என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காட்டுப்பன்றி மோதி காயமடைந்த வாலிபர் சாவு
- மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நெமிலி:
அரக்கோணத்தை அடுத்த வேலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 35). பனப்பாக்கத்தில் உள்ள ஸ்வீட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவ ருக்கும் நெமிலி உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த அலமேலு (29) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
துளசிராமன் தன்னுடைய மாமியார் ஊரான உளியநல்லூர் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக தன் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் பனப்பாக்கத்தில் இருந்து உளியநல்லூர் சென்றுகொண்டிருந்தார்.
துறையூர் ஏரிக்கரை அருகே சென்றபோது காட்டுப்பன்றி மோதி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்