என் மலர்
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- விண்ணப்பங்களை மாணவர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
செய்யாறு:
செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் வகையில் புதியதாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு இ-சேவை மையத்தை பொது மக்களின் பயன்பா ட்டிற்காக தொடங்கி வைத்தார்.
மேலும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை இந்த மையத்தில் இலவசமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்தி, சௌந்தர பாண்டியன் மற்றும் கோபு, ஆறுமுகம், ராம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை
- அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே கீழ்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (70). இவர் தனது 7 வயது பேரனுடன் குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் குடிசை வீட்டு கதவைத் தாழிட்டு மர்ம கும்பல் தீவைத்ததாக கூறப்படுகிறது.
குடிசை வீடு எரிவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் தமிழ்செல்வி அவரது பேரனையும் பாதுகாப்பாக மீட்டனர்.
ஆனால் குடிசை வீடு மற்றும் அதிலுள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செய்யாறு உதவி கலெக்டர் விசாரணை
- இன்று பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில் விபரீதம்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, பெரணமல் லூர் பூத்தான் குட்டை தெருவை சேர்ந்தவர் 'பிரவீன் குமார்(வயது 35). செய்யாறில் உள்ள தனி யார் வங்கியில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி புவனேஸ் வரி(30). இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமானது முதல் புவனேஸ்வரிக்கும் குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 1-ந் தேதி செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் விரிவு பசும்பொன் நகரில் வாடகை வீட்டில் கண வன், மனைவி இருவரும் வசித்து வந்தனர்.
புவனேஸ்வரிக்கு இன்று (வியாழக்கிழமை) பிறந்த நாள் வருவதால், இதனை கொண்டாடு வது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு கணவன் -மனைவி இருவரும் பேசியுள்ளனர்.
அப்போது, அவர் களுக்குள் பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் புவனேஸ்வரி வீட்டின் அறையில் தனியாக தூங்கச் சென்றார். பிரவீன்குமார் மற்றொரு அறையில் படுத்து தூங்கினார். மனைவியை எழுப்புவதற்காக பிரவீன் குமார் நேற்று காலை 6 மணி அளவில் அறைக்கு சென்றார்.
தூக்கிட்டு சாவு
அப்போது புவனேஸ் வரி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனால் பிரவீன் குமார் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து செய் யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புவனேஸ்வரியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக அவரது உடலை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த புவ னேஸ்வரியின் தாயார் விஜயா அளித்த புகா ரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வ ரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் அனா மிகா விசாரணை நடத்தி வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பளம் வழங்க கோரிக்கை
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 2 மண்டலத்தில் குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர்கள் 44 பேர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு மாநக ராட்சியில் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆபரேட்டர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்ைல. தெரிவித்தும் அவர்களுக்கு சம்பளம் வழங்க அதிகாரிகள் முன் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் 44 பேரும் 3 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி இன்று 2-வது மண்டல அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 2-வது மண்டல உதவி என்ஜினியர் ஆறுமுகம் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நிலுவைத் தொகையை விரைவில் வழங்குவதாகவும், இனிமேல் பணிக்கு வரும் ஊழியர்கள் தினமும் மண்டல அலுவலகத்தில் உள்ள வருகைப் பதிவு நோட்டில்கையெழுத்திட்டு செல்ல வேண்டும்.
அப்படி கையெழுத்திடாத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்தார்.
- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- வேலூரில் 7 இடங்களில் தடுப்பணை
வேலூர்:
காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை மலர் வெளியிட்டார். அவர் பேசியதாவது:-
அரசால் தரப்படுகின்ற திட்டங்களை அமல்படுத்த வேண்டியது மாவட்டத்தின் கடமை. குறிப்பாக கலெக்டரின் கடமை. ஒரு ஆட்சி சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கு உதவுவது கடமை. .வாழ்வில் நலிந்த பிரிவினருக்கு உதவி பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு அரசே முன் நின்று விலையில்லா பொருட்களை தந்து அவர்களை வாழ வைக்கிறது.
