என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயில் முற்றிலும் எரிந்த குடிசை வீடு.
குடிசை வீட்டுக்கு தீவைப்பு
- போலீசார் விசாரணை
- அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே கீழ்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (70). இவர் தனது 7 வயது பேரனுடன் குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் குடிசை வீட்டு கதவைத் தாழிட்டு மர்ம கும்பல் தீவைத்ததாக கூறப்படுகிறது.
குடிசை வீடு எரிவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் தமிழ்செல்வி அவரது பேரனையும் பாதுகாப்பாக மீட்டனர்.
ஆனால் குடிசை வீடு மற்றும் அதிலுள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






