாடலாக கிரெட்டா இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஹூண்டாய் கிரெட்டா இந்திய சந்தை விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த கிரெட்டா தற்போது ஆறு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

    அந்த வகையில் 1.06 லட்சம் யூனிட்கள் ஒன்பதே மாதங்களில் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் கிரெட்டா புது தலைமுறை வேரியண்ட் விற்பனைக்கு வந்தது. அறிமுகமான ஒரே ஆண்டிற்குள் இந்த மாடல் சுமார் 1.06 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

     ஹூண்டாய் கிரெட்டா

    கடந்த மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா முதலிடம் பிடித்தது. முன்னதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா மாடல் - 1.5 லிட்டர், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா மாடல் கியா செல்டோஸ், டாடா ஹேரியர் மற்றும் எம்ஜி ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ஜூன் 30 வரை அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு டாடா மோட்டார்ஸ் ரூ. 65 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்களை வழங்குகிறது. 

    அதன்படி டாடா டியாகோ, டிகோர், நெக்சான் மற்றும் ஹேரியர் போன்ற மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. இவை ஜூன் 30 ஆம் தேதி வரை கிடைக்கும். டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

     டாடா கார்

    டிகோர் சப்-காம்பேக்ட் செடான் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. நெக்சான் சப்-காம்பேக்ட் எஸ்யுவி டீசல் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நெக்சான் பெட்ரோல் வேரியண்டிற்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

    டாடா ஹேரியர் மாடலுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஹேரியர் கமோ, டார்க் எடிஷன், XZ+ மற்றும் XZA+ போன்ற மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.  
    இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 லட்சமாவது நெக்சான் மாடலை தனது உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிட்டுள்ளது. புது மைல்கல் பற்றிய அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் எஸ்யுவிக்களின் முதல் மூன்று மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இடம்பெற்று இருக்கிறது.

     டாடா நெக்சான்

    உலகின் முன்னணி ஆட்டோமொபைல் சந்தைங்களில் ஆறாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் அறிமுகமாகும் கார்கள் எண்ணிக்கையும், அதற்கேற்ற போட்டியும் பலமாகவே இருக்கிறது. இந்தியாவில் எஸ்யுவி பிரிவு அதிக போட்டி மிக்கதாக இருக்கிறது.

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது. நெக்சான் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை டாடா மோட்டார்ஸ் குறிவைத்தது. இந்த மாடல் இந்திய சந்தையில் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2021 ஆக்டேவியா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது ஆக்டேவியா துவக்க விலை ரூ. 25.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் ஸ்டைல் மற்றும் எல் அண்ட் கே என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புது ஆக்டேவியா ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய ஸ்கோடா ஆக்டேவியா முந்தைய மாடலை விட வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரில் புது எல்இடி ஹெட்லேம்ப்கள், பட்டர்பிளை கிரில், செங்குத்தான ஸ்லாட்கள், புதிய 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட், பாக் லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஸ்கோடா ஆக்டேவியா

    உள்புறம் 2 ஸ்போக் ஸ்டீரிங் வீல், ஷ்பிட்-பை-வயர் கியர்ஸ்டிக், 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் வழங்ப்பட்டு இருக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்காசர் மாடல் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஹூண்டாய் அல்காசர் மாடல் ஜூன் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் அல்காசர் மாடல் ஏப்ரல் மாத வாக்கில் காட்சிப்படுத்தப்பட்டது. பின் கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இதன் வெளியீடு தாமதமானது. 

    தற்போது பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து அல்காசர் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ஹூண்டாய் அல்காசர் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

     ஹூண்டாய் அல்காசர்

    புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. உலகின் மற்ற நாடுகளைவிட இந்த கார் முதற்கட்டமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. அல்காசர் மாடல் பல்வேறு ஆடம்பர வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றி அமைத்தது. இவற்றின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட், டிரைபர், கைகர் மற்றும் டஸ்டர் போன்ற மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. புதிய விலை ஜூன், 2021 அன்று அமலுக்கு வந்தது. 

    விலை உயர்வின் படி ரெனால்ட் டிரைபர் மாடலின் பேஸ் RXE வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது. இதன் புதிய விலை ரூ. 5.50 லட்சம் ஆகும். மற்ற வேரியண்ட்களான RXL, RXT, RXZ மற்றும் RXZ டூயல் டோன் விலை ரூ. 13,200 உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

     ரெனால்ட் கைகர்

    ரெனால்ட் டஸ்டர் மாடல் விலை ரூ. 13,050 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த விலை உயர்வு டஸ்டர் மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் க்விட் மாடல் விலை ரூ. 13,900 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கைகர் மாடலின் விலை ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 3090 துவங்கி அதிகபட்சம் ரூ. 39030 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களின் கார் சர்வீஸ்க்கு இதை மட்டும் செய்தாலே போதும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் வாகன சர்வீஸ் சேவைக்கு முன்பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பிஎம்டபிள்யூ கார் வைத்திருப்பவர்கள் வலைதளம் அல்லது ஸ்மார்ட்போன் செயலி மூலம் கார் சர்வீஸ் சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டும். 

     பிஎம்டபிள்யூ கார்

    சர்வீஸ் முன்பதிவில் துவங்கி, பணம் செலுத்துவது வரை அனைத்து சேவைகளையும் கான்டாக்ட்லெஸ் முறையில் பிஎம்டபிள்யூ மாற்றி இருக்கிறது. பிஎம்டபிள்யூ வலைதளத்தில் லாக் இன் செய்து எந்த தேதியில் காரை சர்வீஸ் செய்ய வேண்டும் என குறிப்பிட வேண்டும்.

    பிஎம்டபிள்யூ ஒன் செயலி மூலமாகவும் கார் சர்வீஸ் செய்ய முடியும். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது. செயலியில் மெக்கானிக்குகள் கார் சர்வீஸ் செய்யப்படும் வீடியோக்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவர்.
    ×