வாழ்வாதாரம் இருப்பவர்களுக்கு தொழில் முனைவோராக நிதியை அரசு கொடுக்கிறது. கொடுக்கும் நிதியை பல்வேறு பிரிவு அதிகாரிகள் அந்தந்த துறையை செம்மைப்படுத்த வேண்டும். அப்போது தான் அரசு போட்ட திட்டங்கள் மக்களுக்கு போய் சேரும்.
இப்போது ரூ.3 கோடியே 61 லட்சத்து 88,ஆயிரத்து33 அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது போதாது. இது ரூ.30 கோடியாக இருந்தால் அனைவரையும் பாராட்டியிருப்பேன். சில இடங்களில சில துறைகளை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் துறையில் தையல் எந்திரம் ஒருவருக்கு தான் கிடைக்கிறது. உதவித்தொகை 4 பேருக்கும், சலவை பெட்டி 5பேருக்கும், புதிய தொழில் முனைவராக ஒருவருக்கும், வீல் சேர் 2 பேருக்கும் வழங்கப்படுகிறது.
அரசு கொடுக்கிறது. அதிகாரிகள் இறங்கி வேலை செய்ய வேண்டும். கலெக்டர் சுறுசுறுப்பானவர் தான். ஆனால் அவர் இலாக்காவை முடுக்கிவிட வேண்டும்.அடுத்த முறை வரும்போது ரூ.30 கோடி அளவில் நலத்திட்டம் இருந்தால் அனைவரையும் வாழ்த்துவேன்.
விஷ சாராயம் குடித்து பல பேர் இறந்து விட்டார்கள் என்ற செய்தி கேட்டவுடன் முதல்-அமைச்சர் சாப்பிடாமல் கூட விழுப்பு ரத்திற்கு சென்று விட்டார். அங்கு சிகிச்சை பெறுபவ ர்களை பார்த்து நலம் விசாரித்து விட்டு வரும் வழியில் தான் அவர் சாப்பிட்டார்.
கொரோ னா காலத்தில் தன்னுடைய உயிரை பணயம் வைத்து கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்த்து அவர்கள் தேவையான உதவிகளை செய்ய சொல்லி உத்தரவிட்டார். அடிதட்டு மக்களுக்கு பணிபுரிய வேண்டும் என எங்கள் தலைவர் கருணாநிதி சொல்லியுள்ளார்.
அதனை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லம், தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லம் அமைத்து இப்போது கிராமப் பகுதிகளில் தொழு நோயாளிகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
வேலூர் சேண்பாக்கத்தில் 5 அடி அளவில் ஒரு தடுப்பணை கட்டப்படுகிறது. இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும்.
காவிரியில் மாயனூர் என்ற இடத்தில் நான் அப்போது தடுப்பணை கட்டினேன். அந்த இடங்கள் முள் காடுகளாக இருந்தது மாறி வாழைத்தோட்டங்க ளாக மாறி நிலங்களே அதிக விலைக்கு விற்கிறது.
வேலூர் மாவட்டத்தில் இறைவன்ங்காடு, கவசம்பட்டு உள்பட 7 இடங்களில் தடுப்பணை கட்டப்படுகிறது.
இந்த ஆண்டு சிப்காட் தொழிற்சாலை காட்பாடியில் கொண்டுவரப்பட உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூரில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் குமார் , காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
காட்பாடி பிள்ளையார் கோவில் ஏரிமுனையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 34), லாரிக்கு பாடி கட்டும் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி இளவரசி (31). தம்பதிக்கு தனுஷ் (11), சிவகார்த்திக் (9) என இரண்டு மகன்கள் உள்ளனர். ரஞ்சித் குமார் கடந்த 14-ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் காட்பாடி ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
கணவர் இறந்த துக்கம் தாளாமல் இளவரசி மன வேதனை அடைந்தார்.யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.
நேற்று இரவு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவு எழுந்து பார்த்த போது இளவரசியை காணாததால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இளவரசியின் உறவினர்கள் இரவு முழுவதும் அவரை தேடிப் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் இளவரசி பிணமாக மிதந்தார்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இளவரசியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இளவரசி தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- வனத்துறையினர் மலையடிவாரத்திற்கு அருகில் விடுவதாக புகார்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் வெங்கடேசன் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது நிலத்தில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. உடனே ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், வனச்சரக அலுவலர்கள் மீட்கப்பட்ட மலை பாம்பை ஒடுகத்தூர் காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.
குடியிருப்பு பகுதியில் இருந்தும் விவசாய நிலங்களில் இருந்தும் மீட்கப்படும் மலைப்பாம்புகளை வனத்துறையினர் எடுத்துச் சென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் விடாமல் மலையடிவாரத்திற்கு அருகில் விடுகின்றனர்.
இதனால் இறை தேடி மலைபாம்புகள் மீண்டும் குடியிருப்பு பகுதியை தேடி படையெடுத்து வருவதாக வனத்துறை மீது குற்றம் சாற்றுகின்றன.
வனத்துறையினர் பிடிப்படும் மலை பாம்புகளை அடர்ந்த காப்பு காட்டுக்குள் பத்திரமாக விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மனநல ஆலோசனை உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப் பட்டு வந்தது
- கலெக்டர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்
திருப்பத்தூர்:
பீகார் மாநிலம் சுயா மாவட்டம், பெலகன்ஜ் தாலுகா, பெல் லாடி அடுத்த சங்கர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத் விஸ்வகர்மா. இவரது மனைவி காயத்ரிதேவி (வயது 44). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென காணாமல்போய்விட்டார். பலஇடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணை பொது மக்கள் மீட்டு, திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் பெண்கள் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஊர், பெயர் சொல்லத் தெரியாதநிலையில் இருந்த அவருக்கு மருந்து, மாத்திரைகள், மனநல ஆலோசனை உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப் பட்டு வந்தது.
பின்னர் பீகாரில் உள்ள சங்கர்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காயத்ரி தேவியின் இருப்பிடத்தை கண்டறிய நடவடிக்கை எடுத்து அதன் விளைவாக காயத்ரி தேவியின் கணவர் விஸ்வநாத் விஸ்வகர்மா, மகன் சத்யாகுமார், சகோதரர் முகேஷ், மைத்துனர் மொகல் ரிங்கிதேவி, தம்பி பிண்டுவின் மனைவி ரஞ்சுதேவி ஆகியோர் மறுவாழ்வு இல்லத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு காயத்ரிதேவியை நேரில் கண்டதும் அவரது கணவர் மற்றும் மகன் ஆனந்த கண்ணீர் வீட்டு கட்டி தழுவினர்.
அதைத்தொடர்ந்து அந்தப்பெண்ணை கலெக்டர் அலுவல கத்தில் அவரது உறவினர்களிடம் கலெக்டர் பாஸ்கரபாண் டியன் ஒப்படைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும், மருத்துவரிடம் காண்பித்து, மருத்துவரின் ஆலோசனையின் படி நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூறினார். மாவட்ட மனநல மருத்துவர் பிரபவராணி, உதவும் உள்ளங்கள் மனநல காப்பக நிர்வாகிரமேஷ் மற்றும் சமூகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 59). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
இன்று காலை கோவிந்தாபுரம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் இவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த கோவிந்தராஜை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலூருக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது வழியிலேயே கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் கூடுவதால் டீ விற்பனை களைகட்டியது
- யானையை பின் தொடரும் பொது மக்களின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக 2 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. யானைகள் நடமாட்டத்தை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ் கடிஜாலா, வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், தாசில்தார் சிவப்பிரகாசம், வனச்சரக அலுவலர் பிரபு, வனத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
யானைகளை வனப்பகு திக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது அதில் ஒரு குழுவினர் யானை பின் பக்கமாக எந்த பக்கம் நோக்கி செல்கிறது என கண்காணித்து வருகின்றனர்.
மற்றொரு குழுவினர் யானை முன் பக்கமாக இருந்து எந்த பகுதிக்கு நோக்கி செல்கிறது என கண்காணித்து வருகின்றனர்.
மேலும் 3 குழுவினர் யானை முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும் பொது மக்கள் யானையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து யானைக்கு தொந்தரவு செய்ததால் தான் அது காட்டிற்குள் செல்ல முடியாமல் ஏலகிரி மலை மலையடிவாரத்தில் நோக்கி வந்தது.
ஜலகாம்பாறை, ஜடையனூர் மிட்டூர் வழியாக ஆலங்காயம் காப்புக்காட்டு பகுதி வழியாக ஜம்னாமரத்தூர் வனப்பகுதிக்கு சென்று விடும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் 5-வது நாளான இன்று அதிகாலை வெங்காயப்பள்ளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் கருப்பனூர் அன்னான்டபட்டி பகுதி வழியாக லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஏரியில் குளித்து விட்டு முகாமிட்டுள்ளது.
இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து யானை இன்று திருப்பத்தூர் நோக்கி சென்றது.
அப்போது பொது மக்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்தனர். அங்கு டீ வியாபாரம் களை கட்டியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக யானை ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர். யானை காட்டு பகுதிக்கு சென்றால் தான் பொது மக்கள் நிம்மதி கிடைக்கும்.
யானை பின் தொடரும் பொது மக்களின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்து உள்ளார்.
- குரு ஜெயந்தி விழா முன்னிட்டு நடந்தது
- பக்தர்கள் தலையில் 25 கிலோமீட்டர் தூரம் சுமந்து வந்து சமர்ப்பணம் செய்தனர்
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலையில் உள்ள ஸ்ரீஸத்ய ஆஷ்ரமத்தில் வருட ந்தோறும் உலக குரு மார்களின் புனித தினமாகவும் உலக குருமார்களை நினைவு கூறும் புனித நாளாகவும் கொண்டாடும் ஸ்ரீஸத்ய குரு ஜெயந்தி தரிசன த்திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த வருடமும் முன்னிட்டு சத்ய வழி பக்தர்களால் ஏலகிரிமலையில் வெகு கோலாகலமாக கொண்டா டப்பட்டது.
அதை முன்னிட்டு பலவிதமான நிகழ்ச்சிகளும் பூஜைகளும் நடைபெற்றது.பொன்னேரி கூட்டு ரோடு மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு நூற்று கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவே பால் குடம் ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
விழாவில் 108 தட்டுக்களில் குரு சீரை பக்தர்கள் தலையில் 25 கிலோமீட்டர் தூரம் சுமந்து வந்து சமர்ப்பணம் செய்தனர்.
கூடவே அலங்கார வாகனத்தில் கேரள செண்டை மேள வாத்தியங்கள் முழங்க பொன்னேரியிலிருந்து ஆஷ்ரம் பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்றனர்.
ஏலகிரி மலையில் பக்தர்கள் தங்கள் கைகளால் ஆகாயத்தில் தீபம் ஏற்றி பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்கள் ஏற்றி பறக்க விட்ட தீபங்களால் வானமே தீபங்களால் நிறைந்து காணப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு விருந்தினர்களும், பல மாநிலங்களில் இருந்து ஸத்ய பக்தர்களும் திரளாக வருகை தந்து இந்த ஸ்ரீசத்ய ஜெயந்தி தரிசன திருவிழவில் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீஸத்ய ஆஷ்ரம் சத்ய வழி பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நெமிலி:
அரக்கோணத்தை அடுத்த வேலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 35). பனப்பாக்கத்தில் உள்ள ஸ்வீட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவ ருக்கும் நெமிலி உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த அலமேலு (29) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
துளசிராமன் தன்னுடைய மாமியார் ஊரான உளியநல்லூர் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக தன் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் பனப்பாக்கத்தில் இருந்து உளியநல்லூர் சென்றுகொண்டிருந்தார்.
துறையூர் ஏரிக்கரை அருகே சென்றபோது காட்டுப்பன்றி மோதி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.







